வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 11, 2024

நாயகத் தோழர்களும் அவர்களின் நாயகமும்

 إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ

இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் மறைந்து இன்றோடு 1432 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஹிஜ்ரீ 13 ம் ஆண்டு இதே போன்றதொரு ஜமாதில் ஆகிர் மாதத்தின் 22 ம் பிறையில்  பெருமானார் (ஸல்) அவர்களைப் போலவே ஒரு திங்கட்கிழமையில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் வபாத்தானார்கள். பெருமானாரைப் போலவே அவர்களுடைய வயதும் 63 தான்.

இந்த உலகில் ஒரு நண்பரை நேசித்து அவருக்காக வாழ்வையும் உயிரையும் அர்ப்பணிக்கிற நண்பர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் நண்பரைப் போலவே சிந்திக்கிற நண்பரைப் போலவே செயல்படுகிற ஒரு நண்பராக அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களைப் போல யாருக் இருக்க முடியாது.

ஒரே சிந்தனை

ஹிஜ்ரீ 6 ம் வருடம் மக்காவின் எதிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஹுதைபிய்யா என்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை நடை பெற்றது. அந்த உடன்படிக்கையில் எதிரிகளுக்கு சாதகமான பல அம்சங்கள் இருந்தன. முஸ்லிம்கள் உம்ராவிற்காக நிய்யத் செய்து மக்காவின் வாசலுக்கு வந்த பிறகும் அதை நிறைவேற்ற முடியாமல் மக்காவின் எதிரிகள் தடுத்துவிட்ட கவலையும் ஒரு அநீதியான உடன்படிக்கைகு ஒத்துக்கொள்கிற நிலையும் நபித்தோழர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. ஆனால் யாரும் வெளிப்படையாக பேசிக் கொள்ள தயங்கினர் . சத்தியத்தின் பெருங்குரலான ஹஜ்ரத் உமர் ரலி அவர்களால் அதை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து “ நம்மை கோழைகளாக காட்டுகிற ஒப்பந்தம் தேவைதானா ? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஒற்றை வாசகத்தில் பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்.

இந்த வார்த்தைக்கு மேல் அங்கு நிற்கிற சக்தி உமர் ரலி அவர்களுக்கு இருக்க வில்லை. அவர் அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் மனதிலிருந்த ஆதங்கம் தீர வில்லை. அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை அணுகி “ நம்மை கோழைகளாக காட்டுகிற ஒப்பந்தம் தேவைதானா ? என்று கேட்டார்

என்ன ஆச்சரியம் !

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களது நாவிலிருந்தும் அதே பதில் வந்த்து.

அவர் அல்லாஹ்வின் தூதர்.

புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் ஒரு பகுதி இது

فقال عمر بن الخطاب: فأتيت نبي الله صلى الله عليه وسلم فقلت: ألست نبي الله حقًّا، قال: «بلى»، قلت: ألسنا على الحق، وعدونا على الباطل، قال: «بلى»، قلت: فلم نعطي الدنية في ديننا إذن؟ قال: «إني رسول الله، ولست أعصيه، وهو ناصري

قال: فأتيت أبا بكر، فقلت: يا أبا بكر، أليس هذا نبي الله حقًّا؟ قال: بلى، قلت: ألسنا على الحق، وعدونا على الباطل؟ قال: بلى، قلت: فلم نعطي الدنية في ديننا إذن؟ قال: أيها الرجل، إنه لرسول الله صلى الله عليه وسلم، وليس يعصي ربه، وهو ناصره، ..   

ஒரே செயல்

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ அதையே செய்பவராக இருந்தார்கள். பயணங்களின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தில் அவர்களும் ஓய்வெடுப்பார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் உட்கார்ந்த இடத்தில் அவர்களும் உட்கார்ந்த் எழுவார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் வஃபாத்தவதற்கு சற்று முன்பாக உஸாமா ரலி அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அன்றைய ரோமப் பேர்ரசை எதிர்த்து போரிட ஜோர்டானின் உள்ள பல்காஃ என்ற ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பெரிய சஹாபாக்கள் அத்தனை பேரு இருந்தனர். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கலீபாக பொறுப்பேற்றவுடன் முதலி சொன்ன உத்தரவு அந்த படைப்பிரிவுக்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக படை தயாராக இருக்கிற் ஜரிப் என்ற இட்த்திற்கு கிளம்ப வேண்டும் என்பதுதான்.

அப்போது நபித்தோழர்களில் சிலர், படைப்பிரிவில் பெரும் சஹாபாக்கள் பலர் இருக்கிறார்கள். அரபுகள் இப்போதுதான் உங்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களின் ஒரு பெரிய அணியை விட்டு நீங்கள் பிரிந்திருப்பது சரியாக இருக்காதே என்று ஆலோசனை சொன்னார்கள். அதற்கு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அளித்த பதில் பெருமானாரின் வழி முறைகளை பின்பற்றி நிற்பதில் அவரது உறுதிப்பாட்டை காட்டியது. நான் தனியாக இருந்து என்னை விலங்குகள் கிழித்துச் சாப்பிட்டு விடும் என்றிருந்தாலும் பெருமானார் (ஸல்) அவர்கள் திட்டமிட்ட படி நான் உஸாமாவின் படை பிரிவை அனுப்பவே செய்வேன் என்றார்கள்.

ولما تولى أبو بكر الخلافة أمر أن يُبعث أسامة بن زيد الكلبي، وألا يبقى بالمدينة أحد من جند أسامة إلا خرج إلى عسكره بالجرف، 

واقترح بعض الصحابة على أبي بكر بأن يبقي الجيش فقالوا: «إن هؤلاء جلُّ المسلمين، والعربُ على ما ترى قد انتقضت بك، فليس ينبغي لك أن تفرق عنك جماعة المسلمين»،[  فقال أبو بكر: «والذي نفس أبي بكر بيده، لو ظننت أن السباع تخطفني لأنفذت بعث أسامة كما أمر به رسول الله ﷺ،.

 

ஒரே குணம்

வரலாறு மற்றுமொரு ஒற்றுமைய காட்டுகிறது. 

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிரா குகையிலிருந்து திரும்பி வந்து கதீஜா ரலி அவர்களிடம் எனக்கு போர்த்து விடுங்கள் என்று சொல்லி ஹிராவில் ஜிப்ரயீல் அலை அவர்களை சந்தித்த அனுபவங்களை சொல்லி வருகிற போது ஜிப்ரயீல் அலை அவர்கள் கட்டியணைத்த்தை குறிப்பிட்ட போது நான் மவ்தாகி விடுவேனோ என பயந்தேன் என்றார்கள். அப்போது பெருமானாருக்கு ஆறுதலால அன்னை கதீஜா ரலி அவர்கள் பெருமானாரை புகழ்ந்து பேசிய சொற்கள் வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமானவை.  

இந்த வார்த்தைகள் புகார்யில் இருக்கின்றன.

لما نزل الوحي على الرسول صلى الله عليه وسلم عاد مذعورا إلى السيدة خديجة رضي الله عنه يرجف فؤاده وهو يقول(زملوني زملوني) ثم أخبر خديجة رضي الله عنه بالخبر وقال لها(لقد خشيت على نفسي، فقالت المرأة المؤمنة: كلا والله! لا يخزيك الله أبدا؛ إنك لتصل الرحم، وتحمل الكل، وتكسب المعدوم، وتقري الضيف، وتعين على نوائب الحق

என்ன ஆச்சரியம் பாருங்கள்!.

 அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் மக்காவின் தொடக்க காலத்தில் மக்காவை விட்டு வெளியேறிவிட நினைத்து புறப்பட்டார்கள், அப்போது அவரை மக்காவின் பிரமுகர்களில் ஒருவரான் இப்னு தகினா தடுத்தார். ஏன் வெளியேறுகிறீர் என்று கேட்டார். மக்காவிலுள்ள என சமூகம் என் இறைவனை நிம்மதியாக வணங்கி வாழ என்ன விட வில்லை என்று கூறீனார். அப்போது இப்னு தகினா “உங்களை போன்றவர்கள் மக்காவை விட்டு செல்லக் கூடாது என்று கூறிவிட்டு பெருமானாரை புகழ்ந்து கதீஜா ரலி என்ன வார்த்தைகளை கூறினார்களோ அதே வார்த்தைகளை கூறினார். .

انظر ما قاله زيد بن الدغنة سيد قبيلة القارة وهو يسأل أبا بكر عن سبب خروجه من مكة مهاجرا إلى الحبشة، قال أبو بكر: أخرجني قومي فأريد أن أسيح في الأرض وأعبد ربي، قال ابن الدغنة: فإن مثلك يا أبا بكر! لا يخرج.: إنك تكسب المعدوم، وتصل الرحم، وتحمل الكل، وتقري الضيف، وتعين على نوائب الحق،

 மது அருந்துதல் வீர தீர செயல்களை செய்தல் ஆபாசமான நட்த்தைகளை புகழுதல் என்பது மட்டுமே அன்றைய அரபுலகின் வழக்கமாக இருந்த்து. இத்தகை வார்த்தைகளால் யாரையும் புகழ்கிற வழக்கம் அன்றைய அரபகத்தில் இல்லை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ولم يكن مشهورا في العرب أن يوصف رجل بهذه الصفات، ولم يوصف بها إلا رسول الله صلى الله عليه وسلم والصديق رضي الله عنه وأرضاه

இந்த சூழலில் பெருமானாரும் அவருடைய அருமைத் தோழரும் ஒன்று போல குணம் கொண்டிருந்தார்கள் என்பதையும் வரலாறு காட்டுகிறது.

திருக்குர் ஆனில் அபூபக்கர் ரலி

திருக்குர் ஆனின் சில வசனங்கள் அபூபக்கர் ரலி அவர்களையே குறிப்பாக சுட்டி நிற்கின்றன.

அத்கா”

நரகிலிருந்து தப்பித்துக் கொள்ளும் “அத்கா” “இறையச்சம் மிக்கவர்” அவர் தான் என்பது முபஸ்ஸிர்களின் கருத்து

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ (19إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20وَلَسَوْفَ يَرْضَىٰ (21)

 மக்காவின் காபிர்களால் துன்புறுத்தப்பட்ட பிலால் ரலி அவர்களை விலைக்கு வாங்கி உரிமை விட அபூபக்கர் ரலி அவர்கள் விலை பேசிய போது, இந்த அடிமை எதற்கு உனக்கு? நான் உபயோகமான வலிமையான வேறு அடிமையை வாங்கிக் கொள் என்று சிலர் கூறினர். அதற்கு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அல்லாஹ் விரும்பியதை நான் விரும்புகிறேன் என்று பதில் சொல்லி பிலால் ரலி அவர்கள்ள விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள். இதையே இந்த வசனம் சுட்டி நிற்கிறது என்பது முபஸ்ஸ்ஸிர்களின் கருத்தாகும்

 அஸ்ஸாஹிப்.  

 இதே போல பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு சென்றதைப் பற்றி பேசுகிற இடத்தில் நபி தன் தோழரிடம் சொன்னார் என்று வருகிற வாசகமும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையே குறிக்கிறது.

 إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ

 

இந்த வசனத்திற்கான விரிவுரையில் தப்ஸீர் குர்துபியில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் அந்தஸ்து பற்றி பல்வேறு தகவல்கள் தரப்படுகிறது.

 அதில் ஒன்று

فحقق الله تعالى قوله له بكلامه ووصف الصحبة في كتابه

பெருமானாரின் தோழமையை அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான். அதானால் மற்ற சஹாபாக்களின் தோழமையை யாரேனும் நிராகரித்தால் அது வரலாற்றுப் பிழையாக அமையும் ஆனால் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் தோழமையை நிராகரித்தால் அது திருக்குர் ஆனை மறுக்கிற குப்ராக அமையும்.

 قال بعض العلماء : من أنكر أن يكون عمر وعثمان أو أحد من الصحابة صاحب رسول الله صلى الله عليه وسلم فهو كذاب مبتدع . ومن أنكر أن يكون أبو بكر رضي الله عنه صاحب رسول الله صلى الله عليه وسلم فهو كافر ؛ لأنه رد نص القرآن

 அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் மரியாதையின் சிகரத்தை இந்த வாசகம் எடுத்துச் சொல்கிறது . அதனால் தான் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் பெருமையை பேசுகிற எவரும் இந்த இறைவசனத்தை எடுத்து பேசாமல் இருக்க முடியாது .

 இந்த வசனம் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் பெருமையை எடுத்துச் சொல்கிறது என்றாலும் சாஹிப் என்ற வார்த்தை பெருமானார் (ஸல்) அவர்களின் தோழமையின் சிறப்பையும் பெருமானாரின் தோழர்கள் அனைவரையும் தகுதியையும் சேர்த்தே பேசுகிற என எடுத்துக் கொள்ளலாம்.

 ஏனெனில் தவ்ரு குகையில் பெருமானாருக்கு துணை இருந்த  அபூபக்கர் ரலி அவர்களைப் போலவே நபித்தோழர்கள் அனைவரும் பெருமானாருக்கு தோள் கொடுத்து நிற்பதில் முன்னிற்கவே செய்தார்கள்.

 அதில் சிலருடைய பங்களிப்பு அதிகமாக சிலரின் பங்களிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் அத்தனை பேரும் எந்த அர்ப்பணிப்புக்கும் தயாராக இருந்தார்கள்.

 அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் நபித்தோழர்களின் தோழமைக்கும் அர்ப்பணிப்புக்கும் ஒரு ஒரு குறியீடாக இருக்கிறார்கள்.

 நாம் நபித்தோழர்களின் அந்தஸ்தையும் புரிந்து கொள்ள வேண்டும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் அந்தஸ்தையும் புரிந்து கொள்ள வேண்டும்,.

 சஹாபாக்கள்

நம்முடைய நம்பிக்கையின் படி முஸ்லிம் சமூகத்தில் சஹபாக்களுக்கு எல்லோரையும் விட உயர்ந்த அந்தஸ்து உண்டு.

நபிமார்களுக்கு அடுத்து சிறந்த மனிதர்கள் நமது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் ஆவார்.

 அவர்களது அந்தஸ்தை குர் ஆன் உறுதிப்படுத்தியுள்ளது

 وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَداً ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ) التوبة/1

 அவர்களது அந்தஸ்தை பெருமானர் (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் . சஹாபாக்களோடு அவர்களுக்கு பின்னுள்ள யாரும் போட்டி போட முடியாது.

 عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم : ( لا تَسُبُّوا أَصحَابِي ؛ فَوَالَّذِي نَفسِي بِيَدِهِ لَو أَنَّ أَحَدَكُم أَنفَقَ مِثلَ أُحُدٍ ذَهَبًا مَا أَدرَكَ مُدَّ أَحَدِهِم وَلا نَصِيفَهُ ) رواه البخاري

 ஓட்டு மொத்த முஸ்லிம் சமூகம் அவர்களது அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது.

 يقول ابن مسعود رضي الله عنه :

" إن الله نظر في قلوب العباد ، فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد ، فاصطفاه لنفسه ، فابتعثه برسالته ، ثم نظر في قلوب العباد بعد قلب محمد ، فوجد قلوب أصحابه خير قلوب العباد ، فجعلهم وزراء نبيه ، يقاتلون على دينه ، فما رأى المسلمون حسنا فهو عند الله حسن ، وما رأوا سيئا فهو عند الله سيئ

அஹ்லுஸ்ஸுன்னாவின் கருத்த்துக்கள் பலதுக்கும் முரண்படுகிற இப்னு தய்மிய்யா கூறுகிறார்.

 நபித்தோழர்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் அல்ல என்றாலும் . அவர்களது பாவங்களை தான் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

 ومن سواه    (النبي(  فيجوز عليه الإقرار على الذنب والخطأ ، لكن هم كما قال تعالى : ( أُولَئِكَ الَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا وَنَتَجَاوَزُ عَنْ سَيِّئَاتِهِمْ

 கதீப் பக்தாதி கூறுகிறார்

 قول الخطيب البغدادي رحمه الله في "الكفاية

" على أنه لو لم يرد من الله عز وجل ورسوله فيهم شيء ، لأوجبت الحال التي كانوا عليها من الهجرة ، والجهاد ، والنصرة ، وبذل المهج والأموال ، وقتل الآباء والأولاد ، والمناصحة في الدين ، وقوة الإيمان واليقين ، القطعَ على عدالتهم ، والاعتقاد لنزاهتهم ، وأنهم أفضل من جميع المعدلين والمزكين الذين يجيؤون من بعدهم أبد الآبدين ، هذا مذهب كافة العلماء ، ومن يعتد بقوله من الفقهاء 

அல்லாஹ்வோ, இறைத்தூதரோ சஹாபாக்களின் அந்தஸ்து இது என்று வரையறுத்துக் கூறாவிட்டாலும் கூட சஹாபாக்கள் இந்த மார்க்கத்திற்கு செய்த பங்களிப்பின் காரணமாக அவர்கள் அனைவரையும் நீதவான்களாக உறுதிப்படுத்த வேண்டிய கடமையை காலம் நமக்கு இட்டிருக்கிறது.

 எனவே எந்த நபித்தோழர் குறித்தும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை , பொது வாழ்க்கை , அரசியல் வாழ்க்கை என எது குறித்தும் மரியாதைக்குறைவாக கருத்துப் பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 நமது தீனை பாதுகாப்பதில் இது முக்கிய எல்லைக் கோடாகும் இந்த எல்லைக் கோட்டை நம்முடைய முன்னோர்கள் மிக எச்சரிக்கையாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.

 அன்னை ஆயிஷா ரலி அவர்கள் தனது சொந்த வாழ்வின் மீது பழி கூறிய ஹஸ்ஸான் பின் சாபித் அவர்கள் பற்றி பிற்காலத்தில் மரியாதையாக அவர் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட நபித்தோழர் அல்லவா என்று கூறுவார்கள். (புகாரி)

 சஹாபாக்களை நம்மளவுக்கு இறக்கி கருத்து பரிமாற்றம் செய்வதை நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று எச்சரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

 எனவே முஸ்லிம் சமூகம் சஹாபாக்கள் விசயத்தில் ஒருவரை போற்றி மற்றவரை  தாழ்த்தியோ குறை கூறியோ நயமாக பிரச்சாரம் செய்வோர் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

 ஒருவரை சஹாபி என்று அறியும் போது அவர் விசயத்தில் குறையாக  கருத்துப் பேசி விடக் கூடாது. அப்படி யாராவது பேசுகிறார்கள் என்று அறிந்தால் விஷ ஜந்துக்களை கண்டு விலகி ஓடுவது போல விரண்டோடி விட வேண்டும்.

 சஹாபாக்களுக்கு எதிரான கருத்தை பேசுவது, ஆலிம் வேடமிட்ட, அல்லது ஷைகு ஆக கொண்டாடப்படுகிற. அல்லது சிந்தனையாளராக போற்றப்படுகிற அல்லது தலைவராக கருதப்படுகிற யாராக இருந்தாலும் சரி.

 இதுவே தீனையும் ஈமானையும் பாதுகாப்பதற்கான வழியாகும்.

ஒன்றை நினைவு படுத்துகிறோம். நாம் பெருமானாராகுகாக துஆ செய்கிற போது அவர்களுக்கு மட்டும் துஆ செய்வதில்லை. அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் சேர்த்தே துஆ செய்கிறோம். நம்முடைய எந்த துஆ வும் எந்த மஜ்லிஸும் அப்படியே தொடங்குகிறது நிறைவடைகிறது.

இதில் பெருமானாரின் தோழர்கள் என்று கூறும் போது அனைத்து தோழர்களும் அதில் இடம் பெறுவார்கள்.

இதில் நாம் சிலரை குறை கூற முயலும் போது  ஒன்றை ஏச்சரிக்க விரும்புகிறோம்.  . சஹாபாக்களை குறை கூற ஆரம்பிப்போர் கடைசியில் பெருமானாரின் மரியாதையில் கை வைத்து விடுவார்கள்

நபித்தோழர்கள் சிறந்தவர்கள் , நீதிமான்கள் என்ற கருத்துக்கு அடுத்ததாக நான் நம்பிக்கை கொள்ள வேண்டியது.

 அந்த நபித்தோழர்களில் மிகச் சிறந்தவர் அபூபக்கர் சித்தீக் ரலி ஆவர் என்பதையாகும்.

 அதுபோலவே பெருமானாருக்குப் பின் கலீபாவாக இருப்பதற்கும் அவரே தகுதி படைத்தவர் என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இது அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்படை கோட்ப்பாடுகளில் ஒன்றாகும்.

 திருக்குர் ஆன் கூறும் ثاني اثنين  தானிய இஸ்னைன் என்பதன் பொருள் இது என தப்ஸீர் குர்துபி கூறுகிறது.

 ولهذا قال بعض العلماء : في قوله تعالى : ثاني اثنين إذ هما في الغار ما يدل على أن الخليفة بعد النبي صلى الله عليه وسلم أبو بكر الصديق رضي الله عنه ؛ لأن الخليفة لا يكون أبدا إلا ثانيا

 குர்துபி மேலும் கூறுகிறது அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் கிலாபத்திற்கான தகுதியை மறுப்பது குப்ர் ஆகி விடும்.

 وقد جاء في السنة أحاديث صحيحة ، يدل ظاهرها على أنه الخليفة بعده ، وقد انعقد الإجماع على ذلك ولم يبق منهم مخالف . والقادح في خلافته مقطوع بخطئه وتفسيقه . وهل يكفر أم لا ، يختلف فيه ، والأظهر تكفيره

 அபூபக்கர் ரலி அவர்கள் கலீபாவான பிறகு பேசிய முதல் சொற்பொழிவில், “மக்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்க்ள். நான் இப்போதும் கூட விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் யாரேனும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய போது தன்னுடைய வாளுடன் அவருக்கு அருகே சென்ற அலீ ரலி அவர்கள் சொன்ன வார்த்தை நாங்கள் உங்களை பதவியிலிருந்து நீக்க மாட்டோம். நீக்க கோரவும் மாட்டோம். என்று கூறிவிட்டு

ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறினார்கள்.

 قدمك رسول الله فمن ذا يؤخرك؟

قام علي بن أبي طالب ومعه السيف، فدنا منه حتى وضع رجلاً على عتبة المنبر والأخرى على الحصى وقال: «والله لا نقيلك ولا نستقيلك، قدمك رسول الله فمن ذا يؤخرك؟».

 எனவே கலீபாக்களின் வரிசைப்படியான அந்தஸ்தை நாம் மீண்டும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்

அபூபக்கர் சித்தீக் ரலி

உமர் பின் கத்தாப் ரலி

உஸ்மான் பின் அப்பான் ரலி

அலீ பின் அபீதாலி ரலி

 இந்த வரிசையில் ஃகலீபாக்களை மதிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்காகத்த்தான் வாரந்தோறும் ஜும் ஆ வின் இரண்டாவது குத்பாவில் கலீபாக்களின் பெயர் சொல்லப்படுகிறது.

 இந்த ஏற்பாட்டை செய்த உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!

 குத்பாவில் இப்பெயர்களை கேட்கிற போது நாம் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறோம்.  (இதுவரை சொல்லாவிட்டால் இனி சொல்ல வேண்டும். அது இந்த தீனின் மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.)

 நினைவில் கொள்ளுங்கள்!

இது வெறும் துஆ அல்ல நமது ஈமானை சரியான அளவில் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமும் ஆகும்.

 அல்லாஹ்  கலீஃபா அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் வலுவையும் சஹபாக்கள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த உண்மையான பற்றையும் நமது முன்னோர்கள் கடைபிடித்த தெளிவையும் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

2 comments:

  1. "பெஸ்ட் ஃபிரண்ட் "

    ReplyDelete
  2. Anonymous9:32 PM

    ஹழ்ரத் ஒரு வாரம் பிந்தய தலைப்பு

    ReplyDelete