வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 05, 2026

தொடரட்டும் பத்று

 திட்டமிட்டு ரமலான் மாதத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுத்திருக்கின்றன.

ஈரானை தாக்குவதறகு எந்த நியாயமும் அமெரிக்காவிடம் இல்லை.

ஈரான் அனு ஆயுதம் தயாரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இது அப்பட்டமான ஒரு அவதூறு.

ஈரானிடம் அனு ஆயுதங்கள் இல்லை என் The Director General of the International Atomic Energy Agency யின் தலைவர் Rafael Mariano Grossi தெரிவித்திருக்கிறார்.

there has been no evidence of Iran building a nuclear bomb

இத்தனைக்கும் பிறகு ஈரான் இந்த முரட்டு பயலோடு எதற்கு வம்பு என்று கருதி அமெரிக்காவோடு ஒமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஐந்து சுற்று பேச்சு வார்த்தை முடிந்து ஆறாவது சுற்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

நீ எதற்காகவும் அனுவை  பயன்படுத்த கூடாது என்று அமெரிக்கா ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு மிரட்டி வந்தது. மின் உற்பத்தி போன்ற ஆக்ககரமான பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று மட்டுமே ஈரான் கூறிவந்தது

பேச்சு வார்தை நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது என்று ஓமன் கூறுகிறது. பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்று அமெரிக்காவும் கூற வில்லை.

இதற்கிடையில் திடீரென் அமெரிக்காவின் ஆசியோடு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ஈரானை தாக்கியது.

ஈரானிய ஷியா இஸ்னா அஸரிய்யா பிரிவின்  மத தலைவரான அலீ ஹுசைன் அல் காமினி படுகொலை செய்யப் பட்டார். அவர் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டிருக்காமல் ராணுவ தலைவர்களோடு காலை 9 மணியளவில் ஒரு மீட்டிங்கில் இருந்த போது அந்த இடத்தின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. 88 வயதில் இறைவா எனக்கு ஷஹாதத்தை கொடு என்று பிரார்த்திக் கொண்டிருந்தவருக்கு ரமலான் மாதத்தில் அந்த வாய்ப்புக் கிடைத்தது.  

இந்த தாக்குதலும் ஈரானிய மத தலைவரை படுகொலை செய்ததும் சகித்துக் கொள்ள முடியாத மிக அப்[பட்டமான ஒரு அக்கிரமம் ஆகும்.

கொடூரமான தாக்குதல்கள்

இந்த தாக்குதல் மூலம் மனித குலத்துக்கு மிக மோசமான அழிவுகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் இழைத்து வருகின்றன.

ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தின் மீது துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் முதல் நாளில் 45 பெண் குழந்தைகள் கொல்லப் பட்டார்கள். மொத்தமாக கொல்லப் பட்ட 180 சிறுமிகளின் நல்லடக்க காட்சிகளை இரான் வெளியிட்ட போது உலகே உரைந்து போனது.

அதே போல இந்தியாவில் விசாகபட்டினத்தில் ஒரு பயிற்சியை முடித்துக் கொண்டு இலங்கைக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் போர்க் கப்பல் ஒன்றையும் அதில் பயணம் செய்த சுமார் 100 கப்பல் படை வீரர்களுக்கு எந்த எச்சரிக்கையையும் கொடுக்காமல் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் சுட்டு வீழ்த்தியுள்ளதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா இதற்கு உடனடியாக எந்த விளைவையும் வெளிப்படுத்த வில்லை. அதனால் இந்த கப்பலின் நடமாட்டத்தை இந்தியா தான் காட்டிக் கொடுத்ததா என்ற ஒரு அவலட்சணமான குற்றச் சாட்டு சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டிருக்கிற நிலையில் இதில் தப்பித்துக் கொண்டவர்களுக்கு சிகிட்சை கொடுத்து இலங்கை நல்ல பெயரை சம்ப்தாத்தித்துக் கொண்டுள்ளது.

ஈரான் எதையும் முன்னறிவிப்பு செய்து விட்டு செய்கிற்து. அது வீரனுக்கு அழகு, அதுவே நீதி.

நேற்று இரானின் மேஜர் ஜெனரல்களில் ஒருவரான் யஹ்யா ரஹீம் சபாவி என்பவர் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவுக்கு பகிரங்கமாக அறிவிப்புக் கொடுக்கிறார். உங்களுடைய இருப்பிடம். நீங்கள் செல்லும் இடங்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்து விட்டன ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். திடீரென சொல்லாமல்  தாக்குகிற பழக்கம் எங்களுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார்.   

ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்கள் கண்மண் தெரியாமல் அப்பாவிகளை கொன்று குவித்து வருகின்றன.

இது இஸ்ரேல் என்ற நாடு உருவானதிலிருந்து நடந்து வருகிற கொடூரம் அல்ல; இஸ்ரேல் என்ற இனத்தின் தோற்றத்திலிருந்தே உண்டான கொடூர இயல்பாகும்\

திருக்குர் ஆனை விட இதை யார் சரியாக சொல்ல முடியும்?

திருக்குர் ஆனில் அல்லாஹ் யூதர்களின் கொடூர இயல்பை குறித்து நேரடியாக எச்சரிக்கிறான்.

அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் அல்ல அதை விட கொடுமையானவர்கள்.

ثُمَّ ‌قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً 

 أَوْ أَشَدُّ قَسْوَةً ﴾ وَالْمَعْنَى: بَلْ هِيَ أَشَدُّ قَسْوَةً

 

ரமலானில் தாக்குதல் நடத்துவது அவர்களின் கல்நெஞ்சத்துக்கு அடையாளமே!

அவசியமே இல்லாமல் அமெரிக்காவின் போர் ஒத்திகைகள் கடந்த இரண்டு மாத காலமாக நடந்து கொண்டிருந்தது.

ஜனவரி 18 ம் தேதி அமெரிக்காவின் விமானந் தாங்கி கப்பலான ஆப்ரஹாம் லிங்கன் பாரசீக வளைகுடா பகுதிக்கு சென்று விட்டது. அதே கால கட்டத்தில் அரபு நாடுகளில் இருந்த தன்னுடை ரானுவ வீரர்களையும் அமரிக்கா திருப்பி அழைத்துக் கொண்டது.

போர் தொடங்கப் போகிறது என்று உலகமே காத்துக் கொண்டிருந்த நிலையில் அப்படி எதுவும் நடக்க வில்லை என்பது உலகத்திற்கு நிம்மதி அளித்தது.

இந்த நிலையில் தான் சரியாக ரமலான் மாத்ததை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கியுள்ளன.

இது இரான் மீதான தாக்குதல் அல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தாக்குதலாகும்.

இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகும் நிலை குலைந்து போயிருப்பதை இப்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக அரபு நாடுகள் சவூதி முதல் ஓமன் வரை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

அரபு நாடுகள் மீது தாக்குதல்

அரபு நாடுகளில் இருக்கிற அமெரிகக் நிலைகளை ஈரான் தாக்குவது தவிர்கக் முடியாதது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாது, அது வெகு தூரத்தில் இருக்கிறது. ஆனால் அது அரபு நாடுகளில் பல இடங்களிலும் தன்னுடைய பெரிய  ரானுவ தளங்களை வைத்திருக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் அக்கிரமத்திற்கு பதிலடி கொடுக்க அதன் தளங்களை தான் குறி வைக்க முடியும் ?

இந்த நியாயத்தை அரபு நாடுகள் கூட ஒத்துக் கொண்டிருக்கின்றன.

அதனால் தான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு தங்களது நாடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று அவை மறுத்து விட்ட நிலையில் கூட ஈரானின் பதிலடி தாக்குதலை அவை பெரிதாக எதிர்கக் வில்லை.

அவை ஈரானின் நியாயத்தை ஓரளவில் புரிந்து கொண்டிருக்கின்றன் என்பதே இதன் பொருளாகும்.

இஸ்ரேலின் மோசடி

இதற்கிடையே சவூதி துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் மக்கள் வசிக்கிற பகுதிகளுக்கு அருகே சில குண்டுகள் விழுந்துள்ளன. சவூ தியின் மிகப் பெரிய எண்ணை கட்டமைப்பான  ஆரெம்கோ நிறுவனத்தின் ஒரு கிளை மீது குண்டு வீச்சு நடந்துள்ளது.

இது தற்போதைய சூழ் நிலையை பயன்படுத்தி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இப்போது ஆராயப் பட்டு வருகிறது.

ஏனெனில் சமீபத்தில் சைப்ரஸ் நாட்டின் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடை பெற்றது. நேற்று இங்கிலாந்து நாடு இது பற்றி ஆராய்ச்சி செய்து இந்த குண்டு ஈரானில் இருந்து வீசப்பட வில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.

எனவே அரபு நாடுகளின் வளங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் இஸ்ரேலின் மறைமுக தாக்குதலாக இருக்கலாம்

அரபு நாடுகள் இதை ஆய்வு செய்ய வேண்டும்.

சர்வதே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன ஒரு கவலை என்ன வென்றால்?

அரபு நாடுகளிடம் இவற்றை கண்டறிந்து கொள்கிர வசதி இருக்கிறதா என்பதும் ஒரு வேளை இவை அமெரிகக் இஸ்ரேலின் கூட்ட சதி என்று அறிந்து கொண்டாலும் அவர்கள் அதை வெளியே சொல்வார்களா என்பதுமாகும்.

அரபு நாடுகளுக்கு பாடம்

ஆனால் ஆரபு நாடுகளுக்கு ஒரு அழுத்தமான பாடம் இதில் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா பாதுகாப்பு தரும் என்று நம்பி காலம் காலமாக அவர்களுடைய வருமானத்தில் கனிசமானதை அமெரிக்க ராணுவத்திற்காக செலவ்ழித்திருக்கிறார்கள். கத்தார் நாட்டில் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளம் இருக்கிறது. பஹ்ரைன் நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய கப்பல் படை இருக்கிறது. இது வல்லாமால் சவூதி அரேபியா தான் அமெரிககவிடமிருந்து ரானுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்குகிற நாடாகும். 2008 லிருந்து 2015 க்குள் 62 பில்லியன் டாலருக்கு சவூதி அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய தகவலாகும்.

அமெரிக்காவிற்கும் சவூதிக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே இந்த உறவு பலப்பட்டது 1933 முதல் ஆகும். 1932 ல் தான் அரபு நாட்டில் வஹாபிஸ சவூதுகளின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகள் இவ்வளவு நம்பி இடம் கொடுத்தும் இப்போது அரபு நாடுகளுக்கு இரான் மூலம் பகிரங்கமாக எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருக்கிற நிலையிலும் கூட அமரிக்காவால் அரபு நாடுகளை பாதுகாக்க முடியவில்லை.

இஸ்ரேல் எப்படி பாதுகாக்கப்ப் படுகிறது என்பதை என்பதை அரபு நாடுகள் கவனிக்க வேண்டும். அமெரிக்க எப்படி கை கழுவி விட்டது என்பதையும் அரபு நாடுகள் நினைவில் வைக்க வேண்டும்.

இஸ்ரேலுடனும் கூட அரபு நாடுகள் நல்ல நட்பில் தான் இருக்கிறார்கள். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக அரசு இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவில் இருக்கிறது.

நீங்கள் துபாய் விமான நிலையத்திலிருந்து புறப்படுகிற அல்லத் வந்து சேருகிற விமானங்களின் பட்டியலை ஒரு 3 மணி நேரத்திற்கு கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்  உலகின் மற்ற எந்த நாட்டிற்கு செல்கிற விமானங்களை விடவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்கிற விமானங்களே அதிகமாக இருப்பதை காணலாம்.

அரபுகளின் இந்த இணக்கமும் தொடர்பும் இப்போது அவர்களுக்கு தகுந்த பாடத்தை தந்து கொண்டிருக்கின்றன.

என்வே அரபு நாடுகள் ஈரான் வீசுகிற குண்டுகளுக்காகவும் அதன் ட்ரொன்களுக்காகவும் தங்களுடைய தலையில் தாங்களே அடித்துக் கொள்வது தான் சரியானது.

இஸ்ரேலோ அதன் ஆதரவாளர்களோ ஒரு போதும் உடன்படிக்கைகளை பாதுகாகக் மாட்டார்கள்

இது திருக்குர் ஆன் வழங்கியிருக்கிற அறிவு.

فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ ‌قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ [الْمَائِدَةِ:13]

இஸ்லாமிய வரலாற்றில் மிக மோசமான அனுபவங்கள் இருக்கின்றன.

