வாழ்க்கை ஒரே போங்கில் இருப்பதில்லை.
நம்மிடமிருந்து
எத்தகைய குறைகள் நிகழ்ந்து விட்டிருந்தாலும் மாற்றத்திற்கு ஆசை பட்டு முயற்சி செய்வோம்
என்றால் நிச்சயமக உயரலாம்.
ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் புழை பின் இயாழ் ரஹ்
ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஈரானுக்கும் துர்க்மினிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரதேசம்
அவரது கொள்ளை ஆளுமை செலுத்துமிடமாக இருந்தது. மக்கள் அவரை பயந்து இரவு நேரத்தில் பயணம்
செய்ய மாட்டார்கள். ஒரு நாள் அவர் ஆசைப்பட்ட ஒரு பெண் மணியை அடைய அவளது வீட்டுச் சுவர்
ஏறிக் குதித்தார். அப்போது அந்த பெண்மணி ஓதிக் கொண்டிருந்த வசனம் அவரது காதில் விழுந்தது.
ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله» قال: يارب قد آن
அவர் அங்கிருந்து திரும்பினார். வாழ்க்கை வேறு வழியில்
திரும்பியது.
மக்களை அச்சுறுத்தும் மனிதராக இருந்த அவர் திருந்திய
பிறகு மக்களின் நேசத்திற்குரிய அறிஞராக ஆனார்.
அவரிடமிருந்து ஏராளமானோர் கல்வியறிவு பெற்றனர். அந்த
பட்டியலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
روى عنه الثوري وابن عيينة والشافعي وابن المبارك والحميدي ويحيى القطان وعبد الرحمن بن مهدي وقتيبة بن سعيد وبشر الحافي.
இமாம்களான ஷாபி, சுப்யான் அத்தவ்ரீ. அப்துல்லாஹ் பின் முபாரக்,
இப்னு உயைனா , யஹ்ய அல் கத்தான். குதைபா பின் ஸஈது, பிஷ்ருல் ஹாபி (ரஹ்) போன்ற பெருமக்கள் அவரிடம் பாடம் கேட்டனர்.
அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹி கூறுவார் என் பார்வையில்
இந்த பூமியின் மேற்பரப்பில் இப்போது புழைலை விட சிறந்தவர் யாருமில்லை.
قال ابن المبارك:
«ما بقى على ظهر الأرض
عندي أفضل من فضيل بن عياض
புழைல் ரஹ் அறிஞரானது மட்டுமல்ல தலை சிற்ந்த இறைநேசராக ஆகி மக்கள்
அல்லாஹ்வின் அஞ்சி வாழும் வழியை சிறப்பாக கற்றுக் கொடுத்தார் . அவரது உபதேசங்கள் ஆன்மீக
உலகில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.
قدر ما يصغر الذنب عندك يعظم عند الله، وبقدر ما
يعظم عندك يصغر عند الله.
நீ பாவங்களை சாதாரணமாக நினைத்தால் அல்லாஹ் அதை பெரிதாக
கருதுவான். நீ பாவங்களை பெரிதாக நினைத்தால் அல்லாஹ் அதை சிறிதாக கருதுவான்.
العمل لأجل الناس هو الشرك
மக்களுக்கு காட்டுவதற்காக நற்காரியங்களை செய்வது ஷிர்க்
ஆகும்.
إني لأعصى االله، فأعرف ذلك في خُلق حماري وخادمي.
நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அதன் விளைவுகளை
என் கழுதையின் குணத்திலும் பணியாளரின் குணத்திலும் பார்க்கிறேன்.
இது போன்ற அவருடைய கருத்துக்கள் ஆயிரம் ஆண்டுகளை
கடந்து இன்றும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
எனவே தீயவர்கள் தீயவர்களாகவே இருப்பதில்லை.
நல்லவர்களாக மாறி நாதாக்களாக உயர்வது உண்டு.
அந்த
வகையில் மிக வித்தியான ஒரு வரலாற்றுக்கு சொந்த்தக் காரர் தான்
عبد الله بن سعد بن أبي السرح
இப்னு அபீ ஸரஹ் என்று சுருக்கமாக அவர் அழைக்கப்படுவதுண்டு.
இதனால்
அவரது பெருமை அதிகரித்தது. பெருமானாருக்கு மாற்றமாக நடந்தார். இஸ்லாத்த்திலிருருந்து
வெளியேறி மக்காவிற்கே திரும்பிச் சென்று விட்டார்.
அங்கு
சென்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக அவர் செய்த பிரச்சாரம் கடுமையாக இருந்தது.
இஸ்லாமின் அடிப்படைகளில் சந்தேகத்தை எழுப்புவதாகவும் பெருமானாரை விட தன்னை பெரிய மேதையாக
காட்டிக் கொள்வதாகவும் இருந்தது. அவரால் ஏற்பட்ட குழப்பங்களின் கனம் கருதி மக்கா வெற்றியின்
போது அவருக்கு மன்னிப்பு கிடையாது அவர் கஃபாவின் திரைச் சீலையை பிடித்துக் கொண்டு நின்றாலும்
அவரை கொன்று விடுங்கள் என்றார்கள்.
கலிமா
சொல்லி முஸ்லிமாகி வஹியின் எழுத்தராக இருந்தவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். மக்காவின்
மக்கள் அனைவரையும் மன்னித்த பெருமானார் அவரை
மன்னிக்க தயாராக இருக்க வில்லை.
அதன்
பிறகு பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது. வரலாறு ஒரு மனிதருக்கு
எப்படி எல்லாம் வாய்ப்புக்களை வழங்க கூடியது என்பதற்கு சாட்சியானது.
இப்படி
நூலிழைல் தப்பினார் இப்னு அபீ ஸரஹ் (ரலி).
அவருடைய திறமைக்கு மற்றுமொரு வாய்ப்பு உமர் ரலி அவர்கள் காலத்தில் கிடைத்தது
லைஸ்
பின் ஸஃது ரலி அவர்கள், அப்துல்லாஹ் பின் அபீ ஸரஹ் மக்கா வெற்றிக்கு பிறக் எந்த தவறன
நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. அவர் அரபுகளின் அறிவாளியாகவும் கொடையாளியாகவும் இருந்தார்
என்று கூறுகிறார்.
எகிபது மக்களிடம் இப்னு அபீ ஸரஹ் கடுமையாக நடந்து கொண்டார். அவர் மீது கலீபாவிடம் புகார் அளித்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு உஸ்மான் ரலி அவருக்கு அறிவுறுதினார். ஆனால் இப்னு அபீ ஸரஹ் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இது ஒருவை கொல்லும் அளவுக்கு கொண்டு சென்று சென்றது.
எகிபதின் மக்கள் ஆளுநருக்கு எதிராக கலீபா உஸ்மான் ரலி அவர்களிடம் கிளர்ந்து சென்றார்கள்.
அந்த கிளர்ச்சியின் இறுதியில் உஸ்மான் ரலி கொல்லப்பட்டார்கள்
இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்களின் நடவடிக்கை வரலாற்றில் மற்றுமொரு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தனது அதிகார வெளிப்பாட்டால் நேர்ந்து விட்ட கலீபாவின் படு கொலைக்காக இப்னு அபீ ஸரஹ் பெரிதும் வருந்தினார்.
அதன் பிறகு அரசியலில் தொடர அவர் விரும்ப வில்லை
அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் எதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை. உஸ்மான் ரலி அவர்களின் கொலைக்கு பழி கேட்டு நடந்த போர்கள் எதிலும் அவர் பங்கேற்க வில்லை.
அரசியலை
விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
ஆளுநர் வாழ்க்கையை துறந்து பாலஸ்தீனில் ஜெரூசலத்திற்கு மேற்கே 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்கலான் நகரில் ஒரு சாமானிய குடிமகனாக வாழ்ந்தார். இறைவா ! எனக்கு ஒரு பஜ்ரு தொழுகையில் மரணத்தை கொடு என்று பிரார்த்தித்தவாறு இருந்தார்.
அவர் மரணமடைந்த அந்த இரவில் அடிக்கடி சுபுஹ் நேரம் ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பணியாளரை அழைத்து அதிகாலையின் குளுமை தெரிகிறது. சுபுஹ் நேரமாகிவிட்டதா என்று பார்த்துவா எனக் கூறினார். அப்போது இறைவா! எனது இறுதி நற்செயலாக பஜரு தொழுகையை ஆக்கு என்று பிரார்த்திக் கொண்டிருந்தார்.
ஒளு
செய்து முதல் ரகத்தில் பாத்திஹா சூராவையும் வல் ஆதியாத் சூராவையும் ஓதினார். அடுத்த
ரகாத்தில் பாத்திஹா சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதினார்.
தொழுகையை
முடித்து வலது புறம் சலாம் கொடுத்தவர் இட்து புறம் சலாம் கொடுப்பதற்கு முன்னதாக இறப்பெய்தினார்.
என்னே ஒரு மரணம் !
இது தருகிற பாடம்
வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளியேறி மீண்டு விட்டால் மிக உயர்ந்த நிலையை அடையாளாம் என்பதாகும். .
இன்றைய நம்முடைய வாழ்க்கை இளைஞர்கள் பெரியவர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தவறுகளை சிரமமின்றி – கூச்சமின்றி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் காலமகும்.
அதை பேஷன் அல்லது சுதந்திரம் என்று கருதி தொடர்ந்து அதில் பயணிப்பது பெரும் பாவமாகிவிடும்.
தீமைகளில் இருந்து விலகி விடுகிற போது அல்லாஹ் இயல்பாகவே அதீத்தமான நன்மைகளை செய்கிற வாய்ப்பை வழங்குகிறான்.
ரோமர்களின் கப்பல் படையை தனியாக தகர்க்கும் வாய்ப்பை இப்னு அபீஸரஹ் ரலி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது போல.
தீமைகளில்
தொடர்கிற போது அவை சிறியதாக இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருட்டாக கருத வில்லையானால்
அல்லாஹ் அதை பெரும் தீமையாக கருதுகிறான் என் புழைல் ர்லி சொன்னது போல சிறிய தீமைகளும்
பெரிதாக தோற்றம் கொண்டு நல் வழி பெறுவதை தடுத்து விடக் கூடும்.
الحمدلله
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஅருமையான ஆக்கம்
ஜஸாகல்லாஹு கைரா ஹளரத்.