கடந்த மாதம் 22 ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கோடூரமாக சுட்டதில் 26 நம் நாட்டு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.
இந்த
கொடூர செய்லை செய்தவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் இதற்கு பின்னணியில் பாகிஸ்தான்
இருக்கிறது என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.
இத்
தாக்குதலில் ஈடுபட்டது T R F அமைப்பு என்று கூறிய இந்திய அரசு அது லஷ்கரே தய்யிபா அமைப்பின்
துணை அமைப்பு என்று கூறியது. தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டது.
அவர்களை தேடும் வேட்டையில் தற்போது NIA அமைப்பு ஈடுபட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்குள்
உள்ளானவர்களின் சில வீடுகளை இந்திய ராணுவம் இடித்து தள்ளியது.
நமது
நாட்டிற்குள் இவ்வளவு தூரம் ஊடுறுவி பேராபத்தை விளவிக்க கூடிய ஆயுதங்களை தூக்கி சென்று
சர்வசாதரணமாக சுற்றுலா பயணிகளின் பேர்களை விசாரித்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச்
சென்றவர்களை பிடிக்க முடிந்த்தா என்பதை பற்றி இது வரை ஒரு அறிக்கையை கூட மத்திய அரசு
வெளியிட வில்லை.
ஆனால்
புதன்கிழமை நள்ளிரவிலிருந்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களை தீவிரவாதிகளின் முகாம்கள்
என்று கூறி ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
நம்
நாடு நடத்திய தாக்குதலில் அதிகப்படியான உயிர்ச்சேதங்கள் ஏற்படாதவாறு துல்லியமான இலக்குகள்
குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதலில் 31 பேர் பலியானதாக பாகிஸ்தான்
கூறுகிறது.
எப்போதுமே
அதிகப் பட்ச உணர்ச்சியை வெளிப்படுத்தி போலித்தனமாக மார்தட்டிக் கொண்டிருக்கிற பாகிஸ்தானுக்கு
தன்னுடையை நிலத்தையோ நகரங்களையோ பாதுகாத்துக் கொள்ள கூட துப்பில்லை என்பது இத்தாக்குதலில்
வெளிப்பட்டு விட்டது. இந்தியாவின் பல விமானங்களை அது சுட்டு வீழ்த்திவிட்டதாக கூறுகிறது. அதை சில
அரபு ஊடகங்களும் வெளிநாட்டு ஊடகங்களும் அதை பிரதானப்படுத்துகின்றன என்ற போதும் கூட
அது எடுபட வில்லை. பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தி பல இந்தியவர்களை
கொன்றிருக்கிறது.
பாகிஸ்தானில்
கொல்லப்பட்டவர்களிலும் இந்தியாவில் கொல்லப் பட்டவர்களில் பலர் எதிலும் சம்பந்தமற்ற
அப்பாவிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நம்
நாட்டில் அரசாங்க ஏஜென்ஸிகளும் சமூக ஊடகங்களும் போர் வெறியை நாட்டு மக்களிடையே எண்ணை
ஊற்றி வளர்க்கிற வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆளாளுக்கு ஒரு சேனலை உருவாக்கி
வெறுப்பை வளர்க்கிற வேலையை தம் பங்குக்குச் செய்து வருகிறார்கள்.
நம்முடைய
இப்போதைய கடமை இந்த ஊடக யுத்தத்திற்கு நமது உணர்ச்சிகளை பலி கொடுத்து விடக் கூடாது
என்பது தான். இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி ஊடகங்கள் தம் நாட்டுக்கு சார்பாக
இருப்பதாக கூறி பொய்யான செய்திகளையே பரப்பி வருகின்றன. செய்தியை தொகுக்கிற ஆண்களும்
பெண்களும் கத்தி கத்தி பேசியே மக்களை சூடாக்கி வருகிறார்கள்.
இரண்டு
அரசுகளுமே முழு உண்மையை சொல்வதில்லை. ஒரு சண்டை நடக்கிற நேரத்தில் அப்படி சொல்லவும்
முடியாது. இந்திய விமான்ங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா என்ற கேள்விக்கு இந்திய அதிகாரி
மிக சாமார்த்தியமாக அதை பற்றி தெரிவிக்கிற நேரம் இதுவல்ல என்று சொல்லிச் சென்று விட்டார்.
பாகிஸ்தான் அமைச்சரிடம் நீங்கள் சுட்டு வீழ்த்தியதற்கு
ஆதாரம் எங்கே என்று கேட்ட கேள்வி கேட்ட போது அவரும் கோபப்பட்டு நழுவிச் சென்று விட்டார்.
எனவே
இப்போது கிடைக்கிற செய்திகளில் உண்மை தன்மை என்பது இரு தரப்பிலும் அரைகுறையானதே!
ஆகவே சண்டை பற்றிய செய்திகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதே மக்களுக்கு
நன்மையளிக்கிற செய்தியாகும். இது பற்றி கருத்துக்களை பொறுப்பின்றி பேசுவதையும் நாம்
தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சி விவாதங்கள் பெரும்பாலும் போலித்தனமானவையாக இருக்கின்றன.
அவற்றை கண்டு கொள்ளாமல் விடுவதே நமது மன ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.
நாம்
அல்லாஹ்விடம் ஆபியத்தை வேண்டுவோம்.
பனூ
முறைசிஃ யுத்தத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவரக்ள் வந்த போது எதிரிகள் ஊரை காலி செய்து
சென்று விட்டிருந்தனர். சண்டைக்கான வாய்பில்லாம போய்விட்டதே என்று சிலர் அங்கலாய்த்தனர். வரலாற்றின் ஒரு ஒப்பற்ற
தலைவரான முஹம்மதுந் நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் போர்க்களத்தில் நின்று கொண்டு தோழர்களிடம்
சொன்னார்கள் சண்டைக்கு ஆசைப்படாதீர்கள். ஆபியத்தை கேளுங்கள்! எதிரிகள் கொக்கரித்தாலும் நீங்கள் மவுனமாக இருங்கள்.
لا تَتَمَنَّوْا لقاءَ العَدوِّ، واسألوا اللهَ العافيةَ، إذا
لَقيتُموهم فاثبُتوا، وأكثِروا ذِكرَ اللهِ تَعالى، فإذا صَيَّحوا وأجلَبوا فعَليكمُ
الصَّمتُ.
எந்த ஒரு உன்னதமான தலைமையும் இப்படித்தான் சிந்திக்கும்.
சண்டையின்
முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அது எவ்வளவு தூரத்திற்கான பின்விளைவுகளை
கொண்டு வரும் என்றும் தெரியாது. யுத்தம் தீர்வுகளை தந்ததும் இல்லை.
நிம்மதியை
பெருமானார் வலியுறுத்தி விதம் இன்னும் அலாதியானது.
عن العباس بن عبد المطلب قال قلت يا رسول الله علمني شيئا أسأله الله
عز وجل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا
أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والآخرة திர்மிதி
இது
மேலும் மூர்க்கமாகி விடக் கூடாது என பிரார்த்திப்போம்.
தீவிரவாததிற்கு
எதிரான போரை யுத்த்தில் முடித்து விட முடியாது. ஏனெனில் நேரடியாக சண்டை செய்கிற தைரியம்
இருக்கிற எவனும் கோழைத்தனமான தீவிரவாதச் செயலில் இறங்க மாட்டான்.
ஆயுதம்
இல்லாத அப்பாவிகளிடம் ஆயுதத்தை நீட்டி பயமுறுத்துகிற கீழ்த்தரமான இயல்புகளை கொண்ட குற்றவாளிகள்
கண்டு பிடிக்கப் பட்டு அவர்களுக்கான தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படுவதே
பிரச்சினைக்கு உண்மையான தீர்வாகும்.
ஒருவேளை
அவர்கள் எதிரி நாட்டில் இருந்தால் அங்கிருந்து அவர்களை பிடித்து வர வேண்டும்.
ஹழ்ரத்
முஆவியா ரலி அவரகள் காலத்தில் அவர்களது படை
வீர்ர் ஒருவரை ரோமின் அமைச்சர் ஒருவர் அநீதமாக கன்னத்தில் அறைந்து விட்டார். இதை அறிந்த முஆவியா
ரலி அவர்கள் அந்த அமைச்சரை ரோமிலிருந்து சிரியாவுக்கு கடத்திக் கொண்டு வர வைத்து தன்னுடைய
சபையினர் முன்னே நிறுத்தி விசாரித்து அந்த வீரனை கொண்டு அமைச்சரை அடிக்க வைத்தார்.
பிறகு அவரை மரியாதையோடு திருப்பி அனுப்பினார். என்று வரலாறு சொல்கிறது.
குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அவதிக்கு ஆளாக கூடாது.
இப்போது
நடந்து கொண்டிருக்கிற ஒரு கொடுமை இந்தியாவின் எல்லையில் இருக்கிற காஷ்மீரின் பொதுமக்கள்
பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய
பாதுகாப்பு என்ன உத்தரவாதம் என்று தெரிவிக்கப்பட வில்லை.
துரதிஷ்டமாக
இந்த விவகாரத்தை பற்றி பேசிய வெளிவிவகாரத்துறை செயலாளர்” பாகிஸ்தான் சீக்கியர்களை குறிவைக்கிறது
என்று சொல்லி யிருக்கிறார்.
பாகிஸ்தானின்
தாக்குதலில் காஷ்மீர் பகுதியில் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவ்ர்களில்
சுமார் 9 பேர் முஸ்லிம்கள். மூன்று பேர் சீக்கியர்கள். மற்றவர்களைப் பற்றி அடையாளம் தெரியவில்லை
இந்த
நிலையில் பாகிஸ்தான் சீக்கியர்களை குறிவைக்கிறது என்ற வெளியுறவுத்த்துறை அமைச்சரின்
சொல் ஒன்று பட்டு பாகிஸ்தானை எதிர்த்து நிற்கிற இந்திய மக்களை மத ரீதியாக பிளவு படுத்துகிற
ஒரு சொல்லாகும்.
இந்த
சூழலில் இத்தகை சொற்பிரயோகங்கள் நல்லதல்ல. அது அரசின் நோக்கத்தை சந்தேகத்திற்குள்ளாகி
விடும்.
இந்தியா
ஒன்று திரண்டு தீவிரவாததை எதிர்க்க வேண்டும்.
வேரோடும் வேரடி மண்ணோடும்.
எல்லாம்
வல்ல இறைவன் 140 கோடி மக்களை கொண்ட நமது நாட்டில் மர்மமாக மக்களை அழிக்கிற காரியங்களில்
ஈடுபடுகிற எவரையும் தனது வல்லமையால் தடுத்து நிறுத்துவானாக!
ஆபியத்தின் அடையாளம் மூன்று
அறிஞர்கள் சொல்வார்கள்.
1.
அரசர்களிடம் சிக்காமல் இருப்பது
2.
மருத்துவர்களிடம் செல்லாமல் இருப்பது
3. அடுத்தவர்களிடம் தேவையாகமல் இருப்பது.
அல்ஹம்துலில்லாஹ் இரண்டு நாட்டின் பாராளுமன்ற அவைகளில் ஒலிக்கப்பட வேண்டிய வரலாற்று வார்த்தைகள்
ReplyDeleteAmeen
ReplyDelete