இந்த உலகில் இனி வரும் காலங்களில் கியாமத் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரலாறே உட் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் அதை கவனித்தால் போதுமானது.

ஹிஜ்ரீ 5 ம் வருடம் அரபு நாட்டில் அரபுகளை அண்டி வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிக பெரும் படையை திரட்டினார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் அப்படையில் இருந்தார்கள். முஸ்லிம் அல்லாத அரபு குலங்கள் அனைத்தும் அதில் பங்கேற்றன. அல் அஹ்சாப் கூட்டணிப் படைகள் என்ற தலைப்பில் திருக்குர் ஆன் ஒரு அத்தியாயத்தை இது விவகாரத்தில் பேசுகிறது.

சில தர்ஜமாக்கள் இதற்கு பொருத்தமாக தலைப்பிட்டுள்ளார்கள் . “சதிகார அணியினர்”.

அப்போதும் செழிப்பாக  வாழ்ந்த யுதர்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை தருவதாக ஆசை வார்த்தை கூறி அரபு மக்களை திரட்டியிருந்தனர். திரண்டது பெரும்பாலும் அரபுகளே என்ராலும் இஸ்லாத்திற்கு எதிராக அவர்களை  திரட்டியது யூதர்களே என்பது கவனிக்க தக்கது.  

ஒரு வேதனை.

அப்போதும் அண்டி வந்தவர்களுக்கு ஆதரவாக மக்காவின் குறைஷிகளே துணை நின்றன. (இதுவும் அரபுகள் கவனிக்க தக்கதாகும் ). குறைஷிகள் தலைமை ஏற்ற அந்த தாக்குதல் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தது என்பதை திருக்குர் ஆன் காட்டுகிறது.

 إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠ (10) هُنَالِكَ ٱبۡتُلِيَ ٱلۡمُؤۡمِنُونَ وَزُلۡزِلُواْ زِلۡزَالٗا شَدِيدٗا (11)

 

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உலுக்கி எடுக்கப் பட்டனர்.

இந்த ஒரு வசனம் அன்றைக்கு ஏற்பட்டிருந்த அச்சம் தரும் சூழ்நிலையை விவரிக்க போதுமானது.

அன்று அவர்களை நேரடியாக எதிர் கொள்ள முடியாத சூழலில்  அல்லாஹ் முஸ்லிம்களுக்கு தன்னுடைய தரப்பிலிருந்து வெற்றியை கொடுத்தான். கடும் பனிக் காற்றை அனுப்பினான். எதிரிகள் சின்னாபின்னாமி ஓடினர்.

காரணம் அவர்களிடம் முஸ்லிம்களை எதிர்க்க வலுவான காரணங்கள் எதுவும் இருக்க வில்லை. யூதர்கள் காட்டிய ஆசை வார்த்தைகள் தான் மிச்சமிருந்தன

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ

 

காற்றுக்கு உதவிக்கு வந்தது.

عن عكرمة، قال: قالت الجنوب للشمال ليلة الأحزاب: انطلقي ننصر رسول الله صلى الله عليه وسلم ، فقال الشمال: إن الحرّة لا تسري بالليل، قال: فكانت الريح التي أُرسلت عليهم الصبا.

அது கூட இரவு நேரத்தில் வீச வில்லை. சுத்தமான சுதந்திரமானவர்கள் இரவு நேரத்தில் தாக்க மாட்டார்கள் என்று சொல்லி அதிகாலை காற்று தாக்கியது.

 அந்த காற்றின் வேகத்தை சஹாபாக்கள் கூறுகிறாகள்.

 பெருமானார் (ஸல்) தன் அந்த காற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள தன்னுடைய தோழர்களை வீடுகளுக்கு திரும்புமாறு கூறினார்கள். இந்த செய்தியை கொண்டு சென்ற அப்துல்லாஹ் பின் உமர் ரலி  தன்னுடைய கேடயத்தால் தடுத்த படி நடந்தார். அது அது அவரது உடலில் மோதி காயத்தை உண்டு பண்ணியது. அவர் கண்ட சஹாபாக்களிடம் அவர் செய்தியை கூறினார். அவர்களால தங்களுடைய கழுத்துக்களை கூட திருப்ப முடியவில்லை.

 عن نافع، عن عبد الله، قال: أرسلني خالي عثمان بن مظعون ليلة الخندق في برد شديد وريح، إلى المدينة، فقال: ائتنا بطعام ولحاف قال: فاستأذنت رسول الله صلى الله عليه وسلم ، فأذن لي وقال: " مَنْ لَقِيتَ مِنْ أصحَابِي فَمُرْهُمْ يَرْجِعُوا ". قال: فذهبت والريح تسفي كل شيء، فجعلت لا ألقى أحدا إلا أمرته بالرجوع إلى النبي صلى الله عليه وسلم ، قال: فما يلوي أحد منهم عنقه؛ قال: وكان معي ترس لي، فكانت الريح تضربه عليّ، وكان فيه حديد، قال: فضربته الريح حتى وقع بعض ذلك الحديد على كفي، فأنفذها إلى الأرض.

 இந்த யுத்ததின் போது வெளியே இருந்த யூதர்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ய வில்ல , பெருமானாரோ ஒப்பந்தம் செய்து நல்ல முறையில் மதீனாவிற்கு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த பனூ குறைழா யூதர்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தார்கள். அல்லாஹ்வின் உதவி மட்டும் கிடைத்திருக்காவிடில் அன்று முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும்.

அதனால் இந்த யுத்தம் முடிந்து நிம்மதியாக வீடு வந்த பெருமானார் தனது ஆயுதங்களை கழற்ற தொடங்கிய போது அங்கு வந்த ஜிப்ரயீல் அலை மலக்குகளான நாங்கள் இன்னும் ஆயுதங்களை கழற்ற வில்லை என்று சொல்லி பனூ குறைழா யூதர்கள் இருந்த திசையை நோக்கி கை காட்டினார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களின் குடியிருப்பை முற்றுகை இட்டார்கள் 25 நாள் அந்த முற்றுகை நீடித்தது.

