இறைவனின் தீர்மானத்தில் இம்மாதங்கள் தொடக்கத்திலிருந்தே போர் நிறுத்த
காலங்களாக இருந்தாலும் இது நடப்பில் வந்தது இபுறாஹீம் அலை அவர்களது காலத்திலிருந்தாகும்.
நபி இபுறாஹீம் அலை அவர்கள் உன்னதமான தலைமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.
அவரது தீர்க்கமாண செயல்களும் திட்டங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளை
கடந்தும் வரலாற்றில் நிலை பெற்று நிற்பதை பார்க்கிறோம்.
: إن أول بيت وضع للناس மக்களுக்காக பூமியி கட்டப் பட்ட
முதல் ஆலயம் கஃபா என்ற வசனத்தின் விரிவுரையில் இந்த செய்திகள் தப்ஸீர்களில் பேசப்படுகின்றன.
பூமி படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே கஃபா கட்டப்பட்ட்து.
(
பைஹகீயில் வருகிறது.
عن ابن عمرو قال : خلق
الله البيت قبل الأرض بألفي سنة،
கஃபா சிதைவுற்றிருந்த நிலையில் அதன் அஸ்திவாரத்தை நபிமார்கள் வலம் வந்து சென்றுள்ளனர்.
இந்த
தீர்மணம் இபுறாஹீம் நபியின் தீர்க்க தரிசண இயல்புகளில் முதன்மையானதாகும்.
தகுதிமிக்க
தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பாடங்களாக அமையத் தக்கவையாகும்.
இபுறாஹீம்
நபியை உலகின் மிக உன்னதமான நிர்வாகியாக சுட்டிக்
காட்டுபவையுமாகும்.
பைத்துல்லாஹ்வை
மீள் கட்டமைப்பு செய்வதற்கு முன் அங்கு தனது குடும்பத்தை குடியேற்றினார்.
அந்த இருவரிலிருவது மக்கா நகர் உருவாயிற்று , அதன் பிறகு காபா வி அவர் கட்டினார்
وَأَذِّن فِي
النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا என்ற வசனத்தில் லப்பைக் என்ற கோஷத்தோடு செல்கிற
மக்களை கஃபாவிற்கு வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. உம்மிடம் வருவார்கள் என்று
சொல்கிறான். يَأْتُوكَ. இதன் பொருள் கஃபாவிற்கு வருகிற அத்தனை கோடி
மக்களும் நபி இபுறாஹீம் நபியிடம் வருகிறார்கள் என்றே பொருள் அமையும் என்கிறார்கள் விரிவுரையாளர்கள்
وإنما قال ( يأتوك ) وإن
كانوا يأتون الكعبة لأن المنادي إبراهيم ، فمن أتى الكعبة حاجا فكأنما أتى إبراهيم
؛ لأنه أجاب نداءه ، وفيه تشريف إبراهيم
இது
இபுறாஹீம் நபியின் மாண்பிற்கு மற்றுமொரு சாட்சியாகும்.
நபி இபுறாகீம் (அலை) இறைக் கட்டளைப்படி கஃபாவை கட்டி முடித்த பிறகு இறைவா! இங்கு வழிபடும் முறைகளை எங்களுக்கு கற்றுக் கொடு என்று பிரார்த்தித்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரயீல் ஹரமின்
அந்த எல்லைகளை இபுறாகீம் (அலை) அவர்களுக்கு அடையாளப் படுத்தினார்கள்.
فقد روي أن
جبريل أخذ بيد إبراهيم عليهما السلام وأوقفه على حدود الحرم، فنصب عليها الخليل
علامات تعرف بها، فكان إبراهيم عليه السلام أول من وضع علامات حدود الحرم،
மக்கா நகரில் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள
87552 (என்பத்தி ஏழாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி இரண்டு) மீட்டர் அளவிலான பகுதியை ஹரம் -புனிதப் பகுதி என்று
இபுறாஹீம் நபி அறிவித்தார்.
இந்தப் பகுதிக்குள் யாருக்கும் எந்த தொல்லையும் தரப்படக் கூடாது. விலங்குகள் செடிகொடிகளுக்கும் கூடஇப்பகுதியில் அபயம்
தரப்பட்டிருக்கிறது,
நபி இபுறாகீம் (அலை) அந்த இடங்களில் அடையாளக கற்களை நட்டு வைத்தார்கள். அந்த எல்லைகளாவன
கஃபாவிற்கு வடக்கே
மதீனாவின் திசையில் 7 கீமி தொலைவிலுள்ள தன்ஈம் என்ற இடம் ஹரமின் வடக்கு எல்லையாகும். அங்குதான் புகழ்பெற்ற ஆயிஷா பள்ளிவாசல் உள்ளது.
கஃபாவிற்கு தெற்கே அரபாவின் திசையில் 20 கீமி தொலைவிலுள்ள மஸ்ஜிதுன்னமிரா
பள்ளிவாசல் ஹரமின் தெற்கு எல்லையாகும்
கஃபாவிற்கு கிழக்கே நஜ்தின் திசையில் 25 கீமி தொலைவிலுள்ள ஜிஃரானா எனும் இடம் ஹரமின் கிழக்கு எல்லையாகும்.
கஃபாவிற்கு மேற்கே ஜித்தாவின் திசையில் 18 கீமி தொலைவிலுள்ள ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த இடம் ஹரமின் மேற்கு எல்லையாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு, தமீம் பின் அஸத் (ரலி) என்ற நபித் தோழரை அனுப்பி அந்த அடையாளங்களை புதுப்பித்து அதற்கு மறு அங்கீகாரம் கொடுத்தார்கள்.
எனவே ஹரம் புனித நிலம் என்ற அடையாளம் 4 ஆயிரம் வருடம் பாரம்பரியத்தை கொண்டதாகும். இதற்குள் முஸ்லிம்களுக்கு
மடுமே அனுமதி எனும் நடைமுறை ஹிஜ்ரி 10 ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வந்தது. ஆயிரத்து முன்னூற்றி
முப்பத்தாறு வருடங்களாக அது நடைமுறையில் இருக்கிறது.
உலகில் புனித தளங்களாக பல பகுதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
கங்க்க நதிக்கரையில் உள்ள காசி நகரம்
இந்துக்களின் புனித நகராகும்.
கெளதம புத்தர் ஞானம் பெற்ற புத்தகயாவும்
அவர் பிறந்த லும்பினியும் பெளத்தர்களின்
புனிதப் நகரங்களாகும்.
ஜெரூசலத்தில் உள்ள கல்லறை தேவலாயப்
பகுதியும் பெத்தெலஹேம் பகுதியும் கிருத்துவர்களுக்கு புனிதப் பகுதிகள் ஆகும்.
ஜெரூசலத்தில் உள்ள மேற்கு சுவர் பகுதியை
யூதர்கள் புனிதப் பகுதி என்று கருதுகின்றனர்.
ஆனால் இந்த புனிதப் பகுதிகள் எதற்கும்
ஹரம் எனும் புனிதப் பகுதிக்கு இருப்பது போன்ற தெளிவான உறுதியான வரலாறோ சட்ட
விதிகளோ இல்லை என்லாம்.
திட்டவட்டமான நடைமுறைகளை தொடர்ந்த்
நான்காயிரம் ஆண்டுகளாக தொன்மையாக கடைபிடிக்கப்படுகிற புனித வரலாறு மக்கா ஹரமிற்கு
மட்டுமே இருக்கிறது.
இது இறைத்தூதர் இபுறாஹீம் நபியின்
மாண்பாகும்.
உலகின் தொன்மையான பேர் நிறுத்த காலங்கள்
ஹஜ் எனும் வணக்கத்தை பாதுகாப்பதற்காக இபுறாஹீம் நபி அலை
அவர்கள் செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் ஹஜ்ஜின் மாதமான துல்ஹஜ் மாத்த்தையும் அதற்கு
முந்திய துல்கஃதா மாதத்தையும் அதற்கடுத்த முஹர்ரம் மாதத்தையும் போர் நிறுத்த காலமாக
அஷ்ஹருல் ஹுர்மு ஆக அறிவித்ததாகும்.
அது விதை விதைப்பின் காலம் என்றும் சிலர் கூறுகிறார்கள். விவசாயத்தை
பாதுகாப்பதற்காக ரஜப் மாதம் புனிதப் படுத்தப்பட்ட்து என்கிறார்கள் அவர்கள்
عن أبي بكر الوراق البلخي قوله: «شهر رجب شهر
للزرع
இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவின் காபிர்களும் இதை புனிதப்படுத்தினர்
என்கிறார் இப்னு கஸீர் ரஹ்
والنسيء عند العرب: تأخير يجعلونه لشهرٍ حرامٍ فيصيرونه حلالًا، ويحرمون شهرًا آخر من الأشهر الحلال عوضًا عنه في عامِه
இம்மாதங்களின் புனிதத்தை பல சட்டங்கள் வழியாகவும் இஸ்லாம் உறுதிப்படுத்தியது.
يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير...}
[البقرة: 217]
فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ) [التوبة:36] .
