வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Tuesday, August 30, 2011

பெருநாள் சிந்தனை உட்பூசலை ஒழிப்போம்.

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.

நன்மையான வழிகளில் கிடைக்கிற எல்ல மகிழ்ச்சியையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நிறைவாக தந்தருள்வானக!  

இன்று பொங்கும் மகிழ்ச்சியை அல்லாஹ் என்றும் தங்கச் செய்வானாக!   

تقبل الله طاعتكم، ، نسأل الله تبارك وتعالى أن يهل هلال هذا العيد علينا وعلى المسلمين بالأمن والإيمان، والسلامة والإسلام، والتوفيق لما يحب ويرضى، وأن يجعل هذا العيد بشير خير وبركة على الأمة الإسلامية، وأن يجعله نذير وبال وحسرة على أعداء هذه الأمة
மழிழ்ச்சி பொங்க இங்கே குழுமியிருக்கிற நம் அனைவருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களிக்கிறான்.
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى(14)وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
(قال القرطبي :
روي عن أبي سعيد الخدري وابن عمر: أن ذلك في صدقة الفطر, وصلاة العيد. وكذلك قال أبو العالية, وقال: إن أهل المدينة لا يرون صدقة أفضل منها, ومن سقاية الماء. وروى كثير بن عبد اللّه عن أبيه عن جده, عن النبي صلى اللّه عليه وسلم في قوله تعالى: "قد أفلح من تزكى" قال: [أخرج زكاة الفطر], "وذكر اسم ربه فصلى" قال: [صلاة العيد].)

فلاح  எனும் வெற்றிசிரமம் இல்லாமல் நாம் நாடியது நிறை வேறுவதையும், அது தீர்ந்து அழிந்து போகாமல் நிலைத்து நிற்கிற வெற்றியையும் குறிக்கும்

உலகத்தின் எந்த வெற்றிக்கும் இந்த வார்த்தையை பயன் படுத்த முடியாது. எனவே فلاح எனும்  வெற்றி சொர்க்கத்தையே குறிக்கிறது.

فعن سعد بن أوس الأنصاري عن أبيه رضي الله عنه قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق، فنادوا: اغدوا يا معشر المسلمين إلى رب كريم، يمنّ بالخير، ثم يثيب عليه الجزيل، لقد أمرتم بقيام الليل فقمتم، وأمرتم بصيام النهار فصمتم، وأطعتم ربكم فاقبضوا جوائزكم، فإذا صلوا نادى مناد: ألا إن ربكم قد غفر لكم فارجعوا راشدين إلى رحالكم، فهو يوم الجائزة، ويسمى ذلك اليوم في السماء يوم الجائزة -  ابن رجب-رحمه الله- في لطائف المعارف


 சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் நமது அமல்கள் ஏற்கப்பட்ட்தா?

مَن المقبول منا؟
·        كان الإمام علي -رضي الله عنه- ينادي في آخر ليلة من شهر رمضان: يا ليت شعري! مَن هذا المقبول فنهنيه؟ ومن هذا المحروم فنعزيه؟
·        وكان سيدنا ابن مسعود -رضي الله عنه- يقول: مَن هذا المقبول منا فنهنيه، ومن هذا المحروم منا فنعزيه، أيها المقبول هنيئاً لك، أيها المردود جبر الله مصيبتك

நாம்  கவலையில் தோய்ந்து போக தேவையில்லை. நமது அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருப்பான் என நம்பிக்கையோடு இருப்போம். அதற்காக பிரார்த்தனை செய்வோம். இறைவனை அஞ்சிக் கொள்கிற அந்த மனோ உணர்வை கைவிடாமல் இருப்போம். அல்லாஹ் நமது நம்பிக்கையை நிறைவேற்றுவான்.

·        وقف عمر بن عبد العزيز -رحمه الله تعالى- خطيبًا في يوم عيد الفطر فقال: أيها الناس: إنكم صمتم لله ثلاثين يوماً، وقمتم ثلاثين ليلة، وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم. فأسال الله أن يتقبل منا جميعا صيامنا وقيامنا، وأن يغفر ذنوبنا و زلاتنا.
அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தை தருவதாக வாக்களிக்கிறானே அந்த சொர்க்கம் எப்படி இருக்கும்.
وعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،عَنْ رَسُولِ اللَّهِ r قَالَ:" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى:أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ،مَا لاَ عَيْنٌ رَأَتْ،وَلاَ أُذُنٌ سَمِعَتْ،وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ " قَالَ أَبُو هُرَيْرَةَ:" اقْرَءُوا إِنْ شِئْتُمْ:{فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} [السجدة:17] ".- البخاري

وعَنْ أَبِي هُرَيْرَةَ  :  قُلْتُ يَا رَسُولَ اللهِ الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ:لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ،وَمِلاَطُهَا الْمِسْكُ الأَذْفَرُ،وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَاليَاقُوتُ،وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ دَخَلَهَا يَنْعَمُ وَلاَ يَبْأَسُ،وَيَخْلُدُ وَلاَ يَمُوتُ،لاَ تَبْلَى ثِيَابُهُمْ،وَلاَ يَفْنَى شَبَابُهُمْ
(ஒரு  செங்கல் தங்கம், மற்றது வெள்ளி, இடையில் வைக்கப்படும் கலவை வாசனை மிக்க கஸ்தூரி, அதன் கற்கள் வைரங்கள் மாணிக்கங்களும், அதன் மண் குங்குமப்பூ, உள்ளே நுழைந்தவர்கள் இன்பமுறுவர். துண்பமே இல்லை. அங்கே நிரந்தரமாக இருப்பர். மரணம் இல்லை. அவர்களது ஆடைகள் அழுக்காகாது கிழியாது. அவர்களது இளமை அழியாது.)

இந்த சொர்க்கம் யாருக்குரியது ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
" حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات
கஷ்டமான காரியங்களாக சொர்க்கம் சூழப்பட்டுள்ளது ஆசைகளால் நரகம் சூழப்பட்டுள்ளது.

குறைந்த வார்த்தையில் சொர்க்கத்தை அடைய வழி சொல்லும் அற்புதமான பொன்மொழி இது.

இன்னொரு நபி மொழி இதை விளக்குகிறது.

وعَنْ أَبِي هُرَيْرَةَ،أَنَّ رَسُولَ اللَّهِ r قَالَ:" لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ:اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ،فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا،ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ،ثُمَّ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ " قَالَ:" فَلَمَّا خَلَقَ اللَّهُ النَّارَ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلُهَا،فَحَفَّهَا بِالشَّهَوَاتِ ثُمَّ قَالَ:يَا جِبْرِيلُ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا،فَذَهَبَ فَنَظَرَ إِلَيْهَا،ثُمَّ جَاءَ فَقَالَ:أَيْ رَبِّ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا دَخَلَهَا ".(أخرجه أبوداود

இஸ்லாம் சில கட்டுப்பாடுமிக்க வரையறைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. பல சமயத்திலும் அது நம் மனதுக்கு சுமையாக உடலுக்கு பாரமாக ஆசைகளுக்கு இடையூறாக தெரிகிறது.

மறந்து விடாதீர்கள். இந்த தடைகளை கடந்தால் தான் சொர்க்கத்தை அடைய முடியும்.?

மனம் போன போக்கில் சென்றால் அது நரகத்தின் வட்டத்திற்கு நம்மை இழுத்து விடும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ரமலானை வழி அனுப்பி வைத்திருக்கிற இந்த தருணத்தில் இந்த மாதம் முழுக்க அல்லாஹ் நம்மை பழக்கப் படுத்தியிருக்கிற உண்ணதமான பண்பாடுகளை வாழ்வு முழுவதும் கைகொள்வதாக உறுதி ஏற்போம்.

·         நபிலான வணக்கங்களை அதிகமாக செய்வேன் என உறுதி ஏற்போம்.
قَالَ رَسُول اللَّهِr    مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنْ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ

·         ஏழைகளிடம் கருணை காட்டுவதிலும் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதையும் ஆயுள்முழுக்க அக்கறை செலுத்துவோம்

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى  வசனத்தின் தப்ஸீரில் குர்துபி ஒரு நிகழ்ச்சியை எழுதுகிறார்

وروى عطاء عن ابن عباس قال: نزلت في عثمان بن عفان رضي اللّه عنه. قال: كان بالمدينة منافق كانت له نخلة بالمدينة, مائلة في دار رجل من الأنصار, إذا هبت الرياح أسقطت البسر والرطب إلى دار الأنصاري, فيأكل هو وعياله, فخاصمه المنافق; فشكا ذلك إلى رسول اللّه صلى اللّه عليه وسلم, فأرسل إلى المنافق وهو لا يعلم نفاقه, فقال: [إن أخاك الأنصاري ذكر أن بسرك ورطبك يقع إلى منزل, فيأكل هو وعياله, فهل لك أن أعطيك نخلة في الجنة بدلها]؟ فقال: أبيع عاجلا بآجل لا أفعل. فذكروا أن عثمان بن عفان أعطاه حائطا من نخل بدل نخلته; ففيه نزلت "قد أفلح من تزكى". ونزلت في المنافق "ويتجنبها الأشقى".
 சொர்க்கத்தை வாங்கும் ஆர்வம் ஒரு ஏழைக்கு உதவுவதில் எத்தகைய பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

·         ரமலான் நம்மை இணைத்தது. வணக்க வழிபாடுகள் தான தர்மங்களின் வழியே நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக முடிந்தது. புதிய நட்புகள் மலர்ந்தன. பழைய உறவுகள் வளர்ந்தன. இன்றைய சூழலில் நமது பிரதான கடமை  உட்கட்சி பூசலை குறைக்க நம்மில் ஒவ்வொரு வரும் தம்மால் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும்.   

வரலாற்றின் ஒரு சிக்கலான காலகட்டத்தில் முஸ்லிம்கள் இந்த பெருநாளை சந்திக்கிறார்கள்.

