வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 29, 2011

சுத்தம் சோறு போடும்


ياأيها المدثر(1)قم فأنذر(2)وربك فكبر(3)وثيابك فطهر

உலக  சுகாதார  தினம் சமீபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாழவேண்டும் என்பதும் அதற்கான வழி முறைகளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன.

21 ம் நூற்றாண்டிலும் சுகாதாரத்தைப் பற்றி பாடம் நட்த்த வேண்டியிருக்கிறது.

சாப்பாட்டையும் தண்ணீரையும் போல மிக அத்தியாவசிய வாழ்வாதராமாக சுத்தமும் சுகாதாரமும் உணரப்பட வேண்டும்.

இஸ்லாம் அத்தகைய முக்கியத்துவத்தை கொடுத்தது.

பெருமானாருக்கு முதல் வஹியுக்குப் பின் 3 ஆண்டுகள் வஹி வரவில்லை. فترة الوحي   

அதற்குப்பின் அருளப்பட்ட முதல் வசனத்தில் சுத்தம் பற்றி உத்தரவிடப்பட்ட்து.
அதுவும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக
ياأيها المدثر(1)قم فأنذر(2)وربك فكبر(3)وثيابك فطهر

இஸ்லாமிய சட்டநூல்களில் முதல் பாடமே சுத்தம் தான்

தொழுகைக்கு சுத்தம் அவசியம் என்பதால் முஸ்லிம் தன் உடல் உடை விசயத்தில் சுத்தத்தைப் பற்றி அதிக விழிப்போடு இருக்க கடமைப் பட்டிருக்கிறார்.

உலகம் அசுத்தமாக நினைக்கிற காரியங்களில் மட்டுமல்லாது அதற்கு மேலும் இஸ்லாத்தில் சுத்தத்தின் அளவுகோல் கடுமையாக இருக்கிறது.    

 طاهر مطهر-  طاهر غير مطهر – نجس   என்றெல்லாம் தண்ணீரை தரம்பிரித்திருக்கிறது இஸ்லாம்.

உலகின் மற்ற சமயங்கள் - நடுகளில்  பலவற்றிலும் சுத்தம் பார்க்கப்படுவதில்லை.  
ஓளுவையும் குளிப்பையும் பர்ளாக – சுன்னத்தாக -  முஸ்தஹப்பாக இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சிறு நீர் விச்யத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் ஒன்று போதும் இஸ்லாத்தில் சுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்ட.

தூங்கி எழுந்தவுடன இரண்டு கைகளை கழுவிகொள்ள பெருமானார் வலியுறுத்தினார்கல்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ

கூக்க சுத்தம் செய்த பிறகு அக்குலில் கை வைத்த பிறகு  வியர்க்கும் பகுதிகளி அசுத்தம் சேறும் இடங்கலில் கை வைத்த பிறகு கையை சுத்தம் செய்வது இந்த வகையில் சுன்னத்தாக அமையும்.

சாப்பாட்டிற்கு முன் கை கழுவ வேண்டும் அதன் பின்னும் கை கழுகவேண்டும்  என்பதை முஸ்லிம்களிடமிருந்தே ஐரோப்பியர்கள் அறிந்கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. .

மூக்கை சுத்தம் செய்வதற்கும் இஸ்லாம் கூறியது.

சுத்தம் விசயத்தில் பெருமானாரின்  மற்ற பல்வேறு வழிகாட்டுதல்களும் கவனிக்கத்தக்கவை

عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطرة قص الشارب وإعفاء اللحية والسواك واستنشاق الماء وقص الأظفار وغسل البراجم ونتف الإبط وحلق العانة وانتقاص الماء قال زكرياء قال مصعب ونسيت العاشرة إلا أن تكون المضمضة زاد قتيبة قال وكيع انتقاص الماء يعني الاستنجاء

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة

عن المقدام بن شريح عن أبيه قال قلت لعائشة بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك

عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة على كل محتلم والسواك ويمس من الطيب ما قدر له

عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان

இன்றைய மருத்துவம் கூறுகிறது.

சுத்தமின்மை தான் நோய்களுக்கு காரணம்

பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால்  ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.



கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்
·         சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை (கழுவவேண்டும்) சுத்தம் செய்ய வேண்டும்.
·         காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
·         மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

வாயினை சுத்தம் செய்தல்
தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும். கரித்தூள், உப்பு, கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும்போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.

மிஸ்வக்கின் உபயோகம் பல்லுக்கு பாதுகாப்பு

·         தோல் பராமரிப்பு
·         தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
·         தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன.
·         தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.

·         கைகளைக் கழுவுதல்
·         உணவு உட்கொள்வது, மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம். இதுபோன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இதுபோன்ற செயல்களுக்குப் பின், மிகமுக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.
·         நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
·         பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.
·         இரத்தம், மலம், சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும்.

·         மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்
·         மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை சுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல் வேண்டும். கைகளை சோப்பினை கொண்டு கழுவ மறந்து விடக்கூடாது.

இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை
ஆண்கள்  மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இனப்பெருக்க உறுப்புகளை உடலுறவுக்கு முன்பும் பின்பும் கழுவவும் (சுத்தம் செய்யவும்)

சுத்த்த்திற்கு இஸ்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இதை உலகம் பாராட்டுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கான ஒரு கலந்துறையாடுகளுக்கு நான் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன்.
உன்னுடைய சமயம் அல்லாத பிற சம்யத்தில் உனக்கு பிடித்த அம்சம் எது என்று ஆசிர்யர் மாணவர்களிடம் கேட்டார்.
பலரும் இஸ்லாத்தை சொன்னார்கள். ஒரு இளம் பெண் : பாலை வனத்தில் உருவான ஒரு சமயம் சுத்த்த்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது என்று சொன்னாள்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் வசிக்கும் இடங்கள் தான் சுத்தமில்லாத சுகாதாரக்கேடாக இருக்கின்றன.

இலண்டனில் இஸ்லாமை தழுவிய ஒரு தம்பதி முஸ்லி நாட்டில் வாழ ஆசைப் பட்டு பாகிஸ்தானில் குடியேறினர்.
இரண்டே மாத்தில் இலண்டன் திரும்பி விட்டனர். ஒரு பேட்டியில் முஸ்லிம்களின் சுகாதாரமற்ற நடைமுறையை தங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தொடர்ந்து முஸ்லிம்களாக இலண்டனிலேயே வாழப்ப்போவதக அறிவித்திருந்தனர். இஸ்லாம் சுத்த்த்தை இவ்வளவு தூரம் வலியுறுத்துகிற போது முஸ்லிம்களிடம் அந்த கவனம் இல்லாத்த்து வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இப்போதும் முஸ்லிம்களி வாழ்விடங்கள் சுகாதாரமற்ற பகுதிகளாக இருப்பது வருந்த்த்தக்கது.
இந்நிலை மாற மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.


Thursday, September 22, 2011

கல்யாண வைபோகமே


ரமலான் முடிந்த கையோடு திருமண வைபவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு எனக்கு வருத்தமளித்த ஒரு முக்கியச் செய்தி ;

ஷவ்வால் மாத்த்தின் ஆறு நோன்பு முடிவதற்குள்ளாகவே மூன்று திருமணங்கள் நடைபெறுவதாக அழைப்பிதழகள் தெரிவித்தன.

ஒரு அவசரம் அவசியம் என்றால் ரமலான் மாத்தில் கூட திருமணத்தை நட்த்தலாம், ஏன் ஹஜ் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருக்கிற போது கூட திருமணம் செய்யலாம். தடை ஏதும் இல்லை. (இஹ்ராமில் தாம்பத்யம் மட்டுமே கூடாது)

மார்க்கத்தின் அடையாளமாக இருக்கிற சுன்னத்தான நோன்பின் காலங்களில் - ஷவ்வால் மாதத்தின் முதல் ஆறு நாட்கள், முஹர்ரம் 9, 10- ஷஃபான் 15 - திருமணத்தை தவிர்த்துக் கொள்வது இஸ்லாமிய கலாச்சாரமாகும்.

ஒரு திருமணம் சுன்னத்தான நோன்பிற்குரிய காலஙகளில் வைக்கப் பட்டால் குறைந்த பட்சம் 30 பேர் நோன்பு பிடிப்பது தடைபடும். இந்த செயல் அதிகரிக்கிற பட்சத்தில் சுன்னத்தான நோன்பு நாட்களை சமூகம் மறந்து விடவாய்ப்பு உண்டு.

கல்யாண மண்டபங்கள் கிடைப்பதை காரணமாக் சொல்லி சுன்னத்தான நோன்பிற்குரிய நார்ட்களை விருந்திற்குரிய நாட்களாக மாற்றது முறையா? என முஸ்லிம்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு வேளை அப்படித்தான் வைத்தாக வேண்டுமென்றால் திருமண வைபவத்தை அல்லது விருந்தை இரவுக்கு மாற்றிவிட வேண்டும்.

அதிகப்படியான செலவு

இஸ்லாமிய திருமணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று  
செலவே இல்லாத திருமண வைபம்.

மஹ்ரை தவிர தாலிக் கயிறு, மாலை வாங்குகிற செலவு போன்ற கட்டாயச் செலவு எதுவும் இஸ்லாத்தில் இல்லை. மஹர் கூட மணப் பெண்ணின் விருப்பத்தின் படி மிக குறைந்த பட்சமான ஒன்றாக - அது  கூட பின்னர் வழங்கப்படுவதாக இருக்கலாம். இல்லை எனில் மனம் விரும்பி ரஜா செய்யப்படலாம்,

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ فَقَالَتْ إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا قَالَ أَعْطِهَا ثَوْبًا قَالَ لَا أَجِدُ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَاعْتَلَّ لَهُ فَقَالَ مَا مَعَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ.
மார்க்கம் எளிமைப் படுத்தியிருக்கிற  ஒரு காரியத்தை முஸ்லிம் சமுதாயத்தை சிரமமானதாக மாற்றி வருகிறது. தேவையற்ற செலவுகள் ஒரு கடமை போல செய்யப்படுகின்றன.  சில இலட்சங்களாவது இருந்தால் தான் ஒரு திருமணத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய பற்றுக் கொண்டோர் திருமணத்தை எளிமையாக நடத்த முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய திருமணங்கள் குடும்பத்தின் பெறுமையை வெளிப்படுத்த உதவும் கருவிகளாகி விட்டன. பகட்டும் பட்டோபடமும் கோலோச்சுகிறது.

நினைவிருக்கட்டும்! பரக்கத் வேண்டுமெனில் எளிமை அவசியம்.
திருமண வைபவத்தின் நோக்கம் என்ன? மணமக்கள் நல் துஆ வை பெறுவது!
சிறப்பான திருமணம் எது? மணமக்கள் பரகத்தாக வாழும் திருமணமே!

அது எதில் கிடைக்கும்?

قال النبي : اعظم النكاح بركة أيسرها مؤنة – اوكما قال

எளிமையாக திருமணம் செய்கிற அனைவரும் மிகிழத்தக்க ஆசீர்வாதம் இதை விட வேறில்லை.

மிக எளிமையாக திருமணம் செய்திருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) யைப்பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன துஆ தான்
بارك  الله لك ،،،

ஆடம்பரத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
إن الله لا يحب المسرفين

ஆடம்பரத்தை மக்களும் விருபுவதில்லை. நீங்கள் கொடுப்பதை எல்லாம் சாப்பிட்டு விட்டு பணத் திமிர் என்று குறை பேசி விட்டுச் செல்வார்கள்

எது ஆடம்பரம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வரையறுத்துச் சொல்லவும் முடியாது. ஆட்களையும் வசதியையும் பொறுத்து இது மாறுபடும்.

பைவ் ஸ்டார் ஓட்டல்பணக்காரருக்கு சாதாரணம். சாமான்யனுக்கு ஆடம்பரம்.

தேவைக்குச் செய்வது ஆடம்பரமாகாது. பெறுமைக்கும் வீண்விரயமாகவும் செய்வது ஆடம்பரமாகும் 
அதிக வசதி படைத்தவர் சாதரணமாக விருந்து கொடுத்தால் கஞ்சன் என்று உலகம் பேசும்

أما  بنعمة ربك فحدث

ஆனால் திருமண அழைப்பிதழில் தொடங்கி , மண மேடையை அலங்கரிப்பது வரை ஒவ்வொன்றிலும் தேவைக்கு மீறிச் செலவு செய்வது ஆடம்பரமாகும்.

சாமாண்யர் தகுதிக்கு மீறிச் செய்தால் அது ஆடம்பரம். கடன் வாங்கி கஷ்டத்தில் சிக்கி ஏன் பரகத் இல்லாத வேலையை செய்ய வேண்டும்.

ஆடம்பரம் சோதனைகளுக்கு காரணமாக அமையும். அல்லாஹ்வின் சோதனைக்கும் அரசாங்கத்தின் சோதனைக்கும்.
அரசாங்கத்தின் சோதனையை தாங்கிக் கொள்ளலாம். அல்லாஹ்வின் சோதனையை தாங்க முடியாது.
முஸ்லிம்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது  அல்லாஹ் ஒரு துஆ வைக் கற்றுக் கொடுத்தான். 
وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين(147)  3

இஸ்ராப் சோதனைக்கு காரணமாகும் என்பதை இது உணர்த்துகிறது.
பணக்காரர்கள் எளிமையாக செய்கிற திருமணம் அதிகம் பாராட்டப்படும். பேசப்படும்.
திருமணத்தில் ஏழை பணக்காரன் வித்தியாசம் கூடாது. பாகுபாடு கூடாது.
ஒரு முஸ்லிம் ஊரில் தனித் தனி பத்ரிகை அடிப்பது பழக்கம். ஒரு பெரும் பணக்காரர் அதை மாற்றி ஒரே பத்ரிகை அடித்தார். அதன் பிறகு ஊர் நடைமுறையே மாறிவிட்டது.
எனவே செல்வந்தர்களுக்கு இதில் அதிக பொறுப்பும் நனமையும் உண்டு. அவர்களைப் பார்த்து மற்றவர்கள் செய்வார்கள்.
ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பெறுமானார் சொன்னார். : உங்களுக்கு இரண்டு கூலி
மாக்கத்திற்கு முரணாணதை தவித்துவக் கொள்ளுங்கள் :
எது மாக்கம் அனமதிக்கிற செயல் என்பதை  அறிவது பெரிய ஆய்வுக்குய விசயமல்லல.
வாழை மரம் நடதல் பந்தக்கால் நடுதல் ஆராத்தி தேங்காய் சுற்றுதல்
மருதாணி  - மாலை - தாலி - செயின்  ஏனிந்த முரண்பாடு தடுமாற்றம். 
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة
மாப்பிள்ளை மாலை அணிவது தவறல்ல.
அப்துர ரஹ்மான் ரலி மீது மாப்பிள்ளைக்கான அடையாளம் இருப்பதை பார்த்தே பெருமானார் வாழ்த்தினார்கள்.
நீங்கள் விருந்தில் கலந்து கொள்பவராக இருந்தால்  -சிரமம் தராதீகள் - முறையான அழைப்பின் போல் கலந்து கொள்ளுங்கள். மச்சான்கள் சம்பந்திகள் படுத்தும் பாடு - 
மணமக்களுக்காக துஆ செய்யுங்கள்                
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم أعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف  ترمذي

ஆராத்தி அனுமதிக்கப்பட்ட விசயமில்லை
மணப்பெண் மாப்பிள்ளை ஒரே  மேடைஏவ்யில் நிறுத்துவது இஸ்லாமிய நாகரீகம் அல்ல. தேவை எனில் விருந்தினர்கள் வெளியேறிய பிறகு குடும்பத்தினர் மட்டுமே இருக்கிற போது பெண்ணை மேடைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
வீடியோவில் கவனம் அதை  சுற்றுக்கு விடாதிர்கள்  - அது குமுதம் பத்ரிகை அல்ல. பார்வைகள அனைத்தும் நல்லவையாக இருக்க முடியாது.
يأتيك البر والفاجر     என்று பெருமானாரிடமே உமர் (ரலி) கூறினார். அப்போது தான் பர்தாவுக்கான சட்டமே அருளப்பட்டது.
இளைஞாகளுக்கு ஓரு ஆலோசனை இரண்டு விசயங்களுக்காக காசு சோத்து வையுங்கள் மஹா  லீமா விருந்து