قال ابن كثير رحمه الله في تفسيره: (فَلا
تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ) أي في هذه الأشهر المحرمة، لأنها آكد، وأبلغ في
الإثم من غيرها، كما أن المعاصي في البلد الحرام تضاعف
இம்மாதங்களில் சண்டையை தொடங்குவது ஹராம் ஆகும்.
இஸ்லாமின் தொடக்க காலத்தில் முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் எதிரிகளை சந்திக்க நேர்ந்த ஒரு நிகழ்வில் ஜமாதில் ஆகிர் மாதத்தின் இறுதியில் எதிரி ஒருவரை கொன்று விட்டனர். அன்றைய தினம் ரஜப் மாத்த்தின் முதல் நாளாக அமைந்து விட்டது. எதிரிகள் அதை பெரிய பிரச்சனையாக்கினர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் புனித மாத்த்தின் விதிகளை மீறி விட்டதாக பெரிதாக பழி சுமத்தி அதை அக்கம் பக்கம் எங்கும் பரபரப்பாக்கினர். அப்போது அல்லாஹ் மக்காவாசிகளை எச்சரித்தான், நீங்கள் மக்காவில் வைத்து மக்களுக்கு இழைக்கிற அநீதிகளை விட இது பரவாயில்லை என்று கூறினான்
وذلك أن رسول الله صلى الله عليه وسلم بعث سرية ، وكانوا سبعة نفر ،
عليهم عبد الله بن جحش الأسدي ، وفيهم عمار بن ياسر ، وأبو حذيفة بن عتبة بن ربيعة
، وسعد بن أبي وقاص ، وعتبة بن غزوان السلمي حليف لبني نوفل وسهيل بن بيضاء ،
وعامر بن فهيرة ، وواقد بن عبد الله اليربوعي ، حليف لعمر بن الخطاب . وكتب لابن
جحش كتابا ، وأمره ألا يقرأه حتى ينزل بطن ملل فلما نزل بطن ملل فتح الكتاب ، فإذا
فيه : أن سر حتى تنزل بطن نخلة . فقال لأصحابه : من كان يريد الموت فليمض وليوص ،
فإنني موص وماض لأمر رسول الله صلى الله عليه وسلم . فسار ، فتخلف عنه سعد بن أبي
وقاص ، وعتبة ، وأضلا راحلة لهما فأتيا بحران يطلبانها ، وسار ابن جحش إلى بطن
نخلة ، فإذا هو بالحكم بن كيسان ، والمغيرة بن عثمان ، وعمرو بن الحضرمي ، وعبد
الله بن المغيرة . وانفلت [ ابن ] المغيرة ، [ فأسروا الحكم بن
كيسان والمغيرة ] وقتل عمرو ، قتله واقد بن عبد الله . فكانت أول غنيمة غنمها أصحاب
النبي صلى الله عليه وسلم
.
فلما رجعوا إلى المدينة بالأسيرين وما أصابوا المال ، أراد أهل مكة أن
يفادوا الأسيرين ، فقال النبي صلى الله عليه وسلم : " حتى ننظر ما فعل صاحبانا " فلما رجع سعد وصاحبه ، فادى بالأسيرين ، ففجر عليه المشركون وقالوا :
إن محمدا يزعم أنه يتبع طاعة الله ، وهو أول من استحل الشهر الحرام ، وقتل صاحبنا
في رجب . فقال المسلمون : إنما قتلناه في جمادى وقيل : في أول رجب ، وآخر ليلة من
جمادى وغمد المسلمون سيوفهم حين دخل شهر رجب . فأنزل الله يعير أهل مكة : ( يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ
فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ
وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِندَ اللَّهِ ۚ
وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ
இன்று போர் நிறுத்த காலங்கள் என்று அரசுகள் அறிவிக்கின்றன. அவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குரியாகும். அதே போல அது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதும் கேள்விக்குரியாகும்.
முஸ்லிம்கள், இம்மாதங்களின்
மரியாதையை உணர்து கொள்வதும் அவற்றை மதிப்பதும் கடமையாகும்.
கூடுமானவரை
இம்மாதங்களில் சச்சரவுகளை தவிர்ப்பதும் நன்மையாகும்.
இப்புனித மாதங்களில்
அதிகமாக நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.
في الحديث الذي رواه أبو داود في سننه: (صُمْ مِنَ الحُرُم وَاترُكْ،
صُمْ مِنَ الحُرُمِ وَاترُكْ، صُمْ مِنَ الحُرُمِ وَاترُكْ)
அல்லாஹ் தவிபீக் செய்வானாக !
உம்மத்திற்கு காலத்திற்கு ஏற்ப கட்டுரை
ReplyDelete