وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
இஸ்லாம் மனித உறவுகளை மேம்படுத்துவதற்கு கையாண்ட உத்திகளை ஒன்று முஸாபஹா
இன்று வரை முஸ்லிம்களின் ஒரு முக்கிய அடையாளம் அது.
ஈது பெருநாட்களை அடையாளப்படுத்துகிற போது உலகம் கட்டித்தழுவும் இரண்டு நபர்களை
தான் நினைவு கூற்கிறது. பதிரிகைகளில் அத்தக்கய படைத்தை பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக திரைப்படங்களிலும் கூட முஸ்லிம்களை அடையாளப்படுத்த கட்டித் தழுவுதலையே
காட்சியாக்குகிறார்கள்.
ஆம் இது உன்னத இஸ்லாமிய கலாச்சாரம் தான்.
எமன் நாட்டில் தோன்றிய இந்த பழக்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்லது என்று
நம் சமூகத்திற்கும் இதை பழக்கப்படுத்தினார்கள்
அதை
தான் முதலில் செய்வார்கள் . தோழர்களுக்கு நடை முறை படுத்துவார்கள். பின் வரும் சமூகம்
அதை கைகொள்ள தேவையான உன்னதமான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்
பெருமானார் முஸாபஹா செய்வார்கள்.
عن رجل من عنزة ،
أنه قال : قلت لأبي
ذر - رضي الله
عنه
: هل كان رسول الله - صلى الله عليه وسلم -
يصافحكم إذا لقيتموه ؟ قال : ما لقيته قط إلا صافحني ، وبعث إلي ذات يوم ولم أكن في أهلي ، فلما
جئت أخبرت ، فأتيته وهو على سرير ، فالتزمني ، فكانت تلك أجود وأجود . رواه أبو
داود .
மானுட
சகோதரத்துவட்தை நிலை நாட்டியதில் முஹம்மது நபி யின் இந்த பங்களிப்பு மகத்தானது.
அரசர்களோ
மதத் த்தலைவர்களுடைய கைகளையோ சாமாணிய மக்கள் தொட முடியாது என்பது தான் உலகில் காலம்
காலமாக காணப்பட்ட வழக்கம்.
இப்போதும்
கூட இங்கிலாந்தின் அரச குடும்பம் அனைவரோடும் கை குலுக்காது.
பிற
நாடுகளின் உயர் தலைவர்களோடு கை குலுக்கும் போது கூட கையுறை இட்டு கை கொடுக்கும் பழக்கம்
பல பகுதிகளிலும் இருக்கிறது.
இந்த
ஹதீஸை விளக்குகைகள் விரிவுரையாளர்க சொல்கிற ஒரு தகவல் முக்கியமானது.
கேள்வி
கேட்ட அனஸா குடும்பத்து மனிதரின் கேள்வி நீங்கள் கை நீட்டினால் பெருமானார் அதை ஏற்றுக்
கொள்வாரா என்பது தான்
هل يقبل مصافحتكم
அதற்கான பதிலாகத்தான்
அபூ தர் ரலி கூறீனார். பெருமானார் )ஸல்) தானே வந்து முஸாபஹா செய்வார்கள் . பிறர் முஸாபஹா
செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள்.
அதிலும் கூட மிக உன்னதமாக
நடந்து கொள்வார்கள்/
தனது கையை முதலில் விடுவித்துக்
கொள்ள மாட்டார்கள்.
கண்ணை
பார்த்து கை கொடுப்பார்கள். முதலில் பார்வையை திருப்பிக் கொள்ள மாட்டார்கள்.
كانَ
رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذَا استقبلَهُ الرجلُ صافحَهُ لا ينزِعُ
يدَهُ حتَّى يكونَ هو الذِي نزعَ ولا يصرفُ وجهَهُ عَنْ وجهِهِ حتَّى يكونَ الرجلُ
هو الذي يصرفُه
الراوي
: أنس بن مالك- أخرجه الترمذي
இந்த பழக்கம் சஹாபாக்களிடம்
பரவியது.
عن قتادة ،
قال : قلت لأنس - رضي الله عنه : أكانت المصافحة في أصحاب رسول الله - صلى الله
عليه وسلم - ؟ قال : نعم . رواه البخاري .
பின் வரும் சமூகம் அதை நன்மை என்று கருத பெருமானார் அறிவுறுத்தினார்கள்.
وعن عطاء الخراساني ،
أن رسول الله - صلى الله عليه وسلم - قال : تصافحوا ، يذهب
الغل ، وتهادوا تحابوا وتذهب الشحناء " . رواه مالك
الغل வஞ்சம்
الشحناء பகை
ஒருவருடன்
மிக எளிதில் நட்புறவை வளர்க்கும் வழி கை குலுக்குவது.
நீங்கள்
ஜும் ஆவிற்கு வரும் போது சந்திக்கிற சக தொழுகையாளியுடன் இரண்டு மூறை கை குலுக்கி பாருங்கள்.
