வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 30, 2010


فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِي اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(129)  التوبة
قُلْ حَسْبِي اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ(38)  الزمر
الَّذِينَ قَالَ لَهُمْ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ(173) آل عمران

இந்திய முஸ்லிம்கள் சோதனை மிக்க ஒரு கால கட்ட்த்தை கடந்து கொண்டிருக்கிறார்கள்.
                                                                         
பாபர் பள்ளிவாசல் நிலவிவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு ஒரு சோதனையாகவே அமைந்து விட்ட்து

61 நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தீர்ப்பு முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வரவில்லை.

உண்மையில் அது நீதியின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் வழங்கப் படவில்லை.

(இது காங்கிரஸ் பார்முலாசப்போர்டிங் இந்துத்துவா அட்ஜெஸ்டிங் முஸ்லிம்)

நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் நட்டில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின் படியும் ஆதாரங்களின் படியும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை.
நம்பிக்கையின் அடிப்ப்டையில் வழங்கப் பட்டுள்ளது.

முஸ்லிம்கள் உட்பட அனைவரும் முதலில்  புரிந்து கொள்ள வேண்டிய விசயம்
·         பள்ளிவாசல் இட்க்கப்பட்ட சூழ்நிலைய்ல் தீர்ப்பு வந்திருக்கிறது.
·         பாரதீய ஜனதா தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக சொல்லப் பட்ட்து போல காட்டிக் கொள்கிறது இந்த மாய்மாலத்திற்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.
·         இராமர் கோயில் இடிக்கப் பட்ட்து என்பதை கோர்ட் ஒத்துக் கொள்ளவில்லை
·         பள்ளிவாசல் இருந்த்து என்பதை கோர்ட் ஒத்த்துக் கொண்டுள்ளது
·         இந்துக்களுக்கு அவமானம் தேசிய அவமானம் பாரதீய ஜனதாவின் கொட்டங்கள் ஏற்கப்படவில்லை. இதைச் சொல்லித்தானே நாட்டிலுள்ள இந்துக்களை அக்கட்சி தூண்டிவிட்ட்து.
·         மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருப்பது இதிலுள்ள அவர்களுக்கான உரிமையை நிலை நாட்டியுள்ளது.

நீதிபதிகள் ஒரு தீர்ப்புச் சொல்லாமக் ஒரு சமரச தீர்வை எட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.
ராஜீவ் தவன் உள்ளிட்ட சுப்ரீம் கோர்டின் நீதிபதிகள் பலரும் தீர்ப்பே அல்ல என்றனர்
 
நீதிபதி கான் வரலாற்று ஆதாரங்களின் அடிப்ப்டையில் ஒரு தீர்வை எட்ட முய்ற்சி செய்துள்ளார். ஆனால் உறுதியாக செயல்படவில்லை. அவரும் ஒரு சமரசம் காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
நீதிபதி ஷர்மா முழுக்க இந்துக்களின் சார்பாக தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி அகர்வால இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தடுமாறி உள்ளார்.
இராமர் இங்குதான்  பிறந்தார் என்று இந்துக்கள் நம்புவதாகவும்  அதை ஏற்பதாகவும் நீதிபதி சர்மா கூறியுள்ளார். இதை நீதிபதி அகர்வாலும் ஏற்றுள்ளார்.

ஆகவே தீர்ப்பு குழப்பமானது . நீதிமன்றம் பஞ்சாயத்து செய்துள்ளது என தினமணி தினகரன் உள்ளிட்ட பத்ரிகைகள் கூறியுள்ளன.

 முஸ்லிம்களின் மனோ நிலை  :  
 இரண்டுவிதமான  மனோநிலையில் இருக்கிறார்கள்

ஒரு சாரார் : தீர்ப்பை ஏற்க முடியாது இது அநீதி, காரணம்
·         500 ஆண்டுகளாக தொழுகை நடந்த இடம் –  பள்ளிவாசல்
·         சிலை முன்னர் அங்கு இருக்க வில்லை 
·         1940 ல்  சிலை இரவோடிராவக வைக்கப் பட்டிருக்கிறது.
நீதிபதிகள் ஒத்துக் கொண்ட உண்மை இது
·         இரவோடிரவாக சிலை வைப்ப்வர்களுக்கும் பள்ளிவாசல்களை சொந்தம் கொண்டாட நினைப்பவர்களும் முஸ்லிம்களை அச்சுறுத்த நினைக்கிற சக்திகளுக்கும் இது வாசலை திற்ந்து விட்டுவிடும்

The verdict could be viewed  as partially rewarding those who placed the idol overnight under the center part of  moque.       ஹிண்டு   

இன்னொரு சாரார்

நீண்ட காலமாக இழுத்துச் செல்லப் ப்டும் வழக்கு எப்படியாவ்து ஒரு முடிவுக்கு வரட்டும்
இனிமேல் இந்தியாவில் ஒரு புதிய சூழ்நிலை பிறக்கட்டும் என்று ஆசைப் படுகிற ஒரு நிலை

இந்தியா என்ற இந்தப் பரந்த தேசம் ஒரு 2.7 ஏக்கர் நிலப் பிரச்சினையில் இவ்வளவு இழப்புகளுக்கு ஆளாக வேண்டுமா?
நமக்கும் ஒரு இடம் கிடைத்து இருக்கிறது தானே

இரண்டாவது மனோ நிலையே அதிகம் காணப்படுகிறது, ஆனால்

சரியான நிலைப்பாடு எது?


முஸ்லிம்கள் எந்த நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பதை தீர்மானிப்பது இந்துப் பெருமக்கள் எடுக்கும் தீர்மானத்தை பொறுத்தே அமையும். அரசின் நிலைப்பாட்டை பொறுத்தும் இது அமையும்.

மாவோ சொன்னது போல : நமது ஆயுதங்களை நாம் தீர்மாணிப்பதில்லை எதிரிகள் தீர்மாணிக்கிறார்கள்  

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களுக்கான் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால்
வழிபாட்டுத் தலம் விசயத்தில் தொல்லைகள் நிறுத்தப் படுமானால்
உரிய உரிமைகள் வழங்கப் படுமெனில் நீதிமன்றத்தின் நல்லெண்ணத்திற்கு அவர்கள் உடன் படுவார்கள் இல்லை எனில் அவர்கள் போராடுவார்கள் அது இறுதி வரை தொடரும்.
 
தீர்ப்பு பற்றிய கருத்து

நீதிமன்றம் ஒரு நலனை விரும்பி இவ்வாறு  காம்பரமைஸுக்கு முயற்சித்துள்ளது.
சின்னப் புள்ளைக சண்டையை தீர்த்து வைக்கிற மாதிரி

ஆனால் இந்த்துத்துவ சக்திகள் அமைதியை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வதில்லை.

ரமார் கோயில் கட்டுவோம் என்று சொன்ன அத்வானி முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட்த்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருந்தால் நிலமை சூடு எவ்வளவு தணிந்திருக்கும்

பல் நிருபர்கள் இது குறித்து கேட்ட போதும் அவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை இந்தியா இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்துக்கள் இதை கவனிக்க வேண்டும்.

இந்த்துத்துவ சக்திகள் மத நம்பிக்கை என்ற பெயரில இனி எத்தனை பிரச்சினைகளை தொடர காத்திருக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
இந்தப் பிரச்சினையில் குளிர்காய முனையும் குள்ள நரிகளை கவனத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் ஒரு சமரசத்திற்கான தீர்ப்பை கூறியுள்ளன

Monday, September 27, 2010


قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

பாபர் மஸ்ஜித் நில்விவிவ்கரம் தொடர்பான் வழக்கின் தீர்ப்பு ஒத்திப் போயிருக்கிறது

நமது நாட்டின் நீதி அமைப்பு -  பாட்டன் காலத்து வழக்கு கொள்ளுப் பேரன் காலத்தில் தீர்க்கப்படும்
அதற்குள் வாதியின் சொத்தும் பிரதிவாதியின் சொத்தும் தீர்ந்து விடும்.
அனைத்தும் தீர்த்துவிடுவதால் அத்ற்குப் பெயர் தீர்ப்பு
என்று வேடிக்கையாக சொல்லப் பட்டாலும் அதுதான் எதார்த்தம்

பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசய்த்தில் 60 ஆண்டுகளாக நடை பெற்று வந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒருவழியாக செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பை வழங்க இருந்த நிலையில் தீர்ப்பை தள்ளி வைக்க கோரி ஆர் சி திருபாதி என்ற அநாமத்து பேர்பவழி தொடுத்த மனுவின் பேரில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பை அறிவிக்க தடை விதித்திருக்கிறார்..

நீதி வழங்க நீதிமன்றமே தடையாக அமைந்த இந்த தலையீட்டினால் மற்றொரு நீதிபதி பய்ந்த்து போல உச்சநீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது

வழக்கோடு சம்பந்தப் பட்ட இரண்டு  தரப்பினரும் தீர்ப்பை ஏற்பதாக ஒத்துக் கொண்டிருக்கிற நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டிருப்பதில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக் கருதப்படுகிறது.

தீர்ப்பு வெளியாகிவிட்டால் பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு வேறு பிரச்சினை இல்லை. அதனால் அவை தீர்ப்பு வெளிவருவதை உள்ளார்த்தமாக விரும்ப வில்லை. தீர்ப்பு குறீத்து பாரதீய ஜனதா கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட்து.அதன் செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி நான் வக்கீல் என்ற முறையில் பேசுகிறேன் என்று பீடிகை போட்டு தீர்ப்பு தாமதமனதற்கு அதிருப்தி தெரிவிக்கிறார். வ்டிகட்டிய அயோக்கியத்தனம் அது.
காங்கிரஸ் அந்த அயோக்கியத்தனத்திற்கு துணை போகிறது

சமீபகாலமாக பாரதீய ஜனதாவின் விருப்ப்ப்படியே காங்கிரஸ் செயல்ப்டுகிறது.

60 ஆண்டுகளாக பேசித்தீர்க்கப்  படாத பிரச்சினையை 4 நாட்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வருவதை காங்கிரஸ் ஏற்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் பேசுகிறார்.

இந்திய முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் செய்த வரலாற்று துரோகங்களில் தீர்ப்பு தள்ளிப் போக துணை நின்ற இந்த சந்தர்ப்பமும் ஒன்று.

காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் இந்த வழக்கில் தீர்ப்பு வருவதை விரும்ப வில்லை


முஸ்லிம்களை பொருத்த்  வரை அன்றும் இன்றும் நம்பிக்கை யோடு இருக்கிறார்கள்.  

காரணம் ராமர் கோவிலை இடித்து விட்டு பாபரின் படைத்தளபதி மீர்பாகி பள்ளிவாசலை கட்டவில்லை அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் பழக்கமில்லை.

திருக்குர் ஆனோ நபிகள் நாயகமோ அவ்வாறு ஒரு சிறு உத்தரவை வெளியிட்டிருப்பார்கள் எனில் ஒவ்வொரு முஸ்லிமும் அதையே இலட்சியமாக கொண்டிருப்பார்கள்.  

பாபருக்கு முன்னரே பன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டு வந்துள்ளனர். இப்படி ஒரு பழி அவர்கள் மீது சொல்லப் பட்ட்தில்லை.

1528 பாபர் பள்ளி கட்டப்பட்ட்து. 350 வருடங்களாக ஒரு பிரச்சினையும் இல்லை
1987 சிப்பாய் கலகத்திற்கு பிறகு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க பிரிட்டிஷ்கார்ர்கள் திட்டமிட்டனர்.
அயோத்தியில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பாபர் பள்ளி இருப்பது அந்த ஊரில் இருந்த சில இந்துக்களின் கண்களை உறுத்தியது. அவர்கள் பிரிட்டிஷாரின் திட்ட்த்திற்கு துணைபோயினர்.  
1859 முதல் தகராறு  தொடங்கியது.
சுதந்திரத்திற்குப் பிறது 1949 டிஸ்ம்பர் 22 இஷா வரை தொழுகை நடைபெற்ற பள்ளிவாசலில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக சிலை வைக்கப் பட்ட்து.
பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்றது நீதிபதி கே.கே நய்யார் பள்ளிக்குப் பூட்டுப் போட்டார்.  அன்றிலுருந்து நடந்துவருகிற வழக்கிற்கு இப்போது வயது 61
இடையில் காங்கீரஸ் ஆட்சிக்காலத்தில் தொடந்து முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்ட்து
1986 – சிலைகளை வழி பட அனுமதிக்கப் பட்ட்துமுஸ்லிம்களுக்கு தொடர்ந்து தடை
1989 – சிலா நியாஸ்
1990 ரதயாத்திரை
1992 – பாபர் பள்ளி உடைப்பு. தொடர்ந்த கலவரத்தில்  2000 முஸ்லிம்கள் பலியாயினர்

இத்தனைக்குப் பிறகும்  இன்று செப்டெம்பர் 24 அலகத் உயர்நீதிமன்றம் வழங்க இருந்த தீர்ப்பை ஏதோ ஒரு அனாமத்து பேர்வழி ஆர் சி திரிபதி என்பவன் தொடுத்த மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நீதியை அமுக்கிவிட முடியும்
முஸ்லிம்கள் தொடர்ந்து நீதி கேட்டு போராடுவார்கள். போராட வேண்டும்
நீதிக்கான போராட்டம் வர்வேற்க்கத்தக்கத
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார்கள்
قال المقضي عليه : حسبي الله
قال النبي صل الله عليه وسلم  : فإن الله يلوم علي العجز، ولكن عليك بالقيس ،واذا غلب عليك امر فقل حسبي الله
தனது கணவர் விசயத்தில் நீதிக்காக போராடிய பெண்மணியின் குரலை அல்லாஹ்
குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ

·         முஸ்லிம்கள் பொறுமையோடு நீதிக்காக காத்திருக்கவேண்டும். விரக்தி கூடாது.
·         அத்தோடு இந்துப் பெரும்கள்,  இந்த்துத்துவ சக்திகளின் விஷமத்தனாமான விளையாட்டை அடையாளம் கண்டு கொள்ளச் செய்வதற்கான வழி என்ன என்பதை கண்டறிய வேண்டும்