அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த அற்புதமான ஆற்றல் பேச்சு
மனிதன் என்றாலே பேசும் மிருகம் (ஹயவான் நாதிக்) என்று விளக்கம் சொல்லப்படுவதுண்டு.
பேச்சு திறன் மற்ற பிராணிகளுக்கும் உண்டு என்று குர் ஆன் கூறுகிறது.
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ ۖ وَقَالَ يَا أَيُّهَا
النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ ۖ إِنَّ
هَٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ (16)
குறிப்பாக
பறவைகளுக்கு திட்டமிட்ட பேச்சு வடிவம் இருக்கிறது என்று ஜெரால்ட் தீன் என்ற அறிஞர்
கூறுகிறார்.
இதில்
கருத்துக்களை பேசும் திறன் மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது,
அது
தான் மனித வாழ்வை மிக அழகானதாக நாகரீகமானதாக காட்டுகிறது.
மனிதனுடைய
பேசும் திறனுக்கு இன்னொரு பலன் அவன் தனது சொல்வான்மையால் பல இலட்சம் பேரை கட்டுப்படுத்துகிற
ஆற்றலை பெறுகிறான்.
நபிமார்களில் சுஐப் அலை அவர்களை நபிமார்களின் பேச்சாளர்
என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மக்காவின்
தலைவர்களில் சுஹைல் பின் அம்ர் என்பவர் முஸ்லிம்களின் மிகச் சிறப்பான பேச்சாளராக இருந்தார்.
ஒரு
தடவை அவர் எதிரியாக இருந்த நேரத்தில் மதீனாவில் வசமாக கிடைத்தார். இவருடைய முன் பறிகளை
நான் உடைத்து விடட்டுமா என்று உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்
என்னை நம்பி வந்தவருக்கு நான் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பின்னர் “ உமரே இவரது நாவாற்றல் நமக்கு உதவும் என்றார்கள்.
அது
போலவெ பின்னால் அவர் இஸ்லாமை தழ்வினார். பெருமானார் (ஸல்) அவரக்ள் மரணமடைந்த போது மக்கா
நகரம் அந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. மக்காவின் ஆளுநராக இருந்த
அத்தாப் பின் அஸீத் வீட்டிற்குள் சென்று உட்கார்ந்து விட்டார். அந்த நெருக்கடியான நேரத்தில்
சுஹைல் பின் அம்ரு ரலி அவர்கள் தான் மக்கா மக்களிடம் பேசி பெருமானாரின் மரணத்தை ஏற்றுக்
கொள்ளும் மனோ நிலையை கொண்டு வந்தார். .
பேச்சின்
,மகத்துவத்தை உணர்ந்து கொள்ள இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள்
தனது சிறிய தந்தை அபூதாலிபிடம்
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தைகள்
يا عمَّاهُ، واللهِ لَو وَضعوا الشَّمسَ في يميني والقمرَ في شمالِي
علَى أن أتركَ هذا الأمرَ حتَّى يُظهرَه اللهُ أو أهلِكَ فيه ما تركتُهُ.
அதே போல பெருமானார் (ஸல்0 அவர்கள் இறந்த போது அபூபக்கர் ரலி அவர்கள் சொன்ன வார்த்தைகள்
خطبة أبي بكر
الصديق رضي الله عنه يوم
وفاة النبي ﷺ، وهي: "أما بعد، فمن كان منكم يعبد محمداً فإن محمداً قد مات، ومن كان يعبد الله
فإن الله حي لا يموت".
ஆதனால் தான் பெருமானார்
(ஸல்) அவர்கள்
- إنَّ مِن البيانِ لَسِحْرًا، أو إنَّ بعضَ البيانِ لَسِحْرٌ.
என்றார்கள் .
இதன் பின்னணியை இப்னு
உமர் ரலி விவரிக்கிறார்.
يُخبرُ
عبدُ اللهِ بنُ عمَرَ رضِيَ اللهُ عنهما أنَّهُ جاءَ رَجُلانِ مِنْ جِهةِ
المَشرِقِ من المدينةِ المنوَّرةِ، وكان سُكنى بني تميمٍ مِن جِهةِ العِراقِ، وهما
الزبْرقانُ بنُ بَدرٍ التَّميميُّ وعَمرُو بن الأهتَمِ التميميُّ رَضِيَ اللهُ
عنهما، وقَدِمَا عام تِسعٍ مِنَ الهِجرةِ وأسلَما، فخَطَبا خُطبتَينِ بليغَتَينِ،
فَعَجِبَ النَّاسُ مِنهُما لبَيانِهما، فقال رسولُ اللَّه صلَّى اللهُ عليه
وسلَّم: «إنَّ مِنَ البَيانِ لَسِحرًا»،
முஸ்லிம்களின் வரலாற்றில் மகத்தான சாதனை படைத்த சொற்பொழிவாளர்கள் நிறைய இருக்கிறார்கள்
.
எதிரிகளின்
நடுப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு முஸ்லிம் வீர்ர்களிடம் அவர் பேசினார் .
أيها الناس، أين المفر؟
البحر من ورائكم، والعدو أمامكم، وليس لكم والله إلا الصدق والصبر، واعلموا أنكم
في هذه الجزيرة أضيع من الأيتام على مائدة اللئام، وقد استقبلكم عدوكم بجيشه
وأسلحته، وأقواته موفورة، وأنتم لا وزر لكم إلا سيوفكم، ولا أقوات إلا ما
تستخلصونه من أيدي عدوكم، وإن امتدت بكم الأيام على افتقاركم، ولم تنجزوا لكم
أمرًا ذهبت ريحكم، وتعوَّضت القلوب من رعبها منكم الجراءة عليكم، فادفعوا عن
أنفسكم خذلان هذه العاقبة من أمركم بمناجزة هذا الطاغية فقد ألقت به إليكم مدينته
الحصينة، وإن انتهاز الفرصة فيه لممكن، إن سمحتم لأنفسكم بالموت.
மக்களே,
தப்பிக்கும் வழி எங்கே?
கடல் உங்களுக்குப் பின்னால் இருக்கிறது, எதிரி உங்களுக்கு முன்னால்
இருக்கிறான், அல்லாஹ்வின்
மீது ஆணையாக, உங்களிடம்
சத்தியத்தையும் பொறுமையையும் தவிர வேறொன்றும் இல்லை. இந்தத் தீவில், துன்மார்க்கரின் மேசையில்
அமர்ந்திருக்கும் அனாதைகளை விடவும் நீங்கள் மோசமான நிலையில்
இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் எதிரி
தனது படையுடனும் ஆயுதங்களுடனும் உங்களை எதிர்கொண்டுள்ளான், அவனது உணவுப் பொருட்கள்
ஏராளமாக உள்ளன,
ஆனால் உங்கள் வாள்களைத் தவிர உங்களுக்கு வேறு ஆதரவும் இல்லை, உங்கள் எதிரியின் கைகளிலிருந்து
நீங்கள் கைப்பற்றுவதைத் தவிர வேறு உணவுப் பொருட்களும் இல்லை. உங்கள் வறுமையில் நாட்கள்
நீடிக்கும் போது,
உங்களுக்காக நீங்கள் எதையும் சாதிக்காவிட்டால், உங்கள் பலம் போய்விடும், மேலும் உள்ளங்கள் உங்களைப்
பற்றிய பயத்திற்குப் பதிலாக எதிகளுக்கு உங்களுக்கு எதிரான துணிச்சல் கூடிவிடும். எனவே, இந்த கொடுங்கோலனை எதிர்கொள்வதன்
மூலம், இந்த தோல்வியை
உங்களிடமிருந்து விரட்டியடியுங்கள், ஏனெனில் அவனது அரணான நகரத்தின் பின்னணியில்
அவன் உங்கள் முன் நிற்கீறான். நீங்கள் இறக்க துணிந்து அவனிடம் உள்ள வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொள்வதே சிறப்பாகும்.
ஒரு
நெருக்கடியான போர்க்களத்தில் பெரும் எதிரிப்படையை வென்றெடுக்க முஸ்லிம் வீர்ர்களுக்கு
இந்த பேச்சு பெறும் உந்துதலாக இருந்தது.
முஹ்யித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி தனது 30 ஆண்டு கால சொற்பொழிவுகளின் மூலம் மகத்தான் சீர் திருத்தங்களை
செய்தவ்வர் ஆவார். ஆயிரம் வருடங்களை கடந்தும் அவர் பாராட்டப் படுவதில் அவருடைய சொற்பொழிவுகளுக்கு
முக்கிய பங்குண்டு
இது
போல வரலாற்றில் பலருக்கு அவர்களது பேச்சாற்றல் பெரும் துணையாக இருந்து சாதிக்க தூண்டியது.
மகா
அலெக்ஸாண்டர்
ஹிடல்ர்
முசோலினி
அண்ணாதுறை
கலைஞர்
என அந்த வரிசை நீளும்.
இவ்வளவு
மகத்தான திறன் கொண்ட பேச்சாற்றலை நல்ல விசயங்களை சரியாக பேசுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
அல்லாஹ்
குர் ஆனில் இறையச்சத்திற்கு அடுத்த படி சரியாக பேசுங்கள் என்று கூறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا
سَدِيدًا (70) يُصْلِحْ
لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ
நாம்
ஒன்றை பேசினால் அது உண்மையாக இருக்கும்
நாம்
ஒன்றை பேசினால் அது சருயாக இருக்கும்.
நான்
ஒன்றை பேசினால் அது பயனுள்ளதாக இருக்கும்.
என்ற
தரத்தில் நமது பேச்சுக்கள் இருக்க வேண்டும்
இப்போதும் கூட கடந்த தேர்தல் களத்தின் போது பயன்ற்ற்ற வார்த்தைகளை சிலர் பேசியது எவ்வளவு தூரம் எடுத்து காட்டப்படுகீறது பாருங்கள்!
அர்த்தமுள்ள விசயங்கள் பேசுவதற்கு இல்லையா ? பேசாமல் இருக்க பழக வேண்டும்.
அதுவும்
ஒரு சிறந்த மனித பன்பாகும்.
قول النبي ﷺ: "من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرًا أو
ليصمت".
قال علي بن أبي طالب رضي الله عنه: "بكثرة
الصمت تكون الهيبة".
أبو الدرداء: "تعلموا الصمت كما تعلمون الكلام، فإن الصمت حلم عظيم
தேவையற்ற
பேச்சை பெருமானாரிடமும் தவிர்த்துக் கொண்டார்கள் மற்றவர்களிடமும்.
அவர்கள் தொண்டர்களாக இருந்த போதும்
அவர்களது முன்னிலையில் தொண்டர்கள் திரண்ட போதும் மெளனமே அவர்களது இயல்பாக இருந்தது;
பெரும் சட்ட வல்லுனரான பேராசான் நவவி மிக குறைவாகவே பேச்வார்
وكان النَّوويُّ غزيرَ الدَّمعةِ، كثيرَ الصَّمتِ، حافِظًا لسانَه
أشَدَّ الحِفظِ،
சிலர் மழை காலத்தில் தவளையை போல பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மரியாதையே
இருக்காது.
. தேவையற்ற பயனற்ற வார்த்தைகளை பேச மாட்டேன் என்று தீர்மாணம் எடுத்துக் கொணால்
பேசுவது சிரம்மாக தோன்றும். பேச மனம் வராது,
அத்தைகயோர் அதிகமாக சிந்திப்பார்கள்
வடநாட்டில் ஒரு மாணவன் ஒரு உஸ்தாதிடம் வந்து சேர்ந்தார். நீ அதிகம் பேசாதே என்று
உஸ்தாத் உத்தரவிட்டார். அந்த மாணவர் வெளியே யாரிடமும் பேச மாட்டார். அவரை ஊமை என்று
மக்கள் நினைத்தனர்.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலில் தப்ஸீர் நடத்துமாறு உஸ்தாத் அவருக்கு
உத்தரவிட்டார்.
அவர் பள்ளிவாசலி அற்புதமாக பேசினார். அப்போது வியந்து போன் மக்கள் சொன்னார்களாம்
நம்முட்டய உஸ்தாதின் கராமத்தை பார்த்தீர்களா அவர் ஊமையை பேச வைத்து விட்டார்.
வள்ளுவன் சொல்லுவான்
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
எல்லாவற்றிற்கும் மேல் அதை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான்
مَا يَلْفِظُ مِنْ
قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ " [ق: 18
பெருமானார்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
عن أبي هريرة رضي اللّه عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: (من كان
يؤمن بالله واليوم الآخر فليقل خيرًا أو ليصمت) [رواه البخارى ومسلم].
இதற்கு
விளக்கம் சொல்லும் இமாம் நவ்வி கூறுகிறார். பேசினால் நன்மை கிடைக்கும் என்றால் பேசு!
இல்லை என்றால் மெளனமாக இரு!
உங்களது
உயர்ந்த பணியாளர்களை பற்றி அந்தஸ்த்து குறைந்தவர்களிடம் பேசாதீர்கள்
உங்களது
சொந்த குறைகளை பாவங்களை பற்றி உங்களது மனைவி நண்பர்களிடம் பேசாதீர்கள்.
பேசிப்
பயனில்லாத எதையும் பேசாதீர்கள்.