வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 03, 2026

அடக்கமாக நடந்து கொள்வதே பெண்களுக்கு பாதுகாப்பு.

 கேரளாவின் மூத்த ஆலிம் பெருந்தகையும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆதரவற்றோர் நிலையங்களையும் உருவாக்கியவருமான ஏபி அபூபக்கர் முஸ்லியார் அவர்கள்: சமீபத்தில்

பெண்கள் தங்களது வீடுகளுக்கு இருக்க வேண்டும் தேவையற்று பொது வெளிகளில் தலை காட்டக் கூடாது என்று திருக்குர் ஆன் கூறியிருக்கிறாது என்றார்

 சமீபத்தில் கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை ஒட்டி முஸ்லிம் இளம் பெண்கள் பாட்டுப்பாடி ஆட்டம் போடும் சில வீடியோக்கள் வெளியாகியதை ஒட்டி முஸ்லிம் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏபி உஸ்தாத் இந்த கருத்தை கூறியிருந்தார்.

 இதை கேரள அளவிலும் தேசிய அளவிலும் ஊடகங்கள் ஊதிப் பெருதாக்கி 21 ம் நூற்றாண்டுக்கு பெருத்தமற்றது என்றும் இது  இஸ்லாமே அல்ல என்றும் இஸ்லாமின் முதல் பெண்மணி கதீஜா ரலி ஒரு வியாபாரியாக இருந்தார் என்றும் ஆயிஷா ரலி ஒரு போருக்கு தலைமை தாங்கினார் என்றும் எனவே பெண்களின் சுதந்திரமான வெளிப்பாட்டுக்கு எந்த தடையும் போடக் கூடாது என்றும் கடந்த ஒரு வார காலமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

 நாம் இந்த ஜும் ஆ உரையின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

 பெண்கள் தேவையிருந்தால் வெளியே செல்ல்லாம். இல்லை எனில் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஊர் சுற்றக் கூடாது என்பது திருக்குர் ஆனின் கட்டளையாகும்.

 இந்த கருத்தை எதிர்ப்பவர்கள் குர் ஆனை எதிர்க்கிறார்கள் என்பதே பொருளாகும்.

 குர் ஆனை ஒத்துக் கொள்பவர்கள் இதை ஒத்துக் கொண்டாக வேண்டு.

 திருக்குர் ஆன் பெண்களுக்கு கூறுகிற பிரதான அறிவுரை இது.

  وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ

அவர்கள் வீடுகளில் இருக்கட்டும். அறியாமை காலத்து பகட்டோடு வெளியே திரிய வேண்டாம்.

 அறியாமை காலத்து பகட்டு என்றால் மார்க்கம் இல்லாத மக்கள் எப்படி வெளியே சுற்றுகிறார்களோ அது போல சுற்ற வேண்டாம். நமக்கு ஒரு மார்க்கம் இருக்கிறது. அதன் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வோடு வெளியே அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

தப்ஸீர் ச அதி இதை விளக்குகிறார்.

 كعادة أهل الجاهلية الأولى، الذين لا علم عندهم ولا دين

இது மட்டுமல்ல இதற்கு முந்தைய வசனம் கூறுகிறது.

 يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا (32

 குழைந்து பேசாதீர்கள் . வெளிப்பட்டயாக பேசுங்கள் என்பது போன்ற இந்த வழிகாட்டுதல்கள் தீனை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிற குடும்பங்களுக்கு மிக அவசியமானதாகும் .

 இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காக அல்ல; அவர்களை பாதுகாப்பதற்காகவே சொல்லப் பட்ட உத்தரவுகளாகும்.

 பாதுகாப்பு என்பது வெறும் உடலுக்கு மட்டுமல்ல மானம் மரியாதைக்குமான பாதுகாப்பாகும்.

 ஒரு உதாரணத்திற்கு நாலுக்கு பேருக்கு தெரிகிற மாதிரி பொது இடங்களில் ஆடிப்பாடுகிற பெண்கள் கவனிக்க வேண்டும். அவர்களை புகைப்படம் எடுக்க பலர் காத்திருக்கிறார்கள். ஆண்கள் ஆடினால் அது அவ்வளவு எளிதில் கவர்சியாகாது. ஆனால் பெண்கள் சிறிதாக அசைந்தாலே அது கவர்ச்சியாக அமையும். இந்த கவர்ச்சியின் வெளிப்பாடு ஒரு நேரம் அல்லது ஒரு நேரத்தில் பிரச்சனை ஆகிவிடுவதுண்டு.

 இவ்வளவு தூரம் நாகரீகமும் சுதந்திரமும் வளர்ந்து விட்ட்தாக சொல்லப்படுகிற காலத்தில் தான் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்திருக்கிறது.

 ஆகஸ்ட் 30 ம் தேதி நம் நாட்டையே உலுக்கிய செய்தி இது

 சென்னை கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஹைஅதுன் நிஸா என்ற 45 வயது பெண்ணை படு கொலை செய்து சூட்கேஸில் வைத்து அடைத்து ஆக்ரா செல்லும் ரயில் அனுப்பியிருக்கிறார்கள். இத் தொடர்பாக மாணீக் உத்தின் என்பவர் கைது செய்யப் பட்டிருக்கீறார். அந்த பெண் ஏமாற்றப்பட்டு தவறான உறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

 இது போல ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரம் மோசடிகள் பெண்களுக்கு எதிராக அனறாடம் நிகழ்கின்றன.

 இந்த ஆபத்துக்கள் சில நேரங்களில் சாமாணிய ஒரு குற்றவழக்காக மட்டும் கடந்து போய் விடும் சில நேரங்களில் பெரும் சமூக பதற்றத்துக்கும் ஆளாகும்.

 பெண்கள் விவகாரம் என்பது அப்படித்தான்.

 மதீனாவில் பனூ கைன்காஃ என்ற ஒரு யூதக் குழு இருந்த்து. அதில் ஒருவன் செய்த தவறு அந்த சமூகத்தையே மதீனாவை விட்டு  வெளியேற்றியது.   

 அன்சாரிகளின் ஒரு பெண் அவர்களது கடைப்பக்கம் வந்த போது அப்பெண்ணை அவன் மான பங்கப்படுத்தினான். அதை கண்டு ஆத்திரமுற்ற ஒரு முஸ்லிம் அவனை கொலை செய்தார். யூதர்கள் ஒன்று திரண்டு அந்த முஸ்லிமை கொலை செய்து விட்டார்கள். இதனால் பெரும் சமூகப் பதற்றம் உருவாகியது. இறுதியி அந்த யூதக் குழுவை மதீனாவை விட்டு வெளியேற்ற வேண்டிதானது.

 كان من أمر بني قينقاع أن امرأة من العرب قدمت بجلب لها فباعته بسوق بني قينقاع وجلست إلى صائغ بها فجعلوا يريدونها على كشف وجهها فأبت فعمد الصائغ إلى طرف ثوبها فعقده إلى ظهرها فلما قامت انكشفت سوءتها فضحكوا منها فصاحت، فوثب رجل من المسلمين على الصائغ فقتله، وكان يهودياً فشدت اليهود على المسلم فقتلوه، فاستصرخ أهل المسلم المسلمين على اليهود، فغضب المسلمون فوقع الشر بينهم وبين بني قينقاع.

 ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட ஆபத்து ஒரு சமூகத்திற்கே ஆபத்தாக முடிந்த்து. எனவே பெண்களின் பாதுகாப்பு என்பது சாமாணிய மானதல்ல/ ஒருவர் மட்டுமே சம்பந்தப் பட்ட்தும் அல்ல; சமூகம் சம்பந்தப்பட்டது.

 நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடூர விபத்துக்கள் ஏற்படும் போது மட்டும் தான் பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று சிலர் மெதுவாக கருத்துச் சொல்ல முயல்கிறார்கள்.

 இது மாதிரியான கருத்துக்களை சொல்லி எதுக்கு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என பலர் பேசா மடந்தைகளாக இருக்கிறார்கள்.

 இஸ்லாம் எந்தச் சூழலிலிம் தன்னுடை கருத்தை உறுதியாக தெரிவித்து விடுகிறது.

 ஏபீ அபூபக்கர் மூஸ்லியார் அந்த வகையில் தான் தேவையான நேரத்தில் மிக அவசியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.  அதுவும் அவருடைய கருத்தல்ல 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குர் ஆனின் கருத்தாகும்.

 பெண்கள் மக்கா மதீனா போன்ற தனி மரியாதைக்குரிய புனித தலங்கலில் அல்லாது மற்ற பள்ளிவாசல்களுக்கு கூட வர தேவையில்லை என்று இதன் காரணமாகவே இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

 பெண்கள் பர்தா முறைக்கு உட்பட வேண்டும்

 பர்தா, பெண் தொல்லைக்கு ஆளாவதை தடுக்கும் ஏற்பாடே தவிர அடக்கியாள்வதின் அடையாளம் அல்ல. இதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 பர்தா பெண்களை பாதுகாப்பான சூழலில் இருக்கச் சொல்கிறது.

 பர்தா என்பது பெண்கள் தாங்களாவே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவதாகும்.

 பர்தா என்பது புர்கா போடுவது மாத்திரமல்ல. பர்தாவின் முதல் தரம் அந்நிய ஆண்களின் முன் தேவையில்லாமல் வெளிப்படாமல் இருப்பதாகும்.

 ஜைனப் அம்மையாரை திருமணம் முடித்த பெருமானார் தோழர்களுக்கு வலீமா விருந்து கொடுத்தார்கள். அந்தச் சிறிய அறையில் ஒரு புறம் ஜைனப் அம்மையார் உட்கார்ந்திருக்க மறுபுறம் தோழர்கள் உட்கார்ந்திருந்தனர். அது ஜைனப் அம்மையாருக்கு கூச்சத்தை அளித்தது.

அப்போது அங்கு வந்த உமர் (ரலிஅவர்கள் يأتيك البر والفاجر   

 உங்களிடம் நல்லவர்களும் வருகிறார்கள் தீயவர்களும் வருகிறார்கள் ஏன் நீங்கள் ஒரு பர்தாவை இடையில் போட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்டார்கள்

 அப்போது தான் பர்தாவை கடமையாக்கிய வசனம் அருளப்பட்ட்து.

 يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

 பெண்கள் அந்நிய ஆடவர் அனைவரின் பார்வையிலிருந்தும் தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் அதுவே முதல் தர பர்தா.

 உமர் ரலி பெருமானாரின் காலத்தில் சொல்கிறார்கள்/ يأتيك البر والفاجر   

 என்று அப்படியானால் இன்றைய சூழலில் அந்நிய ஆணகள் அனைவரையும் அயோக்கியர்களாக பார்க்க பெண்கள் பழகிக் கொண்டால் தான் ஓரளவு அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

 அந்நிய ஆண்களுடன் தக்க துணையின்றி பழகுதல் ஊர்சுற்றுதல் உறவாடுதல் உறையாடுதல் அனைத்தும் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அல்லது சிரமத்தை கொடுக்கும்.

 ஆணகளுடன் பழகும் போதெல்லாம் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறதா என்று கேட்கலாம். அது புயல் வரும் போதெல்லாம் சேதம் ஏற்பட்டு விடுகிறதா என்பதை போன்றது.

 சிக்கிக் கொண்டால் சீரழிந்து விடுவோம்.

 பர்தாவின் வசனம் பர்தாவின் நோக்கத்தை அற்புதமாக புலப்படுத்துகிறது.

 ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

1.    பெண்கள் அடையாளம் காணப்படக்கூடாது

2.   தொல்லைக்கு ஆளாகாக் கூடாது.

 (முஸ்லிம்களாகிய நாம், நமது வீட்டுப் பெண்களுக்கு பர்தாவின் நோக்கத்தை முதலில் விளக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் பலரும் பர்தாவை வெறும் கலாச்சார அடையாளமாக நினைக்கிறார்கள். அதனால் தான் பர்தா அணிந்து கொண்டே ஆண்களை ஈர்ப்பது போல அலங்காரம் செய்து கொள்கிறார்கள். அன்னிய ஆண்களிடம கொஞ்சலாக பேசுகிறார்கள். தேவையில்லாம அரட்டை அடிக்கிறார்கள்.)

 பெண்களுக்கு  புரிய வைக்கப் பட வேண்டியவை

 பெண்களின் உடலும் தோற்றமும் கவர்ச்சியானது, அதே நேரத்தில் தாக்குதலை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அல்லது எதிர் தாக்குதல் தொடுக்குமளவுக்கு பலமற்றது. இது எதார்த்தம்.

 இந்த எதார்த்தம் பெண்களுக்கு முறையாக புரிய வைக்கப் பட வேண்டும்.

 சுய பாதுகாப்பிற்கும் சுய மரியாதைக்கும் இடையே ஒரு த்த்தளிப்பில் இன்றைய மகளிர் சமுதாயம் இருக்கிறது.

 நிறையப் படித்து விட்டால்அதிகாரம் மிக்க பதவியில் உட்கார்ந்து விட்டால்..அதிகம் சம்பாதித்துவிட்டால் உடலின் பலமும் கூடிவிடுமா என்ன?

 இன்றைய பெண்கள் இந்த இட்த்தில் தான் ஏமாந்து போகிறார்கள். ஆணுக்கு நிகராக படிப்பதும் ஆணுக்கு நிகராக சம்பாதிப்பதும் மரியாதையை பெற்றுத்தரலாம். ஒரு ஆபத்தை தவிர்க்கவோ, எதிர்கொள்ள்வோ தேவையான அல்லது தப்பிக்க தேவையான உடல் பலத்தை அது கொடுத்து விடுமா? அதுவே பாதுகாப்பாக மாறிவிடுமா?

 இது பற்றிய தெளிவான சிந்தனைக்கு பெண்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

 உடல் ரீதியான பலவீனத்தை ஒத்துக்கொள்வது அவமானமல்ல. கேவலமல்ல என்பதையும் பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

 இருப்பதை ஏற்ற்க் கொண்டுதானே ஆகவேண்டும்.

 நிலாவுக்கு சுய வெளிச்சம் இல்லை என்பதனால் அது கேவலமாகி விடுமா?

 ஆண் உடல் பலம் பொருந்தியவனாக இருக்கிறான் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல.

 உடல் பலம் பெருமைக்குரியதாக இருந்தால் யானையும் சிங்கமும் அல்லவா அதிக பெருமைக்குரியவை

 எனவே உடல் ரீதியான வித்தியாசங்களின் எதார்த்த்தை இன்றைய பெண்களை புரிந்து கொள்ளச் செய்வதே நாகரீக உலகத்தின் முன் இன்றுள்ள சவாலாகும்.

 இதைப் பற்றி பேசத் தொடங்கினாலே பிற்போக்குவாதி ஆணாதிக்க பேர்வழி என்ற பழிச் சொற்களும் வசவுகளும் வருவதை எல்லாம் தாங்கிக் கொண்டாவது இந்த உண்மைகளை மகளிர் சமுதாயம் புரியுமாறு செய்ய வேண்டும்.

 ஆண் பெண் சமத்துவம்

 அதே போல சமத்துவம் என்ற சொல் பெண் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. ஆண்களானாலும் பெண்களானாலும் எல்லோரும் எல்லா இட்த்திலும் சம்மாகி விட முடியாது என்பது தான் சத்தியம்.

 மேனேஜரும் பியூனும் சம்மாகிவிட முடியுமா?

 திருக்குர் ஆன் ஆண் பெண் சுய மரியாதையை பேசுகிறது

 وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ

 நபிகள் நாயகம் (ஸல்கூறினார்கள்.

  النساء شقائق الرجال

 அதே நேரத்தில் எல்லா இட்த்திலும் வித்திலும் சமத்துவம் என்ற பேச்சை இஸ்லாம் ஏற்கவில்லை. காரணம் அது பொருந்தாது என்பதுதான்.

 சொத்து பங்கீடு விச்யத்தில் அத்தாவுக்கும் அம்மாவுக்கும் ஆறில் ஒன்று 1/6 என்று சம அம அளவில் பங்கு கொடுத்த இஸ்லாம், மகனுக்கும் மகளுக்கு பங்கீடு செய்கிற போது ஆணுக்கு இரண்டு பங்கு என்கிறது.

 எல்லா இட்ததிலும் ஒரே மாதிரி சமத்துவம் பார்ப்பது பொருந்தாது என்பதால் தான் இந்தச் சட்டம்.

 வணக்க வழிபாடுகளில், குடும்ப சமூக விவகாரங்களில் பலவற்றில் ஆண்களுக்கு சம்மான மரியாதை பெண்ணுக்கு உண்டு. அதே நேரத்தில் பாதுகாப்பு பொருளாதார கடமைகளில் ஆண்களின் கை உயர்ந்தே இருக்கிறது. காரணம் இவற்றில் உடல் வலிவும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சல் குணமும் சம்பந்தப் பட்டிருக்கிறது.

 இந்த விசயத்தில் பெண்களின் இயறகையான் அம்சத்தை கருத்தில் கொண்டு நியதிகளை சொன்னால் மட்டுமே அது காரிய சாத்தியமும் எதார்த்தமும் ஆகும்.

 செயற்கை சமத்துவத்தின் பாதிப்பு

 

எல்லா வகையிலும் ஆணுக்குப் பெண் சமம் தான் என்று கற்பித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் தான் பெண்கள் அதிகம் பாதிப்புக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள் என்பதே இன்றைய ஆய்வுகள் காட்டுகிற உண்மை.

 அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு நிமிட்த்திற்கும் ஒரு பெண் கணவன் அல்லது காதலனால் அடிபட்டு இறக்கிறாள்.

 காரணம் என்ன தெரியுமா கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வருகிற போது உனக்கு நான் இளைத்தவள் அல்ல என்ற எண்ணம் பெண்ணை அதிகம் பேசவும் ஏசவும் வைக்கிறது. அது ஒரு எல்லையை தாண்டுகிற போது ஆண் தனது உடல் பலத்தை காட்டி விடுகிறான்.

 பிறகு இருவரும் கோர்ட் படி ஏறுகிறார்கள். அல்லது பிரிந்து விடுகிறார்கள்.

 மேற்கத்திய உலகில் சொந்தக் குடும்பத்துக்கு உழைத்துப் போடும்படி பெண் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

 வேலைக்குப் போ! பணம் கொண்டுவா! குழந்தைகளை பராமரிப்போம் என்கிறான் ஆண்.

 இன்றையை மேற்குலக சமுதாயம் தனது சொந்த மனைவிக்கு செல்வழிப்பதை சுமையாக க்ருதுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 செயற்கை சமத்துவம் ஆண்கள் பெண்களை விஷமத்தனமாக ஆபாசமாக அனுபவிப்பதற்கு த்தான் வழி செய்திருக்கிறது. இதை சுதந்திரம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். அது தான் பெரிய பேதமை.    

 இப்போது ஏபி அபூபக்கர் உஸ்தாத் பெண்களுக்கு திருக்குர் ஆன் சொன்ன அறிவுரையை எடுத்துச் சொன்னதை விமர்சிக்கிற பலரும் சமத்துவம் என்ற  பழம் கஞ்சியை தான் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது 21 ம் நூற்றாண்டு என்று அடிக்கடி சொல்கிறார்கள். 19 ம் நூற்றாண்டிலேயே இத்தகைய சிந்தனை போக்கு பெருகி விட்டதை நாம் பார்த்து வருகிறோம். நூற்றாண்டுகள் கடக்க கடக்க – வெளிப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர குறையவில்லை.

 கேரளம் போன்ற மாநிலங்களில் உனக்கு நான் என்ன கட்டுப்படுவது நான் படித்திருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்கும் என்ற சிந்தனை கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பெருகியதன் விளைவு அங்கு பெண்கள் குடும்பத்திலிருந்து வெளியேறி தனியே சம்பாதிக்க செல்வதும் குடும்பங்கள் சீர் குலைவதும் தவறான தொடர்புகளும் பெருகி இருக்கின்றன என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.

 இந்த போக்கு எங்கு தொடர்ந்தாலும் அங்கு இதற்கேற்ற ஆபத்துக்கள் தொடரத்தான் செய்யும்

 எனவே பெண்கள் அவசியத்திற்கு வெளியே செலல்லாம்.

 قول النبي ﷺ لعائشة رضي الله عنها: "إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ" (رواه البخاري).

 கல்வி கற்க, கற்றுக் கொடுக்க , வேலை செய்ய . தேவைகளை பெற பெண்கள் வெளியே செல்ல இஸ்லாம் தடை சொல்ல வில்லை.

 அந்த வெளியேறுதல் தபர்ருஜல் ஜாஹிலிய்யா வாக இருக்க கூடாது.

அதாவது நமக்கு ஒரு மார்க்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதன் படி வெளியேறுவதாக இருக்க வேண்டும்.

 அவசியமின்றி பெண்கள் வெளியே சுற்றுவதும் அப்படி சுற்றுகிற போது அடக்கமான நடைமுறைகளை பேணாமல் போவதும் பெண்களை கவர்ச்சிப் பொருளாக்கும் அது அவர்களுக்கு ஆபத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.

 இது திருக்குர் ஆனின் விருப்பத்திற்கு எதிரானதாகும்.

 இன்றைய நவீன யுகத்திற்கும் இது பொருந்தும்.

நீங்கள் எவ்வளவு பெரிய பொறூப்பில் இருந்தாலும் சரி.

 ஒரு முஸ்லிம் பைலட் பெண்மணி தன்னுடைய புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் சில நாட்களில் பெண்களை விபச்சாரத்திற்கு ஏலம் எடுக்கிற இணைய தளத்தில் இடம் பெற்றது.

 இத்தகைய விபத்துக்கள் தமக்கு ஏற்பட வேண்டுமா என்பதை ஒவ்வொரு முஸ்லிம் சகோதரியும் உணர வேண்டும் முஸ்லிம் சகோதரர்கள் தமது குடும்ப பெண்களுக்க் ஊணர்த்த வேண்டும்.

 பெண்களின் கட்டுப்பாடற்ற வெளிப்பாடுகளுக்கு ஆண்களும் மிக முக்கிய காரணமாகும்.

அவர்கள் தூண்டுவதும் அனுமதிப்பதுமே பெண்களை நமது மரபுகளை மீறி நடக்க தூண்டுகிறது.

அவரக்ள் தமது குடும்பத்திற்கு சரியான அறிவுரைகள் தறுவார்கள் எனில் நிச்சயம் நிலமை மாறும் .

 பெண் குழந்தைகளை வைத்திருக்கிற ஒவ்வொரு பெற்றோரும் இன்றை காலச் சூழ்நிலைக்கேற்ப இஸ்லாமின் நடைமுறைகளையும் அதன் நியாயங்களையும் புரிய வைக்க வேண்டும்.

 கல்லூரிகளுக்கு அனுப்புகிற போது அல்லது வேலைக்கு அனுப்புகிற போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்படாவிட்டால அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படா விட்டால் பின்னர் இஸ்லாமிய வாழ்வு என்ற வார்த்தை நமக்கு அந்நியமாகி விடும்

 அல்லாஹ் பாதுகாப்பானாக!  

 

Thursday, August 27, 2026

நேபாளத்திற்காக கண்ணீர் சிந்துவோம்.

நேபாள நாட்டில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம் மனிதர்களை விக்கித்து நிற்க செய்திருக்கிறது.

இமய மலையை ஒட்டி நேபாளம் இருக்கிறது. அருகிலேயே திபெத்தும் இருக்கிறது.

நேபாளத்திலும் திபெத்திலும் ஏரிகள் பல பனிப்பாறைகளாக இருக்கின்றன.

 இமயமலைப் பகுதி முழுவதும் 3,624 பனிப்பாறை ஏரிகள் உள்ள. இவற்றில் 47 ஏரிகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இதில், 21 ஏரிகள் நேபாளத்தில் உள்ளன. இதில் எங்கு எப்போது பனிப்பாறை சரிவு ஏற்படும் என்பது எந்த யூகமும் செய்யமுடிவதில்லை.

 திடீரென்று பனிச் சரிவோ அல்லது பணி ஏரிகள் உடையவோ செய்தால் வெள்ளம் கணக்கிடவே முடியாத படி காட்டாறாய் பெருக்கெடுத்து விட வாய்ப்பிருக்கிறது.

 திபெத்தில்  ஒரு ஏரி  உடைந்து வெடித்த்தில் உருவான வெள்ளம்  கோசி ஆறு வழியாக நேபாளத்தில் திடீரென பெருக்கெடுத்து.

 நேபாளத்தின் ரசுவா மாவட்டமே முழுவதும் இதில் பேரழிவை சந்தித்தது. சமூக ஊடகங்களில் வெளியான இந்த திடீர் வெள்ள பாதிப்பின் காட்சிகள் குலை நடுங்கச் செய்யும் அளவில் இருக்கின்றன. ரசுவா மாவட்டமே சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுவரை 400 -க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருப்பதாக சொல்லப் பட்டாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்றே தகவல்கள் கூறுகின்றன. 800 பேரை காணவில்லை என்கிறது நேபாள காவல்துறை

.இந்த பணி ஏரி உடைப்பு என்பது பற்றி இதுவரை செய்தியாக மட்டுமே படித்து வந்தோம். இப்போது நேரடியாக காண்கிற ஒரு வாய்ப்பு சிசிடி காமராக்கள் வழியாக மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

 நேபாள நாடு ஒரு பிரபல மான சுற்றுலா தளம் என்பதால் பல நாட்டு மக்க்ளும் அங்கு சிக்கியுள்ளனர். நம் இந்திய நாட்டை சார்ந்த பலர் அங்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். மலேஷியர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி கூறுகிறது. இதனால் உலகின் பல நாடுகளிலும் வாழுகிற மக்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 அல்லாஹ் அநத  கவலை பெருகாமல் பாதுகாத்தருள்வானாக! பாதிப்பின் அலவை குறைத்தருள்வானாக!

 காரணம் என்ன ?

 இமய மலையின் அடியில் இருக்கிற திபெத் பகுதியில் சீனா பலமான பல கட்டுமான்ங்களை கட்டுவதே இந்த பனி வெடிப்புக்கு காரணம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இல்லை இது பூமியில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களால் எற்பட்டுள்ள ஒரு விபத்து என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இதில் மக்கள் கவனிக்க் வேண்டிய பல செய்திகள் இருக்கின்றன.

 இதில் முதலில் வெளிப்படுகிர சிந்தனை ,

.மனிதன் பிரம்மாண்டமா அறிவியல் வளர்ச்சியை அடைந்து, தொழில் நுட்ப முன்னேற்றத்தை எட்டி அதை பற்றி தானே வியப்படைந்து கொண்டிருக்கிற காலத்தில் இயற்கை தனது சக்தியை வெளிப்படுத்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தி விடும் சக்தியை கொண்டிருக்கிறது.

நம்முடைய எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் அந்த சக்திக்கு முன்னால் தலை தாழ்ந்தே இருக்க வேண்டியுள்ளது என்பதாகும்.

இறுதி நாளுக்கு முன்னோடியாக பல நிகழ்வுகள் நம் கண் பார்க்க நடந்த் வருகின்றன.

 வழிந்தோடிப் போகிற கட்டிடங்களை வாகனங்களை வலிமையான அணைக்கட்டுகளை நாம் சப்த நாடியும் ஒடுங்கி வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது.

 

وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا (108

  وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ ۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا (111)

 துஆ

நாம் நேபாள மக்களுக்காக கண்ணீர் சிந்துவோம். அது நமது இதயத்தில் கருணை இருக்கிறது என்பதன் அடையாளம்.

அந்த கருனை தான் ரப்பின் கருனையை நமக்கு பெற்றுத்தரும்

- الرَّاحِمونَ يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.

 சோஷியல் மீடியாக்களில் வருகிற வீடியோக்களை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்காமல் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த பாதிப்பின் அளவை குறைப்பானாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தகுந்த ஆறுதலை தருவானாக! ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை கண்டறியும் வழிகளை இலேசாக்கி வைப்பானாக! மீட்பு பணியாளர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! மிரட்சிக்கு ஆளாகியுள்ள சிக்குண்ட மக்களுக்கு அல்லாஹ் தைரியத்தை தந்தருள்வானாக!

அல்லாஹ் நம்மை இத்தகைய ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து அருள்வானாக!

பேரிடர்களை அறவே தவிர்க்க முடியாது.

 கடந்த பல நாட்களாகே சுனாமி போன்ற ஒரு அழிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது போன்ற எச்சரிக்கைகள் உலகின் பல பாகத்திலும் உணரப்பட்டன. கேரளாவின் கண்ணூர் பகுதியிலும் ஜப்பான் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கைகள் செய்யப் பட்டன.

 ஜப்பான் நாட்டில் ஏற்படுகிற சுனாமி போல்வோ இயற்கையாகவோ ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா அண்குண்டை வீசியது போல செயற்கையாகவோ பேரழிவுகள் ஏற்படுவது  அல்லாஹ்வின் சுன்னத்து. வழி முறை.

 இத்தகு சோதனைகளை மனித இனம் எதிர் கொண்டே ஆக வேண்டும்.

 وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

அல்லாஹ் மனிதர்களை அவர்களது வாழ்வில் வாழ்விடங்களில் பொருளில் குடும்பத்தில் சமயவிவகாரங்களில் என பல வழிகளிலும் சோதிப்பான்.

 இவை அனைத்தும் நன்மை தீமையை நாம் பிர்த்தறிந்து கொள்வதற்காகவே!

 நல்லது கெட்டது எது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே

 وكل هذه الابتلاءات ما هي إلا امتحانات يمتحن الله بها عباده ليميز الخبيث من الطيب ، وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين

 நண்மை பாவம் என்ற அளவிலும் நல்லது கெட்ட்து என்ற வகையிலும் மக்கள் ஒவ்வொருவரும் அரசுகள் ஒவ்வொன்றும் தாம் செய்கிற காரியங்களை தீர்க்கமாக ஆராய வேண்டிய நேரம் இது. அல்லாஹ் ஒரு கட்டொழுங்குக்குள் இந்த உலகை வைத்திருக்கிறான். அதில் நாம் செய்கிற குழப்பங்களால் பாதிப்புகள் சில நேரங்களில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடல்லம்.

 பாதுகாவலான இறைவன் மனிதர்களுக்கு ஏற்படுத்து கிற சோதனைகளுக்கான காரணங்கள் பல

 1.   நமது பொறுப்புணர்வை நாம் அறிந்து கொள்வதற்காக

 أحسب  النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لا يُفْتَنُونَ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ- سورة العنكبوت الآيات : 1-2

 நமது குழந்தைகள் நமக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்./அதே போல நாம் ஏற்கும்  பணிகள் எப்படி நமது பொறுப்புணர்வை உண்டு பண்ணுகின்றன  அது போல  சோதனைகளும்  நமது  பொறுப்புணர்வை மெருகூட்டுகின்றன.

 இந்த விபத்து நமது பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யட்டும்.

 2.  நமது பாவங்கள் மன்னிக்கப்படவும் அந்தஸ்து உயர்த்தப்படவும் இது காரணமாகலாம்.

அப்பாவிகள் திடீரென பாதிப்புக்குள்ளாகும் போது நிச்சயமாக அதற்கான நன்மைகளை இறைவன் அவர்களுக்கு வழங்குவான்.

 عن سعد رضي الله عنه قال : قلت : يا رسول الله ، أيُّ الناس أشَدُّ بلاء ؟ قال :

الأنبياءُ ، ثم الأمثلُ فالأمثلُ ، يُبْتَلَى الرَّجُلُ على حَسْبِ دِينه ، فإن كان دِينُهُ صُلْبا اشتَدَّ بلاؤه ، وإن كان في دِينه رِقَّة على حَسبِ دِينه ، فما يَبْرَحُ البلاءُ بالعبد حتى يتركَهُ يَمْشِي على الأرض وما عليه خطيئة

 أخرجه الترمذي

 أشد الناس بلاءً الأنبياء ، ثم الصالحون ، لقد كان أحدهم يُبتلى بالفقر حتى ما يجدُ إلا العباءة يجوبها ، فيلبسها ، ويُبتلى بالقمَّل حتى يقتلُه ، ولأحدهم كان أشدَّ فرحاَ بالبلاءِ من أحدكم بالعطاء -  أخرجه الحاكم في مستدركه ]

 இத்தகைய சோதனைகளின் போது மக்கள் சில விசயங்களை கடை பிடிக்க வேண்டும்.

 الواجب على العبد حين وقوع البلاء عدة أمور: 

 ·       أن يتيقن ان هذا من عند الله فيسلم الأمرله. 

·       أن يلتزم الشرع ولا يخالف أمر الله فلا يتسخط ولا يسب الدهر. 

·       أن يستغفر الله ويتوب إليه مما أحدث من الذنوب. 

·       أن يتعاطى الأسباب النافعة لد فع البلاء. 
 

சோதனைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழி முறைகளை கையாளுதல் என்ற இந்தக்   கடைசி  அம்சம் இன்று மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

 பேரிடர்களை நாம் தவிர்க்க முடியாதுஆனால் அதிலிருந்து மீளவும் அதன் பாதிப்புக்கள் அதிகமாகாமலும் கவனித்துக்கொள்ள மனிதனுக்கு அல்லாஹ் அறிவைக் கொடுத்திருக்கிறான்,

 அந்த அறிவுத்திரனுக்கு  பேரிடர் மேலாண்மை Disaster management or emergency management  என்று இன்றைய நவீன உலகம் பெயர் கூறிக் கொள்கிறது.

 பேரிடர் மேலாண்மை என்பது அறிவு திறன் படைத்த மனிதன் இயற்கையாக அல்லது செயற்கையாக் ஏற்படும் தீமைகளிலிருந்து எவ்வளவு தூரம் சாத்தியப்படுமோ அவ்வளவு தூரம் தற்காத்துக் உருவாக்கிக் கொண்ட வழிகளாகும்

 அல்லாஹ்வின் தீர்மாணிக்கப்பட்ட அதாபிலிருந்து மனிதர்கள் தம்மை தற்காத்துக் கொண்டுள்ளனர்,

 யூனூஸ் நபி நைன்வா என்ற ஊருக்கு நபியாக அனுப்பப்பட்டார். நினேவா என்பது ஈராக் நாட்டின் டைக்ரிஸ் நதியை ஒட்டி இருந்த நகராகும். அங்கிருந்த மக்களிடம் யூனூஸ் நபி பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே இறைவனுடைய தண்டனை மூன்று நாட்களில் உங்களுக்கு வரும் என்று சொல்லிவிட்டு அந்த ஊரை விட்டு கிளம்பிப் போய்விட்டார்.

 முதலில் தென்றலாக வீசிக் கொண்டிருந்த காற்று பின்பு சூடாக ஆரம்பித்ததும்யூனூஸ் நபி சொன்ன தண்டனை வந்து விட்டதென மக்கள் உணர்ந்து கொண்டு பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்களில் மூத்த ஒரு மனிதர் சொன்ன ஆலோசனையின் படி தங்களது குடும்பத்தினர்கால்நடைகள் அத்தனையை அழைத்துக் கொண்டு ஒரு மைதானத்தில் கூடி கூக்குரலிட்டு அழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரினர். அவர்களுடைய கண்ணீரையும்திருந்திய உள்ளத்தையும் பார்த்த இறைவன்அனுப்ப இருந்த தண்டனையை நீக்கி அவர்களை மன்னித்தான்:

 فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ() (10:98).

 எத்தகையை பேரிடரிலிருந்து தப்பிப்பதற்கான வழியை – அதன் ஆபத்துக்களின் சதவீதத்தை குறைத்துக் கொள்வதற்கான வழி முறையை தேடுவது மனிதர்கள் மீது கடமை.  

 அவநம்பிக்கை என்பதற்கே இடமில்லை. நிராசையடையுதலும் கூடாது.

 அவ்வாறு மக்கள் முய்றசிக்கிற போது அல்லாஹ் மக்களின் பாதுகாப்பு நிம்மதிக்கான வழிகளை நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

 பேரிடர்கள் ஏற்படுகிற போது அதிலிருந்து மக்களை காப்பாற்றும் வழிகளை ஆராய வேண்டிய முதல் கடமை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடையது.

 நூஹ், லூத், (அலை) ஆகிய நபிமார்களை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு கடைசியாக பெரும் வேதனையை இறக்கிய இறைவன் அந்த வேதனை வருவதற்கு முன்னதாக நன்மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நபிமார்க்களுக்கு உத்தரவிட்டான்,

 நபி நூஹ் அலை அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்

 وَاصْنَعْ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ(37)

 قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ

 நபி லூத் (அலை)  அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான்

فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنْ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ

லூத் அலை அவர்களது மக்களுக்கு விதிக்கப்பட்ட வேதனைக்கான நேரமாக சுபுஹுடைய நேரம் தீர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் இரவின் கடைசிக் கொஞ்ட நேரத்தில் நம்பிக்கையாளர்களை காப்பாற்றி அழைத்துச் செல்லும் பொறுப்பு லூத் நபிக்கு தரப்பட்டது. நபித்துவ அற்புதமாக வெகு சீக்கிரத்தில் லூத் அலை தன் மக்களை காப்பாற்றி அழைத்துச் சென்றார். அது மட்டுமல்ல மக்களை முன்னே செல்ல விட்டு அவர்களுக்குப் பின்னே செல்லுமாறு அல்லாஹ் லூத்து (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டான்.

  நாம் வாழ்கிற இன்றைய சூழலில் ஆட்சித்தலைவர் கள் பெரும்பாலும் தங்களது நாட்டின் செல்வ வளம் பற்றி மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள். அதற்காக எத்தகைய அழிவு வேலைகளையும் செய்ய்த் தயாராக இருக்கிறார்கள். அதே போல கார்ப்பரே கம்பெனிகளும் தங்களது வளர்ச்சிக்காக எந்த அழிவுப்பணிக்கும் தயங்குவதில்லை. பொதுமக்களுக்கும் கூட தத்தமது தேவைகளுக்கு எனில் இயற்க்கயை பாழடிக்கிற எந்த செயலை குறித்தும் கவல்லப் படுவதில்லை.

இது பேரிடர் மேலாண்மையின் மிகப் பெரும் பல்வீனமாகும்.

 எனவே இயற்கையை பாதுகாப்பதில் பேரிடர் மேலாண்மையில் அரசுகள் ட்டுமல்ல, தனிப்பட்ட மக்களுக்கும், சமூக சேவை அமைப்புக்கள், குடியிருப்போர் சங்கங்கள் போன்ற மக்கள் குழுவினருக்கும் பொறுப்பு இருக்கிறது.

 காரணம் அரசின் உதவி பின்னால் வரும், உடனே கிடைப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி தான்.

 என்வே பேரிடர் மேலாண்மை என்ன என்பது சம்பந்தமாக நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.

 சென்னை உலகின் ஒரு பெரு நகராக இருந்த போதும் சிங்கப்பூர் போன்ற ஒர் சின்ன நாட்டின் கால் வாசி அளவுக்கு கூட பேரிடர் மேலாண்மையில் போதிய அறிவும் அனுபவமும் அக்கறையும் இல்லாமல் இருக்கிறது.  

 ஜப்பானிய மக்களின் விழிப்புணர்வை நாம் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 பல முறை சுனாமித் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்கு ஆளானவர்கள், இயற்கையான பேரிடர், செயற்கையான பேரிடர் இரண்டுக்கும் ஆளானவர்கள் பேரிடர் கால நிர்வாக அமைப்பை மிகச் சிறப்பாக பராமரிக்கிற காரணத்தால் தமக்கேற்படுகிற பாதிப்பின் அளவை கனிசமாக குறைத்துக் கொள்கிறார்கள்.

 பேரிடர் மேலாண்மையின் முக்கியமான நான்கு அம்சங்கள் இவை

 1.   Mitigation பாதிப்பின் அளவை கட்டுப்படுத்தல்

2.   Preparedness ஆயத்தமாயிருத்தல்

3.  Response பிரதிசெய்தல்

4.       Recovery மீட்பு

 இதில் ஆயத்தமாக இருத்தல் என்ற அம்சம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது, ஏனெனில் உலகின் எந்தப் பகுதியிலும் இயற்கை தனது விளையாட்டை காட்டக் கூடும்.

 ஆயத்தமாயிருத்தல்

 பேரிடரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருத்தல் என்பதில் இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களுகான திட்டங்களை வகுப்பதும் தீயனைப்பு போன்ற தேவையான சேவைகளை  சரியான பராமரிப்பதும்  பயிற்சி மேற்கொள்வது மாகும்,

 மேலை நாடுகள் பலவற்றில் இத்தகைய சூழ்நிலையில் வசிப்பவர்களுக்கு ஆபத்து காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகள் குறித்து முறையான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன,

 ஏரிக்குள் வீடு கட்டிக் கொண்டிருக்கிற நம்முடைய மக்களுக்கு இத்தகைய பயிற்சிகள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது எதார்த்தமாகும்.

அதே போல ஆபத்து ஏற்பட்டால் மக்கள் செல்ல வேண்டிய பாதுகாப்பிடங்கள் மற்றும் வெளியேற்றுதல் சம்பந்தமான  திட்டங்களும் ஆயத்த நடவடிக்கையில் அடங்கும்.  

 

அதே போல பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை உருவாக்குவதும் இதில் ஒரு முக்கிய அம்சமாகும்.

எவ்வளவு இழப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்று ஊகிப்பதும் இதில் ஒரு அம்சமே  

 

மீட்புக்குழுக்களுக்கும் இடையில் பரஸ்பர உதவி ஒப்பந்தங்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வெளியேற்றுதலைச் செயல்படுத்தல் போன்ற திட்டமிடல் முன்னதாகவே முறைப்படுத்தி பயிற்சியளித்திருக்க வேண்டும்.

 

மக்கள் சரியான எச்சரிக்கை வழங்குவது பேரிடர் மேலாண்மையின் மிக முக்கிய அம்சமாகும்.

 நம்முடைய நாட்டில் வானிலை அறிக்கை என்பது ஏதோ ஜோசியக்காரனின் அறிக்கைகள் போலவே அமைந்திருகக்கின்றன. துல்லியம் இவற்றில் மிகவும் குறைவாக இருக்கிறது.

 இலண்டனிலிருந்து ஒருவர் பத்ரிகைகளுக்கு எழுதுகிறார்.

1988 ம் ஆண்டு இங்கிலாந்து அரசி எலிசபெத் அம்மையார் இந்தியாவுக்கு வந்த போது 10 மாதங்களுக்கு முன்னதாகவே அவரது திட்டம் ஆராயப்பட்டது, அதில் அவர் காஞ்சிபுரம் செல்வதும் தீர்மாணிக்கப்பட்டது, அப்போதே பிரிட்டிஷ் அதிகாரிகள் அரசியின் பயண காலத்தின் சீதோஷ்ணம் குறித்து ஆராய்ந்தார்கள், அப்போது அரசி காஞ்சிபுரம் செல்கின்ற அன்று கடுமையான மழை இருக்கும் என்று அனுமானித்தார்கள், அதை இந்திய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி தக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள், அதன் படியே அரசி காஞ்சிபுரம் வந்த அன்று கடும் மழை பொழிந்தது, காஞ்சிபுரம் பயணத்தை இரத்து செய்யுமாறு அதிகாரிகள் கூறினார்கள், ஆனால் தகுந்த ஏற்பாடு செய்யப் பட்ட கார்ணத்தால் அரசி அந்த மழையிலும் காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.

 எனவே நமது வானிலை அறிக்கைகளின் துல்லியம் கேள்விக்குள்ளாக்ககப் பட வேண்டும். தேவையான ஆய்வுக்கருவிகள் விஞ்ஞானிகள் இதில் ஈடுபடுத்தப் பட வேண்டும்,

 இவை அனைத்தும் ஆயத்தமாக்குதலின் செயல்பாடுகளாகும்.

 எல்லாம் வல்ல இறைவன் அவனது ஆற்றலை எப்போதும் நினைவில் கொண்டு வாழ்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக

 நேபாள நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிற ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு நிம்மதியளிப்பானாக!

நம்மையும் உலகையும். பெரும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பானாக!

மலேஷியாவின் ஈப்போ நகரின் kinta riverfront அபார்ட்மெண்டிலிருந்து.)