வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 18, 2026

9 வருடங்களுக்கு பிறகு ஹிஜ்ரத்தை நினைவு கூர்ந்த திருக்குர்ஆன்

 புதன் கிழமை ஹிஜ்ரீ 1448 ம் ஆண்டு பிறந்திருக்கிறது.

ஹிஜ்ரீ என்ற சொல்லை போல மனித வரலாற்றுக்கு அருமையான பாடங்களை சொல்லித் தருகிற வார்த்தை வேறெதுவும் இல்லை

ஹிஜ்ரத்தை பற்றி பேசுகிற ஒரு முக்கிய திருக்குர் ஆன் வசனம் தவ்பா அத்தியாயத்தின் 40 வசனமாகும்.

إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

இந்த வசனம் சொல்லப் பட்ட காலத்தில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது.

இந்த வசனம்  ஹிஜ்ரத் நடந்த போது சொல்லப் பட்ட்தல்ல

ஹிஜ்ரத் முடிந்து சுமார் 9 ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்து சொல்லப் பட்டதாகும்.

9 வருடம் கழித்து ஹிஜ்ரத்தின் நிகழ்வை திருக்குர் ஆன் பேசியதன் பின்னே ஒரு வரலாறும் இருக்கிறது, முஸ்லிம்கள் மறந்து விடக் கூடாத மிக முக்கியமான ஒரு வழிகாட்டுதலும் இருக்கிறது.

ஹிஜ்ரீ 9 ம் வருடம் தபூக் யுத்த்த்திற்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த வசனத்தில் அல்லாஹ் ஹிஜ்ரத்தின் நிகழ்வை முஸ்லிம்களுக்கு நினைவூட்டினான்.

தபூக் யுத்தம் ஹிஜ்ரீ ரஜ்ப் மாத்தில் நடைபெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் பங்கேற்ற கடைசி யுத்தமாகும்.

இந்த யுத்த்த்திற்கு பல முக்கியத்துவங்கள் உண்டு.

·         முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு அரச படையை எதிர்த்து நடத்திய முதல் யுத்தம் அது.

·         அன்றைய உலகின் பெரும் வல்லரசான ரோம படைகளை எதிர்த்து நடந்த யுத்தமாகும்.

·         மிக நீண்ட தூரம் பெருமானார் பயணம் செய்தார்கள். மதீனாவிலிருந்து 778 மைல் தொலைவில் சிரியாவின் திசையில் தபூக் இருந்த்து.

·         பொதுவாக யுத்த நடைமுறைகளின் போது தன்னுடைய இலக்குகளை முழுமையாக வெளிப்படுத்தாத பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போரின் போது தன்னுடைய இலக்கு ரோமர்களோடு சண்டையிடுவது என்பதை தெளிவாக கூறினார்கள்.

·         அந்த நேரம் கடும் கோடை காலமாக இருந்த்து. அது வே பேரீத்தம் பழ அறுவடைக் காலமாகவும் இருந்தது. 

ஒரு அரசாங்கத்தை எதிர்த்து – அதுவும் ஒரு வல்லரசை எதிர்த்து - முஸ்லிம்கள் பயணப்படுகிற பயணப்படுகிற முதல்  போர் என்ற வகையில் இது பெருமானாரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த யுத்தமாகும்.

அதனால் அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினான் .

இதுவும் முன்னெப்போதும் இல்லாதது ஆகும்.

انْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ ٤١ [التوبة:41]

கிழவர்களோ இளைஞர்களோ அனைரும் நடங்கள் என்று அல்லாஹ் உத்தரவிட்டான்.

 யுத்த்திற்காக நிதி தருவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார் உத்தவாதம் கூறியிருந்தார்கள்

 قد روى الترمذي في «سُننهِ» عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبَّابٍ، قَالَ: «شَهِدْتُ النَّبِيَّ  وَهُوَ يَحُثُّ عَلَى جَيْشِ العُسْرَةِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ مِائَةُ بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، ثُمَّ حَضَّ عَلَى الجَيْشِ فَقَامَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلَيَّ ثَلاَثُ مِائَةِ بَعِيرٍ بِأَحْلاَسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللهِ، فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ  يَنْزِلُ عَنِ الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ، مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ»

மேலும் ஆயிரம் பொன்

عن عبد الرحمن بن سمرة قال: «جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى النَّبِيِّ  بِأَلْفِ دِينَارٍ فِي ثَوْبِهِ، حِينَ جَهَّزَ النَّبِيُّ  جَيْشَ الْعُسْرَةِ، قَالَ: فَصَبَّهَا فِي حِجْرِ النَّبِيِّ ، فَجَعَلَ النَّبِيُّ ، يُقَلِّبُهَا بِيَدِهِ، وَيَقُولُ: "مَا ضَرَّ ابْنُ عَفَّانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ" يُرَدِّدُهَا مِرَارًا

இவ்வளவு முஸ்தீபுகள் செய்யப்பட்டன.

காரணம்

ஹிஜ்ரீ 8ம் ஆண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அரபு நிலத்தில் பல எல்லையோர பகுதிகளும்  ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அரபு குலங்கள் கூட்டம் கூட்டமாக பெருமானாரோடு இணைந்து வருவந்ததால் பெருமானாரின் அரசியல் செல்வாக்கு வெகு வேகமாக வலர்ந்து வந்த்து. இது தங்களுடைய அதிகாரத்திற்கு இடையூறாக ஆகலாம் என்று ரோமர்கள் நினைத்தார்கள். அதனால் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிற அரபுக் குலங்களை தூண்டி விட்டார்கள். பெருமானாரின் தலைமையில் உருவாகியிருக்கிற அரபுகளின் முதல் புதிய  அரசாங்கத்தை முற்றிலும் அழித்து விடுவதற்காக 40 ஆயிரம் வீர்ர்களை கொண்ட ஒரு படையை தயார் செய்தார்கள்.   

தமக்கெதிரான ஒரு திட்டம் அந்நிய நிலத்தில் மிகுந்த சக்தியோடு தயாராவதை அறிந்த போது அவர்களை அவர்களது முனையிலேயே சந்தித்து விட பெருமானார் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள்.

அதற்காகத்தான் முன்னெப்போதும் இல்லாத ஏற்பாடுகளை செய்து கொண்டார்கள். 30 ஆயிரம் பேர் திரண்டார்கள்.  கலந்து கொள்ள முடியாதவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள் என்று கூறுகிறது திருக்குர் ஆன்.  

இத்தகைய சூழல்லில்

12 பேர் பெருமானாரிடத்தில் போருக்கு தயாராகும் கால சூழ் நிலையை குறைத்து குறை கூறினார்கள். இது கடும் கோடையாக இருக்கிறது அறுவடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  கொஞ்சம் காலம் தாழ்த்தி போகலாமே என்று முறையிட்டனர்.

 அப்போது அல்லாஹ் அதை கண்டித்து கேள்வி எழுப்பினான்.

 போருக்கு புறப்படச் சொன்னால் நீங்கள் சடைந்து கொள்வீர்களா ?. உலக சுகங்கள் தான் உங்களுக்கு பெரிதா? என்று கேள்வி எழுப்பினான்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ ۚ أَرَضِيتُم بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ (38)

 எந்த ஒரு காலகட்ட்த்திலும் முஸ்லிம் உம்மத் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கேள்வி இது

 நம்முடைய ஆசைகளும் விருப்பங்களும் தேவைகளும் சில நேரங்களில் தீனுக்கு எதிராக இருக்கும்.

 நாம் அநீதிக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என தூண்டப்படலாம்

 போதை பழக்கத்திற்கு அடிமையாக அல்லது  ஆபாசத்தை வாழ்க்கையாக்க தோன்றலாம்.

 இஸ்லாமிற்கு எதிரான

 கருத்தோட்டங்களும் செயல்பாடுகளும் சுதந்திரத்தின் அடையாளமாக காட்டப்படாலாம்.

 அப்போதெல்லாம் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி இது

 உலக சுகங்கள் தான் உங்களுக்கு பெரிதா ? அல்லாஹ்வின் வழிமுறைகளை நீங்கள் சலித்துக் கொள்வீர்களா? அது உங்களுக்கு பிடிக்காமல் போகுமா ?  

 நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செல்ல வில்லை எனில் அல்லாஹ் என்ன செய்வான்.

 அடுத்த வசனம் எச்சரிக்கிறது.

  إِلَّا تَنفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (39)

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் எப்படி வேதனை வரும் என்று சொல்கிறார்கள்.  மழை வராது  அதாவது வாழ்க்கையின் வளம் அழிக்கப்படும்.

 فأمسك الله عنهم القطر فكان عذابهم 

 மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உத்தரவுகளை - மார்க்கத்தின் வழிகாட்டுதல்களை பகிரங்கமாக  மீறுவோர் அவர்களுடைய வாழ்க்கையின் பரக்கத்தை இழப்பார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

 நம்முடைய  இடத்திற்கு மற்றவர்களை அல்லாஹ் கொண்டு வருவான்.

 எந்த அதிகாரத்திற்காக  அல்லது எந்த பெருமைக்காக நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளை அலட்சியம் செய்தோமோ அந்த அதிகாரமும் பெருமையும் அடுத்தவர்களுக்கு போய்ச் சேரும்.

 என்ன கடுமையான எச்சரிக்கை பாருங்கள்!

 மனைவியின் ஆசைக்காக அல்லது குடும்பத்தின் ஆசைக்காக  நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறினால் அல்லாஹ் நம்முடைஅய இடத்திற்கு அல்லாஹ் வேறு ஒரு வரை கொண்டு வருவான் என்பதை கற்பனை செய்து பாருங்கள் அது எவ்வளவு கடுமையானது ?

 அல்லாஹ் அடுத்து கூறுகிறான்.

 நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவியாக இல்லை என்றால் அவர் மோசம் போய்விட மாட்டார். எந்த சூழலிலும் அல்லாஹ் அவரை அவரை நம்பி இருப்பவர்களை பாதுகாப்பான். அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் தீர்மாணத்திற்கு எதிரான உங்களுடைய கருத்துக்களுக்கு ஒரு துளியும் மதிப்பு கிடையாது

 உங்களின் எந்த ராணுவத் துணையும் இல்லாத சூழலில் தான் தவ்று குகையில் கண்ணுக்கு தெரியாத தன்னுடைய ராணுவங்களை கொண்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான் . நபி தன்னுடைன் இருப்பவர்களுக்கு நிம்மதியளித்தார்..

 )إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا

இந்த இடத்தில் தான் ஹிஜ்ரத்தை அல்லாஹ் முஸ்லிம் உம்மத்திற்கு நினைவூட்டினான்.

 அல்லாஹ்வின் தீர்மானத்தின் படி நடக்கிற போது அல்லாஹ் எத்தகைய பாதுகாப்பையும் தருவான். யாரும் உதவிக்கு வராவிட்டாலும் கூட.

 ஹிஜ்ரத்தின் போது நபிக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைத்தது ?

 மதீனாவிற்கு எதிர் திசையில் இருந்த தவ்ரு குகைக்கு எதிரிகள் தேடி வந்தனர்.

 அல்லாஹ் அதன் வாசலில் புறாக்களை அனுப்பி கூடு கட்ட வைத்தான்.

சிலந்திப் பூச்சியை வலை பின்ன செய்தான்.

 இதை பார்த்த எதிரிகள் உள்ளே யாரும் இருக்க முடியாது என்று முடிவு செய்தனர்.

 புறாக்கூட்டை தள்ளிவிடுவதோ சிலந்தி வலையை உதறுவதோ பெரிய வேலையே இல்லை. ஆனால் அல்லாஹ் அதை எதிரிகளுக்கு நினைவூட்ட வில்லை.

 வரலாறு இன்னொரு ஆச்சரியத்தை தருகிறது.

 இந்த பகுதியில் பெருமானாரை தேடும் பொறுப்பை எடுத்துக் கொண்டவன் உமைய்யத்து பின் ஹலப். பெருமானாரின் பெரிய எதிரிகளில் ஒருவன்.

அவன் தனது அடியாட்களில் இரண்டு பேருடன் தவ்ரின் அடிவாரத்திற்கு வந்தான்.

அவன் உடல் பருத்துவன் என்பதால் மலைக்கு மேலே ஏறவில்லை. அடிமைகளை அனுப்பி விட்டு கீழே நின்று கொண்டான்.

இரண்டு அடிமைகளில் ஒருவர் நடுவழியில் நின்று கொண்டு மற்றவனை மட்டும் மேலே அனுப்பினான். அந்த ஒரு ஆள் தான் தவ்ரின் வாசல் வரை வந்து நின்றான். குகைக்கு உள்ளே  குனிந்து பார்க்க கூட அவனுக்கு சோம்பல். வெளியே இருந்த புறாக்கூட்டை பார்த்து விட்டு புத்திசாலித்தனமாக யோசித்து விட்டதாக நினைத்து திரும்பி விட்டான்.

 அவன் திரும்பி வந்த போது கிழே நின்று கொண்டிருந்தவன் எதையும் கேட்கவில்லை. இருவரும் உமய்யாவை சந்தித்த போது அவன் விசாரித்தான். அப்போது குகைக்கு அருகே சென்றவன் புறா கூடுகட்டியிருக்கிற விவரத்தை சொன்னான். அப்போது தான் உடன் இருந்த மற்றொரு அடிமை கேட்டான். நீ கூட்டிற்கு கீழே குனிந்து பார்த்தாயா ?

அந்த கேள்வி தேவையே இல்லை என்று மறுக்கும் வகையில் உமய்யா சொன்னான். விடு! அந்த புறாக்கள் அங்கு முஹம்மது பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கின்றன எனக்கு தெரியும் என்றான்.

 அந்த புறாக்களை பற்றி இமாம் சுயூத்தி கூறுகிறார்.

  فإن الله جعل حمامتين حاميتين على باب الغار، ومعهما عنكبوت حتي لا تشك أن  رسول وأبوبكر الصديق يختبئان بالداخل

 வரலாற்று அறிஞர்கள் இப்படியும் சொல்வதுண்டு. இமாம் முஹம்மது தாஹிர் அல் குர்தீ கூறுகிறார். அந்த புறாக்கள் அப்ரஹாவின் யானை படையை சிதறடித்த சிஜ்ஜீல் பறவையின் வாரிசுகள்

 கஃபாவை பாதுகாத்த பறவைகளை வைத்தே காருணய நபியையு அல்லாஹ் பாதுகாத்தான்.

 எதிரிகள் திரும்பிச் சென்றார்கள். அல்லாஹ் புறாக்கூட்டை மட்டும் வைத்து பெருமானாரை பாதுகாக வில்லை. எதிரியான உமய்யாவின் வார்த்தையை வைத்தும் பாதுகாத்தான்.

கண்ணுக்கு தெரியாத படைகள் என்று அல்லாஹ் கூறுவது எதிரிகள் சிந்தித்தித்தும் பார்க்காத வகைகளில் அல்லாஹ் தன்னுடைய ஆட்களை பாதுகாப்பான் என்ற கருத்தையும் தரும்.

 ஹிஜ்ரத்திப் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அதற்கு பின்னர் நபி (ஸ்ல) அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

 அந்த வெற்றியின் உச்சத்தை தான் அப்போது முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

 அதனால் தான் பயணத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாமாஎன்று கேட்டவர்களிடம் கடுமையாக அல்லாஹ் இவற்றை நினைவூட்டினான்.

  

ஹிஜ்ரி நமக்கு நினைவூட்டுகிற அற்புதமான செய்திகளில் அதே நேரம் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியமான செய்தி இது. 

நம்மீதான கடமைகளை நிறைவேற்றதுவதற்கு சில நேரங்களில் நாம் அலட்சியம் செய்கிறோம். காலம் தாழ்த்து கிறோம். அதற்காக அற்பமான காரணங்களை கூட கூறுகிறோம்.

இது நமக்கு வெற்றிக்கு உதவாது.

கடமைக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து காரியங்களை செய்வோமானார் அல்லாஹ் எந்த நிலையிலும் நமக்கு உதவுவான நம்மை பாதுகாப்பான் என்ற அழுத்தமான செய்தி ஹிஜிரத்தில் இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் உலக வாழ்வின் மோகம் – நமக்கு அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறி நடக்க தூண்டலாம்.

  அப்போது நாம் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஆசாபாசங்களை ஒதுக்கி விடுவோமானால் ஹிஜ்ரத்தில் பெருமானாருக்கு கிடைத்த பாதுகாப்பும் வெற்றியும் நம் ஒவ்வொரு வருக்கும் கிடைக்கும்.

 ஹிஜ்ரத்திற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரத்தின் வெற்றி பிரம்மாண்டமாக வெளிப்பட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் நினைவு படுத்திக் கூறிய மிக அற்புதமான ஹிஜ்ரத்தின் வழிகாட்டுதல் இது.

 1448 ம் புதிய ஆண்டை ஹிஜ்ர்த்தின் தத்துவங்கள் வெற்றியடையும் ஆண்டாக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!.

 முஹர்ரம் 9 10 நோன்பு

 வரக்கூடிய வியாழக்கிழமை முஹர்ரம் பிறை 9 வெள்ளிக்கிழமை பிறை 10 ம் ஆகும் அந்த இரு தின்ங்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்து. ஆகும்

 قول النبي صلى الله عليه وسلمصِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ. رواه مسلم

  فعَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ." رواه البخاري 

   அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 .

 

 

 

 

 

 

 

 

தங்களுடைய மனோ

இந்த கேள்விக்கு நியாயாமன

முஸ்லிம்கள் அதிகார பலத்தின் உச்சத்தில் இருந்தார்கள். ஏராளமான மக்களும் இருந்தார்கள்.

காசு பணமும் ஏராளமாக திரட்டப்பட்டிருந்த்து.

 

 

 

.

 

 

முஹர்ரம் ஆஷூரா முந்தைய பதிவுகள் 2026

இறை பாதுகாப்பை பெற இறைவனை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! 2025

ஹிஜ்ரத் நெருக்கடிகளை வெற்றி கொண்ட வழி 2025

பிறருக்கு பயன்படும் வாழ்க்கை 2024

வாரிசு 2023

ஆஷூரா எனும் அழியாத பாடம் 2022

 ஜனநாயகத்தின் குரல் வலையை நெறிப்பபோர் 2018

போராட்டக் களங்களை எதிர் கொள்வதே ஈமான் 2017



ஹிஜ்ரத் மகோன்னதமான மனிதாபிகளின் சின்னம் 2017



Thursday, June 11, 2026

பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன

 சிறப்பான கல்விக் கூடங்களை தேர்வு செய்து அதிக கட்டணம் செலுத்துகிற நாம் நமது பிள்ளைகளுக்கு கல்வியின் அருமையை புரிய வைத்திருக்கிறோமா ?

காசு கட்டுவதை விட கல்வியின் மரியாதையை புரிய வைப்பது நமது முதல் கடமையாகும்.

கல்வியின் சிறப்பு

கல்வியறிவை தேடிச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் அளவுக்கு பாராட்டியவர்கள் யாரும் உண்டா?

கல்வியை தேடிய பயணம் சொர்க்கத்தை தேடிய பயணமாகும் என்றார் நபிகள் நாயகம் (ஸல்)

அடுக்கடுக்காய் அவர்கள் கூறும் நன்மைகளை கவனியுங்கள். படிப்பாளி நட்சத்திரங்களுக்கிடையே நிலாவை போன்றவர் என்றார்கள்

مَن سلَكَ طريقًا يلتَمِسُ فيهِ علمًا ، سَهَّلَ اللَّهُ لَهُ طريقًا إلى الجنَّةِ ، وإنَّ الملائِكَةَ لتَضعُ أجنحتَها لطالِبِ العلمِ رضًا بما يصنعُ وإنَّ العالم ليستغفِرُ لَهُ مَن في السَّمواتِ ومن في الأرضِ ، حتَّى الحيتانِ في الماءِ ، وفضلَ العالمِ على العابدِ كفَضلِ القمرِ على سائرِ الكواكبِ 

 

கல்வியின் நோக்கம்  இதயம் வெளிச்சம் பெற வேண்டும்.

நமது பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கல்வி வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விளக்குகள், வீட்டிற்கு வெளிச்சம் கொடுப்பது போல கல்வி, உள்ளத்திற்கு வெளிச்சம் கொடுப்பதாகும்.

விளக்கு இருட்டை விரட்டுகிறது. கல்வி அறியாமையை விரட்டுகிறது.

அறியாமையை விரட்டி இதயத்தை அறிவால் நிரப்பி வெளிச்சம் பெறவே கல்வி என்ற சிந்தனை நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சாத்தானின் முதல் வலை அறியாமையாகும்.

மனிதனிடம் சாத்தான் எப்படி விளையாடுகிறான் (تلبيس أبليس  (என்பதை விளக்கும் பேரறிஞர்கள் முதலில் குறிப்பிடுவது.  جهل  ஆகும்.

அதாவது சைத்தான் மக்களை அறியாமையில் ஆழ்த்துவதையே முதல் பணியாக வைத்திருக்கிறான்.

நாம் அத்தியாவசியமாக அறிந்திருக்க வேண்டிய சில சங்கதிகளை அறியாமல் இருப்போம்.

உதாரணத்திற்கு அத்தஹிய்யாத்து அல்லது குனூத்து அல்லது மய்யித்துகளுக்கு ஓதும் துஆ

மிக சின்ன இந்த விசயங்களை தொடர்ந்து அறியாமல் இருக்க செய்வது சாத்தானின் திட்டமாகும்.

இது போல மார்க்கத்தை பற்றி அல்லது உலகை பற்றி அல்லது மறுமையை பற்றிய எந்த விசயத்தையும் அறிய விடாமல் வைத்திருக்கவே சைத்தான் முதலில் திட்டமிடுகிறான்.

எனவே சைத்தானை விரட்டி இதயத்தை அறிவு வெளிச்சமாக்கவே கல்வி கற்கப் போகிறோம்  என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்களும் உணர வேண்டும்.

கல்வியை பெருமையாக்கி விட கூடாது

பள்ளிக் கூட்த்தை பெற்றோர் தம் பெருமைக்கு தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அது அறிவின் நோக்கத்தை பாழாக்கி விடும்.

பெருமானாரின் கடும் எச்சரிக்கை

قول النبي صلى الله عليه وسلممن تعلم العلم ليباهي به العلماء، أو يماري به السفهاء، أو يصرف به وجوه الناس إليه أدخله الله جهنم. رواه ابن ماجه

 

கற்கும் கல்வி நமக்கு பயனளிக்க வேண்டும் என்ற ஆசை வேண்டும்

முஸ்லிம் சமூகத்தில் கல்வி முக்கியம் என்கிற உணர்வு மெலோங்கியிருக்கிறது,  பாரட்டப்பட வேண்டிய விசயமே ,

 

அதே நேரத்தில் அந்தக் கல்வி நமக்கு பயனப்ட வேண்டும் என்ற சிந்தனையும் சம அளவில் அல்ல ஒரு படி அதிகமக முக்கியத்துவம் பெற வேண்டும்.

 

பயனளிக்காமல் போய்விடுகிற கல்வியிலிருந்து பெருமானார் பாதுகாப்பு தேடினார்கள்.  

 

அவ்னுல் மஃபூதில் அபூதாலிபில் மக்கீ கூறுகிறார்.

 

பெருமானார் (ஸல்) அவர்கள் ஷிர்க் நிபாக் சூஊல் குல்கி லிருந்து பாதுகாப்பு கேட்ட வரிசையில் பயனற்ற கல்வியிலிலிருந்து பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்.

 

وروى الإمام الترمذي في جامعه من حديث عبدالله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم كان يتعوذ من أربع،

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لَا يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلَاءِ الْأَرْبَعِ

 

எந்தக் கல்வியானாலும் அது நமக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனற சிந்தனை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவசியம்.

 

யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர் உண்மையாளர் என்பதை சகல சான்றுகளோடும் அறிந்திருந்தார்கள், ஆனால் பெருமானாரை அவர்களில் பலர் ஏற்கவில்லை,

 

என்ன பரிதாபம் பாருங்கள் ! அறிவிருந்தும் அது பயனற்றதாகிவிட்டது. ஈருலகிற்கு ம்  அது எவ்வளவு நஷடமாகிவிட்டது பாருங்கள்!

 

இந்த ஹதீஸ் குறீத்து தீபீ மற்றொரு விளக்கம் தருகிறார்.

 

وَقَالَ الطِّيبِيُّ: اِعْلَمْ أَنَّ فِي كُلّ مِنْ الْقَرَائِن الْأَرْبَع مَا يُشْعِرُ بِأَنَّ وُجُودَهُ مَبْنِيّ عَلَى غَايَته وَأَنَّ الْغَرَض مِنْهُ تِلْكَ الْغَايَة وَذَلِكَ أَنَّ تَحْصِيل الْعُلُوم إِنَّمَا هُوَ لِلِانْتِفَاعِ بِهَا، فَإِذَا لَمْ يَنْتَفِعْ بِهِ لَمْ يَخْلُص مِنْهُ كَفَافًا بَلْ يَكُونُ وَبَالًا، وَلِذَلِكَ اِسْتَعَاذَ.

 

 

பிரார்த்தனை செய்கிறோம்! எதற்காக?

 

பிரார்த்தனையின் இறுதி நோக்கமே அது ஏற்கப் பட வேண்டும் என்பது தானே?

 

ஏற்கப்படாவிட்டால் பிரார்த்தனை எவ்வளவு நீண்டதாக உருக்கமானதாக செலவு பிடித்ததாக இருந்தும் பயன் என்ன?

 

அதே போல கல்வியின் நோக்கமே அது பயனளிக்க வேண்டும் எனபது தான். அந்த பயன் கிடைக்காவிட்டால் அது மோசம் தானே!

 

இந்த துஆ வை அதிகம் கேட்டுக் கொள்வோம்.

 

தேர்ந்தெடுக்கிற படிப்பு அல்லது கல்லூரி பயனளிக்குமா என்பதை ஆய்வும் செய்யுங்கள்.

 

பல பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பயனளிக்காத துறையை தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர். சிலர் பயனளிக்காத கல்லூரியை அவசரத்திற்கு அல்லது வசதிக்கு தேர்வு செய்து விட்டு பிறகு வருத்தப்படுகின்றனர்.

 

படிப்பு எங்க நன்றாக இருக்கிறது  -  கல்லூரியின் மரியாதை எப்படி இருக்கிறது – நமது வசதிவாய்ப்புக்கு சரியானது எது ?  இந்த மூன்று அடிப்படையிலும் எது பயனுள்ளது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

 

படித்த  - பணியிலிருக்கிற அனுபவம் வாய்ந்தவர்கள் முஸ்லிம் பொதுமக்களுக்கு பயனுள்ள மேற்படிப்புக்களுக்கு தங்களுடைய வழிகாட்டுதல்களை கொடுப்பது தற்காலத்தின் சிறந்த தர்ம்மாக அமையும்.

 

கேரளாவில் சில முஸ்லிம் தொண்டு அமைப்புக்கள் இரண்டு நாள் மாணவர்களை தங்களுடன் தங்கவைத்து அவர்களுடன் தொடர்ந்து கவுன்சிலிங்கில் ஈடுபட்டு அவர்களுடைய திறனை அறிந்து தேவையான கோர்ஸுகளையும் கல்லூரிகளையும் தேர்ந்தெடுக்க வழிகாட்டுகின்றனர்.

 

இனி வரும் காலங்களில் பள்ளிவாசல்கள் தோறும் அல்லது முக்கிய பள்ளிவாசல்களில்  ரிசல்ட் வெளியாகிற அன்று ரிசல்ட் பார்த்துக் கொடுப்பதோடு  அனுபவ சாலிகள் உட்கார்ந்து பெற்றோர்களுக்கும் மாண்வர்களுக்கும் வழிகாட்டுதல்கள் செய்தால் சமூகத்திற்கு அது பெரிதும் பயனளிக்ககூடும்.

 

மார்க் வெளிவருவதற்கு முன்னதாக நடைபெறுகிற கல்வி வழிகாட்டுதல்களில் கிடைக்கிற வழிகாட்டுதலை விட, மார்க் இன்னெதென்று தெரிந்த பிறகு கிடைக்கிற வழி காட்டுதல் மிக பயனுள்ளதாக இருக்கும்.

 

இனி அடுத்து வரக்கூடிய மருத்துவம் இந்திய மருத்துவம் உபமருத்துவத்துறைகள், பொறியியல் மற்றும் அரசு கலைக்கல்லூரி கவுன்சிலிங்குகள் குறித்து அனுபவசாலிகள் தமது மஹல்லா மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் சொல்லித்தர வேண்டும். அதற்கான ஏற்பாட்டை அக்கறையுள்ள ஜமாத்துகள் மேற்கொள்ள வேண்டும்.

 

வாழ்க்கைகைத்து தேவையான விசய்ங்களில் வழிகாட்டுதல் பெருமானாரின் சுன்னத்தாகும்.

 

யாசகம் கேட்டவருக்கு பெருமானார் கோடாரி செய்தி கொடுத்து வழிகாட்டிய வரலாறு நாம் அறிந்ததே!  

 

கல்விய சுய தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வழி என்று கருதாமல் கல்வி சுயமரியாதைக்கான வழி என்ற சிந்தனை இளைஞர்களிடம் படர வேண்டும்.

 

தேவைய தீர்த்துக் கொள்ளுதல் என்பது பொதுவாக மிருகங்களின் இயல்பு அது வே மனிதனுடைய இறுதித்தீர்வாக இருந்து விடக் கூடாது,

 

கல்வி நம்கொரு மரியாதையான அடையாளம் என்ற உணர்வு மாணவர்களிடம் வேண்டும்.

 

தாரமீ யில் ஒரு செய்தி வருகிறதுஅலி ரலி கூறினார்கள்

 

تعلموا العلم تعرفوا به، واعملوا به تكونوا من أهله)

 

கற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள், செயல்படுங்கள் நீங்கள் அந்த அறிவுக்கு தகுதியுடையவராவீர்கள்.

 

கல்வி என்பது வெறும் மனப்பாடம் அல்ல

தற்காலத்தில் மனப்பாடம் செய்து அப்படியே ஒப்புவிப்பது கல்வியாக கருதப்படுகிறது.

 

கல்வி என்பது ஆற்றல் பெறுவதாகும்.

பொறியியல் படித்த ஒரு பட்டதாரிக்கு ஸ்கேல் பிடிக்க தெரியவில்லை. எனில்  அந்த படிப்பின் பயன் என்ன ?

 

எனவே மாணவர்களின் எவ்வளவு மார்க் வாங்குகிறார்கள் என்பதை விட பிள்ளைகளின் ஆற்றல் வளர்கிறதா என்பதையே கவனத்தோடு கவனிக்கவேண்டும்.  

 

ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இறைவன் ஒரு ஆற்றலை வைத்திருக்கிறான் என்பதை முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதே போல் தமது பிள்ளைகளிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

 

பெருமானார் (ஸல்) சொன்னார்கள்  மனிதர்கள் சுரங்கம் போன்றவர்களே ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புதையல் இருக்கிறது,

 

 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَجِدُونَ النَّاسَ مَعَادِنَ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا - مسلم 

 

கல்வி கற்கிற காலத்தில் தனக்குள் இருக்கிற ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது மாணவனின் கடமை , அது போல் தமது பிள்ளைகளின் ஆற்றல் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வது பெற்றோர்களின் கடமை,

 

கல்விக்கு உதவி

திறைமை மிக்க மாணவர்களில் பலர் வசதியற்றவர்களாக இருக்க கூடும்.

நம்முடைய குடும்பத்தில் , நம்முடைய மஹல்லாவில் அப்படி பலர் இருக்கலாம்.

 அவர்களை தேடிச் சென்று  நாம் உதவுவோம்.

கல்விக்க் உதவு வோர் கண்ணியம் பெறுவர்.

மஹ்மூது கஜ்னவிக்கு மூன்று சந்தேகங்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

 

1.   சபுக்தகீன் தான் தன்னுடைய தந்தையா? அவரோ ஒரு படை வீரார். நான் அரசனாக இருக்கிறேனே!

2.   மக்களில் சிறந்தவர்கள் யார்?

3.       பெருமானார் (ஸல்) அவர்களீன் சியாரத் தனக்கு கிடைக்குமா?

ஒரு நாள் மாறு வேடத்தில் வீதி உலா வரும்  போது தெருவின் ஒரு வீட்டின் வெளியே கிடைத்த வெளிச்சத்தில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். ஏன் பள்ளிவாசலை விட்டு விட்டு இங்கு வந்து படிக்கிறாய் என்று கேட்டார் கஜ்னி, அங்கு விளக்கில்லை என்றான் மாணவன், இப்போதே விளக்கிற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி உத்தரவிட்டார். விளக்கு வந்த்து. அரசர் என்பதை அறியாமல் மாணவன் துஆ செய்தான்  யா அல்லா ! இந்த மனிதரின் தேவைகளை நீ நிறைவேற்று!

 

அன்று உறக்கத்தில் பெருமானாரை கனவில் கண்டார் கஜ்னவீ. சபுக்தகீனின் மகனே ! என்னுடைய வாரிசை கண்ணியப்படுத்தி விட்டாய்! அல்லாஹ் உனக்கு உலகிலும் மறுமையிலும் கண்ணியத்தை தருவான் என்று கூறினார்கள்,

 

கஜ்னி முஹம்மதின் மூன்று தேவைகளும் நிறைவேறியது,

 

சிறந்த தகுதியுடைய மாணவனின் கல்விக்கு உதவுகிறவர்களுக்கு இத்தகைய நற்பேறுகள் கிடைக்கும்.

 

எச்சரிக்கை

சமீப காலத்தில் கல்லூரிகளும் பள்ளிக் கூடாங்களும் நமது பிள்ளைகளுக்கு தீயவற்றை கற்றுத்தருகிற களமாக இருப்பதை மிகுந்த கவலையோடு கண்காணித்து செயல்பட வேண்டிய கடமை மாணவர்களுக்கும் இருக்கிறது, பெற்றோர்களுக்கும் இருக்கிறது,

 

ஒரு தீய சேர்க்கையின் சிறு ஆரம்பம் பெரிய நஷ்டத்தின் ஆழிய கறையாக அமைந்து விடக் கூடும் என்ற எச்சரிக்கையை மாணவர்கள் உணர வேண்டும், பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.

 

கணக்கிலடங்காத உதாரணங்கள் நம் கண் முன் கிடக்கின்றன.

 

கோவையில் கேரளாவிலிருந்து வந்து ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இரு பணக்கார மாணவர்களுடன் ஒரு மாணவி எதார்த்தமாக பழகினாள். கல்லூரிக்கு வெளியே வீடெடுத்து தங்கிய அவர்கள் அப்பெண்ணை ஒரு நாள் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கம் மருந்தை கலந்து கெடுத்து விட்டனர். துக்கம் தாளாமல் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

 

நம்முடைய கல்வி - நம்முடைய பிள்ளைகளின் கல்வி  - தீயதாக பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என நாம் அனைவரும் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்

 

கவனமாக இருப்போம் கண்காணிப்பாக நடந்து கொள்வோம்.

 

அல்லாஹ் கிருபை செய்வானாக!