வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 30, 2012

அதிகமாக சலவாத்து சொல்லிக் கொண்டிருங்கள்


إنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً)(الأحزاب/56
ஹாஜ்ஜுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள்.
ஹஜ்ஜு செய்ய நினைத்திருப்பவர்களுக்கு பொதுவாக சொல்லப்படுகிற ஒரு அறிவுரை அதிகமாக சலவாத்து சொல்லிக் கொண்டிருங்கள்

பள்ளிவாசலில் நுழைவதற்கு முன்னாள் சலவாத் ஓது வது போல ஹஜ்ஜுக்கு முன்னாலும்..

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ – أبوداوود 393

இபாத்த்தில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள சலவாத்தை போல துணை செய்யக் கூடியது எதுவுமில்லை.

சலவாத்திற்கு ஏராளமான நன்மைகள் உண்டும். 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا – مسلم 616

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً – ترمذي446


أ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبِشْرُ يُرَى فِي وَجْهِهِ فَقَالَ إِنَّهُ جَاءَنِي جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لَا يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلَا يُسَلِّمَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا – النسائي 1278

عن عبد الرحمن بن عوف - رضي الله عنه - قال : أتيت النبي وهو ساجد فأطال السجود قال :" أتاني جبريل قال : من صلى عليك صليت عليه ، ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرًا "(رواه أحمد) .
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ – ترمذي3469

சில முக்கிய நன்மைகள்

·         மறுக்கப் படாத பிரார்த்தனை

நம்முடைய வேறு எந்த வேண்டுகோளும் ஏற்கப்படவும் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. சலவாத் எப்போதும் ஏற்கப்படுகிறது. அது மறுக்கப் படாத பிரார்த்தனை யாகும்.

·         துஆ  - மகபூல் ஆவதற்கு சலவாத்து

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – ترمذي 448

அதனால தான் நாம் சலவாத்தில் தொடங்கி சலவாத்தில் நமது துஆ க்களை முடிக்கிறோம்.

·         எடுத்துச் செல்லப்படுகிறது.
பெருமானாரின் மீது சொல்லப்படுகிற சலவாத்துக்கள் அவர்களிடம் சேர்ப்பிக்கப் படுகின்றன.

وعن عبد الله بن مسعود عن النبي - صلى الله عليه وسلم - قال : " إن لله ملائكة سياحين يبلغوني من أمتي السلام "(رواه النسائي والحاكم وصححه ووافقه الذهبي وقال الألباني : إسناده صحيح رجاله رجال الصحيح) .

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ يَعْنِي بَلِيتَ فَقَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ  - إبن ماجة -1075

 


சலவாத்துச் சொல்பவரின் பெயரும் அவருடைய தந்தை பெயரும் பெருமானாருக்கு தெரிவிக்கப்படுகிறது.
நமது சலவாத்திற்கு பெருமானார் பதில் சொல்கிறார்கள்.

சலவாத்தின் வேறு பல நனமைகள் - அபுஹூரைராரலி
·         மறந்ததை ஞபகப் படுத்த
·         எதிரிகளை நண்பர்களாக்க
·         எதிரிகளிடம் அச்சுறுத்தலை எற்படுத்த

சலவாத்தின் வேறு பல நனமைகள் - அலி ரலி
அல்லாஹ்வின் நெருக்கமும் நிறைவும்சலாத்தை போல் வேறு எதிலும் இல்லை


Thursday, August 23, 2012

திசை திருப்புதலுக்கு ஆளாகும் முஸ்லிம் சமுதாயம்.



ஒரு சமுதாயம் ஏமாளிச் சமுதாயம் என்பதற்கு அடையாளம் திசை திருப்புதலுக்கு ஆளாவதாகும்.

கீழே சிதறிக்கிடக்கிற பத்து ரூபாய் நோட்டுக்களை பொறுக்கும் ஆசையில் இலட்சக்கணக்கான ரூபாய்களை சிலர் தொலைத்து விடுவதுண்டு அது போல.

அசாம் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 250 முகாம்களில் சுமார் 4 இலட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் வசிக்கிறார்கள்.

இதில் சுமார் 5000 கர்ர்பிணிகள், 15000 குழந்தைகள். 8000 பேருக்கு நோய  தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அந்த முகாம்களின் நிலையோ சொல்லும் தரமற்றது. கேரளாவிலிருந்து அசாமிற்கு நிவாரணத்திற்காக சென்று வந்த ஒருவர் கூறினார்.

ஒரு முகாமில் 1400 பேர் இருக்கிறார்கள். அது ஒரு பள்ளிக் கூடம்.அங்கே இரண்டு டாய்லெட்கள் தான் இருக்கின்றன.

போர்க்கால அடிப்ப்டையில் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நாட்டு மக்கள் ஒன்று திரண்டு அந்த மக்களின் வாழ்க்கையை மீட்க ஒத்துழைத்திருக்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன?
அரசு எஸ்.எம்.எஸ் களை தடை செய்து வருகிறது. இணைய தளங்களை தடை செய்து வருகிறது. வதந்திகளை பரப்புவோரை எச்சரித்து  வருகிறது. அசாம் பற்றிய தகவல்களை மட்டுமல்லாது, மியான்மர் பற்றிய தகவல்களும் பரவி விடாதவாறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு குழந்தை கிணற்றுக்குள் சிக்கி விட்ட்து என்று சொன்னால் அதற்காக 24 மணி நேரமும் தங்களது செய்தியாளர்களை அங்கேயே நிறுத்தியிருக்கிற செய்தி ஊடகங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன. உடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் தவறானவை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களை தடை செய்வது பற்றியும் தணிக்கை செய்வது பற்றியும் விஞ்ஞானப்பூர்வமாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றன,

இத்தனைக்கும் காரணம் ஒரு வகையில் முஸ்லிம்களே!

ஒரு சம்பவம் அவர்களை பாதிக்கிற போது அதிக உணர்ச்சி வசப்படுவதும். அது பற்றிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிற பொறுப்பை உரியவர்களிடம் விட்டு விடாமல் தான் தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் செயல் படுவதும் பிரச்சினையை வேறு திசையில் கொண்டு சென்று விடுகிறது.

அசாம் மியான்மர் விவகாரங்களில் அப்படித்தான் நடந்து விட்டது.  அங்குள்ள நிலவரங்கள் தொடர்பாக ஆதாரமற்ற புகைப்படங்களையும் செய்திகளையும் இணையம் வழியாகவும் எஸ் எம் எஸ் வழியாகவும் சிலர் ஏதோ பெரும் நன்மை செய்வதாக நினைத்து பரப்பி விட்டனர். கடும் அதிர்ச்சியை தரும் புகைப்படங்கள் அவை.

இது போன்ற சந்தர்ப்பங்களில் சற்றும் ஆராயாமல் மின்ன்ஞ்சல் பேஸ்புக் எஸ் எம் எஸ்களை சிலர் அக்கிரமாமாக பயன்படுத்து கின்றனர்.

யாரோ ஒரு சிலர் செய்த கைங்கர்யம் அரசாங்கமும் மீடியாக்களும் பிரச்சினையை திசை திருப்ப அற்புதமாக பயன்பட்டு விட்டது.

அசாமில் போடோ இயக்கம் ஒரு இராணுவத்தை போல ஆயுதம் தரித்த ஒரு வன்முறைக் கும்பலை உருவாக்கி வைத்துக் கொண்டு முஸ்லிம்களை அழித்து வருகிறது. அவர்களது வீடு நிறுவன்ங்களை விட்டு துரத்தி வருகிரது. அது சர்சையாகவில்லை, இலட்சக்கணக்கான அப்பாவி இந்திய முஸ்லிம்கள் சொல்லணா துய்ரங்களை சந்தித்து வருகிறார்கள். அது விவாதமாகவில்லை.

திடீரென பிரதமர் அசாமுக்கு பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார் என்ற செய்தி வெளியான போதுதான் பிரச்ச்னையின் தீவிரம் என்ன என்பது இந்திய மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

பாரதீய ஜனதா தலைவர் அத்வானி மிகச் சாமார்த்தியமாக பிரச்சினையை அகதிகள் பிரச்சினையோடு முடிச்சிட்டு திசை திருப்பி விட்டார். பாராளுமன்றம் அவர் உண்டு பண்ணிய விவாத்த்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப் பட்ட மக்களைப் பற்றியோ அவர்களுக்கான நிவாரணம் பற்றியோ பேசுவோர் யாரும் இல்லை. 

அசாம் விவகாரத்தை முதலில் திசை திருப்பியவர் அதவானி என்றால். அடுத்ததாக அந்த பணீயை செய்தவர்கள் அவசரக்குடுக்கைகளான சில முஸ்லிம்கள்.

பிரச்சினையை சரியான கோணத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய முஸ்லிம்கள் ஆத்திரப்பட்டு மும்பையில் வன்முறையில் இறங்கினார்கள். இரண்டு முஸ்லிம் உயிர்கள் பலியாயின.

ஆராயாமல் கிடைத்த செய்திகளை எல்லாம் ஏதோ புனிதம் போல நினைத்து பரிமாறினார்கள். காவல் துறை வதந்திகளை பரப்பிய குற்றத்திற்காக அவர்களை கைது செய்து கொண்டிருக்கிறது. அசாம் பிரச்ச்னினை இப்போது மறக்கப்பட்டு வதந்தி பிரச்சினை இப்போது பெரிதாகிவிட்டது.

சில எதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள மறந்தால் ,  எச்சரிக்கையாக நடந்து கொள்ள தவறினால் கடும் விளைவுகளை நாமே சந்திக்க வேண்டியது வரும். நாம் அநீதி இழைக்கப் பட்டவர்களாக இருந்தாலும்.

இன்றைய பேஷன். முஸ்லிம்களை குறை கூறுவது, அவர்களது பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது. அதே போல இன்றை நிலையில் மிகவும் எளிதானது முஸ்லிம்களை தாக்குவது அல்லது துன்புறுத்துவது.

இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் முக்கிய கடமை எந்த ஒரு விச்யத்திலும் அதிக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளவதாகும்.

ஒரு செய்தி வருகிற போது அதைப் பற்றி ஆளாளுக்கு முடிவு செய்வதை தவிர்த்து விட்டு பொறுப்பான மனிதர்களிடம் அதை விட்டு விட வேண்டும்.

திருக்குர் ஆன் கற்றுக் கொடுக்கிற அதி அற்புதமான வழி முறை அது.

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ(15)

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوْ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُوْلِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمْ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا(83)  النساء

இது தொடர்பாக தப்ஸீர் இப்னு கஸீரில் சில செய்திகள்

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال "كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع" - مسلم

وفي الصحيحين عن المغيرة بن شعبة أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قيل وقال:
أي الذي يكثر من الحديث عما يقول الناس من غير تثبت ولا تدبر ولا تبين

وفي سنن أبو داود أن رسول الله صلى الله عليه وسلم قال "بئس مطية الرجل زعموا"

وفي الصحيح "من حدث بحديث وهو يرى أنه كذب فهو أحد الكاذبين"

ولنذكر ههنا حديث عمر بن الخطاب المتفق على صحته حين بلغه أن رسول الله صلى الله عليه وسلم طلق نساءه فجاء من منزله حتى دخل المسجد فوجد الناس يقولون ذلك فلم يصبر حتى استأذن على النبي صلى الله عليه وسلم فاستفهمه أطلقت نساءك؟ فقال "لا" فقلت الله أكبر وذكر. الحديث بطوله. وعند مسلم فقلت: أطلقتهن فقال " لا" فقمت على باب المسجد فناديت بأعلى صوتي لم يطلق رسول الله صلى الله عليه وسلم نساءه ونزلت هذه الآية "وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم" فكنت أنا استنبطت ذلك الأمر

பெருமானாரின் தலாக் பற்றிய வதந்தி – உமர் ரலி யின் முற்றயான அணுகுமுறை  குறித்த  விவரமான தகவல்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும். 
தலாக் பற்றீய வதந்தியும் உமர் ரலி அணுகுமுறையும் 

பெருமானார் (ஸல்) கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு வதந்தியால் ஏற்பட்டது தான் உஹது யுத்த்தின் படுதோல்வி.

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் போரிட்டுக் கொண்டிருந்த போது. தூர்ஸ் யுத்தத்தின் போது முஸ்லிம்களின்  கூடாரங்களுக்கும் பொருட்களுக்கும் ஆபத்து என்று பரப்பப்பட்ட செய்தியால் முஸ்லிம்கள் கலவரமடைந்த போது அது அந்த யுத்தத்தின் தோல்விக்கு காரணமானது..

தப்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பரப்பிய காரணத்தால் தான் இன்று அசாம் விச்யத்தில் ஊடகங்களும் அரசும் அதைச் சொல்லியே பிரச்சினையை திசை திருப்பி விட்டனர். இப்போது அசாம் பிரச்சினை வதந்திகளோடு தொடர்புடைய பிரச்சினையாகி விட்ட்து, அங்கு பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கான பிரச்ச்னையாக இல்லை.
அதே போலத்தான் பெருநாள் அன்று இரவு மருதாணியால் ஏற்பட்ட அலர்ஜி தொடர்பான பிரச்ச்னையும். தேவையற்ற பதற்றத்திற்கும் குழப்பத்திற்கு ஒரு நல்ல நாளில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் பீதி மயப்படுத்தி விட்ட்து.

பல பள்ளி வாசல்களில் நடுநிசியில் மைக மூலம் இருவர் நால்வர் இறந்து விட்ட்தாக தகவல்களைப் பரப்பினார்கள். எங்கது பக்கத்து மஹல்லாவில் ஒரு குழந்தை இறந்து விட்ட்து என்று ஒருவர் செய்தி சொன்னார். அங்குள்ள உங்களது உறவினர்களிடம் இது பற்றி கேட்டீர்களா என்றேன் இல்லை. என்றால். நான் விசாரித்த வரை அந்த மஹல்லாவில் அப்படி ஒன்றும் நடக்க வில்லை. இதைப் பேசாதீர்கள் என்றேன். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை.

ஒரு மஹல்லா பள்ளிவாசலில் ஒரு அறிவிப்புச் செய்யப்படுகிற போது அதுவும் நடு நிசி நேரத்தில் – அதற்குள்ள முக்கியத்துவம் பற்றி யாரும் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஏதே இயக்க – அமைப்புக்களின் பிரச்சார மேடையைப் போல அதை நினைத்துக் கொண்டார்கள். சென்னையில் ஒரு பள்ளிவாசலில் ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் இருட்டில் இமாமை எழுப்பி அறிவிப்புச் செய்கிறாயா இல்லையா? இது எங்களது தலைமையகத்தின் உத்திரவு. நீ அறிவுப்புச் செய்யாவிட்டால் நான் கதவை உடைத்துக் கொண்டு வந்து  அறிவிப்புச் செய்வேன் என்று சொன்னார்.

தூத்துக்குடி மாவட்டம் காயா மொழியில் ஒரு வீட்டில் அம்மாவும் பொண்ணும் மருதாணியிட்ட கையை ஆசிட்டால் கழுவிவிட்டனர். கை புண்ணாகிப் போனது.
எங்களது பக்கத்து வீட்டில் இரவு 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை எழுப்பி புளியை கரைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். என்ன என்று விசாரித்த போது மருதாணிப்பிரச்ச்னைய்லிருந்து தப்பிக்க இவ்வாறூ செய்யுமாறு ஒட்டன் சத்திரத்திலிருந்து ஒரு உறவினர் போன் செய்த்தாக கூறினர்.

இப்படி எல்லாம் வயிற்றில் புளியை கரைப்பது? 

பீதியை பரப்பிய எந்த ஒரு அமைப்பும் ஜமாத்தும் - ஒரு வேளை மருதாணியால் ஒரு பிரச்சினை உருவாகி இருக்கும் என்றால் அதை எதிர் கொள்வதற்கு ஆக்கப் பூர்வமாக எந்த ஆலோச்னையையும் ஏற்பாட்டையும் செய்து வைக்க வில்லை என்பதே எதார்த்தமாகும். 

எது பொறுப்பான பணீ என்பது குறீத்து சமுதாயம் சிந்திக்க வேண்டும்.  

முஸ்லிம் சமுதாயம் அவசரப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் குறைத்துக் கொள்ள பயிற்சி பெற வேண்டும். நிதானமாகவும் பொறுமையாகவும் பிரச்சினைகளை ஆராய பழக வேண்டும். நம்மைப் பாதிக்கிற விச்யங்களில் கவனத்தோடு செயல்பட வேண்டும். கலவரத்தை உண்டு பண்ணும் செய்திகளை கேட்டால் பொறுப்பானவர்களிடம் அதை கொண்டு செல்ல வேண்டும். உறுதியற்ற செய்திகளை பரப்பக் கூடாது.

பிரச்சினைகள் திசை திருப்ப்படுவதற்கு நாம் காரணமாகிவிடக் கூடாது.










   




.


Saturday, August 18, 2012

பெருநாள் சிந்தனை 3


அசாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கட்டுக்கடங்காத வன் முறை அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்க. வன்முறை வெறிச் செயல் காரணமாக தங்களது வாழ்வுக்கு அஞ்சி சுமார் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் போதிவசதிகள் எதுவுமின்றி வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் சொந்த மக்கள் இந்தியாவிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

வன்முறைகளை தடுத்து, மக்களின் பாதுகாப்பான் வாழ்கையை உத்திரவாதப்படுத்த  வேண்டிய அரசுகளும் அரசியல் கட்சிகளும் பாதிக்கப் பட்டிருக்கிற பிரச்சினைக்கு யார் காரணம் என்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. ரோம் பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்த்து போல.

இப்போது பாதிக்கப்பட்டிருக்கிற முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. இந்திய நாட்டின் சொந்த மக்கள்,

அசாமில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பு முயற்சியை கண்டு அமைதியாக இருக்க முடியாது. மத்திய மாநில அரசுகள்  உடனடியாக பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டும்.

வன்முறைக்கு காரணமாகிற விஷமிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும்.

முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு பிஜேபி க்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்று எம் ஐ எம் கட்சியின் தலைவர் உவைஸீ மிகச் சரியாகவே கூறியிருக்கிறார்.

அதே போல மியான்மரிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் இப்படுகொலைகளை அரசாங்கமும் இராணுவமும் முன்னின்று செய்கின்றன,

இதை சர்வதேச சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பர்மாவின் படுகொலைகளைப் பற்றி கவலைப்படாமல் சிரியாவைப் பார்த்து அதிகம் சீரிக்கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமூகத்தின் இந்த இரட்டை வேடம் வன்மையாக கண்டிக்கத் தக்க்கது,

முஸ்லிம்கள் தங்களது பக்திகளில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக துஆ செய்வோம். முடிந்த வகையில் உதவி செய்வோம்.,

பெருநாள் சிந்தனை 2


அருட்கொடைகளை மறவோம்

மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கூடியிருக்கிறோம்.
ரமலானில் நாம் நிறைவேற்றிய வணக்கங்களை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!
இந்த பெருநாள் நமக்கும் உலகில் வாழ்கிற அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியானதாக நிம்மதியளிப்பதாக அமையட்டும்!
முஸ்லிம்களுக்கு இனி வரப்போகிற நற்செய்திகளுக்கு முன்னறிவிபாகவும்! இஸ்லாமின் எதிரிகளுக்கு இனி ஏற்படப்போகிற தோல்விகளுக்கு தொடக்கமாகவும் இந்த நாள் அமையட்டும்.
ரமலானில் முஸ்லிம் உம்மத்த்  பெற்ற ஈமானிய உணர்வுகள்  காலமெல்லாம் நிலைக்கட்டும்!


அல்லாஹ் நமக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான்.
العافية، والصحة، والفراغ، والمال، والبنين
وَإِن تَعُدُّواْ نِعْمَتَ اللّهِ لاَ تُحْصُوهَا
நமக்கு இன்று கிடைத்திருக்கிற வசதிகள்.  உலகில் உள்ள பலருக்கும் இல்லை.
அசாம் மாநிலத்தில் நம்முடைய சகோதர முஸ்லிம்கள் 40 இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் தமது வீடு வாசலை விட்டு விட்டு முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மியான்மரில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படவும். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வு சங்கடமான சூழ்நிலையிலும் கழிந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ் நமக்கு நிம்மதியான ரமலானையும் பெருநாளையும் வழங்கியிருக்கிறான். நாம் அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும்.

وهذه النعم التي منحنا الله إياها لا شك أننا سنسأل عنها يوم القيامة: {ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ}
 النَّعِيم : وقال زيد بن أسلم: "شبع البطون، وبارد الشراب، وظلال المساكن، واعتدال الخلق، ولذة النوم"،
வயிராரச் சாப்படும், குளிந்த நீரும். நிழல் மிக்க தங்குமிடமும், நடிநிலையான சீதோஷ்ணமும். இனிய உறக்கமும் நமக்கு கிடைத்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரை
இரயிலில் சந்தித்தேன். தனக்கு திருமணமான நாளிலிருந்து நிம்மதியாக உறங்கிய நாட்கள் குறைவு என்று சொன்னார்.

நமக்கு தரப்பட்டிருக்கிற அருட்கொடைகளுக்கு பதிலாக நாம் என்ன வணக்கம் செய்தோம் என்று விசாரிக்கப்படும்.?

يقول ابن كثير - رحمه الله -: "ثم لتسألن يومئذ عن شكر ما أنعم الله به عليكم من الصحة والأمن، والرزق، وغير ذلك، ما إذا قابلتم به نعمه من شكره وعبادته؟"
وقال سعيد بن جبير - رحمه الله -: "حتى عن شربة عسل"، وقال مجاهد - رحمه الله -: "عن كل لذة من لذات الدنيا"،

பெருமானாரும் தோழர்களும் வாழ்ந்த வாக்கை

وجاء في الحديث عن أبي هريرة - رضي الله عنه - قال: "خَرَجَ رسول الله - صلى الله عليه وسلم - ذَاتَ يَوْمٍ أو لَيْلَةٍ فإذا هو بِأَبِي بَكْرٍ وَعُمَرَ، فقال: ((ما أَخْرَجَكُمَا من بُيُوتِكُمَا هذه السَّاعَةَ؟)) قالا: الْجُوعُ يا رَسُولَ الله، قال: ((وأنا وَالَّذِي نَفْسِي بيده لَأَخْرَجَنِي الذي أَخْرَجَكُمَا، قُومُوا)) فَقَامُوا معه فَأَتَى رَجُلًا من الْأَنْصَارِ فإذا هو ليس في بَيْتِه،ِ فلما رَأَتْهُ الْمَرْأَةُ، قالت: مَرْحَبًا وَأَهْلًا، فقال لها رسول الله - صلى الله عليه وسلم -: ((أَيْنَ فُلَانٌ؟)) قالت: ذَهَبَ يَسْتَعْذِبُ لنا من الْمَاءِ؛ إِذْ جاء الْأَنْصَارِيُّ، فَنَظَرَ إلى رسول الله - صلى الله عليه وسلم - وَصَاحِبَيْهِ، ثُمَّ قال: الْحَمْدُ لله ما أَحَدٌ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي، قال: فَانْطَلَقَ فَجَاءَهُمْ بِعِذْقٍ فيه بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ، فقال: كُلُوا من هذه، وَأَخَذَ الْمُدْيَةَ، فقال له رسول الله - صلى الله عليه وسلم -: ((إِيَّاكَ وَالْحَلُوبَ!))، فَذَبَحَ لهم فَأَكَلُوا من الشَّاةِ، وَمِنْ ذلك الْعِذْقِ، وَشَرِبُوا، فلما أَنْ شَبِعُوا وَرَوُوا، قال رسول الله - صلى الله عليه وسلم - لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: ((وَالَّذِي نَفْسِي بيده لَتُسْأَلُنَّ عن هذا النَّعِيمِ يوم الْقِيَامَةِ؛ أَخْرَجَكُمْ من بُيُوتِكُمْ الْجُوعُ، ثُمَّ لم تَرْجِعُوا حتى أَصَابَكُمْ هذا النَّعِيمُ)) رواه مسلم (3799).

وفي حادثة أخرى قال جَابِرٌ - رضي الله عنه -: أتاني النبي - صلى الله عليه وسلم - وأبو بَكْرٍ وَعُمَرُ، فَأَطْعَمْتُهُمْ رُطَباً، وَأَسْقَيْتُهُمْ مَاءً، فقال النبي - صلى الله عليه وسلم -: ((هذا مِنَ النَّعِيمِ الذي تُسْأَلُونَ عنه))7، أخي: فإذا كان هؤلاء سيسألون عن هذه النعم التي تعدُّ في نظرنا بسيطة، ومع شكرهم لله عليها، وأدائهم لحقوقها، وعدم إسرافهم فيها؛ سيسألون عنها؛ فكيف بمن توسع اليوم

இந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி வாழ்கிற கடமை நமக்கு எப்போதும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நாம் நன்றியுடையவர்களாக நடந்து கொண்டால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்
ஒன்று : இருக்கிற நிஃமத்துக்கள் பாதுகாக்கப்படும்
இரண்டு : அல்லாஹ் இன்னும் அதிகம் தருவான்.

 فإن الشكر سبب دوام النعم وزيادتها، كما أن كفرها وجحودها سبب به تزول النعم: {وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ}