வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 09, 2026

வஞ்சகமே பொருளாகிப் போன ராஜதந்திரம்

 وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128)

இன்று பாகிஸ்தானின் தலை நகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுக்கும்  அமெரிக்காவுக்கும் இடையே  பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் சார்பில் துணை அதிபரும் ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

உலகமே இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் போர் நிறுத்தம் பற்றி ஒரு அறிவிப்பு வெளிவந்து மக்களுக்கு நிம்மதி அளித்த்து என்ற போதும் கடந்த ஒரு நூற்றாண்டாக உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிற இஸ்ரேல் அதன்பின்னரும் லெபனானை கடுமையாக தாக்கி அப்பாவி பொதுமக்கள் 200 பேரை கொன்றிருக்கிறது. இதன் பிறகு ஹுர்முஸ் நீரிணையில் ஒரு கப்பலை இரான் தாக்கி அழித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகில் அமைதி தொடரப் போகிறதா அல்லது யுத்தம் தொடரப் போகிறதா என்பதை இந்த பேச்சு வார்த்தை தீர்மாணிக்கும் என்பதால் உலகம் முழுவதும் இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அல்லாஹ் நல்ல முடிவை தரட்டும்.

ஈரான் தன்னுடைய பேச்சுக்களிலும் நடவடிக்கைகளிலும் போர் சூழலிம் கூட நேர்மையை கடைபிடித்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவோ பல நாடுகளுடையவும் பல  கோடி மக்களுடைய வாழ்வாதார பிரச்சனையில் தொடர்ந்து மிக அபாயகரமாக அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.. ஈரானுடைய பாலங்களை தகர்ப்பதை பிரிட்ஜ் டே என்றும் அதனுடைய மின் உற்பத்தி நிலையங்களை தகர்ப்பதை எலக்ட்ரிசிட்டி டே என்று கொண்டாடுகிற அளவில் அமெரிக்கவின் மனோ நிலை கொடூரமாகி இருக்கிறது.   

ஆனால் ஹுர்முஸ் நீரிணையை தடுப்பது என்ற ஈரானுடைய  நிலைப்பாடு உலகிற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி இருப்பதாலும் இஸ்ரேலை ஈரான் முடிந்த வரை துவம்சம் செய்து வருவதாலும் அரபு நாடுகளின் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதாலும்  சிக்கலை மேலும் அதிகப்படுத்துவது அமெரிக்காவின் மரியாதைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அமெரிக்காவே ஈரானை நோக்கி இறங்கி வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது.

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை நாங்கள் ஒரு போதும் நம்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்த ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் இஸ்லாமாபாத்திற்கு வருவது அந்த நாடு எத்தகைய அரசியல் வீழ்ச்சியை கண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமே ஆகும்.

இஸ்லாமாபாத் எந்த அளவு பலவீனமானது என்றால் மக்கள் போராட்டங்கள் எதையும் நட்த்தி விடக் கூடாது என்பதற்காக இந்த பேச்சு வார்த்தையை நட்த்துவதற்காக அது தன்னுடைய நாட்டிற்கே சில நாட்கள் விடுமுறை அளித்து விட்டது.  

ஏற்கெனவே இதுவிவகாரத்தில் ஓமன் வழியாக பேச்சு வார்த்தை நட்த்திக் கொண்டுதான் இருந்தது. அந்த  பேச்சு வார்த்தைக்கு இடையில் தான் அமெரிக்கா ஈரானை தாக்கியது. இப்போது அதுவே பேச்சு வார்த்தைக்கு இறங்கி வர வேண்டிய சூழலை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.  

உலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய துரதிஷ்டம், எந்த அவமானத்தையும் துடைத்து கொண்டு  மீண்டும் மீண்டும் கோட்சூட் போட்டுக் கொண்டு பேச வருகிற ஒரு நாட்டின் தலைமையை நம்பி அது  இருக்க வேண்டியுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செயத அவமானகரமான செயலை கூட அப்படி துடைத்தெறிந்து விட்டவரகளுக்கு இதுவெல்லாம் மிக சகஜம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் உலகிறகு இத்தகையோரால் ஏற்படுகிற துயரம் தான் மிக வருத்த்த்திற்குரியது.  

உலக அரசியல் அரசியல் மஃபியாக்களால் நிறைந்து விட்ட்து என்பது தான் இப்போதைய உலகின் பெருந்துயரம் ஆகும்.

எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையின் முடிவு நல்லதாக மனித ராஜதந்திரத்தின் வெற்றியாக அமைய வேண்டும்.

இத்தகைய பேச்சு வார்த்தை டிப்ளமஸி ராஜதந்திர முயற்சி என்று அழைக்கப்படுகிறது.  

டிப்ளமஸி என்ற வார்த்தை உலக அரசியலில் ஒரு மதிப்பு மிக்க சொல்லாகும்.

நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே டிப்ளமஸீ ஆகும்.

இரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைக்கிடையே சமாதானப்படுத்துகிற வார்த்தைகளை பேசி – இரு தரப்புக்கும் சரி தவறு என்பதை பற்றி அதிகம் ஆராயாமல் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் அல்லது மதித்தலின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பது ராஜ தந்திர நடவடிக்கை ஆகும்.  

பிரிட்டனுக்கும் அயர்லாந்திற்கும் இடையே பல தலைமுறைகளாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

அயர்லாந்து சுயாட்சிக்காக போராடிக் கொண்டிருந்த்து. 1998 ல் நடை பெற்ற ஒரு ஒப்பந்தம் அயர்லாந்திற்கு சுய அதிகாரம் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தை கொடுத்த்து அதே நேரத்தில் பிரிட்டனின் ஆதரவோடு அது செயல்படும் என்பதும் ஏற்கப்பட்டது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதை சமீப காலத்தில் நடந்த சிறந்த ராஜதந்திர நிகழ்வாக உலகம் கருதுகிறது.

பேச்சு வார்த்தை என்பது ஒரு அற்புதமான ராஜ தந்திர நடவடிக்கையாகும். ஆனால் அது அடிப்படையான மனித இயல்புகளை நெகிழ்ச்சிப்படுத்துகிற சில அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். அகம்பாவமும் ஆக்ரமித்தல் சிந்தனையும் அதில் இருக்க கூடாது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு அருமையான ராஜதந்திர நடவடிக்கைளுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆவார்கள். அதன் மூலம் பெரும் வெற்றியை கண்டவரும் ஆவார்கள்.

கஃபாவை கட்டி முடிப்பதில் ஒன்று சேர்ந்து உழைத்த மக்காவின் குறைஷிகள் ஹஜருல் அஸ்வத் கல்லை எடுத்து வைப்பதில் தகறாறு செய்து கொண்ட போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  தன்னுடைய 35 வது வயதில் அந்த பிரச்சனைக்கு மிக அற்புதமாக தீர்வு கண்டார்கள். ஹஜருல் அஸ்வதை ஒரு போர்வையில் வைத்து அந்த போர்வையை அனைத்து தரப்பினரையும் பிடித்து உயர்த்தச்  சொல்லி பிறகு அந்த கல்லை தான் எடுத்து வைத்தார்கள்.

சமூகங்களுக்கிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டும் நடவடிக்கைகளில் மிக தாராள மனதுடன் பெருமானார் நடந்து கொண்டார்கள்.

மரியாதை எனும் ராஜதந்திரம்

இபோதைய சவூதி நகரான நஜ்ரானில் ஒரு காலத்தில் கிருத்துவர்கள் வாழ்ந்தனர். ஹிஜ்ரீ 9 ம் வருடம் அவர்களின் ஒரு குழு பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தனர். அது பெருமானாரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த நேரம். அவர்கள் வந்தது பெருமானாரின் முன்னிலையில் தாங்களே உயர்ந்தவர்கள் என்பதை நிருபிப்பதற்காகவே கொஞ்சம் திமிருடன் தான் வந்தாரகள். சுமார் 60 நபர்களை கொண்ட அந்த குழுவை மஸ்ஜிதுன்னபவியிலேயே பெருமானார் (ஸல்) தங்க அனுமதித்தார்கள். அவர்கள் ஒரு சீராக பட்டாடைகளையும் தங்க ஆபரணங்களையும் அணிந்து அவர்கள் வந்தார்கள். இது பெருமானாருக்கு பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியும். வேண்டுமென்றே அவர்கள் அப்படி நடந்த கொண்ட போது முதல் நாளில் பெருமானார் (ஸ்ல) அவர்கள் அவர்களோடு பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை. இரண்டாம் நாளில் அவர்கள் சாதாரண பாதிரிகளின் ஆடையோடு வந்த போது பெருமானார் (ஸ்ல) அவர்கள் அவர்களோடு பேசினார்கள்.

وصل هذا الوفد بهيئة منظمة جداً، وفي صورة منمقة وصلت حد المبالغة، فقد لبسوا الثياب الحريرية وتحلوا بالذهب، والرسول عليه الصلاة والسلام يحرم هذه الأمور على الرجال، فكره صلى الله عليه وسلم أن يتكلم معهم وهم بهذه الصورة، وأجلهم يوماً، فجاءوا في اليوم الثاني وهم يلبسون لبس الرهبان، فبدأ الرسول عليه الصلاة والسلام في الحوار معهم، وهذا الوفد لم يكن من نيته ولا من همه أن يسلم أو يفكر في الإسلام، وإنما أتى ليناظر الرسول عليه الصلاة والسلام ويجادله من ناحية، وأتى ليبهره ويبهر المسلمين من ناحية أخرى

அவர்களுடைய பேச்சுவார்த்தையில் மரியாதை இருக்கவில்லை . அகம்பாவத்தோடு தான் பேசினார்கள்.

இடையில் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கான நேரம் வந்த போது பெருமானாரிடம் அனுமதி கேட்காமலே கிப்லாவிற்கு எதிர் திசையில் ஒன்று சேர்ந்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். சஹாபாக்க்ள் அதை தடுக்க முயன்ற போது அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

அந்த கிருத்துவர்கள் அப்போது இஸ்லாமை ஒப்புக் கொள்ள வில்லை எனினும் பெருமானாரிடன் உடன்படிக்கை செய்து கொண்டு வெளியேறினார்கள்.

பெருமானார் வெளிப்படுத்திய மரியாதை استقباله للوفود

. وكان النبي صلّى الله عليه وسلم يكرم الوفود ويبسط رداءه لبعضهم، ويشركهم في الجلوس إمعانا في إزالة الدهشة، وإدخال المسرة،= ذكر ابن ماجه 

சிறப்பான ஆடை அணிவார்கள்

فيذكر البخاري  أن رجلا أهدى للنبي حلة، فقال له: «لتتجمل بها يا رسول الله للوفو

மன்னிப்பு எனும் ராஜதந்திரம்.

 

திஃசூர் என்பவர் பெருமானாரை கொல்லை மறைந்திருந்து திட்டம் தீட்டி பெருமானார் தூங்கும் போது பெருமானுருடைய வாளையே உருவி அவரை  மிரட்டினார்.

அவரை மன்னித்த பெருமானார் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத போதும் இனி இஸ்லாமிற்கு எதிராக செயல்படுவதில்லை என்ற உறுதி மொழியை அவரிடம் பெற்றுக் கொண்டு அவரை மன்னித்தார்கள்.

அவர் பிற்காலத்தில் அவருடைய மொத்த குடுப்த்தினருடனும் வந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்;

وفي رواية الإمام أحمد أن الرجلقام على رأس رسول الله ـ صلى الله عليه وسلم ـ بالسيف فقال: من يمنعك مني؟ فقال ـ صلى الله عليه وسلم ـ: اللهُ عز وجل .. فسقط السيف من يده فأخذه رسول الله ـ صلى الله عليه وسلم ـ فقال: من يمنعك مني؟، فقال الأعرابي: كن كخير آخذ، فقال ـ صلى الله عليه وسلم ـ: أتشهد أن لا إله إلا الله؟، قال: لا، ولكني أعاهدُك أن لا أقاتِلَكَ، ولا أكونَ مع قوم يقاتلونك، فخلى سبيله، فذهب إلى أصحابه، فقال: قد جئتُكم من عندِ خير الناس ) . وذكر الواقدي أنه أسلم ورجع إلى قومه فاهتدى به خلق كثير

 

அன்பளிப்பு எனும் ராஜதந்திரம்.

பொதுவாக மனிதர்களிடம் இருக்கிற தேவையற்ற கோபமும் குரோதமும் தான் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். அன்பளிப்புகள் அதை குறைத்து நிதானமாக யோசிக்க வைக்கும்.

அதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதுக்குழுவினருக்கு அன்பளிப்புக்களை வழங்குவார்கள்.

இப்னு கல்தூன் கூறுகிறார்.

ابن خالدون 

 : ان النبي صلّى الله عليه وسلم يحسن وفادة الوفود ويحسن جوائزهم، وهذا كان شأنه مع الوفود ينزلهم إذا قدموا ويجهزهم إذا رحلوا

فيذكر البيهقي  قول النعمان بن المقرن، قدمنا على رسول الله صلّى الله عليه وسلم أربعمائة رجل، فلما أردنا أن ننصرف قال: «يا عمر زود القوم

 

உணவளித்தல் எனும் ராஜதந்திரம்

ஹிஜ்ரீ 9 ல் தாயிப் நகர் வாசிகள் பெருமானாரிடம் வந்த போது அவர்களுக்கு பெருமானார் உணவளித்தார்கள். ஆனால் அவர்களோ இடை தரகரகாயிருந்தவர் சாப்பிட்ட பிறகே அதை சாப்பிட்டார்கள்.

 

وعند ما جاء وفد ثقيف إلى رسول الله صلّى الله عليه وسلم كان خالد بن سعيد (ت ١٤ هـ) يمشي بينهم وبين رسول الله صلّى الله عليه وسلم وكانوا لا يأكلون طعاما يأتيهم حتى يأكل منه خالد 

தூதர்களுக்கான் பாதுகாப்பு

பெருமானாரிடமே அகந்தை பேசிய தூதர்களுக்கும் பெருமானார் பாதுகாப்பளித்தார்கள்.

 بعثهم مسيلمة إلى رسول الله صلّى الله عليه وسلم، فقالوا: نشهد أن مسيلمة رسول الله، فقال الرسول صلّى الله عليه وسلم: «لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما

தூதர்கள் திரும்பச் செல்லும் உரிமை

أن قريشا بعثت أبا رافع رسولا إلى رسول الله صلّى الله عليه وسلم فوقع في نفسه الإسلام فأراد أن يبقى في المدينة ولا يعود إلى مكة، فقال له النبي صلّى الله عليه وسلم: «إني لا أخيس بالعهد، ولا أحبس البرد، ارجع إليهم، فإن كان الذي في قلبك الذي فيه الان فارجع»

பணிவின் அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்துகிற போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது கம்பீரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

  النبي صلّى الله عليه وسلم كان يخاطب الملوك بالمفرد وليس بصيغة الجمع فيقول:

.. إني أحمد الله إليك  أو « ... إني أدعوك بدعاية الإسلام ... » «

 உடன்படிக்கைகளை பேணுதல்

பெருமானார் (ஸல்) அவர்கள் 70 காரிகளை ஒரு குழுவிடம் பெருமானார் அனுப்பி வைத்தார்கள். அவர்களை அவரக்ள் கொன்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிய ஒருவர் மதீனாவிற்கு வந்த போது அதே குடும்பத்தை சார்ந்த இருவர் மதீனாவிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். இவர்களும் தீங்கிழைக்க வந்திருப்பார்களோ என்று நினைத்து அவர் அவ்விருவரை கொன்றார்.

ஆனால் அவ்விருவரும் மதீனாவின் பனூ நுழைர் யூத குழ்வின் விருந்தினர்களாக வந்திருந்தனர். தவறு நடந்து விட்ட்து என்பதை அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இது விசயமாக பனுன் னுழைர்களிடம் பேச்சு வார்தை நட்த்த தன்னுடைய ஆட்களை அனுப்ப வில்லை தானே நேரில் தனது வளர்ப்பு மகனை மட்டும் துணைக்கு அழைத்து கொண்டு சென்றார்கள்.

இதுவே பெருமானார் (ஸ்ல) அவர்கள் வெற்றி கண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகும்.

 இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சுமார் 200 உடன்படிக்கைகளை பெருமானார் எட்டினார்கள் என்கிறது வரலாறு.

 இன்றைய உலகில் ராஜதந்திரம் என்பது ஒரு கெட்ட வார்த்தையாக மாறி வருகிறது.

மிக வஞ்சகமாக யார் நடந்து கொள்கிறாரோ அவர் சிற்ந்த ராஜதந்திரியாகி விடுகிறார். 

 அடுத்த நாட்டு அரசர்களை சதி செய்து கொன்று அதை ஆக்ரமிப்பதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 அன்னியர்களுக்கு சொந்தமான எண்ணை கப்பல்களை மிரட்டி திருடிக் கொண்டு அதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 அப்பாவி மக்களை வேண்டு மென்றே கொடூரமாக கொன்றொழித்து விட்டு பேச்சு வார்த்தைக்கு வருவதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 ஈரானுடைய் ஒப்பந்த வாசகம் தெளிவாக அனைத்து தரப்போடும் இனி சண்டையிடக் கூடாது என்று சொல்கிற போது அதை ஏற்றுக் கொள்வது போல நடித்து விட்டு பிறகு இஸ்ரேலின் மூலம் லெபனானில் உள்ள அப்பாவி மக்கள் 200 பேரை கொலை செய்து ஆயிரக்கணக்கானோரை முடமாக்கி விட்டு இப்போது அமெரிக்கா ஈரானுடன் சமரசம் பேச வருகிறது.

 அவலட்சணமான ராஜதந்திரத்தின் மொத்த உருவாக இருக்கிற அமெரிக்கா இன்று நீதிக்காக  போராடிக் கொண்டிருக்கிற ஈரானிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது.

 இது நன்மையாக அமையட்டும் என்று நாம் ஒட்டு மொத்தமாக பிரார்த்திப்போம்.

திருக்குர் ஆன் அருமையாக கூறுகிறது.

 وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128)

 உடன்பாடு காண்பது தான் சிறந்த்து. ஆனால் அதற்கு சுயநலம் பெரும் தடையாக இருக்கிறது. அல்லாஹ்வை அஞ்சி மக்கள் விவகாரத்தில் தலைவர்கள் நடந்து கொள்ல வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்

 

கோடை காலம் முந்தைய பதிவுகள் 2026

 கோடை விடுமுறை

அல்லாஹ்வின் நிழலில்






Thursday, April 02, 2026

வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளும் வழிகள்

 அல்லாஹ் இந்த உலகில் நம்மை படைத்ததும் வாழ்க்கை வசதிகளை கொடுத்ததும் சோதனைகளை ஏற்படுத்துவதும் இறுதியில் மரணிக்கச் செய்வதும் எதற்காக?

நம்மில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை அவன் அறிந்து கொள்வதற்காக!

خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ 

 எனவே நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை விட எப்படி சிறப்பாக வாழ்கிறோம் என்பதே முக்கியமானது.

 உண்மையாளர்களாக

உபகாரிகளாக

உத்தமர்களாக

 வாந்தோமா ?

 வஞ்சகர்களாக’

கஞ்சர்களாக

கடும் பாவிகளாக

 வாழ்ந்தோமா ?  என்பது தான் கவனிக்கப் பட வேண்டியது.

 எல்லாவற்றிலும் அல்லாஹ் நமக்கு நன்மையை நஸீபாக்கி தருவானாக

 சஃது பின் முஆத் ரலி அவர்கள் நான்கு வருடம் தான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார்கள். ஆனால் இறுதியில் ஹிஜ்ரீ 4 ம் வருடம்  மரணித்த போது அந்த செய்தியில் அர்ஷு நடுங்கியது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அதே போல ஹழ்ரத அபூஹுரைரா ரலி அவர்களும் பெருமானாருடன் நான்கு வருடம் தான் வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 7 ம் ஆண்டில் தான் அவர் இஸ்லாமை தழுவினார். ஆனால் பெருமானாரிடமிருந்து அதிகப் படியான ஹதீஸ்களை அறிவித்தவராக தினம் தினம் முஸ்லிம் உம்மத்தால் அதிகம் நினைவு கூறப்படுகிற அவர் இருக்கிறார்.

 வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டிய வாழ்க்கை இது.

 வாழ்க்கைய தரமுள்ளதாக ஆக்கிக் கொள்ள நாம் நமது வாழ்வில் செய்கிற செயல்களை தரமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 தொழுகிறோம். (தொழவேண்டும்)

தொழுகையை தரமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

  عن أنس قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((حبِّب إليّ من الدنيا النساء والطِّيب، وجُعلت قُرة عيني في الصلاة

 பாத்திமா ரலி அவர்கள் தொழுவார்கள். தொழுது விட்டு. அல்லாஹ்வே இந்த இரவை இவ்வளவு சின்னதாக படைத்து விட்டாயே என்று அழுவார்கள்

 முன்னோர்களின் முன்னேற்பாடுகள்

 இகாமத் சொல்லும் போது ஒழுவுடன் இருப்பேன்.

 قال عَدي بن حاتم: ما أقيمت الصلاة منذ أسلمت إلا وأنا على وضوء

 பாங்கு சொல்லும் போது பள்ளியில் இருப்பேன்.

 يقول سعيد بن المسيب: ما أذن المؤذن منذ ثلاثين سنة إلا وأنا في المسجد..

 இன்னும் ஏராளமான  செய்திகள் தொழுகையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்வதில் இருக்கின்றன.

 நாம் நம்மால் முடிந்தவரை தொழுகையை சிறப்பாக தொழ வேண்டும்

 அது போலவே மார்க்கத்தின் அனைத்து கடமையையும் சிறப்பாக செய்வேன் என்று தீர்மாணித்துக் கொள்ள வேண்டும்.

 சிறப்பாக நோன்பு

சிறப்பாக ஜகாத்

சிறப்பாக ஹஜ்

சிறப்பாக குடும்ப வாழ்க்கை

சிறப்பாக வியாபாரம்

சிறப்பாக பொதுச் சேவை என அனைத்திலும் சிறப்பியல்புகளை விரும்புகிறவர்களாக நாம் ஆக வேண்டும்.  

நாம் ஒரு காரியம் செய்தால் அது வெற்றிகரமானதாக மட்டுமல்ல சிறப்பானதாகவும் ஆகுமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

 வாழ்க்கையின் வசதிகள் உயரும் போது ஒரு குறீப்பிட்ட பிராண்டை தான் பயன்படுத்துவேன் என்று செல்வந்தர்கள் தீர்மாணிப்பது உண்டு.

 அது போல முஃமின்கள் ஒவ்வொருவரும் தமது செயல்களை பிராண்டிற்குரியதாக சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள முய்ல வேண்டும்.

 எதை எப்படி சிறப்பாக்கி கொள்வது ?

 மார்க்கத்தின் மகத்தான வழிகாட்டி ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவரகள் எதை எப்படி சிறப்பானதாக ஆக்கிக் கொள்வது என்பதற்கு 7 வழிகளை சொன்னார்கள்.

 1.   நிஃமத்தை நன்றியால் சிறப்பாக்குகள்

 அல்லாஹ் நமக்கு எவ்வளவோ நிஃமத்துக்களை செய்கிறான். ஆரோக்கியம் அந்தஸ்த்து வீடு குடும்பம் சமூக செல்வாக்கு என அவன் வழங்கும் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்தும் போது அந்த நிஃமத்துக்களை நாம் அனுபவிப்பது சிறப்பானதாக அமைந்து விடும்.  

 அல்லாஹ் எல்லோருக்கும் நிஃமத்துகளை கொடுக்கிறான். ஆனால் அதற்கு நன்றி செலுத்துகிறவர்களே நல்லவர்களாக மிளிர்கிறார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அதிகம் சொல்லுவோம்.

 அல்ஹம்துலில்லாஹ் நன்றாக இருக்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ் சப்பிட்டுவிட்டேன்.

அல்ஹம்துல்லிலாஹ் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தேன்

அல்ஹம்துலில்லாஹ் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்

 என ஒவ்வொரு காரியத்திலும் அல்ஹ்மது லில்லாஹ் சொல்லும் போது அது நமக்கு கிடைத்த நிஃமத்தை நாம் சிறப்பானதாக ஆக்கிக் கொண்ட்தாகும்.

 ஒரு பெரிய ஆலிம் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு பணக்கார்ரை அறிமுகம் செய்தார்கள். சற்று நேரத்தில் அவரிடமிருந்து ஆலிம் விலகி வந்து விட்டார். என்ன வென்று சுற்றியிருந்தவர்கள் காரணம் கேட்டார்கள் ஹழ்ரத் சொன்னார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன் . எல்லாம் நல்லபடி போகிறது என்றார். ஒரு அல்ஹம்து லில்லாஹ் சொல்ல வில்லை. அவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று வந்து விட்டேன் என்று சொன்னார்.

 அல்ஹம்து லில்லாஹ் சொல்லாத போது எவ்வளவு பணம் இருந்தாலும் அது சிறப்பானதாக அமைவதில்லை.

 அல்ஹம்து லில்லாஹ் சொல்லும் போது அல்லாஹ் மேலும் சிறப்பாக்குகிறான்.

 2.   சோதனைகளை பொறுமையால சிறப்பாக்குங்கள்

 மக்களுக்கு பல்வேறு விதமான சோதனைகள் ஏற்படலாம்.

·         பணக் கஷ்டம்

·         ஆரோக்கிய குறைவு

·         அவமரியாதைகள்

·         மனக் கவலைகள்

 இதில் எது நிகழும் போது பொறுமையாக நடந்து கொள்கிறவர்கள் சிறப்பான மனிதர்கள் ஆவார்கள்.

 பொறுமை இல்லாமல் நடந்து கொள்வதால் நன்மை எதுவும் விளையாது.

 ஒரு அறிஞர் கூறினார். ஒரு சோதனை ஏற்பட்ட மூன்றாம் நாள் ஒரு மனிதர் எப்படி நடந்து கொள்வாரோ அது போலவே முதல் நாளில் நடந்து கொள்ள பழக வேண்டும். அது தான் சிறப்பு.

 பொறுமை நிச்சயம் பலன் தராமல் போகாது.  திருக்குர் ஆன் உறுதியளிக்கிறது.  إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (153)

 கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்வோர்.

 وقال علي بن الحسين زين العابدين : إذا جمع الله الأولين والآخرين ينادي مناد : أين الصابرون ليدخلوا الجنة قبل الحساب ؟ قال : فيقوم عنق من الناس ، فتتلقاهم الملائكة ، فيقولون : إلى أين يا بني آدم ؟ فيقولون : إلى الجنة . فيقولون : وقبل الحساب ؟ قالوا : نعم ، قالوا : ومن أنتم ؟ قالوا : الصابرون ، قالوا : وما كان صبركم ؟ قالوا : صبرنا على طاعة الله ، وصبرنا عن معصية الله ، حتى توفانا الله . قالوا : أنتم كما قلتم ، ادخلوا الجنة ، فنعم أجر العاملين .

3.   அறிஞனின்  சிறப்பு நிதானம்

 அறிவாளி என்பவர் நிதானமாக நடந்து கொள்ளும் போதே சிறப்படைவார்.

திருக்குர் ஆன் அல்லாஹ்வை அடையாளப்படுத்துகிறது.

 وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

அல்லாஹ் மக்களின் எத்தனை குற்றங்களை பார்க்கிறான். அவன் சினம் கொண்டு சீற்றமடைவதில்லை.

 பெருமானார் (ஸல் அவரக்ளின் நபித்துவ அடையாளங்களில் ஒன்றாக நிதானம் இருந்தது. அவர்கள் அனைத்து தரப்பிடமும் நிதானமாக நடந்து கொண்ட்தற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. அதை கண்டு பலர் இஸ்லாமை தழுவியதும் உண்டு.

 இமாம் அபூயூசுப் ரஹ் அவர்களிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். இமாம் அபூயூசுப் ரஹி பதில் தெரியவில்லை என்றார்கள். (லா அத்ரீ)

அவர் இரண்டாவதாகவும் ஒரு கேள்வி கேட்டார் இமாம் அபூஹனீபா எனக்கு தெரியாது என்றார்கள்.

அவன் கடும் கோபத்து அரசாங்க கஜானாவின் பாதி சம்பளத்தை சாப்பிடுகிறீர்கள். கேட்டதற்கெல்லாம் தெரியாது என்கிறீர்களே என்றான்.

இமாம் அபூயூசுப் பதில் சொன்னார்கள். சகோதரரே! எனக்கு தெரிந்தவைகளுக்குத் தான் இந்த பாதி சமபளம் தருகிறார்கள். எனக்கு தெரியாதவைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் இரண்டு மூன்று கஜானாக்களை மொத்தமாக கொடுத்தாலும் பத்தாது என்றார்கள்.

 4.   மாணவர்களுக்கு சிறப்பு இயலாமையை வெளிப்படுத்துவது.

 புத்திசாலி மாணவர் என்பவர் எல்லாம் தனக்கு தெரியும் என்பது போல நடந்து கொள்ள கூடாது.

 எனக்கு அதிகமா எதுவும் தெரியாது என்று நினைப்பாரானால் அவர் அதிகம் கற்றுக் கொள்வார்.

 அறிஞர்கள் சொல்வதுண்டு.   لا يتعلمُ العلمَ مستحيٍ ولا متكبِّرٌ

 கற்றுத்தருபவர்களிடம் பணிந்து நிற்பதே கல்வியை நிலைக்க செய்யும்.

 உமர் ரலி அவர்கள் அற்புதமாக கூறினார்கள்.

 وتواضعوا لمن تعلمتم منه العلم،

உலகின் மாக சக்ரவர்த்திகளில் ஒருவரான ஹாரூன் ரஷீத் இமாம் அபூயூசுப் ரஹ் அவரக்ளின் முன் கை கட்டி நிற்பார் என்று வரலாறு சொல்கிறது.

 இத்தகைய பணிவே கல்வியை சிறப்பானதாக ஆக்கும்.

 5.   உபகாரத்தின் சிறப்பு சொல்லிக் காட்டாமல் இருப்பது.

திருக்குர் ஆன் கூறுகிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ 

 நாம் கொடுப்பதே அல்லாஹ் கொடுத்த்தை தான். அதை மறந்து நான்

உனக்கு நான் இப்படி உதவி செய்தேனே என்று சொல்லிக் காட்டி விடுகிற போது நீ யா கொடுத்தாய் என்று இறைவன் நம்மை பார்த்து திருப்பி கேட்கிற சூழ்நிலை உருவாகும்.

 6.       தொழுகையின் சிறப்பு அடக்கம்.

 தொழுகையில் உலக நினைவுகள் வருவதை தவிர்க்க கூடுமானவரை முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு அல்லாஹ்வை நினைப்பதும், திக்ரு திலாவத்துக்களை கவனமாக ஒதுவதும் துணை செய்யும்.

 7.   அல்லாஹ்வை பயப்படுவதன் சிறப்பு பாவங்களை தவிர்ப்பது.

 நாம் எல்லோரும் அல்லாஹ்வை பயப்படுகிறோம் தான்.

யா அல்லாஹ் என்று சொல்லும் போது நடுங்காத இதயம் இருக்காது.

ஆனால் அந்த பயத்தின் சிறப்பான அளவு எதில் இருக்கிறது என்றால்

அல்லாஹ் தடை செய்தவற்றை நெருங்காமல் இருப்பதில் இருக்கிறது.   

 பாவம் செய்து விட்டு அல்லாஹ்வை அஞ்சி அழுவது பயப்படுவதன் முதல் படியாகும்.

பாவம் செய்யாமலே வாழ முயற்சிப்பது பயத்தின் சிறப்பான அளவாகும்.

 இது சிறப்பான வாழ்க்கையை மக்களுக்கு தரும்.

 ஹராமான வற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல் அமல்களை செய்ய பாக்கியம் தரும் என்று ஒரு ஹதீஸ் உண்டு.

 பாவம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் திருமுகத்தை பார்க்கும் பாக்கியம் மறுமையில் கிடைக்கும் என்று அறிஞர்கள் சொல்வதுண்டு,

  وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ (41)

 நாம் வாழ்கிற இன்றைய காலம் எல்லா வகையிலும் உணவு உடை பழக்க வழக்கங்கள் சம்பாத்தியம் கட்டுப்பாடு கண்ணியம் என அனைத்து வகையிலும் சீரழிவுகளை சந்திக்கிற காலமாக இருக்கிறது.

 மிக எச்சரிக்கையாக சின்ன பாவங்களை கூட தவிர்த்துக் கொள்வதற்கு முயல்வோம் குறைந்த பட்சம் பெரும் பாவங்களை நெருங்கவும் வேண்டாம்.

அல்லாஹ்வின் அச்சம் நம் இதயத்தில் சிறப்பாக இருக்கட்டும்.

 வாழ்க்கையை எல்லா வகையிலும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள் உலகின் மிகச் சிறந்த மனிதர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் சொன்ன இந்த அறிவுரைகள் மிக அடிப்படையானவைகள்.

 நாம் உயர நினைத்தில் உள்ளத்தில் அழுத்தமாக இவற்றை பதித்து வைத்துக் கொள்வோம்.

 ஒரு அற்புதமான ரலமானுக்கு பிறகு வாழ்க்கையை மேலும் சிறப்பாக்கிக் கொள்ள முடிந்த வரை முயற்சிப்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக