அல்லாஹ் கருணை மிக்கவன் என்று கூறுகிறது திருக்குர் ஆன்.
وكان بالمؤمنين رحيما
அதிகாரிள் பெரும்பாலும் ஒரு வரை தண்டிபதற்கு ஏதாவது காரணம் கிடைக்கிறதா என்று
தேடுவார்கள்.
மாதக் கடைசில் சாலையில் நிற்கிற போலீஸ் காரர் ஒரு வாகன ஓட்டியிடம் அனைத்து சான்றுகளும்
சரியாக இருந்தாலும். ஹெட்லைட்டில் ஏன் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்று கூறி ஒரு
பைன் போடுவார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய மாநில மக்களுக்காக தானே வாதாடினார்.
மம்தா பானர்ஜி, அப்போது அவர் தேர்தல் கமிஷன் என்னென்ன அற்பமான காரணங்களுக்காக
வெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்கியுள்ளது என்று அடுக்கடுக்காக
பட்டியலிட்டு கூறினார். வீடு மாறி மாமியார் வீட்டுக்கு குடிபெயர்ந்த மருமகள் வாக்காளர்
பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளார் என்பது போன்ற பல நிகழ்வுகளை நீதிமன்றத்திடம்
எடுத்துக் கூறியுள்ளார்.
குற்றங்களை தேடி தண்டனை தருவது , தண்டனைகளுக்காக குற்றங்களை உருவாக்குவதும்
தான் உலக இயல்பு.
ஆனால் அல்லாஹ் கருணை மிக்கவன். அவனது பெருங்
கருணைக்கு ஒரு எடுத்துக் காட்டு.
அவன் மக்களை மன்னிக்கவும் அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பவும் காரணங்களை தேடுவகிறான்.
அவனே காரணங்களை உருவாக்குவதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள். .
ஆன்மீக அறிஞர்கள் சில உதாரணங்களை கூறுவதுண்டு.
ஒரு தந்தை தன் மகன் தங்களை மதிக்க வில்லை என்று கூறி அல்லாஹ்விடம் முறையிட்டார்.
அல்லாஹ் மகனை அழைத்து விசாரித்தான். மகன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். அந்த நேரத்தில்
சொர்க்கத்திற்கு செல்வதற்கு தந்தைக்கு ஒரே ஒரு நன்மை மட்டுமே தேவைப்பட்டது. மகனிடமோ
ஒரே ஒரு நன்மை மட்டுமே இருந்த்தது.
சூழ்நிலையை கவனித்த மகன் இறைவனிடம் மன்றாடினான். அல்லாஹ்வே என்னிடம் இருக்கிற
ஒரு நன்மையை எனது தந்தைக்கு கொடுத்து அவரையாவது சொர்க்கத்துக்கு அனுப்பு என்று கேட்பான்.
அல்லாஹ் கூறுவான் அவரை நான் சொர்க்கத்துக்கு
அனுப்புகிறேன். இவ்வாறு கேட்ட காரணத்திற்காக உன்னையும் நான் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்
என்று சொல்லி இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவான்.
இன்னொரு மனிதரை அல்லாஹ் விசாரிப்பான். அவருக்கு எந்த நன்மையும் இருக்காது. நீ
நரகிற்கு போ என்று சொல்லிவிடுவான். அந்த மனிதன் அல்லாஹ்வின் உத்தரவு வந்தவுடன் நரகை
நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்துவிடுவான். அல்லாஹ் அவனை அழைத்து நான் நரகிற்கு போ என்கிறேன்
நீ இவ்வளவு வேகமாக போகிறாயே ஏன் என்று கேட்பான் , அவர் சொல்வார். இறைவா அந்த உலகில்
தான் நீ சொன்னதை நான் கேட்கவில்லை. இந்த உலகிலாவது நீ சொன்னதை விரைவாக கேட்டு விட வேண்டும்
என்று செல்கிறேன் என்று சொல்வார். சரி நீ சொர்க்கம் செல் என்று அல்லாஹ் கூறுவான்.
இன்னொரு மனிதருக்கு நரகிற்கு செல்ல உத்தரவிடப்படும். அவன் திரும்பிப் பார்த்த
படியே செல்வான். ஏன் திரும்பி திரும்பி பார்க்கிறாய் என்று அல்லாஹ் கேட்பான். இறைவா!
உலகில் நான் பாவங்கள் செய்த போதெல்லாம் என்னை நீ மன்னித்திருக்கிறாய். இங்கும் மன்னித்து
விட மாட்டாயா என்ற ஆசையில் தான் திரும்பி பார்க்கிறேன் என்பார் . சரி நீ சொர்க்கத்திற்கு
செல் என்று அல்லாஹ் கூறிவிடுவான்.
இவ்வாறு மன்னிக்கும் கருணை எந்த அளவிற்கு இருக்கும் எனில் தப்ரானியில் ஒரு ஹதிஸ்
வருகிறது.
இபுலீஸ் தனக்கும் மன்னிப்பு கிடைத்து விடும் என ஆசைப்பட்டு தலையை உயர்த்திப்
பார்ப்பான்.
الطبراني =
حذيفة بن اليمان
والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ الجنَّةَ الفاجِرُ في دِينِه، الأَحمقُ في معيشتِهِ، والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ
الجنَّةَ الَّذي قد مَحشتْهُ النَّارُ بذنبِهِ، والَّذي نَفسي بيدِه ليَغفرَنَّ
اللهُ يومَ القيامةِ مَغفرةً يتطاوَلُ لها إبليسُ رجاءَ أن تُصيبَهُ
இந்த அரும் குணத்தின் அடிப்படையிலேயே அல்லாஹ் தனது கருணையை வெளிப்படுத்தவே சிறப்பான நாட்களை நமக்கு தருகிறான்.
சமீபத்தில் நம்மை கடந்து சென்ற பராஅத் இரவாகட்டும், ரமலான் மாதமாகட்டும். லைலத்துல் கத்ருடைய இரவாகட்டும். பெருநாட்களின் இரவாகட்டும்.
அரபா உடைய நாளாகட்டும், வெள்ளிக்கிழமையாகட்டும். பlயணத்தில் இருக்கும் போதாகட்டும். இவை அனைத்தும்
மக்கள் மீது தனது கருணையை பொழுய அல்லாஹ் செய்து கொண்ட ஏற்பாடுகளேயாகும்.
நம்முடைய கடமை என்ன வெனில் ?
நாம் செய்கிற காரியங்களில் அல்லாஹ்வின் அருள் கிடைத்து விட வேண்டும் என்ணத்தில்
வாழ்வதும் செயல்படுவதும் நமது கடமையாகும்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை மதித்து ஆசிரியர்களை மதித்து அல்லாஹ்வின் கருனையை தேடிக்
கொள்ள ஆசைப்பட்டால் நிச்சயம் கிடைக்கும்.
வியாபாரிக்ள் வாடிக்கையாளரின் நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் போது அல்லாஹ்வின்
கருணை கிடைக்கும்.
அதிகாரிகள் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் செயல்படும் போது இதனால் இறைவனின்
அருள் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் நிச்சயம் அந்த கருணை கிடைத்து
விடும்.
நம்மை மன்னிப்பதற்கும் சொர்க்கத்திற்கு அனுப்புவதற்கு பொருத்தமான ஒரு காரணம்
அல்லாஹ்வுக்கு கிடைத்து விட வேண்டும்.
நாம் எத்தகைய நிலையில் இருந்தாலும் இதை புரிந்து கொண்டு அந்த கருணை மழைக்குள் நனைந்து விட வேண்டும்.
جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال: (إن لربكم
عز وجل في أيام دهركم نفحات، فتعرضوا لها، لعل أحدكم أن تصيبه منها نفحة لا يشقى
بعدها أبداًً) رواه الطبراني
அதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.
இப்போது
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற வாழ்க்கையை பற்றிய மமதை அல்லது மேலெண்ணம் நம்மை ஏமாற்றி
விடக் கூடாது.
ا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا
تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
(5)
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் சுகம் அல்லது மதிப்புதான் நம்மை அல்லாஹ்வின் கருன்ணையை அலட்சியப்படுத்த தூண்டுகிறது.
தினசரி
காலை எழுந்த்தும் ஒரு அல்ஹம்துலில்லாஹ் சொல்ல தோன்றவில்லை எனில் நமது காசு பணம் அல்லது
நமது ஆரோக்கியம் நம்மை ஏமாற்றி விட்ட்து என்றே பொருளாகும்.
ஒரு
பெரிய பணக்காரர் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார்.
சில ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு அவர் வசதியானவர். அங்கு ஒரு பெரிய ஆலிமும் இருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
அந்த பணக்காரையும் அந்த ஆலிமையும் சந்திக்க வைத்தார்கள். பணக்கார்ரை சந்தித்த சில நொடிகளில்
ஆலிம் அவரிடம் விடை பெற்று வந்து விட்டார். ஏற்பாட்டாளர்கள் ஆலிமிடம் என் ஹஜ்ரத் அவரிடமிருந்து
சட்டென வந்து விட்டீர்கள் என்று கேட்டனர். ஹஜ்ரத் சொன்னார். நான் அவரிடம் உங்கள் பணிகள்
எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டேன். ஏதோ நடக்கிறது என்று அவர் கூறினார்.
ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர்ந்த் அவர் ஒரு அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வில்லை
அதனால் எனக்கு அவரிடம் பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை என்று கூறினார்.
நாம்
அல்லாஹ்வுடைய கருனையை உணர்ந்து கொள்ளாமல் போவது
மமதையாகவும் நம்மிடம் இருப்பவைகளை பற்றி நாம் பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அமைந்து
விடும்.
அருமையானவர்களே
இது மிக ஆபத்தமான ஏமாற்றமாகும்.
அல்லாஹ்
நம்மை பாதுகாப்பானகா!
வாழ்க்கை
எப்போதும் ஒரே போங்கில் இருப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வைவும் அவனது
கருணையையும் நினைவு கொள்வோர் – வெற்றி பெறுகிறார்கள்.
இன்று
இமாம் புகாரி எந்த அளவு மதிக்கப்படுகிறார்.
? அவருடைய வாழ்வையும் நமது மரியாதையையும் நாம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம். அவர்
அளவுக்கு மரியாதைக்குரியவர்களா நாம் ?
அவருக்கு
என்ன நிலை ஏற்பட்டது என்பதை பாருங்கள்!
அல்லாஹ்வின்
வேதத்திற்கு அடுத்து அவருடை நூல் மதிக்கப்படுகிறது.
புகாரியில்
ஒரு செய்தி இருந்தால் மக்கள் அதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
இன்று
இந்த அளவில் மதிக்கப்படுகிற இமாம் புகாரிக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் பெரிய மரியாதை
கிடைத்தது.
அவர்
அவருடைய இறுதி நாட்களில் நைஸாபூருக்கு வந்த போது 8 ஆயிரம் குதிரைகள் அவரை வரவேற்றன.
பல்லாயிரக்கணக்கானோர் அவரை காண திரண்டு வந்தனர்.
ஆனால்
அவருடைய ஒரு கருத்து அங்கிருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான போது நைசாபூரை விட்டு அவர்
ரகசியாமாக இரவில் வெளியேற நேர்ந்தது.
அங்கிருந்து
அவர் தனது சொந்த ஊரான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகருக்கு வந்தார் . அங்கும் மக்கள்
அவருக்கு ஏராளமான வரவேற்பு தோரணங்களை கட்டி வரவேற்றனர்.
ஆனால்
சில நாட்களில் புகாராவின் ஆளுநர் காலித் தன் மகன்களுக்கு பாடம் நட்த்த வீட்டும் வருமாறு
அழைத்தார். இமாம் புகாரி அதை மறுக்கவே அவர் எதிரியானார்,
தனது
சொந்த ஊரான புகாராவை விட்டு வெளியேறி அவர் சமர்கண்ட நகரில் குடியேற நினைத்தார். அந்த
நகரம் அவருக்கு பிடித்தமான நகரம்.
ஆனால்
சமர்கண்டில் இருந்தவர்கள் அவர் அங்கு வரக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள்.
இருந்த
இட்த்திலிருந்து புறப்பட்டாகி விட்டது. செல்ல வேண்டிய இட்த்திற்கு அனுஅதியும் கிடைக்க
வில்லை.
நடுவழியில்
தனது உறவினர்களின் வீட்டில் கர்தன்க் என்ற இடத்தில் அவர் தங்கினார்.
தனது
நிலை அவருக்கு மிகவும் துயர் அளித்தது. யாரிடமும்
அவர் புலம்ப வில்லை. தனது பெருமைகளை சொல்ல கெஞ்சவும் இல்லை.
அவர்
தங்கியிருந்த அந்த சின்ன ஊருக்கும் ஆட்சியாளர்களின் தூதர் வந்து சேர்திருப்பதாக இமாம்
புகாரி அறிந்தார்.
அல்லாஹ்விடம்
முறையிட்டார்.
ربي إني ضاقت علي الأرض فاقبضني
இறைவா!
பூமி எனக்கு மிகவும் நெருக்கடியாகிவிட்டது. நீ என்னை எடுத்துக் கொள் என்று உருகினார்.
அந்த
ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து புறப்ப ஆயத்தமானார்.
அந்த
காட்சியை கண்ட அவரது மாணவர் غالب بن جبريل கூறுகிறார்.
جاء رسول إلى سمرقند بإخراجه، فلما وافى تهيأ
للركوب، فلبس خفيه وتعمم، فلما مشى قدر عشرين خطوة
இது
பற்றி செய்தி கிடைத்தவுடன் இமாம் புகாரி அடுத்த பயணத்திற்கு தயாரானார். தனது காலுறைகளை
அணிந்து கொண்டார். தலைபாகை கட்டிக் கொண்டார். ஒரு இருபது அடி நடந்திருப்பார். அதற்கு
சரிந்து விழுந்தார். இறப்பெய்தினார்.
எத்தகைய
உயர்ந்த - செல்வாக்கு மிக்க மனிதருக்கு என்ன
நிலை பாருங்கள்?
ஆனால் அல்லாஹ் இமாம் புகாரியை கை விட வில்லை.
அவருடைய
அந்தஸ்த்தை உடனேயே மக்களுக்கு காட்டினான்.
அவர்
நல்லடக்கம் செய்யப் பட்ட இட்த்திலிருந்து ஒரு அலாதியான நறுமணத்தை வெளிப்படுத்தினான்.
பல நாட்கள் அது நீடித்தது.
غالب بن جبريل கூறுகிறார்.
فلما دفناه فاح من تراب قبره رائحة غالية فدام على ذلك أياماً،
இதை அறிந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.
பலரும்
இமாம் புகாரியின் கபருடைய மண்ணை எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். நாங்கள் இப்படியானால்
கப்ரு வெளியே தெரிந்து விடும் என்று பயந்து அந்த கப்ரை சுற்றி மக்கள் மண்ணை எடுக்க
முடியாத வாறு ஒரு மூங்கில் கூடை செய்து மூடி வைத்தோம்.
فجعل الناس
يختلفون ويتعجبون. وأما التراب فإنهم كانوا يرفعون عن القبر حتى ظهر القبر
அவரை எதிர்த்தவர்கள் அவருடைய மண்ணறைக்கு வந்து அந்த அதிசயத்தை பார்த்து தாங்கள் தவறு செய்து விட்ட்தாக மனம் வருந்தினார்கள்.
وخرج بعض مخالفيه إلى قبره وأظهر التوبة والندامة.
இவற்றை எல்லாம் விட இமாம் புகாரிக்கு அல்லாஹ் செய்த பெரிய கிருபை என்ன வெனில் ?
கதீப்
அல் பக்தாதி கூறுகிறார்.
அப்துல்
வாஹித் பின் ஆதம் எனும் அறிஞர் கூறினார்.
ஒரு
நாள் கனவில் நான் பெருமானாரை பார்த்தேன். நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீகிறீர்கள் என்று
கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள் புகாரியின் வருகையை எதிர்பார்த்திருப்பதாக சொன்னார்,
நான்
உடனே விழித்தெழுந்து விசாரித்த போது நான் கனவு கண்ட அதே நாளில் இமாம் புகாரி வபாத்தாகி
இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறுகிறார்.
وروى الخطيب البغدادي
عبد الواحد بن آدم الطواويسى قال: رأيت
النبي صلى الله عليه وسلم في النوم ومعه جماعة من أصحابه، وهو واقف في موضع فسلمت
عليه فرد السلام. فقلت: ما وقوفك يا رسول الله؟ فقال: أنتظر محمد بن إسماعيل
البخاري
இமாம்
புகாரியின் இந்த இறுதி நேர வரலாறு நமக்கு சொல்லும் அழுத்தமான பாடம்.
நாம்
இப்போது இருக்கிற நிலை எப்போதும் தொடரும் என்பதில்லை நாம் எவ்வளவு நல்லவராக மக்களுக்கு
பயனுள்ளவராக இருந்தாலும் சரி
எனவே
நம்மிடமிருக்கிற எதை வைத்தும் நாம் பெருமிதம் கொண்டு அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
அல்லாஹ்வின்
கருணை பார்வையை எப்போதும் எதிர்பார்த்தவர்களாகவே இருக்க வேண்டும்.
பராஅத்
ரமலான் லைலத்துல் கத்ர் போன்ற நல்ல நாட்கள் அல்லாஹ்வின் கருனையை நமக்கு கொண்டு வந்து
சேர்க்கிற நாட்களாகும்.
நாம்
நமது வாழ்க்கை கொடுத்திருக்கிற வசதி வாய்ப்புக்களில் அல்லது பாதுகாப்பில் மதி மயங்கி
இந்த கருணை மழையில் நனைந்து விடாமல் இருந்து விடக் கூடாது.
அல்லாஹ்வின்
அருள் பொழியும் நாட்களையும் நேரங்களையும் நாம் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.
நாம்
எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வின் கருணை பொழியும் நாட்களை உள்ளார்த்தமாம பயனப்டுத்திக்
கொள்ள தயாராக இருப்போம்
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!