வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 13, 2025

ஹிட்லர் ஆக வேண்டாம்

 وَقَالَ الْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ (127قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا ۖ إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128قَالُوا أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِن بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ

 நேற்றைய தினம் ஷபே பராஅத் இரவு சிறப்பாக நடைபெற்றது.  உற்சாகத்தோடு மக்கள் பலரும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றார்கள். இன்று நோன்பு வைத்திருக்கிறார்கள்.

 எல்லாம் வல்ல நாம் செய்த அமல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக! நமது துஆ க்களை அங்கீகரித்தருள்வானாக!

 இந்த நாளில் தீர்மாணிக்கப்படும் காரியங்கள் அனைத்தையும் நமக்கு நன்மையாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக்கியருள்வனாக!

 பாலஸ்தீன் மக்களுக்கும் உலகில் ஆட்சியாளர்களால் நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கிற அனைத்து மக்களுக்கும் விடுதலையும் நிம்மதியையும் அல்லாஹ் விதியாக்கித்தருவானாக!

 இந்த பாக்கியம் மிக்க இரவை பயன்படுத்திக் கொள்ளாத சகோதர்ர்களுக்கு ஒரு அறிவுரையாக சில செய்திகளை பரிமாறிக் கொள்கிறோன்.

 சகோதரர்களே!

 நீங்கள் சுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக நீங்கள் உங்களது ஆபாச தலைவர்களின் ஆசாபாசாங்களுக்கு அடிமை பட்டு விட்டீர்கள் . நன்மையை சிநிதிக்கிற வாய்புக்களை இழந்து விட்டீர்கள் என்பதை மட்டும் சொல்லி விலகிக் கொள்கிறோம்.

 சுன்னத் ஜமாத்தைச் சேர்த சகோதரர்களே! நேற்றைய வாய்ப்புக்களை நீங்கள் தவற விட்டிருந்தால் நிச்சயம் அது ஒரு இழப்பு தான். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இத்தக்கய பொழுதுகளை தவற விடக் கூடாது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

 இன்னும் கூட ஒரு சில வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை உங்களுக்கு சொல்லிக் காட்ட விரும்புகிறோம்.

 ஷஃபான் 15 ம் நாள் இரவான பராஅத் இரவின் சிறப்பை பற்றி பல ஹதீஸ்களும் வந்துள்ளன. இதில் அபூமூஸா ரலி அவர்கள் அறிவிக்கிற ஹதீஸ் எதிர்களால கூட மறுக்கப்படாத ஹதீஸாகும். இப்படி ஒரு ஹதீஸ் உறுதிபட இருக்கிறது என்பதை தெரிந்தும் கூட அவர்கள் இந்த இரவை பொருட்படுத்துவதில்லை.

 சொந்த வேலை காரணமாக அல்லது அல்ட்சிய மனோபாவத்தில் இந்த இரவை தவற விட்டிருந்தால் அதற்காக இப்போது கூட அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி நாம் கேட்க வேண்டிய துஆ க்களை கேட்கலாம்;

 இந்த இரவு பற்றி ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிற ஒரு ஹதீஸ் பைஹக்கீயில் உண்டு.

இந்த ஆண்டு பிறக்க கூடிய குழந்தைகளின் பட்டியலையும் இறக்க கூட மனிதர்களின் பட்டியலையும் தனித்து எழுதப்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த இரவில் கால்கள் வீங்கும் அளவு பெருமானார் நின்று வணங்கினார்கள். உள்ளம் உருக துஆ செய்தர்கள்.

எனது உடலும் சிந்தையும் உனக்கு பணிந்து நிற்கிறது. இதயம் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு கிடைக்கிற அருட்கொடைகளுக்காக உன்னயே நான் சார்ந்திருக்கிறேன்.  எனது பெரும் பாவங்களை நான் ஒப்புக் கொள்கிறேன். எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டு விட்டேன். இறைவா என்னை மன்னித்து விடு! உன்னை தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதற்கில்லை. எனது மன்னிப்பை கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன். என்னை தண்டித்து விடாதே! உனது அருளை கொண்டு உனது தண்டனையிலிருந்து பாதுகாப்பு கேட்கிறேன்.

உனது கிருபையை கொண்டு உனது கோபத்தை விட்டு பாதுகாப்பு தேடுகிறேன். உன்னாலேயே தவிர உனக்கான புகழை தீர்மாணித்துக் கொள்ள முடியாது. இறைவா என்னை பாதுகாப்பாயாக!

 இவ்வாறு பெருமானார் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்த வார்த்தைகளை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள் எனில் அவர்களுக்கு கேட்குமளவிலான சப்தத்தில் பெருமானார் துஆ செய்திருக்கிறார்கள்.

 عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " لَمَّا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ انْسَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِرْطِي، قَالَتْ: فَخَشِيتُ أَنْ يَكُونَ أَتَى بَعْضَ نِسَائِهِ، فَقُمْتُ أَلْتَمِسُهُ فِي الْبَيْتِ فَيَقَعُ قَدَمِي عَلَى قَدَمَيْهِ وَهُوَ سَاجِدٌ فَحَفِظْتُ مِنْ قَوْلِهِ وَهُوَ يَقُولُ: «سَجَدَ لَكَ سَوَادِي وَخَيَالِي، وَآمَنَ لَكَ فُؤَادِي، وَأَبُوءُ لَكَ بِالنِّعَمِ، وَأَعْتَرِفُ بِالذُّنُوبِ الْعَظِيمَةِ، ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِرَحْمَتِكَ مِنْ نِقْمَتِكَ، وَأَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ» قَالَتْ: فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَائِمًا وَقَاعِدًا حَتَّى أَصْبَحَ، فَأَصْبَحَ وَقَدِ اضْمَعَدَتْ قَدَمَاهُ، فَإِنِّي لَأَغْمِزُهَا، وَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَتْعَبْتَ نَفْسَكَ، أَلَيْسَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ أَلَيْسَ قَدْ فَعَلَ اللَّهُ بِكَ؟ أَلَيْسَ أَلَيْسَ؟ فَقَالَ: «بَلَى يَا عَائِشَةُ، أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا؟ هَلْ تَدْرِينَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ؟» قَالَتْ: مَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: " فِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ، وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ، وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ، وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ،.

 அன்னை ஆயிஷா ரலி அவர்கள் இரவில் தான் பெருமானாரிடமிருந்த் கற்ற வார்த்தைகளை காலையில் அவர்களிடமே சொல்லிக் காட்டியிருக்கிறாரகள். அப்போது நாயகம் அவர்கள்” ஆயிஷா! இதை கற்றுக் கொண்டு வீட்டீரா? இதை மற்றவரக்ளுக்கும் கற்றுக் கொடுங்கள். இது ஜிப்ரயீல்(அலை) எனக்கு கற்றுக் கொடுத்து சஜ்தாவில் திரும்ப திரும்ப கேட்குமாறு கூறிய துஆ ஆகும் என்றார்கள்.

 فلما أصبح ذكرتهن له ، فقال : "يا عائشةتعلمتهن ؟ " فقلت : نعم ، فقال : "تعلميهن ، وعلميهن ، فإن جبريل عليه السلام علمنيهن ، وأمرني أن أرددهن في السجود " .

பெருமானாரின் இந்த வார்த்தைகளில் இருக்கிற பரிதவிப்பை கவனித்துப் பாருங்கள்!

 அப்படியானால் பாவமே வாழ்க்கையாக இருக்கிற நாம் எந்த அளவில் கசிந்துருகி அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருக்க வேண்டும் ?

 நபி (ஸல்) அவர்கள் பராஅத் இரவின் சிறப்பை பற்றிய இன்னொரு செய்தியையும் ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறர்கள்.

 சஃபான் 15 ம் நாள் இரவின் சிறப்பை தனக்கு ஜிப்ரயீல் எடுத்துக் கூறியதாக கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி

 قالت عائشة : أتاني جبريل عليه السلام فقالهذه الليلة ليلة النصف من شعبان ، ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب ، لا ينظر الله فيها إلى مشرك ، ولا إلى مشاحن ، ولا إلى قاطع رحم ، ولا إلى مسبل ، ولا إلى عاق لوالديه ، ولا إلى مدمن خمر "

 கனம் குடும்பத்தாரின் ஆடுகளின் முடியளவு மக்கள் அன்றைய தினம் நரகத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்றார்கள்.

 அரபுலகில் ஆடு வளர்க்கும் இயல்பு சாதாரணமானது. ஒவ்வொரு குடும்பத்திலும் சில ஆடுகள் இருக்கும். கனம் குடும்பத்தாரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. அது மிக பிரசித்தி பெற்றது. இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கிற கணவாயை நிறைத்து அவர்களுடைய ஆடுகள் நின்று கொண்டிருக்கும்.

 அப்படியானால் அவற்றில் இருக்கும் முடிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கும்?

 துல்பிகார் நக்ஷப்ந்தீ (ஹபிழஹுல்லா) கூறுகிறார். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். வழுக்கை தலைக்காரர். ஒரு தடவை அவர் என்னை சந்திக்க வந்த போது தலையில் முன் பக்கம் கொஞ்சம் முடி இருந்தது. நான் ஆச்சரியப்பட்டு முடி எப்படி வந்த்து என்று கேட்டேன். அவர் சொன்னார் . நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன் அங்கே தலைமுடியை இன்பிளாண்ட் முறையில் உருவாக்கித் தந்தார்கள் என்றார் . நான் கேட்டேன். முழு தலையிலும் முடி வளர்த்திருக்கலாமே என்றேன்.  அதற்கு அவர் “அங்கு ஒரு முடிக்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கிறார்கள். நான் 10 ஆயிரம் டால்ர் கொடுத்து இந்த அளவு முடியை வைத்திருக்கிறேன் “ என்றார்.

அந்த சிறு பகுதியில் 10 ஆயிரம் முடியா என்று நான் ஆச்சரியப்பட்டேன்

 நம்முடைய தலையின் ஒரு சிறு பகுதியில் 10 ஆயிரம் முடி இருக்கிறது என்றால் ஒரு ஆட்டின் தோளில் எவ்வளவு முடிகள் இருக்கும்.

 அப்படியானால் கனம் குலத்தாரின் ஆடுகளின் மொத்த முடியின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?

 அல்லாஹ் அந்த அளவு மக்களை நரகிலிருந்து விடுவிக்கிறான்.  எனும் போது அது நமக்கும் வேண்டு என்று கேட்கிற வாய்ப்பை நாம் தவற விட்ட்து சரியா ? என்று சிந்தித்துப் பார்க்க் வேண்டும்.

 உஸ்மான் பின் அபில் ஆஸ் ரல் அறிவிக்கிற மற்றொரு ஹதீஸ் இருக்கிறது.

 عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ نَادَى مُنَادٍ: هَلْ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ؟ هَلْ مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ؟ فَلَا يَسْأَلُ أَحَدٌ شَيْئًا إِلَّا أُعْطِي إِلَّا زَانِيَةً بِفَرْجِهَا أَوْ مُشْرِكًا.  

 மக்கள் கேட்பதை எல்லாம் அல்லாஹ் தருவதற்கு தயாராக இருக்கிற ஒரு நாளை நாம் அலட்சியம் செய்த்து சரியாகுமா என்றூ சிந்தித்துப் பார்க்க வேண்டும் ?

 இந்த இரவின் மகத்துவத்தை புரிந்து கொண்ட காரணத்தால் மலக்குகள் இதை தங்களது பெரு நாளாக கொண்டாடுகிறார்கள் என அப்துல் காதிர் ஜீலானி ரஹி கூறினார்கள்

 மலக்குகளே பெருநாளாக கொண்டாடும் இந்த இரவை நாம் புறக்கணித்த்து சரியா என்று நாம் யோசிக்க வேண்டும்

 அல்லாஹ்வே நீங்கள் கேளுங்கள் தருகிறேன் என்று அழைக்கிற போது நாம் கேட்காமல் விட்டு விட்டால் என்னாவது ?

 அது எவ்வளவு பெரிய மிஸ்ஸீங்க்?

 நம்மிடம் பாவங்களே இல்லையா ? அல்லது நம்மிடம் கோரிக்கைகளே இல்லை,

 கடன் பிடியில் சிக்கியிருப்பவர்கள்

வீடுகள் இல்லாதவர்கள்

நோயில் சிக்கியிருப்பவர்கள்

வேலை இல்லாதவர்கள்

திருமணம் அமையாமல் காத்திருப்பவர்கள்

குழந்தை இல்லாமல் காத்திருப்பவர்கள்.

கணவன் மனைவியிடையே நிம்மதியின்மையால் வாடுபவர்கள்

கட்டுப்பாடில்லாத பிள்ளைகளால் நொந்து போனவர்கள்

 என நீளும் ஒரு பட்டியல் நம்மிடம் இல்லையா ?

 இதை எல்லாம் கேட்டால் தருகிறேன் என்று அல்லாஹ்வே வாக்களிக்கிற ஒரு நேரத்தில் கொஞ்சம் கையேந்தி நிற்க நாம் அலட்சியம் காட்டியது சரியாகுமா ?

 இப்போதும் கூட எதுவும் முடிந்து விட வில்லை. மார்க்க அறிஞர்கள் இந்த இரவின் வாய்ப்பை தவற விட்டவரக்ளுக்கு ஒரு வழி கூறுவார்கள்.

 திருக்குர் ஆனில் இடம் பெற்றுள்ள பராஅத் இரவு பற்றிய வசனத்தைய்ம் அது போல லைலத்துல் கத்ரு இரவு பற்றிய  வசங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கிற போது இந்த ஆண்டிற்கான நிகழ்வு இன்றைய பராஅத் இரவில் தீர்மாணிக்கப்படுகின்ற என்றாலும் அது லைலத்துல் கத்ர் இரவில் தான் இறுதி வடிவம் பெறுகிற என்று தெரிகிறது எனவே இந்த இரவை தவற விட்ட்தற்காக வருந்தி அல்லாஹ்விடம் இனியும் துஆ செய்யலாம்.

 வருத்தப்பட்டு கேட்கப்படுகிற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் அதிக முக்கியத்துவம் தருகிறான்.

 மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்கள் நல்லவர்கள் அழைத்தால் நீ எப்படி பதில் அளிப்பாய்.  அல்லாஹ் சொன்னான்.  லப்பைக்

கெட்டவர்கள் அழைத்தால் எப்படி பதில் அளிப்பாய் என்று மூஸா அலை  திரும்ப கேட்டார்கள். அல்லாஹ் சொன்னான். லப்பைக்! லப்பைக்! லப்பைக்!

இறைவா ஏன் இந்த வித்தியாசம் என்று மூஸா அலை கேட்டாரக்ள். அல்லாஹ் சொன்னான்.

எனெனில் நல்லவர்களுக்கு தங்களது நன்மைகள் மீது ஒரு நம்பிக்கை இருக்கும். கெட்டவர்களுக்கு தமது பாவங்களைப் பற்றிய பயம் இருக்கும். நான் மன்னிப்பேனோ மாட்டேனோ என்ற பரிதவிப்பு இருக்கும். அதை போக்குவதற்குத்தான் மூன்று முறை லப்பைக் சொல்கிறேன் என்றான்.

எனவே நமது தேவைகளை கேட்பதற்கு கிட்ட்த்திருக்கிற இந்த அரும்மயான வாய்ப்பை பயன்படுத்தி நமது பாவங்களுக்கு உளமுறுக மன்னிப்புக் கேட்பதோடு அல்லாஹ்வுடைய இரக்க சுபாவத்தை முழுமையாக மனதில் நிறுத்தி துஆ கேட்போம்.

திருக்குர் ஆன் அல்லாஹ்வின் இயல்பை கூறுகிறது.

 ٱللَّهُ لَطِيفٌۢ بِعِبَادِهِۦ يَرْزُقُ مَن يَشَآءُ ۖ وَهُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ

அல்லாஹ் அடியார்கள் விவகாரத்தில் மிக கறாரனவன் அல்ல; மிக இளகியவன்.