இறுதியில் பனூகுறைழாக்களில் போரிடும் திறன் படைத்த அத்தனை ஆணகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் 600 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

خرج رسول الله صلى الله عليه وسلم الى سوق المدينة التي هي سوقه اليوم فخندق بها خنادق ثم بعث إليهم فضرب أعناقهم في تلك الخنادق يخرج بهم إليه أرسالا وهم ستمائة أو سبعمائة والمكثر لهم يقول كانوا بين الثمانمائة والتسعمائة.[39]

காருண்ய வடிவான நபி (ஸல்) அவர்களது வாழ்வில் இருந்த மிக கடினமான முடிவு அது. ஆனால் யூதர்களின் முறைகேடுகளுக்கு அது தகுந்ததாக இருந்தது.

அவர்கள் ஒரு போதும் நம்பத்தகுந்தவர்கள் அல்ல; இதனாலேயே அவர்கள் சபிக்கப்பட்ட சமுதாயமாக காலம் தோறும் இருந்து வருகிறார்கள்.

فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ 

திருக்குர் ஆன் தொடர்ந்து சொல்கிறது

அவர்களுடை மோசடி காலம் தோறும் தொடர்வதை நீங்கள் தொடர்ந்து பார்ப்பீர்கள்.

وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ

இவ்வளவு எச்சரிக்கைகளை முஸ்லிம்களின் சொந்த வரலாறு சுமந்திருக்கிற போது தற்கால அரபுகள் யூதர்களோடு நடபு பாராட்டினார்கள்.

அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்

உலகிற்கு ஒரு பாடம்

இன்று இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

 நிச்சயம் அமெரிக்க நட்புறவுக்கு ஏற்ற நாடு அல்ல; அது நிச்சயம் தந்து நலனுக்காக எவரையும் நிர்பந்தம் செய்யும்.

 தனக்கு கட்டுபடாதவர்களை கொல்லும். இது தான் அவர்களுடைய வரலாறு. டிரம்ப் அதில் ஒரு சாம்பிள் தான்.

 இப்போது அவர்கள் கொலை செய்த அலீ ஹுசைன் குமைனி ஒரு மத தலைவர். கோடிக்கணகான மக்களின் அன்பிற்குரியவர்.

 திட்டமிட்டே இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்திருக்கின்றன. இதற்காக ரமலானை தேர்வு செய்திருக்கின்றனர்.

 இந்த சாத்தான்களின் நோக்கம் முஸ்லிம் உலகத்தை அச்சுறுத்துவதாகும். அவர்களை தொல்லைக் குள்ளாக்குவதுமாகும்.

 ஈரானை அடித்தால் அது அரபு நாடுகளை தாக்கும் என்பது தெரியாதது அல்ல; அரபு நாடுகளிலும் முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள் என்பதும் தெரியாதது அல்ல; அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானை சீரழிப்பது மட்டுமே காரணம் அல்ல முஸ்லிம்களின் புனித மாதத்தையும் அதன் அமைதியையும் சீர் குலைப்பதே காரணமாகும்.

 இதை இந்தக் கண்னோட்டத்தில் பார்ப்பதே எதார்த்தமானது.

 ஈராணில் இருப்பவர்கள் ஷியாக்கள் அவர்கள் சுன்னத் ஜமாத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுவான ஒரு உண்மை. ஷியாக்கள் சில நேரங்களில் சுன்னத் ஜமாத்தினரை ஆக்ரமிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதும் எதார்த்தமானது

 ஆனால் இந்த வேறுபாட்டை வைத்து இஸ்லாமிய உலகை பலவீனப்படுத்த எதிர்க்கள் முயற்சி செய்கிறார்கள்

 அதற்கு முஸ்லிம்கள் இடம் கொடுக்க கூடாது.

 ஷியா என்கிற கொள்கை குழப்பம் ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டிலேயே உருவாகி விட்டது அது பல சண்டைகளையும் கண்டிருக்கிறது. ஆனாலும் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சுன்னி ஷியா தொடர்பு 13 நூற்றாண்டுகளாக நீடித்து வந்திருக்கிறது.

 1979 வரை இந்த ஒற்றுமை நீடித்தது.

 ஈரானில் ஷியா புரட்சி ஏற்பட்ட பிற்கு தான் அமெரிக்கா ஈரானுக்கு எதிரானது. அத்தோடு அரபு நாடுகளும் எதிராயின. 1932 ல் தான் வஹாபிஸ் சவூதிகள் உருவானார்கள் என்பதை இங்கு மீண்டும் கவனிக்க வேண்டும்.

 எனவே முஸ்லிம்களுக்கும் ஷியாக்களுக்கும் கொள்கை ரீதியான கனத்த வேறுபாடுகள் இருக்கிறது என்றாலும்.

 அக்கிரமத்திற்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் இஸ்ரேல் அமெரிக்கவின் தற்போதைய தாக்குதலை கண்டிப்பதும் தடுத்த நிறுத்த போராடுவதும்  நியாய்வுணர்வுள்ள அனைவரின் கடமையாகும்.

 சாமாணிய மக்கள்,  பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மேலும் அதிக பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அக்கிரமம் ஒழிய வேண்டும் என்பதற்காகவு ம் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும்.

 عن أبي سعيد، قال: قلنا يوم الخندق: يا رسول الله بلغت القلوب الحناجر، فهل من شيء تقوله؟ قال" نَعَمْ قُولُوا: اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنا، وَآمِنْ رَوْعَاتِنَا "، فَضَرَبَ اللهُ وُجُوهَ أعْدائِهِ بالرِّيحِ، فهَزَمَهُم اللهُ بالرّيحِ.

 இன்று இரவு பத்ரு ஷஹீதுகளை நினைவு கூறுகிற நாள்

 இப்படித்தான் மிக அக்கிரமான முறையில் பத்று மைதானத்தில் மக்காவின் காபிர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரண்டு நின்றார்கள்.

 முஸ்லிம்களிடம் போதிய வசதிகள் எதுவும் இருக்க வில்லை.

 வெற்றிக்கு வெளியில் தேவைப்படும் காரணம் எதுவும் முஸ்லிம்களிடம் இருக்க வில்லை.

 كان النبي صلى الله عليه وسلم وأصحابه ثلاثمائة وأربعة عشر، يزيدون أو ينقصون، وعدد المشركين يتجاوز الألف

 كان مع المسلمين فارسان فقط: فرس للزبير بن العوام، وفرس للمقداد بن الأسود الكندى.

كان مع المسلمين سبعون بعيراً ومع الكفار سبعمائة
كان المسلمون من قبائل شتى، وكانت قريش من قبيلة واحدة.


ஆனாலும் அல்லாஹ் மகத்தான வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான்.

 இப்போது நடைபெறுகிற போர் இஸ்லாம் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.

பத்றுக்கு முன் அருளப்பட்ட வசனம் இது.

أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا ۚ وَإِنَّ اللَّهَ عَلَىٰ نَصْرِهِمْ لَقَدِيرٌ﴾ [الحج: 39

அநீதியாக யுத்தம் திணிக்கப்பட்டவர்கள் யுத்தம் செய்ய அனுமதி உண்டு.

 அது மட்டுமல்ல தீய நோக்கம் கொண்டவர்களை அழிக்கவும் அனுமதியுண்டு

 அமெரிக்கா இஸ்ரேலின் தற்போதைய நோக்கம் மத்திய கிழக்கை அமையற்றதாக ஆக்க வேண்டும் என்பது. ஏனெனில் அப்படி செய்தால் தான அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு அடிமையாக கிடப்பார்கள் 

ஈரானை அமெரிகக் வலிய தாக்குவதே கூட அங்கிருக்கிற பெட்ரோலுக்காகத்தான் ஏனெனில் உலகில் எண்ணைய் வளம் அதிகமுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. மட்டுமல்ல உலகில் முதலில் பெட்ரோல் கண்டு பிடிக்கப் பட்டதே ஈரானில் உள்ள மஸ்ஜிது சுலைமானி நகரத்தில் தான்.

இந்த தாக்குதலில் ஈரான் கொடுக்கிற பதிலடிகள் நியாயமானது.

ஈரானின் எதிர் போராட்டம் வலுவாக இருக்கிறது என்று சோஷியல் மிடியாக்களில் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்கட்டும். அது காற்றாடு அலையாக கரைந்து போய்விடக் கூடாது. அல்லாஹ் துணை நிற்கட்டும். நாசகர சக்திகள் ஒழியட்டும்.

சண்டையை நிறுத்துங்கள் என்று நாங்கள் கோரப் போவதில்லை. ஒவ்வொரு தடவையும் பேச்சு வார்த்தைக்கு இடையிலேயே தாகுதல் தொடுப்பது அமெரிக்காவின் வேலையாக இருக்கிறது. எனவே அமெரிக்காவோடு இனி பேச்சு வார்த்தையை தொடரப் போவதில்லை என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி கூறியிருக்கிறார். அது நிலைக்கட்டும்.

தீய நோக்கம் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரு பிரதான அடிப்படையி ல் நடை பெறக்கூடிய  இப்போரிலும் அல்லாஹ் பத்ரின் வெற்றியை தொடர்ந்து  தர வேண்டும்

  இஸ்லாமிய வெறுப்பு  அல்லது எதிர்ப்பு என்ற ஒரு பிரதான அடிப்படையி ல் நடை பெறக்கூடிய  இப்போரிலும் அல்லாஹ் பத்ரின் வெற்றியை தொடர்ந்து தர வேண்டும்

 

ஜகாத் முந்தைய பதிவுகள் 2026

 பட்டினிப் போரில் காஸா 2025

ஜகாத்தில் சலுகை இல்லை 20 24

ஜகாத் சில தவறான வாதங்களும் புரிதல்களும் 2023 

அறிந்து கொள்ளுங்கள் !2017


ஜகாத் 2016

ஜகாத் இஸ்லாத்தின் பெருமை 2014

ஜகாத் பைத்துல்மால் 2014

ஜகாத் ஒரு பெருந்தன்மை 2014

Thursday, February 26, 2026

மார்க்கமே நமது அறிவும் அந்தஸ்தும்


إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (19فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ ۗ 

 

முஸ்லிம் சமூகம் சார்ந்த சிந்தனைகள் இப்போது பொது வெளிகளில் அதிகமாக பேசப்படுகிறது.

சமூகத்தின் அரசியல் செல்வாக்கு சமூதாயத்தின் பொருளாதார பலம், பன்முக சூழலில் பொது அரங்குகளில் முஸ்லிம்களுக்கான மரியாதை ஆகிய விசயங்கள் முக்கியமான விவாதிக்கப்படுகிற விசயங்களாக இருக்கின்றன.

இவைகளில் சமுதாயம் என்ற பேச்சு முன்னே நிற்கிறது. அதனால் சமுதாயத்திலுள்ள அனைவரும் இது பற்றி பேசுகிறார்கள்.

நல்லவரோ கெட்டவரோஅனுபவசாலியோபோதிய அறிவற்றவரோ பெரியவர்களோ சிறியவர்களோ எவரும் கருத்துப் பேசுகிறார்கள். அதற்கு சமுதாயத்தை சார்ந்தவர் என்ற ஒரு தகுதி போதுமானதாக இருக்கிறது.

புரிந்து கொள்ளும் வசதிக்காக ஒரு உதாரணத்திற்க் சொல்கிறேன்.

ரமலான் மாதத்தில் சஹர் ஏற்பாடுகளில் தேவையற்ற கூட்டங்கள் வேண்டாம் என்று ஜமாஅத்துல் உலமா சபை ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறது. அதற்கு சிலர் எதிர் கருத்து தெரிவிக்கிறார்கள். “ பசங்க ஏதே உற்சாகமா வேலை செய்துட்டு போறாங்க அத ஏன் தடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்த கேள்வி சமுதாய ரீதியான கருத்தோட்டத்தில் எழுந்ததாகும் .

சமயத்தின் வழிகாட்டுதல் இங்கே அடிபட்டு போயவிடுவதை நுட்பமாக நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.

மார்க்க ரீதியாக ஒரு நன்மை என்றால் அதற்கு வழி காட்ட ஜமாஅத்துல் உலமா சபையை விட வேறு யாருக்கு அதிக அக்கறை இருக்கப் போகிறது.

இது பொதுவாக பல விசயங்களிலும் பரவி வருகிறது. இஸ்லாமிய மார்க்கம் என்ற கருத்து பின்னுக்கு தள்ளப் பட்டு முஸ்லிம் சமூகம் என்ற சிந்தனை முற்படுத்தப்படுகிறது.

இதே போல இன்னொரு உதாரணம்

முஸ்லிம் சமுதாய பெண்கள் வட்டிக் கடைக்காரனிடம் கியூவில் நிற்கிறார்கள் .அதை தவிர்க்க ஜகாத் வசூலித்து கடன் கொடுத்தால் கந்து வட்டி தொல்லையிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்கலாம் என்று ஒருவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இத்தகைய மனோ நிலை சட்டென்ற ஒரு பார்வையில் சரியாக  தெரியலாம். ஆனால் இங்கே ஜகாத் விசயத்தில் மார்க்கத்தின் வழிகாட்டுதலை தவற விட்டு விடுவோம் கண்டு கொள்ளப் படுவதே இல்லை.

சமுதாய நலன் சார்ந்த சிந்தனை என்பதே பெரிதாக தெரிகிறது.

ஒரு வகையான பெரியாரிஸ கருத்தோட்டம் என்று இதை நாம் சொல்லலாம்.

வஹாபிஸத்தின் எழுச்சிக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தில்,எதைத் தான் நம்புவது? யாரை தான் நம்புவது என்று ஏற்பட்ட குழப்ப சூழலில் தற்கால இளைஞர்களில் சிலர் பெரியாரிஸ கோட்பாடுகளுக்குள் தஞ்சமடைந்து வருகிறார்கள். சிலர் தமிழ் இன தேசீய வாதச் சிந்தனைக்குள் அடைக்காலமாகி இருக்கிறார்கள்.

அதாவது மார்க்கம் வேண்டாம். சமூகம் வேண்டும்

இன்றைய ஜும் ஆவில் முஸ்லி சமுதாயத்திற்கு ஒரு அடிப்படையான கருத்தை முன் வைக்க இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய நாம், நமது அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாமிய மார்க்கத்தை முன் வைத்து அதன் அடிப்படையிலேயே அரசியல் பலம் பொருளாதார வளர்ச்சி சமூக நல்லுறவு சமுதாய வளர்ச்சி என்று சிந்திக்க வேண்டும்.

அப்போது தான் நமக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

மார்க்கத்தின் அடிப்படைகளை ஒதுக்கி வைத்து விட்டு சமூகத்தின் பலம் என்று நினைத்தால் நிச்சயம் முஸ்லிம் சமுதாயம் வெற்றி பெற முடியாது. அது மேலும் சிக்கலையும் சிரமத்தையுமே சந்திக்கும்.

இது இஸ்லாம் வளர்ச்சி கண்டு வந்த காலத்தில் முஸ்லிம் உம்மத்திற்கு அதன் மிகப்பெரிய வழிகாட்டியான ஹழ்ரத் உமர் ரலி யல்லாஹு அன்ஹு கூறிய செய்தியாகும்.

نحن قوم أعزَّنا الله بالإسلام فمهما ابتغينا العزَّة في غيره أذلَّنا الله

ஹாக்கிமில் அந்த ஹதீஸ் வருகிறது.

அது பல் சமூக சூழலில் போலித்தனமான வளர்ச்சியாக, ஆடம்பரமாக , இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கு எதிரான சடங்குகளால்  மரியாதையை தேடி மாற்று வழிகளில் சிந்திக்க நினைப்பதற்கு மிகப் பெரும் எச்சரிக்கையாகும்.

عن طارق بن شهاب قال : خرج عمر بن الخطاب إلى الشام ومعنا أبو عبيدة بنالجراح فأتوا على مخاضة وعمر على ناقة له ، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه ، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة ، فقال أبو عبيدة : يا أمير المؤمنين أأنت تفعل هذا ، تخلع خفيك وتضعهما على عاتقك ، وتأخذ بزمام ناقتك ، وتخوض بها المخاضة ؟ ما يسرني أن أهل البلد استشرفوك ، فقال عمر : أوه لو يقول ذا غيرك أبا عبيدة جعلته نكالا لأمة محمد - صلى الله عليه وآله وسلمإنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام فمهما نطلب العزة بغير ما أعزنا الله به أذلنا الله .

நமது பெருமை நமது மார்க்கமே! நமது வெற்றியும் நமது மார்க்கமே!

 

முஸ்லிம்களுக்கு திருக்குர் ஆன் வலியுறுத்துகிற ஒரு செய்தி உண்டு.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவது தான் முஸ்லிம்களுக்கு உயிர்ச்சத்து ஆகும்.

மீனுக்கு தண்ணீர் போல முஃமினுக்கு இதாஅத்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ

 

வரலாற்றில் இதற்கு நீண்ட அனுபவம் உண்டு.

 பேராசான் இப்னுல் கையிம் அல் ஜவ்ஸி சொல்கிறார்

 قال ابن القيم -رحمه الله-: "طاعة الله ورسوله، وتحكيم الله ورسوله هو سبب السعادة عاجلا وآجلًا، ومَن تدبر العالم والشرور الواقعة فيه؛ علم أن كل شر في العالم سببه مخالفة الرسول والخروج عن طاعته، وكل خير في العالم؛ فإنه بسبب طاعة الرسول.

 அன்னியர் யாருடைய மரியாதையை காட்டிலும் பெருமானாரின் வழி முறை தான் எனக்கு தேவை என்று சொன்ன உஸ்மான் ரலி

 ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்காவின் காபிர்களோடு பேச்சு வார்த்தைக்கு சென்ற உஸ்மான் ரலி அவர்களின் கீழாடை கணுக்காலுக்கு மேலே இருந்த்து. மக்காவின் மக்கள் கீழாடையை தாழ்த்திக் கட்டுவதை தான் உயர் குலத்தின் அடையாளம் - பெருமையின் சின்னம் என்று கருதுவார்கள். ஆடை மேலே ஏறி இருந்தால் அது அடிமைகளுக்கான அட்டயாளமாக இருந்த்து.

 உஸ்மான் ரலி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்ற அபான் பின் சயீத் ஆடையை கீழே இறக்கி விடு என்று கூறினார்.

 அதற்கு உஸ்மான் ரலி அவர்கள் பதில் கூறிய பதில் ஒரு சராசரி பதில் அல்ல – முஸ்லிம் உம்மத் எந்த சூழலிலும் நினைவில் வைத்துக் கொள்ளா வேண்டிய பதிலாகும். மிக முக்கியமான ஒரு கட்டத்தில் உமர் ரலி அவர்களைப் போன்ற பெரும் தோழர்கள் மக்காவிற்குள் தூது போவதற்கு தயங்கி நின்ற சந்தர்ப்பத்தில் அந்த பணியை முடிப்பதற்காக அனுப்பப் பட்ட உஸ்மான் ரலி தன்னுடைய வேலை முக்கியம் சமுதாயத்த்திற்கு அதுதான் இப்போது அவசியம் என்று கருதி மக்காவின் தலைவர்களின் மரியாதையை பெற்றுக் கொள்வதற்காக தனது கீழாடையை இறக்கி கட்டவில்லை. அவர் உறுதி படச் சொன்னார்.

