வெள்ளிமேடை منبر الجمعة
தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்
Wednesday, February 11, 2026
Thursday, February 05, 2026
அல்லாஹ் கருணை மிக்கவன்
அல்லாஹ் கருணை மிக்கவன் என்று கூறுகிறது திருக்குர் ஆன்.
وكان بالمؤمنين رحيما
அதிகாரிள் பெரும்பாலும் ஒரு வரை தண்டிபதற்கு ஏதாவது காரணம் கிடைக்கிறதா என்று
தேடுவார்கள்.
மாதக் கடைசில் சாலையில் நிற்கிற போலீஸ் காரர் ஒரு வாகன ஓட்டியிடம் அனைத்து சான்றுகளும்
சரியாக இருந்தாலும். ஹெட்லைட்டில் ஏன் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்று கூறி ஒரு
பைன் போடுவார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய மாநில மக்களுக்காக தானே வாதாடினார்.
மம்தா பானர்ஜி, அப்போது அவர் தேர்தல் கமிஷன் என்னென்ன அற்பமான காரணங்களுக்காக
வெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்கியுள்ளது என்று அடுக்கடுக்காக
பட்டியலிட்டு கூறினார். வீடு மாறி மாமியார் வீட்டுக்கு குடிபெயர்ந்த மருமகள் வாக்காளர்
பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளார் என்பது போன்ற பல நிகழ்வுகளை நீதிமன்றத்திடம்
எடுத்துக் கூறியுள்ளார்.
குற்றங்களை தேடி தண்டனை தருவது , தண்டனைகளுக்காக குற்றங்களை உருவாக்குவதும்
தான் உலக இயல்பு.
ஆனால் அல்லாஹ் கருணை மிக்கவன். அவனது பெருங்
கருணைக்கு ஒரு எடுத்துக் காட்டு.
அவன் மக்களை மன்னிக்கவும் அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பவும் காரணங்களை தேடுவகிறான்.
அவனே காரணங்களை உருவாக்குவதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள். .
ஆன்மீக அறிஞர்கள் சில உதாரணங்களை கூறுவதுண்டு.
ஒரு தந்தை தன் மகன் தங்களை மதிக்க வில்லை என்று கூறி அல்லாஹ்விடம் முறையிட்டார்.
அல்லாஹ் மகனை அழைத்து விசாரித்தான். மகன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். அந்த நேரத்தில்
சொர்க்கத்திற்கு செல்வதற்கு தந்தைக்கு ஒரே ஒரு நன்மை மட்டுமே தேவைப்பட்டது. மகனிடமோ
ஒரே ஒரு நன்மை மட்டுமே இருந்த்தது.
சூழ்நிலையை கவனித்த மகன் இறைவனிடம் மன்றாடினான். அல்லாஹ்வே என்னிடம் இருக்கிற
ஒரு நன்மையை எனது தந்தைக்கு கொடுத்து அவரையாவது சொர்க்கத்துக்கு அனுப்பு என்று கேட்பான்.
அல்லாஹ் கூறுவான் அவரை நான் சொர்க்கத்துக்கு
அனுப்புகிறேன். இவ்வாறு கேட்ட காரணத்திற்காக உன்னையும் நான் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்
என்று சொல்லி இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவான்.
இன்னொரு மனிதரை அல்லாஹ் விசாரிப்பான். அவருக்கு எந்த நன்மையும் இருக்காது. நீ
நரகிற்கு போ என்று சொல்லிவிடுவான். அந்த மனிதன் அல்லாஹ்வின் உத்தரவு வந்தவுடன் நரகை
நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்துவிடுவான். அல்லாஹ் அவனை அழைத்து நான் நரகிற்கு போ என்கிறேன்
நீ இவ்வளவு வேகமாக போகிறாயே ஏன் என்று கேட்பான் , அவர் சொல்வார். இறைவா அந்த உலகில்
தான் நீ சொன்னதை நான் கேட்கவில்லை. இந்த உலகிலாவது நீ சொன்னதை விரைவாக கேட்டு விட வேண்டும்
என்று செல்கிறேன் என்று சொல்வார். சரி நீ சொர்க்கம் செல் என்று அல்லாஹ் கூறுவான்.
இன்னொரு மனிதருக்கு நரகிற்கு செல்ல உத்தரவிடப்படும். அவன் திரும்பிப் பார்த்த
படியே செல்வான். ஏன் திரும்பி திரும்பி பார்க்கிறாய் என்று அல்லாஹ் கேட்பான். இறைவா!
உலகில் நான் பாவங்கள் செய்த போதெல்லாம் என்னை நீ மன்னித்திருக்கிறாய். இங்கும் மன்னித்து
விட மாட்டாயா என்ற ஆசையில் தான் திரும்பி பார்க்கிறேன் என்பார் . சரி நீ சொர்க்கத்திற்கு
செல் என்று அல்லாஹ் கூறிவிடுவான்.
இவ்வாறு மன்னிக்கும் கருணை எந்த அளவிற்கு இருக்கும் எனில் தப்ரானியில் ஒரு ஹதிஸ்
வருகிறது.
இபுலீஸ் தனக்கும் மன்னிப்பு கிடைத்து விடும் என ஆசைப்பட்டு தலையை உயர்த்திப்
பார்ப்பான்.
الطبراني =
حذيفة بن اليمان
والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ الجنَّةَ الفاجِرُ في دِينِه، الأَحمقُ في معيشتِهِ، والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ
الجنَّةَ الَّذي قد مَحشتْهُ النَّارُ بذنبِهِ، والَّذي نَفسي بيدِه ليَغفرَنَّ
اللهُ يومَ القيامةِ مَغفرةً يتطاوَلُ لها إبليسُ رجاءَ أن تُصيبَهُ
இந்த அரும் குணத்தின் அடிப்படையிலேயே அல்லாஹ் தனது கருணையை வெளிப்படுத்தவே சிறப்பான நாட்களை நமக்கு தருகிறான்.
சமீபத்தில் நம்மை கடந்து சென்ற பராஅத் இரவாகட்டும், ரமலான் மாதமாகட்டும். லைலத்துல் கத்ருடைய இரவாகட்டும். பெருநாட்களின் இரவாகட்டும்.
அரபா உடைய நாளாகட்டும், வெள்ளிக்கிழமையாகட்டும். பlயணத்தில் இருக்கும் போதாகட்டும். இவை அனைத்தும்
மக்கள் மீது தனது கருணையை பொழுய அல்லாஹ் செய்து கொண்ட ஏற்பாடுகளேயாகும்.
நம்முடைய கடமை என்ன வெனில் ?
நாம் செய்கிற காரியங்களில் அல்லாஹ்வின் அருள் கிடைத்து விட வேண்டும் என்ணத்தில்
வாழ்வதும் செயல்படுவதும் நமது கடமையாகும்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை மதித்து ஆசிரியர்களை மதித்து அல்லாஹ்வின் கருனையை தேடிக்
கொள்ள ஆசைப்பட்டால் நிச்சயம் கிடைக்கும்.
வியாபாரிக்ள் வாடிக்கையாளரின் நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் போது அல்லாஹ்வின்
கருணை கிடைக்கும்.
அதிகாரிகள் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் செயல்படும் போது இதனால் இறைவனின்
அருள் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் நிச்சயம் அந்த கருணை கிடைத்து
விடும்.
நம்மை மன்னிப்பதற்கும் சொர்க்கத்திற்கு அனுப்புவதற்கு பொருத்தமான ஒரு காரணம்
அல்லாஹ்வுக்கு கிடைத்து விட வேண்டும்.
நாம் எத்தகைய நிலையில் இருந்தாலும் இதை புரிந்து கொண்டு அந்த கருணை மழைக்குள் நனைந்து விட வேண்டும்.
جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال: (إن لربكم
عز وجل في أيام دهركم نفحات، فتعرضوا لها، لعل أحدكم أن تصيبه منها نفحة لا يشقى
بعدها أبداًً) رواه الطبراني
அதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.
இப்போது
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற வாழ்க்கையை பற்றிய மமதை அல்லது மேலெண்ணம் நம்மை ஏமாற்றி
விடக் கூடாது.
ا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا
تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
(5)
நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் சுகம் அல்லது மதிப்புதான் நம்மை அல்லாஹ்வின் கருன்ணையை அலட்சியப்படுத்த தூண்டுகிறது.
தினசரி
காலை எழுந்த்தும் ஒரு அல்ஹம்துலில்லாஹ் சொல்ல தோன்றவில்லை எனில் நமது காசு பணம் அல்லது
நமது ஆரோக்கியம் நம்மை ஏமாற்றி விட்ட்து என்றே பொருளாகும்.
ஒரு
பெரிய பணக்காரர் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார்.
சில ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு அவர் வசதியானவர். அங்கு ஒரு பெரிய ஆலிமும் இருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
அந்த பணக்காரையும் அந்த ஆலிமையும் சந்திக்க வைத்தார்கள். பணக்கார்ரை சந்தித்த சில நொடிகளில்
ஆலிம் அவரிடம் விடை பெற்று வந்து விட்டார். ஏற்பாட்டாளர்கள் ஆலிமிடம் என் ஹஜ்ரத் அவரிடமிருந்து
சட்டென வந்து விட்டீர்கள் என்று கேட்டனர். ஹஜ்ரத் சொன்னார். நான் அவரிடம் உங்கள் பணிகள்
எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டேன். ஏதோ நடக்கிறது என்று அவர் கூறினார்.
ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர்ந்த் அவர் ஒரு அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வில்லை
அதனால் எனக்கு அவரிடம் பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை என்று கூறினார்.
நாம்
அல்லாஹ்வுடைய கருனையை உணர்ந்து கொள்ளாமல் போவது
மமதையாகவும் நம்மிடம் இருப்பவைகளை பற்றி நாம் பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அமைந்து
விடும்.
அருமையானவர்களே
இது மிக ஆபத்தமான ஏமாற்றமாகும்.
அல்லாஹ்
நம்மை பாதுகாப்பானகா!
வாழ்க்கை
எப்போதும் ஒரே போங்கில் இருப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வைவும் அவனது
கருணையையும் நினைவு கொள்வோர் – வெற்றி பெறுகிறார்கள்.
இன்று
இமாம் புகாரி எந்த அளவு மதிக்கப்படுகிறார்.
? அவருடைய வாழ்வையும் நமது மரியாதையையும் நாம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம். அவர்
அளவுக்கு மரியாதைக்குரியவர்களா நாம் ?
அவருக்கு
என்ன நிலை ஏற்பட்டது என்பதை பாருங்கள்!
அல்லாஹ்வின்
வேதத்திற்கு அடுத்து அவருடை நூல் மதிக்கப்படுகிறது.
புகாரியில்
ஒரு செய்தி இருந்தால் மக்கள் அதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
இன்று
இந்த அளவில் மதிக்கப்படுகிற இமாம் புகாரிக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் பெரிய மரியாதை
கிடைத்தது.
அவர்
அவருடைய இறுதி நாட்களில் நைஸாபூருக்கு வந்த போது 8 ஆயிரம் குதிரைகள் அவரை வரவேற்றன.
பல்லாயிரக்கணக்கானோர் அவரை காண திரண்டு வந்தனர்.
ஆனால்
அவருடைய ஒரு கருத்து அங்கிருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான போது நைசாபூரை விட்டு அவர்
ரகசியாமாக இரவில் வெளியேற நேர்ந்தது.
அங்கிருந்து
அவர் தனது சொந்த ஊரான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகருக்கு வந்தார் . அங்கும் மக்கள்
அவருக்கு ஏராளமான வரவேற்பு தோரணங்களை கட்டி வரவேற்றனர்.
ஆனால்
சில நாட்களில் புகாராவின் ஆளுநர் காலித் தன் மகன்களுக்கு பாடம் நட்த்த வீட்டும் வருமாறு
அழைத்தார். இமாம் புகாரி அதை மறுக்கவே அவர் எதிரியானார்,
தனது
சொந்த ஊரான புகாராவை விட்டு வெளியேறி அவர் சமர்கண்ட நகரில் குடியேற நினைத்தார். அந்த
நகரம் அவருக்கு பிடித்தமான நகரம்.
ஆனால்
சமர்கண்டில் இருந்தவர்கள் அவர் அங்கு வரக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள்.
இருந்த
இட்த்திலிருந்து புறப்பட்டாகி விட்டது. செல்ல வேண்டிய இட்த்திற்கு அனுஅதியும் கிடைக்க
வில்லை.
நடுவழியில்
தனது உறவினர்களின் வீட்டில் கர்தன்க் என்ற இடத்தில் அவர் தங்கினார்.
தனது
நிலை அவருக்கு மிகவும் துயர் அளித்தது. யாரிடமும்
அவர் புலம்ப வில்லை. தனது பெருமைகளை சொல்ல கெஞ்சவும் இல்லை.
அவர்
தங்கியிருந்த அந்த சின்ன ஊருக்கும் ஆட்சியாளர்களின் தூதர் வந்து சேர்திருப்பதாக இமாம்
புகாரி அறிந்தார்.
அல்லாஹ்விடம்
முறையிட்டார்.
ربي إني ضاقت علي الأرض فاقبضني
இறைவா!
பூமி எனக்கு மிகவும் நெருக்கடியாகிவிட்டது. நீ என்னை எடுத்துக் கொள் என்று உருகினார்.
அந்த
ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து புறப்ப ஆயத்தமானார்.
அந்த
காட்சியை கண்ட அவரது மாணவர் غالب بن جبريل கூறுகிறார்.
جاء رسول إلى سمرقند بإخراجه، فلما وافى تهيأ
للركوب، فلبس خفيه وتعمم، فلما مشى قدر عشرين خطوة
இது
பற்றி செய்தி கிடைத்தவுடன் இமாம் புகாரி அடுத்த பயணத்திற்கு தயாரானார். தனது காலுறைகளை
அணிந்து கொண்டார். தலைபாகை கட்டிக் கொண்டார். ஒரு இருபது அடி நடந்திருப்பார். அதற்கு
சரிந்து விழுந்தார். இறப்பெய்தினார்.
எத்தகைய
உயர்ந்த - செல்வாக்கு மிக்க மனிதருக்கு என்ன
நிலை பாருங்கள்?
ஆனால் அல்லாஹ் இமாம் புகாரியை கை விட வில்லை.
அவருடைய
அந்தஸ்த்தை உடனேயே மக்களுக்கு காட்டினான்.
அவர்
நல்லடக்கம் செய்யப் பட்ட இட்த்திலிருந்து ஒரு அலாதியான நறுமணத்தை வெளிப்படுத்தினான்.
பல நாட்கள் அது நீடித்தது.
غالب بن جبريل கூறுகிறார்.
فلما دفناه فاح من تراب قبره رائحة غالية فدام على ذلك أياماً،
இதை அறிந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.
பலரும்
இமாம் புகாரியின் கபருடைய மண்ணை எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். நாங்கள் இப்படியானால்
கப்ரு வெளியே தெரிந்து விடும் என்று பயந்து அந்த கப்ரை சுற்றி மக்கள் மண்ணை எடுக்க
முடியாத வாறு ஒரு மூங்கில் கூடை செய்து மூடி வைத்தோம்.
فجعل الناس
يختلفون ويتعجبون. وأما التراب فإنهم كانوا يرفعون عن القبر حتى ظهر القبر
அவரை எதிர்த்தவர்கள் அவருடைய மண்ணறைக்கு வந்து அந்த அதிசயத்தை பார்த்து தாங்கள் தவறு செய்து விட்ட்தாக மனம் வருந்தினார்கள்.
وخرج بعض مخالفيه إلى قبره وأظهر التوبة والندامة.
இவற்றை எல்லாம் விட இமாம் புகாரிக்கு அல்லாஹ் செய்த பெரிய கிருபை என்ன வெனில் ?
கதீப்
அல் பக்தாதி கூறுகிறார்.
அப்துல்
வாஹித் பின் ஆதம் எனும் அறிஞர் கூறினார்.
ஒரு
நாள் கனவில் நான் பெருமானாரை பார்த்தேன். நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீகிறீர்கள் என்று
கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள் புகாரியின் வருகையை எதிர்பார்த்திருப்பதாக சொன்னார்,
நான்
உடனே விழித்தெழுந்து விசாரித்த போது நான் கனவு கண்ட அதே நாளில் இமாம் புகாரி வபாத்தாகி
இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறுகிறார்.
وروى الخطيب البغدادي
عبد الواحد بن آدم الطواويسى قال: رأيت
النبي صلى الله عليه وسلم في النوم ومعه جماعة من أصحابه، وهو واقف في موضع فسلمت
عليه فرد السلام. فقلت: ما وقوفك يا رسول الله؟ فقال: أنتظر محمد بن إسماعيل
البخاري
இமாம்
புகாரியின் இந்த இறுதி நேர வரலாறு நமக்கு சொல்லும் அழுத்தமான பாடம்.
நாம்
இப்போது இருக்கிற நிலை எப்போதும் தொடரும் என்பதில்லை நாம் எவ்வளவு நல்லவராக மக்களுக்கு
பயனுள்ளவராக இருந்தாலும் சரி
எனவே
நம்மிடமிருக்கிற எதை வைத்தும் நாம் பெருமிதம் கொண்டு அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
அல்லாஹ்வின்
கருணை பார்வையை எப்போதும் எதிர்பார்த்தவர்களாகவே இருக்க வேண்டும்.
பராஅத்
ரமலான் லைலத்துல் கத்ர் போன்ற நல்ல நாட்கள் அல்லாஹ்வின் கருனையை நமக்கு கொண்டு வந்து
சேர்க்கிற நாட்களாகும்.
நாம்
நமது வாழ்க்கை கொடுத்திருக்கிற வசதி வாய்ப்புக்களில் அல்லது பாதுகாப்பில் மதி மயங்கி
இந்த கருணை மழையில் நனைந்து விடாமல் இருந்து விடக் கூடாது.
அல்லாஹ்வின்
அருள் பொழியும் நாட்களையும் நேரங்களையும் நாம் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.
நாம்
எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வின் கருணை பொழியும் நாட்களை உள்ளார்த்தமாம பயனப்டுத்திக்
கொள்ள தயாராக இருப்போம்
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
Thursday, January 29, 2026
தங்கமும் வெள்ளியும் தேவைக்கு மட்டும்
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ" (آل عمران: 14)
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 10,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்த
வருடம் தொடங்கியதிலிருந்து கடந்த 20 நாட்களுக்குள் தங்கத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்களுடைய
மகள்களுடைய திருமணத்திற்காக அல்லது வேறு தேவைகளுக்காக தங்கம் ஆபரணங்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிற நடுத்தர குடும்பத்தினர் மிகப் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
நடுத்தர
குடும்பத்தினரை
மட்டுமல்ல உலக வர்த்தகத்தையே இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இத்தனைக்கும்
காரணம் ஒரு மனிதர்.
வேறு
யாரும் இல்லை. அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அவர்கள் தான்.
அமெரிக்காவின் மிகப்
பெரிய ஆயுதக் கப்பலான அர்மடா என்ற விமானம் தாங்கி கப்பல் இரானை நோக்கி செல்கிறது. அமெரிக்க வீரார்கள் தேவை எனில் இரானை விரைவாகவும் பயங்கரமாகவும் தாக்கு வார்கள் என்று அமெரிக்க அதிபர் பெருமையாக கூறியதே இந்த தீடீர் விலையேற்ற பாய்யசலுக்கு காரணாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
The latest peak
came after Trump said a “massive Armada” was on its way to Iran and that US
forces were prepared to act with “speed and violence, if necessary”. ( அல் ஜஸீரா)
தங்கத்தின் விலை கடந்த வருடம் 64 சதவீதம் விலை உயர்ந்தது
.இதற்கு காரணம் டிரம்ப் தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மதிப்பு மிக உலோகத்தின் இந்த விலையேற்றத்திற்கு காரணம் அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டதும் சர்வதே வர்த்தகத்தையும் நிறுவனங்களையும் அவர் பந்தாடியது ஆகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.( அல் ஜஸீரா
அதனால்
தான் பெருமானார் (ஸல்) அவரகள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் பெறக்
கூடிய ஏழு நபர்களை வரிசைப்படுத்துகையில் நீதமான தலைவர் என்பதை முதலில் கூறினார்கள்.
தங்கத்தின்
விலை ஏற்றம் கவலைக்குரியது என்றால் அதற்கு காரணமாக இருக்கிற அடாவடி அரசியல் அதை விட
கவலைக்குரியதாகும்.
ஏனெனில்
இத்தகையோரால் தங்கம் போன்ற மதிப்பு மிக்க பொருள்களின் விலை மட்டுமல்ல அத்தியாவசியமான
உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரக் கூடும்.
நீதியற்ற
ஆட்சியாளர்களால் நகரங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் ஒரு எதார்த்தமாகும்.
நான்கு
அம்சங்கள் இருந்தால் தான் நகரங்கள் சோதனைகளுக்கு ஆளாகாமல் பாதுகாப்பக இருக்கும் என்கிறார்
இமாம் குர்துபி ரஹ்
قال الإمام القرطبي رحمه الله: قيل: كل بلدة فيها
أربعة فأهلها معصومون من البلاء: إمام عادل لا يظلم, وعالم على سبيل الهدى, ومشايخ
يأمرون بالمعروف وينهون عن المنكر ويُحرضون على طلب العلم والقرآن, ونساؤهم
مستورات لا يتبرجن تبرج الجاهلية الأولى.
உலகம் முழுக்க நியாய உணவுள்ள மக்களுக்கு பெரிய கவலை என்ன வெனில்?
இப்படி
அடாவடியாக - அக்கிரமமாக நடந்து கொள்கிற ஆட்சியாளருக்கு எதிராக உலக அரசியல் தலைவர்கள்
ஒன்றிணைந்து குரல் கொடுக்காமல் ஒவ்வொரு வரும் அவரவரவது பாதுகாப்பையும் லாபத்தையும்
மட்டுமே கருத்தில் கொண்டு பேசாமல் இருக்கிறார்களே என்பது தான்.
திருக்குர்
ஆன் உலகத்திற்கு ஒரு உத்தரவாதம் கொடுக்கிறது.
நியாயத்திற்காக
குரல் கொடுக்கிற போது நீங்கள் ஒற்றை ஆளாக இருந்தாலும் – அக்கிரமக்காரன் எவ்வளவு பெரிய
சக்தியாக இருந்தாலும் அல்லாஹ் நீதிக்கு குரல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு தருவான்.
மூஸா
அலை அவர்களை கொலை செய்து விட வேண்டும் என்று பிர் அவ்னுடைய சபையில் இருந்தவர்கள் தீர்மாணம்
செய்த போது அந்த சபையில் இருந்த ஒரு மனிதர் மூஸா வுக்கு ஆதரவாக பேசினார். அல்லாஹ் கடைசியில்
கூறுகிறான். அல்லாஹ் அவரை பாதுகாத்தான்.
وَقَالَ رَجُلٌ
مُّؤْمِنٌ مِّنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَن
يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُم بِالْبَيِّنَاتِ مِن رَّبِّكُمْ
ஏதேனும்
ஒரு விசயத்தில் நெருக்கடிக்கு ஆளாகிற போது நாம் கடைபிடிக்க வேண்டிய முதல் காரியம் தவக்குல்
ஆகும்.
இந்த
விலை ஏற்றத்தால் அல்லாஹ் நாடாத ஒன்றும் நடந்து விட முடியாது. அல்லாஹ் உதவி செய்தால்
இந்த விலை ஏற்றம் நம்மை பாதிக்காமல் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று முழு அளவிலான
தவக்குல் வைக்க வேண்டும்.
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ}" (سورة
الطلاق: 3
நம்முடைய வீட்டு பெண்களுக்கு நாம் இதை சொல்லிக் கொடுக்க
வேண்டும்.
திருமண வயதில் பெண்களை வைத்திருக்கிற ஒவ்வொரு தாயையும்
இந்த விலையேற்றம் பீதிக்குள்ளாக்குகிறது. அது அவசியமில்லை அல்லாஹ் துணை நிற்பான். அல்லாஹ்
உதவி செய்யும் போது பவுன் விலை இரண்டு இலட்சம் என்றாலும் அதை வாங்கி விட அல்லாஹ் தவ்பீக்
செய்வான்
சமீபத்தில் மரணமடைந்த பேரறிஞர் துல் பிகார் சாஹிப்
தன் வாழ்வில் நடந்த் ஒரு அனுபவத்தை கூறினார்.
நான் வெளிநாட்டில் இருக்கிற போது ஹஜ்ஜுக்கு போகலாம்
என்று முடிவானது. என்னுடன் வருவதற்கு 28 டாக்டர்கள் சேர்ந்தனர். ஒரு சாமானிய மனிதரும்
இணைந்தார்.
டாக்டர்கள் அன்றிலிருந்து மிக திட்டமிட்டு வேண்டியவற்றை
வாங்கவும் செய்யவும் தயாரானார்கள். அந்த சாமாணிய மனிதர் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்
என்று இயல்பாக இருந்தார். அவரை நாங்கள் தவக்குலி என்று அழைத்தோம்.
புறப்படும் நாள் வந்த போது எல்லோரும் முன் கூட்டியே
போர்டிங் பாஸ் எடுத்து வைத்து தயாராக வந்தனர். தவக்குலியை காணவில்லை. நானும் காத்திருந்த
பிறகு விமானத்தில் ஏறிவிட்டேன்.
கவுண்டர் மூடுவதற்கு ஐந்து நிமிடம் இருக்கும் போது
தவக்குலி வந்து சேர்ந்தார். என் அருகே வந்து உட்கார்ந்த அவர் சொன்னார். ஹஜ்ரத் நான்
சில வேலைகளால் வருவது தாமதமாகி விட்டது . ஆனாலும் ஐந்து நிமிட்த்திற்கு முன்னாள் வந்து
விட்டேன். கவுண்டரில் இருந்த நபர் என்னை அனுமதிக்க முடியாது என்றார். நான் இன்னும்
ஐந்து நிமிடம் இருக்கிறதே என்றேன். அதிகாரியிடம் விசாரித்து வருகிறேன் என்று சொல்லி
அவர் சென்றார்.
அந்த அதிகாரி இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறதே என்று
பிறகு எப்படி அவரை திருப்பி அனுப்ப முடியும் என்று கேட்டார். கவுண்டரில் இருந்தவர்
சொன்னார். ஐயா ! இவர் வர தாமதமானதால் காத்திருப்போர்
பட்டியலில் இருந்த ஒருவருக்கு சீட் கொடுத்தாகி விட்டது. எக்கானமி வகுப்பின் சீட்கள்
அனைத்தும் புல் ஆகிவிட்டன என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி பர்ஸ்ட்
கிளாஸில் இடமிருந்தால் அவரை அப்கிரேட் செய்து முதல் வகுப்பில் அமர வையுங்கள் என்று
கூறினார். அதனால் எனக்கு முதல் வகுப்பில் இடம் கிடைத்திருக்கிறது என்று கூறி விட்டு
எழுந்து முதல் வகுப்பிற்கு சென்று விட்டார். விமானம் தரையிரங்கிய போது அவர் முன் கூட்டியே
இறங்கிவிட்டார். இமிக்ரேசன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து முன் கூட்டியே ஜித்தாவில்
பஸ்ஸிலும் அமர வைக்கப் பட்டார். என்னுடன் வந்த டாக்டர்கள் முனுமுனுத்தார்கள். என்னை
பார்த்தார்கள்.
நான் சொன்னேன்.
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ}" (سورة
الطلاق: 3
இது மிக எதார்த்தமான ஒரு அனுபவமாகும். அல்லாஹ்வின்
மீது முழு தவக்குல் வைப்பவர்கள் நிச்சயமாக நிம்மதியடைவார்கள்.
என்வே தங்கத்தின் விலை அதிகரிக்கிறதே என்று ஏழைகள்
கவலைப் பட வேண்டாம்.
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து நிம்மதியாக இருப்போம்.
அல்லாஹ் நம் காரியங்களை இலேசாக்கி வைப்பான்.
நெருக்கடிகளின் போது கடைபிடிக்க வேண்டிய இரண்டாவது நிலைப்பாடு
சப்ரு பொறுமை ஆகும்.
சப்ரு என்றால் சும்மார் இருப்பது என்று அர்த்தமல்ல.
ஆசைகளையும் தேவைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு பதற்றமின்றி நிதானமாக செயல்படுதே பொருமையாகும்.
எகிப்து அரசரின் கனவுக்கு விளக்கமளித்த யூசுப் அலை அவர்கள் “ஏழாண்டுகள்
பட்டினி வரப்போகிறது என்று கூறிய போது அரசர் பதட்ட மடைந்தார். யூசுப் அலை அவர்கள் நிதானமாக
திட்டம் சொன்னார்கள்.
முந்தைய ஏழாண்டு விளைச்சலை மொத்தமாக சாப்பிட்டு விடாதீர்கள். அவற்றை
முறையாக சேமித்து வையுங்கள். அடுத்த ஆண்டில் அத்தியாவசியத்தேவைக்கு ஏற்ற அளவில் செலவழியுங்கள்.
அப்படியானால் பட்டினியிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார்.
قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدتُّمْ
فَذَرُوهُ فِي سُنبُلِهِ إِلَّا قَلِيلًا مِّمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ
يَأْتِي مِن بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ
إِلَّا قَلِيلًا مِّمَّا تُحْصِنُونَ (48)
அதாவது மிக அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் தங்கத்தை வாங்க வேண்டும்.
அதே போல அவசியம் இருந்தால் மட்டுமே விற்க வேண்டும்.
இப்போது தங்கத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்குமே என்பது வாஸ்தவம்
தான்.
விற்பதற்காகவே வைத்திருந்தால் விற்கலாம் தான்
மூலதனமாக வைத்திருந்தால் இன்னும் பத்திரமாக அதை வைக்கலாம். ஏனெனில்
இன்னும் விலை ஏறக் கூடும். இல்லை எனில் விற்ற தங்கத்தை திரும்ப வாங்க நினைத்தால் இன்னும்
அதிக காசு கொடுக்க வேண்டியதாகிவிடும்.
நகைக் கடை வியாபாரிகள் சொல்வதை கவனித்துப் பாருங்கள். நாங்கள் இன்று
தங்கம் விற்றால் நேற்றைய நிலவரத்தை விட இன்று எங்களுக்கு லாபம் என்று நினைப்பீர்கள்.
ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் நாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால்
இன்று காலை விற்ற தங்கத்திற்கு பதிலாம மாலை வேறு தங்கம் வாங்கத்தான் வேண்டும். அப்போது
விலை ஏற்றம் எங்களையும் பாதிக்கும் என்கிறார்கள்.
என்வே இந்த பிரச்சனை போகிறவரை போகட்டும் என்று பொருமை காப்பதே நல்லது
என்கிறார்கள் அறிஞர்கள்.
இது போன்ற சமயத்தில் பொறுமையை கடைபிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ் கூறுகிறார்கள்
قال الحافظ ابن حجر رحمه الله: "الصبر على البلاء، وترك
التضجر من الآلام، لئلا يفضي إلى أشدِّ منها"
துன்பங்களை எதிர்கொள்ளும் போது
பொறுமையாக இருங்கள், வலிகளைப் பற்றி புலம்புவதை தவிர்க்கவும், இல்லையெனில் அது இதை விட மோசமான
ஒன்றுக்கு வழிவகுக்கும்.
ஆடம்பரங்களை தவிர்த்துக் கொள்வதும் பொறுமையின் ஒரு அம்சமாகும். தங்கம்
விலை ஏறும் போது ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாலும் இந்த விலை
ஏற்றம் நம்மை பாதிக்காது.
தங்கம் ஆடம்பரத்திற்கு பயன்படுவதும் தங்கத்தின் விலை ஏற்றம் அதிகரிப்பதற்கான
ஒரு காரணமாகும்.
தங்கம் ஒரு உறுதியான உலோகம். அது சீக்கிரம் கரைந்து போகாது. அதன்
பளபளப்பு நிலையானது. இந்த காரணத்தால் தங்கம் மதிப்பு மிக்கது. உண்மை தான்.
குர் ஆனில் 7 இடங்களில் தங்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சொர்க்க வாசிகளுக்கு தங்க காப்புகள் அணிவிக்கப்படும் என்று திருக்குர்
ஆன் கூறுகிறது.
أُولئِكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِي مِنْ
تَحْتِهِمُ الأنْهٰـرُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ﴾ (الكهف، آية31
மஸ்ஜிதுன்னபவியில் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
பட்டுள்ளது.
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ
وَلا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ الله فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ﴾ (التوبة: آية34
ஆண்களோ பெண்களோ தேவைப்படும் எனில் உடைந்த பல் அல்லது மூகை சரி செய்து
கொள்ள் தங்கத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.
அறியாமைக் காலத்தில் குலாப் என்ற இட்த்தில் நடை பெற்ற சண்டையில் உர்பஜா ரலி அவரக்ளின் மூக்கு துண்டாக்கப் பட்டது. அவர் வெள்ளியில் மூக்கு செய்து மாட்டிக் கொண்ட போது அதில் நாற்றம் வர ஆரம்பித்தது. நபி (ஸல்) அவரக்ள் அவருக்கு தங்கத்தில் மூக்கு செய்து கொள்ள அனுமதித்தார்ர்கள்.
حُرِّمَ لباس الحرير والذهب على ذكور أمتي، وأُحِلَّ
لإناثهم" (رواه الترمذي
அப்படியானால் குழந்தைகளுக்கு தங்கம் அணிவிக்கப்படும் போது பெற்றோர்கள்
அல்லது அணிவிப்பவர்களே குற்றவாளிகள் ஆவார்கள்.
இதே அலைவரிசையில் தான் தங்கம்
வெள்ளி தட்டு தம்ளர் போன்ற பாத்திரங்களை பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. அவை
ஆடம்பரங்களே!
لا يجوزُ
الأكلُ والشُّربُ في أواني الذَّهَبِ والفِضَّة، وهذا باتِّفاقِ المَذاهِبِ
الفِقهيَّةِ الأربَعةِ:
لقول النبي
مَن شَرِبَ في إناءٍ من ذَهبٍ أو فِضَّة، فإنَّما
يُجرجِرُ في بطنِه نارًا من جَهنَّم
الراوي
: أم سلمة أم المؤمنين |
المحدث
: البخاري
தங்க அணிகலன் விவகாரத்தில் ஆண்கள் எல்லா நிலையிலும் பொறுமை காத்தால்
அதன் பலனை மறுமையில் அடையலாம்.
இங்கு பகட்டுக்காக அணிந்தால் மறுமை அந்த மரியாதை கிடைக்காது.
مَن لبسَ الحريرَ في الدُّنيا، لم يلبَسهُ في
الآخِرةِ ومَن شَربَ الخمرَ في الدُّنيا، لَم يَشرَبْها في الآخرةِ، ومن شرِبَ في
آنيةِ الفضَّةِ والذَّهبِ، لم يشرَب بِها في الآخرةِ . ثمَّ قالَ: لِباسُ أَهْلِ
الجنَّةِ، وشرابُ أَهْلِ الجنَّةِ، وآنيةُ أَهْلِ الجنَّةِ
الراوي : أبو هريرة | أخرجه الطحاوي:
இப்போது பலர் பணத்தின் செல்வாக்கை காட்ட வாட்சில்
ஏன் வீட்டு பாத்ரூமில் கூட தங்கத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த எச்சரிக்கை
பொருந்த்தும்.
இது தேவையற்றதும் ஆணவத்தின் வெளிப்பாடுமாகும்.
நெருக்கடி நேரத்தில் கட்டபிடிக்க வேண்டிய மூன்றாவது
ஒழுங்கு
சமூக நலனுக்கு உழைப்பதாகும்.
மக்கள் நெருக்கடியிலிருந்து மீள கூடுமானவரை உழைக்க
வேண்டும். மஸ்லஹா
தங்கத்தின்
விலை கண் மணி தெரியாத அளவு அதிகரிக்கிற போது நாமும் சிரமத்திற்கு ஆளாக கூடாது. நம்மை
சார்ந்தவர்களையும் இது விசயத்தில் சிரமத்திற்கு ஆட்படுத்தி விடக் கூடாது என்று முடிவு
செய்தால் அது ஒரு அறச் செயலாக அமையும்.
திருமணங்களின் போது கட்டாயமாக வரதட்சணை கேட்பது
ஹராமாகும்.
அப்படியிருக்க இவ்வளவு தங்க நகை வேண்டும் என்று கேட்பதை இனிமேல்
ஆவது நாம் நிறுத்தி விடுவோம்.
திருமணத்தின்
போது எவ்வளது தங்கம் கொடுப்பீர்கள் என்று கேட்க
வேண்டாம் –
ஒரு ஆலிமிடம் ஒரு பெண் முறையிட்டார்
நான் ஒரு விதவை. என் பேரனுக்கு கத்னா செய்ய இரண்டு பவுன் நகை போடுங்கள்
என்று சம்ந்திகள் கேட்கிறார்கள் என்று சொன்னார்.
ஹஜ்ரத் சொன்னார்! நாசமா போச்சு. பையனுக்கு தங்கம் போடுறதே ஹராம்
. இதை கேட்டு வாங்குவது எவ்வளவு பெரிய ஹராம்.
இவர்களுக்கெல்லாம் இதயமே கிடையாதா என்று அவர் திருப்பிக் கேட்டார்.
உண்மையில் இப்படி நகையும் உபசரனைகளையும் கேட்டுப் பெருகிறவரக்ள்
மனிதர்களே அல்லதான்.
அது போல நீங்கள் நகை வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கேட்கா
விட்டாலும் கூட நிலமையை
அறிந்து நடந்து
கொள்ளுங்கள்.
யாராவது 10 பவுன் போடுவோம் என்று சொல்லி யிருந்தால் காலச் சூழ்நிலை
அறிந்து நகையின் அளவு குறைந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நகை விலை அதிகமாக இருக்கும் போது இவ்வளவு செய்வதே போதுமானது
என்று சொல்லுங்கள்.
ஒரு மனிதரின் இதயத்திற்கு நிம்மதியளிப்பது மிகப்பெரும் கொடையாகும்.
من أفضلِ الأعمالِ إدخالُ السرورِ على المؤمنِ ، تَقْضِي عنه دَيْنًا
، تقضي له حاجةً ، تُنفِّسُ له كُربةً
நெருக்கடியான சந்தர்ப்பங்களில்
இத்தகை மனிதாபி மான நடவடிக்கைகள் மிகவும் நெருக்கடியை தீர்க்க மிகவும் உதவக் கூடியவையாகும்.
தங்கத்தின் மீதான மோகம் தவிர்ப்பீர்
குர்ஆன எசசரிக்கிறது
உலக மோகம் அவர்களை திசை திருப்பி விட வேண்டாம்
ذَرْهُمْ
يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ
[الحجر:3]
அதிக
மோகம் மறுமை சிந்தனையை மறக்கடிக்க கூடியது.
தங்கத்தின் மீதான மோகத்தை நாம் குறைத்துக் கொள்வதாகும்.
அதனால் பொது
இடங்களுக்கு செல்கையில் அதிகம் நகை அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நமது
பெண்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.
அது நமக்கும் நல்லது. நம்மை பார்த்து பிறர் ஆசைப்படாமல் இருக்கவும்
உதவக் கூடியது.
அல்லாஹ் அதற்குரிய கூலியை தருவான்.
தங்கத்கத்தை போலவே வெள்ளியும் அதன் தரத்திற்கு பயன்படுத்த வேண்டும்
ஆடம்பரத்திற்கும் அநாவசியமாகவும் பயன்படுத்தக் கூடாது.
ஆண்கள் வெள்ளியில் மோதிரம் மட்டுமே அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
செயின் பிரஸ்லேட ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது.
அல்லாஹ், தற்கால சூழலில் பெறுகிற வருகிற தனக்கம் வெள்ளி விலை
வாசி உயர்வின் தீமையிலிருநதும் இதற்கு காரணமான அரசியல் ஆதிக்க சக்திகளின் தீமையிலிருநதும்
நம்மை காப்பாற்றுவானாக !