வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 04, 2024

சதகத்துல் பித்ர் – வெறும் பணமல்ல

ரமலானின் நிறைவு நாட்களில் இருக்கிறோம்.

ரமலான் வந்த போது அதிக மகிழ்ச்சியடைந்தோம். உரிய மதிப்போடு ரமலானுக்கு வழியனுப்பி வைப்போம்.

ஒரு காரியத்தை நிறைவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது முஸ்லிம்களின் இயல்பாகும்.

தொடக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது கிருத்துவர்களின் பழக்கம்

     படைப்புக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லாஹ் படைக்கத் தொடங்கினான்.

حديث ابن عباس أن اليهود أتت النبي صلى الله عليه وسلم، فسألته عن خلق السماوات والأرض، فقال: «خلق الله عز وجل الأرض يوم الأحد

 

அந்த தொடக்க நாளை கிருத்துவர்கள் தங்களுடைய  .பெருநாளாக ஆக்கிக் கொண்டார்கள். ஒபனிங்க் செர்மனி என்பது அவர்களது கலாச்சாரத்தில் முக்கியமானது. அதனால் தான் இப்போதும் அவர்கள் எந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தையும் பிரம்மாண்டமாக செய்கிறார்கள். பர்த் டே போன்ற கொண்டாட்டங்களில் அவர்களுடைய ஈடுபாட்டையும் நாம் அறியலாம். ஒன்று தொடங்கும் போது அவர்கள் குதூகலிப்பார்கள்.

 அல்லாஹ் படைப்புக்களை படைக்கும் பணியை வெள்ளிக்கிழமையில் நிறைவு செய்தான். அந்த நாள் முஸ்லிம்களின் பெருநாளாக அறிவிக்க்ப் பட்டது.

 அதனால் முஸ்லிம்கள் எதையும் நிறைவு செய்வதில் அதிக அக்கறை செலுத்துவார்கள் . முடிவு நல்லதாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وإنما الأعمال بخواتيمها

 பெருமானார் (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பகுதியில் நற்செயல்கள் செய்வதற்காக வேட்டியை வரிந்து கட்டிக் கொள்வார்கள் என்று ஹதீஸ்கள் கூறூகின்றன.

 ரம்லானின் இறுதியை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள மக்களுக்கு வழிகாட்டும் அற்புதமன ஏற்பாடு அது.

 திருக்குர் ஆனும் கூறுகிறது.

والعاقبة للمتقين

கடைசி நிலை பற்றி கவனம் செலுத்துவது தக்வாவின் அடையாளமாகும் என்பது இதனுடைய கருத்தாக அமையும்.  

எனவே ரமலானுக்கு விடை கொடுக்கும் இந்த பொழுதுகளை மிக கவனமாகவும் மரியாதையாகவும் பயன்படுத்துவோம்.

இந்த பொழுதுகளை நாம் பயன்படுத்துகிற விதத்தில் தான் மொத்த ரமலானையும் நாம் எப்படி எதிர் கொண்டோம் என்பதும் நமது ரமலான் எந்த தரத்தில் இருந்தது என்பதும் தீர்மாணமாகப் போகிறது.

பொதுவாக நம்மில் சிலர் ரமலானின் தொடக்கத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தி விட்டு ரமலான் நிறைவடையும் போதும் சோம்பலினாலும் பெருநாளுக்கு தயாராகிற முனைப்பினாலும் இந்த பொன்னான பொழுதுகளை அலட்சியம் செய்துவிடுவதுண்டு. கடைத்தெருக்கலில் காலத்தை போக்கிவிடுவதுண்டு.

மக்களில் பலருக்கு கடைசி நேரத்தில் காசு பணம் கையுக்கு வருகிறது. அவர்கள் அப்போதுதான் கடைகளுக்கு செல்ல முடியும் என்றிருந்தாலும் அவர்களும் கூட ரமலானின் இறுதி நேரத்தின் மரியாதையை கருத்தில் கொண்டு தேவைகளை விரைவாக நிறைவு செய்து விட்டு தமது ரமலானை அமல்களால நிறைக்க முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 ரமலானின் நிறைவுப் பொழுதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான நற்செயல்கள்.

லைலத்துல் கத்ரு.

ليلة  القدر خير من الف شهر

 ஆயிரம் அல்ல; ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்பதே இதன் பொருள்.

 அது எந்த அளவு என்பது நம்முடைய நம்பிக்கையையும் முயற்சியையும் பொருத்தது.

 ரமலானின் கடைசி ஒற்றைப்படைகளில் லைலத்துக் கத்ரை தேடிக் கொள்ளுங்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  எனினும் உபைய்யு பின் கஃபு போன்ற சஹாபாக்கள் அது 27 ம் நாள் இரவு என்று சத்தியமிட்டு சொன்னது போன்ற கருத்துக்களின் அடிப்படையில் 27 ம் நாளையும் அதற்கடுத்த 29 ம் நாள் இரவையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்.

அந்த இரவு நாம் செய்கிற நற்செயல்களுக்கு அல்லாஹ் அதிகமதிகள் நற்கூலியை தருகிறான்.

வருட்த்தில் ஒரு இரவிற்கு இந்த சிறப்பை வைத்த இறைவன், 360 இரவுகளில் தேடும் நிர்பந்தததை வைக்க வில்லை. 30 இரவுகளில் என்று அதை ஆக்கினான். அதை கூட பெருமானார் (ஸல்) அவர்கள் கடைசி 10 நாட்கள் என்றார்கள். பிற்கு கடைசி 7 நாட்கள் என்றார்கள். இப்போது 23,25,27,29 என்ற நான்கு நாட்களுக்குள் என்று அது குறிப்பிட்டு காட்டப் பட்டுவிட்டது.

மாஷா அல்லாஹ் லைலத்துல் கத்ர் இரவை பெற்றுக் கொள்வதை அல்லாஹ்வும் பெருமானார் (ஸல்) அவர்களும் மிக இலகுவானதாக ஆக்கி விட்டார்கள். அந்த இரவில் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிற ஒரு நேரம் இருக்கிறது. அதில் நாம் என்ன துஆ கேட்டாலும் நிச்சயமக அல்லாஹ் தந்துவிடுவான்.

அந்த நேரத்தை இரவில் எந்த நேரத்தில் தேடுவது , இரவு முழுவதும் விழித்திருக்க முடியாதே என்று நாம் யோசிக்கலாம்.

நம்முடைய முன்னோர்கள் அதிலும் ஒரு வழி கண்டு சொன்னார்கள்.

பஜ்ரு உதயமாகும் வரை என்று அல்லாஹ் குர் ஆனில் கூறியிருக்கிறான். எனவே இந்த 4 இரவுகளிலும் உள்ள அந்த கடைசிப் பொழுதை நாம் பக்தியோடு துஆ விலும் நல் அமல்களில் கழிப்போம். இன்ஷா அல்லாஹ் நமக்கு லைலத்துல் கத்ரின் நன்மை கிடைத்து விடும்.

லைலத்துல் கதிருடைய புனிதம் மிக்கா இரவுகளில் ஊர் சுற்றுவதிலும், விளையாட்டாக பொழுதை கழிப்பதிலும் மோட்டார் சைக்கிள்களில் வீலிங்க் செய்வதையும் குறைத்துக் கொண்டு நம்முடைய இளைஞர்கள் இந்த இரவை பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள் எனில் நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள்பார்வை அவர்கள் மீது விழும் என்பதில் சந்தேகமில்லை. பள்ளிவாசலில் குழுமுகிற இளைஞர்கள் கூட இந்த மதிப்பு மிகு நேரத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் கழித்து விடுகிறார்கள். அதை விடுத்து திருக்குர் ஆனை கொஞ்ச நேரம் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது அதன் பொருளை படித்துக் கொண்டிருந்தால் குறைந்த பட்சம் கைகளை ஏந்தி துஆ செய்து கொண்டிருந்தால் அது லைலைத்துக்கத்ரை தேடிக் கொள்ளும் சிறப்பான முயற்சியாக இருக்கும்.

இன்றைய இளைஞர்களுக்கு நேரத்தை வீணடிப்பதின் பாதிப்பு எப்படிப் படிட்டது என்று அதிகமாக விளக்கிச் சொல்ல தேவையில்லை. ஒரு அரியரில் விட்டு விட்டால் இன்னொரு அரியரில் பிடித்துக் கொள்ளலாம் என்பது போன்ற விசயமல்ல இது. எனவே அனைத்து தரப்பாரும் லைலத்துல் கத்ரை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கிருபை செய்வானாக!

இந்த இட்த்தில் இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தற்காலத்தில் இரவுத்தொழுகை என்ற பெயரில் ஜமாத்தாக பள்ளிவாசலில் தொழுகைக்கு ஏற்பாடு செய்வதும் சஹர் உணவிற்கான ஏற்பாடுகளை செய்வதும் ஏதோ மிக சிறந்த நல் அமல் என்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டு வருகிறது.

சில ஊர்களில் ஆங்காங்கே இருந்த நடை முறை இப்போது ஒரு இட்த்தை தொட்டு இன்னொரு இடம் என்ற வகையில் பரவி வருகிறது. என்ன நம்முடைய மஹல்லாவில் கியாமுல்லைல ஏற்பாடு இல்லையா ? சஹர் ஏற்பாடு செய்ய வில்லையா என்று கேட்கிற பொதுமக்கள் காரணமாக ஆலிம்களும் ஜமாத்துக்களின் நிர்வாகிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்த்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது மாதிரியான ஏற்படுகளில் கூட சில வேளைகளில் லைலத்துல் கத்ரின் நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாது போகிறது.

இந்த இடத்தில் மிக உறுதியான ஒரு கருத்தை நன்மையை நாடுகிறவர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இதில் யாரையும் குறை சொல்வது நிச்சயமாக நோக்கமில்லை. மார்க்கத்தின் எதார்த்த்தை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது நோக்கமாகும்.

நபிலான தொழுகைகள் அல்லாஹ்வுக்கும் நமக்கு இடையில் உள்ள ரகசியமாகு, அதை தனிமையில் தொழுவதும் ரகசியமாக செய்வதும் சிறப்பாகும். நம்முடைய முன்னோர்களில் பலர் தங்களுடைய மனைவியருக்கு கூட தெரிந்து விடா வண்ணம் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபடுவார்கள் என்று தான் நமது முன்னோர்களின் வரலாறு கூறுகிறது.

ஹனபீ சட்டப் படி கிரகண தொழுகை, தராவீஹ் தொழுகையை தவிர மற்ற தொழுகைகளை ஜமாத்தாக தொழுக அழைப்பு விடுத்து தொழுவதில் ஆட்சேபனை (கராஹத்) இருக்கிறது.

ஷாபி மத்ஹபிலும் இது வரவேற்பிற்குரிய செயல் அல்ல; ஏதேச்சையாக ஒரு இடத்தில் மக்கள் கூடுகிறார்கள். அவர்கள் ஜமாத்தாக தொழுது கொண்டார்கள் என்றால் சரி. இத்தகைய தொழுகைக்காக போஸ்டர் அடித்து நோட்டீஸ் விநியோகித்து பரபரப்பாக்குவது அவ்வளவாக விரும்பத்தக்கது அல்ல என்பதே மார்க்கமாகும்.

பெரும்பாலும் இவ்வாறு நாம் புதிதான காரியங்களில் அக்கறை செலுத்தும் போது வழமையான அதை விட சிறப்பான நற்செயல்களை மக்கள் தவற விட்டு விடுவார்கள் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இப்போது கூட ரமலானின் தராவீஹ் தொழுகையில் கவனம் குறைந்து போய் கியாமுல்லைல் என்ற தொழுகையில் கவனம் அதிகரிப்பதை பார்க்கிறோம்.

பொதுவாக கியாமுல்லைல் என்ற வார்த்தையே கூட இரவுகளில் விழித்திருப்பதற்கு சொல்லப்படுமே தவிர குறிப்பிட்ட தொழுகையை குறிப்பிடுவது அல்ல. இரவின் சிறப்பான தொழுகையை தஹஜ்ஜுத் தொழுகை என்று குறிப்பிடுவதே இஸ்லாமிய மரபாகும். தஹஜ்ஜுத் வருட்த்தின் எல்லா நாளும் இருக்கிறது. ரமலானில் மட்டுமோ அல்லது ஒற்றைப்படைகளில் மட்டுமோ அல்ல.

வீட்டில்  தொழுது கொள்ளலாம் என்றால் நடக்காது. இப்படி ஜமாத்தாக தொழுதால் பலரும் தொழுவார்கள் என்ற ஆர்வமூட்டுதல் என்ற காரணத்திற்காக மட்டுமே இத்தகைய ஜமாத்து தொழுகைகளுக்கான அழைப்புக்களும் சஹர் ஏற்பாடுகளும் நடக்கின்றன.

நாம் இதை புரிந்து கொண்டு லைலத்துல் கத்ரை தேவையற்ற பரபரப்பில் கழித்து விடாமல் பரீட்சைக்கு தயாரகிற ஒருவர் எப்படி கடைசி நேரத்தில் கிடைக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்வாரோ அது போல லைலத்துல் கத்ரை அமல்களால் முழுமையாக அழகு படுத்த முயற்சி செய்வோம். அல்லாஹ் நமது மொத்த வாழ்வையும் அழகு படுத்துவான்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 ரமலானை அற்புதமாக நிறைவு செய்யும் மற்றோரு வணக்கம் சதகத்துல் பித்ரு ஆகும்

சதகத்துல் பித்ரு என்பது நோன்பு பெருநாள் அன்று தொழ வருவதற்கு முன்னதாக ஒவ்வொரு வரும் அவருக்காகவும் அவருடைய குடும்பத்திற்காகவும் வெளிப்படுத்துகிற தர்மமாகும்.

حديث عبد الله بن عباس  قال: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ»

 

பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்

.
ஹன்பி மத்ஹபின் படி கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 90 பித்ரு  சதகாவாக  கொடுக்க  வேண்டும். 

ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி  பித்ராவாக  கொடுக்க வேண்டும். 

 வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம். 

 தாய் தந்தை மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு  பித்ராவை  கொடுக்கலாம். 

 பெருநாள் அன்று பொழுது பிறக்கிற போது இந்த தரமம் ஷாபி மத்ஹபில் சுன்னத்தாகவும் ஹன்பி மத்ஹபில் வாஜிபாகவும் அமைகிறது.

 சதகத்துல் பித்ரின் நேரம்

பெருநாள் அன்று சுபுஹ்லிருந்து பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னதாக இந்த தரமத்தை நிறைவேற்ற வேண்டும். முதல் நாள் மஃரிபிலிருந்தும் கொடுக்க தொடங்கலாம். ஏழைகளை சென்றடைவது சில இடங்களில் சிரம்மாக இருக்கும் என்பறால் ரமலானில் ஓரிரு நாட்களில் முன் கூட்டியே கொடுத்தாலும் செல்லும்   

 சிரம்மற்ற இடங்களில் மிக முன்னதாகவே கொடுப்பது சரியானது அல்ல. சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்

பெருநாள் அன்று ஏழைகளை திருப்திப்படுத்துவதான் இதன் நோக்கம் என்பதால் இரண்டு நாட்களை விட முன் கூட்டியே கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஹதீஸ் கூறுகிறது. பெருநாளில் ஏழைகளில் மக்களுக்கிடையே வலம் வரும் தேவையை தவிருங்கள் .

  ولا يجوز تعجيلها لأكثر من ذلك لأن الغرض منها إغناء الفقير يوم العيد، لما روى عبد الله بن عمر  أن رسول الله  قال: «اغنوهم عن الطواف في هذا اليوم»

ஏழைகளை கண்டறிவதில் இருக்கிற சிரம்ம் காரணமாக வே ரமலான் தொடங்கியதில் இருந்து சதகத்துல் பித்ரை கொடுக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கினார்கள்.

 தேவையற்று முன் கூட்டியே கொடுத்து விடுவது சதகத்துல் பித்ரின் நோக்கத்தை மாற்றுவதாக அமையும்.

 இந்த தரமத்தை சதகத்துல் பித்ரு என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை அறிஞர்கள் கூறுவார்கள் .

 ரமலானுடைய நோன்பை பெருநாளோடு நிறுத்திக் கொள்வதால் அன்றைய தினம் வழங்கப்படும் தர்மத்தை நிறுத்திக் கொள்ளும் சகாத் என்ற அர்தத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.

 لأن الفطر من رمضان سبب وجوبها، فأضيفت إليه 

قال  ابن عمر: : زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ» 

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பித்ரத் என்ற வார்த்தைக்கு இயற்கை என்றும் பொருள் இருக்கிறது.

 فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِی فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ என்றூ திருக்குர் ஆன் கூறுகிறது/

 மனித இயல்பு. தான் அனுபவிக்கும் இன்பத்தித்தை வசதியற்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்வது.

 அந்த வகையில் இந்த தர்மத்தை இயற்கை தர்ம்ம் என்றும் சொல்லாம்.

 இந்த சிந்தனையில் பார்க்கிற போது, பித்ரு சதகா என்பது வெறும் தர்மமாக மட்டும் இல்லாமல் –ஏழைகளை  நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது என்று நமது மன்சாட்சியை பக்குவப்படுத்துவதாகவும் அமைகிறது.

 இந்த பெருநாளில் நான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது என்னை சார்ந்து இருக்கிற ஏழைகளும் மகிழ்ச்சியடைவதை நான் உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என்னே ஒரு அற்புதமான சிந்தனை ?

 மானுடக் கூட்டறவின் என்னே ஒரு பெருமை மிகு திட்டம் ?

.வசதியற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாம் எப்படி எல்லாம் சட்டம் சொல்கிறது. உனக்கு மட்டும் கொடுத்தால் போதாது. உன் குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களுக்காகவும் கொடு என்கிறது.

 இந்த தத்துவத்தை  நிறைவு செய்யும் ஒரு அம்சமாக சில சட்ட அறிஞர்கள் உங்களது வீட்டில் பெருநாள் அன்று விருந்தினர்கள் இருப்பார்கள் எனில் அவர்களது எண்ணிக்கையும் கணக்கிட்டு பித்ரு சதகா கொடுங்கள் என்று கூறுவதுண்டு.

 ஹன்பலி மத்ஹபின் சட்ட அறிஞர்கள் ஒருவரின் ரமலான் முழுமைக்குமான பொறுப்பை ஏற்றிருப்பவர் அவருக்காகவும் சதகத்துல் பித்ரை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

 மானுட்த்தின் மிக உன்னதமான ஒரு பண்பை வெளிப்படுத்தும் இந்த கடமையை அதன் அருமை புரிந்து நாம் நிறைவேற்று வோம்.

 சில அமைப்புக்கள் இக்காலத்தில் ரமலான் தொடங்கிய சில நாட்களிலேயே  தொழுகை முடித்து சலாம் கொடுக்கிறாரக்ளோ இல்லையோ,  நமது ஜமாத் அலுவலகத்தில் பித்ரு சதகாவை உங்களுக்காகவும் உங்கள் வீட்டிலிருப்பவர்களுக்காகவும் முன் கூட்டியே விரைவாக கொடுத்து விடுங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

 குர் ஆன் ஹதீஸ் என்ற சொல்லில்  ஏமாந்த இளைஞர்கள் இப்படி பெருமானார் (ஸ்ல) அவர்கள் ஒரு தடவையாவது அறீவிப்பு செய்தார்களா ? சஹாபாக்களில் யாரையாவது ரசீது புத்தகத்தோடு நிற்க வைத்தார்களா என்று கேட்க விலை. 

சமூக அமைப்புக்கள் பலவும் அரசியல் அமைப்புக்க்ள் சிலவும் தங்களுடைய செலவுகளுக்காகவும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் தொண்டர்களை திருப்தி படுத்துவதற்காகவும் இவ்வாறு வசூல் செய்கிறார்கள். அவர்கள் எதற்கோ வசூல் செய்து விட்டு செல்லட்டும். அமைப்புக்களிடம் கொடுப்பவர்கள் அமைப்புக்காக கொடுக்கீறார்கள் என்பதே பொருளாகும்.

 நாம் மார்க்கம் குறிப்பிட்ட படி நம்மைச் சார்ந்த ஏழைகளுக்கு கொடுப்போம்.

 அறிஞர்கள் கூறுகிறார்கள். நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி இது,

 சக மனிதனுக்கு ஆறுதல் அளிக்கும் காரியங்கள், முன்பை விட இப்போது 80 சதவீதம் குறைந்து விட்டது. 20 சதவீதம் தான் இப்போது அது நேரடி நடை முறையில் இருக்கிறது.

 இதற்கு அவர்கள் ஒரு உதாரணம் கூறுகிறார்கள் .ரோட்டில் ஒருவன் அடிபட்டு விழுந்து விட்டால் அதை கண்டும் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஒரு காலத்தில் நாடற்ற அகதிகள் தங்களுடைய வீடு வாசல்களை துறந்து படகுகளில் வருவார்கள் எனில் கரையோரங்களில் இருக்கிற நாடுகள் கை நீட்டி வரவேற்றன. இப்போது நடுக்கடலில் உலகின் கண் முன்னேயே அவர்கள் இறந்து போக விட்டு விடுகிறார்கள். நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த போது “ யாருக்கு சொந்தமாக ஒரு தாய நாடு இல்லையோ அவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வரலாம் என்று அழைத்தார். இப்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் CAA என்ற சட்டத்தை கொண்டு அற்பமான காரணங்களை காட்டி சொந்த நாட்டு மக்களையே அன்னியர்களாக்க முயற்சி செய்கிறார்கள். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வகையில் நாட்க்கிறது என்கிறார்கள்.

 பரஸ்பரம் அனுசரனை என்பது அரிதாகிவருகிற காலத்தில் இந்த இயல்பை நமது சந்த்திகளுக்கு பழக்கப் படுத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 எனவே சதகத்துல் பித்ரை கொடுக்கிற போது நம் வீட்டில் இருக்கிற இளம் பிள்ளைகளை ஆண்களை பெண்களை இதற்கு பயன்படுத்தலாம். அவர்கள் மூலம் கொடுக்க வைக்கலாம். அப்போது நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல எல்லோரையும் மகிச்சியாக வைத்திருக்க உழைக்க் வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

 இதற்கு திருக்குர் ஆனிய வசன்ங்கள் அற்புதமாக வழ்காட்டுகின்றனர்

 وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ (19)

وأحسن كما أحسن الله إليك

 சில பெற்றோர்கள் சம்பாதிக்கிற தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அவர்களே கொடுத்து விடுகிறார்கள். இதை தவிர்த்து , பிள்ளைகளுக்கு நினைவூட்டி அவர்களையே அவர்களுக்குரிய பித்ரு சதகாவை கொடுக்க செய்வது சிறப்பானது.

 இவ்வாறு செய்கிற போது சதகத்துல் பித்ரு என்பது ஒரு தரம்மாக மட்டும் இல்லாமல் மானுடத்தை தழைக்கச் செய்யவும் அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லவுமான ஒரு அற்புதமான ஏற்பாடாக அமையும்.  

   அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

பெருநாள் பிறை

பெருநாள் பிறை விசய்த்தில் குழப்பத்திற்கு ஆட்பட வேண்டாம், கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல் பெருமானுருடையது,

29 இரவு பிறை தென்பட்டது என காழி அறிவித்தால் 6 ம் தேதி ஈதுல் பித்ரு பெருநாளைக் கொண்டாடுவோம். இல்லை எனில் 7 ம் தேதி பெருநாளைக் கொண்டாடு வோம்.

அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம் காட்டாதீர்கள், சர்வதேச பிறை சவூதிப் பிறை என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக் குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக் கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். 

திடல் தொழுகை 

சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் பெருநாள் தொழுங்கள். திடல் தொழுகை என்ற பெயரில் செய்யப்படும் ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்
இது விசயத்தை மிகவும் முக்கியமான ஒரு கருத்தாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
எதார்த்தத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,
நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்ற அறிவுரை ஒன்று கூட இல்லை.
மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைகென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,
ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,
மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,
கோவையில் நல்லாயன் பள்ளியில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டமாக தொழுகை நடத்தினார்கள். இவர்கள் தொழுத இடத்தின் நேர் மேலே கிழக்கை நோக்கி கை நீட்டியபடி இயேசுவின் சிலை நின்று கொண்டிருந்தது, ஒரு தடவை இது பற்றிய புகைப்படத்தில் சிலைக்கு கீழே இவர்கள் நின்று தொழுவது போல படம் வந்தது.
திடல் தொழுகைகளின் சமீபத்திய சாதனை ;
இவர்கள் தொழுகை நடத்தியதாக அடுத்த நாள் செய்தித்தாள்களில் கட்டாயமக செய்தி இடம் பெறும், அதற்கு சாட்சியாக பெண்கள் தொழுவது போன்ற புகைப்படங்களை மட்டுமே பத்ரிகைகள் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகின்றன,

أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).
மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.
இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதியிம் மதீனாவிலிருந்த சுற்று புரங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். என வே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,
أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة



தக்பீர்  

பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்லுங்கள் அதுவே பெருநாளின் அழகாகும்.

வேகமாக எங்களிடமிருந்து விடைபெறுகிற ரமலானே சீக்கிரமே எங்களிடம் திரும்பிவா!  உன்னுடைய அருள் மழையை அள்ளித்தா!

 

இந்தப் புனிதம் மிக்க ரமலானை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சார்பானதாக ஆக்கியருள்வானாக!

 

 

   

 

 

2 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அற்புதமான தொகுப்பு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அற்புதமான தொகுப்பு

    ReplyDelete