வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 25, 2023

செங்கோல் - கனமும் கற்பனையும்

فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ﴿٤٥ الشعراء﴾

  “மூஸா தனது தடியை போட்டார். அது அவர்களது சதியை விழுங்கியது”  அல்குர்ஆன் 26:45)

 மத்தியை ஆட்சியை செய்யும் பாஜகவினர் இந்திய வரலாற்றை தங்களது கருத்துக்களுக்கு ஏற்ப மாற்றி சொல்வதில் கெட்டிக்காரார்கள்.

அப்படி கெட்டிக்காரத்தனமாக இப்போது ஒரு கதையை கட்டி விட்டிருக்கின்றனர்.

அதுதான் நேருவின் செங்கோலின் கதை.

இயல்பாக இந்தியசு சுதந்திரத்தோடும் ஜனநாயகத்தோடும் அவர்களுக்கு எந்த தொடர்பும் நட்பும் கிடையாது என்பதை உணர்ந்திருக்கிற மீடியாக்கள் அவர்களது கதைக்குள்ளிருக்கும் போலித்தன்மையை ஆய்வு செய்து வெளிப்படுத்தி விட்டனர்.

முதலில்  அவர்கள் சொன்ன கதை என்ன என்பதை பார்ப்போம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 24 அன்று  அளித்த பேட்டியில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார் என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேட்டி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது

 இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவிடம் ஆகஸ்ட் 14, 1947 இரவு சுமார் 10:45 மணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாக இந்த செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, சுதந்திரத்திற்கு சற்று முன்பு, இந்தியாவின் கடைசி லார்ட்டாக இருந்த மவுண்ட்பேட்டன்தான் நேருவிடம் ஆட்சி மாறுவது தொடர்பாக கூறி உள்ளார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்கள் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைக் குறிக்கும் வகையில் விழா எடுக்க வேண்டும் நேருவிடம் கூறியுள்ளார்.

அப்போது சென்னையில் முதல்வராக இருந்த ராஜகோபாலசாரியிடம் ஆலோசனை மேற்கொண்ட நேரு, செங்கோல் குறித்து தெரிந்து கொண்டார். சோழர்கள் காலத்தில் இப்படி செங்கோல் இருந்தது. ஆட்சி மாறும் போது அதை மாற்றுவார்கள். அதை இப்போது நாம் பயன்படுத்தலாம். ஆங்கிலேயர் ஆட்சி முடிவிவிற்கு வந்ததன் அறிகுறியாக இதை செய்யலாம் என்று ராஜாஜி குறிப்பிட்டு உள்ளார்.

 இதையடுத்து அதேபோல் செங்கோலை பெற்றுக்கொள்ள நேரு ஒப்புக்கொண்டுள்ளார்.

நேரு ஒப்புக்கொண்டவுடன், ராஜாஜி உடனே செங்கோலை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை இந்த செங்கோலை உருவாக்குவதற்கான உதவிக்காக அணுகினார் ராஜாஜி. அவர்களின் ஆலோசனையின்படி சென்னையைச் சேர்ந்த "வும்மிடி பங்காரு செட்டி" நகைக்கடை நிறுவனம் இந்த செங்கோலை உருவாக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

 "ம்மிடி பங்காரு செட்டி" நிறுவனத்தின் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் இணைந்து இதை உருவாக்கினார்கள். இவர்கள் இப்போதும் உயிருடன் உள்ளனர்.

5 அடி நீளம் உள்ள இந்த செங்கோலின் தலை பகுதியில் நந்தி சிலை இருக்கும்.

இந்த செங்கோல் உருவாக்கப்பட்ட பின், ஆதீனத்தின் துணைத்தலைவர், நாதஸ்வர கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஓதுவார் உட்பட மூன்று பேர் புதிதாகத் தயாரிக்கப்பட்ட செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று நடந்த இந்த விழாவின் போது, ​​மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டது.

 பின்னர் அந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் கொடுத்தார். ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேரு வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் பாடல்கள் பாடப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அதன்பின் டெல்லியில் இருந்து அலஹாபாத் மியூசியத்திற்கு நேரு இறந்த பின் செங்கோல் கொண்டு செல்லப்பட்டது.

 தற்போது பபுதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக இந்த செங்கோல் டெல்லி கொண்டு செல்லப்பட்டு உள்ளது

 இது பாஜக கூறும் செய்தி  இது முழுக்க ஒரு கற்பனைச் செய்தியாகும்.

 உன்மை என்னவெனில்

 சுதந்திர தினத்திற்கு முதல் நாள் திருவாடுதுறை ஆதீனத்தை சார்ந்தவர்கள் நேருவிடம் சில புனித தீர்த்தங்களையும் செங்கோலையும் கொண்டு வந்து கொடுத்தனர். தீவிர நாத்திகரான நேரு சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியில் யாருடைய மனதையும் புன்படுத்த விரும்பாமல் அதைப் பெற்றுக் கொண்டார். அதை கூட பத்ரிகைகள் நேரு ஆன்மீக உணர்வின்பால் சாய்ந்தார் என்று கேலி செய்தனர்,

நேருவிற்கு தனிப்பட்டு தரப்பட்ட அந்த செங்கோல் நேருவின் வீட்டில் இருந்நத்து. பின்னர் அலகாபாத்தில் அவருடை பெயரில் அமைக்கப்பட்ட மியூசியத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது, விச்யம் இவ்வளவு தான்.

 இதை சோழ செங்கோல் என்ற அளவிற்கு கதை கட்டி உலாவ விட்டுள்ளனர் பாஜகவினர்.

 இதை தமிழத்திற்கான பெருமை என்றெல்லாம் மத்திய நிதி அமைச்சர் கவர்னர் மாளிகையில் வைத்து நேற்று கயிறு திரித்தார்.

 ஆனால் எப்போதுமே முன்னாள் பாரதப்பிரதமர் நேருவை வசை பாடிக் கொண்டிருக்கும்  பிரதமர் மோடி வகையறாக்கள் அவரது பெயரைச் சொல்லி ஒரு காரியத்தை முன் னெடுக்கிறார்கள் எனில் அதில் என்னவோ சூது இருக்கிறது என்பதை மிகச் சரியாக உணர்ந்து கொண்ட ஊடகங்கள் இது பற்றி ஆராய்ந்து பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துவிட்னர்.

 இதுபற்றிய ஆய்வு செய்த பிபிசி நிறுவனம் சுதந்திர காலத்து ஆவணங்களை மேற்கோள் காட்டி பல உண்மைகளை முன்வைத்திருக்கிறது.  

 ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி  மவுன்பேட்டன் நேருவிடம் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றித்தான் ஆட்சி மாற்றம் அடையாளப்படுத்தப் பட்டது.  

 இது பற்றி நேரு ராஜாஜியிடம் கேட்டார் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

 ராஜாஜி திருவாடுதுறை ஆதீனத்திடம் பேசினார் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அந்த நேரத்தில் ராஜாஜி மேற்குவங்க ஆளுநராக இருந்தார். அங்கு கலவரத்தில் பலர் பலியாகி வந்ததை தடுத்து நிறுத்துவதே அப்போது ராஜாஜியின் பெரிய வேலையாக இருந்த்து. ராஜாஜி சுதந்திர கொண்டாட்டத்திற்காக தில்லிக்கு வரவில்லை

 சுதந்திர தினத்திற்கு முதல் நாளான ஆகஸ்டு 14 ம் தேதி திருவாடுதுறை ஆதீனத்தை சார்ந்த 3 பேர் விமானத்தில் பயணம் செய்தனர் என்ற செய்தி பதிவாகியிருக்கிறது. ஆனால் அவர்கள் மவுண்ட் பேட்டனை சந்திதனர் என்பதற்கு எந்த ஆதராமும் இல்லை.

 இன்னொரு வகையில் மவுண்ட பேட்டன் அன்று காலை பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்று விட்டார். அன்று அங்கு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து விட்டு மாலை 7 மணிக்கு மேல் தான் தில்லி திரும்பியிருக்கிறார். அவரது பயண திட்டம் என்பது ஜூலையிலேயே முடிவு செய்யப்பட்டது.  அவரது நாட்குறிப்பில் ஒவ்வொரு தகவலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்த தகவல்களில் அவரை திருவாடுதுறை ஆதீனர்கள் சந்தித்தார்கள் என்பதற்கு எந்த தகவலும் இல்லை.

 பிபிசி மேலும் கூறுகிறது.

 புகைப்பட ஆதாரங்களைப் பார்த்தாலும், ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் நேருவிடம் செங்கோல் அளிக்கும் புகைப்படங்கள் உள்ளனவே தவிர, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பப் பெறுவது போன்ற புகைப்படங்கள் இல்லை.

 https://www.bbc.com/tamil/articles/cpedk38vlgvo

    நாட்டை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியில் ஒவ்வொரு வேலையை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்தக் கட்டுக்கதையும் செங்கோல் நாடகமும்.

 இதை காரணமாக கூறி – 30 ஆதீனகர்த்தார்க்கள் மட்டும்  புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனில் இது ஒரு அப்பட்டமான அநீதியாகும்.

 இந்திய நாட்டின் விடுதலைக்கும் விடுதலைக்குப் பிந்திய கட்டமைக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

 இதில் இன்னும் சொல்வதானால் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சென்னது போல இந்திய முஸ்லிம்கள் தங்களது மக்கள் தொகை சதவீத்த்த்றிகு மிக அதிகமாக சுதந்திரத்திற்காக பங்காற்றியுள்ளனர்.

 பல நூற்றுக்கணக்கான ஆலிம்கள் இந்திய சுதந்திரப் போராட்ட்த்தில் தூக்கிலடப்படுள்ளனர்.

 இந்த தியாக வரலாற்றில் ஒரு துளியளவேனும் இந்த ஆதின்ங்களுக்கு பங்கிருக்கிறது என்ற வரலாறு கிடையாது.

 அதிகாரம் கை மாறுகிற போது செல்வாக்கு உள்ளவர்களின் பக்கம் ஒட்டிக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே இந்த செங்கோல் நாடகம் அரங்கேறியிருக்கிற வாய்ப்பு இருக்கிறது.

 நிலமை அப்படியிருக்கிற தியாக சீலர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு நாடக நடிகர்கள் முன்னிலைப்படுத்துப்படுவது சுத்ந்திர போராட்ட்த்தையும் ஜனநாயகத்தையும் கேலி செய்வதாக அமையும்

 நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களுக்கும்  மதிப்பளிக்கப்பட வேண்டும்.

 இப்போது நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கிறவர்கள் அதன் புனிதத்தை அறிந்தவர்களா என்பது தான் அடுத்த மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 செங்கோல் என்பது வழுவாத  நீதியின் அடையாளமாகும்

 பழந்தமிராட்சி எனும் நூலில் தேவநேயப;பாவாணர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்

 செங்கோல் என்பது அரசுச் சின்னங்களுள் ஒன்றாகும். மன்னனுக்கு மகுடமும், அரியணையும் போன்றே செங்கோலும் இன்றியமையாததாகும். மன்னனின் ஆட்சி நேர்மையானதாகவும், நெறி வழுவாததாகவும் அமைய வேண்டும் என்பதன் பொருட்டே செங்கோல் எனும் நேரிய தண்டு அரசன் வீற்றிருக்கும் போதெல்லாம் கையில் காணப்படும்

 செம்மையான கோல் என்பது தான் செங்கோல் என்று அழைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள்கள் நீதியில் வளைந்து விடக் கூடாது என்பது இதன் கருத்து. வளையாத நீதிய கடைபிடிப்பேன் என்பதற்கு அடையாளமாகவே ஆட்சியாளர்கள் செங்கோல் ஏந்தியிருப்பார்கள்.

 சிலப்பதிகாரத்தில், செய்யாத தவறுக்காக கோவலனைத் தண்டித்தமையால் பாண்டியன் அறம் வழுவினான். இதனால் அவன் செங்கோல் வளைந்தது என்றும், பின்னர் தன் உயிரைக் கொடுத்து வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் நிமிர்த்தினான் என்றும் கூறப்பட்டுள்ளது.

 செங்கோல் என்பது தான் அரபியில் அஸா என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

 ஆட்சி செய்யப்படும் பகுதியில் நீதி பராமரிக்கப்படும். குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு அடையாளமாகவே ஆட்சியாளர்கள் ஜும் ஆ மேடையில் வாள் ஏந்தி யிருந்தார்கள். அல்லது அஸா எனும் குச்சியை கையில் பிடித்திருந்தனர்.

 கையில் கைத்தடி பிடித்திருக்கும் பழக்கம் குறித்து இமாம் குர்துபி அது ஒரு சிறந்த பாரமபரியம். என்று கூறூகிறார்.

 قال القرطبي: والإجماع منعقد على أن الخطيب يخطب متوكئًا على سيف أو عصا، فالعصا مأخوذة من أصل كريم ومعدن شريف، ولا ينكرها إلا جاهل، وقد جمع الله لموسى عليه السلام في عصاه من البراهين العظام والآيات الجسام ما آمن به السحرة المعاندون، واتخذها سليمان عليه السلام لخطبته وموعظته وطول صلاته، وكان ابن مسعود رضي الله عنه صاحب عصا النبي صلى الله عليه وسلم وعنزته، وكان يخطب بالقضيب، وكفى بذلك فضلًا على شرف حال العصا، وعلى ذلك الخلفاء وكبراء الخطباء، وعادة العرب العرباء الفصحاء اللسن البلغاء أخذ المخصرة والعصا والاعتماد عليها عند الكلام وفي المحافل والخطب

 கையில் தடி வைத்திருப்பதன் நன்மைகளை ஹஸன் பஸரி ரஹ் கூறுகிறார்

 قال الحسن البصري: في العصا ست خصال، سنة للأنبياء وزينة الصلحاء وسلاح على الأعداء وعون للضعفاء وغم المنافقين وزيادة في الطاعات،

 

ويقال: إذا كان مع المؤمن العصا يهرب منه الشيطان، ويخشع منه المنافق والفاجر، وتكون قبلته إذا صلى، وقوة له إذا أعيا، والعصا تتخذ قبلة في الصحراء.

 

 உலகின் மற்ற பல பாகங்களிலும் கூட கம்பீரத்திற்கும் நீதிக்கும் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்படுகிறது.

 பண்டைய கிரேக்க காலத்தில் ஆட்சியாளர்களும் நீதிபதிகளும் நீண்ட தடிகளை கையில் வைத்திருந்தனர். இத்தகைய சில சிலைகள் பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.

 பண்டைய எகிபதில் பரோவா ஆட்சியாளர்கள் கைகளில் செங்கோல் வைத்திருந்த்தாக சான்றுகள் கூறுகின்றன.

 எகிப்திகள் ம்மிகள் வைக்கப்பட்டிருக்கிற மீயூசியத்தின் வாசலில் தங்க தடியை பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்தேன்.  

 பைபிளிலும் தவ்ராத்திலும் செங்கோல் என்ற வார்த்தை இருக்கிறது.

 யாகூப் (அலை) தன் மகன் யூதாவின் பற்றி பேசும் போது “ யூதாவிடமிருந்து செங்கோல் பறிக்கப்படாது.  என்று கூறியதாக பைபிள் கூறுகிறது.

 செங்கோல் வைத்திருப்பதன் பது வெறுமனே ஒரு குச்சியை அல்லது தங்க குச்சியை வைத்திருப்பது அல்ல.

 இது இப்போதைய ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டும்.

 பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறள் கூறுகிறது.

 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.

 கலைஞர் கருணாநிதி இக்குறளூக்கு விளக்கம் எழுதுகிறார்.

 நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

 இதில் கூறப்பட்டுள்ள செங்கோல் என்பதற்கு நடுநிலை தவறாமல் ஆட்சி செய்வது என்று பொருளாகும்.

 இப்போது செங்கோல் வைக்கப் போகிறோம் என்று கூறுகிற ஆட்சியாளர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

 எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை சற்றும் பொருத்தமற்ற சாமாணிய மக்களால் என்ன குற்றம் செய்தார் என்று கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு காரணத்தை கூறி ஒரு நீதிபதி பறிக்கிறார். அந்த நீதிபதிக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

 உச்சநீதிமன்றமே திகைத்துப் போய் அந்த உத்தரவை நிறுத்தி வைக்கிறது.

 மத்தி அமைச்சராக அனைத்து தரப்பு மக்களின் நன்மைக்கும் பொறுப்பேற்க வேண்டிய உள்துறை அமைச்சர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை இரத்து செய்வோம் என்று பொதுக் கூட்ட்த்தில் பேசுகிறார்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குவதை கொஞ்சமும் கூச்சமில்லாமல் ஒரு தெய்வீக காரியம் போல செய்து கொண்டிருக்கிற பாஜக வினர் செங்கோலை வைப்பதாக கூறுகின்றன.  

 பாஜக அரசின் நீதிக்கு எதிரான செய்திகளை பட்டியலிட்டால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்.

 நீதிமிக்க ஆட்சியாளர்களுக்குத்தான் செங்கோல் பிடிக்கிற தகுதி இருக்கிறது. 

இஸ்லாமிய உலகும் ஐரோப்பிய உலகும் – அதாவது முஸ்லிம்களும் கிருத்துவர்களும் புகழும் ஆட்சியாளர் சலாஹுத்தீன் அய்யூபி

 விக்கீபீடியா சலாஹுத்தீனைப் பற்றி கூறுகிறது.

 சலாகுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர மற்ற எவரையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களைத் தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களைத் துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார்.  மேலும் இவரின் எதிரிகள் இசுலாமியர்களைத் தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களைத் தாக்கியதில்லை.

 இவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் கிருத்துவ மன்னரன ரிச்சர்ட்டை விட சலாகுத்தீன் அதிகம் பிரபலமானார்.

 இவ்வளவு தூரம் புகழப்படுகிற சலாஹுத்தீன் அய்யூபி தன் கையாலயே ஒரு கிருத்துவ இளவரசனை கொன்றார். 

 1187 வருடம் ஹித்தீன் யுத்தத்தில் சிலுவை யுத்தக் கார்ர்களை சலாஹுத்தீன் தோற்கடித்தார் .  அது முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி.

 யுத்தம் முடிந்த பிறகு எதிரிப்படைகளின் அரசன் கை லுசினான் Guy of Lusignan என்பவரும் அவருடைய சகோதரரும் கிர்க் பிரதேசத்தின் அரசன் ரொனால்ட என்பவரும் சலாஹுத்தீன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர்வெற்றி கிடைத்தால் ரொனால்டை தனது கையால் கொல்லப் போவதாக சலாஹுத்தீன் சபதம் செய்திருந்தார். காரணம் ஏராளமான முஸ்லிம்களை மிக அநீதியாக ரொனால்ட் கொலை செய்திருந்தான். 

 தனது முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த் அரச பாணமான ரோஜா தண்ணீரை வழங்குமாறு சலாஹுத்தீன் உத்தரவிட்டார். அவர் மன்னர் கை லூசினான் அவர்களுக்கு கொடுத்தார். லூசினான், அதை தான் குடித்த பிறகு ரொனால்டுக்கு கொடுத்தார். இதை பார்த்தவுடன் சலாஹுத்தீன் சொன்னார். பாணத்தை உனக்குத்தான் கொடுத்தேன். ரொனால்டுக்கு  கொடுக்க நான் சொல்லவில்லை. இதில் எனது உடன்படிக்கை எதுவும் இல்லை என்றார்  ரொனால்டு தண்ணீர் குடிக்கட்டும் ஆனால் அவருக்கு தான் தண்ணீர் கொடுக்க வில்லை என்பதை தெளிவு படுத்தினார் என்று வரலாறு கூறுகிறது.

 

بعد هذا النصر جلس صلاح الدين في خيمته، وأمر بإحضار الملك غي  وأخوه وأرناط، فلمّا مثلوا أمامه قدّم للملك شربة من جلاّب وثلج، فشربها وكان على أشد حال من العطش، ثم ناولها لأرناط، فقال صلاح الدين للترجمان: «إنما ناولتك، ولم آذن لك أن تسقيه، هذا لا عهد له عندي

 இதன் பின்னணியில் ஒரு செய்தி இருக்கிறது.

 அரசர்கள் கைதிகளுக்கு உணவளிப்பார்கள் எனில் அக்கைதிகள் மன்னிக்கப்படுவார்கள் என்பது நடைமுறை வழக்கமாக இருந்த்து.

 ரொனால்டு தனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விட்ட்தாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக சலாஹுத்தீன் கையாண்ட எச்சரிக்கை இது.

 அதன் பிறகு சலாஹுத்தீன் ரெனால்டுக்கு மரண தண்டனையை அறிவித்தார். தனது வாளாலேயே அவனுக்கு தண்டனை வழங்கினார்

  حتى أمر بإحضار أرناط، وأوقفه بين يديه ثم قال له: «نعم أنا أنوب عن رسول الله في الانتصار لأمته»،   ) . البداية والنهاية(

 அதன் பிறகு சலாஹுத்தீன் மன்னர் லூசினான்  இடம் கூறினார்.

 நீங்கள் பயப்படாதீர்கள். உனது மக்களில் யாரும் எஞ்சியிருந்தால் அவர்களுக்கு உம்மை அரசராக்குவேன். அதில் எனது பனத்தால் படையால் உதவி செய்வேன். ரொனால்டை நான் கொன்றதற்கு காரணம் அவனுடைய வரம்பற்ற அக்கிரமத்தினாலாகும். முஸ்லிம் மன்னர்கள் பலரும் அவனுடன் உடன்படிக்கை செய்தனர். அவன் கட்டுப்படவில்லை. நானும் அதிகாரத்தை பெற்ற பிறகு எனது தூதரின் மூலம் ஏராளமான அன்பளிப்புக்களை கொடுத்து அவனிடம் ஒப்பந்தம் செய்தேன். அன்பளிப்புகளை பெற்றுக் கொண்டு ஒருவருக்கும் இடையூறு செய்யமாட்டேன் என்று உறுதியளித்தான். ஆனால் மூன்றே நாட்களில் டமாஸ்கஸுக்கு சென்ற முஸ்லிம் பயணிகளை அவன் கொள்ளையடித்தான கொலை செய்தான். இதன் காரணமாகவே அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

  لا تخاف يا ملك فلن تموت اليوم، بل تحيا ولو بقي في قومك بقية كنت أملكك عليهم وأساعدك بمالي ورجالي طول أيام حياتك. إن سبب ما فعلته به أن الكرك كانت طريق التجار والمسافرين فكان يعتدى على القوافل بظلم وعنف، وكان ملوك المسلمين نور الدين وغيره يطلبون الصلح معه ليخففوا ضرره على المسلمين، فكان يوافقهم مرة ولا يعتدي على التجار وألف مرة يعتدي. فلما تملّكت وحكمت البلاد أرسلت له وهاديته بمال كثير وخلع.. فحلف لرسولي أنه لن يؤذي المسلمين وسيترك التجار بلا ضرر ويمهد لهم الطريق ولن يعتدي أي واحد من أصحابه عليهم، وبعد الصلح بثلاثة أيام عبرت قافلة قاصدة دمشق فساقها بجمالها ورجالها وأموالها وذهب بها إلى الكرك فأسر رجالها وأخذ الأموال فلما عرفت بأمر نقوضه العهد كتمت الغيظ ونذرت لله أنني متى ظفرت به أذبحه واقطع رقبته، فلا تلومني يا ملك

 சலாஹுத்தீனின் நீதி இந்த வகையிலானதாக இருந்தது.

 குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்த போதும் யுத்த்த்தில் தோற்றவருக்கு சிறப்பான மதிப்பளித்தார்.

 இத்தகையோர் தான் செங்கோல் செலுத்திய நீதியாளர் ஆவார்கள்.

 செங்கோலை வெறும் கோலாக கையில் வைத்துக் கொண்டு அக்கிரமம்

செய்பவர்களை அல்லாஹ் அதிக காலத்திற்கு அனுமதிப்பதில்லை

 திருக்குர் ஆன் மற்றும் ஒரு கோலைப் பற்றி சொல்கிறது.

 அது மூஸா அலை அவர்களது கையிலிருந்த கோல்ز

 பிர் அவன் தங்க கோலை வைத்துக் கொண்டு நீதி செலுத்தாத போது மூஸா அலை அவர்களிடம் சாதாரண மரத்தால் ஆன தடி இருந்த்து.

 அந்த தடியை அல்லாஹ் பிர் அவனுக்கு புத்தி புகட்ட ஏற்பாடு செய்தான்.

 அவன் திருந்தாத போது அந்த தடியாலேயே பிர் அவ்ன் அழிக்கப்பட்டான்.

 فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ ۖ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ ﴿٦٣ الشعراء﴾

 செங்கோலை வைத்துக் கொண்டு நீதியாக நடக்க த்தவறி பிர் அவ்ன் செங்டலில் ஆழ்த்தி அழிக்கப்பட்டன்.

 இறைவனின் இந்த நீதி எல்லா காலத்திற்கும் எல்லா இட்த்திற்கும் பொருந்தும்

புதிய நாடாளுமன்ற கட்டிட்ட்த்தில் செங்கோல் வைப்பவர்கள் முதலி இதை புரிந்து கொள்ள வேண்டும்.

 எல்லாம் வல்ல இறைவன் நமது நாட்டின் நாடாளுமன்ற நல்லாட்சியை பாதுகாப்பானாக

3 comments:

  1. Anonymous5:43 PM

    Masha Allah. அருமையான பதிவு

    ReplyDelete
  2. Anonymous8:02 PM

    மாஷாஅல்லாஹ்.எவ்வளவு தகவல் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்

    ReplyDelete
  3. பிறதி ஒவ்வொரு வாரமும் தங்களது பயான் எனும் "செங்கோல்" அருமை, பாரகல்லாஹு லகும்...

    ReplyDelete