இன்று சர்வதேச தொலைக காட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
. 1996-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையால் இந்த நாள் உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவிக்கப்பட்டது
தொலைக்காட்சிகளின் முக்கியத்துவத்தை
உணர்த்துவதற்காக இப்படி ஒரு தினத்தை தேர்வு செய்த்தற்கு இரண்டு காரணங்களை பிரதானமாக
ஐநா கூறியது .
1 மக்களிடம் ஒரு பொதுக்கருத்தை
உருவாக்குவதற்கு அது உதவுகிறது.
2 உலகளாவிய அளவில் மக்களிடம்
உரையாடலை அது வளர்க்கிறது.
மிக
சரியான ஒரு முடிவுதான்.
உண்மையில்
தொலைக்காட்சி வந்த பிறகு உலகம் ஒரு கிராம்மாக சுருங்கி விட்டது. எந்த ஒரு மூலையில்
நடைபெறும் செய்தியும் நேரடியாக சுடச் சுட நம் வீட்டுக்கு வந்து விடுகிறது.
அதனால் தொலைக்காட்சி
இன்றைய நவீன உலகில் மிக அத்தியாவசியமான ஒரு தேவையாக ஆகிவிட்டது.
இது
தொலைக்காட்சியின் நன்மையை கூறினாலும் அதன் தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன.
ஆரம்பத்தில்
தொலைக்காட்சி பழக்கத்திற்கு வந்த போது ஆலிம்கள் மிக கடுமையாக அதை எதிர்த்தனர்,. இப்போதும் எதிப்பவர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி பெட்டிகள் இல்லாத முஸ்லிம் வீடுகளும் கிராமங்களும் கனிசமாக இருக்கின்றன.
ஆலிம்களின் ஆரம்ப கால எதிர்ப்பை சிலர் கேலி செய்ததுண்டு அது தவறானது. இப்போதும்
கூட தொலைக்காட்சி பெட்டி பற்றிய இஸ்லாமின் சட்டம் அதை எல்லா வகையிலும் ஆதரிப்பதோ ஏற்றுக் கொள்வதோ அல்ல;
ஹராமான
காட்சிகளை பார்ப்பது கேட்பது ஹராம்
அனுமதிக்கப்பட்ட விவகாரங்களுக்கு அது
ஹலால் என்பதே ஆகும்.
அதே
நேரம் தொலைக்காட்சி பெட்டி கொள்கை பண்பாட்டில் மிக மோசமான ஆபத்துகளை விளைவிக்க கூடியது என்பதே ஆகும்.
ஆலிம்கள்
தொலைகாட்சியை எதிர்த்த்தற்கு முதல் காரணம்
அது
புகைப்படம் சார்ந்த்து என்பதாகும்
இஸ்லாம்
புகைப்படங்கள்
வைப்பதை தடை செய்திருக்கிறது.
முஹம்மது
நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய ஷரீஅத்துக்களின் புகைப்படங்கள் சிலைகளுக்கு அனுமதி இருந்த்து.
சுலைமான
அலை அவர்களுக்காக ஜின்கள் சிற்பங்களை செய்து தரும் என்று குர் ஆன் கூறுகிறது.
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ.
முன்னோர்களின் புகைப்படங்கள்
மற்றும் அவர்களுடைய சிலைகளின் வழியாகவே மனித
சமூகத்தில் சிலைவணக்கம் தோன்றியது.
ஆகவே இறுதி ஷரீத்தான இஸ்லாமில்
ஷிர்க்கின் அனைத்து வழிகளையும் அடைக்கிற வகையில் உயிர் பிராணிகளை ஓவியமாக வரைவதற்கும்
சிலைகளாக வடித்து வைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடை செய்தது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்
மலக்குகள் வரமாட்டார்கள்.
عن بسر بن سعيد، عن
زيد بن خالد: عن أبي طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم قال: إن رسول الله
صلى الله عليه وسلم قال: "إن الملائكة لا تدخل بيتًا فيه صورة - رواه البخاري في كتاب اللباس
உயிர் கொடு என்று நிர்பந்தப்படுத்தி வேதனை செய்யப்படும்
عن عبد الله بن عمر
رضي الله عنهما قال: قال صلى الله عليه وسلم: "إن الذين يصنعون هذه الصور
يعذبون يوم القيامة، يقال لهم: أحيوا ما خلقتم- رواه البخاري في كتاب اللباس
பெருமானார்
(ஸல்) அவர்களின் வீட்டிற்கு ஜிப்ரயீல் அலை வருவதை தடுத்த திரைச்சீலை
ஓவியங்கள்
.عن أبي هريرة رضي الله عنه قال: قال صلى الله عليه وسلم: "أتاني جبريل فقال: إني أتيتك الليلة، فلم يمنعني أن أدخل عليك البيت إلا أنه كان في البيت تمثال رجل، وكان في البيت قرام ستر فيه تماثيل، وكان في البيت كلب، فأمر برأس التمثال الذي في البيت يقطع فيصير كهيئة الشجرة، وأمر بالستر يقطع فيجعل في وسادتين منتبذتين ويطآن، وأمر بالكلب يخرج. ففعل رسول الله صلى الله عليه وسلم. رواه أحمد وأبو داود والترمذي
பெருமானாரின் இந்த வழிகாட்டுதல் காரணமாக இஸ்லாமிய உலகு புகைப்படம் மற்றும் சிலைகள் ஆகியவற்றிலிருந்து வெகு தூரம் விலகி நின்றது.
ஒன்றில்
தீமை அதிகமாக இருக்குமானால் அது தவிர்க்கப்பட வேண்டும்
يَسْأَلُونَكَ
عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ
لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ} [الأنعام
அல்லாஹ்
கூறிய இந்த வழிகாட்டுதல் மிக நமது வாழ்க்கைக்கு மிக அடிப்படையானது.
எந்த
ஒன்றிலும் சில நன்மைகள் இருந்து தீமைகள் அதிகமாக
இருக்குமானால் அது தவிர்க்கப்பட வேண்டும்.
கொஞ்சம் வசதி வந்தவுடன் டிவி யின் சைஸை அதிகப்படுத்திக்
கொள்ள ஆசைப்படுகீற நாம் – அது என்ன நோக்கத்திற்காக அதிகம் பயன்படுகிறது என்பதில் நிச்சயம்
கவனம் செலுத்தியாக வேண்டும்.
தொலைகாட்சி தினம் கொண்டாடப்படுகிற நாளில் அதன் பயன்பாட்டு
நியாயங்களை நாம் நிச்சயமாக பரிசீலித்தே ஆக வேண்டும்.
தொலைக்காட்சியின் தீமைகள் என்று அறிவியலாலர்களே பட்டியலிடுகிற
பல அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் பிரதானமானது. 6
- அதிக நேரம் தொலைக்காட்சியை அருகிலிருந்து அல்லது தொடர்ந்து பார்ப்பதால்
கண் பார்வை பாதிக்கப்படுகிறது..
- படிப்பு
வணக்க வழிபாடு மற்றும் பிற
முக்கியமான விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பி, கவனக்குறைவை ஏற்படுத்கிறது.
- குழந்தைகளுக்கு, அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை வெகுவாகக் குறைக்கும்.
- தொலைக்காட்சி பார்ப்பது ஒரு செயலற்ற அனுபவம் என்பதால், குழந்தைகள் மற்றும்
பெரியவர்களின் படைப்பாற்றல் திறனை - உழைப்பை பாதிக்கக்கூடும்.
- அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது சமூக மற்றும் நடத்தை (ஒழுக்கம்) சார்ந்த பல
பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. ( பெரியோர்களை - விருந்தினர்களை மதிக்காமல் போவது- ஆபாச
தூண்டுதல்களுக்கு ஆளாவது போன்ற தீமைகளுக்கு காரணமாகும்.)
- செய்திகளின் தாக்கம்: செய்திகளை உண்மையை முழுமையாக
கூறாமல் அரைகுறையாக கூறுவது, போலித்தனமான செய்திகளை கூறூவது ஆகியவை தவறான
சிந்தனைகளுக்கு வழி வகுக்கும்.
இந்த
ஆறு தீமைகளை முஸ்லிம் அறிஞர்கள் சொல்ல வில்லை. அறியவில் ஆய்வுகளும் ஏ ஐ என்ப்படும்
செயற்கை நுன்னறிவு தளமும் சொல்கின்றன.
இன்றைய
சூழலில் தொலைக்காட்சி பார்க்காதே என்று சொல்வது பொருத்தமற்றதாக தோன்றலாம். – சிலர்
அதை பிற்போக்கு தனமானதாக கருதலாம்.
