வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 13, 2020

வெறுப்பை வளர்க்காதீர் இதுவே தில்லி சொல்லும் சேதி



நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் நமக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருக்கிறது. ஒன்று வெறுப்பேற்றுவது அல்லது அன்பை பெருக்குவது.
ஒரு ஹோட்டல் கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கிறோம் . இன்னொருவர் வருகிறார். நமக்கு பக்கத்தில் இருக்கிற சீட்டில் அவர் அமரலாம் என்பது போல ஒரு சைகையை நாம் வெளிப்படுத்தினால் ஒரு அன்பு பரிமாற்றம் இருவருக்கும் இடையே ஏற்படும். அவர் பக்கத்தில் அமர்ந்தால் கூட சற்றே நகர்ந்து கொடுக்காமல் அவருக்கு நெருக்கடி தருவோம் என்றோல் யாரும் விதைக்காமலே வெறுப்பு வேர்விட்டு விட்டும்.
வியாபாராத்தில் ஒருவர் கொஞ்சம் நலிந்து போய்விட்டார் , அவரிடம் சென்று “ வாய்ப்புக்களுக்கு உலகில் முடிவேதும் கிடையாது, முயற்சியை விடாமல் தொடருங்கள் வெற்றியடைவீர்கள் என்று சொன்னால் அவருக்கு நாம் விருப்பமானவராகிவிடுவோம். இப்படிக் கூறாமல் “ உங்க கிட்ட பலதடவை நான் சொன்னேன். என் பேச்சை நீங்க கேட்கவே இல்லை. அதனால இப்ப அனுபவிக்கிறீங்கள் என்று பேசினால் நம்மீது அவருக்கு வெறுப்பே தோன்றும்.
வீட்டிலும் ரோட்டிலும் தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் இது போல ஏராளமான நிகழ்வுகள் சகஜமானவை.
இத்தைய அன்புப்பார்வையை சக மனிதர்களிடம் நாம் வெளிப்படுத்துகிற போது மானுடம் செழிக்கும் என்பது மாத்திரம் அல்ல. இறைவனும் நமக்கு அருள்வான்.
திருக்குர் ஆன் கூறுகிறது, பரிவுக்கான கூலி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கிற பரிவுதான்.
هَل جَزَاءُ الإِحسَانِ إِلاَّ الإِحسَانُ [الرحمن: 60].

உலகிற்கோர் அருளாக வந்த பெருமானார் (ஸல்) அவர்கள் கருணையும் அன்பும் ததும்புகிற ஒரு வாழ்கை முறையை தான் அதிகமாக பேசினார்கள்.
- قالَ علَيه الصَّلاةُ والسَّلامُ -: ((ارحَموا مَن في الأرضِ يَرحَمْكُم مَن في السَّماءِ))،
- قالَ علَيه الصَّلاةُ والسَّلامُ  ((مَن لا يَرحَمْ لا يُرحَمْ)).

மனிதர்கள் எல்லோரிடமும் கருணை
நமக்கு வேண்டியவர்களிடம் அன்பு காட்ட்த்தானே செய்கிறோம் என்ற தோழர்களுக்கு கருணையின் எல்லை எது என்பதை பெருமானார் (ஸல்) விளக்கிச் சொன்னார்கள்
وقالَ – علَيه الصَّلاةُ والسَّلامُ -: ((والَّذي نَفسي بيدِه، لا يَضَعُ اللهُ رَحمَتَهُ إلا عَلَى رَحيمٍ))، قالوا: كُلُّنا يَرحَمُ، قال: ((لَيسَ بِرَحمة أحَدِكُم صاحِبَهُ، يَرحَمُ النّاسَ كافّة))،
கருணையாக நடக்கத் தெரியாதவன் – காட்டுமிராண்டி
وقالَ - صلَّى الله عليْه وسلَّم -: ((لا تُنزَعُ الرَّحمة إلا مِن شَقي))،

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடமும் பொறுப்பான பதவிகளில் இருப்போரிடமும் மக்கள் மீதான் இந்த கருணை அதிகமாக இருக்க இருக்க வேண்டும்.
பெருமானாரின் ஒரு தனிப்பட்ட பிரார்த்தனை .
وعن عائشةَ رضيَ اللَّه عنها قالت: سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول في بيتي هذا: (( اللهمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شيئاً فَشَقَّ عَلَيْهِمْ فاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمّتِي شَيْئاً فَرَفِقَ بهم فأَرْفُقْ بِهِ )). رواه مسلم وابن حبان.

ஒரு தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) வழிகாட்டுகிறார்கள்.

இஷா தொழுகையின் சிறப்பான நேரம் பின்னிரவு தான். எனினும்….

وعَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: " أَعْتَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ. حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ، وَحَتَّى نَامَ أَهْلُ الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ فَصَلَّى. فَقَالَ: (( إِنَّهُ لَوَقْتُهَا. لَوْلاَ أَن أَشُقَّ عَلَى أُمَّتِي )) رواه مسلم،

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (( لولا أن أشق على أمتي لأخرت العشاء إلى ثلث الليل )). رواه ابن حبان.


இயலாதவர்கள் குறித்த கவலை எப்போதும் தலைவருக்கு வேண்டும்.

    عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه: « أن رسول الله ذبح كبشاً أقرن بالمصلى، وقال: اللهم هذا عني وعمن لم يضح من أمتي ».


عن عثمان بن أبي العاص الثقفي رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم قال: " من أَمَّ قوماً فليخفف فإنَّ منهم الكبير، وفيهم المريض وإنَّ فيهم الضعيف، وإن فيهم ذا الحاجة، وإذا صلى أحدكم وحده فليُصلِّ كيف شاء ". رواه مسلم.

இயலாதவர்களூக்காக கவலைப்படும் ஒரு கூட்டத்தை உருவாக்குவதில் வெற்றி கண்ட பெருமானார்

பொதுவாக அநாதைகள் கண்டு கொள்ளப் பட மாட்டார்கள். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களோ சாப்பிடும் போது ஒரு அநாதையை அருகே வைத்துக் கொள்வதை பாக்கியமாக கருதும் ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்கள்

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال:" خير بيت في المسلمين بيت فيه يتيم يحسن إليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه ". رواه ابن ماجة.

பத்து பந்தி நடந்தால் அதில் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு எதீமை உட்கார வைக்கும் பழக்கம் சஹாபாக்களிடம் இருந்த்து.

அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் தன்னோடு உணவருந்த ஒரு எதீம் கிடைக்காவிடால் , அப்படி ஒருவர் கிடைக்கும் வரை உணவருந்த மாட்டார்கள்.

இன்று கூட நம்முடைய வீடுகளில் ஒரு நல்ல விசேசம் என்றால் அநாதை நிலையங்களுக்கு உணவு வழங்குவதை முதல் வேலையாக கருதும் வழக்கம் இருக்கிறது.

கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் கூட கருணை காட்டத் தவறாத நபிகள் நாயகம் (ஸல்)

அது அவர் குனமாக இருக்கலாம். நாம் நமது குணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

عن أنس بن مالك رضي الله عنه أنه قال: كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية، فأدركه أعرابي فجبذه جبذة حتى رأيت صفح أو صفحة عنق سول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية البرد من شدة جبذته، فقال: يا محمد أعطني من مال الله الذي عندك، فالتفت إليه فضحك، ثم أمر له بعطاء ».

இவர்கள் என்மக்கள் என்ற சிந்தனை கொண்ட தலைவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை சாத்தியம்,

