வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 14, 2021

ஐந்து தீமைகள்

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ [الحجرات: 13].

மனிதர்கள் இறைவனிடம் குணத்தால் அழகு பெறுகிறார்கள் . தோற்றத்தினாலோ ஆடைகளாலோ அதிகாரத்தினாலோ அல்ல.

عن أبي هريرة عبدالرحمن بن صخر - رضي الله عنه - قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم))؛ (رواه مسلم).

 உடல் வலுப் பெற்றவர்கள் அல்லாஹ் தூசிகளைப் போலாக்கினான்.

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6)

பலவீனர்களுக்கு அல்லாஹ்விடம் பெரும் கண்ணியம் உண்டு

عَمرِو بنِ العَاصِ رضي اللهُ عنهما: عَن رَسُولِ اللهِ صلى اللهُ عليه وسلم أَنَّهُ قَالَ"هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللَّهِ؟ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللَّهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ، الَّذِينَ تُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لَا يَسْتَطِيعُ لَهَا قَضَاءً- அஹ்மது –

காரணம் பலவீனர்களே நீதிக்கு துணையாக பெரும்பாலும் இருப்பார்கள்.

 روى البخاري في صحيحه مِن حَدِيثِ ابنِ عَبَّاسٍ رضي اللهُ عنهما"أَنَّ هِرَقلَ مَلِكَ الرُّومِ سَأَلَ أَبَا سُفيَانَ عَن أَتبَاعِ النَّبِيِّ صلى اللهُ عليه وسلم هَل هُم أَشْرَافُ النَّاسِ، أَو ضُعَفَاؤُهُمْ؟ فَقَالَ: بَل ضُعَفَاؤُهُمْ، فَقَالَ: هُمْ أَتْبَاعُ الرُّسُلِ

நல்லவர்களாகவும் நன்மைக்கு துணை போகிறர்வர்களாகவும் சிறப்பான குணம் கொண்டவர்களாக இருப்பதுமே அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறும். வசதி வாய்ப்பும் அந்தஸ்த்தும் ஆற்றலும் பெற்றிருந்தும் இத்தைய உயர் குணத்தை கொண்டு நடப்பவர்கள் அல்லாஹ்விடம் மேலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.

 குணத்தால் உயர்ந்தவர்களே மக்களிடமும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள்.

 சிறந்த குணமுடையவர்களாக வாழ்வதற்கு நிறைந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்பதல்ல, சில தீமைகளை தவிர்த்துக் கொண்டாலும் போது,

 இது இஸ்லாத்தின் மிக முக்கிய வழிகாட்டுதல்

 பெருமானார் (ஸல்) கூறினார்கள் மனைவியுடன் உறவு கொண்டாலும் நன்மை உண்டு

وفي بُضْعِ أحدكم صدقةً))، قالوا: يا رسول الله، أيأتي أحدنا شهوته ويكون له فيها أجرٌ؟ قال: ((أرأيتم لو وضعها في حرامٍ، أكان عليه وزرٌ؟ فكذلك إذا وضعها في الحلال كان له أجرٌ))؛ رواه مسلم.

அல்லாஹ் வெறுக்கிற ஐந்து இயல்புகளை ஆன்மீக வழிகாட்டிகள் பட்டியலிட்டுள்ளார்கள். மிக முக்கியமான இந்த இயல்புகளை நாம் சீரமைத்தால் அல்லாஹ்விடமும் மக்களிடமும் நாம் நல்லவர்களாகி விட முடியும்,

 அல்லாஹ் வெறுக்கிற ஐந்து இயல்புகள்/

 1.   உயர்ந்தே நிற்கிற பார்வை.

 பொதுவாக பார்வைய கட்டுப்படுத்துவதை இஸ்லாம் பெரிர்து வலியுறுத்தியுள்ளது.

உண்மையில் இதுதான் ஒரு பெரிய ஆண்மை போராட்டமாகும்.

பார்வையை அலைய விடுகிறவர்கள் தவறில் விழ வாய்ப்புக்கள் அதிகம்,

 பார்வைய கட்டுப்படுத்துவதுதான் தீமைகளை தடுக்கும் கேடயம்.

 இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்தும் முதல் காரணம்

 يا معشر الشباب؛ من استطاع الباءة فليتزوج، فإنه أغض للبصر وأحصن للفرج.

 2.   பொய் பேசுவது

பொய பேசுகிற போது மக்களின் வாயிலிருந்து ஒரு கெட்ட வாடை வீசுகிறது. மலக்குகள் அந்த மனிதனை விட்டு விலகி ஓடுகிறார்கள்.

 يقول النبي عليه الصلاة والسلام :" إذا كذب العبدُ تباعد عنه الملَكُ ميلًا من نتنِ ما جاء به"

الراوي: عبدالله بن عمر المحدث:الترمذي - سنن الترمذي

 பொய் பேசும் இயல்புடையவர்கள் மக்களிடமும் மதிப்பு பெற முடியாது.

 3.   தீமைகளை நோக்கி நடக்கும் கால்கள்

எதிர்பாராமல் தீமைகளில் விழுந்து விடுவதற்கும் திட்டமிட்டே தீமைகள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

 4.   அப்பாவிகளுக்கு தொல்லை தருகிற கை

உடல் ரீதியாக நம்மை அப்பாவிகள் யாரும் எந்த துன்பத்தையும் அடைந்து விடக் கூடாது என்பது ஒரு சிறந்த வாழ்வின் அடிப்படை இலட்சியமாக இருக்க வேண்டும்.

 முஸ்லிமுக்கு முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன இலக்கணம் அதைத்தான் கூறுகிறது.

முஸ்லிம் யார் தெரியுமா ?

عن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - عن النبي - صلى الله عليه وسلم - قال: ((المسلم من سلِم المسلمون من لسانه ويده، والمهاجر من هجَر ما نهى الله عنه))؛ متفق عليه.

முஃமின் யார் தெரியுமா ?

 وعن أَبي هريرة t: أَن النَّبيَّ ﷺ قَالَواللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، قِيلَ: مَنْ يا رسولَ اللَّهِ؟ قَالَالَّذي لا يأْمنُ جارُهُ بَوَائِقَهُ مُتَّفَقٌ عَلَيهِ.

 5.   பிளவுபடுத்தும் நபர்கள்

 தமது நடைமுறைகள் மூலம் தனி குழுக்களை உருவாக்குவோர், அல்லது அதற்கு துணை நிற்பது அல்லது தனது நடை முறைகள் மூலம் ஏற்கெனவே இருக்கும் சமூக அமைப்பில் சர்ச்சையை ஏற்படுத்துவோர். அநீதியான முறையில் குழு மனப்பான்மைக்கு அழைப்பு விடுப்போர்  அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள்.

 இன்றைய முஸ்லிம் சமூகம் இத்தகைய நபர்களால் கடும் சோதனையை சந்தித்து வருகிறது என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

 மூஸா அலை அவர்களிடம் ஹாரூன் அலை அவர்கள் சொன்ன காரணம்

  قَالَ يَا هَارُونُ مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَهُمْ ضَلُّوا (92أَلَّا تَتَّبِعَنِ ۖ أَفَعَصَيْتَ أَمْرِي (93قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي ۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِي إِسْرَائِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِي (94)

 

முஸ்லிம் சமுதாயத்தின் பிரபலமான ஐந்து கடமைகள் இஸ்லாமிய வாழ்வை பலப்படுத்துபவை

இந்த ஐந்து தீமைகள் இஸ்லாமிய வாழ்வை மட்டுமல்ல மனித வாழ்வையே பலவீனப்படுத்தக் கூடியவை.

 இவற்றிலிருந்து விலகி நிற்க நாம் முயல்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment