வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 23, 2026

மக்களாட்சியா இது?

 

நமது நாட்டிலுள்ளா படிக்கும் இளைஞர்களுக்கு உள்ள ஒரு பெரிய கனவு டாக்டர் ஆக வேண்டும் என்பது.

பணக்கார்ர்கள் எத்தனை கோடி கொடுத்தாவது இடம் பிடித்து விட நினைக்கிற வாய்ப்பு அது.

ஆனால் மக்களின் உயிரோடு விளையாடுகிற அந்த வேலையை எளிதில் கொடுத்து விட முடியாது என்பதனால் 12 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறூகிவர்களுக்கு தர வரிசைப் படி மருத்துவ கல்வி வாய்ப்புக்கல் வழங்கப்பட்டன.

இதில் நமது தமிழ் நாடு முன்னணியில் இருந்த்து.

மத்திய அரசு நீட் தேர்வு என்கிற மிக கடுமையான ஒரு நடைமுறையை இதில் கொண்டு வந்து புகுத்தியது. இதனால் 12 வகுப்பு தேர்வில் மிக ச் சிறப்பான் மதிப்ப் பெண் பெற்றவர்கள் கூட மருத்துவ கல்வியை பெற முடியவில்லை.

வாழ்நாள் முழுவதும் தேக்கி வைத்திருந்த இந்த ஆசை நிறைவேற வில்லை என்ற கவலையில் பல இளைஞர்களும் இளம் பெண்களும் தற்கொலை செய்து கொண்ட்தை நாம் அறிவோம்.

நீட் தேவி நடை பெறும் வளாகத்தின் வாசலில் பெண்களின் கம்மலை கூட கழற்றி பரிசோதிப்பார்கள்,

இந்த அளவு பாதுகாப்பு கெடுபிடிகல் நிறைந்த நீட் தேர்வின் வினா தாள்கள் சமிப சில ஆண்டுகளாக கசிந்து வந்தன .

இதனால கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையே அரசு ரத்து செய்ய வேண்டி வந்த்து. இது சாமாணிய விசயமல்ல இந்தியாவின் இளம் சமுதாயத்தின் வாழ்க்கையோடு விளையாடு ஒரு விவகாரம்.

எனவே இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான பூச்சி கட்சியின் தில்லியில் பெரும் போராட்ட்த்தில் இறங்கியுள்ளனர்.

நியாயமாக அவர்கள் மத்திய அரசை அணுகி அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்கான கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர்.

இது இப்போது இந்திய மக்களின் கோரிக்கையாக உருவெதடுத்துள்ளது.

இதற்கு நியாயமாக பதில் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறூ வாய் வார்த்தைகள் அல்ல; சரியான நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கல்.

மத்திய அரசு இந்த போரட்ட்த்தை முறை கேடாக ஒடுக்க நினைத்து போராட்டக் கார்ர்கள் மீது கடுமையான தடி யடிப் பிரயோகத்தை நடத்தில் பல இளைஞர்களை காயப்படுத்தியுள்ளது.

போராட்டக் கார்ர்கள் மீது காவல் துறை ஏவி விட்ட கடுமையான வன்முறையை தொலைக்காட்சி வழியே பார்த்தவர்கள் கொதிப்படையாமல் இருக்க முடியாது.

காவல் துறையின் போர்வையில் குண்டர்கள் இறக்க் விடப்பட்டு அடித்து விரட்டப் பட்டிருக்கிறார்கள். இதை யும் மிகுந்த வன்மத்தோடு அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் நம்முடிய நாட்டில் உண்மையில் மக்களுக்கான ஒரு அரசு – குடிமக்களின் அரசு நடைபெறூகிறதா என்பது ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

சர்வதேச ஊடகங்களும் இந்த அடக்குமூறையை மிக வியப்பாக பார்க்கிறார்கள்.

இப்போது இந்திய அளவில் மிகப் பெரிய கேள்வி என்ன வென்றால்..  

இந்தியாவின்  குடியரசு தத்துவம் பாதுகாப்பாக இருக்கிறதா ?  என்பதே

குடியரசு என்றால் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று பொருள். ஆனால் இங்கு இப்போது சிறுபான்மையின மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மத தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தங்களது அடிப்படை உரிமைகளை நாட்டின் பல இடங்களிலும் இழந்து வருகிறார்கள். காணும் இடந்தோறும் கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பள்ளிவாசல்களும் தேவாலங்களும் செயல்பட பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது. நீதிமன்றங்களும் காவல்துறையும் கூட அரசியல் சாசணத்தின் தூய வழியில் நடப்பதில்லை. பள்ளிவாசலுக்கான அனுமதியை மறுக்கிறார்கள். வேறு இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என்று மிகவும் கூலாக காவல் அதிகாரி கூறுவார். வேறு இடம் எங்கே என்று கேட்டால் பதிலே இருக்காது.

பணக்கார்ர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது. ஏழை எளிய மக்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். விலை வாசியும், வரிகளும் வானத்தை தொடுமளவு உயர்ந்து நிற்கின்றன. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி தரப்படுகிறது. சில நிறுவங்களின் கைப்பிடிக்குள் நாடு சென்று கொண்டிருக்கிறது.

மக்களின் கடைசி தேடலாக இருக்கிற நீதி மன்றங்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டு, ஆனால் இப்போது அவை சனாதன தர்மத்திற்கு மட்டுமே செங்கோல் செய்கின்றவையாக மாறிவருகின்றன.

சமீபத்திய ஒரு தீர்ப்பை கவனித்தாலே போதுமானது.

2020இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக 22 வயதான முகமது அமீன் என்ற நபரை குஜராத் காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத்தின் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திராமுகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

நீதிபதி சமீர் தனது தீர்ப்பில், "பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள் அழிந்து போகும். பசு ஒரு விலங்கு அல்லஅது ஒரு தாய்.

இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோஅன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும்உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவேஅத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாகவும்அறிவியல் ரீதியாகவும் பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாகஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும்.

 பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கிற ஒரு நீதிபதி சட்டம் அரசியல் சாசனம் என்று எதைப்பற்றியாவது கவலை கொண்டுள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும்.

நமது மாபெரும் குடியரசு நாட்டில் குறிப்பிட்ட ஒரு உயர் சாதியினரை கோட்பாடு எப்படி கோலோச்சுகிறது பார்த்தீர்களா ?

அதனால் தான் நமது குடியரசின் தத்துவத்தை பாதுகாப்பதற்காக நாம் ஒரு விழா எடுக்க வேண்டும்.. ஒரு பெரும் முயற்சி செய்ய வேண்டும் என்று நமது நாட்டின் ஜனநாயக சக்திகள் கூறுகின்றன.

எல்லாம் வல்ல இறைவன் நமது நாட்டின் இறையாண்மையை, குடியரசை,கியாமத் நாள் வரை பாதுகாப்பானாக! நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மக்களின் சமத்துவ வாழ்விற்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருக்கிற சக்திகளை முறியடிப்பானாக. முனை மழுங்க்ச் செய்வானாக!

குடியரசு என்பது வெறும் எழுத்துக்களாலும் விதிகளாலும் கோர்க்கப்பட்ட புத்தகம் அல்ல. அது மனித வரலாற்றின் மகத்தான ஒரு தர்மம். பெரும் சத்தியம்.

அந்த சத்தியத்திற்கு சில நேரங்களில் சோதனைகள் வரலாம். சட்டமும் நீதியும் சில காலம் வளைக்கப்படலாம். ஆனால் அது நிலைக்காது.

திருக்குர் உறுதியளிக்கிறது.

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (81)

 

பெருமானார் (ஸல்) அவர்களை மக்கவிலிருந்து விரட்டி விட மக்காவின் எதிரிகள் முயற்சி செய்த போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

இன்னொரு கருத்தின் படி கஃபாவைச் சுற்றி 360 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் மனம் வருந்திய போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

 إن الباطل كان زهوقا என்பதன் பொருள் . அநீதி ஒரு போதும் நிலைக்காது என்பதாகும்.

குர்துபி கூறுகிறார்.

إن الباطل كان زهوقا  أي لا بقاء له والحق الذي يثبت

 தங்களை நபி என்று சொல்லிக் கொண்டவர்கள் பரிதாபமாக அழிந்தார்கள். மிர்சா குலாமைப் போல

தங்களை சர்வாதிகளாக பிரகனப்படுத்திக் கொண்டவர்கள் அழிந்தார்கள் பிர்அவனை போல. ஹிட்ல்ர் முசோலியனைப் போல.

உலகின் மகத்தான சீர்திருத்தங்களுக்கு காரணமான இஸ்லாமிய் மார்க்கத்தை, “இஸ்லாம் ஏ ஹாண்டிகேப்ட் ரிலீஜன்இஸ்லாம் ஒரு  நொண்டி மார்க்கம் என்று விமர்ச்சித்தார் . பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் . இன்று அவர் முடமாகிக் கிடக்கிறார்.

அநீதி இழைத்தவர்கள் ஒரு போதும் நிம்மதியாக இருந்து விட முடியாது.

எல்லாம் வல்ல இறைவன் நமது நாட்டை அதன் வளத்தை செழிப்பை சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பானாக! குடியரசு தத்துவத்தை நிலை நாட்டியருள்வானாக

 

Thursday, July 16, 2026

பிரார்த்தனைகளின் உயிர்

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55)

 தினசரி நாம் துஆ கேட்கிறோம்.

பாத்ரூமுக்கு செல்லும் போது துஆ கேட்கிறோம்.

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

 மனைவியுடன் உறவு கொள்ளும் போது

عن النبي صلى الله عليه وسلم أنه قال:"لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال: بسم الله، اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا، فإنه إنْ يُقدر بينهما ولد في ذلك، لم يضره شيطان أبداً".

மழை வரும் போது

عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال : (اللهم صيبا نافعا).

 ஒரு ஆளை வேலைக்கு நியமிக்கும் போது அல்லது புதிய வண்டி வாங்கும் போது

عن النبي صلى الله عليه وسلم قال إذا تزوج أحدكم امرأة أو اشترى خادما فليقل اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه  وأعوذ بك من شرها ومن شر ما جبلتها عليه وإذا اشترى بعيرا فليأخذ بذروة سنامه وليقل مثل ذلك قال أبو داود

ஒரு வியாபாரம் வெற்றியடையும் போது சக வியாபாரிக்காக துஆ  

 ஒரு கிராமத்து மனிதரிடமிருந்து ஒரு வைக்கேல் கட்டை வாங்கிய பெருமானார் (ஸல்) அவர்கள் பேச்சு வார்த்தை முடிந்த பிறகும் கூட சபை கலைவதற்கு முன் திரும்ப பெற்றுக் கொள்ள அந்த வியாபாரிக்கு வாய்ப்பளித்தார்கள் . இந்த பெருந்தன்மையை கண்டு வியந்த அந்த வியாபாரி துஆ செய்தார்.  அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும்.

 اشتَرى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ مِن رجُلٍ منَ الأعرابِ حملَ خبطٍ ، فَلمَّا وجبَ البَيعُ ، قالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ: اختَر ، فقالَ: الأعرابيُّ: عَمرَكَ اللَّهَ بيِّعًا

الراويجابر بن عبدالله | المصدرصحيح ابن ماجه

 இப்படி எங்கும் துஆ கேட்க பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம்.

 வெறும் தேங்க்ஸ் அல்லது சிரிப்பு அல்லது எல்லாவாற்றையும் ஏதே சடங்கு போல் செய்வது மனிதர்களுக்கு அழகல்ல என்று இஸ்லாம் கற்பித்திருக்கிறது.

 ஒவ்வொன்றிற்குமான துஆ க்கள் நமது அன்றாட நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் பின் விளைவுகளையும் உணர்த்துகின்றன.

 இப்படி ஒரு முஸ்லிமின் வாழ்வு முழுவதும் துஆ வால் நிறப்பட்டிருக்கிறது.

 இது தவிர தனியாக நாம் நேரம் ஒதுக்கி கையேந்தி துஆக்களை கேட்கிறோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நாம் துஆ கேட்கிறோம்

 (நண்பர்களே ! ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் வழக்கமான துஆக்கள் ஓதுவீர்கள் என்றால் நம்முடைய பள்ளியில் அல்லது பெரும்பாலான பள்ளிவாசல்களில் இன்ன தொழுகைக்குப் பிறகு இப்படி துஆ ஓதப்படுகிறது என்று தொழுகைக்குப் பின் ஓதப்படுகிற துஆ க்களை சொல்லி விளக்கம் கூறவும் –

இதற்காக நேரம் எடுத்துக் கொண்டால் தவறில்லை. நாம் அன்றாடம் ஓதுகின்ற துஆக்களின் பொருளை ஒரு தடவையாவது மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் ஓதப்படுகிற ஈஸால் சவாப் துஆ வின் பொருளைக் கூட சுருக்கமாக கூறலாம்.

 நாம் துஆ கேட்கிறோம். சந்தேகமில்லை.

 இந்த துஆ க்கள் உரிய பலனை தர வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமா  என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது .

 நபி ஜகரிய்யா அலை உடல் மூத்து தளர்ந்த் நிலையில் துஆ வின் மூலம் குழந்தையை பெற்றார்கள்.

 நாமோ அந்த  மகத்தான அமலை ஏதோ சடங்காக முடித்து விடுகிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

 பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது. அல்லாஹ் மாற்றத்தை தருவானாக!

நமது துஆ க்களின் உயிரோட்ட்த்தை ஏற்படுத்த நாம் எப்படி பட்ட ரப்பிடம் கேட்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்

 அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ள அதிக பட்ச நமது பணிவை வெளிப்படுத்துவதை நாம் வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிரார்த்தனைகளுக்கான் ஒழுங்கை குர் ஆன் கற்பிக்கிறது.

 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (55)

 பணிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 இதன் பொருள். துஆ வில் அலட்சியம் கூடாது. நம்மில் பலரும் ஏனோ தானோ வென்று கையேந்தினால் போதும் என்று நினைக்கிறார்கள்./

 அல்லாஹும்ம்.. என்று சொல்லும் போதே அந்த அல்லாஹ் யார் என்ற அச்சடக்கம் நமக்கு வேண்டும். அவன் தராவிட்டால் என்னாவது என்ற பயமும் அவன் தருவான் என்ற உறுதியும் வேண்டும்.

 துஆவை பணிவை வெளிப்படுத்துவதற்கு ஒரு உதாராணம்,

 யா அல்லா எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடு என்று மட்டும் கேட்காமல் உன்னை தவிர யாரால் ஷிபாவை தர முடியும் நீ கொடுக்கிற ஆரோக்கியம் தான் உண்மையான ஆரோக்கியம் என்று கேட்க வேண்டும்.

 பெருமானார் (ஸல்) அப்படித்தான் கேட்பார்கள்

 أن النبي صلى الله عليه وسلم الله عليه وسلم الله عليه وسلم كان يعود بعض أهله يمسح بيده اليمني ويقول‏:‏ ‏"‏اللهم رب الناس، أذهب البأس، واشف، أنت الشافي لا شفاء إلا شفاؤك، شفاءً لا يغادر سقماً” ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

 அதே போல துஆ க்களின் போது நமது இயலாமையை வெளிப்படுத்த வேண்டும்.

 இது பணிவையும் பக்தியையும் அதிகப்படுத்தும்.  .  

 பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது இப்படி துஆ கேட்டார்கள் 

اللَّهُمَّ إنَّك تَسمَعُ كلامي، وتَرى مكاني، وتَعلَمُ سِرِّي وعلانيتي، لا يَخفَى عليك شيءٌ مِن أمري، وأنا البائسُ الفقيرُ المستغيثُ المستجيرُ الوجلُ المشفقُ، المقرُّ المعترفُ بذنبه، أسألُك مسألةَ المسكينِ، وأبتهِلُ إليك ابتهالَ المُذنِبِ الذليلِ، وأدعوك دعاءَ الخائفِ الضَّريرِ، مَن خضَعتْ لك رقَبتُه، وفاضتْ لك عَبْرتُه، وذلَّ لك جِسْمُه، ورغِمَ لك أنفُه. اللَّهُمَّ لا تَجعَلْني بدعائِك شقيًّا، وكُنْ بي رؤوفًا رحيمًا يا خيرَ المسؤولِينَ، ويا خيرَ المُعطِينَ

யா அல்லாஹ், நீ என் வார்த்தைகளைக் கேட்கிறாய், என் இடத்தைக் காண்கிறாய், என் இரகசியங்களையும் என் பகிரங்கச் செயல்களையும் அறிவாய். என்னைப் பற்றி எதுவும் உனக்கு மறைவானதல்ல. நான் துயருற்றவன், ஏழை, அடைக்கலம் தேடுபவன், அச்சம் கொண்டவன், கவலைப்படுபவன், ன் பாவத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்பவன். ஏழையாய் மன்றாடி உன்னிடம் கேட்கிறேன்,

தாழ்மையான பாவியின் மன நிலையில் உன்னிடம் மன்றாடுகிறேன், அச்சம் கொண்டவனாக் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நோயுற்றவனாக உன்னை அழைக்கிறேன்; உனக்குகாக வளைந்து னிற்கிறேன். ன்னிடம் கண்ணீர் வடிப்பக்கிறேன், உனக்கு முன் பணிந்து நிற்கிறேன். உனக்காக என மூக்கை தரையில் தேய்க்கிறேன். யா அல்லாஹ், உன்னிடம் நான் செய்யும் பிரார்த்தனையில் என்னைத் துயருற்றவனாக்காதே, எனக்குக் கருணையும் இரக்கமும் காட்டுவாயாக, கேட்கப்படுகிறவர்களில் சிறந்தவனே, யா கொடுப்பவர்களிலேயே சிறந்தவனே. ( என் கோரிக்கைகளை ஏற்பாயாக!

 இந்த பிரார்த்தனை என்ன உருக்கம் பாருங்கள்.

நாம் யார் ? நாம்  யாரிடம் பிரார்த்தனை செய்கிறோம் அவன் தராமல் போனால் என்ன ஆகும் என்பதை முழுமையாக உள் வாங்கிக் கொண்ட பிரார்த்தனை அல்லவா இது

 இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட துஆ வை பாருங்கள்

 தாயிப் நகரில் இருந்து திரும்பும் போது மலைகளின் மலக்கு நான் இநத மலையை பிடிங்கி எடுத்து இவர்களை அழித்து விடட்டுமா என்று கேட்ட போது வேண்டாம் என அதை மறுத்து விட்டு பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்.

 اللَّهمَّ إليكَ أشكو ضَعفَ قوَّتي، وقلَّةَ حيلَتي، وَهَواني علَى النَّاسِ... أنتَ أرحمُ الرَّاحمينَ، أنتَ ربُّ المستضعفينَ، وأنتَ ربِّي... إلى من تَكِلُني؟ إلى بعيدٍ يتجَهَّمُني أَمْ إلى عدُوٍّ ملَّكتَهُ أمري. إن لم يَكُن بِكَ غضبٌ عليَّ فلا أبالي، غيرَ أنَّ عافيتَكَ هيَ أوسعُ لي.. أعوذُ بنورِ وجهِكَ الَّذي أشرَقت لهُ الظُّلماتُ، وصلُحَ علَيهِ أمرُ الدُّنيا والآخرةِ، أن يحلَّ عليَّ غضبُكَ، أو أن ينزلَ بي سخطُكَ. لَكَ العُتبى حتَّى تَرضى، ولا حولَ ولا قوَّةَ إلَّا بِكَ

யா அல்லாஹ், என் பலவீனத்தையும், சக்தியின் பற்றாக்குறையையும், மக்களின் பார்வையில் நான் ஒரு பொருட்டாக மதிக்கப்படாததையும் குறித்து உன்னிடம் முறையிடுகிறேன். நீயே கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன், நீயே ஒடுக்கப்பட்டோரின் இறைவன், நீயே என் இறைவன்.

 

நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னை இகழ்ந்து பார்க்கும் ஒரு தொலைதூர அந்நியனிடமா, அல்லது என் மீது அதிகாம் மிக்க எதிரியிடமா?  நீ என் மீது கோபம் கொள்ளவில்லை என்றால்அது போதும் எனக்கு.

 உன்னுடைய அருள் எனக்கு மிகவும் பரந்தது. உன்னுடைய திருமுகத்தின் ஒளியில் நான் அடைக்கலம் தேடுகிறேன், அதன் மூலம் இருள் அகற்றப்பட்டு, இவ்வுலக மற்றும் மறுமையின் காரியங்கள் சீர் செய்யப்படுகின்றன, உன்னுடைய கோபம் என் மீது இறங்குவதிலிருந்தோ அல்லது உன் சீற்றம் என் மீது விழுவதிலிருந்தோ நான் பாதுகாப்பு தேடுகிறேன் . நீ திருப்தி அடையும் வரை உன்னிடம் நான் மன்றாடுகிறேன், உன்னைத் தவிர வேறு எந்த சக்தியும் வலிமைமையாது இல்லை.

 பெருமானாருக்கு அல்லாஹ் கொடுத்த அந்தஸ்த்து அதன் பின்னரும் அவர்கள் அல்லாஹ்விடம் பணிந்து நின்ற கோலத்தை எண்ணிப் பாருங்கள்.

  நமது பிரார்த்தனைகளை இந்த வடிவத்தில் நாம் அமைத்துக் கொள்ளும் போது நமது பிரார்த்தனை பணிவும் உருக்கமும் நிறைந்த்தாக மாறும்.  

 உருதுவில் சொல்வார்கள் .துஆ பட்னேமே துஆ மான்க்னேமே பர்க் ஹே

 துஆ வை படிப்பதற்கும் துஆ கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

 நாம் துஆ கேட்க வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!