வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 06, 2014

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்



ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி
·         முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்.
·         இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி
·         உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர்.
·         பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்.
·         ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்.
·         கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்..
·         ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்
·         كان   كثير الكرامة  -

அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.
வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு தெரியாது.

இன்றைய ஈரானில் காஸ்பியன் கடலை ஒட்டியிருக்கிற ஜீலான் என்ற நகரத்தில்  நீப் பகுதியில்  ஹிஜ்ரி 470 ல் (கிபி 1077) அப்துல் காதிர் ஜீலானி பிறந்தார்.

அது ஹிஜ்ரி 5 ம் நூற்றாண்டு. இஸ்லாமிய அரசாங்கத்தை அப்பாஸிய கலீபாக்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். முஸ்லிம்கள் அரசியலிலும் அறிவியலிலும் உலகின் முதலிடத்தில் இருந்தார்கள்.

அப்துல் காதிர் ஜீலானியின் தந்தை அபூசாலிஹ் மூஸா அவர்களின் வமிசத் தொடர் ஹஸன் ரலி அவர்களுடன் முடிகிற்து. ஜீலானி ரஹ் அவர்களுக்கும் பாத்திமா ரலி அவர்களுக்குமிடையே 11 தந்தையர் உள்ளனர்.
( التاريخ الكبير، تأليف: الحافظ الذهبي. )
அவரது தாய் உம்முல்கைர் அவர்களுடைய வமிசம் தொடர் ஹுசைன் ரலி அவர்களுடன் சேருகிறது. இவ்வாறு தாய் தந்தை இருவரது சங்கிலித்தொடர்பும் பெருமானார் (ஸல்) அவர்களுடன் சேருகிறது.
அப்துல் காதிர் ஜீலானியின் குடும்பம் சாலிஹான குடும்பமாக இருந்தது. அவரது தந்தையும் பாட்டனார் அப்துல்லாஹ் பின் யஹ்யாவும் இறைச்சிந்தனையில் முன்னோடிகளாகவும் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் தந்தையின் சகோதரி ஆயிஷா வை முன் வைத்து மழை வேண்டாப்பட்டால் மழை பொழியும்.
ஆரம்ப கல்வியை தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்து கற்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தன்னுடைய 18 வயதில் மேற்படிப்புக்காக இராக்கிலிருக்கிற பக்தாதுக்கு வந்தார்கள்.
பக்தாதில்  أبو سعيد المُخَرِمي  யின் மதரஸாவில் சேர்ந்தார். அங்கு திறன்மிக்க மாணவராக விளங்கினார்.  இளம் வயதிலேயே இதயங்களுக்குள் ஊடுறுவும் சொற்பொழிவுத்திறமை அவரிடமிருந்தது.
அவருடைய சொற்பொழுவின் ஆகர்ஷனத்தைப் அறிந்த உஸ்தாது أبو سعيد المُخَرِمي அவர்களே தன்னுடைய மானவருக்கு மதரஸாவிலேயே தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். பாபுல் அஸ்ஜ் என்ற இடத்திலிருந்த அந்த மதரஸாவில்  வெள்ளி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் காலையிலும் செவ்வாய்க்கிழமை மாலையிலுமாக வாரத்தில் மூன்று நாட்கள் அன்னாரின் பிரசங்கம் தொடர்ந்தது. அந்தப் பிரசங்கங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. பெரிய அளவில் மக்கள் திரண்டனர். பிரமுகர்கள் அமைச்சர்கள் சுல்தான்கள் அக்கூட்டங்களுக்கு வந்தனர்.
அந்தப் பிரசங்கங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையிலும் உள்ளச் சுத்த்தை தூண்டும் வகையிலும் அமைந்தன, அல்லாஹ் அன்னாருக்கு கொடுத்த அந்த மாபெரிய ஆற்றல் மக்கள் இதயங்களை ஊடுறுவிச் சென்றது.
அக்கிரமம் செய்த அதிகாரிகள் மனம் மாறினர். திருடர்களும் குற்றவாளிகளும் மனம் திருந்தினர். சுமார் 1 இலட்சம் தீயோர் மனம் திருந்தினர். சுமார் 50 ஆயிரம் பேர் இஸ்லாமை தழுவினர்.
30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட ஜீலானி ரஹ் அவர்கள்
أبو سعيد المُخَرِمي அவர்களின் வபாத்திற்கு பிறகு அந்த மதரஸாவிற்கு பொறுப்பேற்ற ஜீலானி ரஹ் அவர்கள் பொறுப்பேற்ற ஆசிரியப்பணியிலும் பத்வா வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்கள். பல பகுதிகளிலும் வந்து குவிந்த மாணவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசர்கள் பொதுமக்கள் எல்லோருமாக சேர்ந்து அக்கம் பக்கத்து நிலங்களை வாங்கி அந்த மதரஸாவை பொரிது படுத்தினர்.
ஜீலானி ரஹ் அவர்கள் அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13 கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். ஷாபி ஹன்பலி மத்ஹபுகளின் படி அவர் பதவாக்கள் வழங்குவார், அந்த பத்வாக்கள் இராக் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.
பக்தாதிலிருந்து திடீரென் வெளியேறிய ஜீலானி ரஹ் அவர்கள் பல வருடங்கள் இராக்கின் வனாந்தரங்களில் சுற்றினார், இந்த உலகின் ஈடுபாடுகளை விட்டு தனித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செல்லத் தூண்டியது.  பிறகு மக்களின் நிலையையும் தன்னுடைய கடமையையும் உணர்ந்த ஜீலானி ரஹ் அவர்கள் மீண்டும் பக்தாதுக்கு திரும்பி தன்னுடைய பொறுப்பை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களது கனவில் தோன்றி மக்களின் சீர்திருத்தப் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
பணிகள்
அனைத்து வகையான கலைகளையும் ஜீலானி ரஹ் கற்றிருந்த்தனால் அவர்களது சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் அனைவரையும் சென்றடைந்த்து.
அவரது சொற்பொழுவுகள் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன. ஏராளமானோர் நேர்வழி பெற்றனர்.
அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்கள் அரசியல் அரங்கிலும் அறிவியல் துறையிலும் முதன்மையாக இருந்தாலும் உள் நாட்டு நிலவரம் குழப்பமானதாக இருந்த்து, மக்களின் ம்னோ நிலையிலும் ஈமானிய நிலைப் பாடு குறைந்து உலகியல் மோகம் அதிகரித்திருந்த்து. புகழ் ஆடம்பரம் அதிகாரத்தை பெரிதாக கருதும் போக்கு மிகைத்திருந்த்து.
ஜீலானி ரஹ் தன்னுடைய சொற்பொழிவுகள் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களது சிந்தனையை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்ப்டையான இறைச் சிந்தனையின் பால திருப்புவதில் பெரும் வெற்றி கண்டார்கள். இந்த ஆன்மீக மாற்றத்தை தேடி குதிரைகள் ஒட்டகைகளில் பயணம் செய்து மக்கள் வந்தனர். ஒரு சம்யம அவரது உரையை கேட்க 90 ஆயிரம் பேர் பக்தாதில் கூடினர்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிக்ழந்த்தால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து.
ஒரு நாள் தனது உரையில் அவர் கூறினார் :
أنت معتمد عليك ، وعلي الخلق ، ودنانيرك ودراهمك ، وعلي بيعك وشرئك ، وعلي سلكان بلدك ، كل من إعتمدت عليه فهو إلهك ، وكل من خفته ورجوته فهو إلهك،  كل من رأيته في الضر والنفع ، ولم تر أن الحق يجري ذلك علي يديه قهو إلهك :  الفتح الرباني  - المجلس
நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.

ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு நாள் இவ்வாறு கூறினார். . .

كل من يري الضرر والنفع من غير الله فليس بعبد له ، هو عبد من رأي ذلك له : الفتح الرباني
அல்லாஹ் அல்லாத மற்ற எதனிடமிருந்து நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று கருதுகிற எவனும் அல்லாஹ்வின் அடிமை அல்ல.அவன் எதை நம்புகிறானோ அதன் அடிமையாவான்.
மற்றொரு நாள் இந்த உலக ஆசையில் திழைப்பதை இப்படி எச்சரித்தார்.
ويحك ! الدنيا في اليد يجوز ، في الجيب يجوز ، إدخارها لسبب وبنية صالحة يجوز ، أما في القلب فلا يجوز. وقوفها علي الباب يجوز ، اما دخولها إلي وراء الباب فلا . و لا كرامت لك . الفتح الرباني  - المجلس 51
உனக்கு நாசமே! இந்த உலகம் உனது கையில் இருக்கட்டும். உனது பையில் இருக்கட்டும். ஒரு தேவைக்காக அல்லது நல்ல நோக்கத்திற்காக அதை சேர்த்து வைத்தாலும் கூடும். ஆனால் இதயத்தில் இடமளிக்க கூடாது. அது வீட்டு வாசலில் நிற்கட்டும். அதை தாண்டி வரக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு எந்த மரியாதையும் இல்லை.
ஷைக் அவர்களின் இந்த உரை வீச்சுக்கள் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் இப்போது கேட்கிற போது கூட சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. நேரில் இது எத்தகையை விளைவுக்ளை ஏற்படுத்தியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
மக்கள் இந்தப் பேச்சுக்கு கூட்டம் கூட்டமாக திரண்டார்கள். அவரது வாயிலிருந்து உதிரும் முத்துக்களுக்காக காத்திருந்தார்கள். திருந்தினார்கள். திருத்தினார்கள்.
தன்னுடைய உரையில் அரசர்கள் அதிகாரிகளை ஜீலானி விட்டுக் வைக்கவில்லை. தவறு எங்கு கண்டாலும் கண்டித்தார்.
ஜீலானி ரஹ் அரசர்கள் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொது மேடையில் நன்மையை எடுத்துச் சொல்பவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருந்தார் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.

ஒரு நாள் தன்னுடையை உரையில் இப்படி கர்ஜித்தார்.
إني أقول لكم الحق ، ولا أخاف منكم ولا أرجوكم ، أنتم واهل الأرض عندي كالبق ، لأني أري  النفع و الضرر من الله – لا منكم . المماليك والملوك عندي سواء (  الفتح الرباني  - المجلس الواحد والخمسون )
நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறேன். நான் உங்களை பயப்படவும் மாட்டேன். உங்களிடமிருப்பதை ஆசைப்படவும் மாட்டேன். நீங்களும் இந்த உலகில் இருப்பவையும் என்னிட்த்தில் ஒரு கொசுவைப் போலத்தான். நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன உங்களிடமிருந்து அல்ல என்றே நான் நம்புகிறேன். மக்களும் மன்னர்களும் என்னிடம் சம்ம் தான்.

அப்பாஸிய கலீபா முக்தபா லி அம்ரில்லாஹ்  المقتفي لأمرالله    இப்னுல் முஜஹ்ஹிம் என்ற அக்கிரமக்கார்ரை நீதிபதியாக நியமித்த போது ஜீலானி ரஹ் அவர்கள் மின்பரின் மீதேறி அறைகூவினார்கள்.

وليت غلي المسلمين أظلم الظالمين ، ما جوابك غدا عند رب العالمين ، ارحم الراحمين .
மிக்க் கொடிய அக்கிரமக்காரனை முஸ்லிம்களின் அதிகாரியாக நியமித்து விட்டாய்! நாளை ரப்புல் ஆலமீன் மிக்கருணையாளனான அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறாய என்று கேட்டார்கள்.

வர்லாறு சொல்கிறது, ஜீலானி (ரஹ்)  அவர்களின் இந்த வாக்கியத்தில் நடுக்க முற்ற கலீபா அழுதபடியே நீதிபதியை மாற்றினார்.
فارتعد الخليفة وبكي   ، وعزل القاضي المذكور ( قلائد الجواهر )
ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு மகத்தான பணி
ஆன்மீகம் என்ற பெயரில் மார்க்கத்தின் அடிப்படைகளை குழு தோண்டிப்புதைக்கிற பணியை சிலர் செய்து வந்தார்கள் .

அன்னாரின் மற்றுமொரு சிறப்பு, ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறீ நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார். இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப் பட்டது.

அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி
ஒரு நாள் தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து  என்னைப் பாராட்டி விட்டு ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால் என்றான். அவனை விரட்டினேன் என்றார். அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டன்ர்.. ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்.     
சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்)  யிடம் சொன்னான் இதே போல நாற்பது பேரை ஏமாற்றி யிருக்கிறேன் நிர் மார்க்க ஞானம் பெற்றிருந்த்தால் தப்பித்துவிட்டீர்.

·         قال الإمام ابن حجر العسقلاني : كان الشيخ عبد القادر متمسكاً بقوانين الشريعة, يدعو إليها وينفر عن مخالفتها ويشغل الناس فيها مع تمسكه بالعبادة والمجاهدة ومزج ذلك بمخالطة الشاغل عنها غالبا كالأزواج والأولاد, ومن كان هذا سبيله كان أكمل من غيره لأنها صفة صاحب الشريعة صلى الله علية وسلم   (قلائد الجواهر، ص 23.)


ஜிலானி (ரஹ்) அவர்கள் அனைத்து தரீக்கா பிரிவின்ரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நட்த்தி தரீக்கா பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தினார். அதனால் நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்) அவர்களை எங்களுடையவும் உங்களுடையவும் ஷைகு என்று அழைப்பதுண்டு.

ஜிலானி ரஹ் அவர்களின் முயற்சியின் விளைவாவாகத்தான் பல தரீக்காகளும் இணைந்த பொதுவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின.


ஜீலானி ரஹ் அவர்களால் திருந்தியவர்கள் அவரிடமிருந்து பை அத் பெற்றவர்கள் அன்னாரின் கருத்துக்களை நாடு நகரமெங்கும் எடுத்துச் சென்றார்கள்.
அப்போது பக்தாது முஸ்லிம்களின் தலை நகராக இருந்த்தால் இந்தப் பிரச்சாரம் முஸ்லிம் உலகம் முழுவதற்கும் சென்றது.
இன்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் பெருமை உலகின் நாலாபுறத்திலும் நிலைத்து நிற்பதற்கு அல்லாஹ்வின் பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் சரியான தீனை கடைபிடிப்பதற்கு அன்னார் வழி காட்டினார் என்பதே காரணமாகும். அவரது உபதேசங்களும் அறிவுரைகளும் இறை நெருக்கத்திற்கு அவர் கற்றுக் கொடுத்த வழிமுறைகளும் மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தன.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தான தாக்கத்தை செலுத்தியது என்றால் அதற்கு காரணம அன்னாரின் இறைபக்தியும் உளத்தூயமையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.

கராமத்

உளத்தூயமையும் இறைச்சிந்தனையிலேயே திளைத்திருப்பதும் இறையடியார்களின் இயல்பாகும். இந்த இயல்பின் உச்சத்திலிருந்த் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து கராமத்துக்கள் ஏராளமாக வெளிப்பட்டன. இப்னு கய்யூம் அல் ஜவ்ஸீவலிமார்களின் அதிக கராமத்துக்களுக்கு சொந்தக்கார்ர் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்கிறார்.
·         قال الإمام النووي : ما علمنا فيما بلغنا من التفات الناقلين وكرامات الأولياء أكثر مما وصل إلينا من كرامات القطب شيخ بغداد محيي الدين عبد القادر الجيلاني رضي الله عنه,

பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடைய இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை ஜீலானி ரஹ் அவர்கள் சொல்லிக் காட்டுவதுண்டு.

وقال عمر البزاز : خرجت مع سيدي الشيخ عبد القادر   إلى الجامع يوم الجمعة الخامس عشر من جمادي الاولى سنة 556  هـ فلم يسلم عليه أحد فقلت في نفسي : يا عجباً نحن كل جمعة لا نصل إلى الجامع إلا بمشقة من ازدحام الناس على الشيخ فلم يتم خاطري حتى نظر إلي الشيخ مبتسماً وهرع الناس إلى السلام حتى حالوا بيني وبينه فقلت في نفسي : ذاك الحال خيرٌ من  هـذا الحال فألتفت إلي مسابقاً لخاطري وقال يا عمر أنت الذي أردت  هـذا
உமருல் பஸ்ஸார் சொல்கிறார்; நான் ஷைகுடன் 556 வது வருடம் ஜமாதுல் அவ்வல் 15 வெள்ளிக்கிழமை அன்று ஜும் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றேன். அவருக்கு யாரும் சலாம் சொல்லவில்லை. நான் என் மனதுக்குள் பேசிக்கொண்டேன்! என்ன ஆச்சரியம்! எப்போதும் மக்கள் ஷைகுக்கு சலாம் சொல்ல முண்டியடித்து வருவார்கள். நெருக்கடியில்லாமல் இருக்காதே !
எதேச்சையாக ஷைகை பார்த்தேன் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அடுத்த கணம் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். எனக்கு அவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. அப்போது நான் இதற்கு முன் பிருந்த்து  போலவே இருந்திருக்கலாம் என்று என மனதிற்குள் எண்ணினேன். ஷைகு சொன்னார்கள் : உமரே! இதைதானே நீங்கள் விரும்பினீர்கள்.

கராமத்து எனும் அதிசயங்கள் வலி மார்களிடமிருந்து வெளிப்படுவது ச்கஜம். அது அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கிற சிறப்பு. நாம் கவனிக்க வேண்டியது இறைநேசர்களுடைய வாழ்க்கயை எப்படி இருந்த்து அவர்கள் என்ன சொன்னர்ர்கள் என்பதையும் மாகும்.

குடும்ப வாழ்க்கை
ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாத அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் பெருமானாரின் சுன்னத்து என்பது அப்போது தான் தீன் பரிபூர்ணத்துவம் அடையும் என்ற பெருமானாரின் அறிவுரையுமே அதற்கு காரணமாகும்.  நான்கு மனைவியரை திருமணம் செய்த ஜீலானி ரஹ் அவர்களுக்கு 27 ஆண் குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.

40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள். அவர்களுடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91 வது வயதில் வபாத்தானார்கள். அன்னாருடை அடக்கஸ்தலம் பக்தாதில் அவர்கள் பணியாற்றிய மதரஸா வளாகத்திலேயே உள்ளது.

  
·         قال الإمام النووي  وكان جميل الصفات شريف الأخلاق كامل الأدب والمروءة كثير التواضع دائم البشر وافر العلم والعقل شديد الاقتفاء لكلام الشرع وأحكامه معظما لأهل العلم مُكرِّماً لأرباب الدين والسنة, مبغضاً لأهل البدع والأهواء محبا لمريدي الحق مع دوام المجاهد ولزوم المراقبة إلى الموت. وكان له كلام عال في علوم المعارف شديد الغضب إذا انتهكت محارم الله سبحانه وتعالى سخي الكف كريم النفس على أجمل طريقة. وبالجملة لم يكن في زمنه مثله   (قلائد الجواهر


3 comments:

  1. 5-ந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதனை மனிதரின் வாழ்க்கையை மிக துல்லியமாக கட்டுரை காவியம் படைக்கும் உங்களைப்போன்ற அபார ஆலிம்கள்.உள்ளவரை .முஹ்யித்தீன்( ரழி) என்பவர் கற்பனை மனிதர். பிறக்க உம் இல்லை ,வாழஉம இல்லை. என பேச முனைகிற பொய்யன் பி ஜே வின் .அசட்டு துணிச்சலுக்கு மரண அடிகள் விழுந்துக் கொண்டேயிருக்கும் !

    ReplyDelete
  2. arumaiyaana k aturai ithu p ontra katuraikal athikamaaka ilaingarkalidam sentradaiya vendum aazthukkal janab abdul aziz bakavi

    ReplyDelete
  3. arumaiyaana katturai

    ReplyDelete