வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 26, 2013

ஐந்து பொன்மொழிகள்


وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
இமாம் அபூஹனீபா -ரஹ்- தனது மகன் ஹம்மாதுக்கு 5 ஹதீஸ்களை சுட்டிக்காட்டி இதன்படி நடந்தால் முழு மார்க்கத்தையும் கடைபிடித்தவராகலாம் என்றார்கள்..
பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களிலிருந்து இமாம் அபூஹனீபா தேர்ந்தெடுத்து தன் மகனுக்கு சொன்னவை என்கிற போது இந்த ஹதீஸ்களின் முக்கியத்துவம் புலப்படுகிறது.
அறிவிற்சிறந்த அந்தப் பெருமகனாரின் அறிவுரை நமக்கும் பயன்தரக் கூடியதே!

நபிகள் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் இந்த ஐந்தையாவது நாம் ஞாபகத்தில் வைக்கலாம்.

முதல் ஹதீஸ்.                      

سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

எந்த செயலுக்கும் நிய்யத் அவசியம். அது நல்லதாக இருக்க வேண்டும்.

இந்த ஹதசின் முக்கியத்துவம்

6 லட்சம் ஹதீஸ்களை மன்னம் செய்திருந்த் இமாம் புஹாரி ரஹ் அதில் 7586 ஹதீஸ்க்ளை மட்டும் தனது ஸஹீஹிற்கு தேர்வு செய்தார்கள். ஓவ்வொரு ஹதீஸை தனது நூலில் சேர்ப்பதற்கு முன்பும் மஸ்ஜிதுன்னபவியில் இரண்டு ரக அத் தொழுத பிறகே சேர்த்தார்கள். இப்படித் தொகுத்த அந்த நூலுக்கு முதல்தீஸாக அவர்கள் நிய்யத் பற்றிய இந்த ஹதீஸையே தேர்வு செய்தார்கள்.

மார்க்கம் நிய்யத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் என்னவென்பதை சமுதாயம் உணார்ந்தே இருக்கிறது.

காலையிலிருந்து சாப்பிடாமல் ஒருத்தர் இருக்கிறார். அவர் நோன்பாளியாகி விடமாட்டார். நிய்யத் வேண்டும்.

தொழுகையின் ஒரு ரகாத்தில் தனது சாமான்களை பாதுகாக்க ஒருவர் முகம் திருப்பினால் அது தவறாகாது.

நிய்யத் விசயத்தில் நாம் இரண்டு விசயங்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்.

1.   தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளூக்கு மட்டும் அல்ல வாழ்க்கையில் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் நிய்யத் அவசியம்

2.   அந்த நல்லடாக சுத்தமானதாக இருக்க வேண்டும்

இத்தகைய நிய்யத்துடன் ஒரு காரியம் செய்தால் இரண்டு  நனமைகள் கிடைக்கும் 

1.   அந்த செயலின் மரியாதை உயரும்

2.   அது வணக்கமாக மாற்றி அல்லாஹ்விடம் கூலியைப் பெற்றுத்தரும்.

கல்வி கற்பதற்கு திருமணம் செய்வதற்கு வீடு கட்டுடுவதற்குல்தொழில் செய்வதற்கு சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்ய்கும்  நிய்யத் அவசியம்.

வீட்டில் ஜன்னல் வைக்கிறோம் - பாங்கு சபதம் கேட்பதற்கு என எண்ணீனால் அது சிறப்பானது. நாம் ஜன்னல் வைத்த நோக்கம் அந்த ஜன்னலின் மரியாதையை உயர்த்தி விடுகிறது. அது அல்லாஹ்விடமிருந்து தவாபை பெற்றுத்தருகிறது .

காற்றும் வெளிச்சமும் தானாக வரும்

நிய்யத்தில் மூன்று நிலை இருக்கிறதய்

1.       நல்லெண்ணம

2.       தீய எண்ணம்

3.       எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது.

சமுதாயத்தின் பெரும் கேடு சமுதாயம் பெரும்பாலும்  3 வது நிலையிலிருக்கிறது.

நாம் மார்க்கப்படியான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் எந்த காரியத்தையும் நிய்யத்தோடு அதுவும் நல்ல சுத்த்மான நிய்யத்தோடு செய்து பழக வேண்டு,

நம்முடைய வாழ்க்கையில் நிய்யத்தை சுத்தம் செய்ய நாம் பெரிதும் முயல வேண்டும்

ஒரு ஷைஹிடம் நிய்யத்தை சரி செய்யும் முறையை அறிய எனக்கு 8 ஆண்டுகளானது என்.றார் ஒரு பெருந்தகை.

ஆடை அணிவதற்கு 40 வகையாக  நிய்யத்துச் செய்யலாம் என  இப்னு ஹஜ்ர் அஸ்க்லானி கூறுகிறாற்.  ;

நிய்யத்தை சுத்தப்படுத்திக் கொள்ள தெரிந்து விட்டால் சிறு செயலையும் பெரியதாக்கிக் கொள்ள்;லாம்.

رب عمل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية- عبد الله بن المبارك

நிய்யத் சுத்தமாக இல்லாவிட்டால் உயர்ந்த வணக்கங்கள் கூட பயன் தராமல் போவிடும்.

ஷஹீத்ஆலிம்வள்ளல். கியாமத்தின் நிலை
وعن أبي هريرة قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول :
 إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيءٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ  رواه  ومسلم 1905   )

நம்முடைய முன்னோர்கள் நாவிலிருந்து எப்போதும்  பாடல் போல் இந்த வாசகம் வெளிப்படும்

حسبي ربي جل لله  ما في قلبي غير الله

இது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிய்யத்தை சுத்தப் படுத்திக் கொள்ளும் பயிற்சியாகும்.

இரண்டாவ்வது ஹதீஸ்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ

ஒரு முஸ்லிம் தேவையற்ற காரியங்களில் இறங்க்க் கூடாது.

தேவையற்றது எதுஎது தவாபிற்குரியதில்லையோ அது தேவையற்றதுதுதான்.

பேச்சு பயணம் கூடியிருத்தல் செலவு செய்தல் என ஒவ்வொன்றிலும் கருத்துச் சொல்லுதல் என ஒவ்வொரு விச்யத்திலும் தேவையற்றதிலிருந்து முஸ்லிம் ஒதுங்கியிருக்க வேண்டும்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில்பெரியவர்க்ளிடம் தேவையற்றவற்றநன்மையல்லாத் பேச்சுசெலவும்  மிக்கத்திருக்கிறது. – இளையோர்களிடம் தேவையற்ற ஒன்று கூடுதலும் கருத்துப் பேசுத்லும் மிகைத்திருக்கிறது.

பெரியவர்களும் இளைஞர்களூம் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் ஜெண்டில் மேன்மரியாதைக்குரியவராக திகழலாம். வீண் பிரச்சினைக்கு ஆளாவதிலிருந்து அவர்களும் சமுதாயமும் பாதுகாப்புப் பெறுவர்.

தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது தனிமனிதர்களையும் குடும்பத்தையும் கடனிலிருந்தும் வறுமையிலிருந்தும் பாதுகாக்கும். மட்டுமல்ல அதுதான் இஸ்லாமிய வாழ்வாகும்

ஒரு கேலிக்கை சபையை இப்னு மஸ்வூத்ரலி கடந்து சென்றார் அங்கே நின்று கொண்டிருக்கவில்லை. இப்னு மஸ்வூத் மரியதையாக எப்போதும் நடந்து கொள்கிறார் என பெருமானார் பாராட்டினார்கள்.

بلغني أن ابن مسعود مر بلهو معرضا فلم يقف فقال رسول الله صلى الله عليه وسلم "لقد أصبح ابن مسعود وأمسى كريما" ثم تلا إبراهيم بن ميسرة "وإذا مروا باللغو مروا كراما".

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا(7

முஸ்லிம் இளைஞர்களிடம் இஸ்லாமிய வாழ்க்கை வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. அவர்கள்  இந்த ஹதீஸை நினைவு வைத்துக் கொண்டால் சமுதாயம் பல பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறும்.

மூன்றாவது ஹதீஸ் நமக்கு விரும்புவத்த பிறருக்கு விரும்ப வேண்டும்.

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

நாம் மன்னிக்கப்படுவத விரும்புகிறோம். பிறரை நாம் மன்னிக்கிறோமா-

மனைவி நல்லவளாக இருக்க வேண்டும்நாம் நல்லவர்களாக் அவர்களூக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறோமா -

நாம் ஏமாற்றப்படக்கூடாது என் நினைக்கிறோM. நாமும் பிறை ஏமாற்றக் கூடாது

நான்காவது ஹதீஸ்ஹலால் ஹராமை பேணுதல்

النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ

சிறந்த வாழ்க்கைக்கு இதை விட சிற்ந்த த்த்துவம் தேவையில்லை.
மனிதனைப் புனிதனாக்கி விடும் தத்துவதும் இது

இன்றைய நாகரீக உலகு சுய விருப்பத்தின் படியான வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறது அதனால் நாகரீக உலகில் அநாகரீகம் கொடி கட்டிப்பறக்கிறது.

இலஞ்சம் ஏமாற்றுதல் கொடிகட்டிப் பறக்கிறது = பதிரிக்கையை திறந்தால் சமூகத்தில் படர்ந்திருக்கிற அவலங்கள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.

இப்போது தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது ,அவர்களூடைய சின்னம் துடைப்பக்கட்டைஇந்திய அரசியலில் மலிந்து கிடக்கிற முறை கேடுகள், இலஞ்ச இலாவண்யத்தை துடைத்தெரிவோம் என்று அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.

நாட்டைப் பாதுகாப்பத்ற்கு இப்படி யாராவது வாமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த்த்தப் போல மக்கள் அவர்களூக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழல் பேர்வழிகளை விட மாட்டோம் என அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.

இந்த மாற்ற்த்தை நாம் வரவேற்கிறோம். அல்லாஹ் நமது நாட்ட்ட பாதுகாத்தருள்வானாக

ஆனால் சட்டங்களாலும் தண்டனைகளாலும் இந்த கொடுமையை அழித்து ஒழித்து விட முடியாது.

இந்த ஹதீஸ் கூறும் உணார்வு மக்களிடம் பரப்ப்ப் படவேண்டும். அனுமதிக்கப் பட்டது நல்லது அனுமதிக்கப் படாதது கெட்டது பற்றிய சிந்தனை பொதுமைப்படுத்த பட வேண்டும்.

அது வரை திருடர்களூம் கொள்ளையர்களூம் திருப்பதி உண்டியலில் காசு போட்டு விட்டு திருடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இந்த ஹதீஸை ஒரு தனி மனிதர் நடைமுறைப்படுத்தினால் அவரும் அவரைச் சூழ்ந்திருக்கிற சமூகமும் நிம்மதி பெறும்.
அப்துல் மாலிக் சித்தீகி என்ற பெரியவர்  தான் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி தெரிவிக்கிறார். அவர் குளிர் காலத்தில் குடை பிடித்திருந்தார். ஏன் குளிர்காலத்தில் குடை பிடித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பெரியவர் சொன்னார்  அன்னியப் பெண்களை காணாதிருக்க! –

நாட்டில் தனியே செல்லும் பெண்களை துரத்திச் சென்று கற்பழித்துக் கொலை செய்கிற நிகழ்வுகள் அன்றாடம் செய்தியாகி வருகிறது, என்னுடைய நண்பர் ஒருவர் டூவீலரில் செல்கிற போது பக்கத்தில்  பெண்கள் யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அல்லது வண்டியில் பின் இருக்கையில் இருந்தால் இவர் அவர்களை முந்திச் சென்று விடுவார். அவரின் இந்த குணத்தை நான் இயல்பாக கவனித்தேன்.

ஹலால் ஹராமைப் பேணி  நடந்தால் மனித வாழ்வு எப்படி உன்னதமாகிவிடுகிறது பாருங்கள்.


ஐந்தாவது ஹதீஸ்பிறருக்கு தீங்கிழைக்க கூடாது எந    வடிவத்திலும் அதுவே முஸ்லிமின். இலக்கணம்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَعْنِي ابْنَ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَبْدُ الْأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே இந்த ஹதீஸைக் கடைபீத்தால் ஒரு முஸ்லிம் எவ்வளவு  உன்னத்மானவரக இருப்பார்,

 

இந்த ஹதீசின் அடிப்படையில் நாம் முஸ்லிமாக இருக்கிறோமா என நம்மில் ஒவ்வொரு வரும் யோசிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஹதீஸ்களூம் மார்க்கத்தை நாம் முழு மையாக் கடைபிடிக்க  உதவக் கூடியவை என்று இமாம் அபூஹனீபா ரஹ் கூறீனார்கள்

பெருமானார் ஸல் அவர்கள் பிறந்த மாதம் பிற்க்க இருக்கிற இந்த தருண்த்தில் நாம் இந்த ஹதீஸ்களை நினைவில் நிறுத்துவோம் .இதனடிப்படையில் நடக்க கவனம் செலுத்துவோம்.

 

 

 


 

 

 


 

 

 

4 comments:

  1. முஹம்மது அப்துல் மஜீத் ஜமாலீ11:38 PM

    மவுலானா அருமை! பாரக்கல்லாஹ்!

    ReplyDelete
  2. திருப்பதி உண்டியலை பற்றி எழுதியஎழுதியது சங்கடமாக இருந்தது

    ReplyDelete
  3. الحمد ﻟﻠﻪ

    ReplyDelete