நண்பர்களாகி விடுவீர்கள்./
10
முறை கை குலுக்கினால் உறவினர் ஆகிவிடுவீர்கள்/
அது மட்டுமல்ல சக மனிதருக்கு நாம் செய்கிற முதல் இஹ்ஸான் சலாம் சொல்லுவதும் கை குலுக்குவதுமாகும். சுக துக்கம் விசாரிப்போம் என்றால் அது மேலும் வலுப்பெறும்.
இது அல்லாஹ்விற்கு மிக பிடித்தமானது என்கிறது குர் ஆன்
وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
இது அல்லாஹ்வின் அன்பை பெற்றுத்தரக் கூடியது
وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي} [طه: 39]
எனது அன்பை உனக்கு நான் சொரிந்தேன்.
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பது முஸாபஹாவில் தான் முழுமையடைகிறது என்றார்கள்
பெருமானார் (ஸல்)
وعن أبي أمامة - رضي الله عنه - أن رسول
الله - صلى الله عليه وسلم - وتمام تحياتكم بينكم المصافحة " . رواه أحمد ، والترمذي ،
பெருமானாரின் இந்த வழிகாட்டுதல்களால் முஸ்லிம் சமூகத்தில் இது சட்டப்படியான
ஒரு நன்மையானது.
அன்பை வளர்க்கும் இந்த காரியத்தை பின் சுன்னத்துகள் இல்லாத இரண்டு தொழுகைகளிலும்
ஒரு பழக்கமாக்கி கொள்வதை முஸ்லிம் அறிஞர்கள் ஏற்றார்கள்.
قال النووي :
اعلم أن المصافحة سنة ومستحبة عند كل لقاء ، وما اعتاده الناس بعد صلاة الصبح والعصر لا أصل له في الشرع على
هذا الوجه ، ولكن لا بأس به ،
இது இதயத்தை
சுத்தீகரிக்கும்
ஒரு வழக்கம்
It is seen as a practice that can purify the
heart
இது மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. அமைதிக்கு வழி வகுக்கிறது
என்கிறார்கள்.
கைகுலுக்குதல் நம்பிக்கையை
வளர்ப்பதிலும்
முதல் வார்வையிலேயே நல்லுறவை உருவாக்குவதிலும் பேசாமல் காரியமாற்றும் வழி
என்கிறார் ஒரு அறிஞர்.
Handshakes can also be a non-verbal way to
build trust and make a positive first impression.
கை
குலுக்குவது
·
Reduces stress:
பதற்றத்தை
குறைக்கிறது என்றும்
·
Promotes a positive mindset:
நேர்முக
நல்ல சிந்தனையை வளர்க்கிறது என்றும் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
முஸாபஹா செய்வது எப்படி ?
இஸ்லாமிய முஸாபஹா இரண்டு கைகளாலும் கை குலுக்கிக் கொள்வதாகும்.
இது பற்றி இமாம் புகாரி அவர்கள் பாடத்தலைபிடுவதில் விளக்கி விடுகிறார்கர்ள்.
قال البخاري:
(باب: الأخذ باليدين)
பெருமானாரின்
முஸாபஹா இப்னு மஸ்வூத் ரலி விளக்குகிறார்கள்
حديث ابن مسعود
قوله: ((علمني رسول الله صلى الله عليه وسلم التشهد، وكفي بين كفيه))؛
முன்னோர்களின் முஸாபஹாவும்
இப்படித்தான் இருந்த்து.
وصافح حماد بن
زيد ابنَ المبارك بيديه
எனவே இரண்டு கைகளை கொடுத்து முஸாபஹா செய்வது தான் நல்லது.
பெண்களிடம் கை
குலுக்க கூடாது.
பெருமானாரின் உன்னதம் இதிலும்.
வெளிப்படுகிறது
பெருமானார்
உருவாக்கிய பழக்கம் இன்றும் தொடர்கிறது.
பிரச்சனைக்கு வாய்ப்பில்லை எனில் கூடும் என்கிறார்கள்
ஹனபி அறிஞர்கள்
-جواز مصافحتها بدون حائل إذا أمنت الفتنة من الطرفين، وهو مذهب
الحنفية
அப்போதும் கூட கையுறை நல்லது என்கிறார்கள் ஷாபி அறிஞர்கள்
جواز
مصافحتها بحائل بين اليدين، إذا أُمِنتِ الفتنة، وهو وجه عند الشافعية.
ثم قال النووي : وينبغي أن يحترز عن مصافحة الأمرد الحسن الوجه ،
فإن النظر إليه حرام كما بسطنا القول فيه في كتاب النكاح
ஸ்பரிசம்
என்பது எந்த அளவில் நன்மையானதோ சில வகைகளில் அதிலிருக்கிற ஆபத்துக்களையும் இஸ்லாம்
புரிந்து கொண்ட்தன் விளைவாகவே இந்த சட்டம் சொல்லப் பட்டுள்ளது.
இன்றுள்ள
சூழல்களில் இந்த ஸபரிசம் பற்றி பல தரத்திலும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
சமூக அறிஞர்கள் எச்சரிப்பதை பார்க்கிறோம்.
நமது
மார்க்கம் நம்மை ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறது
முஆனகா
கை
குலுக்குவது மட்டுமல்ல கட்டித்தழுவுதலையும் இஸ்லாம் வரவேற்றது.
அபூ ஜஹ்லின் மகன் இகிரிமா ரலி இஸ்லாமை தழுவிய போது அவரை பெருமானார் கட்டித்தழுவினார்கள்
அப்போது இதை ஓதினார்கள்
زاد مالك في الموطأ
: فلما رآه رسول الله - صلى الله عليه وسلم
- وثب إليه فرحا وما عليه رداء حتى بايعه
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பேரக்குழந்தைகளை கட்டித்தழுவுவார்கள்.
மகளை அணைத்தல்
ஹஜ்ரத்!
என் மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டார். இனி அவருடைய முதுகை நான் தொடலமா என்று அவர் கேட்டார்.
ஒவ்வொரு சந்திப்பிலும் முஸாபஹா செய்யாலாம்.
ولما رحل جابر بن
عبدالله رضي الله عنه إلى عبدالله بن أنيس رضي الله عنه شهرًا إلى مصر خرج عبدالله
بن أنيس رضي الله عنه، واعتنق كل منهما الآخر؛ [رواه أحمد
கட்டி அணைத்தல் என்பது ஒருவருக்கு எவ்வளவு தூரம் ஆன்ம பலத்தை
தரக் கூடியது
இது பல ரக்சியங்களை செய்யக் கூடியது என்பார்கள் ஆன்மீக
அறிஞர்கள் கூறுவார்கள்
ஒரு மனிதரின் இதயத்தில் இருக்கிற பலம் மற்றவருக்கு
இடம் மாறும்
ஒருவரிடம் இருக்கிற அறிவு மற்றவருக்கு இடம் மாறும்
ஒருவரிடம் இருக்கும் பண்பு அடுத்தவருக்கு இடம் மாறும்
.
கட்டியணைத்தலின் முக்கியத்துவத்திற்கு ஒரு உதாரணம் போதும்/
ஜிப்ரயீல் அலை அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை முதன் முதலில்
ஹிராவில் சந்தித்த போது பெருமானாரை விலா எலும்பு நெருங்கும் அளவு கட்டியனைத்தார்கள்.
அதனால் அறிஞர்கள் சொல்வார்கள் நீங்கள் பெரிய மனிதர்களை
கட்டியணைக்கிற போது
அவருடை
கல்பில் இருக்கும் நல்லவை அனைத்தும் எனக்குள் வரட்டும் என்று நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்
இஸ்லாமிய
சட்ட அறிஞர்கள் சட்ட ரீதியாக
இதை ஏற்கவும் வரவேற்கவும் செய்துள்ளார்கள்.
قال الشافعية
بسُنية المعانقة للقادم من السفر وتباعد اللقاء، وقال الحنفية والحنابلة بالإباحة
أما المأذون فيه،
فعند التوديع، وعند القدوم من السفر، وطول العهد بالصاحب، وشدة الحب في الله،
இந்த
முஆனகா தற்போது மிக முக்கியமான வைத்திய முறையாக
மாறி வருகிறது/
மனிதனுக்கு ஏற்படுகிற எல்லா நோய்களுக்கும் மருந்தில் தீர்வு கிடையாது சில நோய்கள் மானசீகமானவை என்று உலகிற்கு முதலில் சொன்னவர் முஸ்லிமான அலீ பின் சீனா தான்.
இந்தியாவில்
கட்டித்தழுவியே ஒரு பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் மாத அமிர்தானந்தமயி
கொரோனோ
காலத்தில் அவருடைய அமைப்பு மட்டும் 100 கோடி ரூபாய் நன் கொடை வழங்கியது.
இப்போதும்
ஆண்டுக்கு 3 கோடி மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
அவர்களுடைய
கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் மிக பிரபலமானதை
அம்ரிதானந்தமயி
தன்னை தேடி வருவோரை கட்டி அனைப்பதை தான் முக்குய ஆன்மீக வழியாக செய்து வருகிறார்.
ஆனால்
இது பலத்த சர்ச்சைகளை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
முத்தமிடுதல்
கை முத்தமிடல்
قال النووي : تقبيل يد الغير إن كان لعلمه وصيانته وزهده وديانته ، ونحو ذلك من الأمور
الدينية لم يكره ، بل يستحب ، وإن كان لغناه أو جاهه في دنياه كره وقيل حرام
உலகம் இந்த கருணைக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மிக எதார்த்தமாக நாம் பார்க்கிறோம்.
சமூகத்தில் விளிம்பு
நிலையில் இருப்பவர்கள் அவர்களிடம் யாராவது கை குலுக்கி விட்டால் அல்லது கட்டியணைத்து
விட்டால் அது அன்பளிப்புகள் கிடைப்பதை விஅ பெரிதாக கருதுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
இஸ்லாம் நமக்கு வழங்கிய
இயல்பான வழிகாட்டுதலில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவோம்.
நாளை மறுமைக்கும் அது
நன்ம்மயாகும். இந்த உலகிலும் அது சுகம் தரக்கூடியதாக ஆகும்
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment