Thursday, November 22, 2012

நீதி பொதுவானதாக இருக்க வேண்டும்

அஜ்மல் கசாப் தூக்கிலப்படப்பட்டான்.

தள்ளாடிக் கொண்டிருந்த மத்திய அரசு கசாபை திடீரென ரகசியமாக தூக்கிலிட்டு தன்னை பயில்வானாக காட்டிக் கொண்டுள்ளது.

கசாப்பிற்கு வழங்கப்பட் தண்டனை சரியானதே!

சுமார் மூன்று நாட்கள் நாட்டையே உலுக்கிய தீவிரத் தாக்குதலின் கருவி அவன்.

இஸ்லாத்திற்கும் அவனுக்கும் சம்பபந்தமில்லை. அவனுக்கு ஜிஹாதைப் பற்றிய திருக்குர் ஆன் வசனம் எதுவும் தெரிந்திருக்க வில்லை என்று இந்திய  புலனாயவு அதிகாரி தெரிவித்திருந்தார்.

தன் தந்தையின் பேல் பூர் வியாபாரத்தில் போதிய வசதி கிடைக்காததால் ஒண்ணறை லட்ச ரூபாயுக்காக இந்த வேலையைச் செய்ததாக் ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

கூலிக்கு கொலைகள் செய்த ஒரு கொலை காரனுகக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக யாரும் வருத்தப்பட போவதில்லை.

 அஜ்மல் கசாபுக்கு துணீச்சலாக தண்டனை வழங்கிய   நமது நாட்டு நீதிமன்றங்களுக்கும் அதை சுறுசுறுப்பாக நிறைம் வேற்றிய அரசிற்கு முன்னால் ஒரு கேள்வி இமய மலை போல எழுந்து நிற்கிறது.

166 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்த 9 பேர் கொல்லப்பட்டார்கள், எஞ்சிய ஒருவனுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஆனால்  குஜ்ராத்தில் ஆயிரக்கணக்கில் மு ஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்த
- கர்ப்பிணீப் பெண்ணின் வயிறைக் கீறி கருவை எடுத்து நெருப்பில் வீசிய - ஒரு எம் பி யை உயிருடன் கொளுத்திய குத்ஜ்ராத்தின் தீவிரவாதிகளுக்கு -

அவர்களே தங்களது குற்றத்தை தெஹல்கா இணைய தளத்தில் ஒப்புக் கொண்ட பிறகும் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க நமது நாட்டின் நீதி மன்றங்களுக்கு துணிச்சல வரவில்லையே ஏன்

அஜ்மல் கசாபால் கொல்லப்பட்டவர்கள் மட்டுமே மக்கள்! குஜராத் தீவிரவாதிர் களால் படுகொலை செய்யப்பட்டவர்கள் மனிதர்கள் அல்லவா

நீதி  பொதுவானாதாக இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment