வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 26, 2025

ஹிஜ்ரத் நெருக்கடிகளை வெற்றி கொண்ட வழி

இன்று முதல் ஹிஜ்ரீ 1447 ம் ஆண்டு தொடங்குகிறது (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு பெயரிடப் பட்டிருக்கிறது,

 பெருமனார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹிஜ்ரி 17 ம் வருடம்(கி.பி.639) ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ,  ஆண்டுக்கு அடையாளமாக ஒரு பெயர் வேண்டும் . எந்தப் பெயரைச் சூட்டலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில் ஹஜ்ரத் அலி ரலி அவர்கள் தெரிவித்த ஆலோசனையை ஏற்று  இஸலாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரீ ஆண்டு என ஹழரத் உமர் (ரலி) அவர்கள் பெயர்  சூட்டினார்கள்

 ஆண்டுக்கான அடையாளப் பெயர் முடிவாகிய பிறகு மாதங்களைப்பற்றிய விவாதம் நடந்தது. அரபி மாதங்களுக்கான பெயர்கள் ஏற்கெனவே வழக்கில் இருந்தன. ஆவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை ஆகவே அவை அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டன.

 ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதமாக எதை வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. சிலர் ரஜப் மாதத்திலிருந்து தொடங்கலாம் என்றனர். சிலர் ரமலானிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றனர். உஸ்மான்(ரலி) அவர்கள் முஹர்ரமிலிருந்து ஆரம்பிக்கலாம் ஏனெனில் அரபிகளின் பண்டைய வழக்கில் முஹர்ரம் முதல் மாதமாக இருந்தது.அது புனித மாதமும் கூட .ஹஜ்ஜை முடித்து விட்டுத் ஹாஜிகள் திரும்பும் மாதம் எனவே முஹர்ரமை முதல்       மாதமாக கருதலாம் என்றார்கள். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருமானார் (ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்த கிபி 622 ம் ஆண்டு ஹிஜ்ரீ முதலாம் ஆண்டாக கருதப்பட்டது. பெருமானார் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் என்றாலும் அந்த ஆண்டின் முஹர்ரம் மாதத்திலிருந்தே ஹிஜ்ரீ ஆண்டு தொடங்குவதாக கணிக்கப்பட்டது. அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இன்று வெள்ளிக்கிழமை  1447  ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.

 ஹிஜ்ரத்தில் நான்கு கலீபாக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பங்கு இருக்கிறது.

 ஹிஜ்ரத்தின் போது பெருமானாருடன் பயணித்தவர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்

ஹிஜ்ரீ என்று பெயர் சூட்டியவர் உமர் ரலி அவர்கள். அதே போல தான் ஹிஜ்ரத் செய்வதை பகிரங்கமாக அறிவித்து விட்டு ஹிஜ்ரத் செய்த முதல் சஹாபி உமர் ஆவார்.

ஹிஜ்ரீ என்ற ஆலோசனையை வழங்கியவர் அலீ ரலி அவர்கள். அதே போல பெருமானார்  ஹிஜ்ரத் செய்த போது அவருக்கு பதிலாக அவருடைய படுக்கையில் படுத்திருந்தது அலி ரலி ஆவார்.

ஹிஜீரீ ஆண்டை முஹர்ரமிலிருந்து தொடங்கலாம் என ஆலோசனை வழங்கியவர் உஸ்மான் ரலி அவர்கள் அதே போல முதன் முதலாக நடந்த அபீஸீனிய ஹிஜ்ரத்திற்கு தலைமை ஏற்றுச் சென்றவர் உஸ்மான் ரலி ஆவார்.

 அல்லாஹ் இந்நால்வருடைய அந்தஸ்தையும் உயர்த்தி வைப்பானாக! இவர்கள் அனைவரை உன்னதமாக மதித்தும் பின்பற்றியும் வாழ அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக!

 அல்லாஹ் இந்த புதிய ஆண்டை நமக்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் நன்மைகள் நிரம்பியதாக ஆக்கிவைப்பானாக! அமைதி செழிப்பு நிறைய அல்லாஹ் கிருபை செய்வானாக! தீனுல் இஸ்லாத்தின் கண்ணியத்திற்கும் வெற்றிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவானாக!

 இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரீ என்று அடையாள மிடப்பட்டதற்கு காரணம் செல்கிற போது இஸ்லாமிய அறிஞர்கள் அது இஸ்லாத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக என்று சொல்வார்கள்.

 உண்மை தான்.

 13 ஆண்டுகள் மக்காவிற்குள் சுருண்டு கிடந்த இஸ்லாம் ஹிஜ்ரத் நடந்த 12 நாட்களில் மதீனாவை அமைதியாக ஆட்கொண்டது,

 ஐந்து வருடத்தில் மதீனாவின் கீழ் திசையில் மக்காவிற்கு பக்கத்திலிருக்கிற வாதி முரைஸிஃ வரையும் 7  ஆண்டில் மதீனாவிலிருந்து 100 மைல் மேல் திசையில் சிரியாவின் பாதையில் இருக்கிற கைபரையும் வெற்றி கொண்டதுஹிஜிர் 8 ஆண்டில் மக்காவையும் அதை சுற்றியிருக்க அரபு பிராந்தியத்தையும் வெற்றி கொண்டதுஅடுதத வருடத்தில் பஹ்ரைனையும் யமனையும் வெற்றீ கொண்டதுஹிஜ்ரி 9ல் தபூக் யுத்ததில் வெற்றி கொண்ட போது மேலே சிரியாவின் பாதையில் 700 கிலோ மீட்டர் வரை இஸ்லாம் அதிகாரம் செலுத்தியதுபத்து வருடங்களில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாகவும்,  ஐம்பது வருடத்திற்குள்ளாக உலகின் பெரும் பகுதிக்கு இஸ்லாம் சென்றதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஹிஜ்ரத்தாகும்

 மகத்தான் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த ஹிஜ்ரீ ஆண்டின் 1447 ம் வருடம் பிறக்கிற இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது.

யூதர்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்

பாலஸ்தீனில் காஸாவை சல்லடையாக்கி விட்டார்கள். காஸாவில் இருக்கிற முஸ்லிம்களை காலி செய்து விட்டு அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்ற திட்டமிடுகிறார்கள்

பாலஸ்தீனில் இருக்கிற முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து அவர்களிடம் இது எங்களின் வீடு காலி செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அந்த வீடுகளில் தங்கிக் கொள்கிறார்கள்.

இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீன முஸ்லிம் வீடுகளுக்கு நுழைந்து தனது ஆயுதங்களை குவித்து வைத்துக் கொள்கிறது. அங்கிருக்கிற முஸ்லிம்களை இரண்டு நாட்களாக  கூட இயற்கை தேவைகளுக்கு கூட வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொள்கிறது. நிர்பந்தமாக அந்த பாலஸ்தீனி தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.  

இவை  மட்டுல்ல இராக்கிலிருந்து சிரியா ஜோர்டான் வரை யுண்டான நிலப்பரப்பிலிருந்து அரபுகள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இது தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என்றும் பகிரங்காமாக அறை கூவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

காஸாவில் 12 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்களே என்று மீடியாக்கள் கேட்கிற போது அவை உயிர் வாழ்ந்தால் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவார்கள். எனவே அவர்கள் கொல்லப் பட்டது தவறில்லை என்று எதார்த்தமாக பதில் அளிக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ரஷ்ய தலை நகர் மாஸ்கோ விமான நிலையத்தில் ஒரு ஈரானிய குழந்தைக்கு பக்கத்தில் சென்ற யூதன் அந்த குழந்தை அப்படியே தூக்கி தரையில் அடிக்கிற வீடியோ இப்போது உலகம் முழுக்க கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஒருவன் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிற இஸ்ரேலியர்கள் பெரும்பாலும் இதே மனோ நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லிம் உலகம் யூதர்களை எதிர் கொள்வதில் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழலில் ஏன் எதிர் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற சூழலில் ஹிஜ்ரீ புத்தாண்டு பிறக்கிறது.

பாலஸ்தீனில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலக் அளவில் இஸ்லாமும் முஸ்லிம்களும் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலில் இந்த புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடவும் முன்னேற்றம் காணவும் சமூக அளவில் தனது மதிப்பை நிலைப்படுத்திக் கொள்ளவும் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த அக்கறையோடு யோசிக்க வேண்டிய நேரம் இது.

ஹிஜ்ரத் நெருக்கடிகளுக்கு  சிறப்பான தீர்வை தந்த ஒரு நிகழ்வாகும்.

திருக்குர்ஆன் ஹிஜ்ரத் விளைவாக செழிப்பை கூறுகிற்து.

وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً

மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஊரே திரண்டு பெருமானாரை கொல்லும் முடிவில் இருந்தது.

இதற்கு முன்னர். தான் விரும்பிய கொள்கையை பேச முடியாத சூழல், ஆதிக்க சக்திகளின் அடாவடித்தனங்கள், மூன்றாண்டு பொருளாதார ஒடுக்கு முறைகள் என பல வகையான நெருக்கடிகளை கடந்து வந்து விட்ட நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அல்லாஹ் கை விட வில்லை.

 

நல்ல ஒதுங்குமிட்த்தையும் مُرَاغَمًا كَثِيرًا அதற்கும் மேம்பட்ட அரசியல் செல்வாக்கையும் وَسَعَةً கொடுத்தான். அதற்குப் பின் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்ந்தது.

  கவனிக்கனும் நிம்மதி செல்வாக்கு இரண்டும் கிடைத்தது.

 ஆனால் இந்த நிம்மதியையும் செல்வாக்கையும் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும்  சில முயற்சிகளை  மேற்கொண்டார்கள் அது இன்றைய சூழலில் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

 உற்ற துணை

 நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் தைரியசாலி என்றாலும் இந்த பயணத்திற்கு தனக்கு ஒரு துணை தேவை என்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

 அபூபக்கர் ரலி அவர்கள் வந்து தான் மதீனாவிற்கு  செல்ல அனுமதி கோரிய போது தனக்கு துணையாக வருமாறு கூறினார்கள். இதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

 فقال أبو بكر: الصحبة يا رسول الله، قال: الصحبة، فبكى أبو بكر رضي الله عنه فرحاً

 ஒரு பணியாளர் தேவை என்று கருதியிருந்தால் அலி ரலி அவர்களையோ ஜைது ரலி அவர்களையோ பெருமானார் தேர்வு செய்திருக்கலாம். வீர்ர் தேவை என்றிருந்தால் உமர் ரலி அவர்களையோ ஹம்ஸா ரலி அவரகளையோ தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால் மிகப் பெருத்தமாக பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை தேர்வு செய்தார்கள்.

 மாஷா அல்லாஹ். இந்த உலகில் உற்ற துணை என்பதற்கு எடுத்துக் காட்ட அபூபக்கர் சித்தீக்ர் ரலி அளவுக்கு ஒரு முன்னுதாரணம் வேறில்லை.

 அபூபக்க்ர் சித்தீக் ரலி அவர்கள்  எத்தகைய ஆபத்தையும் சந்திக்க நேரலாம் என்ற இந்த நெருக்கடியிலும் தான் பெருமானாருடன் உடன் இருக்க மனதார உடன்பட்டார்கள்.

 அவரது மொத்த குடும்பத்தையும் இதில் ஈடுபடுத்தினார்கள்.

 மகன் அப்துல்லாஹ்வை அழைத்து நீ பகல் முழுக்க மக்கா வாசிகளுடன் இருந்து அவரக்ள் என்ன திட்டமிடுகிறார்கள் என்ற செய்தியை எங்களுக்கு இரவு வந்து சொல் என்று ஏற்பாடு செய்தார்கள். 

அடிமை ஆமிர் பின் புகைராவை அழைத்து நீ அந்த மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிரு இரவானதும் எங்களுக்கு பால் கொண்டு வந்து கொடு என்றார்கள்.

 மனைவியிடம் உணவு தயாரிக்க சொன்ன அவர் தனது மகள் அஸ்மாவிடம் நீ சிறுமி. நீ உணவை எடுத்துவா உன்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள்.

 وأمر أبو بكر ابنه عبد الله أن يستمع لهما بمكة ثم يأتيهما ليلاً وأمر عامر بن فهيرة مولاه أن يرعى غنمه نهاره ثم يأتيهما بها ليلاً ليأخذا حاجتهما من لبنها وكانت أسماء بنت أبي بكر تأتيهما بطعامهما

 அவரது மொத்த பணத்தையும் செலவழிக்க தயார் ஆனார்கள்.

 பெருமானாரின் உயிரை காப்பாற்றகிற ஒரு திகில் பயணம். இதில் எவ்வளவு பணத்தேவை ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே   அதுவரை தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டார்கள். ( வியாபாரியான அவர் 6000 திர்ஹம்களை கையில் வைத்திருந்தார். அன்று அது பெரிய பணம்)

 அபூபக்கர் ரலி அவர்களின் தந்தை அபூகுஹாபா மகன் வெளியேறி விட்டதை அறிந்து, என் மகன் எல்லா பணத்தையும் சுருட்டிச் சென்று உங்களை சிரமத்தில் தள்ளி விட்டாரா என்று விசாரித்தார். அப்போது அஸ்மா ரலி அவர்கள் பார்வை குறைவான அவருக்கு ஒரு பாத்திரத்தை மூடி வைத்து அதை தொட்டுக் காட்டி இதில் தேவையானதை வைத்து விட்டு போயிருக்கிறார் என்று சொன்னார்.

 حمل أبو بكر معه جميع ماله -خمسة آلاف، أو ستة آلاف- فأتى أبو قحافة وقد عمي، فقال: إن هذا قد فجعكم بماله ونفسه. فقالت أسماء بنت أبي بكر: كلا، قد ترك لنا خيرا كثيرا. فعمدت إلى أحجار، فجعلتهن في كوة البيت، وغطت عليها بثوب، ثم أخذت بيده، ووضعتها على الثوب، فقالت: هذا تركه لنا. فقال: أما إذ ترك لكم هذا، فنعم.

 கொடுத்தலில் சிறப்பு

 இவ்வளவு பணத்தை பெருமானாருக்காக அபூபக்கர் சித்தீக் ரலி எடுத்து வந்திருந்தாலும் கூட அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்.

இறைவா !  நான் கொடுத்து அதை பெருமானார் (ஸல்) பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உயர்வு எனக்கு வேண்டாம். எனது செல்வத்தை பெருமனார் தனது செல்வமாக எண்ணிக் கொள்ள வைப்பாயாக என பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

அவரது பிரார்த்தனைய அல்லாஹ் ஏற்றான். பெருமானர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்தை தனது பணம் போலவே செலவழிப்பார்கள்.

மஸ்ஜிதுன்னபவிக்கான இடத்தை 10 தீனார்களின் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்திலிருந்து கொடுத்து விலைக்கு வாங்கினார்கள்.

 அவரது உயிரையுக் கொடுக்க துணிந்தார்.

 எந்த ஆபத்தும் முதலில் தனக்கு வரட்டும் என நினைத்தார்.

 தவ்று குகையில் தங்கு வதற்கு  அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தான் தீர்மாணித்தார்கள் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

 தவ்ரை நோக்கி நடக்கையில் ஒரு சமயம் பெருமானாருக்கு பின்னே நடப்பார். ஒரு சமயம் பெருமானாருக்கு முன்னே நடப்பார். ஏன் இப்படி நடக்கிறீர் என்று பெருமானார் (ஸல்) கேட்ட போது, உங்களை ஆட்கள் தேடி வருகிறார்கள் என்பதை நினைத்து உங்களுக்கு பின்னால் நடக்கிறேன். உங்களுக்கு வழி காட்ட வேண்டுமே என்ற எண்ணம் வருகிற போது உங்களுக்கு முன்னே நடக்கிறேன் என்றார்.  

 தவறு குகைக்குள் பெருமானார் (ஸல்) அவர்கள் நுழைவதற்கு முன்னதாக பெருமானாரை வெளியே நிறுத்தி விட்டு அவர் முதலில் உள்ளே சென்றார். குகை எப்படி இருக்கிறது என்று பரிசோதித்தார். ஆங்காங்கே இருந்த ஓட்டைகளை சிறு கற்களை கொண்டு அடைத்தார். ஒரு ஓட்டயை அடைப்பதற்கு கல் கிடைக்க வில்லை. அங்கே உட்கார்ந்து அந்த ஓட்டையை தனது கால் விரலால் அடைத்தவாறு உள்ளே வருமாறு பெருமானார் (ஸ்ல) அவர்களை அழைத்தார். உள்ளே வந்த பெருமானாருக்கு தனது மடியை காட்டி நீண்ட நேரம் உறமில்லாமல் இருக்கிறீர்கள் உறங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

 என்ன பாக்கியம் ? பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களது மடியில் படுத்து உறங்கினார்கள். பெருமானாரின் அழகு முகத்தையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

 உருதுக்கவிஞர் ஒருவர் சொல்வார்

அபூபக்கர் ரலி அவர்களது அன்பும் பெருமானாரின் அழகும் உறவாடிய நேரம் அது

 وقال البيهقي آخر عن عمر

  لقد خرج رسول الله صلى الله عليه وسلم ليلة انطلق إلى الغار ، ومعه أبو بكر فجعل يمشي ساعة بين يديه ، وساعة خلفه ، حتى فطن رسول الله صلى الله عليه وسلم ، فقال : " يا أبا بكر ، ما لك تمشي ساعة بين يدي ، وساعة خلفي " . فقال : يا رسول الله ، أذكر الطلب فأمشي خلفك ، ثم أذكر الرصد فأمشي بين يديك . فقال : " يا أبا بكر ، لو كان شيء لأحببت أن يكون بك دوني ؟ " قال : نعم والذي بعثك بالحق . فلما انتهينا إلى الغار ، قال أبو بكر : مكانك يا رسول الله حتى أستبرئ لك الغار . فدخل فاستبرأه حتى إذا كان في أعلاه ، ذكر أنه لم يستبرئ الجحرة ، فقال : مكانك يا رسول الله حتى أستبرئ . فدخل فاستبرأ ، ثم قال : انزل يا رسول الله . فنزل

 وقد رواه البيهقي من وجه آخر عن عمر ، ، وأنه لما دخل الغار سدد تلك الجحرة كلها ، وبقي منها جحر واحد ، فألقمه كعبه ، فجعلت الأفاعي تنهشه ودموعه تسيل ، فقال له رسول الله صلى الله عليه وسلم : " لا تحزن إن الله معنا

 பெருமானாருக்கு அனைத்து அர்ப்பணிப்புகளுக்கும் தயாரானாவருக்கு வாழ்க்கையின் மிகப் பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன.

 பெருமானார் (ஸல்) அவர்களோடு அவரும் அல்லாஹ்வுமாக மூன்று நாட்கள் வேறு யாரும் இல்லாத தனிமையில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

 عَنْ ‏‏أَبِي بَكْرٍ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏‏قَالَ :‏ قُلْتُ لِلنَّبِيِّ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏وَأَنَا فِي الْغَارِ : لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لأَبْصَرَنَا . فَقَالَ ‏‏: مَا ظَنُّكَ يَا ‏‏ أَبَا بَكْرٍ ‏‏بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا . رواه البخاري (3653)

 பல அடுக்கு  பாதுகாப்பு 

அல்லாஹ்வின் மகத்தான பல அடுக்கு  பாதுகாப்பும் கிடைத்தது. சிலந்தி புறா என்று மட்டுமல்ல. ஒன்று தோற்றுவிடும் எனில் மற்றது என்ற வகையில் அல்லாஹ் மலக்குகளின் பாதுகாப்பையும் வைத்திருந்தான். அங்கு யாராலும் பெருமானாரை நெருங்கியிருக்க முடியாது.

 மலக்குகளின் காவல் ;

 ஒரு நபர் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக அபூபக்கர் ரலி அவரக்ள் கூறிய போது பெருமானார் சொன்னார்கள். இல்லை அவர் ஒரு மலக்கு நம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார்.

  فقال أبو بكر لرجل يراه مواجه الغار : يا رسول الله إنه ليرانا ، فقال : كلا إن ملائكة تسترنا بأجنحتها رواه الطبراني .

 ‏‏மகத்தான இந்த அனுபவத்திற்கு அந்த இருவர் மட்டுமே சொந்தக் காரர்கள்

 فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ

இவ்வாறு பெருமானருடன் தனிமையில் இருந்தது சாமாணியமானதல்ல உமர் ரலி அவரக்ள் சொல்வார்கள்.

قال عمر : والذي نفسي بيده لتلك الليلة خير من آل عمر 

இத்தகைய அற்புதமான துணை ஒவ்வொரு வெற்றிக்கும் தேவை . நெருக்கடிகளை கடந்து செல்லும் போது மிக அத்தியாவசியாக தேவை

 இன்றையை சூழலில் தனித்தனி தீவுகளாய் மனிதர்கள் வாழ்வதை தேர்ந்தெடுத்து விட்ட நிலையில் தங்களுடைய பேங்க் பேலன்ஸு போதும் என்று நினைத்து வாழ்வது மக்களின் இயல்பாக இருக்கிறது.

 அது சரியானது அல்ல; உற்ற துணை அவசியம்

இது தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அவசியம்.

 பெருமானார் (ஸல்) அவரகளது வாழ்வு நெடுகிலும் இதற்கான சான்றுகளை பார்க்கலாம்.

 சமீபத்தில் இரான் இஸ்ரேல் போரின் போது அமெரிக்க இஸ்ரேலுக்கு உற்ற துணையாக இருந்தது.

 ஆனால் இரானுக்கு உற்ற துணை என்று சொல்லிக் கொள்ள எவரும் இருக்கவில்லை.

 மிக நாசூக்கும் நயவஞ்சகத்தனமும் நிறைந்த இன்றைய சூழலில் உற்ற துணைகளை தேடிக் கொள்வதில் முஸ்லிம் சமூகங்களும் நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்.  இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.

 எதிரிகள் எந்த் அக்கிரமத்திலும் ஒன்று சேர்ந்து துணை நிற்கிற போது முஸ்லிம்கள் நியாயத்திற்காக கூட துணை நிறக மனமின்றி இருக்கிறார்கள்

 அமெரிக்க இரானை தாக்கிய போது கத்தார் நாடும் ஐக்கிய அரபு அமீரகமும் அது பற்றி கவலையை வெளியிட்டார்களே தவிர உறுதியான கண்டனத்தை வெளிப்படுத்த வில்லை.

 துணையை தேர்ந்தெடுத்தல் அதற்கேற்ப நடத்தல்; துணையாக இருக்க சம்மதித்தல் அதற்கேற்ப நடத்தல் என்பதில் இரு தரப்பினருக்கும் சம பொறுப்பு இருக்கிறது.   பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும் இருந்தது போல.

 சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற உத்திகள்

 ஹிஜ்ரத் வெற்றி பெற்றதில் மற்றொரு முக்கிய பங்கு உத்திகளுக்கு இருக்கிறது.

 பாதுகாப்புக்கு தேவையான உத்திகளும் எச்சரிக்கைகளும் காலத்திற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும்.

 அன்றைய அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கையாண்ட உத்திகள் அன்று அவர்களது போராட்ட பயணத்தை வெற்றி பெற வைத்தது.

 இரண்டு ஒட்டகைகளை தயார் செய்து அப்துல்லாபின் அரீகத் என்ற முஸ்லிம் அல்லாத பாலைவனப் பாதைகளில் அனுபவமுள்ள ஒருவரிடம் ஒப்படைத்து மூன்று நாட்கள் கழித்து தவறு மலையடிவாரத்திற்க் வரச் சொல்லியிருந்தார்கள்.   

உதவிக்கு ஆமிர் பின் புஹைராவையும் வைத்துக் கொண்டார்கள்.

 குகையில் தங்கியிருந்த்து இருவர் தான் என்றாலும் ஹிஜ்ரத்தின் பயணத்தின் நான்கு பேர் இருந்தார்கள்.

  மதீனாவிற்கு வழக்கமாக செல்கிற பாதை இல்லாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்தது,

 வழிகாட்டியை வைத்துக் கொண்டது

ஒட்டகைகளை பாதுகாத்துக் கொண்டது.

உதவிக்கு ஒரு ஆளை வைத்துக் கொண்ட்து

எடுத்தவுடன் மதீனாவிற்குள் நுழையாமல் மிக குபாவில் மிக நம்பிக்கையான இடத்தில் தங்கிக் கொண்டது.

மதீனாவில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த அவ்ஸ் கஜ்ரஜ்களின் சகோதர சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது.

அகதிகள் அனைவரும் மக்காவிலிருந்து வந்து சேர்ந்த பிறகு ஒரு கூட்டமாக மதீனாவிற்குள் சென்றது.  

ஆகியவை  அனைத்தும் பெருமானாரின் மகத்தான நீண்ட ஆய்வுக்குரிய  உத்திகளாகும்

ஆய்வு செய்யப்பட வேண்டிவை ஆகும்.

 இன்றய சூழலில் நாம் வெற்றி பெறுவதற்கு இப்போதைக்கு தேவையான உத்திகளை முஸ்லிம்கள் ஆராயனும்.

 ஈமானிய உறுதியின் நவீன வெளிப்பாடுகள்

فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ (194

அமெரிக்காவை ஈரான் தாக்கியது. ஈரான் அமெரிக்காவை திருப்பி தாக்கினால் அது பெரிய யுத்த்திற்கு கொண்டு போய் விடும் என்று பலரும் பயந்தார்கள். எங்கள் மீது வீசப்பட்ட்து போல 18 ஏவுகணைகளை உங்கள் மீது வீசுவோம் என்று சொல்லி விட்டு கத்தாரிலுள்ள அமெரிக்க் தளத்தின் மீது இரான் வீசியது. இது இந்த வக்கயிலான ஒரு நடவடிக்க்கயாக பார்க்கலாம். கோழைத்தனமாக இருந்து விடாமல். அக்கிரமத்திற்கு பதில் நடவடிக்கை எடுத்தது.  

 எதிரிகளை விட வலிமையான ஆயுதங்களும் வழி முறைகளு.

 எதிரிகள் குண்டு வீசுகிறார்கள் , நாமும் குண்டு வீசுகிறோம். அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் . நாம் அதிக பாதிப்பை சந்திக்கிறோம்.

இந்த சூழலில் எதிரிகளை எதிர் கொள்ள வேறு என்ன சாத்தியமான வழிகள் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

உளவு அமைப்புக்கள் கூர் தீட்டப்பட வேண்டும்,

இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் தொடங்கிய உடனேயே பல அனு ஆராய்ச்சியாளர்களை இரானின் மிக மூத்த ராணுவ தலைவர்களை சட சட வென்று கொன்று விட்டது.

இது இஸ்ரேலின் உளவுத்திறமையாகும்.

இஸ்ரேல் இரானுக்குள் ஒரு டிரோன் தொழிற்சாலையையே நட்த்திக் கொண்டிருருந்திருக்கிறத் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஈரானின் தலைவரை எங்களால் கொன்று விட முடியும் என்று இஸ்ரேல் கொக்கரித்தது.

ஈரான் ஏன் இதே முறையில் இஸ்ரேலுக்குள் ஊடுறுவ முடியவில்லை என்று சிந்திக்கவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியாகும்.

இஸ்ரேலில் யூதர்களை வன்முறை பாதைக்கு தூண்டுகிற சிலரின் கதை முடிந்திருக்குமானால் இஸ்ரேலியர்கள் மொத்தமுகாக வன்முறையாளர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.     

நம்முடைய தற்போது இந்த நடைமுறைய கையாண்டு தீவிரவாத்த்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதை நாம் காணலாம்

 எதிரிகளை நிலை குலையச் செய்யும் ராஜ தந்திர உரையாடல்கள்

 கத்தர் நாட்டை இரான் தாக்கியதும் கத்தார் நாடு தனக்கு இரானை தாக்கும் உரிமை இருப்பதாக கூறியது. உடனே இரான் கத்தரிடம் வருத்தம் தெரிவித்து. சகோதரத்துவ உறவை நாங்கள் கவனித்துக் கொள்வோம் என்று கூறியது. கத்தரும் இதை ஏற்றுக் கொண்டது.

இது ஒரு எதார்த்த புரிதலாகும்.

கத்தார் அமெரிக்கா வுடன் இருப்பது தவறு என்று வாதிட்டாலோ அல்லது கத்தாரிடம் மன்னிப்பு கோராமல் இருந்தாலோ பிரச்சனை பெரிதாகி இருக்கும்.

எனவே இது போன்ற இன்னும் சிறப்பான ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் உலகம் பக்குவப்பட வேண்டும்.

 ஹிஜ்ரத் அனைத்துக்கும் வழிகாட்டுகிறது.

 அல்லாஹ் இந்த புதிய ஆண்டை நமக்கும் நம சமுதாயத்திற்கும் உலக மக்களுக்கும் நிம்மதியை சந்தோஷத்தை தருகிற ஆண்டாக ஆக்கியருள்வானாக!

 

 

Thursday, June 19, 2025

திருட்டு இஸ்ரேல் தீக்கிரையாகட்டும்

இந்த உலகத்தின் படு மட்டமான மனித சமூகம் யூத கூட்டமாகும்

இது இன வெறுப்பில் சொல்லப்படுகிற வார்த்தையல்ல;

நிதர்சனமான சத்தியமாகும்.

திருக்குர்ஆன் யூதர்களின் இயல்பை பற்றி உலக சமுதாயத்திற்கு மிகச் சரியான எச்சரிக்கைகளை செய்துள்ளது.

அவர்களைப் பற்றிய முத்திரையான ஒரு வாக்கியம், அவர்கள் சபிக்கப் பட்ட சமுதாயம் என்பதாகும்.

பாத்திஹா அத்தியாயத்தில் வருகிற மஃழூபி அலைஹிம் என்ற சொல் யூதர்களையே குறிக்கிறது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

وروى الإمام أحمد في مسنده عن عدي بن حاتم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قالإن المغضوب عليهم اليهود،

மனித வரலாற்றில் யூதர்களைப் போல அக்கிரம்ம் செய்த சமூகம் வேறெதுவும் இல்லை.

 தங்களது சொந்த சமூகத்தின் நபிமார்களையே அவர்களது மனதுக்கு பிடிக்காத்தை சொன்னதற்காக கொலை செய்தார்கள்.

 وَقَتْلِهِمُ الْأَنبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌ

 நபிமார்களை கொலை செய்து விட்டு மிக சகஜமாக ஒன்றுமே நடக்காத்து போல நடந்து கொள்வார்கள்.

 ஒரு ஹதீஸ் அவர்களுடைய குரூர இயல்பை மிக எதார்த்தமாக சுட்டிக் காட்டுகிறது. நபிமார்களை கொன்று விட்டு சகஜமாக வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    قال عَبْدُاللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه(كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَقْتُلُ فِي الْيَوْمِ ثَلَاثَمِائَةِ ‌نَبِيٍّ، ثُمَّ يَقُومُ سُوقُ بَقْلِهِمْ مِنْ آخِرِ النهار)؛ تفسير ابن أبي حات

அந்த சமூகத்தின் குற்ற உணர்வற்ற குரூர இயல்புக்கு மற்றொரு சான்று அல்லாஹ்வின் தூதரான ஈஸாவை நாங்கள் தான் கொன்றோம் என்று பகிரங்கமாக கூறினார்கள்.

 وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ 

திருக்குர் ஆன் மற்றொரு இட்த்தில் அவர்களது இழி நிலையை விவரிக்கிறது.

 فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ {البقرة: 90

கொஞ்சமும் தயக்கமின்றி அக்கிரமத்திற்கு மேல் அக்கிரமமாக செய்த காரணத்தால் யூதர்கள் இறைவனின் சாபத்திற்கு மேல்

சாபத்தை சம்பாதித்தார்கள். குற்றப் பரம்பரை என்ற பெயரை பெற்றார்கள்.

இது யூத வேதங்களை சரியாக படிக்கிற யூதர்களுக்கு தெரியும்.

 மக்களுக்கிடையே தங்களை உயர்ந்தவர்களாக கருதி மற்ற மக்களை இழிவுபடுத்திப் பார்ப்பதில் கை தேர்ந்தவரக்ள் யூதர்கள்.

 இயல்பாக அவர்களுக்கிருந்த அறிவு, ஆளுமை , பொருளாதார வசதி இம்மூன்றும் காலம் காலமாக மற்ற மக்களை ஆதிக்கம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பளித்தது.

மதீனாவில் மூன்று யூதக் குழுக்கள் குடியேறிகளாக வந்து தங்கியிருந்தனர். வேதக்கார்ர்கள் என்ற பெயரை சொல்லிக் கொண்டு, தங்களை புனித இனமாக காட்டிக் கொண்டு  மதீனாவிலிருந்து மக்களுக்கு வட்டிக் கடன் கொடுத்து அவர்களை மேலாதிக்கம் செய்து வந்தனர்.

 மதீனா அன்சாரி சஹாபாக்களான அவ்ஸ் ஹஜ்ரஜ்களின் சொந்த ஊராக இருந்த போதும் கூட யூதர்களின் ஆதிக்கம் மோலோங்கியிருந்த காரணத்தால் யூதர்களை சார்ந்திருப்பவர்கள் என்றே அவர்கள் கருதப் பட்டார்கள்.

 மக்காவில் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை சந்திக்க மதீனாவிலிருந்து முதன் முறையாக ஆறு பேர் வந்தனர். எங்கிருந்து வருகிறீர்கள் என்று பெருமானார் (ஸல்) அவரக்ள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள் யத்ரிபிலிருந்து வருகிறோம் என்று சொன்னார்கள். பெருமானாருக்கு அந்த நகரை பற்றி நன்கு அறிமுகம் இருந்தது. ஏனெனில் அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அங்கு பிறந்தவர் தான். அது மட்டுமல்ல அங்கிருந்த உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்த போது தான் நபி (ஸல்) அவர்களின் தகப்பனார் இறந்து போனார். அதனால் யத்ரிபு நகரை பற்றி பெருமானாருக்கு நன்கு தெரியும் .அதனால் வந்தவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்ட ஒரு கேள்வி முக்கியமானது.

 لما لقيهم رسول الله صلى الله عليه وسلم ، قال لهم : من أنتم ؟ قالوا : نفر من الخزرج ، قال : أمن موالي يهود ؟ قالوا : نعم

 மவாலீ என்ற வார்த்தைக்கு பிறரை சார்ந்து நிற்பவர்கள் என்று பொருள்.

 மதீனா அன்சாரிகளுக்கு சொந்தமானதாக இருந்தும் கூட யூதர்கள் அவர்களுடைய அரசியல் நடவடிக்கையால் அம்மக்களை தங்களது கட்டுப் பாட்டில் வைத்திர்ந்தார்கள்.

யூதர்கள் வட்டிக் கொடுப்த்து  எந்த அளவு மதீனாக்காரர்களை கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள் என்றால் மதீனாவில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் எனில் அப்பெண் அவளது குடும்பத்திற்கு கடன் கொடுத்திருக்கிற யூதனுக்கு முதலில் தன் உடலை தர வேண்டும். அதன் பிறகு தான் கணவனிடம் சேர வேண்டும் என்று இருந்தது.

 மதீனாவின் இந்த பழைய வரலாறு வாசிக்கவே கொடுமையானது.

 அவர்களது கொடூர புத்தியையும் அக்கிரமத்தை காட்டுகிற மற்றொரு நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகு நடை பெற்றது.

 யூதர்களின் குணத்தை தெரிந்து கொண்ட காரணத்தால் தான் நபி (ஸ்ல) அவர்கள் மதீனாவிற்கு வந்ததும் அதை சுற்றியிருந்த பனூ கைன்காஃ பனு நளீர் பனூகுறைழா என்ற மூன்று யூதக் குழுவுடனும் தொடக்கத்திலேயே உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அமைதியான ஒரு சமூக சூழல் நிலவ வேண்டும் என்பதற்காகவே பெருமானார் (ஸல்) அவர்களோடு வலிந்து சென்று உடன்படிக்கை வைத்துக் கொண்டார்கள்

 அமெரிக்காவின் மின்னசோட்டார் பல்கலை கழகத்தின் மனித உரிமைகள் பிரிவு பெருமானாரின் அந்த உடன்படிக்கை வாசகங்களை அக்கு அக்காக அலசி அதிலிருக்கிற முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது.

 ·         حرية العقيدة:

نصت المعاهدة على حرية ممارسة الدين لكل من المسلمين واليهود، وعدم الإكراه في الدين.

உன கொள்கை உனக்கு என் கொள்கை எனக்கு. யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக் கூடாது.  

·         التعاون الأمني:

اتفق الطرفان على التعاون في الدفاع عن المدينة ضد أي عدوان خارجي، وأن يكونوا يداً واحدة في حماية المدينة.

மதீனாவை பாதுகாப்பதில் ஒன்று பட்டு நிறபது 

·         الاستقلال المالي:

أكدت المعاهدة على استقلالية كل طائفة في إدارة شؤونها المالية الخاصة، وأن على اليهود نفقتهم وعلى المسلمين نفقتهم. 

அவரவர்களின் பொருளாதார தேவைகளை அவர்வரக்ளே பார்த்துக் கொள்வது

·         العدل والمساواة:

نصت المعاهدة على العدل التام بين جميع الأطراف، وأن يكون هناك نصح ومساعدة متبادلة، وأن لا يظلم أحد. 

இரண்டு தரப்பும் நீதியை பராமரிக்கனும். ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்க் கூடாது.

·         مرجعية واحدة:

في حالة النزاع، تم الاتفاق على أن تكون المرجعية لله وللنبي محمد صلى الله عليه وسلم. 

ஏதேனும் சச்சரவு எழும் எனில் முஹம்மது நபியின் தீர்ப்பை ஏற்பது.

·         الحفاظ على الحقوق:

تم التأكيد على حفظ حقوق كل طرف، وعدم التعرض لظلم أو إيذاء أي طرف من قبل الطرف الآخر. 

ஒருவர் மற்றவரின் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதியேற்றுக் கொள்ளுதல்

·         علاقات حسن الجوار:

نصت المعاهدة على حسن الجوار والتعاون بين المسلمين واليهود، وعدم الإضرار ببعضهم البعض

ஒருவருக்கு மற்றவர் ஒத்துழைப்பாக இருத்ததல்

 உலகின் மிக அற்புதமான இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை யூதர்கள் சற்றும் பொருட்படுத்தாதவர்களாக நடந்து கொண்டார்கள்.  தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்

 وتمادى يهود بنو قينقاع في شرهم ، فاعتدوا على امرأة مسلمة ، دخلت سوقهم لتبيع مصاغا لها، فأحاط بها عدد من اليهود وآذوها ، وطلبوا منها أن تكشف عن وجهها ، فأبت، فعقد الصائغ ثوبها إلى ظهرها وهى لا تشعر ، فلما قامت تكشفت فضحكوا عليها ، فصاحت واستغاثت ، فوثب رجل من المسلمين على الصائغ فقتله ، فتجمع اليهود على المسلم فقتلوه ، فلم يجد رسول الله ـ صلى الله عليه وسلم - بدًّا من غزو هؤلاء الخائنين ، وقد نقضوا العهد الذي بينه وبينهم بهذه الفعلة النكراء ، فحاصرهم خمس عشرة ليلة ، ثم فك الحصار عنهم وأجلاهم عن المدينة بعد أن أخذ أسلحتهم ، فارتحلوا مخذولين إلى حدود بلاد الشام .

 ஒரு மதீனத்து முஸ்லிம் ஒட்டகத்து மேலே விரிக்கிற துணியை விற்பதற்காக பனூகைன்காஃகளின் சந்தைக்கு சென்றார். அதற்கான காசை பெறுவதற்காக ஒரு கொல்லனின் கடையருகே அமர்ந்திருந்தார். அந்த யூதன் அவளுடைய முகத்தை திறந்து காட்டுமாறு கூறீனான். அதற்கவள் மறுத்து விட்டாள். அதற்காக வஞ்சகமாக அவளது கீழாடையை அவளுடைய முதுகில் இழுத்து கட்டிவிட்டான். இதனால் அவள் எழுந்த போது அவளுடை பின்பகுதி வெளியே தெரிந்தது. இதை கண்டு அங்கிருந்த யூதர்கள் சிரித்து கும்மாளமிட்டனர். இதை கண்ட ஒரு முஸ்லிம் சினமுற்று அந்த யூதனை கொன்றார். மற்ற யூதர்கள் ஒன்று சேர்ந்து அந்த முஸ்லிமை கொலை செய்து விட்டனர்.

உடன்படிக்கையை மிறி செயல்பட்டதால்  நபி (ஸல்) அவர்கள் பனூ கைன்காவினரை அங்கிருந்து வெளியேறு மாறு உத்தரவிட்டார்கள்.

 இதே போல மற்றொரு சமயத்தில் பனூ நளீர் யூதர்கள் அவர்களிடம் சமரசம் பேச வந்த முஹம்மது நபி (ஸ்ல) அவர்க்ளை விருந்துக்கு அழைப்பது போல அழைத்து அவரை ஒரு சுவற்றின் அருகே உட்கார வைத்து விட்டு சுவற்றின் மேலிருந்து கல்லை போட்டு பெருமானாரை கொலை செய்ய முயன்றனர்.

இதனால் அவர்களும் மதீனாவிலிருந்து வெளியேற்றப்ப் பட்டனர்.

 இதே போல மற்றொரு சமயத்தில் மக்காவிலிருந்து அதன் சுற்றுப் புறத்திலிருந்தும் எதிரிகள் எல்லோரும் ஒன்று திரண்டு சுமார் 10 ஆயிரம் பேர் அகழ் யுத்தத்திற்கு வந்திருந்த போது மதீனாவிற்குள்ளிருந்த யூதர்கள் எதிரிகளோடு இணைந்து கொண்டு முஸ்லிம்களுக்கு வஞ்சகம் செய்தார்கள்.

 எந்த நல்லிணக்க முயற்சிக்கும் ஒரு போதும் யூதர்கள் உடன்பட்டதில்லை. தங்களுடைய மேலாண்மையை நிறுவிக் கொள்வார்கள். இல்லை எனில் அதை நிலை நாட்டிக் கொள்ள துணிந்து சதி செய்வார்கள். அதற்கு வெட்கமின்றி நியாயம் கற்பிப்பார்கள்.

 وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَىٰ نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ ۚ

தாங்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் என்ற என்னம் எத்தகைய குற்றத்தையும் துணிந்து செய்கிற கொடூர சிந்தனையை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு எதிரான எந்த ஒரு சிறு எதிர்ப்பையும் மிகப் பெரிய குற்றமாக கருதுகிற கர்வத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளது. கிட்டத் தட்ட நம் நாட்டில் இருக்கிற பிராமணர்களிடம் முன்னர் இருந்தது போல.

 மதீனாவில் மட்டுமல்ல யூதர்கள் எங்கே வசித்தார்களோ  அங்கெல்லாம் இதே குணம் தான் வெளிப்பட்டது.

  அதனால் தான் இரண்டாம் உலகப் போரின் கால கட்ட்த்தில் ஜெர்மனியில் ஹிட்லர் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்று குவித்தான். யூதர்களை கொலை செய்வதை மனித குலத்திற்கு செய்கிற உபகாரம் போல கருதி ஜெர்மனியர்கள் செயல்பட்டார்கள்.

 அப்போது நடை பெற்ற ஒரு நிகழ்வு பிரபலமாக பேசப்படுவதுண்டு

 ஒரு நாள் இரவு மூன்று யூதக் குழந்தைகள் தப்பி ஓடி வருகிறார்கள். ஒரு வீடு தெரிகிறது. அதன கதவை தட்டுகிறார்கள். ஒரு பெண் மணி கதவை திறக்கிறார். உதவி கேட்கிறார்கள். அந்த பெண்ணுக்கும் மூன்று குழந்தைகள் உண்டு. அந்த பெண் அவர்களை வீட்டிறுகுள் அழைக்கிறார். உபசரிக்கிறார். ஆறு குழந்தைகளுக்குமாக உணவு பரிமாறுகிறார்.

உணவு அருந்திய மூன்று யூதக் குழந்தைகளும் இறந்து விடுகிறார்கள். அப்பெண்மணி அவர்களது உணவி விஷத்தை கலந்திருந்தாள். பிறகு அம்மூவரின் பிணத்தையும் தனது வீட்டின் பின் புறமே புதைத்து விட்டு அந்தப் பெண்மணி சொன்னாள். நான் என் குழந்தைகளை காப்பாற்றி விட்டேன்.

 75 வருடத்திற்கு முன் ஐரோப்பா யூதர்களை எப்படி பார்த்த்து என்பதற்கான ஒரு உதாரணம் இது.

 அப்போதே ஹிட்லர் சொன்னான் ; நான் கொஞ்சம் யூதர்களை விட்டு வைக்கிறேன். ஏனெனில் நான் ஏன் யூதர்களிடம் இப்படி நடந்து கொண்டேன் என்று உலகம்  தெரிந்து கொள்வதற்காக என்றான்

 அது சரி தான்  என்று நிரூபிக்கிற வகையில் இப்போது நடப்புகள் அமைந்திருக்கின்றன.

 இஸ்ரேல் சுமார் ஒரு வருடமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்த்தில் இருந்து நேற்று வரை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காஸா நகரை தாக்கி அதை சுடுகாடாக மாற்றியிருந்தது.

 தன்னுடைய குடிமக்கள் 200 பேரை ஹமாஸ் அமைப்பு பிடித்துக் கொண்டதை காரணமாக கூறி காஸாவில் அகதிகளைப் போல வாழும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்க்ள் மீது கண்மண் தெரியாமல் தாக்குதல் நடத்தியது. அகதி முகாம்கள் மருத்துவ மனைகள் பள்ளிவாசல்கள் என எதையும் அது விட்டு வைக்கவில்லை. தற்போது காஸா நகரமே ஒரு இடிபாடுகளின் மேடாக காட்சியளிக்கிறது. அந்த நகரையே அழித்து விட்டது என்று சொன்னாலும் அது மிகையல்ல.  

 இந்த 10 மாத காலத்திற்குள் அது நடத்திய படுகொலை தாக்குதலில் கொள்ளப் பட்ட மக்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 600 பேர். இதில பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.

 காஸாவில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் - மின்சாரத்தை கூட அனுமதிக்காமல் அவர்களை பூமியிலுள்ள நரகில் வசிப்பவர்களாக மாற்றியுள்ளது.

 ஒரு மருத்துவ மனையை கூட விட்டு வைக்காமல் அனைத்து மருத்துவ மனைகளையும் குறிபார்த்து அழித்து விட்டது.

 உலகின் வேறெந்த பகுதிகளிலிருந்தும் அந்த மக்களுக்கு நிவாரணம் போய் சேராமல் தடுத்து விட்டது.  

 உலக நாடுகளின் பலத்த கோரிக்கைகளுக்குப் பிறகு சில கண்டய்ணர்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.

 இரண்டு நாட்களுக்கு முன் காஸாவின் கான்யூனிஸ் பகுதியில் காஸா மனிதாபிமான அமைப்பு ( Gaza humanity foundation) உதவிப் பொருட்கள்ள வழங்குவதாக அறிவித்திருந்தது. இது அமெரிக்க மற்ற்யும் இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்களால் நடத்தப்படுகிற அமைப்பாகும். உதவிகளை பெற ஏராளமான காஸா மக்கள் காத்திருந்தனர்.  இஸ்ரேல் ராணுவம் அந்த மக்கள் மீது திடீர்  தாக்குதல் நடத்தி அதில் 78 பேரை ஒரே நாளில் கொஞ்ச நேரத்தில் படுகொலை செய்தது. இதில் பல குழந்தைகளும் பெண்களும் கொல்லப் பட்டனர். உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த ஆர்வலர்கள் இருவரும் கூட கொல்லப் பட்டனர்.  

 இஸ்ரேல் எத்தகையை பயங்கவாத பைத்தியமாக மாறிவிட்ட்து என்பதை இது உலகிற்கு காட்டியது.

 இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மிக வெளிப்படையாக யார் என்ன செய்ய முடியும் என்ற அகம்பாவத்தில் மீறி வருகிறது. இதை தட்டிக் கேட்க எந்த வல்லரசும் முன் வரவில்லை. அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்.

 இதற்கிடையில் இஸ்ரேல் லெபானானை தாக்கிது. சிரியாவை தாக்கியது. எமன் நாட்டை தாக்கி அதன் சன்ஆ விமான நிலையத்தை முற்றிலுமாக அழித்தது.

 இஸ்ரேலின் அழிவு பணிகள் கொஞ்ச நஞ்சமில்லாமல் மனித வளர்ச்சியை காவு வாங்கிக் கொண்டிருந்தது.

 இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் இரான் மிது திடீரென கடுமையான வான் வெளி தாக்குதலை தொடுத்து இரானின் 20 முக்கிய நிலைகளை அழித்தது. அதன் மூத்த படைத்தளபதிகளையும் அணு ஆராய்ச்சியாளர்களையும் குறி வைத்து படுகொலை செய்த்தது.  

 ஒருவாரமாகியும் இன்றும் அதன் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இரானின் மக்களில் சுமார் பேர் இதுவரை படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள் .பல ஆயிரம் பேர் காயம் பட்டிருக்கிறார்கள் இலட்சக்கணக்கானோர் தங்களது வசிப்பிடங்களை காலி செய்து மலைப் பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள்  

 இத்தனைக்கு காரணம் என்ன

 ஈரான் அணு ஆயுத்ததை தயார் செய்யும் நிலையில் இருக்கிறது. அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று இஸ்ரேல் கூறுகிறது.  

 நிச்சயமாக இந்த கூற்றில் தாக்குதலுக்கான  நியாயம் எதுவும் இல்லை என்பது உலகிற்கு தெரியும்.

 ஈரான் ஒரு சுய அதிகாரம் உள்ள நாடு. அதற்கு அணு ஆயுதம் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மாணிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. ஒரு வேளை அதை கட்டுப்படுத்த வேண்டும் எனில் அதற்கு ஐ நா சபை இருக்கிறது.

 ஆனால் இஸ்ரேல் சுயமாக ஈரானை தாக்கியதற்கு என்ன நியாயமும் இல்லை.

 இதை இன்னும் உலகிலுள்ள வல்லரசுகள் எதுவும் தீர்க்கமாக கேள்வே கேட்க வில்லை.

 அமைதியான அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகள் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகும்போது, ​​சர்வதேச சமூகம், குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமைதியாக இருக்கக்கூடாது," என்று ஐ.நா.வுக்கான இஸ்லாமிய குடியரசின் நிரந்தர பிரதிநிதி அமீர் சயீத் இரவானி பாதுகாப்பு கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்த போதும் கூட இரான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை ஐ நா கூட இன்னும் கண்டிக்கவில்லை.

 தற்போதுதான் இரானுக்கு ஆதரவாக ரஷ்யா சீனா வட கொரியா துருக்கி போன்ற நாடுகள் கருத்தை வெளியிட்டுள்ளன. அது கூட எந்த வகையிலும் இஸ்ரேலை கட்டுப்படுத்துகிற நடவடிக்கையாகவோ சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக அணி திரட்டுகிற தீவிர நடவடிக்கையாகவோ இல்லை.

 இஸ்ரேல் தொடர்ந்து மிருகத்தனமான தாக்குதலை நட்த்தி வருகிறது. அமெரிக்கவும் ஐரொப்பாவில் உள்ள பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படுகின்றன.

 திருட்டு நாடு இஸ்ரேல் உலகில் 1948 முன் இருந்ததில்லை

 இஸ்ரேல் என்கிற நாடு 1917  ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் பாலஸ்தீனுக்குள் திருட்டுத் தனமாக அறிவிக் பட்டது.

 1948 ம் ஆண்டு இஸ்ரேல் தன்னை தானே ஒரு தனி நாடாக அறிவித்துக் கொண்ட்து.   

 அதன் பிறகு வல்ல்ரசுகளின் துணையோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றி பாலஸ்தீனத்திற்கு சொந்தமான 78 சதவீத நிலத்தை கைப்பற்றியது. அங்கிருந்து 7 இலட்சம் பாலஸ்தீனர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பிடுங்கி அவர்களை அகதிகளாக வெளியேற்றியது.

இந்த திட்ட்த்திற்கு சியோனிஸம் என்று பெயர் வைத்துக் கொண்ட்து.

 அதன் பின் 1967 ம் ஆண்டு நடை பெற்ற யுத்த்தில் இஸ்ரேல் மேலும் அரபு நாடுகளிடமிருந்து ஏராளமான நிலப்பரப்பை கைப்பற்றியது. ஜோர்டானிடமிருந்து காஸா மற்றும் மேற்கு கரை பகுதியையும் , எகிப்திடமிருந்து காஸா முனை மற்றும் சினாய் பகுதிகளையும் , சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகள் பகுதியையும் பிடுங்கியது. என ஒட்டுமொத்த இஸ்ரேலும் ஒரு திருட்டு கொள்ளைகளின் நாடாகும்.

 அந்த நாடு இப்போது ஈரானின் மீது அணு ஆயுத தயாரிப்பு பழி சுமத்த்துகிறது.

 கடந்த காலங்களில் அமெரிக்காவிடமிருந்து அணு ஆயுத உற்பத்திக்கு தேவையானவற்றை திருடிய நாடு இஸ்ரேல் என்ற செய்தியை இப்போது பலரும் உலகிற்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்

 1948 ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போதே அதன் பிரதமராக ஆன பென்குரியன் இஸ்ரேலுக்கு அணு ஆயுதம் தேவை என்ற கருத்தை வெளிப்பட்டயாக கூறினார்.

 ஆனால் அப்போது அமெரிக்கா அதை ஏற்கவில்லை.

 இஸ்ரேலில் இருந்த பாதுகாப்பு என்ற ஹீப்ரு பொருளை கொண்ட லாகம் lakum என்ற அமைப்பு அமெரிக்காவிலிருந்து அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான பொருட்களை திருடியுள்ளனர் அமெரிக்க நாட்டின் செனட்டர்களே குற்றம் சாட்டினர்.

 1964 ல் Oak Rich national laboratory  என்ற அமெரிக்க அமைப்பு அமெரிக்காவின் பெண்சிலிவேனியாவிலிருந்து அணு குண்டு உற்பத்திக்கு தேவையான யுரோனியம் 200 கிலோ அளவு திருடப்பட்டிருப்பதாக கூறீனர். அதில் 20 அல்லது முப்பது கிலோ இருந்தாலே ஒரு அணு குண்டை உருவாக்கி விட முடியும்.

இந்த திருட்டு யாரால் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதனால் எந்த விசாரணையும் நடை பெறவில்லை.  

 1967 லே இஸ்ரேல் அணு ஆயுத்த்தை தயார் செய்து விட்ட்து என்பது உலகிற்கே தெரியும். அதை அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ வும் அறிந்திருந்தது.

1979ல் இஸ்ரேல் தன்னிடமிருக்கிற அணுகுண்டுகளை

 தென்னாப்பிரிக்காவில் வைத்து பரிசோதித்து பார்த்தது. அப்போது அமெரிக்க அதிகாரிகள் உலகில் எங்கோ அணு சோதனை நடந்துள்ளது என்று கூறீனார்களே தவிர இஸ்ரேலை குற்றம் சாட்டவில்லை.

 இன்றைய நிலையில் இஸ்ரேலிடம் 80 முதல் 400 வரையிலான் அணுகுண்டுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 அமெரிக்காவிடமிருந்து யுரோனியத்தை திருடி பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்த அணு ஆய்வாளர்களை திருட்டுத்தனமாக பயன்படுத்தி 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏரளமான அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிற இஸ்ரேல் இரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று சொல்லி இராணை கொடூரமாக தாக்குவதை விட இன்றைய உலகில் வேறு அக்கிரம்ம் எதுவும் இல்லை.

 ஈரான் ஷியா கருத்தோட்டத்தை கொண்டது. அது இஸ்லாமிற்கு முரணானது என்றாலும் நீதியின் பால் நின்று இந்த தாக்குதலில் இரானுக்கு ஆதரவு தெரிவிப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

 عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ( من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمانرواه مسلم .

 துருக்கி பாகிஸ்தான் போன்ற சில நாடுக்கள் உறுதியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. சவூதி கத்தார் போன்ற 21 நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன என்றாலும் அவை உறுதி பட ஒரு கூட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச் சாட்டு இருக்கிறது. சில முஸ்லிம் நாடுகள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவி செய்கின்றன என்ற ஒரு தகவலும் இருக்கிறாது. இது துரதிஷ்வசமான ஒரு செய்தியாகும்.

 யூதர்களை ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அது பெருமானாரின் வழிகாட்டுதலாகும்.

 - لا تقومُ الساعةُ حتى يقاتلَ المسلمون اليهودَ ، فيقتلُهم المسلمون ، حتى يختبيءَ اليهوديُّ من وراءِ الحجرِ و الشجرِ ، فيقولُ الحجرُ أو الشجرُ : يا مسلمُ يا عبدَ اللهِ هذا يهوديٌّ خلفي ، فتعالَ فاقْتلْه 

 ஒரு கல்லுக்கும் மரத்துக்கும் கூட யூதர்கள் தீயவர்கள் என்று தெரியும் எனும் போது முஸ்லிம் அரசுகள் அதை அடையாளம் காணவில்லை அல்லது கண்டும் அதற்கேற்ப நடக்க வில்லை என்பது ஒரு பெரிய சோகம் தான். 

ஒரு வேளை இஸ்ரேல் ஈரானை தாக்குவதில் வெற்றி கண்டுவிட்டால் அதற்கடுத்த வளைகுடாவில் இனி இஸ்ரேல் வைத்த்தே சட்டமாகிவிடும் என்பதை அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஏனெனில் அரபு நாடுகள் எதற்கும் இஸ்ரேலை எதிர் கொள்கிற தைரியம் இருக்க வில்லை. அவற்றில் எகிப்து ஜோர்டான் ஐக்கிய அரபகம் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுடன் பகிரங்கமாக உறவு கொண்டுள்ளன. அவை இஸ்ரேலிடமிருந்து தங்களது அரசுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்திலேயே உறவு கொண்டுள்ளன.

 இஸ்ரேலை வளைகுடா பகுதியில் தீர்க்கமாக எதிர்த்து வந்த ஒரே நாடு ஈரான் தான் .இஸ்ரேலை எதிர்ப்பதற்கேற்ற ஓரளவான ராணுவ பலத்தை வைத்திருந்த்தும் இரான் தான் .அந்தக் காரணத்தால் தான் இஸ்ரேல் வெகு தூரத்தில் இருக்கிற ஈரானை தாக்குகிறது.  

 ஈரானின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடருமானால் அது மத்திய கிழக்கு முழுமைக்குமான பாதிப்பாக அமையும்.

 இஸ்லாமிய நாடுகள் தங்களை தொடர்ந்து எதிர்க்கிற இஸ்ரேலை எப்படி நவீன வழிமுறைகளில் எதிர் கொள்வது என்று யோசிக்க வேண்டும். இஸ்ரேலுடன் நெருங்குவது கொள்வது திருக்குர் ஆனின் வழி காட்டுதலுகு எதிரானது என்பதை புரிந்து கொள்ல வேண்டும்.

لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا..}

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களின் ஒரு எச்சர்க்கை இருக்கிறது.

لا يظهر المهدي حتى يزول ملك العرب  

 அந்த சூழ்நிலையை அரபு அரசுகள் உடனடியாக வரவழைத்து விடக் கூடாது.

 இரான் நாடு நம்முடைய இந்திய நாட்டுடன் பாரம்பரியமாக தொடர்பு வைத்திருக்கிற நாடு. ஆனால் நம்முடைய மத்திய அரசு இஸ்ரேலை கண்டிக்காமல் இருப்பது பொருத்தமற்ற செயலாகும். காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது போல நம்முடைய நாடும் வெளிப்பட்டயாக இந்த அக்கிரம்த்தை கண்டித்திருக்க வேண்டும். மத்திய் அரசு கண்டிக்க வில்லையானும் நாட்டிலுள்ள பல பிரதான அரசியல் தலைவர்களும் இதை கண்டித்திருப்பது இன்னும் உலகில் நியாய உணர்வு மிச்சமிருக்கிறது என்பதை காட்டுகிறது.

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது விவகாரத்தில் கண்மூடித்தனமாக செயல்படுகிறார். அவர் பொறுப்பேற்றது முதலே இஸ்ரெல் பிரதமர் பென் ஞமின் நெதன்யாகுவை செல்லம் பாராட்டி வருகிறார். அவருடைய அனைத்து அடாவடிகளை அங்கீகரித்து வருகிறார். இது அப்பட்டமான அரசியல் அடாவடியாகும்.

கடந்த வாரத்தில் கனடாவில் நடை பெற்ற ஜி7 மாநாட்டிலிருந்து இடையிலேயே வெளியேறிய அவர் இரான் மக்கள் தஹ்ரானை காலி செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார். அதே போல இஸ்ரேல் இரான் போர் நிறுத்தம் மட்டுமல்ல அதற்கு மேல் ஈரானின் அரசியலை மாற்ற போகிற நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் தன்னிச்சையாக அறிவித்திருந்தார்;

 கனடாவிலிருந்து திரும்பியதும் நேராக இரவோடு இரவாக சிட்ஸுவேசன் ரூம் எனப்படுகிற அமெரிக்க அதிபரின் அவசர கால ஆய்வு அறைக்குள் சென்றார். அதிகாரிகளை அழைத்து பேசினார்.

 அடுத்த நாளே அமெரிக்காவும் இரான் மீது தாக்குதலை தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படட்து.

 டிரம்பை இப்போதைக்கு அவரது நண்பர்கள் ஓரளவு கட்டுப்படுத்தியிருகிறார்கள் என்று தெரிகிறது . ஏனெனில்

ஈரான் நாடு கூறுவது போல அவரது பேச்சுக்கள் அபத்தமாக இருக்கின்றன. அந்த அபத்தததை அவர்கள் அவருக்கு உணர்த்தி யிருக்கலாம்.

அவருக்கு முந்தைய குடியரசுக் கட்சியின் தலைவர்கள் புஷ் ஜார்ஜ் புஷ் ஆகியோரின் நடவடிக்கைகள் அமெரிக்கவுக்கு இறுதியில் எத்தகைய இழிவை தந்தன என்பதை அவருக்கு எடுத்துரைதிருக்கலாம்.  ஈரான் நாடு கூறுவது போல அவரது பேச்சுக்கள் அபத்தமாக இருக்கின்றன.

இரண்டு வாரங்கள் பொறுத்திருந்திருந்து பார்க்கப் போவதாக இப்போது டிரம்ப  அறிவித்திருக்கிறார்.

அந்த அளவுக்கு அது உலகிற்கு நல்லது. 

இஸ்ரேல் ஒரு போதும் அமைதியாக இருக்காது உலகை அமைதியாக இருக்க விடாது இதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேலின் பேச்சுக்கு உடன்பட்டால் உலகில் நித்தமும் யுத்தம் தான். அழிவு தான் நடக்கும். 

 வட கொரிய அதிபர் கூறியது போல இஸ்ரேல் மத்தியக் கிழக்கின் அமைதிக்கு ஒரு புற்று நோயாக இருக்கிறது அமெரிக்க அதிபர் அந்த விசிர்றிக் கொண்டிருக்கிறார்.

 உலக மக்கள் அனைவரும் நீதியின் ஆதரவாளர்களாக இப்போது ஈரானுக்கு சார்பாக உறுதியாக நிற்க வேண்டும்.

 இப்போதைக்கு ஈரான் உறுதியாக இருக்கிறது. தனது சக்திக்கு உடபட்ட அளவில் அது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை பெரிய இழப்புக்களை சந்தித்திராத இஸ்ரேல் யுத்தத்தின் கோர முகத்தை சந்தித்து வருகிறது. அதன் கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்படுகின்றன. மக்கள் உயிரைக் காப்பற்ற அங்கும் இங்கும் ஓடித்திரிகிறார்கள். ஆனால் இது இஸ்ரேலுக்கு உரிய தண்டனையல்ல. ஒரு சாதாரண சங்கடம் தான்.

 இஸ்ரேலின் பிம்பம் கலைந்து வருகிறது. அது இரான் மீது கைவைத்திருப்பது இபோதைக்கு இஸ்ரேலை கொஞ்சமாக தீக்கிரையாக்கியிருக்கிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கை தொடரும் எனில் நிச்சயம் இஸ்ரேல் முழுவதும் தீக்கிரையாகும். சபிக்கப்பட்ட சமுதாயம் சாம்லாகும்.உலகிலுள்ள ஒவ்வொரு கல்லும் மரமும் கூட அதற்கு எதிராக திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 இரான் இப்போது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது. அது இது விசயத்தில் அமெரிக்காவின் ஆதிக்க மேலாண்மையை குறைக்க  அது உதவக் கூடும்.

 சண்டையை விட சமாதான பேச்சு வார்த்தை மேலானது. அது அழிவை தடுக்க கூடியது. வெற்றி தோல்வியை விட அழிவை தடுப்பது தான் முக்கியமானது.

ஒரு சண்டை நடக்கிற போது நீதியின் பக்கத்தில் உறுதியான துணையாக நிற்க வேண்டும் அதே நேரத்தில் தக்குதல் நடவடிக்கைகளில் உற்சாகம் காட்டக் கூடாது. சமாதனம் நிலவ்வே ஆசைப்பட வேண்டும். 

 எல்லாம் வல்ல இறைவனிடம் அதிகாரத் திமிரில் ஆயுதங்களின் பலத்தில் தொடர்ந்து அடாவடித்தனம் செய்கிற இஸ்ரெலின் அக்கிரமத்தை தடுத்து நிறுத்துவானாக!

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆறுதல் தருவானாக!

உலக் நாடுகளின் தலைவர்களை நேர்மையாக சிந்திக்க வைப்பானாக!

நீதி நிலைக்கவும் அநீதி அழியவும் இந்த யுத்த்த்தை கடைசி காரணமாக ஆக்குவானாக!