அதனால் நாம் துஆ கேட்பதற்கான நேரம் கொஞ்சம் தவறியிருந்தாலும் கூட் அவனது நெகிழ்வில் நம்பிக்கை வைத்து நாம் துஆ கேட்போம்.

நிச்ச்யமாக அல்லஹ் நமது பிரார்த்தனைகளை ஏற்றூக் கொள்வான்.

நமது பிரார்த்தனைகளில் தற்கால சூழலில் மிக முக்கியமான இணைத்துக் கொள்ள் வேண்டிய ஒரு காரியம் பாலஸ்தீனின் காஸா பகுத் மக்களுக்காக துஆ கேட்ப்தாகும்.

அமெரிக்கா அதிபராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற டொனால்ட் டிரம்ப் மிகவும் வன்மமானவர் என்பத் அனைவருக்கும் தெரிந்த செய்தி.

அமெரிக்கவுக்கு வேலை தேடி சென்று அந்த நாட்டை வளப்படுத்தும் இந்தியர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் சட்ட்த்திற்கு புறம்பாகவும் தங்கியிருக்கிறார்கள்.

அப்படி சுமார் 150 பேரை பிர்ட்டிஷ் கார்ர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கணக்கில்லாமல் கூட்ஸ் பெட்டியில் அடைத்து அனுப்பியது போல் ஒரு சரியான கழிவறை வசதி கூட இல்லாத விமானத்தில் சுமார் 24 மணி நேரம் பற்ற வைத்து அழைத்து வந்து பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தரஸ் நகரில் கொட்டிச் சென்றுள்ளது, அதுவும் அவர்களை கை விலங்கிட்டு அழைத்து வந்துள்ளது.

டிரம்ப் இவற்றை எல்லாம் விட மிக ஆபத்தான ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.

அவரை எந்த மாதிரியான சர்வாதிகளின் பட்டியிலில் சேர்ப்பது என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி? முட்டாள் சர்வாதிகாரியா ? மூர்க்க சர்வாதிகாரியா ?

பாலஸ்தீனின் ஒரு பகுதியான காஸா பகுதியில் சுமார் 40 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள 95 சதவீத கட்டிடங்களை இஸ்ரேல் அழித்து விட்டது. சுமார் 20 ஆயிரம் குழந்த்தகள் உட்பட 50 ஆயிரம் மக்களை கொன்று குவித்து விட்டது.

இப்போது போர் சற்று ஓய்ந்திருக்கிற நிலையில் இத்தனை கொடூரத்திற்கு நடுவிலும் தங்களது தாய் நிலத்தை பாதுகாப்போம் என்று தீர்மாணம் எடுத்து மக்கள் அங்கு மீள் குடியேறி வருகிறார்கள்.

இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும் அவர்களது வாழ்க்கையின் போராட்டம் வீறு கொண்டு நடை பெற்று வருகிறது. அவ்ர்களுக்கு உதவு வோர் பெரிதாக உதவி செய்வதாக கூறினாலும் அந்த மக்கள் அனுபவிக்கிற கஸ்டங்களுக்கு அவை மிக சாதாரணமனவை – பாலஸ்தீனையும் பைத்துல் முகத்தஸையும் பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் உயிரை துச்சமென மதித்து போராடி வருகிறார்கள். அதன் ஒரு அம்சமாகவே அங்கு அவர்கள் குடியேறிவருகிறார்கள்.

தங்களது தாய் மண்ணில் தங்கியிருக்க ஆசைப்படும் அவர்களது நியாய உணர்வை ஐக்கிய் நாடுகள் சபை ஒப்புக் கொண்டுள்ளது.

அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்ட வுடன் எதோ பேட்டை ரவுடி போல காஸா நிலத்தை காலி செய்து விட நான் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறுகிறார்

காஸா மக்கள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜோர்டானும் எகிப்தும் அடைக்கலம் கொடுக்கும் என்று அவரக்ளின் அனுமதியின்றி ஏதோ அவை தனது காலனிகளைப் போல அவர் பேசுகிறார்.

இந்த உளறல்களை உலகம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கீறது என்று தெரியவில்லை.

இலங்கையில் தமிழர்களை நான் இந்தியாவின் குடியமர்த்துவேன் என்று அவர் சொன்னால் இந்திய அரசு அதை ஒப்புக் கொள்ளுமா ?

தன்னிடம் பலம் இருப்பது போல காட்டிக் கொண்டு அவர் கோணல் மாணாலாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் பேசும் சொற்கள் மிக அபாயகரமானவையாக இருக்கின்றன.

இதற்கடுத்து நாளை சனிக்கிழமை 12 மணிக்குள் ஹமாஸ் அமைப்பிடம் இருக்கிற கைதிகளை விடுவிக்கா விட்டல் இஸ்ரேல் ஹமாஸ் ஒப்பந்தம் முடிந்து விடும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

இது தான் மிகவும் அச்சத்தை தருகிறது.

ஏற்கெனவே பாலஸ்தீன் மக்கள் இஸ்ரேலின் மிக கொடூர தாக்குதலில் உலகின் மிக பரிதாபத்திற்குரிய மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

டிரம்பின் முரட்டுத்தனம் இப்போதைக்கு  காஸாவையும் பாலஸ்தீனையும் இனி என்ன செய்யப் போகிறது என்பது பெரும் பீதியாக உருவெடுத்திருக்கிறது.

டிரம்ப் அப்பட்டமான நவீன் ஹிட்லராக நடந்து கொள்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு சந்தித்த கொடும் சர்வாதிகாரி ஹிடலர்

அவரிடம் ஏராளமான பலம் இருந்த்து. ஜெர்மனியின் அதிபராக உயர்ந்த அவர்

1940-ல் டென்மார்க்கையும், நார்வையும் கைப்பற்றினார் அடுத்த வரும் பிரான்ஸ், பெல்ஜியம் ஹாலந்து, யூகோஸ்லாவியா, கிரீஸ் கைப்பற்றினார் கைப்பற்றிய பிராந்தியங்களில் யூத ஒழிப்பு முதல் நடவடிக்கையாக இருந்தது.

 அவர்கள் மூன்று தலைமுறையாக அங்கு தங்கியிருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் . தங்களது குடியுரிமைய நிருபிக்க தவறுபவர்களை குடும்பம், குடும்பமாக லாரியில் ஏற்றி முகாம்களில் அடைத்தார்.

 ஜெர்மனியில் மட்டுமின்றி தான் கைப்பற்றும் நாடுகளில் இருக்கும் யூதர்களையும் கூட்ஸ் ரயில், லாரி, கண்டெய்னர் பெட்டி உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கானோரை அடைத்து முகாம்களுக்கு அனுப்பினர் அதில்

பாதிபேர் வரும் வழியிலேயே மூச்சு தினறி உயிரிழந்தனர் எஞ்சியவர்களை தினம்தோறும் எண்ணிக்கையில் அடிப்படையில்,கொதிக்கும் நீரில் தள்ளியும், வெறிநாய்களை கொண்டு கடிக்க  வைத்தும் துப்பாக்கியால் சுட்டும், சிறிய அறையில் அடைத்து விஷ வாயுவை செலுத்தியும், விஷ ஊசி போட்டும் வித விதமாக கொன்று குவித்தனர் ஹிட்லர் சாகாக்கள்

 மனித குல சரித்திரத்தில் ஹிட்லர் மேற்கொண்ட யூதப் படுகொலைகளைப் போல் உக்கிரமான இன்னொரு இனப்படுகொலைச் சம்பவம் கிடையாது என்று உலகம் கூறிவந்தது.  இது வேறு யாருக்கும் புரிவதை விட யூதர்களுக்கு புரியும்.

 அந்த யூதர்களுக்கு வரலாற்றில் அவர்களுக்கு கிடைத்திராத நிம்மதியை வழங்கியவர்கள் முஸ்லிம்கள். குறிப்பாக பாலஸ்தீனர்கள்

அத்தகைய பாலஸ்தீனர்களை ஹிட்லரை விட கொடுமையாக அழுக்க டிரம்ப் திட்டமிடுகிறார்.

அவர்களுக்கு நிம்மதியான வீடுகளை தரப்போகிறேன் என்று வஞ்சகமாக பேசுகிறார்.

நாங்கள் தீயினால் சாம்பலாகியிருக்கிற கலிபோர்னிய மக்களுக்கு வாழ்வளிக்கிறோம். கலிபோர்னியாவை எங்களுக்கு விலைக்கு தாருங்கள் என்று கேட்டால் டிரம்ப் சம்மதிப்பாரா ?  

அவர் காஸாவில் அல்லல் படும் மக்ளுக்கு கலிபோர்னியாவில் இடமளிப்பாரா ? என்று நியாயவான்கள் கேட்கிறார்கள்.

ஆனால் எந்த நியாயமான கேள்விக்கும் அவரிடம் பதில்லை.

(இன்னும் சொல்லப் போனால் அவருடைய முன்னிலையில் இப்படி நியாயமான கேள்விகளை எழுப்ப கூட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு பெயர் உலகின் பெரிய ஜனநாயக நாடு).

 எனினும் இந்த நிமிடம் வரை ஒரு பெரிய வல்லரசின் தலைவராக அவர்ர மதித்து மாற்று கோரிக்கை வைக்கும் தலைவர்களுடைய எந்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

அவர் பிட்வாதமாகவே இருக்கிறார்.

நாம் உள்ளம் உருக இந்த கணத்தில் அல்லாஹ்விடம் கையேந்துவோம் இறைவா ! இந்த வருடத்திற்கான தீர்வுகளில் பாலஸதீனத்தின் விடுதலை பைத்துல் முகத்தஸீன் விடுதலை என்பதையும் அப்பகுதி மக்களின் நிம்மதியான வாழ்க்கயையும் தீர்ப்பாக எழுதி விடுவாயாக!

உனது அதிகாரத்தை நாங்கள் நம்பி இருக்கிறோம். உனது கைப்பிடியை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

திருக்குர் ஆன் உத்தரவாதம் அளித்திருக்கிறது.

 إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

 

ஹிட்லர்கள் இடம் பெயர்கிறார்களே தவிர முடிந்து போவதில்லை என்பதற்கு டிரம்பும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.

பழங்காலத்து ஹிடலாரான பிர் அவ்னுக்கு நேர்ந்த கதியை திருக்குர் ஆன் பல இடங்களிலும் உரத்து பேசியிருக்கிறது.

وَقَالَ الْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ وَيَذَرَكَ وَآلِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ (127قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا ۖ إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (128قَالُوا أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِن بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ

 

இதில் பிர் அவனை மட்டுமல்ல; அவனுடைய சகாக்களின் பங்களிப்பையும் பற்றி குர் ஆன் குறிப்பிடுகிறது.

அன்றைய பிர் அவ்ன் அழிக்கப்பட்ட்தை பேசுகிற போது பிர் அவ்னுடைய குடும்பத்தை நாம் நீரில் மூழ்கடித்தோம் என்று அல்லாஹ் சொல்லுவான்.

وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ (50)

பிர் அவ்னை குறிப்பிடாமல் அவனது குடும்பத்தை குறிப்பிடக் காரணம் அவர்களே அவனை தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதாகும்

தீய சக்திகளுக்கு தூபம் போடுபவர்களும் தண்டையிலிருந்து தப்ப முடியாது.

உலகை அச்சுறுத்திய ஹிட்லர் தனது மனைவிக்கு விஷத்தை கொடுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

ஆப்கானிஸ்தானில் தலையிட்ட அமெரிக்காவுக்கு என்ன நிலை ஏற்பட்ட்து என்பதும் உலகம் அறிந்த செய்தி. அங்கிருந்து அவர்கள் ஓடி வர வேண்டியதாயிற்று

இறைவா இன்றைய ஹிட்லர்களுக்கு தகுந்த பாடம் புகட்டு! என்று நாம்  பிரார்த்திப்போம்.

ஹிட்லர்களின் வரலாற்றை மறக்கும் அளவுக்கு காலம் கடந்து விட வில்லை என்பதை ஆதிக்க சக்திகள் உணரட்டும்.

அல்லாஹ் அவர்களுக்கு அதை உணர்த்தட்டும் .

நீதியும் நிம்மதியும் தலைக்கட்ட்டும்

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment