வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 02, 2014

அடிமைகளின் நகரம்

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا
மக்காவுற்கு கிழக்கே 16 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற அரபா மைதானத்தில் இன்று முப்பது இலட்சம் மக்கள் கூடியிருக்கிறார்கள்.

இன்றைய தினம் பகல் பொழுதிலிருந்து மஃரிபு வரை அரபா திடலில் தங்கியிருப்பது தான் ஹஜ்ஜின் பிரதான கடமையாகும்.

 قال النبي صلى الله عليه وسلم: (الحج عرفة) متفق عليه. 

இந்த வருடம் ஹாஜிகள் வெள்ளிக்கிழமை அரபாவில் தங்கியிருக்கிறார்கள். இவ்வாறு அமைந்தால் அதை ஹஜ்ஜுல் அக்பர் என்றும் அதை சிறப்பானது என்றும் கருதுவது மக்களது வழக்கம்.

சவூதி அரசு அப்படி எல்லாம் ஹஜ்ஜுல் அக்பர் என்று எதுவும் இல்லை என்று சொல்கிறது, காரணம் அதனால் வரக்கூடிய கூட்ட நெருக்கடியை தவிர்ப்பதற்காக.

வெள்ளிக்கிழமை அரபா நாளில் தங்க நேர்வது சட்ட ரீதியாக விஷேச அந்தஸ்திற்குரியது அல்ல என்றாலும்

·         துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிற இரு நாட்கள் ஒன்றாக சேர்கின்றன.

·        قال النبي صلى الله عليه وسلم: (خير الدعاء دعاء يوم عرفة )
·        عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا

·         நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்த போது வெள்ளிக்கிழமை அரபாவில் தங்கினார்கள்
·         இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை அரபா நாளில் தான் இஸ்லாம் மார்க்கம் முழுமை பெற்றது என அல்லாஹ் கூறினான்,
·         قال عمر بن الخطاب –رضي الله عنه- : إن رجلا من اليهود قال : يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها، لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال : أي آية؟ قال: ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا) [ سورة المائدة:5]. قال عمر – رضي الله عنه- : قد عرفنا ذلك اليوم الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة.

என்கிற காரணங்களால வெள்ளிக்கிழமையில் அரபாவில் தங்குவதை ஹாஜிகள் மகிழ்ச்சியானதாக கருதுகிறார்கள்.

இந்த ஆண்டு ஹாஜிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹாஜிகள் அத்தை பேருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் அங்கீகரிப்பானாக! அவர்களுடைய நல்ல துஆக்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டருள்புரிவானாக! இனி வரும் ஆண்டுகளில் ஹஜ்ஜிற்கான தவ்பீக்கை நமக்கு  தருவானாக!

அரபா மைதானம் பல வகையிலும் ஆச்சரியங்கள் நிறைந்தது.

அல்லாஹ் மனித சமூகத்தை ஒட்டு மொத்தமாக திரட்டி நிறுத்தி உறுதிமொழி பெற்ற இடம்.

فعن ابن عباس _رضي الله عنهما_ قال: قال رسول الله صلى الله عليه وسلم: (إن الله أخذ الميثاق من ظهر آدم بِنَعْمان- يعني عرفة- وأخرج من صلبه كل ذرية ذرأها، فنثرهم بين يديه كالذّر، ثم كلمهم قِبَلا، قال: (ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين، أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون) "الأعراف: 172، 173" "رواه أحمد 

இப்போதும் ஆண்டு தோறும் மக்கள் கூடி அல்லாஹ்வின் முன்னிலையில் தமது அடிமைதனத்தை ஒப்புக்கொண்டு நிற்கிற இடம்.

மிகப்பெரிய மக்கள் கூடடம் – சுமார் 30 இலட்சம் பேர் ஒரே இடத்தில ஒரே நேரத்தில் கூடுகிறார்கள். உலகில் இப்படி ஒரு கூட்டம் கூடுவது இல்லை.

உலகின் எட்டுத்திசையிலும் உள்ள மக்கள். ஒரே யூணிபார்மில் ஒன்று திரண்டு மஹ்ஷரையும் நினைவூட்டும் கூட்டம் அது.

சின்னக் குழந்தைகள் மீசை முளைக்கத் தொடங்கிய இளைஞர்கள் முதுகு வளைந்த கிழவிகள் நடக்க படுக்க முடியாதவர்கள் ஆரோக்கியமானவர்கள் நோயாளிகள் இவர்களில் ஆண்கள் பெண்கள் என கலவையான ஒரு மனிதக் கூட்டம் அங்கே கூடுகிறது,.

சில சமயம் கூட்டத்தில் சிக்கினால் கால் தரை பதியாது. மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போலவே இருக்கும். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாய்வது அலையடிப்பது போலவே இருக்கும்.   அவ்வளவு நெரிசல்! ஆனாலும் ஒரு பிரச்சினை, சர்ச்சை, அசம்பாவிதம் தேவையற்ற சீண்டல் இருக்காது. லப்பைக்க என்ற தல்பியா மட்டுமே ஒலிக்கும்.
இந்தக் கூட்டத்திற்கு இடையேயும் ஹாஜிகளுக்கு தேவையான தண்ணீர் உணவு பழங்கள் கிடைக்கும்.

இப்படி ஆம்புலன்ஸை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்?
டூவீலர் ஆம்புலன்ஸ்கள்.
வீடுகளுக்கு காங்க்ரீட் போடுவதற்கு இரண்டு வீல் வைத்த ஒரு வண்டியில் கலவை எடுத்து வருவார்கள் அல்லவா அது போல் ஆனால் அதை விட மெல்லிய நீளமான மூங்கில் படுக்கை போல – நாம் வைத்திருக்கிற சந்தூக்கின் சிறிய சைஸ் பெட்டியில் சிவப்பு விளக்கை பொறுத்தி தள்ளிக் கொண்டு வருகிற ஆம்புலன்ஸ்கள். 
ஒவ்வொரு ஹாஜியும் தம் வாழ்க்கையில் ஒரு புதிய நாளை சந்தித்த அனுபவத்தை உணர்வார்கள்.

அந்த நாளில் குறிப்பிட்ட வணக்கம் எதுவும் கிடையாது. லுஹர் அஸரை சுருக்கியும் சேர்த்தும் தொழுகிறார்கள்.  அரபா வின் பிரதான நேரம் லுஹருக்கு பின் தொடங்குகிறது. மஃரிபு வரை நீடிக்கிறது. அந்த நேரம் முழுக்க ஹாஜி துஆ வில் ஈடுபடுகிறார். கூடாரத்தில் அமர்ந்து துஆ கேட்கலாம் என்றாலும் திறந்த் வெளியில் நின்று துஆ கேட்பது முஸ்தஹப்பு.
பெருமானார் (ஸ்ல்) அவரகள் நின்று தனது இறுதி உரையை நிகழ்த்திய் ஜபலுர் ரஹ்மததை சுற்றி எறும்பு போல மக்கள் கூடி நின்று துஆ கேட்கிற காட்சியை நீங்கள் பார்க்கலாம். 
தற்போது ஹாஜிகள் கூட்ட நெரிசலைப் பற்றிய பயத்தின் காரணமாக வெளியே வருவதே இல்லை. வெளியே வந்து ஒரு பார்வையை செலுத்தினார்கள் பல அல்லாஹ்வின் அதிசயங்களை பார்க்கலாம்.
அரபாவில் இரண்டு விச்யத்தை மக்களுக்கு உணர்த்து கிறது.
1.   நாம் ஒரே சமுதாயம்.
2.   நாம் அல்லாஹ்வின் அடிமைகள்.
உலகின் எந்தப் பணக்காரனுக்கும் அவனுக்கேற்ற வசதிகள் அங்கு கிடைக்காது ஒரு அன்றாடங்காய்ச்சியை போலத்தான் அவர் நடந்து கொள்ள் வேண்டியிருக்கும்.
நாம் எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை அற்புதமாக உணரும் சந்தர்ப்பம் அது
வழக்கமாக வருடத்திற்கு 354 நாட்கள் காலியாக கிடக்கிற அந்த மைதானத்தில் ன்று ஒரு பொழுதில் சுமார் 8 முதல் 10 மணி நேரத்திற்குள்ளாக ஒரு பெரு நகரம் உருவாகிறது.

இந்த  பழைய ஆணால் வருடந்தோறும் ஒருவாகிற புதிய நகரத்தில் அடிமைகளின் ஆடைகள் உடுத்திய 30 இலட்சம் பேர்.

இதோ வந்துட்டேன் என்பது அடிமைகள் கீழ் பணியும் வாசகம், அந்த பொருள் கொண்ட லப்பைக் கோஷத்தோடு

தஙகளது வீடு சொத்து சுகம அனைத்தையும் விட்டு ஒதுங்கி அல்லாஹ்விடம் முறையிட திரண்டிருக்கிறார்கள்.    

அரபா இறை  அடிமைகளால் நிறைந்து  அடிமைகளின் நகரமாக காட்சி தருகிறது.

காணக் காண் கோடி போதாத கூட்டம் அது.

அரபாவில் கூடி தன்னிடம் அழும் மக்களை பார்த்து அல்லாஹ் நெகிழ்கிறான். அவர்களை குறித்து மலக்குகளிடம் பெறுமை பொங்க பேசுகிறான், இவர்கள் எதற்காக இங்கு குழுமியிருக்கிறார்கள், என்னிடமன்றி இவர்கள் யாரை கேட்கிறார்கள்? என்னைத்தானே இவர்கள் நாடி வந்திருக்கிறார்கள் இவர்கள் கேட்பதை நான் கொடுப்பேன் என அல்லாஹ் கூறுகிறான்.

 قال النبي صلى الله عليه وسلم: ( إن الله يباهي بأهل عرفات أهل السماء-  رواه أحمد

قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ -  مسلم 2402 
இந்தக் கூட்டத்தை பார்த்து சைத்தான் கேவலமடைகிறான். இயலாமையும் குமுறுகிறான்

عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنْ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ قِيلَ وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ – مؤطا -840
பகை , சண்டை, ஆபாசம்., எதற்கும் அந்தத் திருக்கூட்டத்தில் வாய்ப்பில்லை. அரசியல் சச்ச்ரவுகள் அங்கே நடைபெற்றதில்லை. குழு மோதல்கள் நடந்ததில்லை. அடிதடி கைகலப்பு எதுவும் இல்லை.
சுப்ஹானல்லாஹ். மாஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர்.
சைத்தானின் தூண்டுதல்கள் எதற்கும் அங்கு வாய்ப்பில்லை.

இன்று என்ன தேதி என்பதை கூட உணராதவராக எத்தனை மணி என்று கேட்காதவராக அல்லாஹ் நாடி நிற்பதே தனது வாழ்வுக்கான இலக்கு  என்பதை ஹாஜி தனது அனுபவத்தில் உணர்கிறார், இந்தப் பகல் பொழுதின் இதுமாதிரியான தங்குதல் இந்த உணர்வையே அவருக்கு ஊட்டுகின்றன, அல்லாஹ்வின் உத்தரவுகளுககு கட்டுப்படுவதில் தன்னுடைய சவுகரியங்களை – விருப்பங்களை – ஒதுக்கி வைத்து விட்டு ஒடுகிற வாழ்க்கைகு ஹாஜி பயிற்சி பெறுகிறார்,
அது மட்டுமல்லாது
·         உடன் வருகிற மனிதரின் இயல்புகளை சகிக்கிற சகிப்புத் தன்மையை
·         சிரமங்களை – ஏற்றுக் கொள்கிற பொறுமையை
·         எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற சகோதரத்துவ உணர்வை. 
·         இன வர்க்க பேதமற்ற சமத்துவ நடைமுறையை
·         தனக்குரியது என்று ஒதுக்கி வைக்காமல் – எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிறருக்கு நீட்டுகிற பெருந்தன்மையை 
அரபா பெருவெளியில் கூடி நிற்கிற இலட்சக்கணக்கான மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது தான் உன்னதமான மனித வாழ்வு என்பதை உணர்கிறார்கள்.
அதனால் அரபா தினம் மனித சமூகத்தில் ஒரு கனிசமானோருக்கு மனிதனிடம் இருக்க வேண்டிய அடிப்படை இயல்புகளுக்கு பழக்கப்படுத்தி அனுப்புகிறது.
இந்த் வகையில் அரபா நாள் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் கவனத்திற்கும் உரிய நாளாக இருக்கிறது.
உலகம் முழுவதிலும் இருக்கிற தொலைக்காட்சி சானல்கள் மனிதக் கூட்டத்தின் பிரம்மாண்ட திரட்சியை மட்டுமே - அரபா வின் புற அழகை மட்டுமே படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.
முஸ்லிமகள் அரபாவின் அக அழகை உணர்ந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள். இது தான் சரியான வாழ்க்கை என்பதை தெரிந்து கொள்ளவும் கடமைப் பட்டிருக்கிறார்கள்,
இந்த உணர்வை உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் உணரும்  அன்றைய தினம் நோன்பு சுன்னத்தாக்கப் பட்டிருக்கிறது,.
فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال: (يكفر السنة الماضية والسنة القابلة) "رواه مسلم".
இந்தியாவில் அரபா நாள்

இன்று மக்காவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடியிருந்தாலும். உலகம் முழுவதற்கும் இதுவே அரபா நாள் அல்ல.

ஏனெனில் அரபா நாள் என்பதற்கு மார்க்கம் கூறும் விளக்கம் ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் என்பதல்ல. துல் ஹஜ் மாத்தின் ஒன்பதாம் நாள் என்பதாகும்.

உம்மு வில் இமாம் ஷாபி (ரஹ்) அறிவிக்கிறார்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த இஸ்லாமின் மிகப் பெரிய சட்ட அறிஞரான  عطاء بن أبي رباح விடம்  بن جريج என்ற  عبد الملك بن عبد العزيز بن جريج கேட்டார். ஹாஜிகள் அரபா அல்லாத நாளில் அரபா நாளளென்று தவறுதலாக கூடி தங்கி விட்டால் என்னவாகும் அது கூடுமா ? عطاء بن أبي رباح பதில் சொன்னார். கூடும் என்று சொல்லி விட்டு பெருமானாரின் இந்த ஹதீஸை சொன்னார்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ , وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ أَرَاهُ قَالَ ، وَعَرَفَةُ يَوْمَ تَعْرِفُونَ " . . 
372
நீங்கள் எதை தீர்மாணிக்கிறீர்களோ அது தான் ஈது. அது தான் அரபா

துல்ஹஜ் 9 ம்  தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை தான் என காழி அறிவித்திருக்கிறார்,

பிறை பார்த்து செயல்படுங்கள் என்ற பெருமானாரின் உத்தரவுகளுக்கு கீழ் நின்று கொள்ள நாம் பழகியிருந்தோம் என்றால் இப்போது இரண்டு நாள் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதை நாம் பொருட்படுத்த தேவையில்லை. நமக்கு பிறை தெரிந்தததின் அடிப்படையில் நாம் செயல் படுகிறோம். பெருமானார் (ஸ்ல்) அவர்களின் உத்தரவுக்கு பணிகிறோம் அதுதான் முக்கியம்.

அதெப்படி ? என்று கேட்க தலைப்படுகிற போது சைத்தான் விரிக்கும் குழப்பத்தின் வலைக்குள் சிக்குகிறோம் என்பது தான் பொருள்.

இந்தியாவில் உள்ள அறிஞர்கள் மட்டுமல்ல இன்றைய தினம் அரபா நாளாக சிறப்பித்துக் கொண்டிருக்கிற சவூதி அரேபியாவின் அறிஞர்களே இதை தா ன் உலக மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். பிறைகள் மாறுபடும் . எனவே உங்களது நாட்டின் பிறை பார்த்தலை அனுசரித்து செயல் படுங்கள் என்று தான் கூறுகிறார்கள்.
நாங்கள் இன்றுதான் அரபாவில் இருக்கிறோம். எனவே நீங்களும் இன்றுதான அரபா நோன்பை கடை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை.
ஒரு வேளை மக்காவில் பிறை பார்ப்பதற்கு முன்னதாக ஒரு ஊரில் பிறை பார்த்திருந்தால் அந்த ஊர்க்காரர்களுக்கு ஹாஜிகள் அரபாவில் தங்கும் நாள் 10 ம் நாளாகும் அன்று அவர்களுக்கு பெருநாள் தினம் அவர்கள் அன்றைய தினம் நோன்பு வைப்பது ஹராம் என அவ்வறிஞர்களே கூறுகிறார்கள்.

இன்றைய சவூதி அரசாங்கத்தின் மறைந்த முப்தி ஒரு வரின் பதிலை பாருங்கள். சூரியோதயம் அஸ்தமனத்தை தங்களின் ஊர் கணக்கின் படி முடிவு செய்வதை போலத்தான் மாதங்களின் துவக்கத்தையும் முடிவையும் தமது ஊர் கணக்கின் படியே முடிவு செய்ய வேண்டும் என்கிறார்.
  سئل فضيلة الشيخ ابن عثيمين ـ رحمه الله تعالى ـ‏:‏ إذا اختلف يوم عرفة نتيجة لاختلاف المناطق المختلفة في مطالع الهلال فهل نصوم تبع رؤية البلد التي نحن فيها أم نصوم تبع رؤية الحرمين‏؟‏
فأجاب فضيلته بقوله‏:‏ هذا يبنى على اختلاف أهل العلم‏:‏ هل الهلال واحدفي الدنيا كلها أم هو يختلف باختلاف المطالع‏؟‏ والصواب أنه يختلف باختلاف المطالع، فمثلاً إذا كان الهلال قد رؤي بمكة، وكان هذا اليوم هو اليوم التاسع، ورؤي في بلد آخر قبل مكة بيوم وكان يوم عرفة عندهم اليوم العاشر فإنه لا يجوز لهم أن يصوموا هذا اليوم لأنه يوم عيد، وكذلك لو قدر أنه تأخرت الرؤية عن مكة وكان اليوم التاسع في مكة هو الثامن عندهم، فإنهم يصومون يوم التاسع عندهم الموافق ليوم العاشر في مكة، هذا هو القول الراجح، لأن النبي صلى الله عليه وسلم يقول‏:‏ ‏"‏إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا‏"‏ وهؤلاء الذين لم يُر في جهتهم لم يكونوا يرونه، وكما أن الناس بالإجماع يعتبرون طلوع الفجر وغروب الشمس في كل منطقة بحسبها، فكذلك التوقيت الشهري يكون كالتوقيت اليومي‏.‏

சவூதியில் பிறை பார்த்ததை அறிவிப்பு செய்கிற அதே அறிஞர்கள் உலக மக்களுக்கு சொல்கிற அறிவுரை இப்படி இருக்கிற போது குழப்ப மற்ற  தீனின் கட்டுப்பாடு உணர்வு கொண்ட நியாய சிந்தனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? .
சவூதி அறிஞர்களின் இந்த தீர்ப்பு சுன்னத் ஜமாத்தினர்களுக்கு தேவையில்லை. சுன்னத் ஜமாத்தினர் தங்களுடைய மார்க்க அறிஞர்களின் வழி காட்டுதலின் படியே எந்த விசய்த்திலும் நடந்து கொள்கிறவர்கள்.

சுன்னத் ஜமாத் உலமாக்கள் விசயத்தில் திருப்தி கொள்ளாத அஜீரண ஆசாமிகளுக்காகவே இதை குறிப்பிடுகிறோம்.
உங்களுடை சொந்த ஆசா பாசங்களுக்காக உங்களது கொள்கை வழிக்காரகளே சொல்கிற அறிவுரையை மீறி சமுதாயத்தை பிளவு படுத்தாதீர்கள். நீங்களும் பிளவு படாதீர்கள்.

ஒருவேளை இஸ்லாத்தை மீறி பெருநாள கொண்டாடி குர்பானி கொடுப்பீர்கள் எனில் அந்த இறைச்சியை அன்று பெருநாள் கொண்டாடாத மக்களுக்கு கொடுத்தனுப்பாதீர்கள். அது உட்சபட்ச அக்கிரம மாகும். அக்ந்தையும் மமதையுமாகும். அதை உங்களவர்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி யாராவது கொடுத்தனுப்பினால் அதை திருப்பி அனுப்பவது தவறல்ல. சமூகத்தில் கொள்கை குழப்ப வாதிகளின் சலாமிற்கு கூட பதில் சொல்லக் கூடாது என்று மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லியிருக்கிற போது சமுதாயத்தை பிளந்த சதிகாரர்களின் கறி நமக்கெதற்கு ?  அது உள்ஹிய்யாவும் அல்ல.

நமது பெருநாள் தொழுகைக்கு முன்னாள் அறுத்த குர்பானி குர்பானி ஆகாது என்பது பெருமானாரின் உத்தரவாகும்
அவர்களது நடைமுறைகளை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு அடையாளமாக அந்த கறியை திருப்பி அனுப்புங்கள்

முஸ்லிம் உம்மத் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.
வருகிற ஞாயிற்றுக் கிழமை அரபா நோன்பு வையுங்கள்.
ஞாயிறு பஜ்ரிலிருந்து வியாழக் கிழமை அஸர் வரை ஜமாத்தாகவோ தனியாகவோ தொழுதால் தொழுகைக்குப் இன் தக்பீர் சொல்லுங்கள். ஆண்கள் ச்ப்தமாகவும் பெண்கள் மெதுவாகவும்.
பெருநாள் இரவு அமல்களுக்கு உகந்த இரவு, முடிந்தவரை அமல் செய்யுங்கள்.
திங்கட் கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுங்கள்.
பெருநாள் தொழுகைக்கு குளித்து நல்ல ஆடை உடுத்தி வாசனை சாப்ப்டுவதற்கு முன்னதாக தொழுகைக்கு பள்ளிக்கு கிளம்புங்கள்
பள்ளிவாசலுக்கு வருகிற வழியில் தக்பீர் முழுங்கி வாருங்கள்.
பெருநாள் தொழுகைய நிறைவேற்றுங்கள். குத்பாவை காது தாழ்த்திக் கேளுங்கள்.
தொழுகை முடிந்ததும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய பிராணீயை குர்பான் கொடுங்கள்.
பெருநாள் தொழுகை நடை பெறுகிற ஊரில் தொழுகைக்கு முன்னாள் குர்பானி கொடுக்க கூடாது.
عن جندب قال صلى النبي صلى اللهم عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح باسم الله – بخاري

குர்பானியின் சட்டங்களில் சில
 (முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் ஜவாஹிருல் பிக்ஹில் குர்பானி பற்றி கொடுத்துள்ள பத்வாவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. )
·         குர்பானி ஒரு தனி வணக்கம் . அதற்கு மாற்றாக தர்மம் செய்வது ஈடாகாது.
·         ஜகாத் கடமையாகும் அளவு பணம் –( அதாவது சுமார் 26 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர் மீது குர்பானி கடமையாகும்). அத்தொகை ஆண்டு முழுவதும் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை. அன்றைய தினத்தில் இருந்தால் போதுமானது,
·         சிறுவர்களது சொத்திலிருந்து குர்பானி கொடுக்க வேண்டியதில்லை.
·         பயணிகள் மீதும் குர்பானி கடமையாகாது.
·         10 11 12 மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கலாம், 10 ம் நாள் கொடுப்பது சிறந்தது.
·         குர்பானி இந்த மூன்று நாட்களுக்கு மட்டுமே உரிய வணக்கமாகும். முப்தீ ஷபீ சாஹிப்
·         கவனக்குறைவாக இந்த நாட்களை தவறவிட்டவர்கள் அதற்குரிய பணத்தை தர்மம் செய்யலாம். ஆனால 10 11 12 ஆகிய நாட்களில் தர்மம் செய்தால் கடமை நிறைவேறாது, மாறாக குற்றவாளி ஆவார்.
·         ஜும் நடை பெறுகிற ஊர்களில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகே குர்பானி கொடுக்க வேண்டும், அதற்கு முன்னதாக கொடுத்து விட்டவர்கள் திருமம்ப மற்றுமொரு குர்பானி கொடுக்க வேண்டும்.
·         ஒரு ஊரில் ஒரு இடத்தில் தொழுகை முடிந்து விட்டால் மற்ற பகுதிகளில் குர்பானி கொடுத்துக் கொள்ளலாம்.
·         பிறவியிலேயே கொம்பு இல்லாதது அல்லது கொம்பு உடைந்து மூளையில் பாதிப்பு ஏற்படாத ஆடுகளை குர்பானி கொடுக்கலாம்.
·         காயடிக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுக்கலாம்.
·         மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக காது அல்லது வால் அறுந்த பிராணிகள் கூடாது.
·         பல் அறவே இல்லாத, அதிகம் இல்லாத பிராணிகள் கூடாது.
·         நல்லதாக வாங்கிய பிறகு, குறை ஏற்பட்டு விட்டால் சாமாணியர் அதையே குர்பானி கொடுத்துவிடலாம்பணக்காரர் வேறு ஒன்றை வாங்கி கொடுக்க  வேண்டும்.
·         தானே அறுப்பது சிறந்தது, அடுத்தவர் மூலமும் அறுக்கலாம். குர்பானி கொடுக்கும் இடத்தில் குர்பானி கொடுப்பவர் இருப்பது சிறந்தது,
·         குர்பானியின் நிய்யத் வைத்துக் கொண்டு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் சொல்லி அறுக்கவேண்டும்
·         குர்பானி பிராணியின் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்பி வைத்துக் கொண்டு அறுப்பதற்கு முன்னால் வஜ்ஜஹ்து ஓதிக் கொள்வது சுன்னத்து.
·         அறுத்த பிறகு
·         அல்லாஹும்ம ஹாதா மின்க இலைக்க - அல்லாஹும்ம தகப்பல்ஹு மின்னீ கமா தகல்லத மின் ஹபீபிக முஹம்மதின் கலீலிக இபுறாகீம்  என்று துஆ செய்ய வேண்டும்.
·          
·         عن جابر بن عبد الله الأنصاري أن رسول الله صلى اللهم عليه وسلم ذبح يوم العيد كبشين ثم قال حين وجههما إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك عن محمد وأمته – احمد

·         குர்பானி பிராணீயை சில நாட்கள் பராமரிப்பது சிறப்பானது.

·         குர்பானி பிராணியிடமிருந்து பால் கறப்பது முடியை வெட்டிக் கொள்வது அனுமதிக்கப் பட்டதல்ல, அவ்வாறு செய்தால் அதற்குரிய தொகைய தர்மம் செய்து விட வேண்டும்.
·         கத்தியை கூர் படுத்திக் கொள்ள வேண்டும்.
·         ஒரு பிராணியை மற்ற பிராணியின் முன்னிலையில் அறுக்க கூடாது.
·         பிராணி முழுமையாக குளிர் நிலையை அடைவதற்கு உரிக்க இறைச்சியை வெட்ட கூடாது.
·         குர்பானி பிராணி குட்டி போட்டாலோ அல்லது வயிற்றுக்குள் குட்டி உயிருடன் இருந்தாலோ அதையும் குர்பானி கொடுக்க வேண்டும்.
·         கூட்டுக் குர்பானியில் பங்குகள் தோராயமாக கணக்கிடக் கூடாது. சரியாக பங்கிடப் டவேண்டும்.
·         குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைத்து தமக்கென்றும் உறவினர்களுக்கென்றும் ஏழைகளுக்கென்றும் பிரித்துக் கொள்வது சிறப்புகடமை அல்லதேவை எனில் மொத்த இறைச்சியையும் கொடுப்பவரே வைத்துக் கொள்ளலாம். ஷாபி மதஹபில் தர்மம என்று சொல்லத தக்க அளவில் குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கு தர்மம் செய்வது கடமை.
·         روي عن ابن عباس في صفة أضحية النبي صلى الله عليه وسلم قال: ويطعم أهل بيته الثلث، ويطعم فقراء جيرانه الثلث، ويتصدق على السؤال بالثلث، رواه الحافظ أبو موسى الأصفهاني في الوظائف، وقال: حديث حسن.
·         குர்பானி இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுப்பது ஷாபி மத்ஹபில் கூடாது. ஹனபி மத்ஹபில் தடை இல்லைநிர்பந்த சூழலில் அவர்களுக்கும் தரலாம்.
·         குர்பானி தோலை சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளலாம். விலைக்கு விற்றால் அதன் பணத்தை தர்மம் செய்து விட வேண்டும்.
·         அந்த பணத்தை யாருக்கும் கூலியாக கொடுக்க கூடாது.

மேலும் சில ஆலோசனைகள்
·         குர்பானி ஒரு இபாதத் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அது பகட்டுக்கான ஒரு கலாச்சாரம் அல்ல.
·         நம்முடைய ஆடு மாடு எவ்வளவு பெரிது என்பதை விட நம்முடைய  எண்ணம் எவ்வளவு சுத்தமானது என்பதை தான் அல்லாஹ் பார்க்கிறான். அல்லாஹ்விற்காக குர்பானி கொடுக்கிறவர்கள் இதை மறக்க வேண்டாம்.
·         لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرْ الْمُحْسِنِينَ(37)
·         இந்த ஆயத்தையும் அதன் பொருளையும் எத்தனை முறை கேட்டிருப்போம். உள்ளத்தால் இதை உணர முய்றச்சிப்போம்.
·         அறுப்பை முறையாக செய்யுங்கள். பிராணியை துன்புறுத்தக் கூடாது.
·         அறுக்க சக்தியற்ற சின்னக்குழந்தைகளை அறுக்க வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
·         நம வீட்டின் பெண்கள் குழந்தைகள் இதை பார்க்கட்டும்.
·         சில வெளிநாடுகளில் குர்பானி என்ற வுடன் மக்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். காரணம் இத்தகைய கலாச்சாரம் அவர்களுக்கு அறிமுகம் இல்லாத்துதான்.

·         குர்பானி இறைச்சியை உறவினர்களுக்கு பட்டியல் போட்டுக் கொடுக்கிற பழக்கம் பெரும்பாலோரிடம் இருக்கிறது. அது நல்லது தான். அதே நேரம் ஆடு குர்பானி கொடுப்பவர் ஒரு துண்டு இரண்டு துண்டு என பிரித்து அதை எடுத்துக் கொண்டு வீடுவீடாக அலைவது தேவையற்றது. குர்பானி கொடுக்காத உறவினர்களுக்கு போதிய அளவு அல்லது கனிசமாக கொடுக்கலாம்.
·         பெரிய அளவில் குர்பானி கொடுப்பவர்கள் நகரின் ஒதுக்குப்புறங்களில் – சாதாரணமக உதவிகள் சென்று சேராத பகுதிகளுக்கு போதிய அளவுகளில் கொண்டு சேர்க்க முயற்சி எடுப்பது நன்மையாக அமையும்.
·         குர்பானி கொடுத்து விட்டு அதன் கழிவுகளை பொது சுகாதாரத்திற்கு கேடாக அமைகிற வகையில் போடுவது இரத்த திட்டுக்களை கழுவாமல் விடுவதை தவிருங்கள்.

அல்லாஹ்வின் எந்த உத்தரவிற்கும் கட்டுப்பட வேண்டிய அடிமைகள் நாம் என்பதை குர்பானி நினைவூட்டுகிறது என்பதை நாம மறந்து விடக்கூடாது.




  

6 comments:

  1. mohammed hadhees9:37 AM

    Arafavil iruppadhu ponra unarvai erpadutthuhiradhu ungal vaartthaihal.alhamdulillah.nirvana katturai.

    ReplyDelete
  2. جزاك الله احسن. جزاءه

    ReplyDelete
  3. Allah hazrath avargal ukku neenda narbakkiyam pala koduppanaga aameen.

    ReplyDelete
  4. அரஃபா. குர்பானி.கட்டுரை அருமை அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்குவானாக.ஆமீன்

    ReplyDelete
  5. Anonymous3:44 AM

    ALHAMDULILLAH. kuzhappam , vasvas ellam neengiyathu. Pirai 9 andru (05-10-14)noenbu vaikka vendum enbadhu vilangiyathu.

    ReplyDelete
  6. Anonymous11:23 AM

    சிக்கந்தர் பாதுஷா மஸ்லஹிYesterday 6:35 AM

    ஜஸாகல்லாஹ அருமையான தகவல்கள்

    ReplyDelete