பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று பெயர்.
- وأيام التشريق هي الأيام الثلاثة التي تلي العيد - الفقه علي المذاهب الأربعة
கறியை காய வைக்கும் நாள் அல்லது உப்புக்கண்டம் போடும் நாள் என்பது பெருள்.
سميت بأيام التشريق لأن الناس كانوا يشرّقون فيها اللحم.
அய்யாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களும் இஸ்லாமிய சட்டப்பட பெருநாட்களைப் போலவாகும்.
இந்த நாட்களில் நோன்பு வைப்பது கூடாது. கழா நோன்பும் கூடாது.
وروى أبو داود (2418) عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ أَنَّهُ دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَرَّبَ إِلَيْهِمَا طَعَامًا ، فَقَالَ : كُلْ . فَقَالَ : إِنِّي صَائِمٌ . فَقَالَ عَمْرٌو : كُلْ فَهَذِهِ الأَيَّامُ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِإِفْطَارِهَا ، وَيَنْهَانَا عَنْ صِيَامِهَا . قَالَ الإمام مَالِكٌ : وَهِيَ أَيَّامُ التَّشْرِيقِ . وصححه الألباني في صحيح أبي داود .
இந்த நாட்களில்
1. உண்டு மகிழனும்
2. அதிகமாக திக்ரு செய்யனும்
وَعَنْ نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟». أخرجه مسلم.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.
எனவே குர்பானி இறைச்சியை பத்திரப்படுத்தி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதே!
குர்பானி இறைச்சியை இந்த நாட்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு தக்பீர் அதிகமாக சொல்ல வேண்டும்.
ஹஜ்ஜின் அமல்களைப் பற்றி பேசிவருகிற இடத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என குர் ஆன் கூறுகிறது.
(وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ)(البقرة: من الآية203)
அது இந்த மூன்று நாட்களையே குறிக்கிறது.
அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜை முடித்து விட்டு மினாவில் தங்கியிருக்கிற நாட்களில் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டு தமது முன்னோர்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்தனர். அதை மாற்றி அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு அல்லாஹ் கூறினான்.
فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً )(البقرة: من الآية200)
இதன் பிறகு மினா தக்பீரால் அதிர ஆரம்பித்தது.
وقد كان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون, ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً.
وكان ابن عمر رضي الله عنهما يكبر بمنى تلك الأيام, وخلف الصلوات , وعلى فراشه, وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
இவ்வாறு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பதுமினாவில் மட்டுமல்ல் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய சுன்னத் என்பதை சஹாபாக்கள் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
இமாம் புகாரி அவர்கள்
بَاب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ
எனும் பாடத்தில்
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا
என்று கூறுகிறா. அத்தோடு பர்ளு தொழுகைக்குப்பின் தக்பீர்சொல்லும் இருப்பது போல சிலர் நபில் தொழுகைக்குப்பின்னரும் தக்பீர் சொல்லி வந்தனர் என்ற செய்தியையும்குறிப்பிடுகிறார
وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ
பெண்களும் தக்பீர் சொல்லினர்
وكانت ميمونة رضي الله عنها تكبر يوم النحر وكان النساء يكبرن خلف أبان بن عفان وعمر بن عبد العزيز ليالي التشريق مع الرجال في المساجد - http://صحيح البخاري
சஹாபாக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்தநடைமுறைகளின் படி பர்ளு தொழுகைக்களுக்குப்பின் தக்பீர்சொல்வதை இமாம்கள் சுன்னத் என அறிவித்தனர்.
بل بلغ من أهمية التكبير المقيد بأدبار الصلوات أن العلماء قالوا: يقضيه إذا نسيه, فإذا نسي أن يكبر عقب الصلاة فإنه يكبر إذا ذكر ولو أحدث أو خرج من المسجد ما لم يطل الفصل بين الصلاة والتكبير.
பொதுவாக இன்றைய நம்முடைய பழக்கத்தில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு அல்லது சேர்ந்து சாப்பிடச் செல்வது என்பது Get together மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இதற்காக நிறைய செலவு பிடிக்கிற பிரபலமான ஹோட்டல்களை நாம் தேடிச் செல்கிறோம் ..
ஹஜ் பெருநாள் அப்படி ஒரு சேர்ந்து உண்பதற்கான ஒரு ஏற்பாட்டுக்கு ஏற்ற நேரம் ஆகும்.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் ?
