புனிதம் மிக்க ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது.
அல்லாஹ் மீதி இருக்கும் ஷஃபானின் நாட்களை பாக்கியமானதாக்கி தரட்டும்.
ரமலானை பரிபூரணமாக பெற்றுக் கொள்கிற பாக்கியத்தையும் தரட்டும்.
ரமலான் நாம் அல்லாஹ்விடம் நம்முடைய
மரியாதையை உயர்த்திக் கொள்வதற்கான மாதம்.
மக்களிடம் மரியாதை பெற வேண்டும் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஆசை உண்டு.
அதற்காக எத்தனையோ முயற்சிகளை நாம் செய்வதுமுண்டு.
கையில் ராடோ வாட்ச் கட்டிக் கொள்வது முதல் வீட்டில் புலித் தோல் வைத்துக் கொள்வது
வரை
துபாய் நகரில் ஒருவர் வெள்ளை நிற புலி ஒன்றை வளர்க்கிறார்.
கெஸ்டவ் கிளிம்ட் என்பவருடைய ஒரு ஓவியத்தை 180 மில்லியன் டாலர் கொடுத்து ஒருவர்
விலைக்கு வாங்கி தன்னுடைய இடத்தில் மாட்டி வைத்திருக்கிறார்.
லியானர்டோ டாவின்ஸி யின் ஓவியம் 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒருவர் விலைக்கு
வாங்கியிருக்கிறார்.
தனி விமானங்களை சில விலைக்கு வாங்கிவைத்திருக்கிறார்கள்.
இன்ன கார்களை – இன்ன போன் வைத்திருந்தால் தான் மரியாதை என்று சமூகத்தில் ஒரு
எண்ணம் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அதனால் சாதாரண விலையில் பயன்படக்கூடிய சிறப்பான கார்களும் போன்களும் இருந்தாலும்
கூட
வீட்டிற்முன் விலை உயர்ந்த கார்களை பலரும் வாங்கி வைத்திருக்கிறார்கள்
மக்களிடம் மரியாதை பெறுவதற்கு இவ்வளவு பிராயத்தன்ங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்
நம்முடைய ரப்பு , அல்லாஹ்விடம் மரியாதையை பெற நாம் ஆசைப்படவும் உழைக்கவும் வேண்டும்.
உண்மையில் ரப்பிடம் மரியாதை பெறுவதுதான் எந்த விலை உயர்ந்த பொருளை வைத்திருப்பதையும்
விட உயர்ந்த்து.
சாமாணியர்கள் அல்லாஹ்விம் மதிப்பு மிக்கவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த
மரியாதை உன்னதமானது .அசாதாரணமானது.
عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((رُبَّ
أشعثَ أغبَرَ مدفوعٍ بالأبواب، لو أقسَمَ على الله لَأَبَرَّهُ))؛ رواه مسلم.
அன்சாரி
தோழர் அன்ஸ் பின் நுழர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது தங்கைக்கு ஆதரவாக ஒன்றை
கூறினார். அது சட்டத்தை மீறி அல்லாஹ்வுடைய கருணையை எதிர்பார்த்த ஒரு வாசகமாக இருந்த்து.
அல்லாஹ் அவருடைய சத்தியத்தை நிறைவேற்றினான்.
قصة الرُّبَيِّعِ
بنت النضر وأخيها أنس بن النضر
فإن الرُّبيِّع
كسَرتْ ثنيةَ جارية من الأنصار، فاحتكموا إلى الرسول صلى الله عليه وسلم، فأمر
النبي صلى الله عليه وسلم أن تُكسَر ثنيةُ الرُّبيِّع؛ لأنها كسَرتْ ثنية الجارية
الأنثى، فقال أخوها أنس: يا رسول الله، تكسر ثنية الرُّبيِّع؟ قال: ((نعم، كتاب
الله القصاص، السِّنُّ بالسن))، قال: والله لا تُكسَر ثنية الرُّبيِّع
فأقسَمَ هذا
القَسَمَ، ليس ردًّا لحكم الرسول، ولكن ثقةً بالله عز وجل، فهدى الله أهل الجارية
ورضُوا بالدية
فقال النبي صلى
الله عليه وسلم: ((إن من عباد الله من لو أقسَمَ على الله لأَبَرَّه))؛
பிலால் ரலி அவர்கள் கருப்பினத்தை
சார்ந்தவர் ஆனால் அல்லாஹ்விடம் மரியாதை பெற்றவர்
அவருடை அந்தஸ்து எப்படிப்
பட்ட்து .
நான் மிஃராஜின் போது சொர்க்கத்தை
பார்வையிட்டேன். அப்போது எனக்கு முன்னே பிலாலின் காலடி ஓசையை நான் கேட்டேன் என்று பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
فإني سمعت دف نعليك
بين يدي في الجنة
அறிஞர்கள் கூறினார்கள்.
فقد ثبت في الصحيحين وغيرهما أن رسول الله -صلى الله عليه وسلم- قال لبلال عند صلاة الفجر: يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام، فإني سمعت دف نعليك بين يدي في الجنة، قال ما عملت عملًا أرجى عندي أني لم أتطهر طهورًا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي.
பிர்அவ்னை வீசியது போல.
இதை இநத உலகிற்கு எடுத்துக் காட்ட்த்தான் அவனுடைய உடல்
இன்னும் கெய்ரோ வில் உள்ளம் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ
آيَةً ۚ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)
இந்த எதார்தத்தை புரிந்து கொண்டவர்கள் எவ்வளவு பிஸீயான
உயர்ந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய அமல்களில் கவனமாக இருப்பார்கள்.
கலீபாக்கள் உலகில் முதல் தரமான ஆட்சியாளர்களாக இருந்தார்கள்.
தங்களுடைய மக்கள் பணி எதையும் அவர்கள் அரைகுறையாக விட வில்லை. அதே போல அல்லாஹ்விற்காக
அமல் செய்வதிலும் அவர்கள் குறை வைக்கவில்லை.
அழுது அழுது கண்ணில் கண்ணீரில் கோடு பதிந்து போனவர் உமர்
ரலி
o
عمر بن الخطاب: عُرف بشدة اجتهاده،
فكان يبكي حتى يرى في وجهه خطان من الدموع، وكان يقوم الليل ويصوم النهار، ويحافظ
على أوراده
ஓதிக் கொண்டே இருப்பதால்
முஸ்ஹப் என்று அழைக்கப் பட்டவர் உஸ்மான் ரலி
- عثمان
بن عفان: اشتهر بختم القرآن في ركعة، وكان
كثير الصيام والقيام، ولقب بـ "المصحف" للزومه القرآن.
இவர்கள் இருவரும் ஆட்சி செய்த நிலப்பரைப்பை எண்ணிப் பார்த்தீர்கள்
எனில் ஆச்சரியப்படுவீர்கள்.
உலகின் எந்த பேர் அரசருக்கும் குறைவில்லாத ஆட்சி அவர்களுடையது.
அதே நேரத்தில் எந்த அடிமையையும் விட விட அதிகமாக அமல்களையும் செய்தார்கள்.
நல் அமல்களை செய்ய வாய்ப்புக் கிடைப்பது தான்
இந்த உலகின் பெரிய நன்மை என்று நம் முன்னோர்கள் கருதினார்கள்
كان السلف يجدون لذة في العبادة تفوق لذات الدنيا، ويقولون:
"لولا الليل ما أحببت البقاء في الدنيا
அறிஞர்கள் கூறுவதுண்டு
நம்மிடம் நற்செயல்கள் இல்லை என்றால் அல்லாஹ் நம்மை ஈ கொசுவை போலத்தான் பார்ப்பான்.
நன்மைகளை நோக்கி திருப்பி விட வந்த மாதம்
நம்மை நன்மைகளை நோக்கி திருப்பி விடவும் அதன் மூலம் அல்லாஹ்வின் மதிப்பை பெற்று விடவும் அல்லாஹ் செய்து கொடுத்த ஒரு ஏற்பாடு தான் ரமலான் மாதம்
இலாபம் சம்பாதிப்பது என்ற நோக்கம் பிரதானமாகி விடுகிற போது மிக அத்தியாவசியமான உணவும் உறக்கமும் கூட முக்கியம்ற்றதாகிவிடுகிறது.
பரீட்சைக்கு தயாராகி கொண்டிருக்கிற மாணவரை கல்யான
விருந்துக்கு அழைத்தால் கூட வரமாட்டார்.
காரணம் அவருடைய நோக்கம் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும்
என்பது
இது போல ரமலான் மாத்த்தை நல் அமல்களை இலக்காக கொண்டு நாம்
எதிர்பார்க்க வேண்டும்.
நிறைய நல் அமல்களை செய்து நம்முடைய மரியாதையை அல்லாஹ்விடம்
உயர்த்திக் கொள்ள நாம் பாடுபட வேண்டும்.
நோன்பு فَإِنَّهُ
لَا مِثْلَ لَهُ
ஷஹாதத்தை கோரிய தோழருக்கு மாற்றாக பெருமானார் சொன்ன அறிவுரை நோன்பு
நோன்பு மகத்தானது. அது அல்லாஹ்விற்கும் நம்க்குமான
ஒரு ரகரியம்.
ரக்சியத்தை பாதுகாக்கும் உணர்வோடு நோன்பை கடைபிடிக்க
வேண்டும்.
ஒரு பத்து இலட்ச ரூபாயை ரகசியமாக பாக்கெட்டில்
வைத்து எடுத்து செல்வோமானால் எந்த எச்சரிக்கையை நாம் கடைபிடிப்போம்.
அது போல நோன்பின் மகத்துவத்தை நாம் பேணிக்காக்க
வேண்டும்.
இந்த அற்புத வணக்கத்தை வெற்று வணக்கமாக ஆக்கிவிடக்கூடாது.
من لم يدع قول
الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه } [أخرجه
البخاري].
وقال صلى
الله عليه وسلم : { الصوم جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث
ولا يفسق ولا يجهل، فإن سابّه أحد فليقل إني امرؤ صائم } [أخرجه البخاري ومسلم].
அறிஞர்கள் அறிவுரைச் இப்படி சொல்வதுண்டு
فإذا
صمت - يا عبد الله - فليصم سمعك وبصرك ولسانك وجميع جوارحك، ولا يكن يوم صومك ويوم
فطرك سواء.
كان للشافعي في رمضان ستون ختمة، يقرؤها في غير
الصلاة،
قال عثمان بن عفان رضي الله عنه: لو
طهرت قلوبكم ما شبعتم من كلام ربكم
நோன்பாளிக்கு
உணவளிப்பவருடன் ஜிப்ரயீல் அலை முஸாபாஹா செய்கிறார்.
قال رسول الله -صلى الله عليه وسلم- : " من فطر صائما في شهر رمضان من كسب حلال صلت عليه
الملائكة ليالي رمضان كلها وصافحه جبريل ليلة القدر ومن صافحه جبريل -عليه السلام- يرق قلبه وتكثر دموعه " ، قال فقلت :
يا رسول الله ، من لم يكن عنده؟ قال : " فقبضة من طعام " قلت : أفرأيت
إن لم يكن عنده ، قال " فشربة من ماء "
கொடுத்து சிவந்த கைகள்
இப்னு உமர் கடைசியாக மிஞ்சிய மேல் துண்டையும் ஒரு ஏழைக்கு கொடுத்தார்.
رآه
في السوق يشتري لراحلته علفًا بالدَّيْن، فذهب أيوب بن وائل إلى أهل بيت عبد الله
وسألهم، فأخبروه: إنه لم يبِتْ بالأمس حتى فَرَّقَهَا جميعًا، ثم أخذ القطيفة
وألقاها على ظهره وخرج، ثم عاد وليست معه، فسألناه عنها فقال: إنه وهبها لفقير.
தஸ்பீஹ் திக்ரு இஸ்திக்பார் துஆக்கள் அதிகமாக செய்ய வேண்டும்.
.அல்லாஹ்விடம்
மதிப்பை பெற இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்வோம்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!