கடந்த வாரம் தமிழகத்தை உலுக்கியது அந்த செய்தி.
நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகில் பெட்டைக்குளம் ரோட்டிலுள்ள
காட்டுப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கார் எரிந்து தீக்கிரையானதில் காரில் பயணம் செய்த
கணவன் மனைவி 2 குழந்தகள் என நான்கு பேர் கருதி இறந்துள்ளனர். பின்னிருக்கையில் குழந்தைகள் இருவரும்
தாயை கட்டிப்பிடித்தபடி இறந்த காட்சி பார்ப்போர் அனைவரையும் கலங்கச் செய்தது.
காரின் சேஸ் எண்ணை கொண்டு விசாரித்ததில்
சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த முஹம்மது ரபி என்பவருக்கு சொந்தமானது
என்று தெரியவந்த்து.
ஆரம்பத்தில் கொலையாகவோ அல்லது
விபத்தாகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது
பின்னர் நடந்த விசார்ணையில் தான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது.
முஹம்மது ரபி சென்னையில் பணிபுரிந்து உள்ளார். கடன் பிரச்சினை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மிகவும் சிரமம் பட்டு உள்ளார் இதனால் சென்னையிலுள்ள சொந்த வீட்டை விற்று விட்டு நெல்லையில் குடி ஏறி உள்ளார். மன உளைச்சலுக்கு உள்ளானவர் அவர் அடிக்கடி
குடும்பத்தினருடன் ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவுக்கு வருவதைக்
வழக்கமாக வைத்துள்ளார்.
திங்கட் கிழமை ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்
உடன் வந்து உள்ளார் அங்கு ஏழைகளுக்கு உணவு வழங்கி உள்ளார்.
பிறகு பள்ளியில் இருந்து வெளியேறி காட்டுப் பகுதிக்குள் சென்று தண்ணீர் கேனில் வாங்கி வைத்த பெட்ரோலை காரில்
ஊற்றி தீ பற்ற
வைத்து உள்ளார். கார் பற்றியெறிந்துள்ளது.
இதில் முஹம்மது ரபி மற்றும் அவரது மனைவி செய்யது நஸ்
ரீன் மகன் காஜா மகள் அப்ரீன் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் கருதி இறந்தனர்.பிள்ளைகள் துடி துடித்தபடி தங்களது தாயை கட்டிபிடித்தபடி இறந்துள்ளனர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்
குடும்பத்தோடு தற்கொலை செய்து
கொண்ட நாளுபேரும் முஸ்லிம்கள் என்பதும் கடன் தொல்லை தாங்காமல் இந்த கோரமான முடிவை அவர்கள்
தேர்ந்தெடுத்தும் முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையோடு கவனிக்க வேண்டிய செய்திகளாகும்.
முதலில் கவனிக்க வேண்டியது எந்த
பிரச்சனைக்கு தற்கொலை தீர்வு அல்ல
கலிமா சொன்ன முஸ்லிம், அதுவும்
தர்காக்க்களோடு தொடர் கொண்டு ஏழைகளுக்கு உணவளித்து தனக்கு ஆறுதலை தேடிக் கொண்ட ஒரு
முஸ்லிம் தன்னை மட்டும் அல்ல தனது குடுபத்தையும் இப்படி பலியாக்கியது எந்த வகையிலும்
ஜீரணித்துக் கொள்ளத் தக்கதல்ல.
தற்கொலை இந்த உலகின் எந்த பாவத்தை
விடவும் பெரும் பாவமாகும். அது ஹராமான ஒரு செயலாகும்.
وقد ثبت تحريمه بالكتاب والسنة.
قال الله تعالى لا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً *
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَاناً وَظُلْماً فَسَوْفَ نُصْلِيهِ نَاراً وَكَانَ
ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيراً[النساء:29، 30].
وفي حديث سهل بن
سعد رضي الله عنه في قصة
الرجل الذي جرح جرحا شديدا في احدى الغزوات ، فوضع سيفه بين ثدييه ، وتحامل عليه
فقتل نفسه ، فقال رسول الله صلى الله
عليه وسلم :((اما انه من اهل
النار)) رواه البخاري.