வெறும் சந்தோசம் அல்லது ஒரு பெருமை என்பதை தாண்டி இந்த இந்த இணைப்பில் நாம் அல்லாஹ்வை அக்பர் சொல்லி புகழ வேண்டும்
அப்படி செய்யும்போது அது அல்லாஹ்வை பெருமைப்படுத்துகிற இந்த நாளுக்கான ஒரு சிறப்பான ஏற்பாடக அமையும்
எல்லோருமாய் சந்திக்கும்போது சாப்பிட்டு முடிக்கும் போது ஒரு தக்பீர் சொல்லிவிட்டால் இந்த பாக்கியம் பொருந்திய நிகழ்வாக அமையும்
கொஞ்சம் கறபனை செய்து பாருங்கள் குடும்பத்தினர் ஒன்றாக அமரந்து கலகலப்பாக சாப்பிடுகிறோம் அதன் பின் அதே உற்சாகத்தோடு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாக இலாஹ இல்லலாஹு அல்லல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று சொன்னால் அது எப்படி இருக்கும் ?
அன்றாட வாழவில தக்பீர்
இஸ்லாத்தில் தக்பீரின் மகிமை பல வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
பாங்கு, தொழுகை, பெருநாட்கள், மகத்தான் சந்தர்பங்களின் அடையாளமாக தக்பீர் ஆக்கப்பட்டுள்ளது.
முஸ்லிமுடைய் வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய சொல்லாகும்
நான்கு ரக அத் தொழுகையில் 22 உறை தக்பிர் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளின் பர்ளு தொழுகைகளில் மட்டும் ஒரு முஸ்லிம் 94 தடவை அல்லாஹ் அக்பர் சொல்கிறார்.
சுன்னத்துக்களையும் நபில்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.
வழக்கமான சுன்னத்துக்களையும் நபில்களையும் வித்ரையும் தொழுதால் ஒரு நாளில் 342 முறை ஒரு முஸ்லிம் தக்பீர் சொல்கிறார்.
இது தவிர பாங்கிலும் இகாமத்திலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன. இவற்றிற்கு பதில் சொல்வதிலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன.
இதை தவிர தக்பீரை தனியாக சொல்லும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் எத்தனை தக்பீர் சொல்கிறார் என்கிற கணக்கு அல்லாஹ்விற்கே தெரியும்
தொழுகை மட்டுமல்லாது ஹஜ்ஜு குர்பானி போன்ற வணக்கங்கள் தக்பீரினால் நடைபெறுகின்றன,
ஹாஜி சைத்தானை கல்லெறிவது வரை தல்பியா சொல்லுவார் . முதல் கல்லை எறிந்த நிமிடத்திலிருந்து தக்பீருக்கு மாறிவிடுவார்,
தவாபை தொடங்கும் போது, சைத்தானை கல்லெறியும் போது என அவரது அமல்களில் தக்பீர் முக்கிய இடம்பிடித்திருக்கீறது.
குர்பானியின் முக்கியக் கட்டத்தில் தக்பீர் இடம் பிடித்திருக்கிறது,
இதனால் தான் உமர் ரலி கூறீனார்கள்
عن عمر بن الخطّاب رضي الله عنه أنّه قال: قول العبد: « قول العبد : الله أكبر، خيرٌ من الدنيا وما فيها »
.
பிறையை பார்த்ததும் பெருமானார் தக்பீர் சொல்வார்கள்
كان رسول الله إذا رأى الهلال قال :" الله أكبر ، اللهم أهله علينا بالأمن و الإيمان ، و السلامة و الإسلام ، و التوفيق لما تحب و ترضى ، ربنا و ربك الله"
الراوي: عبدالله بن عمر
பயணம் புறப்படுகிற போதும் தக்பீர் சொல்வார்கள் பெருமானார்
ففي صحيح مسلم عن ابن عمر رضي الله عنهما أن " رسول الله صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر كبر ثلاثاً ...))
மேட்டில் ஏறுகிற போது தக்பீர் சொல்வதும் பள்ளத்தில்இறங்கு கிற போது சுப்ஹானல்லா சொல்வதும்பெருமானாரின் பழக்கம்.
عن جابر بن عبد الله رضي الله عنهما قال : " كنا إذا صعدنا كبرنا وإذا نزلنا سبحنا"فتح الباري
அதிர்ச்சியளிக்கிற செய்திகளை கேட்கிற போது அல்லாஹ்அக்பர் என்று சொல்கிற பழக்கம் சஹாபாக்கள்டம் இருந்தது.
யஃஜூஜ் மஃஜூஜ் களைப் பற்றி பெருமானார் சொன்ன போதுநாங்கள் அல்லாஹு அக்பர் என்று சொன்னோம் எனஅபூஸஈதில் குதிரி ரலி கூறுகிறார்.
மய்யித்துகளுக்கான தொழுகையாக நான்கு தக்பீர்கள் மட்டுமே ஆக்கப்பட்டிருக்கிறது,
நெருப்பு பற்றிக் கொள்வதைப் பார்த்தால் தக்பீர் சொன்னால் அது நெருப்பை அனைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عن عبدالله بن عمر
قال النبي صلى الله عليه وسلم :" إذا رأيتم الحريق ، فكبروا ، فإن التكبير يطفئه "
என்னுடைய அனுபவத்தில் தக்பீர் மகத்தான சக்தியாக இருந்ததை ஒரு தடவை உணர்ந்தேன்.
2008 ஹஜ்ஜின் போது 12 ம்நாள் ஜவாலுக்குப்பின் சைத்தானை கல்லெறிந்த போது ஜம்ரா பாலம் மிக சவுகரிமாக கல்லெறிய சிரமமில்லாமல் இருந்தது. அதற்குப் பிறகு மக்காவில் தங்குமிடத்திற்கு செல்ல திரும்பிக் கொண்டிருந்த போது மக்காவிற்கான தரீக்குல் மஷாத் தின் தொடக்கத்திலிருந்த ஒரு சின்ன சப்வேயில் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. வழியில் ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று இராணுவ வீரர் சைகை செய்து கொண்டிருந்தார். பின்னால் கூட்டம் வந்து மோதிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நெரிசல் அதிகரித்து அதிகரித்து எல்லோர் கண்களிலும் ஒரு அச்சம் பரவத் தொடங்கியது. மெளனம் கோலோட்சிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மெல்ல ஒருவர் தக்பீர் சொன்னார். தொடர்து அனைவரும் கூறினர். கூட்டத் தின் அழுத்தம் எப்படித்தான் குறைந்ததோ தெரியவில்லை. அனைவரும் அச்சத்திலிருது விலகி ஒரு நிதானத்திற்கு வந்தனர், வழி ஏற்பட்ட பிறகு தள்ளு முள்ளூ இல்லாமல் அணியணியாக வெளியேறினர்.
தக்பீரின் மகிமைய அனுபவித்து உணர்ந்த ஒரு வாய்ப்பு அது.
தக்பீர் முஸ்லிம்களுடைய உள்ளத்தை நிலைப் படுத்தும் ஒரு சொல்லாகும்.
தகீபீரை அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
وَكَبِّرْهُ تَكْبِيراً } الإسراء111
பெருமானாருக்கு அல்லாஹ்வின் முதல் உத்தரவு தக்பீர
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ{1} قُمْ فَأَنذِرْ{2} وَرَبَّكَ فَكَبِّرْ{3} ﴾ المدثر
நிறைய தக்பீர் சொல்லும் இந்த காலத்தில் அல்லாஹு அக்பர் என்று நாம் உண்மையாக சொல்ல வேண்டும்
என்னிடமுள்ள காசு பெரிது, எனது படிப்பு பெரிது, எனது பதவி பெரிது என்ற சிந்தனையை மனசு முழுக்க வைத்துக் கொண்டு அல்லாஹு அக்பர் என்று சொல்வது உணரமையாகுமா என்று சிந்திக்க வேண்டும்
இந்த வகையில் சிந்தித்தால்
ஹழ்ரத் இபுறாஹீம் அலை அவர்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொள்ள உண்மையான தகதி படைத்தவர் எனபது புலனாகும்
அவருடைய நினைவுகள் புதுப்பிக்க்கப்படுகிற இந்நாட்களில் நிறைய தக்பீர சொலவோம்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் போல தக்பீர
சொல்ல தவ்பீக் செயவானாக!
ஆமீன்
(மினா வின் அல் ஜவ்ஹரா சாலையில் இருக்கும் பைத் அல்லுயூப் கூடாத்திலிருந்து. துல்ஹஜ் பிறை 12)