وروي أن أعرابياً جاءه يطلب منه شيئاً فأعطاه ثم قال: أحسنت إليك ؟ قال الأعرابي: لا ولا أجملت، فغضب المسلمون وقاموا إليه، فأشار إليهم أن كفوا ثم قام ودخل منزله وأرسل صلى الله عليه وسلم إليه شيئاً ثم قال: أحسنت إليك ؟ قال: " نعم، فجزاك الله من أهل وعشيرة خيراً "، فقال له النبي صلى الله عليه وسلم: (( إنك قلت ما قلت وفي نفس أصحابي من ذلك شئ فإن أحببت فقل بين أيديهم ما قلت بين يدي حتى يذهب ما في صدورهم عليك ))، قال: نعم. فلما كان الغد أو العشي جاء فقال صلى الله عليه وسلم: (( إن هذا الأعرابي قال ما قال فزدناه فزعم أنه رضي أكذلك ؟ )) قال: " نعم فجزاك الله من أهل وعشيرة خيراً "، فقال النبي صلى الله عليه وسلم: (( مثلي ومثل هذا مثل رجل له ناقة شردت عليه فاتبعها الناس فلم يزيدوها إلا نفوراً فناداهم صاحبها خلُّوا بيني وبين ناقتي فإني أرفق بها منكم وأعلم فتوجه لها بين يديها فأخذ لها من قمام الأرض فردّها حتى جاءت واستناخت وشدّ عليها رحلها واستوى عليها وأني لو تركتكم حيث قال الرجل ما قال فقتلتموه دخل النار )). رواه أحمد.

இது என் ஒட்டகை என்ற பெருமானாரின் வாசகம் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பாடமாகும்.

இத்தகைய அன்பொழுக நடப்பதென்பது இறைவன் வழங்கும் கொடை

عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال لها: (( يا عائشة أرفقي فإن الله إذا أراد بأهل بيت خيراً دلهم على باب الرفق )) رواه أحمد

கருணைதான் வாழ்வின் ஆதாரம் என்பதால் தான் இந்த ஏற்பாடுகள்.  

அது மட்டுமல்ல

அன்பும் கருணையும்தான்  காரியம் சாதிக்கச் சிறந்தது.
வெறுப்பவர்களை கூட விரும்ப வைத்துவிடும்.

عن أبي هريرة رضي الله عنه قال: بعث النبي صلى الله عليه وسلم خيلاً قبل نجد، فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة بن أثال، فربطوه بسارية من سواري المسجد، فخرج إليه النبي صلى الله عليه وسلم فقال: " ما عندك يا ثمامة ؟ " فقال: عندي خير يا محمد إن تقتلني تقتل ذا دم، وإن تُنعِم تُنعِم على شاكر. وإن كنت تُريد المال فسل منه ماشئت. فتُرك حتى كان الغد، ثم قال له: " ما عندك يا ثمامة ؟ " قال: ما قُلتُ لك إن تُنعِم تُنعِم على شاكر. فتركه حتى كان بعد الغد، فقال: " ما عندك يا ثمامة ؟ " قال: ما قُلتُ لك. فقال: " أطلقوا ثمامة ". فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل ثم دخل فقال: " أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً رسول الله. يا محمد، والله ما كان على الأرض وجه أبغض إليَّ من وجهك، فقد أصبح وجهك أحبَّ الوجوه إليَّ. والله ما كان من دين أبغض إليَّ من دينك، فأصبح دينُك أحبَّ الدِّين إليَّ. والله ما كان من بلد أبغض إليَّ من بلدك، فأصبح بلدك أحبَّ البلاد إليَّ. وإنَّ خيلك أخذتني وأنا أُريدُ العمرة. فماذا ترى ؟ فبشَّرهُ رسول الله صلى الله عليه وسلم وأمره أن يعتمر فلما قدم مكة. قال له قائل: صبوت. قال: لا ولكن أسلمت مع محمد رسول الله صلى الله عليه وسلم. ولا والله لا يأتيكم من اليمامة حبَّةُ حنطةٍ حتى يأذن فيها النبيُّ صلى الله عليه وسلم )). رواه البخاري.

வெறுப்பதும் - வெறுப்பை ஏற்படுத்துவதும்

வெறுப்பு என்பது ஒரு பெரும் சமூக ஆபத்து. இனவெறி மதவெறி ஜாதீய வெறி அனைத்தும் வெறுப்பினாலேயே உருக்கொள்கின்றன.

மனித சமூகத்தை நிம்மதியிழக்கச் செய்யும் சாத்தானின் முதல் உத்திகள் இவை

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ

வெறுப்பு மனிதப் பண்பாட்டை சிதைத்துவிடும்

عن الزُّبير بن العوَّام رضي الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال((دبَّ إليكم داء الأمم قبلكم: الحسد والبَغْضَاء، هي الحالقة، لا أقول تحلق الشِّعر، ولكن تحلق الدِّين، والذي نفسي بيده لا تدخلوا الجنَّة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابُّوا، أفلا أُنبِّئكم بما يثبِّت ذلك لكم؟ أفشوا السَّلام بينك

நான் நல்லவன், மற்றவர்கள் கெட்டவர்கள் என்ற தப்பான எண்ணமே வெறுப்பிற்கு மூல காரணம்

நல்ல மனிதர்களுக்கு இது அழகல்ல.
எல்லோரும் நம்மவர்கள் என்று நினைப்பவர்கள் பிறரை தவறாக நினைக்க மாட்டார்கள்.

عن أبي هريرة رضي الله عنه، عن النَّبي صلى الله عليه وسلم قال((إيَّاكم والظَّنَّ؛ فإنَّ الظَّنَّ أكذب الحديث، ولا تحسَّسوا، ولا تجسَّسوا، ولا تحاسدوا، ولا تباغضوا، ولا تدابروا، وكونوا عباد الله إخوانًا)

பேச்சால் மக்களிடையே பகை வளர்ப்பவர்கள்  பெரும் பாவிகள்

إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ [النور: 15]

அதிகாரம் செல்வம் செல்வாக்க் போன்ற காரணங்களால் மக்களிடையே சர்வசாதாரணமாக வெறுப்பை விதைப்பவர்கள் குற்றவாளிகளே

وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ

பூமியில் வெறுப்பு விதைக்கப்படுவதை அல்லாஹ் அறவே விரும்புவதில்லை. அத்தகையோரை அவர்கள் எத்தகைய உயர்ந்த நிலையிலிருந்தாலும் அல்லாஹ் அழித்து விடுகிறான்.

இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க காலத்தில் உமய்யாக்களின் காலத்தில் சிலர் குழுமனப்பான்மையில் சஹாபாக்களை கோபிக்கவும் ஏசவும் செய்தனர். அவர்கள் அத்தனை பேரும் அழிந்தனர்.

எல்லா சஹாபாக்களையும் நேசித்தவர்கள் மட்டுமே வரலாற்றில் வாழ்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்

அவர்தான் நான்கு கலீபாக்களின் பெயர்களையும் சமமாக ஜும் ஆ குத்பாவில் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தினார். அது இன்று வரை தொடர்கிறது.

மனித வரலாற்றில் வெறுப்பை வித்தைத்தவர்கள் வெற்றிபெறவே இல்லை.

ஆரியவர்கள் அல்லாதவர்கள் மீதும் வெறுப்பை விதைத்த ஹிடலர் . முசோலின் போன்றவர்கள் மிக உச்சநிலையில் இருந்த போதும் திடீரென இழிவான தோல்வியையும் மரணத்தையும் சந்தித்தார்கள்.

இப்போதும் தில்லி மாநிலத்திற்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக கட்சியினர் மக்களிடையே வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தனர்.

அனுராக் தாக்கூர் என்ற மத்திய அமைச்சர் அரசு நிலத்தில் உள்ள பள்ளிவாசல்களை அனைத்தையும் தகர்ப்போம் என்று கூறினார். போராட்டக் கார்ர்களை தேச விரோதிகள் என்றும் அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்( கோலீமாரோ) என்றும் கூறினார். தில்லி ஜாமியா மில்லிய்யா மாண்வர் மீது ஒருவன் துப்பாக்கி சூடு நட்த்தியதற்கு அடுத்த நாள் அவர் இப்படி கூறினார். இவர் மத்திய துணை நிதியமசைச்சர் என்பது குறிப்பிட்த்தக்கது.  

மேற்கு தில்லியின் பாஜக எம் பி பர்வீன் வர்மா “ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷஹீன்பாக்கில் போரடிக் கொண்டிருப்பவர்களை கற்பழித்து கொலை செய்ய வேண்டும் என்று பேசினார்.  தேர்தல் கமிஷம் அவரை விசாரித்து விடுத்து விட்ட்து. பிறகு அர்விந்த கெஜ்ரிவாலை தீவிரவாதி என்றார். அப்போது சில நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்த்து.

இந்தப் பேச்சால் அவரது தொகுதியோடு தொடர்புடைய 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்த்து.

west Delhi Lok Sabha MP Parvesh Verma's communally charged speeches have worked against the Bharatiya Janata Party as the party is set to lose all 10 Assembly seats which come under his constituency.
During the Delhi Assembly Election campaign, Parvesh Verma was twice censored by Election Commission for his 'hate speeches'. Verma was slapped with a campaign ban when he said protesters at Shaheen Bagh were capable of rape and murder. He was later banned again for a day when he called Chief Minister Arvind Kejriwal a terrorist.
  
பிஜேபி தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா ஷாஹீன் பாக் கை குட்டி பாக்கிஸ்தான் என்றும் தில்லி மாநில தேர்தலை இந்தியா பாகிஸ்தான் யுத்தம் என்றும் கூறினார்.

ஆனால் இத்தகைய அகம்பாவ பேச்சுக்கார்ர்கள் வெற்றி பெற வில்லை.  மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். ஷஹீன் பாக் தொகுதியில் போட்டியிட்ட அமானுல்லா கான் என்ற ஆம் ஆத்மி உறுப்பினர் 38 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .

வெறுப்பை விதைப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை என்ற வர்லாற்றின் இந்த தொடர் விளைவை அமித் ஷா நேற்று ஒப்புக் கொண்டுள்ளார்.

BJP suffered in Delhi due to hate speeches made by some leaders: Amit Shah

என்றாலும் அவரு பிரதமரும் கூட இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய பாஜக அரசு கருணையின் அடிப்படையில் செயல்பட்டிருக்குமானால் “  மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் இங்கு ஐந்து வருடம் தங்க்கினால் அவர் குடியுரிமை பெறுவார்கள் என்று சட்டம் இயற்றியிருக்குமானால் அது பாராட்டிற்குரியதாக இருந்திருக்கும். வரலாறு அவர்களை வாழ்த்தும். ஒருவேளை அதில் இலாபம் அடைவோர் இந்துக்களாக மட்டும் இருந்தால் கூட

ஆனால் அவர்கள் இயற்றிய சட்டம் முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கிய போது பாஜகவினரின் வெறுப்புனர்வு வெளிப்பட்டது,

ஆட்சியாளர்களின் இந்த வெறுப்பு மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் வெறுப்புணர்வை வளர்க்கும் அடிப்படையில் செயல்படுவதை தவிர்த்து கொள்ளவில்லை என்றால்
தில்லி தேர்தலில் தோற்றது போல மட்டுமல்ல இன்னும் இழிவான முடிவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

அல்லாஹ் நமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு நல்ல மனமாற்றத்தை வழங்குவானாக!






1 comment:

  1. Enter your comment... அஸ்ஸலாமு அலைக்கும்...
    இறையருளால் தீனை உலமாக்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க தன் சுய வேலைகளுக்கு மத்தியிலும் இப்படி செய்கிறீர்கள். இதன் மூலம் உலமாக்களும் மக்களும் பலனடைகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் தங்களின் நோக்கத்தை கபூல் செய்வானாக ஆமீன்.

    எனது தாழ்மையான கருத்து.

    தாங்கள் முன்பெல்லாம் அரபி வாசகத்திற்கான தமிழாக்கத்தையும் பதிவிடுவீர்கள்.அது எல்லா ஆலிம்களுக்கும் முழு பலனை தந்தது. ஆனால் இப்போது தமிழாக்கம் மிஸ்ஸிங்.
    தயவுசெய்து அரசியலுடன் தமிழாக்கமும் தரவேண்டும். தங்களுக்கு சிரமம்தான் இருந்தாலும் இதையும் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள். இயன்றவரை ஜும்ஆவின் அதிகாலையில் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அல்லாஹ்வின் கருணை நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்.

    ReplyDelete