அந்த செயல் எந்த வடிவத்தில் நடந்த்தோ அதே வடிவத்தில் தண்டனை பெற்றுத்தரும்
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ
تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى
خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ
فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا
فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ ثُمَّ انْقَطَعَ عَلَيَّ
شَيْءٌ خَالِدٌ يَقُولُ كَانَتْ حَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ
فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا النسائي 1939
தற்கொலை செய்து கொண்டவர் ஒரு சிறந்த காரணத்தினால் மன்னிக்கப்பட்டாலும் அவரிடம் அதற்கான அடையாளம் இல்லாமல் போகாது.
பெருமானாரை முதன் முதலில் ஹிஜ்ரத்துக்கு அழைத்தவர், துபைல் (ரலி), ஆனால் பெருமானார் அவரிடம் செல்லவில்லை.
துபைல் ரலி பின்னர் மதீனாவுக்கு வந்தார், அவருடன் அவருடைய சமூகத்தவர்களும் இஸ்லாமை தழுவ வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் அபூஹுரைரா ரலி ஆவார். அவருடன் வந்தவர்களில் ஒருவருக்கு மதீனாவின் குளிர் பொறுக்க முடியாமல் போனது. அவர் தனது மணிக்கட்டை கத்தியால் வெட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் மன்னிக்கப் பட்டார் என்றாலும் அவரது வெட்டுக் காயம் அப்படியே விடப்பட்டிருந்தது.
இது பற்றி முஸ்லிமில் ஒரு
ஹதீஸ் உள்ளது.,
حَدَّثَنَا
أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ
سُلَيْمَانَ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا
حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ
جَابِرٍ أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ أَتَى النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِي حِصْنٍ
حَصِينٍ وَمَنْعَةٍ قَالَ حِصْنٌ كَانَ لِدَوْسٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَبَى
ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي ذَخَرَ اللَّهُ
لِلْأَنْصَارِ فَلَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو وَهَاجَرَ مَعَهُ
رَجُلٌ مِنْ قَوْمِهِ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ
لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ
الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ فَرَآهُ وَهَيْئَتُهُ حَسَنَةٌ وَرَآهُ
مُغَطِّيًا يَدَيْهِ فَقَالَ لَهُ مَا صَنَعَ بِكَ رَبُّكَ فَقَالَ غَفَرَ لِي
بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي
أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ قَالَ قِيلَ لِي لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ
فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ
وَلِيَدَيْهِ فَاغْفِرْ
அதனால் எக்காரணம் கொண்டும் இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதி யில்லை
காதல்
தோல்வி, கடன் பிரச்னை, மனசு
மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய்க் கொடுமைகள். ஏன் பரீட்சையில் தோல்வி போன்ற
விசித்திரங்களும் தற்கொலைக்குக் காரணமாவதை நாம் பார்க்கிறோம். கேட்கிறோம்.
இது
மட்டுமல்ல சமீபகாலத்தில் தேசிய – இன
அரசியல் விடுதலைப் போராட்டங்களில் தீ வைத்துக் கொள்ளுதலும் தற்கொலையும் ஓரு
ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது,
என்ன
காரணம் சொன்னாலும் இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதி இல்லை.
அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப் பட்டிருந்த இராக்கில் சூழ்நிலை படு சிக்கலாக இருந்த போது அமெரிக்க இராணுவ வீரர்கள் பல முஸ்லிம் பெண்களை கற்பழித்தனர். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்மணி கற்பழிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என பத்வா கேட்டார். அல் அஸ்ஹர் பல்கலை கழகம் தற்கொலையை ஆதரரிக்க முடியாது என்று அழுத்தமாக கூறிவிட்டது.
وجاء في فتاوى شيخ الأزهر الشيخ حسن مأمون: أنه لا يحل للمرأة المكرهة على الزنا بملجئ أو بغيره قتل نفسها لتنجو
من عار الزنا
தற்கொலை இஸ்லாம் தடுத்த காரணங்கள்
· தற்கொலை என்பது விதியை நம்பாதவனின் வேலை.
· தற்கொலை அல்லாஹ்வின் திட்டங்களில் திருப்தி அடையாதவனின்
செயல்.
· தற்கொலை அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை
இல்லாதவனின் முயற்சி
இத்தகைய செயல்பாடு அடிப்படை ஈமானுக்கு எதிரானது.
எனவே தான்
இஸ்லாம் இதை குப்ருகககு நிகரான பாவமாக குறிப்பிட்டது.
தற்கொலை
எவ்வளவு இழிவானது என்பதை காட்டுவதற்கு ஒரு செய்தி போதும் பெருமானார் (ஸல்) அவர்கள்
தற்கொலை செய்தவனுக்கு நான் தொழ வைக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள்
عَنْ ابْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا أَنَا فَلَا أُصَلِّي
عَلَيْهِ
அம்மா அன பலா உஸல்லி என்று பெருமானார் சொன்னார்க்ள் இதற்கு நானோ தொழ வைக்க மாட்டேன் எனறு பொருளே தவிர தொழுகையே இல்லை என்று அர்த்தமல்ல. அதனால் தற்கொலை செய்தவருக்கு ஜனஸா தொழுகை நிறைவேற்றப்படும் என்றாலும் அது காருண்யமே வடிவாக கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தொழ வைக்காமல் விலகிக் கொண்ட மிகப்பெரும் குற்றமாகும்.
எத்தகைய
சோகம் இருந்தாலும் ஒரு முஸ்லி இதை நினைத்துப் பார்த்தால் இந்த மோசமான முடிவை
தேர்ந்தெடுக்க மாட்டார்.
தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் மேற்கொள்ளும் தப்பான முடிவாகும். அது ஈமானுக்கும் சுய கவுரவத்திற்கும் இழுக்காகும்.
அந்த் நொடியில் மாட்டிக் கொண்டால் எல்லாம் பாழாகிவிடும். நன்மைகள் பாழாகிவிடும் - வாழ்கை பாழாகிவிடும் - குடும்பம்.பாழாகிவிடும் – மரியாதை பாழாகி விடும் எல்லாவற்றிற்கும் மேலாக சொர்க்கம் பாழாகிவிடும்.
பெருமானாரோடு முஸ்லிம்களின் அணியில் போராடுவது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம் ? அந்த பாக்கியம் கிடைத்த பிற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சொர்க்கத்தை பாழாக்கினார்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ
وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ
وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا
يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلَا فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ
فَقِيلَ مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ
النَّارِ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَنَا صَاحِبُهُ قَالَ فَخَرَجَ مَعَهُ
كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قَالَ فَجُرِحَ
الرَّجُلُ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ سَيْفَهُ
بِالْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ
فَقَتَلَ نَفْسَهُ فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ قَالَ وَمَا ذَاكَ قَالَ
الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ
النَّاسُ ذَلِكَ فَقُلْتُ أَنَا لَكُمْ بِهِ فَخَرَجْتُ فِي طَلَبِهِ ثُمَّ جُرِحَ
جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الْأَرْضِ
وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ إِنَّ
الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ
مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا
يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ- Buhari
தற்கொலை முடிவுக்குப் பின் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புக்களை கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் இந்த கொடூரமான முடிவை எவரும் எடுக்க மாட்டார்கள்.
தற்கொலையின் அந்த ஒரு நொடியிலிருந்து தப்பி விட்டால் வாழ்க்கை வசந்தமாகிவிடும்.
இராபர்ட் கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை நிறுவியவன்,
ஆரமபத்தில் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்தான். கடன் தொல்லை தாங்க முடியாமல் துப்பாக்கியை நெற்றியில் வைத்து இருமுறை சுட்டான். துப்பாக்கி சுட வில்லை. முன்றாம் முறை கோபத்தில் வானத்தை நோக்கி சுட்டான், துப்பாக்கி வெடித்தது. திடுக்கிட்ட கிளைவ், கடவுள் தன்னை ஒரு காரியத்திற்காக விட்டு வைத்திருப்பதாக நினைத்தான், குமாஸ்தா வேலையை விட்டு விட்டு கமபெனியின் இராணுவத்தில் சேர்ந்தான்/இந்தியாவில் ஆங்கிலே அரசை நிறுவி முதல் மேஜர் ஜெனரலானார்.
எனவே தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல. மேலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு முடிவாகும்.
அல்லாஹ்
நம் அனைவரையும் முழு முஸ்லிம் உம்மத்தையும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!
பத்ரிகையை
திறந்தால் தினசரி பல தற்கொலை செய்திகளை மிக உருக்கமான தகவல்களோடு பார்க்க
முடிகிறது.
தமிழ்நாட்டில் 2024-ஆம்
ஆண்டில் 19,965 பேர்
தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.இதில் பலரும் கடன்
தொல்லையால் தற் கொலை செய்து கொண்டவர்கள். அப்படி தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கிற
போது குடும்பத்தையும் சேர்த்து பலி கொடுக்கிற கொடுமை பெரும்பாலும் கடன்
தொல்லையாலேயே நிகழ்கிறது.
இன்றைய பாணி வாழ்க்கையில்
நாம் அதிகம் அச்சப்பட வேண்டியது கடன் வாங்குவதை பற்றியாகும்.
நவீன வாழ்க்கை சூழல் நம்மை சீக்கிரம் கடன்காரர்களாக ஆக்கி
விடுகிறது
தேடி தேடி வந்து கடன் தருகிறேன் என்று சொல்கிறார்கள். ஜீரோ
இண்டரஸ்ட் என்று சொல்லி அழகு காட்டுகிறார்கள். பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டு
விட்டு தொகையை தவணை முறை செலுத்த அனுமதிக்கிறார்கள்.
ஒரு ரூபாய் கொடுத்தால் போது 50 ஆயிரம் ரூபாய் டிவீ அல்லது
வீட்டு உபயோக பொருளை நீங்கள் எடுத்துச் செல்ல்லாம் என்று ஆசை காட்டுகிறார்கள்.
இதில் எதுவும் மரியாதையான வாழ்க்கைகு அழகல்ல; இது பெரும்பாலும் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி
செலுத்த முடியாமல் நம்மை ஏமாற்றுப் பேர்வழிகளாக மோசடி செய்பவர்களாக ஆக்கி விடக்
கூடும்.
இல்லை எனில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத சிறைத்தண்டனை
இழிவு படுத்தப்படுதல் மன அழுத்தம் போனற துயரங்களுக்கு காரணமாகி விடும்.
சில சந்தர்ப்பத்த்தில் கடனுக்கு மேல் சேருகிற வட்டி அதில்
மாட்டிக் கொள்பவரிடமிருக்கிற கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் பறித்து விடுகிறது.
பொதுவாகவே கடன் நல்லதல்ல
பெருமானார் காட்டிய வழி
கடனில்லாத வாழ்கைக்கு ஆசைப்பட வேண்டும் என்பதாகும் அது சொர்க்கம் செல்லும் வழி என்றார்கள்.
وعَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ
:( مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ : الْكِبْرِ وَالْغُلُولِ
وَالدَّيْنِ ، دَخَلَ الْجَنَّةَ
رواه الترمذي
தொழுகையில் பெருமானார்
பாவத்திற்கு அடுத்து கடனில் இருந்து பாதுகாப்பு தேடுவார்கள்
ஏன் அதிகமாக கடனிலிருந்து
பாதுகாப்பு கேட்கிறீர்கள் என்று தோழர்கள் கேட்ட்தற்கு பெருமானார் (ஸல்) அவர்கள்
சொன்ன பதில் மிக எதார்த்தமானது.
அதிகமா பொய்
சொல்வான்.கொடுத்த வாக்கை நிறைவேற்ற மாட்டான். அது பாவத்திற்கு மேல் பாவத்தை கொண்டு
வந்து சேர்த்து விடும். .
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم
كان يدعو في الصلاة :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ
وَالْمَغْرَمِ . فَقَالَ لَهُ قَائِلٌ : مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ
الْمَغْرَمِ ؟! فَقَالَ : إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ [أي : استدان] حَدَّثَ
فَكَذَبَ ، وَوَعَدَ فَأَخْلَفَ ) رواه البخاري
ومسلم
எச்சரிக்கை!
எவ்வளவு
நல்லவனும் கடன் கரையிலிருந்து சுத்தமக முடியாது.
பல முறை ஷஹீதானாலும் கடன் வாங்கியவன் தப்பிக்க முடியாது.
