வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 11, 2026

பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன

 சிறப்பான கல்விக் கூடங்களை தேர்வு செய்து அதிக கட்டணம் செலுத்துகிற நாம் நமது பிள்ளைகளுக்கு கல்வியின் அருமையை புரிய வைத்திருக்கிறோமா ?

காசு கட்டுவதை விட கல்வியின் மரியாதையை புரிய வைப்பது நமது முதல் கடமையாகும்.

கல்வியின் சிறப்பு

கல்வியறிவை தேடிச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் அளவுக்கு பாராட்டியவர்கள் யாரும் உண்டா?

கல்வியை தேடிய பயணம் சொர்க்கத்தை தேடிய பயணமாகும் என்றார் நபிகள் நாயகம் (ஸல்)

அடுக்கடுக்காய் அவர்கள் கூறும் நன்மைகளை கவனியுங்கள். படிப்பாளி நட்சத்திரங்களுக்கிடையே நிலாவை போன்றவர் என்றார்கள்

مَن سلَكَ طريقًا يلتَمِسُ فيهِ علمًا ، سَهَّلَ اللَّهُ لَهُ طريقًا إلى الجنَّةِ ، وإنَّ الملائِكَةَ لتَضعُ أجنحتَها لطالِبِ العلمِ رضًا بما يصنعُ وإنَّ العالم ليستغفِرُ لَهُ مَن في السَّمواتِ ومن في الأرضِ ، حتَّى الحيتانِ في الماءِ ، وفضلَ العالمِ على العابدِ كفَضلِ القمرِ على سائرِ الكواكبِ 

 

கல்வியின் நோக்கம்  இதயம் வெளிச்சம் பெற வேண்டும்.

நமது பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விளக்குகள், வீட்டிற்கு வெளிச்சம் கொடுப்பது போல கல்வி, உள்ளத்திற்கு வெளிச்சம் கொடுப்பதாகும்.

விளக்கு இருட்டை விரட்டுகிறது. கல்வி அறியாமையை விரட்டுகிறது.

அறியாமையை விரட்டி இதயத்தை அறிவால் நிரப்பி வெளிச்சம் பெறவே கல்வி என்ற சிந்தனை நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சாத்தானின் முதல் வலை அறியாமையாகும்.

மனிதனிடம் சாத்தான் எப்படி விளையாடுகிறான் (تلبيس أبليس  (என்பதை விளக்கும் பேரறிஞர்கள் முதலில் குறிப்பிடுவது.  جهل  ஆகும்.

அதாவது சைத்தான் மக்களை அறியாமையில் ஆழ்த்துவதையே முதல் பணியாக வைத்திருக்கிறான்.

நாம் அத்தியாவசியமாக அறிந்திருக்க வேண்டிய சில சங்கதிகளை அறியாமல் இருப்போம்.

உதாரணத்திற்கு அத்தஹிய்யாத்து அல்லது குனூத்து அல்லது மய்யித்துகளுக்கு ஓதும் துஆ

மிக சின்ன இந்த விசயங்களை தொடர்ந்து அறியாமல் இருக்க செய்வது சாத்தானின் திட்டமாகும்.

இது போல மார்க்கத்தை பற்றி அல்லது உலகை பற்றி அல்லது மறுமையை பற்றிய எந்த விசயத்தையும் அறிய விடாமல் வைத்திருக்கவே சைத்தான் முதலில் திட்டமிடுகிறான்.

எனவே சைத்தானை விரட்டி இதயத்தை அறிவு வெளிச்சமாக்கவே கல்வி கற்கப் போகிறோம்  என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்களும் உணர வேண்டும்.

கல்வியை பெருமையாக்கி விட கூடாது

பள்ளிக் கூட்த்தை பெற்றோர் தம் பெருமைக்கு தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அது அறிவின் நோக்கத்தை பாழாக்கி விடும்.

பெருமானாரின் கடும் எச்சரிக்கை

قول النبي صلى الله عليه وسلممن تعلم العلم ليباهي به العلماء، أو يماري به السفهاء، أو يصرف به وجوه الناس إليه أدخله الله جهنم. رواه ابن ماجه

 

கற்கும் கல்வி நமக்கு பயனளிக்க வேண்டும் என்ற ஆசை வேண்டும்

முஸ்லிம் சமூகத்தில் கல்வி முக்கியம் என்கிற உணர்வு மெலோங்கியிருக்கிறது,  பாரட்டப்பட வேண்டிய விசயமே ,

 

அதே நேரத்தில் அந்தக் கல்வி நமக்கு பயனப்ட வேண்டும் என்ற சிந்தனையும் சம அளவில் அல்ல ஒரு படி அதிகமக முக்கியத்துவம் பெற வேண்டும்.

 

பயனளிக்காமல் போய்விடுகிற கல்வியிலிருந்து பெருமானார் பாதுகாப்பு தேடினார்கள்.  

 

அவ்னுல் மஃபூதில் அபூதாலிபில் மக்கீ கூறுகிறார்.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் ஷிர்க் நிபாக் சூஊல் குல்கி லிருந்து பாதுகாப்பு கேட்ட வரிசையில் பயனற்ற கல்வியிலிலிருந்து பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்.

 

وروى الإمام الترمذي في جامعه من حديث عبدالله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم كان يتعوذ من أربع،

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ

 

எந்தக் கல்வியானாலும் அது நமக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனற சிந்தனை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவசியம்.

 

யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர் உண்மையாளர் என்பதை சகல சான்றுகளோடும் அறிந்திருந்தார்கள், ஆனால் பெருமானாரை அவர்களில் பலர் ஏற்கவில்லை,

 

என்ன பரிதாபம் பாருங்கள் ! அறிவிருந்தும் அது பயனற்றதாகிவிட்டது. ஈருலகிற்கு ம்  அது எவ்வளவு நஷடமாகிவிட்டது பாருங்கள்!

 

இந்த ஹதீஸ் குறீத்து தீபீ மற்றொரு விளக்கம் தருகிறார்.

 

وَقَالَ الطِّيبِيُّ: اِعْلَمْ أَنَّ فِي كُلّ مِنْ الْقَرَائِن الْأَرْبَع مَا يُشْعِرُ بِأَنَّ وُجُودَهُ مَبْنِيّ عَلَى غَايَته وَأَنَّ الْغَرَض مِنْهُ تِلْكَ الْغَايَة وَذَلِكَ أَنَّ تَحْصِيل الْعُلُوم إِنَّمَا هُوَ لِلِانْتِفَاعِ بِهَا، فَإِذَا لَمْ يَنْتَفِعْ بِهِ لَمْ يَخْلُص مِنْهُ كَفَافًا بَلْ يَكُونُ وَبَالًا، وَلِذَلِكَ اِسْتَعَاذَ.

 

 

பிரார்த்தனை செய்கிறோம்! எதற்காக?

 

பிரார்த்தனையின் இறுதி நோக்கமே அது ஏற்கப் பட வேண்டும் என்பது தானே?

 

ஏற்கப்படாவிட்டால் பிரார்த்தனை எவ்வளவு நீண்டதாக உருக்கமானதாக செலவு பிடித்ததாக இருந்தும் பயன் என்ன?

 

அதே போல கல்வியின் நோக்கமே அது பயனளிக்க வேண்டும் எனபது தான். அந்த பயன் கிடைக்காவிட்டால் அது மோசம் தானே!

 

இந்த துஆ வை அதிகம் கேட்டுக் கொள்வோம்.

 

தேர்ந்தெடுக்கிற படிப்பு அல்லது கல்லூரி பயனளிக்குமா என்பதை ஆய்வும் செய்யுங்கள்.

 

பல பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பயனளிக்காத துறையை தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர். சிலர் பயனளிக்காத கல்லூரியை அவசரத்திற்கு அல்லது வசதிக்கு தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர்.

 

படிப்பு எங்க நன்றாக இருக்கிறது  -  கல்லூரியின் மரியாதை எப்படி இருக்கிறது – நமது வசதிவாய்ப்புக்கு சரியானது எது ?  இந்த மூன்று அடிப்படையிலும் எது பயனுள்ளது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

 

படித்த  - பணியிலிருக்கிற அனுபவம் வாய்ந்தவர்கள் முஸ்லிம் பொதுமக்களுக்கு பயனுள்ள மேற்படிப்புக்களுக்கு தங்களுடைய வழிகாட்டுதல்களை கொடுப்பது தற்காலத்தின் சிறந்த தர்ம்மாக அமையும்.

 

கேரளாவில் சில முஸ்லிம் தொண்டு அமைப்புக்கள் இரண்டு நாள் மாணவர்களை தங்களுடன் தங்கவைத்து அவர்களுடன் தொடர்ந்து கவுன்சிலிங்கில் ஈடுபட்டு அவர்களுடைய திறனை அறிந்து தேவையான கோர்ஸுகளையும் கல்லூரிகளையும் தேர்ந்தெடுக்க வழிகாட்டுகின்றனர்.

 

இனி வரும் காலங்களில் பள்ளிவாசல்கள் தோறும் அல்லது முக்கிய பள்ளிவாசல்களில்  ரிசல்ட் வெளியாகிற அன்று ரிசல்ட் பார்த்துக் கொடுப்பதோடு  அனுபவ சாலிகள் உட்கார்ந்து பெற்றோர்களுக்கும் மாண்வர்களுக்கும் வழிகாட்டுதல்கள் செய்தால் சமூகத்திற்கு அது பெரிதும் பயனளிக்ககூடும்.

 

மார்க் வெளிவருவதற்கு முன்னதாக நடைபெறுகிற கல்வி வழிகாட்டுதல்களில் கிடைக்கிற வழிகாட்டுதலை விட, மார்க் இன்னெதென்று தெரிந்த பிறகு கிடைக்கிற வழி காட்டுதல் மிக பயனுள்ளதாக இருக்கும்.

 

இனி அடுத்து வரக்கூடிய மருத்துவம் இந்திய மருத்துவம் உபமருத்துவத்துறைகள், பொறியியல் மற்றும் அரசு கலைக்கல்லூரி கவுன்சிலிங்குகள் குறித்து அனுபவசாலிகள் தமது மஹல்லா மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் சொல்லித்தர வேண்டும். அதற்கான ஏற்பாட்டை அக்கறையுள்ள ஜமாத்துகள் மேற்கொள்ள வேண்டும்.

 

வாழ்க்கைகைத்து தேவையான விசய்ங்களில் வழிகாட்டுதல் பெருமானாரின் சுன்னத்தாகும்.

 

யாசகம் கேட்டவருக்கு பெருமானார் கோடாரி செய்தி கொடுத்து வழிகாட்டிய வரலாறு நாம் அறிந்ததே!  

 

கல்விய சுய தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வழி என்று கருதாமல் கல்வி சுயமரியாதைக்கான வழி என்ற சிந்தனை இளைஞர்களிடம் படர வேண்டும்.

 

தேவைய தீர்த்துக் கொள்ளுதல் என்பது பொதுவாக மிருகங்களின் இயல்பு அது வே மனிதனுடைய இறுதித்தீர்வாக இருந்து விடக் கூடாது,

 

கல்வி நம்கொரு மரியாதையான அடையாளம் என்ற உணர்வு மாணவர்களிடம் வேண்டும்.

 

தாரமீ யில் ஒரு செய்தி வருகிறதுஅலி ரலி கூறினார்கள்

 

تعلموا العلم تعرفوا به، واعملوا به تكونوا من أهله)

 

கற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள், செயல்படுங்கள் நீங்கள் அந்த அறிவுக்கு தகுதியுடையவராவீர்கள்.

 

கல்வி என்பது வெறும் மனப்பாடம் அல்ல

தற்காலத்தில் மனப்பாடம் செய்து அப்படியே ஒப்புவிப்பது கல்வியாக கருதப்படுகிறது.

 

கல்வி என்பது ஆற்றல் பெறுவதாகும்.

பொறியியல் படித்த ஒரு பட்டதாரிக்கு ஸ்கேல் பிடிக்க தெரியவில்லை. எனில்  அந்த படிப்பின் பயன் என்ன ?

 

எனவே மாணவர்களின் எவ்வளவு மார்க் வாங்குகிறார்கள் என்பதை விட பிள்ளைகளின் ஆற்றல் வளர்கிறதா என்பதையே கவனத்தோடு கவனிக்கவேண்டும்.  

 

ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இறைவன் ஒரு ஆற்றலை வைத்திருக்கிறான் என்பதை முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே போல் தமது பிள்ளைகளிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

 

பெருமானார் (ஸல்) சொன்னார்கள்  மனிதர்கள் சுரங்கம் போன்றவர்களே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதையல் இருக்கிறது,

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا - مسلم 

 

கல்வி கற்கிற காலத்தில் தனக்குள் இருக்கிற ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது மாணவனின் கடமை , அது போல் தமது பிள்ளைகளின் ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வது பெற்றோர்களின் கடமை,

 

கல்விக்கு உதவி

திறைமை மிக்க மாணவர்களில் பலர் வசதியற்றவர்களாக இருக்க கூடும்.

நம்முடைய குடும்பத்தில் , நம்முடைய மஹல்லாவில் அப்படி பலர் இருக்கலாம்.

 அவர்களை தேடிச் சென்று  நாம் உதவுவோம்.

கல்விக்க் உதவு வோர் கண்ணியம் பெறுவர்.

மஹ்மூது கஜ்னவிக்கு மூன்று சந்தேகங்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

 

1.   சபுக்தகீன் தான் தன்னுடைய தந்தையா? அவரோ ஒரு படை வீரார். நான் அரசனாக இருக்கிறேனே!

2.   மக்களில் சிறந்தவர்கள் யார்?

3.       பெருமானார் (ஸல்) அவர்களீன் சியாரத் தனக்கு கிடைக்குமா?

ஒரு நாள் மாறு வேடத்தில் வீதி உலா வரும்  போது தெருவின் ஒரு வீட்டின் வெளியே கிடைத்த வெளிச்சத்தில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். ஏன் பள்ளிவாசலை விட்டு விட்டு இங்கு வந்து படிக்கிறாய் என்று கேட்டார் கஜ்னி, அங்கு விளக்கில்லை என்றான் மாணவன், இப்போதே விளக்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி உத்தரவிட்டார். விளக்கு வந்த்து. அரசர் என்பதை அறியாமல் மாணவன் துஆ செய்தான்  யா அல்லா ! இந்த மனிதரின் தேவைகளை நீ நிறைவேற்று!

 

அன்று உறக்கத்தில் பெருமானாரை கனவில் கண்டார் கஜ்னவீ. சபுக்தகீனின் மகனே ! என்னுடைய வாரிசை கண்ணியப்படுத்தி விட்டாய்! அல்லாஹ் உனக்கு உலகிலும் மறுமையிலும் கண்ணியத்தை தருவான் என்று கூறினார்கள்,

 

கஜ்னி முஹம்மதின் மூன்று தேவைகளும் நிறைவேறியது,

 

சிறந்த தகுதியுடைய மாணவனின் கல்விக்கு உதவுகிறவர்களுக்கு இத்தகைய நற்பேறுகள் கிடைக்கும்.

 

எச்சரிக்கை

சமீப காலத்தில் கல்லூரிகளும் பள்ளிக் கூடாங்களும் நமது பிள்ளைகளுக்கு தீயவற்றை கற்றுத்தருகிற களமாக இருப்பதை மிகுந்த கவலையோடு கண்காணித்து செயல்பட வேண்டிய கடமை மாணவர்களுக்கும் இருக்கிறது, பெற்றோர்களுக்கும் இருக்கிறது,

 

ஒரு தீய சேர்க்கையின் சிறு ஆரம்பம் பெரிய நஷ்டத்தின் ஆழிய கறையாக அமைந்து விடக் கூடும் என்ற எச்சரிக்கையை மாணவர்கள் உணர வேண்டும், பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.

 

கணக்கிலடங்காத உதாரணங்கள் நம் கண் முன் கிடக்கின்றன.

 

கோவையில் கேரளாவிலிருந்து வந்து ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இரு பணக்கார மாணவர்களுடன் ஒரு மாணவி எதார்த்தமாக பழகினாள். கல்லூரிக்கு வெளியே வீடெடுத்து தங்கிய அவர்கள் அப்பெண்ணை ஒரு நாள் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கம் மருந்தை கலந்து கெடுத்து விட்டனர். துக்கம் தாளாமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

 

நம்முடைய கல்வி - நம்முடைய பிள்ளைகளின் கல்வி  - தீயதாக பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என நாம் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்

 

கவனமாக இருப்போம் கண்காணிப்பாக நடந்து கொள்வோம்.

 

அல்லாஹ் கிருபை செய்வானாக!