 هكذا إزرة صاحبنا ، 

  فأرسله إليهم فخرج عثمان على راحلته حتى جاء عسكر المشركين ، فعتبوا به وأساءوا له القول ، ثم أجاره أبان بن سعيد بن العاص ابن عمه وحمله على السرج وردفه ، فلما قدم قال : يا ابن عم ، ما لي أراك متخشعا ؟ أسبل ، قال : وكان إزاره إلى نصف ساقيه ، فقال له عثمان : هكذا إزرة صاحبنا ، 

 சொந்த துயரத்தை காட்டிலும் அல்லாஹ்வின் ரஸூலுக்கு கட்டுப்படுவதை பிரதானமாக நினைத்தர் உம்மு ஹபீபா ரலி அவர்கள்

 உம்மு ஹபீபா ரலி அவர்களின் தந்தை அபூசுப்யான் இறந்த பிறகு 4 ம் நாளில் அம்மையார் பணிப்பெண்ணை எண்ணை கொண்டு வரச் சொல்லி தேத்துக் கொண்டார்.

தந்தையின் மீது அலாதியான பிரியம் கொண்டவர் அவர். அவரது தந்தையும் அப்படித்தான் மகள் மீது பேரன்பு கொண்டவர். இந்த நிலையில் தந்தையை இழந்த துயரத்தை காட்டிலும் 4 ம் நாள் தலைக்கு எண்ணை தேய்த்து விட்டு அவர் சொன்னார். எனக்கு இப்போது எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும்  3 ம் நாளுக்கு மேல் யாருக்காகவும் துக்கம் அனுஷ்டிக்க கூடாது என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அதற்காகத்தா வாசணை எண்ணையை பூசிக் கொண்டே என்று சொன்னார்கள்.

 பேராபத்து நிறைந்த சூழலிலும் ரஸீலின் சுன்னத்தின் படி தான் நடப்பேன் என்று சொன்ன ரிப்யீ ரலி

 ஹிஜ்ரி 22  ம் வருட்த்தில் காதிஸீய்யா யுத்தத்தில் வல்லரசுப் படையான பாரசீகத்தின் பெரும் படை சுமார் 2 இலட்சம் பேர்களுடன் அணிவகுத்து நின்று கொண்டிருந்த நிலையில் வெறும் 30 ஆயிரம் பேர்களுடன் அவர்களை எதிர்த்து நின்றார்கள் முஸ்லிம்கள், இது என்ன மாதிரி துணிச்சல் என்பதை புரிந்து கொள்ள முடியாத பாரசீகப் படைத்தளபது ருஸ்தும் பேச்சு வார்த்தைக்கு ஒருவரை அனுப்பி வைக்குமாறு மூஸ்லிம் படைத்தளபதி சஃது பின் அபீவக்காஸ் ரலியிடம் சொல்லியனுப்பினான்.

சஃது ரலி ரிப் இய்யி பின் ஆமிர் ரலி யை அனுப்பி வைத்தார்கள்.

அவர் நேரடியாக ருஸ்துமின் கூடாரத்திற்குள் தன்னுடைய கழுதையோடே நுழைந்தார்.

அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ருஸ்தும் சொன்னான் . இந்த பிரச்சினையை  நாங்கள் எங்களது மேலதிகாரிகளிடம் நான் விவாதிக்க வேண்டும் அதற்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டான். ஒரு நாளா இரண்டு நாட்களா என்று திருப்பிக் கேட்டார் ரிப் இய்யு ரலி. இல்லை கடிதம் எழுதி பதில் வரும் வரை என்றான் ருஸ்து. கொஞ்சமும் தயக்கமில்லாமல் ரிப் இய்யு ரலி கூறினார். மூன்று நாட்களுக்கு மேல் அவகாசம் அளிப்பது எங்களது நபியின் வழி முறை அல்ல.

قال " رستم " : " قد سمعت مقالتك ، فهل لكم أن تؤخروا هذا الأمر حتى ننظر فيه وتنظروا " ؟ ،

قال : " نعم كم أحب إليكم ؟

يومـًا أو يومين ؟ "

، قال : " لا بل حتى نكاتب أهل رأينا ورؤساء قومنا " ، فقال : " ما سن لنا رسول الله ـ صلى الله عليه وسلم ـ أن نؤخر الأعداء عند اللقاء أكثر من ثلاث ، فانظر في أمرك وأمرهم واختر واحدة من ثلاث بعد الأجل

 யுத்தம் நடந்த்து. முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். பாரசீகம் முஸ்லிம்கள் வசமானது.

 இவை மிக சாதாரணமாக இஸ்லாமிய வரலாற்றில் இன்னும் இது போல ஏராளமான செய்திகள் உண்டு.

 மார்க்கத்திற்கு கட்டுப்ப்டுவதுதான் வெற்றிக்கும் மரியாதைக்குமான வழி என்று முஸ்லிம் உம்மத் உறுதி கொண்டிருந்த்து. அதற்குரிய பலனையும் அது கண்ட்து.

 15 நூற்றாண்டு கால வரலாறு நெடுகிலும் இதற்கான உதாரணங்கள் நிறைந்து  கிடக்கின்றன.

 அல்லாஹ் ரஸூலுக்கு கட்டுப்படுத்தவே தங்களது உயிர்த்தலின் அடையாளம் என்ற உறுதிப் பாட்டிலிருந்து முஸ்லிம் சமூகம் கொஞ்சமாகவேனும் அலட்சியம் காட்டுமானால் அது சஞ்சலத்திற்கு ஆட்பட்டு விடும். தடுமாற்றங்களுக்கும் தவறான போக்கிற்கும் ஆளாகி விடும்.

 மேற்கூறிய திருமறையின் அடுத்த வாசகம்  இந்த எச்சரிக்கையை தருகிறது.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ (24)

 சமீப காலத்தில் பெரியாரிஸ பற்றுக் கொண்ட இளைஞர்களும் அது போல தமித்தேசிய கருத்தோட்ட்த்தில் இணைந்த இளைஞர்களும் அவர்களுடைய கருத்துக்களில் மிக தீவிரமாக இருக்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்களை கூட மலிவாக நினைக்கிறார்கள் பேசுகிறார்கள்

 சேகுவாரா வை பெரிதாக நினைக்கிறார்கள்.

 பெருமானாரை விட சேகுவாரா பெரிய சாதனையாளரா என்பதை அளவிடுவதற்கு அவர்களது அறிவு செல்வதில்லை.

 சேகுவாராவை அல்லது அது போன்ற நவீன செயற்பாட்டாளர்களை இத்தகைய இளைஞர்கள் பெரிதாக நினைப்பது உண்மையில் ஆக்டிவாக வாழ்வதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு எஸ்கேப்பிஸமே ஆகும்.

 ஏனெனில் சேகுவாராவை ஒப்புக் கொண்டால் தலைவராக ஏற்றுக் கொண்டால் நீங்கள் அதற்காக எந்த கடமையையும் நிறைவேற்ற வேண்டியதில்லை. ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டால் போது. ஆனால் முஹம்மது (ஸல் அவர்களை ஏற்றுக் கொண்டால் அப்படியா ?

 அதன் பின் எத்தனை கடமைகள் இருக்கின்றன?

 இத்தகையை இளைஞர்கள் உண்மையான வரலாற்று புரட்சிகளின் பக்கம் கவனம் செலுத்தாமல் மேம்போக்கான – ஏமாற்ற மளிக்க கூடிய அடையாளங்களுக்கு மயங்கி போகிறார்கள். இது உண்மையில் ஒரு அறியாமை ஆகும்.

 அல்லாஹ் ரஸூலுக்கு கட்டுப்படுவதை உயிர்த்தலின் அடையாளமாக கருதுகிற மனப்பான்மை குறைகிற போது இத்தக்கய சஞ்சலத்திற்கு ஆட்பட நேரும். அதைதான் அல்லாஹ் இதயத்தையும் மூளையையும் திரையிட்டு விடுவதாக கூறுகிறான்.

 சமூகமே முக்கியம் என்று சிந்தித்தவர்கள் பெரியாரை போல இன்னும் பலர் உண்டு.

 அவர்களால் தான் இன்று சாமாணிய மக்களில் படித்தவர்கள் பணியில் இருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று ஒரு மாயை சொல்லப் படுவதுண்டு.

 அப்படி படித்தவர்கள் பெரியாரின் கொள்கையில் இருக்கிறார்களே என்ற ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டால் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

 அதே போல இனம் தேசியம் என்று பேசிய எவரும் அது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகட்டும். ஜெர்மனிய அதிபர் ஹிடலர் ஆகட்டும் தமது சொந்த இனத்தை சிக்கலில் தவிக்க விட்டு சென்றார்களே தவிர வெற்றியடைய வைக்கவில்லை.

 இதற்கு  இன்னும் நீள உதாரணம் காட்ட முடியும்

 பெரியாரிஸம் அல்லது தேசிய இனம் பற்றிய சிந்தனைக்கு ஆட்பட்டிருக்கிற முஸ்லிம்கள் முதலில் அந்த தத்துவங்களின் புரட்சி என்ன என்பதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புரட்சியையும் ஒரு தெளிவான வழிகாட்டியின் துணையோடு நிச்சயமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

 வீரமாக பேசுவது வேறு நல்லது செய்பவர்களை உருவாக்குவது என்பது வேறு

 தொழுகைக்காக தாழ்கிற தலையும் ஈகைக்காக நீள்கிற கையுமாக வாழ்கிற ஒரு சமூகத்தை வார்த்தெடுத்த நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களுக்கு நிகரான ஒரு சீர்திருத்த வாதி இன்னொருவரை காண முடியாது.

 அவருக்கு முற்றாக கீழ் பணிந்து நிற்பதே எதிலும் நல்லது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 எனவே அரசியல் பொருளாதாரம் சமூக மேம்பாடு என வாழ்க்கையில் அத்தியாவசியமான அனைத்து அம்சங்களுக்கும் முன்னதாக மார்க்கம் என்ற சொல்லை முற்படுத்தி வைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்.  அது தான் அவர்களது வெற்றிக்கு வழியுமாகும்.

 இஸ்லாம் விரும்பும் கல்வி

இஸ்லாம் விரும்பும் கல்யாணம்

இஸ்லாம் விரும்பும் கடன்

இஸ்லாம் விரும்பும் சமூக உறவுகள்

 என எதிலும் இஸ்லாமிய மார்க்கத்தை முன்னிறுத்தவும் மார்க்கத்தை சொல்லித் தருபவர்களை முன்னிறுத்தவும் செய்ய வேண்டும்.

 அப்படிச் செய்தால் நிச்சயம வெற்றி பெறுவோம். அப்படிச் செய்தால் தான் நாம் வெற்றி பெற முடியும்.

 இல்லை எனில். அல்லாஹ் எச்சரிக்கிறான்.

 சோதனைகள் தொடர் கதையாகத்தான் இருக்கும். வேதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது.

فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ (63

 இந்த வசனம் இறைனது கட்டளைகளை எதிர்ப்பவர்கள் என்று கூறுகிறது. மார்க்கம் வேண்டியதில்லை. சமூகம் போதுமானது என்று கருதுகிறவர்கள்யும் இது எடுத்துக் கொள்ளும்.

 அல்லாஹ் நம்மையும் நமது சந்த்திகளையும் பாதுகாப்பானாக

 கொஞ்சமாக அறிவு பெற்று விட்டால் மார்க்கத்தை விட்டு விட்டு சமூகத்தை பற்றி சிந்திப்பது தான் அழகு என்று சிலர் நினைக்கிறார்கள். கொஞ்ச அந்தஸ்த்து கிடைத்து விட்டால் சமூகத்திற்கு உழைப்பது தான் சிறப்பு என்று சிலர் நினைக்கிறார்கள்.

 தீனை பொருட்படுத்தாமல் இத்தகைய சிந்தனை வளருமானால் அது நமக்கும் நம் சமூகத்திற்கும் எந்த அளவிலும் நல்லதல்ல

 மிக அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது

 புனிதம் மிக்க ரமலானில் பாவங்களுக்காக வருத்தப் படுகிற நேரத்தில் மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை முன்னிருத்த தவறிய பாவங்களில் இருந்தும் மன்னிப்பை கோருவோம்.