கடந்த சில பெருநாட்களின் போது முஸ்லிம் உலகம் மற்ற புறச் சக்திகளின் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி இருந்தது. தீவிரவாத பயங்கர வாத முத்திரைக்கு சமூகம் இலக்காகி இருந்தது.  

இப்போது அது குறைந்துவிட்டபோதும் முஸ்லிம் சமூகத்தின் உள்ளுக்குள் நடை பெறுகிற போராட்டங்களால் முஸ்லிம் உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இராக், துனூசியா, எகிப்து, எமன், லிபியா,சிரியா, பஹ்ரைன்.இப்போது லிபியா என்று தொடர்ச்சியாக முஸ்லிம் நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் ஸ்திரத்தன்மை இல்லை. உலகில் கனிசமாக முஸ்லிம்கள் வாழ்கிற நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மக்களை பஞ்சம் வாட்டிக் கொல்கிறது.

உலகின் ஒரு பகுதி முஸ்லிம்கள் இந்த பெருநாளை முழு மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற சூழ்நிலையில் இல்லை.

வளமான பூமி பெருக்கெடுக்கும் ஆறுகள், ஏராளமான இயற்கை வளங்கள் என பொருளாதார வளத்ததிற்கு எந்த குறையும் இல்லாத முஸ்லிம் நாடுகளில் சொல்லணா துயறங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சூடானில் பட்டினிச் சாவுகள்,   எகிப்தில் உணவுப் பற்றாக்குறை , எண்ணை விலை அதிகரித்திருக்கிற சூழ்நிலையில் எண்ணை வளமிக்க நாடான லிபியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகக் கிடக்கின்றன.

இத்தனைக்கும் காரணம் அங்கு நிகழும் உட்பூசல்கள்.

சோமாலியா ஆப்ரிக்காவின் மிக நீண்ட கடற்பகுதியை  கொண்ட நாடு, உலகின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கிற மதிப்பு மிக்க நிலப்பகுதியில் அமைந்த நாடு, ஒரு காலத்தில் விவசாயத்தில் கொழித்த நாடு. 1990 வரைக்கும் ஆப்ரிக்காவிலும் உலக அளவிலும் தலை நிமிர்ந்து நின்ற நாடு. இப்போது சீரழிந்து கிடக்கிறது. எலும்பை மட்டுமே உடலாக கொண்ட குழந்தைகள், கடுமையான நோயின் பிடியில் சிக்கி அழியும் தாய்மார்கள் என அந்த நாடு இப்போது ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. உதவி வழங்க சவூதி அரேபியா உட்ப்ட பல நாடுகள் முன் வருகின்றன. ஆனாலும் பலனில்லை. காரணம் 1990 க்குப்பிறகு தொடங்கிய உள்நாட்டுச் சண்டை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உதவியாக கிடைக்கிற காசிற்கு ஆயுதம்  வாங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் நாடுகளில் நிலவும் வருந்தத்தக்க சூழ்நிலைகள் அகல்வதற்காக அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கிற கடமை நமக்கு இருக்கிறது. நேற்றைய முன் தினம் மக்காவில் இமாம் அப்துர ரஹ்மன் சுதைசி அவர்கள் இவற்றுக்காக மனமுருக பிரார்த்தனை செய்த்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதற்கு மேலாக நாம் பாடம் பெற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி உட்பூசல்கள் இல்லாத சமுதாயம்மாக நாம் வாழ்கிற சமுதாயம் அமைய நம்மால் முடிந்த வகையில் ஒத்துழைக்க வேண்டும்.அப்படி அமைந்தால் நாம் வாழும் பூமி சொர்க்கமாக ஆகும்.

சுய நலம் கொண்டு சமூகத்திற்குள் பிரச்சினை செய்பவர்களாக நம்மில் எவரும் ஆகி விடக்கூடாது.

நான் வாழும் சமூகத்தில் பொறுமை இல்லாமலும் பொறுப்பில்லாமலும் பிரச்சினையை ஏற்ப்டுத்துகிற வகையில் நான் நடந்து கொள்ள மாட்டேன் என்ற உறுதி மொழியை நம்மில் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

ஒரு எழுத்தாளர் சொல்கிறார்:
  
والله لو كبرت قلوب المسلمين كما كبرت ألسنتهم، لغيروا وجه التاريخ، ولو اجتمعوا دائما كما يجتمعون لصلاة العيد لهزموا جحافل الأعداء، ولو تصافحت قلوبهم كما تتصافح أيديهم لقضوا على عوامل الفرقة، ولو تبسمت أرواحهم كما تبسمت شفاههم لكانوا مع أهل السماء، ولو لبسوا أكمل الأخلاق كما يلبسون افخر الثياب لكانوا أجمل أمة على الأرض.