ஆனால்
தொலைக்காட்சி பார்ப்பதில் சில கட்டுப்பாடுகளையும் விழிப்புணர்வைய்ம் நாம்
கடைபிடித்தே ஆகவேண்டும்
நம்முடையவும்
நம்முடைய சந்த்திகளுடையவும் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளுக்கும் இது அவசியம்.
நாம்
பிரதானமாக தவிர்க்க வேண்டியது
தொலைக்காட்சிக்கு
என்று நேர நிர்ணயம் செய்வது.
எப்போதும்
வீட்டில் டி வி ஓடிக் கொண்டிருக்கும் என்ற நிலையை தவிர்க்க வேண்டும்.
அது
கண்பார்வையை பாதிக்கும் என்கிறது அறிவியல்
சிறிது
நேரம் டி வி பார்த்து விட்டு வேறு வேலைகளை கவனிப்போம்.
இரவு
தூங்க செல்வதற்கு முன்பதாக டி வி பார்ப்பதை தவிர்ப்போம். அது தூக்கத்தை தடுக்கும்
என்கிறார்கள் ஆய்வாளர்கள்
தூரத்திலிருந்து
டி வி பாருங்கள் வெளிச்சத்தில் டி வி பாருங்கள்.. பலருக்கும் கண்பார்வை குறைவு
ஏற்பட இது காரணமாக இருந்திருக்கிறது என்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்
நாம்
நமது கண்ணுக்கு கண்ணான மலக்குகளை வீட்டிற்குள் வருவதற்கு கொஞ்ச நேரமாவது தர வேண்டாமா ?
இந்த துஆ வேண்டாமா?
روى أبو هريرة رضي الله عنه، أن النبي -صلى الله عليه وسلم- قال: (ما من يوم يصبح العباد فيه، إلا ملكان ينزلان، فيقول
أحدهما: اللهم أعط منفقا خلفا، ويقول الآخر: اللهم أعط ممسكاً تلفاً) متفق عليه.
நமது நன்மைகளை அல்லாஹ்விடம் கொண்டு செல்கிறவரக்ள் மலக்குகள்.
விரைவில் பரிசை பெற்று தருபவர்கள்
حديث أبي هريرة رضي الله عنه
نَّ لِلَّهِ مَلائِكَةً يَطُوفُونَ في الطُّرُقِ يَلْتَمِسُونَ أهْلَ
الذِّكْرِ، فإذا وجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنادَوْا: هَلُمُّوا إلى
حاجَتِكُمْ قالَ: فَيَحُفُّونَهُمْ بأَجْنِحَتِهِمْ إلى السَّماءِ الدُّنْيا،
قالَ: فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ -وهو أعْلَمُ منهمْ- ما يَقولُ عِبادِي؟ قالوا:
يَقولونَ: يُسَبِّحُونَكَ ويُكَبِّرُونَكَ، ويَحْمَدُونَكَ ويُمَجِّدُونَكَ، قالَ:
فيَقولُ: هلْ رَأَوْنِي؟ قالَ: فيَقولونَ: لا واللَّهِ ما رَأَوْكَ، قالَ:
فيَقولُ: وكيفَ لو رَأَوْنِي؟ قالَ: يقولونَ: لو رَأَوْكَ كانُوا أشَدَّ لكَ
عِبادَةً، وأَشَدَّ لكَ تَمْجِيدًا وتَحْمِيدًا، وأَكْثَرَ لكَ تَسْبِيحًا، قالَ:
يقولُ: فَما يَسْأَلُونِي؟ قالَ: يَسْأَلُونَكَ الجَنَّةَ، قالَ: يقولُ: وهلْ
رَأَوْها؟ قالَ: يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ
لو أنَّهُمْ رَأَوْها؟ قالَ: يقولونَ: لو أنَّهُمْ رَأَوْها كانُوا أشَدَّ عليها
حِرْصًا، وأَشَدَّ لها طَلَبًا، وأَعْظَمَ فيها رَغْبَةً، قالَ: فَمِمَّ
يَتَعَوَّذُونَ؟ قالَ: يقولونَ: مِنَ النَّارِ قالَ: يقولُ: وهلْ رَأَوْها؟ قالَ:
يقولونَ: لا واللَّهِ يا رَبِّ ما رَأَوْها، قالَ: يقولُ: فَكيفَ لو رَأَوْها؟
قالَ: يقولونَ: لو رَأَوْها كانُوا أشَدَّ مِنْها فِرارًا، وأَشَدَّ لها مَخافَةً،
قالَ: فيَقولُ: فَأُشْهِدُكُمْ أنِّي قدْ غَفَرْتُ لهمْ، قالَ: يقولُ مَلَكٌ مِنَ
المَلائِكَةِ: فيهم فُلانٌ ليسَ منهمْ، إنَّما جاءَ لِحاجَةٍ، قالَ: هُمُ
الجُلَساءُ لا يَشْقَى بهِمْ جَلِيسُهُمْ
له معقبات من
بين يديه ومن خلفه يحفظونه من أمر الله} (الرعد:11)،
وتفسير ذلك
كما جاء عن مجاهد: " ما من عبد إلا وله ملك موكّل به، يحفظه في نومه ويقظته
من الجن والإنس والهوام، فما منهم شيء يأتيه يريده إلا قال: وراءك. إلا شيء يأذن
الله فيه فيصيبَه".
இந்த மல்லுகளோடு நமக்கு நட்பு வேண்டு மெனில்
தொலைக்காட்சி பெட்டிக்கு அதிக நேரம் தருவதை தவிர்க்க வேண்டும்.
ஹுதைபா ரலி அவர்கள் தன் அம்மாவிடம் நான் பெருமானாரை மஃக்ரிப்க்கு
பின் சந்தித்து நமக்காக துஆ கேட்குமாறு வேண்டு
விட்டு வருகிறேன் என்றார், பிறகு பெருமானாருடன் மஃரிபு தொழுதார். ஆனால் இஷா தொழுது
விட்டுத்தான் பெருமானார் அவரை சந்தித்தார்கள் என்று அந்த ஹதீஸ் தொடர்கிறது.
பிரபல தொலக்காட்சி அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள்.
என்ன காரணம் என ஆய்வு செய்த போது என் வீட்டில்
சாட்டிலைட் தொடர்பை ஏற்படுத்தி சில டிவிக்களை காண்கிற வசிதியை ஏற்படுத்திய போது என்
பெற்றோர்கள் நாடகம் பார்க்க பழகியிருந்தார்கள். அதனால் அவர்களுடைய பிபி அதிகரித்திருக்கிறது
என்பதை அறிந்து கொண்டோம் என்று கூறுயிருந்தார் .
நாகரீக உலகத்தின் இன்னொரு வக்கிர புத்தி இது.
அதை வெட்க மின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது எந்த வகையில் அறிவுடமையும் நாகரீகமும் ஆகும்.
பரபரப்பிற்காக பாதி உண்மையை சொல்கின்றன
படிப்பு பாழாக கூடாது.
தொலைக்காட்சி சிறுவர்களின் நினைவு கூர்மை படுவதை தடுக்கிறது
என்று பிரதான ஆய்வுகள் சொல்கின்றன.
12 வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெறுகிற பல மாணவர்களும் நாங்கள்
தொலைக்காட்சியை ஒதுக்கி வைத்து விட்டோம். என்று சொல்வதும் சிலருடைய பெற்றோர் நாங்கள்
தொலைக்காட்சியை விற்று விட்டோம் என்று சொல்வதையும் நாம் ஆண்டு தோரும் காண்கிறோம்.
ஆலிம்கள் தொலைக்காட்சி வேண்டாம் என்றூ சொன்ன போது அதை கேலி செய்த
சிலர் இப்போது கல்வியாளர்கள் தொலைக்காட்சியை தவிர்த்து விடுங்கள் என்று சொல்வதை கொண்டாடுகீறார்கள்.
நம்முடைய பிள்ளைகளின் படிப்புக்கு தடையாக நம் வீட்டு தொலைக்காட்சி
அமைந்து விடக் கூடாது.
வீட்டில் நாம் தொலைக்காட்சி பார்ப்பதற்Kஉ கட்டுப்பாடுகளை கடை
பிடித்தால் தான் நமது பிள்ளைகள் படிப்பில் உயர முடியும் என்பதை கவனத்தில் கொள்ல வேண்டும்.
வீட்டில் தனிமையாகவோ குடும்பத்தோடு
அமர்ந்தோ ஆபச காட்சிகளை பார்ப்பது எந்த வகையிலும் நாகரீகத்திற்கு பொருத்தமானது அல்ல
தொலைக்காட்சி பெட்டி நம்
வாழ்வில் ஒரு தொல்லை காட்சிப் பெட்டியாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment