வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 16, 2023

பெருமானாரின் (ஸல்) சிந்தனையோடு அருள் மாதத்தை வரவேற்போம்..

 ரமலான் மாதம் குறித்து திருக்குர் ஆன் ஒரே ஒரு வசனத்தில் மட்டுமே பேசுகிறது.

பகரா  அத்தியாயத்தின் 185 வசனம் அது.

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَان".

 திருக்குர் ஆன் அருளப்பட்ட மாதம் என்ற குறிப்பை மட்டுமே அது தருகிறது.

 அதுவே ரமலானின் உச்பட்ச சிறப்பாகும்.

 மீலாது விழா மிஃராஜ் பராஅத் என்று ஆண்டு தோறும் நாம் சிறப்பான பொழுதுகளை அனுசரிக்கிற போது சிலர் அதெற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்பார்கள்.

 அதற்கெல்லாம் பதில் சொல்ல இந்த ஒரு வசனம் போதும் குர் ஆன் அருளப்படத் தொடங்கிய மாதம் ரமலான் என்ற அதனால் இந்த மாத்த்தில் நோன்பு வையுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

 ஒரு நன்மை நடைபெற்ற நாளை  காலமெல்லாம் நினைவு கூர்வது பொருத்தமானது என்பதை இந்த வசனம் அறியத்தருகிறது.

 இந்த மாத்த்தின் பெருஞ்சிறப்பு குர் ஆன் அருளப்பட்ட்தே எனும் போது திருக்குர் ஆனுக்கு நாம் தர வேண்டிய மதிப்பையும் மரியாதையையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.

 இது குர் ஆன் அருளப்பட்ட மாதம் என்று சொல்லிச் சொல்லி அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் அருட்பொழிவான திருக்குர் ஆனின் மகத்துவத்தையும் மாண்பையும் நாம் மனதில் நிறுத்துவோம் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 இந்த உலகில் ஒவ்வொரு பகுதியிலும் சிரமத்திற்கும் சிக்கலுக்கும் ஆளாகத மனிதர்களே இல்லை. ஒவொருவருக்கும் அவரவர் வகையில் சிக்கல்கள் உண்டு .

அவர்கள் எல்லோருக்கும் திருக்குர் ஆனின் ஒரு வசனம் போதும்.

 فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِیْنَ كَفَرُوْا ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ اِذْ یَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَاۚ-فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَ اَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا 

 لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا என்ற வார்த்தையே போதுமானது அதற்கும் மேல் இந்த வனத்தின் பின்னணியை அறிந்திருந்தால் எந்தக் கவலையும் தானாக காணாமல் போய்விடும், இதை விட கவலையான பொழுதில் நாம் இல்லை என்று தோன்றும்.

 இந்த வனத்தின் பின்னணியை கவனித்துப் பாருங்கள்.

ثَانِیَ اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ

பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த உலகம் அவர்களை சொந்த ஊரை விட்டு விரட்டியது. உயிர்வாழ்வதையே கேள்விக்குள்ளாக்கியிருந்தது, எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் என்று சூழ்நிலை இருந்தது. தப்பித்து ஓட வழியில்லாத குகைக்குள்ளே இரண்டுபேராக மட்டுமே எஞ்சியிருந்தார்கள்.

 பெருமானாரிடமிருந்த உறுதியின் காரணத்தால் அவர்களுக்கு கிடைத்த பரிசு எப்படிப்பட்ட்து என்பதையும் இந்த வசனம் கூறுகிறது.

 فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلَیْهِ وَ اَیَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا 

 முதலில் பதட்ட்த்தை போக்கும் நிம்மதி அடுத்தாதக நாம் கற்பனை செய்ய முடியாத அல்லாஹ்வின் பேருதவி

 இந்தப் பிரச்சினையிலிருந்து நாம் எப்படித் தப்பிக்க முடியும் என்ற பிரமிப்பே பலரையும் தடுமாற வைக்கிறது. பிரச்சனைகளுக்கான முடிவை தங்களது சக்திக்கு உட்பட்டு தேடுகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் சக்தியை நினைத்துப் பாருங்கள். அவன் தனது படைகளின் மூலம் உதவுவான் என்ற வாசகம் விரக்தியின் எந்த நிலையிலும் இருக்கிற மனிதனுக்கு ஆறுதல் தர போதுமானது.

 இன்னொரு வசனத்தையும் நினைவூட்டுகிறேன். பிரச்சனைகளை எத்தைகைய வழிமுறையில் கையாள்வது சிறப்பு என்று இஸ்லாம் கற்பிக்கிறது.

 ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ (34)

 உலகில் உண்மையான வெற்றி எது என்பதையும் வெற்றி பெறுவதற்கான வழி பகை பாராட்டுவதை விட உதவி செய்து விட்டுப் போவதே என்றும் குர் ஆன் கூறும் வழிகாட்டுதல்கள் மிக உயர்தரமான மோடிவேசனல் கைடன்ஸ் ஆகும்.

இவ்வாறு திருக்குர் ஆனின் 77439 வார்த்தைகளும் அதிலுள்ள 323671 எழுத்துக்களும் மனித சமூகத்திற்கு கிடைத்த மகத்தான வழிகாட்டுதல்களாகும்.

அதுவே ரமலான் மாதத்தின் பெருஞ்சிறப்பு.

ரமலானின் அருமையை பெருமைகளை பெருமானார் (ஸல்) அவர்களே ஏரளமாக நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள்.

 ஹிஜ்ரி 2 ஷஃபான் மாத்த்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. 11 ரபீஉல் அவ்வலில் பெருமானார் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். 9 ஆண்டுகள் பெருமானர் (ஸல்) ரமலான் நோன்பை கடைபிடித்துள்ளார்கள்.  

ரமலானைப் பற்றி பேசிய அளவுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வேறு எதைப்பற்றியும் அதிகமாக பேசியதில்லை.

சான்றுக்கு ஒன்று.

حديث أبي هريرة رضي الله عنه: قال: قال رسول الله صلى الله عليه وسلم: (إذا كان أول ليلة من رمضان صُفِّدَت الشياطين ومردة الجن، وغُلِّقَت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة فلم يغلق منها باب، وينادي مناد كل ليلة يا باغي الخير أقبل، ويا باغي الشر أقصر، ولله عتقاء من النار وذلك كل ليلة) رواه البخاري

 நோன்பு, இரவுத் தொழுகை, லைலத்துல் கத்ரு, சஹர், நோன்பு திறப்பு, இஃதிகாப், சதகா என ரமலானின் பிரதான அம்சங்கள் ஒவ்வொன்றை குறித்தும் பெருமானர் (ஸ்ல) அவர்கள் அற்புதப்படுத்தியுள்ளார்கள்.

மிகச் சுருக்கமாக ஒன்று நிச்சயம்.

மற்ற நாட்களை விட ரமலான் மாத்த்தின் ஒவ்வொரு பொழுதையும் பெருமானார் (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகளால் நிறைத்தார்கள்.

என்வே இந்த ரமலானை பெருமானாரின் சுன்னத்துக்களின் அடிப்படையில் அணுகுவோம் என்று நாம் உறுதியேற்போம்.

இங்கு நமது அடிப்படை உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கூறுகிறேன்.

அல்லாமா துல்ஃபிகார் சாஹிப் இதை குறிப்பிடுகிறார்கள்.

ஒரு பெரியவர் மினாவில் கையில் பையுடன் நடந்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் அதை திருடிக் கொண்டு ஓடினான். ஹஜ்ஜின் நீண்ட பயணத்திற்காக வைத்திருந்த அத்தனையும் நிமிடத்தில் பறிபோய்விட்டது.

ஹஜ்ஜின் அடையாளங்களாக இருக்கிற புனித தலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை; அங்கு குற்றங்களுக்கான தண்டனைகளை உடனுக்குடன் கிடைத்து விடும் என்பது பலருடைய அனுபவமாகும்.

பெரியவரின் பையை திருடிக் கொண்டு ஓடியவனின் கண் பார்வை அவன் ஓடி முடிப்பதற்குள்ளாக பறிபோனது. பதறினான் , கதறினான். திருடிக் கொண்டு வந்த பையை உரியவரிடம் ஒப்படைத்து விட கெஞ்சினான். அவனைச் சார்ந்தவர்கள் பையை தொலைத்தவரை தேடி அந்த பையை ஒப்படைத்து விட்டு பறித்துச் சென்ற இளைஞனை மன்னித்து விடுமாறு கோரினர்.

அப்போது அந்த பெரியவர். நான் அந்த இளைஞனை அப்போதே மன்னித்து விட்டேனே  என்று  சொன்னார் !

அங்கிருந்தவர்கள் அவரிடம் ஆச்சரியத்தோடு இவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறான். அவனை அப்போதே மன்னித்து விட்டேன் என்கிறீர்களே அதெப்படி என்று கேட்டனர்.

அதற்கவர் கூறினார். முஹம்மது நபி (ஸ்ல்) அவர்கள் நாளை மஹ்ஷரில் என் சமூகத்தில் பாதிப்புக்குள்ளான எவருக்கும் நீதி பெற்றுக் கொடுத்த பிறகுதான் நான் சொற்கம் செல்வேன் என்று கூறீயிருக்கிறார்கள். அதில் என் வழக்கும் ஒன்றாகி எனக்காக அந்த அளவு நேரம் பெருமானார் (ஸல்) அவர்கள் காத்திருக்க கூடாது என நான் நினைத்தேன். எனவே தான் நான் அந்த இளைஞனை அப்போதே மன்னித்தேன் என்றார்.

முஹம்மது நபி (ஸல்) என்ற வார்த்தை எல்லா அமல்களுக்கும் நம்மை தூண்டும் சொல்லாக நாம் முன்னிறுத்தோம்.

அல்லாஹ் நமது ரமலானை அங்கீகரிப்பானக!

பிறை விசயத்தில், தராவீஹ் தொழுகை விசயத்தில், பயான்களை செவியேற்பதில, ஜகாத் சதகத்துல் பித்ரு விசயத்தில்  குழப்பவாதிகளை தவிர்ப்போம். சுன்னத் ஜமாத்தின் ஆலிம்களின் வழியை பின் தொடர்வோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

  

 

 

ரமலானை வரவேற்கும் முந்தைய தொகுப்புக்கள் 2023

கூவி அழைக்கும் ரமலான் 2022 2022

ரமலான் கண்ணியம் காத்தலே பிரதானம் 2021


ரமலான் 2018 

ரமலானை கவனிப்போம்.2017


ரமலான் ஈமானிய வாழ்வுக்கு வலுச் சேர்க்கட்டும் 2017

நோன்பின் இரகசியம் 2016

Thursday, March 09, 2023

சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்,

 இன்றைய நவீன உலகில் சூதாட்டம் ஒரு பொழுது போக்காகவும் உல்லாசத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

 அதை தனிமனித உரிமையாகவும் திறமையின் அடையாளமாகவும் காட்ட சிலர் முயல்கிறார்கள்.

 ஒரு காலத்தில் இரக்சியமாக சிலர் திருட்டுத்தனமாக செய்து வந்த இந்த அநாகரீகத்தை அரபு நாடுகள் உள்பட மக்கள் உல்லாசத்திற்காக கூடுகிற இடங்கள் எங்கும் கேஸினோக்கள் என்ற பெயரில் இப்போது வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஆர்ப்பாட்டமாக நடத்துகின்றனர்.

 இஸ்ரேலில் இருந்து எகிப்துக்குள் நுழையும், தாபா எல்லையில் ஒரு வித்தியாசமான போர்டு இருந்தது. உள்ளே நுழைபவர்களுக்கு எவ்வளவு கட்டணம் என்ற தகவல்கள் அதிலிருந்தன. இதில் ஒரு ஆச்சரியம் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் பயணம் செய்வோருக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று எழுதியிருந்தது. இது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று விசாரித்த போது அங்குள்ளவர்கள் சொன்னார்கள். இந்த ஒரு கிலோ மீட்டருக்குள் நிறைய சூதாட்ட விடுதிகள் இருக்கின்றன. அதில் வந்து போகிறவர்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்று கூறினார்கள்.

 சூதாட்டத்தை பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும் சூதாட்ட விடுதிகளை சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு ஏற்பாடாகவும் கருதுகிற வழக்கம் இப்போது மிகவும் சகஜமாகியிருக்கிறது.

 இது புதிய சிந்தனை அல்ல. ஆகப் பழைய கருத்து.

 திருக்குர் ஆன் சூதாட்ட்த்தை மய்ஸிர் என்கிறது. மய்சிர் என்றால் எளிதான சம்பாத்திய வழி என்று பொருள்.

 தமிழில் சூதாட்டம் என்று சொல்லுகிற போதே அதில் ஒரு கெடுதி இருப்பது வெளிப்படும். அரபு நாடுகளில் மய்ஸிர் என்று சொல்லுகிற போதே அதை ஒரு இயல்பான நற்காரியாமாக கருதுகிற பழக்கம் இருந்தது.

 பண்டைய அரபிகள் சூதாடிக் கிடைக்கிற பணத்தை தர்மம் செய்வார்கள். எளிதாக சம்பாதித்து அதிகம் தர்மம் செய்தல் என்பதனாலே மய்ஸிர் என்று பெயர் சூட்டினார்கள். அதை பெருமையாக நினைத்தர்கள்.

 ஆனால் இஸ்லாம் வன்மையாக அதை தடை செய்த்து. அதன் அத்தனை வழிகளையும் அடைத்தது.     

 திருக்குர் ஆனின் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்று அது சூதாட்டத்தை வன்மையாக கண்டித்து தடை செய்துள்ளது.

 أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِنَّمَا الخَمْرُ وَالمَيْسِرُ وَالأَنْصَابُ وَالأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ {المائدة:90}

 சூதாட்டத்தை  மேற்கத்திய உலகு நாகரீகத்தின் அம்சமாக காட்ட முயற்சிக்கிற போது இஸ்லாம் அதை இழிவானதென்றும் வாழ்க்கை தோற்றுப் போக வழி வகுக்கும் உரத்து சொல்கிறது.

 திருக்குர் ஆனிய ஆய்வாளர்கள் சூதாட்டின் தீமை வட்டியை விட கொடியது என்கிறார்கள். ஹராமான சம்பாத்தியத்தை உண்ணுதல், ஹரமான விளையாட்டில் ஈடுபடுதல் என்ற இரண்டு ஹராம்கள் சூதாட்டத்தில் இருக்கின்றன.

 சூதாட்ட்ட்தின் அனைத்து வகைகளும் வடிவங்களும் ஹராம் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

 قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم:  إِن رجَالًا يتخوضون فِي مَال الله بِغَيْر حق فَلهم النَّار يَوْم الْقِيَامَة ،

 சூதாடலாமா என்று கேட்பதே கூட குற்றம்.

 وَفِي صَحِيح البُخَارِيّ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَمن قَالَ لصَاحبه تَعَالَ أقامرك فليتصدق ؛ فَإِذا كَانَ مُجَرّد القَوْل يُوجب الْكَفَّارَة أَو الصَّدَقَة؛ فَمَا ظَنك بِالْفِعْلِ

 சூதாட்டப் பணத்தில் கிடைக்கும் சுகங்கள் நரகிற்கு செல்லவே உரியவை

 أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ  كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ رواه الطبراني

 சூதாட்டம் என்றால் என்ன ?

ஒரு போட்டி அல்லது விளையாட்டில் கலந்து கொள்ளும் தரப்பினர் கொடுக்கும் பணத்தை யாரேனும் ஒருவர் அல்லது சிலர்  எடுத்துச்  செல்வது சூதாட்டமாகும்.

 இஸ்லாம் இதில் நிச்சயமற்ற பந்தயங்களையும் சேர்த்தது.

 திருக்குர் ஆனில்  பூமியின் தாழ்ந்த  நிலத்தில் ரோமர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என்ற கருத்தில் ஒரு வசனம் அருளப்பட்ட்து.

 الم * غُلِبَتِ الرُّومُ * فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ* فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ * بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ﴾ [الروم: 1 ـ 7].

 ஜோர்டானில் உள்ள சாக்கடல் பள்ளத்தாக்கு பகுதியை பாரசீகர்கள் வெற்றி பெற்றதை குறித்து இந்த வசனம் பேசுகிறது. அது உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக தாழ்வாக இருக்கிற நிலப்பகுதியாகும்.

 (இது திருக்குர் ஆனின் முஃஜிஸாக்களில் ஒன்று. ஏனெனில் குர் ஆன் இறங்கிய காலத்தில் இந்த இடம் கடல் மட்ட்த்திலிருந்து மிக தாழ்ந்த இடம் என்ற செய்தி உலகிற்கு தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் அதை மக்கள் புரிந்து கொண்டனர்.)

 மக்காவின் காபிர்கள் பாரசீகர்களின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதனால் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களிடம் வம்புக்கு வந்தனர். அதென்ன ரோமர்கள் ஜெயித்து விடுவார்களா ? பந்தயம் வைத்துக் கொள்ளலாமா என்றனர். 3 வருடத்தில் இந்த வெற்றி நிகழு வேண்டும் அதற்கு 10 ஒட்டகை என்ற பணயம் என்று தீர்மானித்தனர். பெருமானார் (ஸல்) அவர்கள் பிழஃ என்பது 3 லிருந்து 3 லிருந்து 9 க்குள் இருக்கலாம் என்றார்கள். அபூபக்கர் சித்தீக் ரலி திரும்ப காபிர்களிடம் சென்று பந்தயக் காலத்தையும் தொகையையும் அதிகப்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் சம்மதிக்கவே 10 ஆண்டுகள் என்றும் 100 ஒட்டகைகள் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. 5 வருடங்களில் ரோமர்கள் பாரசீகர்களை வென்றனர். தீர்மாணித்த படி ஒட்டகைகள் அபூபக்கர் ரலி அவர்களுக்கு வந்தது. அதை சூது என்று கூறி தர்ம்ம் செய்து விட பெருமானார்  உத்தரவிட்டார்கள்/

 عن البراء قال : لما نزلت( الم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون ) قال المشركون لأبي بكر : ألا ترى إلى ما يقول صاحبك ؟ يزعم أن الروم تغلب فارس . قال : صدق صاحبي . قالوا : هل لك أن نخاطرك ؟ فجعل بينه وبينهم أجلا فحل الأجل قبل أن تغلب الروم فارس ، فبلغ ذلك النبي - صلى الله عليه وسلم - فساءه ذلك وكرهه ، وقال لأبي بكر" ما دعاك إلى هذا ؟ " قال : تصديقا لله ولرسوله . فقال" تعرض لهم وأعظم الخطر واجعله إلى بضع سنين " . فأتاهم أبو بكر فقال لهم : هل لكم في العود ، فإن العود أحمد ؟ قالوا : نعم[ قال ] فلم تمض تلك السنون حتى غلبت الروم فارس ، وربطوا خيولهم بالمدائن ، وبنوا الرومية ، فجاء به أبو بكر إلى النبي - صلى الله عليه وسلم - فقال : هذا السحت ، قال" تصدق به " .

 சீட்டாட்டம் தாயம் போன்ற சூதாட்டத்திற்கென்றே உள்ள விளையாட்டுக்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அதிஷ்ட்த்தை அடிப்படையாக கொண்ட லாட்டரி குதிரைப்பந்தயம் போன்ற  போட்டிகளும் பந்தயங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.

 நவீன சீட்டாட்ட வடிவமாக இருக்கிற ஆன்லைன் ரம்மி போன்ற வடிவங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

 இதில் தெளிவான விளக்கத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. இது சம்பாதிக்கும் நேர் வழி அல்ல என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.

 ஒரு காலத்தில் எப்போதாவது எங்காவது மறைமுகமாக நடைபெற்று வந்த சூதாட்டம் இப்போதைய ஸ்மார்ட் போன்களின் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. அது மட்டுமல்ல சகஜமாக பெண்களும் சிறுவர்களும் கூட இதில் சிக்கிக் கொள்கின்றன.

 நீங்கள் விளையாடுவதற்கு பணம் தருகிறோம் என்று போலித்தனமாக கூறி ஆட்களை உள்ளே இழுக்கிறார்கள்.  ஒரு சிலரை வெற்றி பெறுவது போல காட்டி ஏரளமான மக்களின் சிலர் சுருட்டிக் கொள்கிறார்கள்.

சூதாட்ட்த்தின் தீமைகள் கொஞ்ச நஞ்சமல்;ல  

சூதாட்டம்

1.   மனிதனின் உழைக்கும் திறனை கெடுக்கிறது.

 2.   குடும்பங்கள் சீரழிய காரணமாகிறது.

3.   மனிதன் சுயமரியாதையை இழக்க காரணமாகிறது.

4.   பகை பொறாமையை உண்டாக்குகிறது.

5.   தீய குணங்களுக்கு காரணமாகிறது. மோசமான இயல்புகளை உருவாக்குகிறது. – மோசடி – போதை – கொள்ளை-

6.   நேரத்தை வீணடித்து சோம்பலை உருவாக்குகிறது.

7.   திருடியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துகிறது.

8.   பதட்டம் மன நோயுக்கு காரணமாகிறது.

 சூதாட்டம் தனி மனித வாழ்வையும் குடும்பங்களின் வளத்தையும் சமூகங்களின் அமைதியையு கெடுக்க கூடியது என்று உபதேசிக்காதவர்கள் யாரும் இல்லை

 பகடை உருட்டும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம். நான் குடும்பம் முழுவதற்கும் சாவுமணி அடிக்கும் ஓசையைக் கேட்கிறேன். என்றார் அறிஞர்- ஜெரால்டு

 சூதாடும் கருவியைக் கையிலெடுத்துக்கொண்ட நிமிட்த்திலேயே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்ள தயாராகிறான்  என்றே நான் கருதுகிறேன் என்றார்- கம்பர்லந்து

 நம் இந்திய நாட்டின் பழம் புராணங்கள் பலவும் சூதாட்ட்த்தின் மிக மோசமன விளைவை சுட்டிக் காட்டி போதிப்பவை யாகும்

 மஹாபாரதம் பாண்டவர்கள்  சூதாட்டத்தில் தோற்றுப் போய் ஒரு கட்டத்தில் மனைவியை கூட பணயம் வைத்தார்கள்  என்று பேசுகிறது.

 நிடத நாட்டு மன்னன் நளன் அவனது மனைவி தமயந்தி புகழ் வாய்ந்த தம்பதிகள். நீரும் நெருப்பும் இன்றி சமையல் செய்வதில் வல்லவன் நளன் என்று போற்றப்படுகிறவன், சூதாட்ட்த்தில் ஈடுபட்டு நாட்டை இழந்து அவனும் அவனது காதல் மனைவியும் காடு மலைகளில் கஷ்டப்பட நேர்ந்த்து என்ற கதையையும் மஹாபாரதும் கூறுகிறது.

 மஹாபாரதம் மொத்தமுமே சூதாட்ட்த்தின் கேடுபற்றி கூறக்கூடிய கதைகளை கொண்டது தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

 நிலமை இப்படி இருக்க இந்தியாவை தற்போது இந்து மதத்தின் பெயரால் ஆள்வதாக கூறிக் கொள்ளும் கட்சி சூதாட்ட்த்திற்கு ஆதரவாக இருக்கிறது.

 அக்கட்சியின் பின்புலத்தை கொண்ட தமிழக ஆளுநர் ஆன் லைன் சூதாட்ட்த்தை தடை செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட்த்திற்கு ஒப்புதல் தராமல் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

 ஆன்லைன் விளையாட்டுக்கான விளம்பரங்களும் அழைப்புக்களும் சகஜமாகிவிட்ட நிலையில் திடீர் திடீரென தற்கொலைகளும் அதிகரித்து வருவதை அனைவரும் கவலையோடு கவனித்து வருகின்றனர்

 சென்னை மணலி எம்.ஜி.ஆர். நகர் கால்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பார்த்திபன் என்பவர், ஆன்லைன் ரம்மியை விளையாடும் பழக்கம் உடையவர். இதில் பெரும் பணத்தை இழந்த நிலையில், மனைவி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிடமிருந்து 50,000 ரூபாயைக் கடனாகப் பெற்றார்.

அந்தப் பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கிய நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்

 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வேலாயுதபுரம் கிராமத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா மாஜி தன் கணவருடன் வசித்து வந்தார்.

இருவரும் ஒரு நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். கணவன் - மனைவி இருவருக்குமே ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்தது. பண இழப்பு ஏற்பட்டதும் கணவர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்ட நிலையில், மனைவி வந்தனா அதைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் அளவுக்குக் கடன் ஏற்பட்ட நிலையில், கணவன் - மனைவிக்கு இடையில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், வந்தனா தற்கொலை செய்துகொண்டார்.

 தினசரி இத்தகைய செய்திகளை நாளீதழ்களி வாசித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு எப்போது இந்த கொடுமையை தடுக்கப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

 அதன் பிறகு  2020ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக தலைமையிலான  தமிழ்நாடு அரசு இந்த விளையாட்டைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்திற்கு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துவிட்டாலும், அதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகின. சென்னை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லாது என அறிவித்தது.

 இதற்குப் பிறகு தி.மு.. தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய சட்டம் இயற்றுவது குறித்து ஆராய ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் பேரில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் இந்த விளையாட்டைத் தடை செய்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கிடையில் சட்டமன்றம் கூடியதால், புதிய சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

 அந்த சட்டம் என்ன கூறுகிறது எனில்

 தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

 சட்டமன்றம் கூடியதிலிருந்து ஆறு வாரங்களில் அவசரச் சட்டம் காலாவதியாகும் என்பதால், கடந்த நவம்பர் 17ஆம் தேதி ந்தச் சட்டம் காலாவதியானது.

 இந்த நிலையில், இந்தச் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கேள்வியெழுப்பியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளித்தது. இருந்தும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.

 சட்டம் தனது பரிசீலினையில் இருப்பதாகவும் விரைவில் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

 நமக்கு புரியத புதிர் என்ன வென்றால் பல குடும்பங்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிற வேதங்களும் புராணங்களும் இதிகாசங்களும் இழித்துப் பேசுகிற ஒரு பேசுகிற ஒரு தீமையை தடுப்பதில் மனநலமுள்ள ஒரு ஆளுநர் ஏன் தமதப்படுத்துகிறார் என்பது புரியவில்லை.   

 ஆளுநர் என்ன கூறியிருக்கிறார்  என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன,

 ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19 (1) (g) பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

 சூதாடுவதை சமபாதிப்பதாக கூறினால் அதை திறமை என்று வகைப்படுத்தினால் திருடுவதையும் கொள்ளயடிப்பதையும் மோசடி செய்வதையும் கூட நியாயப்படுத்த முடியாதா என்று மேதகு ஆளுநர் யோசிக்க வில்லை

 மாநில அரசு சூதாட்ட தடை சட்ட்த்தை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மக்களை பாதுகாக்க வேண்டும்.

 முஸ்லிம் உம்மத் முஹம்மது நபி (ஸல்) அவர்களால வழிகாட்டப் பட்டு இத்தகைய தீய வழிகளிலிருந்து வெகு தூரம் பாதுகாப்பட்ட சமுதாயம்.

 அந்த சமுதாயம் இன்றைய பகட்டான விளம்பரங்களை ஆசை வார்த்தைகளை கண்டும் வழி தவறி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

 குடிப்பது கால் கஞ்சியாக இருந்தாலும் அது ஹலாலாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நம்முடையது. காரணம் அதில் தான் நிம்மதி இருக்கிற்து. ஆரோக்கியம் இருக்கிறது.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!