வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 12, 2026

அல்லாஹ்விடம் மரியாதை பெறுவது எப்படி ?

புனிதம் மிக்க ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது.

அல்லாஹ் மீதி இருக்கும் ஷஃபானின் நாட்களை பாக்கியமானதாக்கி தரட்டும்.

ரமலானை பரிபூரணமாக பெற்றுக் கொள்கிற பாக்கியத்தையும் தரட்டும்.

ரமலான் நாம்  அல்லாஹ்விடம் நம்முடைய மரியாதையை  உயர்த்திக் கொள்வதற்கான மாதம்.

மக்களிடம் மரியாதை பெற வேண்டும் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஆசை உண்டு.

அதற்காக எத்தனையோ முயற்சிகளை நாம் செய்வதுமுண்டு.

கையில் ராடோ வாட்ச் கட்டிக் கொள்வது முதல் வீட்டில் புலித் தோல் வைத்துக் கொள்வது வரை

துபாய் நகரில் ஒருவர் வெள்ளை நிற புலி ஒன்றை வளர்க்கிறார்.

கெஸ்டவ் கிளிம்ட் என்பவருடைய ஒரு ஓவியத்தை 180 மில்லியன் டாலர் கொடுத்து ஒருவர் விலைக்கு வாங்கி தன்னுடைய இடத்தில் மாட்டி வைத்திருக்கிறார்.

லியானர்டோ டாவின்ஸி யின் ஓவியம் 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒருவர் விலைக்கு வாங்கியிருக்கிறார்.

தனி விமானங்களை சில விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார்கள்.

இன்ன கார்களை – இன்ன போன் வைத்திருந்தால் தான் மரியாதை என்று சமூகத்தில் ஒரு எண்ணம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

அதனால் சாதாரண விலையில் பயன்படக்கூடிய சிறப்பான கார்களும் போன்களும் இருந்தாலும் கூட

வீட்டிற்முன் விலை உயர்ந்த கார்களை பலரும் வாங்கி வைத்திருக்கிறார்கள்   

மக்களிடம் மரியாதை பெறுவதற்கு இவ்வளவு பிராயத்தன்ங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்

நம்முடைய ரப்பு , அல்லாஹ்விடம் மரியாதையை பெற நாம் ஆசைப்படவும் உழைக்கவும் வேண்டும்.

உண்மையில் ரப்பிடம் மரியாதை பெறுவதுதான் எந்த விலை உயர்ந்த பொருளை வைத்திருப்பதையும் விட உயர்ந்த்து.

சாமாணியர்கள் அல்லாஹ்விம் மதிப்பு மிக்கவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த மரியாதை உன்னதமானது .அசாதாரணமானது.

 

عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((رُبَّ أشعثَ أغبَرَ مدفوعٍ بالأبواب، لو أقسَمَ على الله لَأَبَرَّهُ))؛ رواه مسلم.

அன்சாரி தோழர் அன்ஸ் பின் நுழர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது தங்கைக்கு ஆதரவாக ஒன்றை கூறினார். அது சட்டத்தை மீறி அல்லாஹ்வுடைய கருணையை எதிர்பார்த்த ஒரு வாசகமாக இருந்த்து. அல்லாஹ் அவருடைய சத்தியத்தை நிறைவேற்றினான்.

قصة الرُّبَيِّعِ بنت النضر وأخيها أنس بن النضر

فإن الرُّبيِّع كسَرتْ ثنيةَ جارية من الأنصار، فاحتكموا إلى الرسول صلى الله عليه وسلم، فأمر النبي صلى الله عليه وسلم أن تُكسَر ثنيةُ الرُّبيِّع؛ لأنها كسَرتْ ثنية الجارية الأنثى، فقال أخوها أنس: يا رسول الله، تكسر ثنية الرُّبيِّع؟ قال: ((نعم، كتاب الله القصاص، السِّنُّ بالسن))، قال: والله لا تُكسَر ثنية الرُّبيِّع

فأقسَمَ هذا القَسَمَ، ليس ردًّا لحكم الرسول، ولكن ثقةً بالله عز وجل، فهدى الله أهل الجارية ورضُوا بالدية

فقال النبي صلى الله عليه وسلم: ((إن من عباد الله من لو أقسَمَ على الله لأَبَرَّه))؛

பிலால் ரலி அவர்கள் கருப்பினத்தை சார்ந்தவர் ஆனால் அல்லாஹ்விடம் மரியாதை பெற்றவர்

அவருடை அந்தஸ்து எப்படிப் பட்ட்து .

நான் மிஃராஜின் போது சொர்க்கத்தை பார்வையிட்டேன். அப்போது எனக்கு முன்னே பிலாலின் காலடி ஓசையை நான் கேட்டேன் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

فإني سمعت دف نعليك بين يدي في الجنة

 அல்லாஹ்விடம் மரியாதையை பெறுவது ?

அறிஞர்கள் கூறினார்கள்.

 அல்லாஹ்விடம் மரியாதை பெற பரிசுத்தமான சிந்தனையோடு நற்செயல்கள் செய்ய வேண்டும். அதற்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய முயற்சிகள் செய்ய வேண்டும் எனற அவசியம் இல்லை.

 பிலால் ரலி அவர்கள் இவ்வளவு பெரிய உயர்வை எந்த யுத்தத்திலும் ஷஹீத் ஆகியதால் பெறவில்லை.

 ஒளு செய்து விட்டால் இரண்டு ரகாஅத் தொழுது விடுவார்கள்.

 فقد ثبت في الصحيحين وغيرهما أن رسول الله -صلى الله عليه وسلم- قال لبلال عند صلاة الفجريا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام، فإني سمعت دف نعليك بين يدي في الجنة، قال ما عملت عملًا أرجى عندي أني لم أتطهر طهورًا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي.

 அமல்கள் இல்லாவிட்டால் நாம் எவ்வளவு மதிப்பிற்குரியவராக இந்த உலகில் வாழ்ந்திருந்தாலும் அல்லாஹ் குப்பையில் வீசிவிடுவான்.

பிர்அவ்னை வீசியது போல.

இதை இநத உலகிற்கு எடுத்துக் காட்ட்த்தான் அவனுடைய உடல் இன்னும் கெய்ரோ வில் உள்ளம் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

 فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)

 அல்லாஹ் பாதுகாப்பானக!

இந்த எதார்தத்தை புரிந்து கொண்டவர்கள் எவ்வளவு பிஸீயான உயர்ந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய அமல்களில் கவனமாக இருப்பார்கள்.

கலீபாக்கள் உலகில் முதல் தரமான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். தங்களுடைய மக்கள் பணி எதையும் அவர்கள் அரைகுறையாக விட வில்லை. அதே போல அல்லாஹ்விற்காக அமல் செய்வதிலும் அவர்கள் குறை வைக்கவில்லை.

அழுது அழுது கண்ணில் கண்ணீரில் கோடு பதிந்து போனவர் உமர் ரலி

o        عمر بن الخطاب: عُرف بشدة اجتهاده، فكان يبكي حتى يرى في وجهه خطان من الدموع، وكان يقوم الليل ويصوم النهار، ويحافظ على أوراده

ஓதிக் கொண்டே இருப்பதால் முஸ்ஹப் என்று அழைக்கப் பட்டவர் உஸ்மான் ரலி

 

  • عثمان بن عفان: اشتهر بختم القرآن في ركعة، وكان كثير الصيام والقيام، ولقب بـ "المصحف" للزومه القرآن.

இவர்கள் இருவரும் ஆட்சி செய்த நிலப்பரைப்பை எண்ணிப் பார்த்தீர்கள் எனில் ஆச்சரியப்படுவீர்கள்.

உலகின் எந்த பேர் அரசருக்கும் குறைவில்லாத ஆட்சி அவர்களுடையது. அதே நேரத்தில் எந்த அடிமையையும் விட விட அதிகமாக அமல்களையும் செய்தார்கள்.

நல் அமல்களை செய்ய வாய்ப்புக் கிடைப்பது தான் இந்த உலகின் பெரிய நன்மை என்று நம் முன்னோர்கள் கருதினார்கள்

كان السلف يجدون لذة في العبادة تفوق لذات الدنيا، ويقولون: "لولا الليل ما أحببت البقاء في الدنيا

 ஈ கொசுவை போல

அறிஞர்கள் கூறுவதுண்டு

நம்மிடம் நற்செயல்கள் இல்லை என்றால் அல்லாஹ் நம்மை கொசுவை போலத்தான் பார்ப்பான்.  

 இலட்சக்கணக்கான கொசுக்கள் அழிக்கப் பட்டாலும் அதை யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

நன்மைகளை நோக்கி திருப்பி விட வந்த மாதம்   

நம்மை நன்மைகளை நோக்கி திருப்பி விடவும் அதன் மூலம் அல்லாஹ்வின் மதிப்பை பெற்று விடவும் அல்லாஹ் செய்து கொடுத்த ஒரு ஏற்பாடு தான் ரமலான் மாதம்

 நாம் இதற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 வியாபாரியின் முயற்சி

 வியாபாரிகள் தீபாவளி அல்லது பெருநாள் சந்தர்ப்பங்களில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்திலேயே இருப்பார்கள். உணவை கூட மறந்து விடுவார்கள்.

 இரவு நேரங்களில் அடுத்த நாளுக்கான சரக்குகளை சரி செய்வதற்காக இரவு உணக்கத்தை கூட துறந்து விடுவார்கள்

 இலாபம் சம்பாதிப்பது என்ற நோக்கம் பிரதானமாகி விடுகிற போது மிக அத்தியாவசியமான உணவும் உறக்கமும் கூட முக்கியம்ற்றதாகிவிடுகிறது.

பரீட்சைக்கு தயாராகி கொண்டிருக்கிற மாணவரை கல்யான விருந்துக்கு அழைத்தால் கூட வரமாட்டார்.

காரணம் அவருடைய நோக்கம் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பது

இது போல ரமலான் மாத்த்தை நல் அமல்களை இலக்காக கொண்டு நாம் எதிர்பார்க்க வேண்டும்.

நிறைய நல் அமல்களை செய்து நம்முடைய மரியாதையை அல்லாஹ்விடம் உயர்த்திக் கொள்ள நாம் பாடுபட வேண்டும்.

நோன்பு فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ

ஷஹாதத்தை கோரிய தோழருக்கு மாற்றாக பெருமானார் சொன்ன அறிவுரை நோன்பு

 عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَانِيًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ قَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَالِثًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَتَيْتُكَ تَتْرَى مَرَّتَيْنِ أَسْأَلُكَ أَنْ تَدْعُوَ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقُلْتَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ يَا رَسُولَ اللَّهِ فَادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ ذَلِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ آخُذُهُ عَنْكَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ قَالَ فَكَانَ أَبُو أُمَامَةَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ لَا يُلْفَوْنَ إِلَّا صِيَامًا فَإِذَا رَأَوْا نَارًا أَوْ دُخَانًا بِالنَّهَارِ فِي مَنْزِلِهِمْ عَرَفُوا أَنَّهُمْ اعْتَرَاهُمْ ضَيْفٌ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ أَمَرْتَنِي بِأَمْرٍ وَأَرْجُو أَنْ يَكُونَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ نَفَعَنِي بِهِ فَمُرْنِي بِأَمْرٍ آخَرَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ اعْلَمْ أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً أَوْ حَطَّ أَوْ قَالَ وَحَطَّ شَكَّ مَهْدِيٌّ عَنْكَ بِهَا خَطِيئَةً احمد 21171

 

நோன்பு மகத்தானது. அது அல்லாஹ்விற்கும் நம்க்குமான ஒரு ரகரியம்.

ரக்சியத்தை பாதுகாக்கும் உணர்வோடு நோன்பை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பத்து இலட்ச ரூபாயை ரகசியமாக பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்வோமானால் எந்த எச்சரிக்கையை நாம் கடைபிடிப்போம்.

அது போல நோன்பின் மகத்துவத்தை நாம் பேணிக்காக்க வேண்டும்.

இந்த அற்புத வணக்கத்தை வெற்று வணக்கமாக ஆக்கிவிடக்கூடாது.

 

من لم يدع قول الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه } [أخرجه البخاري].

وقال صلى الله عليه وسلم : { الصوم جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل، فإن سابّه أحد فليقل إني امرؤ صائم } [أخرجه البخاري ومسلم].

அறிஞர்கள் அறிவுரைச் இப்படி சொல்வதுண்டு

فإذا صمت - يا عبد الله - فليصم سمعك وبصرك ولسانك وجميع جوارحك، ولا يكن يوم صومك ويوم فطرك سواء.

 நபில் வணக்கங்கள்

 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (37)، ومسلم (759). 

 குர் ஆன் ஓதுதல்

 كان للشافعي في رمضان ستون ختمة، يقرؤها في غير الصلاة،

قال عثمان بن عفان رضي الله عنهلو طهرت قلوبكم ما شبعتم من كلام ربكم

 பிறருக்கு உதவுவது

 துஹ்பத்துல் அஹ்வதியில் இந்த ஹதிஸ் வருகிறது.

 நோன்பாளிக்கு உணவளிப்பவருடன் ஜிப்ரயீல் அலை முஸாபாஹா செய்கிறார்.

 قال رسول الله -صلى الله عليه وسلم- : " من فطر صائما في شهر رمضان من كسب حلال صلت عليه الملائكة ليالي رمضان كلها وصافحه جبريل ليلة القدر ومن صافحه جبريل -عليه السلام- يرق قلبه وتكثر دموعه " ، قال فقلت : يا رسول الله ، من لم يكن عنده؟ قال : " فقبضة من طعام " قلت : أفرأيت إن لم يكن عنده ، قال " فشربة من ماء "

கொடுத்து சிவந்த கைகள்

இப்னு உமர் கடைசியாக மிஞ்சிய மேல் துண்டையும் ஒரு ஏழைக்கு கொடுத்தார்.

 كان ابن عمر لا يفطر في رمضان إلا مع اليتامى والمساكين،

رآه في السوق يشتري لراحلته علفًا بالدَّيْن، فذهب أيوب بن وائل إلى أهل بيت عبد الله وسألهم، فأخبروه: إنه لم يبِتْ بالأمس حتى فَرَّقَهَا جميعًا، ثم أخذ القطيفة وألقاها على ظهره وخرج، ثم عاد وليست معه، فسألناه عنها فقال: إنه وهبها لفقير.

 முன் கூட்டியோ  உதவிகள் செய்து விடுவது நல்லது.லைலத்துல் கத்ரு வரை எதிர்பார்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை

தஸ்பீஹ் திக்ரு இஸ்திக்பார் துஆக்கள் அதிகமாக செய்ய வேண்டும்.

 நனமைக்கான சிறு வழியையும் விட்டு விட வேண்டாம்

 ·        عَنْ الزُّهْرِيِّ قَالَ تَسْبِيحَةٌ فِي رَمَضَانَ أَفْضَلُ مِنْ أَلْفِ تَسْبِيحَةٍ فِي غَيْرِهِ – ترمذي

.அல்லாஹ்விடம் மதிப்பை பெற இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்வோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

Thursday, February 05, 2026

அல்லாஹ் கருணை மிக்கவன்

 அல்லாஹ் கருணை மிக்கவன் என்று கூறுகிறது திருக்குர் ஆன்.

وكان بالمؤمنين رحيما

அதிகாரிள் பெரும்பாலும் ஒரு வரை தண்டிபதற்கு ஏதாவது காரணம் கிடைக்கிறதா என்று தேடுவார்கள்.

மாதக் கடைசில் சாலையில் நிற்கிற போலீஸ் காரர் ஒரு வாகன ஓட்டியிடம் அனைத்து சான்றுகளும் சரியாக இருந்தாலும். ஹெட்லைட்டில் ஏன் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்று கூறி ஒரு பைன் போடுவார்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய மாநில மக்களுக்காக தானே வாதாடினார்.  மம்தா பானர்ஜி, அப்போது அவர்  தேர்தல் கமிஷன் என்னென்ன அற்பமான காரணங்களுக்காக வெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை நீக்கியுள்ளது என்று அடுக்கடுக்காக பட்டியலிட்டு கூறினார். வீடு மாறி மாமியார் வீட்டுக்கு குடிபெயர்ந்த மருமகள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளார் என்பது போன்ற பல நிகழ்வுகளை நீதிமன்றத்திடம் எடுத்துக் கூறியுள்ளார்.

குற்றங்களை தேடி தண்டனை தருவது , தண்டனைகளுக்காக குற்றங்களை உருவாக்குவதும் தான் உலக இயல்பு.

ஆனால் அல்லாஹ் கருணை மிக்கவன்.    அவனது பெருங் கருணைக்கு ஒரு எடுத்துக் காட்டு.

அவன் மக்களை மன்னிக்கவும் அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பவும் காரணங்களை தேடுவகிறான். அவனே காரணங்களை உருவாக்குவதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள். .

ஆன்மீக அறிஞர்கள் சில உதாரணங்களை கூறுவதுண்டு.

ஒரு தந்தை தன் மகன் தங்களை மதிக்க வில்லை என்று கூறி அல்லாஹ்விடம் முறையிட்டார். அல்லாஹ் மகனை அழைத்து விசாரித்தான். மகன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். அந்த நேரத்தில் சொர்க்கத்திற்கு செல்வதற்கு தந்தைக்கு ஒரே ஒரு நன்மை மட்டுமே தேவைப்பட்டது. மகனிடமோ ஒரே ஒரு நன்மை மட்டுமே இருந்த்தது.

சூழ்நிலையை கவனித்த மகன் இறைவனிடம் மன்றாடினான். அல்லாஹ்வே என்னிடம் இருக்கிற ஒரு நன்மையை எனது தந்தைக்கு கொடுத்து அவரையாவது சொர்க்கத்துக்கு அனுப்பு என்று கேட்பான்.

அல்லாஹ் கூறுவான்  அவரை நான் சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன். இவ்வாறு கேட்ட காரணத்திற்காக உன்னையும் நான் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் என்று சொல்லி இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவான்.

இன்னொரு மனிதரை அல்லாஹ் விசாரிப்பான். அவருக்கு எந்த நன்மையும் இருக்காது. நீ நரகிற்கு போ என்று சொல்லிவிடுவான். அந்த மனிதன் அல்லாஹ்வின் உத்தரவு வந்தவுடன் நரகை நோக்கி விரைவாக நடக்க ஆரம்பித்துவிடுவான். அல்லாஹ் அவனை அழைத்து நான் நரகிற்கு போ என்கிறேன் நீ இவ்வளவு வேகமாக போகிறாயே ஏன் என்று கேட்பான் , அவர் சொல்வார். இறைவா அந்த உலகில் தான் நீ சொன்னதை நான் கேட்கவில்லை. இந்த உலகிலாவது நீ சொன்னதை விரைவாக கேட்டு விட வேண்டும் என்று செல்கிறேன் என்று சொல்வார். சரி நீ சொர்க்கம் செல் என்று அல்லாஹ் கூறுவான்.

இன்னொரு மனிதருக்கு நரகிற்கு செல்ல உத்தரவிடப்படும். அவன் திரும்பிப் பார்த்த படியே செல்வான். ஏன் திரும்பி திரும்பி பார்க்கிறாய் என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! உலகில் நான் பாவங்கள் செய்த போதெல்லாம் என்னை நீ மன்னித்திருக்கிறாய். இங்கும் மன்னித்து விட மாட்டாயா என்ற ஆசையில் தான் திரும்பி பார்க்கிறேன் என்பார் . சரி நீ சொர்க்கத்திற்கு செல் என்று அல்லாஹ் கூறிவிடுவான்.

இவ்வாறு மன்னிக்கும் கருணை எந்த அளவிற்கு இருக்கும் எனில் தப்ரானியில் ஒரு ஹதிஸ் வருகிறது.

இபுலீஸ் தனக்கும் மன்னிப்பு கிடைத்து விடும் என ஆசைப்பட்டு தலையை உயர்த்திப் பார்ப்பான்.

الطبراني = حذيفة بن اليمان

والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ الجنَّةَ الفاجِرُ في دِينِه، الأَحمقُ في معيشتِهِ، والَّذي نَفسي بيدِه ليدخلَنَّ الجنَّةَ الَّذي قد مَحشتْهُ النَّارُ بذنبِهِ، والَّذي نَفسي بيدِه ليَغفرَنَّ اللهُ يومَ القيامةِ مَغفرةً يتطاوَلُ لها إبليسُ رجاءَ أن تُصيبَهُ

 

இந்த அரும் குணத்தின் அடிப்படையிலேயே அல்லாஹ் தனது கருணையை வெளிப்படுத்தவே சிறப்பான நாட்களை நமக்கு தருகிறான்.

சமீபத்தில் நம்மை கடந்து சென்ற பராஅத் இரவாகட்டும், ரமலான் மாதமாகட்டும்.  லைலத்துல் கத்ருடைய இரவாகட்டும். பெருநாட்களின் இரவாகட்டும். அரபா உடைய நாளாகட்டும், வெள்ளிக்கிழமையாகட்டும். பlயணத்தில் இருக்கும் போதாகட்டும்.   இவை அனைத்தும் மக்கள் மீது தனது கருணையை பொழுய அல்லாஹ் செய்து கொண்ட ஏற்பாடுகளேயாகும்.

நம்முடைய கடமை என்ன வெனில் ?

நாம் செய்கிற காரியங்களில் அல்லாஹ்வின் அருள் கிடைத்து விட வேண்டும் என்ணத்தில் வாழ்வதும் செயல்படுவதும் நமது கடமையாகும்.

மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை மதித்து  ஆசிரியர்களை மதித்து அல்லாஹ்வின் கருனையை தேடிக் கொள்ள ஆசைப்பட்டால் நிச்சயம் கிடைக்கும்.

வியாபாரிக்ள் வாடிக்கையாளரின் நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் போது அல்லாஹ்வின் கருணை கிடைக்கும்.

அதிகாரிகள் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் செயல்படும் போது இதனால் இறைவனின் அருள் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணி செயல்பட்டால் நிச்சயம் அந்த கருணை கிடைத்து விடும்.

நம்மை மன்னிப்பதற்கும் சொர்க்கத்திற்கு அனுப்புவதற்கு பொருத்தமான ஒரு காரணம் அல்லாஹ்வுக்கு கிடைத்து விட வேண்டும்.  

நாம் எத்தகைய நிலையில் இருந்தாலும் இதை புரிந்து கொண்டு  அந்த கருணை மழைக்குள் நனைந்து விட வேண்டும்.

جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال: (إن لربكم عز وجل في أيام دهركم نفحات، فتعرضوا لها، لعل أحدكم أن تصيبه منها نفحة لا يشقى بعدها أبداًً) رواه الطبراني 

 

அதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.

 

இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற வாழ்க்கையை பற்றிய மமதை அல்லது மேலெண்ணம் நம்மை ஏமாற்றி விடக் கூடாது.

 

ا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ (5)

 

நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் சுகம் அல்லது மதிப்புதான் நம்மை அல்லாஹ்வின் கருன்ணையை அலட்சியப்படுத்த தூண்டுகிறது.

 

 

தினசரி காலை எழுந்த்தும் ஒரு அல்ஹம்துலில்லாஹ் சொல்ல தோன்றவில்லை எனில் நமது காசு பணம் அல்லது நமது ஆரோக்கியம் நம்மை ஏமாற்றி விட்ட்து என்றே பொருளாகும்.

 

ஒரு பெரிய பணக்காரர்  ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார். சில ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு அவர் வசதியானவர்.  அங்கு ஒரு பெரிய ஆலிமும் இருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த பணக்காரையும் அந்த ஆலிமையும் சந்திக்க வைத்தார்கள். பணக்கார்ரை சந்தித்த சில நொடிகளில் ஆலிம் அவரிடம் விடை பெற்று வந்து விட்டார். ஏற்பாட்டாளர்கள் ஆலிமிடம் என் ஹஜ்ரத் அவரிடமிருந்து சட்டென வந்து விட்டீர்கள் என்று கேட்டனர். ஹஜ்ரத் சொன்னார். நான் அவரிடம் உங்கள் பணிகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டேன். ஏதோ நடக்கிறது என்று அவர் கூறினார். ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவு வளர்ந்த் அவர் ஒரு அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வில்லை அதனால் எனக்கு அவரிடம் பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை என்று கூறினார்.

 

நாம் அல்லாஹ்வுடைய  கருனையை உணர்ந்து கொள்ளாமல் போவது மமதையாகவும் நம்மிடம் இருப்பவைகளை பற்றி நாம் பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அமைந்து விடும்.

 

அருமையானவர்களே இது மிக ஆபத்தமான ஏமாற்றமாகும்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானகா!

 

வாழ்க்கை எப்போதும் ஒரே போங்கில் இருப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வைவும் அவனது கருணையையும் நினைவு கொள்வோர் – வெற்றி பெறுகிறார்கள்.

 

இன்று  இமாம் புகாரி எந்த அளவு மதிக்கப்படுகிறார். ? அவருடைய வாழ்வையும் நமது மரியாதையையும் நாம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம். அவர் அளவுக்கு மரியாதைக்குரியவர்களா நாம் ?

 

அவருக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை பாருங்கள்!

 

அல்லாஹ்வின் வேதத்திற்கு அடுத்து அவருடை நூல் மதிக்கப்படுகிறது.

 

புகாரியில் ஒரு செய்தி இருந்தால் மக்கள் அதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

 

இன்று இந்த அளவில் மதிக்கப்படுகிற இமாம் புகாரிக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் பெரிய மரியாதை கிடைத்தது.

 

அவர் அவருடைய இறுதி நாட்களில் நைஸாபூருக்கு வந்த போது 8 ஆயிரம் குதிரைகள் அவரை வரவேற்றன. பல்லாயிரக்கணக்கானோர் அவரை காண திரண்டு வந்தனர்.

 

ஆனால் அவருடைய ஒரு கருத்து அங்கிருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான போது நைசாபூரை விட்டு அவர் ரகசியாமாக இரவில் வெளியேற நேர்ந்தது.

 

அங்கிருந்து அவர் தனது சொந்த ஊரான உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா நகருக்கு வந்தார் . அங்கும் மக்கள் அவருக்கு ஏராளமான வரவேற்பு தோரணங்களை கட்டி வரவேற்றனர்.

 

ஆனால் சில நாட்களில் புகாராவின் ஆளுநர் காலித் தன் மகன்களுக்கு பாடம் நட்த்த வீட்டும் வருமாறு அழைத்தார். இமாம் புகாரி அதை மறுக்கவே அவர் எதிரியானார்,

 

தனது சொந்த ஊரான புகாராவை விட்டு வெளியேறி அவர் சமர்கண்ட நகரில் குடியேற நினைத்தார். அந்த நகரம் அவருக்கு பிடித்தமான நகரம்.

 

ஆனால் சமர்கண்டில் இருந்தவர்கள் அவர் அங்கு வரக் கூடாது என்று தடை செய்து விட்டார்கள்.

 

இருந்த இட்த்திலிருந்து புறப்பட்டாகி விட்டது. செல்ல வேண்டிய இட்த்திற்கு அனுஅதியும் கிடைக்க வில்லை.

 

நடுவழியில் தனது உறவினர்களின் வீட்டில் கர்தன்க் என்ற இடத்தில் அவர் தங்கினார்.     

 

தனது நிலை அவருக்கு மிகவும் துயர் அளித்தது.  யாரிடமும் அவர் புலம்ப வில்லை. தனது பெருமைகளை சொல்ல கெஞ்சவும் இல்லை.

 

அவர் தங்கியிருந்த அந்த சின்ன ஊருக்கும் ஆட்சியாளர்களின் தூதர் வந்து சேர்திருப்பதாக இமாம் புகாரி அறிந்தார்.

 

அல்லாஹ்விடம் முறையிட்டார்.

ربي إني ضاقت علي الأرض فاقبضني

 

இறைவா! பூமி எனக்கு மிகவும் நெருக்கடியாகிவிட்டது. நீ என்னை எடுத்துக் கொள் என்று உருகினார்.  

 

அந்த ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து புறப்ப ஆயத்தமானார்.

 

அந்த காட்சியை கண்ட அவரது மாணவர் غالب بن جبريل கூறுகிறார்.

 

جاء رسول إلى سمرقند بإخراجه، فلما وافى تهيأ للركوب، فلبس خفيه وتعمم، فلما مشى قدر عشرين خطوة

இது பற்றி செய்தி கிடைத்தவுடன் இமாம் புகாரி அடுத்த பயணத்திற்கு தயாரானார். தனது காலுறைகளை அணிந்து கொண்டார். தலைபாகை கட்டிக் கொண்டார். ஒரு இருபது அடி நடந்திருப்பார். அதற்கு சரிந்து விழுந்தார். இறப்பெய்தினார்.

எத்தகைய உயர்ந்த  - செல்வாக்கு மிக்க மனிதருக்கு என்ன நிலை பாருங்கள்?

 ஆனால் அல்லாஹ் இமாம் புகாரியை கை விட வில்லை.

அவருடைய அந்தஸ்த்தை உடனேயே மக்களுக்கு காட்டினான்.

அவர் நல்லடக்கம் செய்யப் பட்ட இட்த்திலிருந்து ஒரு அலாதியான நறுமணத்தை வெளிப்படுத்தினான். பல நாட்கள் அது நீடித்தது.

غالب بن جبريل கூறுகிறார்.

فلما دفناه فاح من تراب قبره رائحة غالية فدام على ذلك أياماً،

 

இதை அறிந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

 

பலரும் இமாம் புகாரியின் கபருடைய மண்ணை எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். நாங்கள் இப்படியானால் கப்ரு வெளியே தெரிந்து விடும் என்று பயந்து அந்த கப்ரை சுற்றி மக்கள் மண்ணை எடுக்க முடியாத வாறு ஒரு மூங்கில் கூடை செய்து மூடி வைத்தோம்.

 

فجعل الناس يختلفون ويتعجبون. وأما التراب فإنهم كانوا يرفعون عن القبر حتى ظهر القبر

அவரை எதிர்த்தவர்கள் அவருடைய மண்ணறைக்கு வந்து அந்த அதிசயத்தை பார்த்து தாங்கள் தவறு செய்து விட்ட்தாக மனம் வருந்தினார்கள்.

 

وخرج بعض مخالفيه إلى قبره وأظهر التوبة والندامة.

 

இவற்றை எல்லாம் விட இமாம் புகாரிக்கு அல்லாஹ் செய்த பெரிய கிருபை என்ன வெனில்  ?

 

கதீப் அல் பக்தாதி கூறுகிறார்.

 

அப்துல் வாஹித் பின் ஆதம் எனும் அறிஞர் கூறினார்.

 

ஒரு நாள் கனவில் நான் பெருமானாரை பார்த்தேன். நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீகிறீர்கள் என்று கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள் புகாரியின் வருகையை எதிர்பார்த்திருப்பதாக சொன்னார்,

 

நான் உடனே விழித்தெழுந்து விசாரித்த போது நான் கனவு கண்ட அதே நாளில் இமாம் புகாரி வபாத்தாகி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறுகிறார்.

وروى الخطيب البغدادي

عبد الواحد بن آدم الطواويسى قال: رأيت النبي صلى الله عليه وسلم في النوم ومعه جماعة من أصحابه، وهو واقف في موضع فسلمت عليه فرد السلام. فقلت: ما وقوفك يا رسول الله؟ فقال: أنتظر محمد بن إسماعيل البخاري

 

இமாம் புகாரியின் இந்த இறுதி நேர வரலாறு நமக்கு சொல்லும் அழுத்தமான பாடம்.

 

நாம் இப்போது இருக்கிற நிலை எப்போதும் தொடரும் என்பதில்லை நாம் எவ்வளவு நல்லவராக மக்களுக்கு பயனுள்ளவராக இருந்தாலும் சரி

 

எனவே நம்மிடமிருக்கிற எதை வைத்தும் நாம் பெருமிதம் கொண்டு அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

 

அல்லாஹ்வின் கருணை பார்வையை எப்போதும் எதிர்பார்த்தவர்களாகவே இருக்க வேண்டும்.

 

பராஅத் ரமலான் லைலத்துல் கத்ர் போன்ற நல்ல நாட்கள் அல்லாஹ்வின் கருனையை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிற நாட்களாகும்.

 

நாம் நமது வாழ்க்கை கொடுத்திருக்கிற வசதி வாய்ப்புக்களில் அல்லது பாதுகாப்பில் மதி மயங்கி இந்த கருணை மழையில் நனைந்து விடாமல் இருந்து விடக் கூடாது.

 

அல்லாஹ்வின் அருள் பொழியும் நாட்களையும் நேரங்களையும் நாம் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

 

நாம் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வின் கருணை பொழியும் நாட்களை உள்ளார்த்தமாம பயனப்டுத்திக் கொள்ள தயாராக இருப்போம்

 

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!