وروى النسائي عَنْ مُحَمَّدِ
بْنِ جَحْشٍ رضي الله عنه قَالَ
كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ ، ثُمَّ وَضَعَ رَاحَتَهُ عَلَى
جَبْهَتِهِ ثُمَّ قَالَ : سُبْحَانَ اللَّهِ ! مَاذَا نُزِّلَ مِنَ التَّشْدِيدِ ؟
فَسَكَتْنَا وَفَزِعْنَا ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ سَأَلْتُهُ : يَا رَسُولَ
اللَّهِ ، مَا هَذَا التَّشْدِيدُ الَّذِي نُزِّلَ ؟ فَقَالَ : وَالَّذِي نَفْسِي
بِيَدِهِ ! لَوْ أَنَّ رَجُلا قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيِيَ ، ثُمَّ
قُتِلَ ، ثُمَّ أُحْيِيَ ، ثُمَّ قُتِلَ ، وَعَلَيْهِ دَيْنٌ مَا دَخَلَ
الْجَنَّةَ حَتَّى يُقْضَى عَنْهُ دَيْنُهُ )
அத்தியாவசியத்திற்கு கடன் வாங்கினாலும் திருப்பிச் செலுத்தும் சிந்தனை இருக்க வேண்டும். அப்போதுதான்
உரிய மரியாதை கிடைக்கும்.
وعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ
:نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ )
رواه الترمذي
قال السيوطي : أي محبوسة عن مقامها الكريم
திருப்பி
செலுத்தாதவருக்கும் ஜனாஸா தொழ வைக்க பெருமானார் மறுத்தார்கள்.
இரண்டு
தீனார் மட்டுமே கடனாளியான ஒருவருக்கு அபூகதாதா ரலி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே பெருமானார்
(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். அது மட்டுமல்ல . அடுத்த நாள் அவரை சந்தித்த போது அந்த
கடனை அடைத்து விட்டீரா என்று விசாரித்தார்கள். அடைத்து விட்டே ன் என்று அவர் சொன்ன
போது இப்போது தான் உனது நண்பரின் உடல் குளிர்ந்தது என்று கூறினார்கள்
وقد ترك النبي صلى الله عليه وسلم الصلاة على من مات وعليه ديناران ،
حتى تكفل بسدادهما أبو قتادة رضي الله عنه ، فلما رآه من الغد وقال له قد قضيتها ،
قال صلى الله عليه وسلم : ( الْآنَ بَرَدَتْ عَلَيْهِ جِلْدُهُ
கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தவில்லை எனில் அதன் விளைவுகள் மோசமகாவே இருக்கும். உமர்
ரலி எச்சரிக்கிறார்கள்.
فعن عمر بن الخطاب رضي الله عنه أنه قال :( َإِيَّاكُمْ وَالدَّيْنَ
فَإِنَّ أَوَّلَهُ هَمٌّ وَآخِرَهُ حَرْبٌ ) رواه مالك في الموطأ
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தா போது வங்கிகள் கூட வீட்டு வாசலுக்கு ரவுடிகளை அனுப்பி வைப்பதை நாம் பார்க்கிறோம். பொருட்களை அபகரித்து செல்வதை பார்க்கிறோம். நிச்சயம் இது தனி மனித மரியாதையை பாழ்படுத்தி விடக் கூடியதாகும்.
கடன்
வாங்கி விட்டு இயல்பாக செலுத்த முடியாத சூழ் நிலை இருந்தால் அல்லாஹ்விடம் உதவி கேட்க
பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
أبو هريرة- الترمذي
كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ
وسلَّمَ يأمرُنا إذا أخذَ أحدُنا مضجعَهُ أن يقولَ اللَّهمَّ ربَّ السَّمواتِ
وربَّ الأرضينَ وربَّنا وربَّ كلِّ شيءٍ فالقَ الحبِّ والنَّوى ومنزِلَ التَّوراةِ
والإنجيلِ والقرآنِ أعوذُ بِكَ من شرِّ كلِّ ذي شرٍّ أنتَ آخذٌ بناصيتِهِ أنتَ
الأوَّلُ فليسَ قبلَكَ شيءٌ وأنتَ الآخرُ فليسَ بعدَكَ شيءٌ والظَّاهرُ فليسَ
فوقَكَ شيءٌ والباطنُ فليسَ دونَكَ شيءٌ اقضِ عنِّي الدَّينَ وأغنني منَ الفقرِ
இன்னொரு
ஹதீஸ்
وعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ مُكَاتَبًا جَاءَهُ
فَقَالَ : إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي .
قَالَ : أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ
دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ ؟! قَالَ : قُلْ :( اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ
حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ )
ஆடம்பரத்திற்கு கடன் வாங்குவோர் அல்லாஹ்விடம் உதவி கேட்டால் கூட கிடைக்குமா என்று யோசிக்க வேண்டும் ஏனெனில் அல்லாஹ் ஆடம்பரத்தை விரும்புவதில்லை.
ولا تسرفوا إنه لا يحب المسرفين" (الأعراف: 31
பெரும்பாலும்
மக்கள் மாட்டிக் கொள்ளும் கடன்கள்
ஆடம்பர
வீட்டிற்காக – வீட்டு உபயோக பொருட்களுக்காக
ஆடம்பர
கார் போன் போன்ற பெருமைக்காக
ஆடம்பர
வியாபாரத்திற்காக
ஆடம்பர
திருமணத்திற்காக
ஆடம்பர
சுற்றுலாக்களுக்காக
ஆடம்பரத்திற்காக
கடனில் இறங்குவோர் தான் பெரும்பாலும் ஆபத்தான
முடிவுகளை சந்திக்கிறார்கள்.
அவர்களால்
வெளியே சொல்லவும் முடியாது. சொந்தமாய் பிரச்சனையை தீர்க்கவும் முடியாது
இப்போது
திசையன் விளை அருகே காரில் பெற்றோல் ஊற்றி தன் குடும்பத்தை கொளுத்தி நபரின் நிலை இதில்
எந்த வகை என்று தெரியவில்லை.
இதில்
முஸ்லிம் உம்மத்தின் கடமை ஒன்றும் இருக்கிறது.
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ
عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي
سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ
حَكِيمٌ) [التوبة:60].
الغارم என்ற வார்த்தைக்கு திருப்பி செலுத்தும் சக்தியற்ற கடனாளி என்று பொருள்
الغارم شرعًا: هو المَدينُ العاجزُ عن وفاءِ دَينِه
ஜகாத்
பெற தகுதி படைத்தவர்களில் கடனாளிகளும் ஒரு இனம் ஆவார்.
அதனால்
கடனில் சிக்கிக் கொண்டிருப்போர் வெளிப்பார்வைக்கு வசதியானவர்களைப் போல தோன்றினாலும்
அவர்களின் நிலை அறிந்து கடனிலிருந்து அவர்கள் வெளியேறும் அளவு ஜகாத்
கொடுக்கலாம்.
فقد صرح العلماء أنه لا يعتبر المسكن والملبس والفراش والآنية
ونحو ذلك من حاجيات الحياة مانعة من إعطائه ما يقضي دينه.
ومن شروط إعطائه: أن يكون قد استدان في مباح أو في طاعة، فلو
استدان في معصية فلا يعطى.
பொதுவாக
இத்தகைய கடனாளிகள் தமது நிலையை வெளியில் சொல்ல மாட்டார்கள்.
இந்த
சூழலில் நம்மை சுற்றி நமது உறவினர்களில் நண்பர்களில் தெரிந்தவர்களில் நல்லவர்கள் கடனாளிகளாக
இருப்பதை அறிந்தால் அவர்களுக்கு நாமாக தேடிச் சென்று ஜகாத் தொகையை வழங்கு வது கடனை
தீர்க்க உதவுவது மிகப் பெரிய நன்மையாக அமையும்.
சாதாரண
நன்மையல்ல. மகத்தான நன்மை.
மீஜானுக்குப் பக்கத்தில்
பெருமானார் (ஸல்) நிற்பார்கள்.
عن
نافع عن ابن عمر أيضًا قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: "من قضى لأخيه حاجة كنتُ
واقفًا عند ميزانه، فإن رجح وإلَّا شفعت"،
رواه أبو نعيم في الحلية
10
வருடம் மஸ்ஜிதுன்னபவியில் இஃதிகாப் இருந்த நன்மை
عن
ابن عباس رضي الله عنهما: أنه كان معتكفاً في مسجد رسول الله صلى الله عليه وسلم
أتاه رجل
فسلم عليه ثم جلس إلى جنبه، وكان يظهر على الرجل الكآبة والحزن، فقال له ابن عباس رضي الله عنهما: يا فلان أراك
مكتئباً حزيناً
ال: نعم، يا ابن
عم رسول الله صلى الله عليه وسلم لفلان علي حق وحان أجله وليس معي ما يقضيه
فقال
له ابن عباس رضي الله عنهما: إن أحببت أن أكلمه لك
فقال
الرجل: نعم فخرج ابن
عباس رضي الله عنهما من اعتكافه ليقضي حاجة الرجل، فقال الرجل: أنسيت ما كنت فيه، قال
ابن عباس رضي الله عنهما: سمعت صاحب هذا القبر يقول: (من مشى في حاجة أخيه وبلغ
فيها كان خيراً له من اعتكاف عشر سنين
ஜகாத் கொடுக்கிற பொதுமக்கள் நாம் கொடுக்கிறோம் என்பதை பெரிதாக கருதாமல் ஜகாத் பெற தகுதியானவர்களில் யாரையும் தவற விட்டு விடுகிறோமா
என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இப்போவது திசையன் விளையில் நடந்த்து போன்ற குடும்பத்தோடு
சாமபலான கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும்.
திசையன் விளையில் நடந்த விபத்துக்களை போன்ற விபத்துக்கள் இனி நடக்க கூடாது.
கடன்
வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜகாத்
கொடுப்போரும் தேவையுடையோரை தேடிப் பார்க்க் வேண்டும்.
அல்லாஹ்
இந்த ஆண்டு ஜகாத் கொடுத்தோர் அனைவருக்கும் சிறந்த நற்கூலியை தந்தருள்வானாக அவர்களது
குடும்பத்திலும் சொத்துக்களிலும் பரக்கத் செய்வானாக!
சதகத்துல் பித்ரு
சதகத்துல் பித்ரு
என்பது நோன்பு பெருநாள் அன்று தொழ வருவதற்கு முன்னதாக ஒவ்வொரு வரும் அவருக்காகவும்
அவருடைய குடும்பத்திற்காகவும் வெளிப்படுத்துகிற தர்மமாகும்.
حديث عبد الله بن عباس قال: «فَرَضَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ
اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ
فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ
مِنْ الصَّدَقَاتِ»
பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்
.ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 90 ஐ பித்ரு சதகாவாக கொடுக்க வேண்டும்.
ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும்.
வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம்.
தாய் தந்தை மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு பித்ராவை கொடுக்கலாம்.
பெருநாள்
அன்று பொழுது பிறக்கிற போது இந்த தரமம் ஷாபி மத்ஹபில் சுன்னத்தாகவும் ஹன்பி
மத்ஹபில் வாஜிபாகவும் அமைகிறது.
சதகத்துல்
பித்ரின் நேரம்
பெருநாள் அன்று
சுபுஹ்லிருந்து பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னதாக இந்த தரமத்தை நிறைவேற்ற
வேண்டும். முதல் நாள் மஃரிபிலிருந்தும் கொடுக்க தொடங்கலாம். ஏழைகளை சென்றடைவது சில
இடங்களில் சிரம்மாக இருக்கும் என்பறால் ரமலானில் ஓரிரு நாட்களில் முன் கூட்டியே
கொடுத்தாலும் செல்லும்
சிரம்மற்ற
இடங்களில் மிக முன்னதாகவே கொடுப்பது சரியானது அல்ல. சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்
பெருநாள் அன்று
ஏழைகளை திருப்திப்படுத்துவதான் இதன் நோக்கம் என்பதால் இரண்டு நாட்களை விட முன்
கூட்டியே கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஹதீஸ் கூறுகிறது.
பெருநாளில் ஏழைகளில் மக்களுக்கிடையே வலம் வரும் தேவையை தவிருங்கள் .
ولا
يجوز تعجيلها لأكثر من ذلك لأن الغرض منها إغناء الفقير يوم العيد، لما روى عبد
الله بن عمر أن رسول الله ﷺ قال: «اغنوهم
عن الطواف في هذا اليوم»
ஏழைகளை கண்டறிவதில்
இருக்கிற சிரம்ம் காரணமாக வே ரமலான் தொடங்கியதில் இருந்து சதகத்துல் பித்ரை
கொடுக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கினார்கள்.
தேவையற்று முன் கூட்டியே கொடுத்து
விடுவது சதகத்துல் பித்ரின் நோக்கத்தை மாற்றுவதாக அமையும்.
பித்ரத் என்ற
வார்த்தைக்கு இயற்கை என்றும் பொருள் இருக்கிறது.
فِطۡرَتَ
ٱللَّهِ ٱلَّتِی فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ என்றூ திருக்குர் ஆன் கூறுகிறது/
மனித இயல்பு. தான் அனுபவிக்கும் இன்பத்தித்தை வசதியற்ற மக்களுக்கும்
பகிர்ந்து கொள்வது.
அந்த வகையில் இந்த தர்மத்தை இயற்கை தர்ம்ம் என்றும்
சொல்லாம்.
இந்த சிந்தனையில் பார்க்கிற போது, பித்ரு சதகா என்பது வெறும் தர்மமாக மட்டும் இல்லாமல் –ஏழைகளை நாம்
எப்போதும் மறந்து விடக் கூடாது என்று நமது மன்சாட்சியை பக்குவப்படுத்துவதாகவும்
அமைகிறது.
தக்பீர்
பெருநாளன்று தக்பீரை
உரத்துச் சொல்ல வேண்டும் அதுவே பெருநாளின்
அழகாகும்.
முந்திய நாளின் மஃரிபிலிருர்ந்து தொழவைக்க இமாம்
எழுந்திருக்கும் வரை ஈதுல் பித்ர் அன்று தக்பீர் சொல்ல வேண்டும் .
قال ابن قدامة: قال أبو الخطاب: يكبر من غروب الشمس ليلة الفطر إلى خروج الإمام إلى الصلاة في إحدى
الروايتين، وهو قول الشافعي، وفي الأخرى إلى فراغ الإمام من الصلاة.
பாதைகளிலும் தக்பீர்
உயரட்டும்
ويكون التكبير في الفطر مطلقاً غير مقيد، فيكبر في السوق
وفي الطريق وفي البيوت والمساجد ونحو ذلك،
பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை
சுன்னத்தான இரண்டு ரகாத்துகளாகும்.
ஹனபி மத்ஹபில்
வாஜிபான இரண்டு ரகாத்துகளாகும்.
அதிகப்படியான 12 தக்பீர்கள் அதில் சொல்லப்படும்.
ஹனபி மத்ஹபில் 6 தக்பீர்கள் சொல்லப்படும்.
இந்த தக்பீர்களை
பின்னின்று தொழுபவர்களும் சொல்ல வேண்டும்.
ஈதுல் பித்ரு
பெருநாளன்று தொழுகைக்கு வருவதற்கு முன் இனிப்புகளை அல்லது பேரீத்தம் பழத்தை
ஒற்றைப்படையாக சாப்பிட்டுக் கொள்வது சுன்னத்து.
ரமலான் அன்று
வாய்ப்பிருந்தால் புத்தாடை அணிவதும் இல்லை எனில் சுத்தமான ஆடைகளை அணிவதும் அத்தர்
பூசிக்கொள்வதும் சுன்னத் ஆகும்.
யார் மீதாவது
கோபத்தை வைத்து கொண்டு பெருநாளை கொண்டாடாமல் இருப்பது. அல்லது யாருடைய
துக்கத்திற்காகவாவது பெருநாளை தவிர்ப்பது தவறாகும். அல்லாஹ் மகிழ்ச்சியை
அவமதிக்கும் செயலாகும். அதனால் தான் பெருநாள் அன்று நோன்பு வைப்பதை மார்க்கம்
ஹரமாக ஆக்கியிருக்கிறது.
வாழ்த்து
தொழுகைக்குப் பிறகு
வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் சுன்னத் ஆகும்
ஈத் முபாரக் என்றும்
சொல்ல்லாம்.
ஷவ்வாலின் ஆறு நோன்பு
عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : (من
صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر) رواه أحمد ومسلم وأبو داود
மார்க்கம் கற்றுத்தரும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்போம்.
அல்லாஹ் மிகச் சிறந்த கவுரவத்தையும் நிம்மதியையை நம் அனைவருக்கும் தருவான்