வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 04, 2026

ஆளுமை பண்புகள்

திருக்குர் ஆன் நமக்கு ஒரு துஆவை ஒதக் கற்றுத்தருகிறது.

وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

இறையா எங்களௌ இறையச்ச முடையோருக்கு அதிகாரியாக ஆக்குவாயா!

இந்த துஆ முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதிகாரம் செலுத்துபவராக இமாம்) இருக்க ஆசைப்பட வேண்டும் என்பதை கற்பிக்கிறது.

குறந்த பட்சம் தனது குடும்பத்தின் மீது ஆளுமை செலுத்துபவராக அவர் இருக்க வேண்டும்.

இந்த வசனத்தின் சூழல் குடும்பத்தை பற்றியது.

எங்களுடைய உஸ்தாத் சித்தையன் கோட்டை ஹெச் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் இதற்கு அருமையாக விளக்கம் சொல்வார்கள்.

யா அல்லாஹ் எங்களது குடும்பத்தை இறையச்ச முள்ள குடும்பமாக ஆக்கு! அதை வழி நட்த்திச் செல்ல கூடியவர்களாக எங்களை ஆக்கு என்பது இதன் பொருள் என்று கூறுவார்கள்.

(இந்த வகையில் சிந்திக்கையில் இது என்ன அருமையான துஆ என்று தோன்றும்! நமக்காகவும் நம் குடுமப்த்திற்காக பிரார்த்திக்க இதை விட அற்புதமான துஆ வேறென்ன இருக்கப் போகிறது? . குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இதை விட வேறென்ன தேவை ? அல்லாஹ் நமது குடும்பத்தை இறையச்சமுள்ள குடும்பமாக்கி அதை அந்த வழியில்  நடத்திச் செல்ல கூடிய தவ்பீக்கை வல்ல நாயன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!)

ஆளுமை என்பது என்ன? யாரெல்லான்  ஆளுநர்கள்?

இந்த வசனத்தை தெளிவாக புரிந்து கொண்டால் வழி நட்த்திச் செல்லுதல் என்பது தான் ஆளுமை என்பது தெளிவாகும்.

நம்மில் ஒவ்வொருவரும் அதிகாரம் செய்ய வேண்டியவர்களே என்பதும் தெரியவரும்.

நாம் குறைந்த்து நம்முடைய குடும்பத்தை ஆளுமை செய்ய வேண்டியவர்கள். வாய்ப்புக் கிடைத்தால் நமது நிறுவனத்தை அல்லது நமது நாட்டை ஆள வேண்டியவர்கள்.

முன்னோடி யார்?

நமது முன்னோடி யார் என்பதை முதலில் தீர்மாணிக்க வேண்டும்.

அதாவது யாரை போல நாம் ஆளவேண்டும் என்ற சிந்தனை நமது துவக்கதை சரியாக அமைத்துக் கொள்ள உதவும்.

அதாவது என்னுடைய குடும்பம் இந்த குடும்பத்தை போல இருக்க வேண்டும்.

 என்னுடைய நிறுவனம் இந்த நிறுவனத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும்

என்னுடைய ஆட்சி அவருடைய ஆட்சியை போல என்று மக்களிடம் பெயர் பெற வேண்டும்

என்பது போன்ற தீர்மாணங்கள் நமக்கு இருந்தால் அது நமது பயணப் பாதைக்கு ஒரு இலக்கை கற்றுத்தரும் . அது போல அதை நோக்கி செயல்படுவதை இலேசாக்கவும் செய்யவும்.

பெருமானாரிடம் ஒரு உதாரணம்

உலகின் அனைத்து துறைகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபி அவர்களின் தனிப்பட்ட ஆளுமை திறன்களில் ஒன்று

 அவர்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித் மதீனாவை புனித பூமியாக அறிவித்தார்கள்.

 (அதாவது மக்கா எப்படியோ அது போல மதீனாவிலும் முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும். அங்கும் எவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அங்கிருக்கிற தாவரங்கள் மிருகங்களுக்கு கூட நிம்மதி கிடைக்கும்)

 இவ்வாறு அறிவிப்புச் செய்யும் போது இபுறாஹீமின் வழியை தான்  தான் இதில் பின்பற்றுவதாக நபி (ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

  إنَّ إبراهيمَ حَرَّمَ مَكَّةَ ودَعا لأهلِها، وإنِّي حَرَّمتُ المَدينةَ كما حَرَّمَ إبراهيمُ مَكَّةَ، وإنِّي دَعَوتُ في صاعِها ومُدِّها بمِثلَي ما دَعا به إبراهيمُ لأهلِ مَكَّةَ.

 الراويعبدالله بن زيد | المحدثمسلم

 பெருமானாரின் சக்தி மிக்க இந்த நடவடிக்கை ஒரு முன்னுதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது என்பதையும். அந்த முன்னுதாரணம் பெருமானாருக்கு வழிகாட்டியது என்பதையும் இந்த துஆவிலிருந்து அறியலாம்.

 ஆளுமை என்பது என்ன ?

 ஆளுமை என்றால அதிகாரம் செய்வது, மிரட்டுவது, கண்டிப்பாக நடந்து கொள்வது தன்னுடைய அந்தஸ்த்தை நிலை நாட்டிக் கொள்வது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 முன்னாள் சோவியத் யூனியனின் தலைவராக இருந்த ஜோசப்  ஸ்டாலின் தனக்கு எதிரான எவரையும் அனுமதிக்க முடியாது என்ற கொள்கை கொண்டிருந்தார். த கிரேட் பர்ஜ் (the great purge) என்ற பெயரில் தனது சொந்த கட்சியை சேர்ந்த தனக்கு எதிரானவர்களை கைது செய்து கொடுமையான பனிப் பிரதேசங்களில் டிரக்கு களில் கொண்டு போய்  குப்பையை போல கொட்டி விட்டு வர ஏற்பாடு செய்தார்.

 இவ்வேறு செய்வதை இரும்புக்கை என்று நினைத்துக் கொண்டார்கள்.

 திருக்குர் ஆன் ஆளுமைக்கு அருமையான ஒரு சொல்லை பயனப்டுத்துகிறது. இமாம்

 இமாம் என்றால் வழி நடத்துபவர் என்று பொருள்.

 ஒரு சொல்லின் கீழ் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் அது அவர்களாகவே விரும்பிச் செய்கிற ஏற்பாடாக இருக்கும்.

 எனவே ஆளுமை என்பது மக்களை அவர்களது விருப்பத்தின் படி கட்டுப்பாட்டுடன் வழி நடத்திச்ச் செல்வது ஆகும்.

 மிக அழுத்தமாக புரிந்து கொள்ல வேண்டிய செய்தி இது.

 ஆளுமை பண்புகள்

 1.   வழிகாட்டுதல்

 ஆளுமையின் பிரதான் பண்பு வழிகாட்டுதல் ஆகும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களை பெருமளவில் கட்டுப்படுத்தி இன்றளவு வைத்திருக்கீறார்கள் என்றால் அதற்கான காரணம் ஒவ்வொரு விவகாரத்திலும் அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதாகும்.

 எதற்கெடுத்தாலும் அடுத்தவரக்ளுக்கு உத்தரவிட்டே பழகு வது ஆளுமை என்று நினைக்கிறார்கள் மக்க:ள்

 நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்காவில் முட்டுக்கால் போட்டு  கையை அழுத்திக் கொண்டு ஜம் ஜம் தண்ணீர் குடிக்க எழுந்தார்கள். நாங்கள் தண்னீரை எடுத்து வருவோமே என்று பெருமானாரிடம் தோழர்கள் சொன்னார். அதற்கு பெருமானார் கூறினார்கள்.

 اللله جعلني عبدا كريما ولم يحعلني جبارا عنيدا

 தாடி வைப்பது , திருமணம் செய்து கொள்வது, ஆண்கள் தங்கம் அணியாமல் இருப்பது என பல வழி முறைகள் அவர்கள் வழிகாட்டிச் சென்றவை  இன்றளவும் பெருமானாரின் வழிகாட்டுதலாக நிமிர்ந்து நிற்கின்றன.

 நமது குடும்பத்திற்கு நமது தொழிலாளர்களுக்கு நமது நாட்டு மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை நாம் வழங்க வேண்டும்.

 தொழுகையை சரியாக கடைபிடியுங்கள் என்ற வணக்கம் சார்ந்த வலியுறுத்தல்கள்

 நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொது வணிகம் சார்ந்த வழிகாட்டுதல்கள்

 நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொது விவகாரம் சார்ந்த வழி காட்டுதல்களையும்

 இது போன்ற ஒவ்வொன்றையும் நமது குடும்பத்திற்கும் நம்மைச் சார்ந்த வர்களுக்கும் நாம் சொல்ல வேண்டும்.

 நமது பிள்ளைகளுக்கு நாம் உண்மையே பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோமா ? நேரத்திற்கு தொழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தினோமா? பெரியவர்களை மதிப்பதற்கு வழிகாட்டினோமா? கடமையை செய்ய இலஞ்சம் வாங்க கூடாது  என அறிவுறுத்தினோமா ? என்ற அலைவரிசையில்  நாம் யோசித்தால் நாம் சரியான ஆளுநராக இருந்திருக்கிறோமா என்பதை புரிந்து கொள்ல்லாம். இனி எப்படி சரியாக இருப்பது என்பதை தீர்மாணித்து கொள்ளலாம்.  

 2 கருணை

 இந்த வழிகாட்டுதல்களில் ஆளுநர் என்பவர் கருணையான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது ஆளுமையின் அடுத்த பிரதான பண்பாகும்.

 ஆளுநர் தன்னை வேறு ஒருவராகவும் தன் கட்டுப்பாட்டில் இருப்பவர்களை வேறு நபர்களாகவும் கருதிக் கொண்டு உத்த்ரவுகளை இடக் கூடாது.

 தன்னுடைய தன் குடும்பத்தாருடைய விவகாரங்களில் எந்த மென்மையை அவர் விரும்புவாரோ அதே போல மக்களிடமும் அவர் நடந்து கொள்ள வேண்டும்.

 ஹஜ்ஜுக்கு வந்திருந்த அபூபக்கர் ரலி அவர்களின் ஒரு ஒட்டகையை அவருடைய பணியாளர் தொலைத்து விட்டார். வைத்திருந்த்து ஒன்றே ஒன்று அதை கூட பாதுகாக தெரியாமல அவர் தொலைத்து விட்டதில் கோப மடைந்த அபூபக்கர் ரலி அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் அவரை அடிக்க போனார். இதை பார்த்த பெருமானார் (ஸல்) அவர்கள் மிக நேரடியாக அபூபக்கர் ரலி அவர்களை கண்டிக்காமல் நாசூக்காக உணர்த்தினார்கள்.

 ஆயிஷா நாயகியின் அக்கா அஸ்மா ரலி அவர்கள் இந்த செய்தி பற்றி கூறுகிறார்கள்

 خرجنا معَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ حتَّى إذا كنَّا بالعرجِ نزلنا فجلسَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ وعائشةُ إلى جنبِه وأنا إلى جنبِ أبي بكرٍ فَكانت زمالتُنا وزمالةُ أبي بَكرٍ واحدةً معَ غلامِ أبي بَكرٍ قالَ فطلعَ الغلامُ وليسَ معَه بعيرُه فقالَ لَه أينَ بعيرُك قالَ أضللتُه البارحةَ قالَ معَك بعيرٌ واحدٌ تضلُّهُ قالَ فطفقَ يضربُه ورسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يقولُ انظروا إلى هذا المحرمِ ما يصنعُ

 ஆளுமையின் இந்த பண்புகளை அல்லாஹ் பெருமானாருக்கு திருமறையின் ஒற்றை வசனத்தில் வழிகாட்டினான்.

 அது. அஃராப் அத்தியாயத்தில் அந்த வசனம் வருகிறது.

 خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ (199 -

இந்த வாசகம் சின்னது ஆனால் மிகப் பெரிய  ஆளுமைக்கான வழிகாட்டுதல்களை கொண்டது.

 முதல் இரண்டு வாசங்கள் நாம் மேலே சொன்ன இரண்டு வழிகாட்டுதல்களை உள்ளடக்கியிருக்கிறது. முதல்வாது வழிகாட்டுதல் இரண்டாவது மன்னிப்பு கருணை.

 அதை இந்த வசனம் வரிசை மாற்றி முதலில் கருனையையும் அடுத்து வழிகாட்டுதலையும் குறிப்பிடுகிறது. காரணம் கருணையின் அடிப்பட்டயிலான வழிகாட்டுதல்கள் தான் பயனளிக்கும்.  

 இரண்டாவது ஒரு மனிதரின் உண்மையான ஆளுமை திறன் என்பது அவருக்க் கீழே இருப்பவர்கள் தவறு செய்யும் போது அதை எதிர் கொள்வதில் தான் வெளிப்படும்.

 உஹது யுத்த்திலும் இதை பெருமானாருக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

 அவர்கள் உமது கட்டளையை மீறியதால் பெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது. சரி நீங்கள் அவர்களுக்கா   மன்னிப்புத் தேடுங்கள். அவர்களை ஒதுக்கி விடாதீர்கள். தொடர்ந்து அவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.

 وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ

 3 கண்காணித்தல்

 ஆளுநார் என்பவர் எப்போதும் அதட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் நபி லூத் அலை அவர்களை அவர்களது ஊரை விட்டு நல்ல்வர்களை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று சொன்ன போது அல்லாஹ் சொன்னான்.

 நீங்கள் அவர்களுக்கு பின்னால் செல்லுங்கள் .

 

وَاتَّبِعْ أَدْبَارَهُمْ

சாதாரணமாக தலைவர்கள் எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து விடுவார்கள். ஆனால் அவரக்ளை பின்னாலிருந்து கண்காணிப்பதை அவரக்ள் விட்டு விட்ட்டால் மிக நல்லவர்களாகவே இருந்தாலும் கூட தப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆளுநர் தனது கட்டுப்பாட்டில் இருப்பவர்ளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். லூத் நபி திரும்பிச் செல்லும் போது அவருடன் இருந்தவர்கள் நல்லவர்கள் தான் ஆனாலும் அவர்களுக்கு பின்னே செல்லுமாறு அல்லாஹ் நபி லூத்துக்கு உத்தரவிட்டான்.

 4 எதிர்ப்பை வெளிப்படுத்தனும்

 ஆளுநர் தவறுகளை காணும் போது கண்டும் காணாமல் இருக்க் கூடாது

 நன்மையை ஏவ வேண்டும் என்ற சொல்லுக்குள் தீமையை தடுக்க வேண்டும் என்ற உத்தர்வும் உள்ளடங்கியிருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத்து ஆகும்.

 இந்த உலகில் ஆளுமை திறனுக்கான மிகப் பெரிய ஆபத்து தீமையை கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்குதான்

 பிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை கண்டு கொள்ளாத பெற்றோர்

அதிகாரிகளிடம் இருக்கும் குறைகளை கண்டு கொள்ளாத அமைச்சர்கள்.

இவை அனைத்தும் ஆளுமைக்கான பெரிச சருகுதலாகும்.

 நபி மூஸா அலை அவரக்ள் கிழ்ரு நபியோடு மெளன் உடன்படிக்கை செய்து கொண்டு பயணப் பட்ட போதும் கூட அவரிடம் இருந்து வெளிப்பட்ட செயல்களில் தனக்கு ஆட்சோபனைகள் இருந்த போது அதை உறுதி பட வெளிப்படுத்தினார்கள்.

 أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا

أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْئًا نُّكْرًا

 இது மூஸா நபியின் ஆளுமை திறனுக்கான அடையாளமாகும்.

 அதிகாரிகள் கண்கானிப்பாளர்களாக இருக்க வேண்டும். தவறு நடந்த பிறக்கு  சால்ஜாப்பு சொல்லி சமாளிப்பவர்களாக இருக்க் கூடாது.

 5 வீண் எதிர்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்

 ஆளுமை திறன் கொண்டவர்களுக்கு எதிர்ப்புக்கள் வருவது சகஜ்ம் அதில் அவசியமானதை கருத்தில் எடுத்துக் கொண்டு திறுத்திக் கொள்ல வேண்டும்.

அநாவசிமானதை ஒதுக்கி விட வேண்டும்.

 அல்லாஹ் மேற்கூறிய வ்சனத்தில் இதை இறுதியாக வெளிப்படுத்துகிறான்.

 وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே!

 நாம் இந்த அடிப்படையில் நமது அதிகாரத்தின் வலிமையை நிலை நாட்டிக் கொள்வோம்.

 அல்லாஹ் நம்மை இமாம்களாக ஆக்கியருள்வானாக!

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

Thursday, May 28, 2026

அல்லாஹு அக்பர்

பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று பெயர்.

  - وأيام التشريق هي الأيام الثلاثة التي تلي العيد - الفقه علي المذاهب الأربعة 


கறியை காய வைக்கும் நாள் அல்லது உப்புக்கண்டம் போடும் நாள் என்பது பெருள்.

سميت بأيام التشريق لأن الناس كانوا يشرّقون فيها اللحم.


அய்யாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களும் இஸ்லாமிய சட்டப்பட பெருநாட்களைப் போலவாகும். 


இந்த நாட்களில் நோன்பு வைப்பது கூடாது. கழா நோன்பும் கூடாது. 


وروى أبو داود (2418) عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ أَنَّهُ دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَرَّبَ إِلَيْهِمَا طَعَامًا ، فَقَالَ : كُلْ . فَقَالَ : إِنِّي صَائِمٌ . فَقَالَ عَمْرٌو : كُلْ فَهَذِهِ الأَيَّامُ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِإِفْطَارِهَا ، وَيَنْهَانَا عَنْ صِيَامِهَا . قَالَ الإمام مَالِكٌ : وَهِيَ أَيَّامُ التَّشْرِيقِ . وصححه الألباني في صحيح أبي داود .


இந்த நாட்களில் 

1.   உண்டு மகிழனும் 

2.   அதிகமாக திக்ரு செய்யனும்


وَعَنْ نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم«أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟». أخرجه مسلم.


இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது. 

எனவே குர்பானி இறைச்சியை பத்திரப்படுத்தி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதே! 

குர்பானி இறைச்சியை இந்த நாட்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு தக்பீர் அதிகமாக சொல்ல வேண்டும். 


ஹஜ்ஜின் அமல்களைப் பற்றி பேசிவருகிற இடத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என குர் ஆன் கூறுகிறது. 

(وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ)(البقرة: من الآية203)

அது இந்த மூன்று நாட்களையே குறிக்கிறது. 

அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜை முடித்து விட்டு மினாவில் தங்கியிருக்கிற நாட்களில் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டு தமது முன்னோர்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்தனர். அதை மாற்றி அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு அல்லாஹ் கூறினான்.

 فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً )(البقرة: من الآية200)

இதன் பிறகு மினா தக்பீரால் அதிர ஆரம்பித்தது. 

وقد كان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون, ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. 

وكان ابن عمر رضي الله عنهما يكبر بمنى تلك الأيام, وخلف الصلوات , وعلى فراشه, وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً

இவ்வாறு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பதுமினாவில் மட்டுமல்ல் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய சுன்னத் என்பதை சஹாபாக்கள் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். 


இமாம் புகாரி அவர்கள் 


بَاب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ


எனும் பாடத்தில் 


وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا 


என்று கூறுகிறா. அத்தோடு பர்ளு தொழுகைக்குப்பின் தக்பீர்சொல்லும் இருப்பது போல சிலர் நபில் தொழுகைக்குப்பின்னரும் தக்பீர் சொல்லி வந்தனர் என்ற செய்தியையும்குறிப்பிடுகிறார


وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ

பெண்களும் தக்பீர் சொல்லினர்


وكانت ميمونة رضي الله عنها تكبر يوم النحر وكان النساء يكبرن خلف أبان بن عفان وعمر بن عبد العزيز ليالي التشريق مع الرجال في المساجد  - http://صحيح البخاري 

சஹாபாக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்தநடைமுறைகளின் படி பர்ளு தொழுகைக்களுக்குப்பின் தக்பீர்சொல்வதை இமாம்கள் சுன்னத் என அறிவித்தனர்.


بل بلغ من أهمية التكبير المقيد بأدبار الصلوات أن العلماء قالوا: يقضيه إذا نسيه, فإذا نسي أن يكبر عقب الصلاة فإنه يكبر إذا ذكر ولو أحدث أو خرج من المسجد ما لم يطل الفصل بين الصلاة والتكبير. 


பொதுவாக இன்றைய நம்முடைய பழக்கத்தில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு அல்லது சேர்ந்து சாப்பிடச் செல்வது என்பது Get together மிகவும் பிரபலமாக இருக்கிறது. 


இதற்காக நிறைய செலவு பிடிக்கிற பிரபலமான ஹோட்டல்களை நாம் தேடிச் செல்கிறோம் .. 


ஹஜ் பெருநாள் அப்படி ஒரு சேர்ந்து உண்பதற்கான ஒரு ஏற்பாட்டுக்கு ஏற்ற நேரம் ஆகும். 


என்ன ஒரு வித்தியாசம் என்றால் ? 


வெறும் சந்தோசம் அல்லது ஒரு பெருமை என்பதை தாண்டி இந்த இந்த இணைப்பில் நாம் அல்லாஹ்வை அக்பர் சொல்லி புகழ வேண்டும்


அப்படி செய்யும்போது அது அல்லாஹ்வை பெருமைப்படுத்துகிற இந்த நாளுக்கான ஒரு சிறப்பான ஏற்பாடக அமையும் 


எல்லோருமாய் சந்திக்கும்போது சாப்பிட்டு முடிக்கும் போது ஒரு தக்பீர் சொல்லிவிட்டால் இந்த பாக்கியம் பொருந்திய நிகழ்வாக அமையும்


கொஞ்சம் கறபனை செய்து பாருங்கள் குடும்பத்தினர் ஒன்றாக அமரந்து கலகலப்பாக சாப்பிடுகிறோம் அதன் பின் அதே உற்சாகத்தோடு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாக இலாஹ இல்லலாஹு அல்லல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று சொன்னால் அது எப்படி இருக்கும் ? 


அன்றாட வாழவில தக்பீர்

இஸ்லாத்தில் தக்பீரின் மகிமை பல வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது


பாங்கு, தொழுகை, பெருநாட்கள், மகத்தான் சந்தர்பங்களின் அடையாளமாக தக்பீர் ஆக்கப்பட்டுள்ளது.  


முஸ்லிமுடைய் வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய சொல்லாகும்

நான்கு ரக அத் தொழுகையில் 22 உறை தக்பிர் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளின் பர்ளு தொழுகைகளில் மட்டும் ஒரு முஸ்லிம் 94 தடவை அல்லாஹ் அக்பர் சொல்கிறார்.


சுன்னத்துக்களையும் நபில்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

வழக்கமான சுன்னத்துக்களையும் நபில்களையும் வித்ரையும் தொழுதால் ஒரு நாளில் 342 முறை ஒரு முஸ்லிம் தக்பீர் சொல்கிறார். 


இது தவிர பாங்கிலும் இகாமத்திலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன. இவற்றிற்கு பதில் சொல்வதிலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன. 


இதை தவிர தக்பீரை தனியாக சொல்லும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் எத்தனை தக்பீர் சொல்கிறார் என்கிற கணக்கு அல்லாஹ்விற்கே தெரியும் 


தொழுகை மட்டுமல்லாது ஹஜ்ஜு குர்பானி போன்ற வணக்கங்கள் தக்பீரினால் நடைபெறுகின்றன,


ஹாஜி சைத்தானை கல்லெறிவது வரை தல்பியா சொல்லுவார் . முதல் கல்லை எறிந்த நிமிடத்திலிருந்து தக்பீருக்கு மாறிவிடுவார், 


தவாபை தொடங்கும் போது, சைத்தானை கல்லெறியும் போது என அவரது அமல்களில் தக்பீர்  முக்கிய இடம்பிடித்திருக்கீறது. 


குர்பானியின் முக்கியக் கட்டத்தில் தக்பீர் இடம் பிடித்திருக்கிறது, 


இதனால் தான் உமர் ரலி கூறீனார்கள்


عن عمر بن الخطّاب رضي الله عنه أنّه قال: قول العبد: « قول العبد : الله أكبر، خيرٌ من الدنيا وما فيها »

.

பிறையை பார்த்ததும் பெருமானார் தக்பீர் சொல்வார்கள்


كان رسول الله إذا رأى الهلال قال :" الله أكبر ، اللهم أهله علينا بالأمن و الإيمان ، و السلامة و الإسلام ، و التوفيق لما تحب و ترضى ، ربنا و ربك الله"

الراوي: عبدالله بن عمر 


பயணம் புறப்படுகிற போதும் தக்பீர் சொல்வார்கள் பெருமானார் 


ففي صحيح مسلم عن ابن عمر رضي الله عنهما أن " رسول الله صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر كبر ثلاثاً ...)) 


மேட்டில் ஏறுகிற போது தக்பீர் சொல்வதும் பள்ளத்தில்இறங்கு கிற போது சுப்ஹானல்லா சொல்வதும்பெருமானாரின் பழக்கம்.


عن ‏ ‏جابر بن عبد الله ‏‏رضي الله عنهما ‏ ‏قال : " ‏كنا إذا صعدنا كبرنا وإذا نزلنا سبحنا"فتح الباري


அதிர்ச்சியளிக்கிற செய்திகளை கேட்கிற போது அல்லாஹ்அக்பர் என்று சொல்கிற பழக்கம் சஹாபாக்கள்டம் இருந்தது. 


யஃஜூஜ் மஃஜூஜ் களைப் பற்றி பெருமானார் சொன்ன போதுநாங்கள் அல்லாஹு அக்பர் என்று சொன்னோம் எனஅபூஸஈதில் குதிரி ரலி கூறுகிறார்.


மய்யித்துகளுக்கான தொழுகையாக நான்கு தக்பீர்கள் மட்டுமே ஆக்கப்பட்டிருக்கிறது,


நெருப்பு பற்றிக் கொள்வதைப் பார்த்தால் தக்பீர் சொன்னால் அது நெருப்பை அனைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)

عن عبدالله بن عمر 

قال النبي صلى الله عليه وسلم :" إذا رأيتم الحريق ، فكبروا ، فإن التكبير يطفئه "


என்னுடைய அனுபவத்தில் தக்பீர் மகத்தான சக்தியாக இருந்ததை ஒரு தடவை உணர்ந்தேன்.


2008 ஹஜ்ஜின் போது 12 ம்நாள் ஜவாலுக்குப்பின் சைத்தானை கல்லெறிந்த போது ஜம்ரா பாலம் மிக சவுகரிமாக கல்லெறிய சிரமமில்லாமல் இருந்தது.  அதற்குப் பிறகு மக்காவில் தங்குமிடத்திற்கு செல்ல திரும்பிக் கொண்டிருந்த போது மக்காவிற்கான தரீக்குல் மஷாத் தின் தொடக்கத்திலிருந்த ஒரு சின்ன சப்வேயில் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. வழியில் ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று இராணுவ வீரர் சைகை செய்து கொண்டிருந்தார். பின்னால் கூட்டம் வந்து மோதிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நெரிசல் அதிகரித்து அதிகரித்து எல்லோர் கண்களிலும் ஒரு அச்சம் பரவத் தொடங்கியது. மெளனம் கோலோட்சிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மெல்ல ஒருவர் தக்பீர் சொன்னார். தொடர்து அனைவரும் கூறினர். கூட்டத் தின் அழுத்தம் எப்படித்தான் குறைந்ததோ தெரியவில்லை. அனைவரும் அச்சத்திலிருது விலகி ஒரு நிதானத்திற்கு வந்தனர்,  வழி ஏற்பட்ட பிறகு தள்ளு முள்ளூ இல்லாமல் அணியணியாக வெளியேறினர். 


தக்பீரின் மகிமைய அனுபவித்து உணர்ந்த ஒரு வாய்ப்பு அது. 


தக்பீர் முஸ்லிம்களுடைய உள்ளத்தை நிலைப் படுத்தும் ஒரு சொல்லாகும். 


தகீபீரை அல்லாஹ் வலியுறுத்துகிறான். 

وَكَبِّرْهُ تَكْبِيراً } الإسراء111 

பெருமானாருக்கு அல்லாஹ்வின் முதல் உத்தரவு தக்பீர

 

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ{1} قُمْ فَأَنذِرْ{2} وَرَبَّكَ فَكَبِّرْ{3} ﴾ المدثر


நிறைய தக்பீர் சொல்லும் இந்த காலத்தில் அல்லாஹு அக்பர் என்று நாம் உண்மையாக சொல்ல வேண்டும் 


என்னிடமுள்ள காசு பெரிது, எனது படிப்பு பெரிது, எனது பதவி பெரிது என்ற சிந்தனையை மனசு முழுக்க வைத்துக் கொண்டு அல்லாஹு அக்பர் என்று சொல்வது உணரமையாகுமா என்று சிந்திக்க வேண்டும் 


இந்த வகையில் சிந்தித்தால் 

ஹழ்ரத் இபுறாஹீம் அலை அவர்கள் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொள்ள உண்மையான தகதி படைத்தவர் எனபது புலனாகும் 


அவருடைய நினைவுகள் புதுப்பிக்க்கப்படுகிற இந்நாட்களில் நிறைய தக்பீர சொலவோம்


எல்லாம் வல்ல அல்லாஹ் அவரைப் போல தக்பீர

சொல்ல தவ்பீக் செயவானாக! 


ஆமீன் 


(மினா வின் அல் ஜவ்ஹரா சாலையில் இருக்கும் பைத் அல்லுயூப் கூடாத்திலிருந்து. துல்ஹஜ் பிறை 12)