அல்லாஹ் நமக்கும்  உலகம் முழுவதிலும் வாழ்கிற முஸ்லிம்களுக்கும்  நிம்மதியான கவுரமான செழிப்பான பக்திமிக்க வாழ்வை தந்தருள்வானாக! நம்மை சொர்க்கத்திற்கு சொந்தக்கார்ர்களாக ஆக்கியருள்வானாக!

Thursday, August 25, 2011

ஜகாத் இஸ்லாத்தின் பெருமை



وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இஸ்லாமின் சிறப்புக்களில் முக்கியமானது.
வசதி படைத்தவர்களின் மீது தர்மத்தை கடமையாக்கியது.

வல்மபுரிஜான் : எல்லா சமயங்களும் தர்மத்தை பேசியுள்ளன தர்மத்தை கடமையாக்கிய சமயம் இஸ்லாம் மட்டுமே!

முஸ்லிம் உம்மத்தின் சிறப்பு
தங்களது உழைப்பில் கிடைத்த பணத்தில் ஏழைகளுக்கு இருக்கிற பங்கை மனம் கோனாமல் கொடுப்பது.

ஈந்துவத்தலில் இன்பம் காணுகிற இயல்பு முஸ்லிம்களிடம் அதிகம்

இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அரபியருக்கு இந்த கட்டளை தான் சற்று சிரமாமக இருந்த்து.

ஹிஜ்ரி 9 க்குப் பிறகு, தாயிப் நகர மக்கள் நாங்கள் இஸ்லாத்தை ஏற்கிறோம் ஆனால் ஜகாத் கொடுக்க முடியாது என்றனர். அவர்கள் வரட்டும் ஜ்காத்தை கொடுத்து விடுவார்கள் என்றார் பெருமானார் (ஸல்)

வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் வாரி வழங்கினார்கள்

பெருமானாரின் அறிவுரைகளும் நடைமுறைகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்தின.

عن أَبَي أُمَامَةَ َقُالُ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ اتَّقُوا اللَّهَ رَبَّكُمْ وَصَلُّوا خَمْسَكُمْ وَصُومُوا شَهْرَكُمْ وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ ق  - ترمذي
நாங்கள் இன்னும் அதிகமாக தரவேண்டுமா என்று சஹாபாக்கள் கேட்டார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ
وَقَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّهُ ذَكَرَ الزَّكَاةَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَيَّ غَيْرُهَا فَقَالَ لَا إِلَّا أَنْ تَتَطَوَّعَ
ஜகாத் வசூலிப்பவர்களிடம் நடுத்தரமானதை எடுங்கள என பெருமானார் சொல்லியனுப்ப கொடுத்தவர்களோ உயர்தரமானதை கொடுத்தார்கள்.

ஜகாத் கொடுத்தாவர்களிடம் கண்டிப்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلَا لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ الْآيَةَ    بخاري

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَتَانِ فِي أَيْدِيهِمَا أَسَاوِرُ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ أَسَاوِرَ مِنْ نَارٍ قَالَتَا لَا قَالَ فَأَدِّيَا حَقَّ هَذَا الَّذِي فِي أَيْدِيكُمَا- احمد


عَنْ أَبَي  هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَمَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ

ஜ்காத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? என ஜகாத்திற்கு திட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது.
   
ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை

ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.

யார் மீது கடமை
அடிப்ப்டை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக சுமார் 2 லட்சத்த்து 15 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் ஒரு வருடம் முழுவதும் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடமையாகும். ( 85 கிராம் தங்கத்தின் மதிப்பு)

(இன்றைய பொருளாதார முறையில் தங்கத்தை அடிப்படையாக கொண்டே நாணயத்தின் மதிப்பு முடிவு செய்யப்படுவதால்- 85 கிராம் தங்கத்திற்கு நிகரான செல்வம் வைத்திருப்பவர் மீதே ஜகாத் கடமையாகும் என தற்கால அறிஞர்கள் பத்வா வெளியிடுள்ள்ளார்கள். 599 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் கணக்கிட்டு ஜகாத் வழங்கினால் அது பேணுதலாக அமையும் )

இந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபார பொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.

பிக்செட் டெபாசிட்டுகள், முதலீடுகள், சேமிப்புத் தொகைகள், வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.

கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.

வீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது.

வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு, கார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்  ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.

உதராணத்திற்கு தொடக்கத்தில் 5 லட்சமாக இருந்து அது இடையில் 2 லட்சமாக குறைந்து இறுதியில் அது 7 லட்சமாக உயர்ந்திருக்குமெனில் 2 லட்சம் தான் வருடம் முழுவதும் இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்ற வியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.

பெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.

அதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

தங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை.  

வியாபார நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசி நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி.

ரியல் எஸ்டேட் – வியாபார நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

வங்கிகள் மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை திட்ட்த்தில் பெறப்படும் கடன தொகை வருமாணக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம் கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்

எப்படி ஜகாத்தை கொடுப்பது, ஜகாத் கொடிப்பவர்கள் கவனிக்க வேண்டியது

அருள் கூர்ந்து ஏனோ தானோ வென்று ஜகாத் கொடுப்பதை நிறுத்துங்கள்.

நம்மிடமிருக்கிற பணம் சந்திர ஆண்டில் ஒரு வருடம் பூர்த்தியாவிட்டால் ஜகாத் கடமையாகி விடும்.

ஒவ்வொரு செல்வந்தரும் ஜகாத்தை கணக்கிடுவதற்காக ஒரு பிறைத் தேதியை உதாரணத்திற்கு ரமலான் 11 அல்லது ரஜப் 5 என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினத்தில் தனது ஜகாத்தின் அளவை அவர் முடிவு செய்திட வேண்டும்.

அப்போதே தன்னுடையை கடமையை அவர் நிறைவேற்றி விட வேண்டும். ஜகாத் கடமையான பிற்கு காலம் தாழ்த்துவது, அல்லது வருடம் முழுவதும் கொஞ்சம் கொஞ்டமாம ஜகாத்தை கொடுக்க நினைப்பது மார்க்க அடிப்படையில் பொருத்தமானது அல்ல. பின்னால் ஜகாத் கொடுக்க முடியாமல் போய்விடலாம். ஜகாத்தை கொடுத்து நம்முடை சொத்தை சுத்தப் படுத்தி விட்டோம் என்ற அந்தஸ்தும் கிடைக்காது.

இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய தொகையை முன்னதாகவே கணக்கிட்டு கொடுக்கலாம். கொடுக்கிற போது ஜகாத் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கொடுத்த தொகையைப் பற்றிய விவரக்குறிப்பையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜகாத் கொடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது,  
ஜகாத் என்பது ஒரு அமல். நான் கொடுக்கிறேன் என்ற எண்ணத்தை விட நான் நிறைவேற்றுகிறேன். இதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையில் ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
தற்பெறுமை ஏற்படாமல் இந்த எண்ணம் காக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللَّهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا – إبن ماجة


யாருக்கு ஜகாத்
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஜ்காத் யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமது அவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத் கொடுத்த்தாதாகாது.

தாய தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம். உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்ம்ம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய இரட்டை நன்மை கிடைக்குக்ம்

அடுத்த்தாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

நமக்கு அருகிலேயே தேவைய்டையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

அமைப்புக்கள் இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது உறவினர்களையும் அருகிலிருப்போரையும் கவனித்து விட்டார்களா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜகாத் கொடுக்கிற போது வாங்கும் நபருக்கு அது முழு உரிமையானதாக ஆகி விட வேண்டும்

Thursday, August 18, 2011

சுதந்திரத்திற்கு ஆபத்து


நாடு சுதந்திரம் பெற்றதன் 65 வது நினவுக் கொண்டாடங்கள்  நாடு முழுவதும் கொண்டாடப் பட்ட்து.

ஆனால் மகிழ்ச்சியாக கொண்டாடப் பட்ட்தா என்பது கேள்விக்குரியதாகும். பல்வேறு பட்ட நெருக்கடியில் நாடு சிக்கியிருக்கிறது.

ஊழல், பொறுப்பற்ற அரசியல், இந்துதுத்துவாவின் வளர்ச்சி காரணமாக நாட்டின் ஸ்திரத்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.

ஆனாலும் தமது சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்துக் கொண்டு போதிய படிப்பறிவற்ற இந்திய மக்கள் இனியும் தீரத்தோடு பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாக இருக்கிறதுஇது விசயத்தில் முஸ்லிம்களுக்கும் பல கடமைகள் உண்டு.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு சுந்தந்திர தின உரையாற்றிய தமிழக முதல்வர் இந்த நாள் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு உரியது  என்று கூறினார்.

நாட்டு விடுதலைக்காக போராடுவதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தார்கள். இன்னும் சொல்வதானால் சுதந்திரப் போராட்டம் என்பது அடிமை இந்தியாவில் முஸ்லிம்களால் தான் முன்னெடுத்துச் செல்லப் பட்ட்து என்று சொன்னால் அது மிகையாது.

நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது சமயத்தின் வழிகாட்டுதலாகவும் இருந்தது.

முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயாரிடம் ஆட்சியை பறிகொடுத்திருந்தனார் அதனால் தீரத்தோடு போராடினார்கள் என்று பலரும் சொல்வது வாடிக்கை.

ஆனால், விடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக  ஈடுபட  பிரதான காரணம் இஸ்லாம் ஆகும்.

லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமா.
மனிதன் மனிதனுக்கு தலைவணங்கிச் கிடப்பதை தடை செய்கிறது. அது தனிமனிதனின் சுய ரியாதையை மீட்டெடுத்து அவனுக்கு சுதந்திர மனிதனுக்குரிய கம்பீரத்தை வழங்கியது.

பிலால் (ரலி) அவர்களை  ஒரு நாள் அபூதர்; (ரலி) கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். பெருமானார் (ஸல்) வர்கள் பூதர்; (ரலி) அவா;களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்.
يا أبا ذر أعيرته بأمه إنك امرؤ فيك جاهلية     (புகாரி:30)

இத்தனை ஆண்டுகளாக அடிமைப் பட்டுக்கிடந்த பிலாக் (ரலி) அவர்களுக்கு சுய மரியாதையைப் பற்றிய பிரகஞயை ஏற்படுத்தியது இஸ்லாமாகும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விசாரித்த்து, தனிமனித சுதந்திரத்திற்கும் சுய மரியாதைக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த முன்னுரிமைக்கு எடுத்துக் காட்டாகும். ஒரு முன்னாள் அடிமைக்காக சமுதாயப் பிரமுகரான அபூதர் (ரலி) யை பெருமானார் கண்டித்த்து சுதந்திர உலகில் அனைத்து மனிதர்களும் சம்மாமானவர்களே என்பதை நிரூபித்த்து  


அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவு கட்டுவதும் நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது.

فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى(47)20:

நபி தாவூத் (அலை) ஜாலூத்தின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டினார்கள் எனபதையும் குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்கிறது. (2.251)

நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் தனது கடைசி ஹஜ்ஜின் போது இனம் நிறம் மொழி தேசம் என்ற எந்த அடிப்படையிலும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்த முடியாது என்ற பிரகடணத்தை வெளியிட்டார்கள்.

فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى (அஹ்மது: 22391)

1906 ஆண்டு பாலகங்காதர திலகர்,  “ சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை  முன்வைத்தார். அது இந்தியாவிலிருந்த மற்றவர்களுக்கு புதிய கோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது புதியதல்ல.

கி.பி. 7 ம் நூற்றாண்டிலேயே ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் உலகுக்கு  சுதந்திரம் மக்களது பிறப்புரிமை என்ற கருத்தை முன்வைத்து விட்டார்கள்.

எகிப்தின் ஆளுநர் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின்   மகன் முஹம்மது  எகிப்து தேசத்தைச் சார்ந்த  கிப்தி இன இளைஞனை ஓங்கி ஒரு குத்து விட்டார். எகிப்தில் நீதி கிடைக்காது என்று பயந்த அந்தி கிப்தி இளைஞன் மதீனாவிற்கு வந்து கலீபா உமர் (ரலி)யிடம் முறையிட்டார்.    

உமா; (ரலி) அவர்கள்  ஆளுநர்; அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து, மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா)  எனறு கேட்டார்கள்.
متي تعبدتم الناس وقد ولدتهم أمهاتهم احرارا

சுதந்திரத்தை பிறப்புரிமையாக அறிவித்த முதல் அரசியல் தலைவர் உமர் ஆவார்.

பிரஞ்சுப் புரட்சியோ உலகின் மற்ற பகுதிகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களோ இஸ்லாமிடமிருந்தும் முஸ்லிம்களிடமிருந்தும் இரவல் பெற்ற்வையாகும்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்ட்த்திற்காக மக்களை தூண்டி விட்ட்தில் இஸ்லாத்தின் பங்கு முக்கியமானது.

முதல் சிப்பாய் கலகம் என்பது இஸ்லாம் பன்றியை ஹரமாக்கியிருக்கிறது என்ற சட்ட்த்திலிருந்து தோன்றியதாகும்.

பன்றிக் கொளுப்பு தடவப் பட்ட துப்பாக்கித் தோட்டாக்களை பல்லில் கடித்டு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு கிழக்கிந்திய படையினர் இந்திய வீர்ர்களை நிர்பந்தித்த போது அதை எதிர்த்து முஸ்லிம் வீர்ர்கள் நிகழ்த்திய போராட்டம் தான் சிப்பாய் கலகம் என்று கூறப்பட்ட்து. அதைதான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரலாறு வர்ணிக்கிறது.

இன்று இந்திய நாட்டில் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை சிதைக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றனர்.

இந்த சக்திகள்தான் விடுதலைக்காக நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த போது ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து சொந்த சகோதர்களை காட்டிக் கொடுத்த்து வந்தவர்கள்.

இந்து மதம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கோடிக்கணக்கான அப்பாவி மக்களை தாழ்த்தப்பட்ட்வர்களக தீண்ட்த்தாகாதவர்களாக நட்த்தியவர்க்ள்.

இப்போதும் தங்களது ஜாதிய மேலான்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்து மதம் இந்து தேசம் என்ற பெய்ரைச் சொல்லிக் கொண்டு மக்களை உணர்ச்சி வசப்படச் செய்ய முயல்கின்றனர்.
அவர்களால் இந்து மத்த்தின் பெயரைச் சொல்லி இந்துக்களை ஒன்று படுத்த முடியாது. காரணம் நம்முடைய சக இந்துக்களுக்கு இந்தப் பார்ப்பண் ச்கதிகளை விஷத் தன்மை எப்படிப் பட்ட்து என்பது தெரியும்.

பாம்புக்கு பல்லில் மட்டும் தான் விஷம் பார்ப்பானுக்கு உட்ம்பெல்லாம் விஷம் என்று பெரியார் சொன்னதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்து என்று சொல்லி மக்களை ஒன்று படுத்த முடியாத சூழ்நிலையில் முஸ்லிம் எதிர்ப்பு என்ற வழியைப் பயன்படுத்தி இந்துக்களை ஒன்று திரட்ட திட்டமிடுகின்றனர்.


ஒற்றுமையாக இருக்கிற நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி தலைவர்களாக முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜூலை 16 ம் தேதி DNA என்ற ஆங்கில நாளிதழில் சுப்ரமணய சுவாமி இந்துதுதுவா வெறியை தூண்டும் வகையில் ஒரு கட்டுரை எழுதி முஸ்லிம்களுக்கு எதிராக கடும் கண்டனத்திற்குரிய கருத்துக்களை எழுதியிருக்கிறார். முஸ்லிம்களை மிகவும் கேவலமாக அந்தக் கட்டுரை சித்தரிக்கிறது.

ஆனால் சுப்ரமணய சுவாமியை போல கேவலமான ஒரு ஆள் இந்திய அரசியலில் வேறு யாரும் கிடையாது. அந்நிய நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்திய நாட்டைப் பற்றி உளவு சொல்வதன் மூலம் வாழ்கை நட்த்திக் கொண்டிருப்பவர் அவர் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி.

சாத்த்தான் வேதம் ஓதுகிற கணக்கில் அவர் இஸ்லாமிய தீவிரவாத்தை ஒடுக்குவது எப்படி என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு தீவிரவாதம் தெரியாது இந்து தீவிரவாத்தைப் பார்த்துத்தான் முஸ்லிம் தீவிரவாதம் உருவானது. இந்து தீவிரவாதம் ஒடுக்கப் படும் என்றால் முஸ்லிம் தீவிரவாதம் தானாக ஒடுங்கி விடும் என்பது தான் எதார்த்தம்.

ஆனால் சுபரமண்ய சுவாமி இஸ்லாமின் வளர்ச்சியை காட்டி இந்துக்களை அச்சப் படுத்த நினைக்கிறார். பாகிஸ்தானில் தாலிபான்கள் கை ஓங்கி ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா பின்வாங்கி விடுமென்றால் முஸ்லிம்களின் கை ஓங்கி இந்தியாவை முஸ்லிம் நாடாக ஆக்க முயற்சி செய்வார்கள் என்கிறார்.  அவர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முடிக்காமல் விட்ட இந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றும் திட்ட்த்தை இனி செயல் படுத்த முயற்சி செய்வார்கள் என்கிறார். 

உண்மையில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இணைந்தால் கூட நாம் பயப்பட்த்தக்க ஒரு நாடாக ஒரு போதும் மாறமுடியாது. இந்தியாவோடு ஒப்பிடுகையில் வெகு குட்டி நாடுகள் அவை. அந்த நாடுகளை நம் நாட்டுக்கு எதிராக சித்தரிப்பதே ஒரு மிகப்பெரிய  ஏமாறு வேலையாகும். குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி தங்களது பக்கம் இழுப்பது போலவே இந்துதுதுவ சக்திகள் பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இந்துக்களை தங்கள பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.

பாகிஸ்தான் என்ற நாடு உருவாக காரணமே இந்துத்துவ சக்திகள் தான் என்பது தொடர்ந்து அமபலமாகி வருகிறது.

கனிசமான அளவு முஸ்லிம்களை தங்களோடு வைத்துக் கொண்டால, அவர்கள் இந்த நாட்டிலிருக்கிற தாழ்த்தப் பட்ட தீண்ட்த்தகாதவர்களாக இருக்கிற மக்களை உணர்வூட்டி தட்டி எழுப்பி விடுவார்கள் பிறகு தங்களது ஜம்பம் பலிக்காது என்று திட்டமிட்ட்தனால் தான் இந்துதுதுவாவுக்கு சார்பான வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் பிரிந்து சென்று விடுங்கள் என்று ஜின்னாவிடம் கோப்ம் உண்டாக்கும் வகையில் பேசினார்கள்,      

இரண்டு இனத்தாருக்கும் இடையே ச்மரத்தை ஏற்படுத்தி, பிளவுபடாத ஒன்று பட்ட் ஒரே தேசமாக இருக்க  முடியும் என்ற நம்பிக்கை காந்தி உட்பட பதவியை விரும்பாத பல தலைவர்களுக்கும் இருந்த்து. ஆனால் சீக்கிரமாக பதவி வேண்டும் என்று ஆசைபட்ட நேரு உள்ளிட்ட சிலை தலைவர்களின் அவசரத்தினால் தான இந்தியப் பிரிவினை ஏற்பட்ட்து என வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் ஒத்துக் கொள்கிறார்கள். 

சுதந்திரம் பெறுவதை இன்னும் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்திருந்தால், பிரிவினைய தவிர்த்திருக்க முடியும் என்று இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல்கலாம் ஆசாத் கூறியதை இங்கு நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.

பார்க்க : சம்நிலைச் சமுதாயம் 2011 ஆகஸ்ட் இதழ  

பாகிஸ்தானிய பிரிவினைக்கு காரணமாக இருந்த்தே இந்துதுவ வெறி கொண்ட தலைவர்கள் தான். இப்போது அதே பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டி இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கு வெறியேற்ற நினைக்கிறார்கள்.

சுபரமண்யசாமியின் அந்தக் கட்டுரை புதிதான ஒன்று அல்ல. இந்துதுவாவின் பழைய பல்லவி தான்.

கட்டுரையின் பல வாசகங்களும் இந்திய முஸ்லிம்களை மிக கேவலமாக ஒடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இந்துக்களை தூண்டி விடுகிற வகையில் அமைந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்துபாரம்பரியம் கொண்டவர்கள் என்று ஒத்துக் கொண்டால் தான் அவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும்.

காசியில் பள்ளிவாசலை அகற்ற வேண்டும். அது போல 300 இடங்களில் உள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டும்.

பொது சிவில் சட்ட்த்தை அமுல் படுத்த வேண்டும், சமஸ்கிருதம் படிப்பதையும் வந்தே மாதரம் பாடுவதையும் கட்டாயப்படுத்த வேண்டு,

மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்து மத்த்திற்கு வருவதை தடுக்க கூடாது.


இது போன்ற விசமத்தான பேச்சுக்களை இந்திய சமூதாயம் காதில் போட்டுக்கொள்வதில்லை என்பது ஆறுதலான விச்யம். இப்படிப் பேசுகிற சாமிகளை நோக்கி ஒரு நாய் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.

என்ன செய்தாதவது தங்களது பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்ற மலிவான ஏற்பாட்டில் தான் இத்தகைய கருத்துக்களை இவர் போன்றவர்கள் வெளியிடுகிறார்கள் என்பதை இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படாமல் இத்தகைய சக்திகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்ய வேண்டும். நீதிமன்றங்கள், மனித உரிமை அமைப்புக்கள், பிரஸ்கவுன்சில் ஆகியவற்றில் முறையிடுவதன் மூலம் இவர்களுக்கு தகுந்த பாடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

அதை சில முஸ்லிம் அமைப்புக்கள் செய்ய ஆரம்பித்திருப்பது மகிழ்சியளிக்கிறது.

ஆனால், அதேநேரம் இந்திய மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய அரசியல் அநாமத்துக்களை விட்டு வைத்து அரசு வேடிக்கை பார்ப்பது சரியா என்பதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்? சுதந்திர இந்தியாவிற்கு இவர்களாக் ஏற்படுகிற ஆபத்துக்களை அரசுகள் தொடர்ந்து க்ண்டும் காணாமல் இருப்பது, இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தீய சக்திகளுக்கு சாதகமாகிவிடாதா என்பதை அரசும் மக்களும் யோசிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டோர் அனைவரும் ஒன்றாக இத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டு. தீவிரவாத்த்தை அனைத்து வழிகளும் ஒடுக்குவதற்கான வழிகளுல் இதுவும் ஒன்றாகும்.

இது போல வன்ம்ம் தொனிக்கிற ஒரு கட்டுரையை, முஸ்லிம்களை ஒத்துக் கொள்ளும் இந்துக்களை தான் நாம் ஒத்துக் கொள்ள முடியும் என்று ஒரு கருத்தை ஒரு முஸ்லிம் எழுதியிருந்தால் அரசு எவ்வளவு விரைவாக செயல்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சுபரமண்ய சாமி போன்ற நிழலுலக மனிதர்கள் இவ்வாறு பேசுவது அல்லது எழுதுவதன் மூலம் நாட்டிற்குள் வகுப்பு வாத கலவரத்தை தூண்டி விடுகிற போது அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தடுப்பதற்காகத்தான் மத்திய அரசு வகுப்பு துவேச த்டுப்புச் சட்ட்த்தை கொண்டு வந்திருக்கிறது.

நாட்டில் நிலவுகிற எதார்த்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் நம்முடை மாநில அரசு அந்த சட்ட்த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானதும் சிறுபான்மையினருக்கு குறிப்பக முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பது மாகும்.

ஒரு சுத்ந்திர தினத்தை கொண்டாடு கிற வேளையில் நாட்டின் அமைதியை குலைக்கிற வகையில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை விட கொடூரமாக நாடு முழுவதும் வன்முறை சிந்தனையை தூண்டி விடுகிற சுபரமணய சாமி போன்ற அநாமத்து பேர்வழிகலை அரசு நிர்வாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் சுதந்திரம் கேலிக் கூத்தாகி விடும்.

அல்லாஹ் நமது இந்திய நாட்டின் அமைதியை ஆயுதங்களாலும் கருத்துக்களாலும் குலைக்க் முயற்சி செய்கிற் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக! மதத்தின் பெயரால மனித சமூகத்தை அடிமைப்படுத்த முயல்கிற சக்திகளை தன்னுடைய பலத்தால் அல்லாஹ் ஒடுக்குவானாக!