வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 08, 2026

மாற்றம் காண்பதே சிறப்பான வாழ்வு

 வாழ்க்கை ஒரே போங்கில் இருப்பதில்லை.

நம்மிடமிருந்து எத்தகைய குறைகள் நிகழ்ந்து விட்டிருந்தாலும் மாற்றத்திற்கு ஆசை பட்டு முயற்சி செய்வோம் என்றால் நிச்சயமக உயரலாம்.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் புழை பின் இயாழ் ரஹ் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஈரானுக்கும் துர்க்மினிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரதேசம் அவரது கொள்ளை ஆளுமை செலுத்துமிடமாக இருந்தது. மக்கள் அவரை பயந்து இரவு நேரத்தில் பயணம் செய்ய மாட்டார்கள். ஒரு நாள் அவர் ஆசைப்பட்ட ஒரு பெண் மணியை அடைய அவளது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்தார். அப்போது அந்த பெண்மணி ஓதிக் கொண்டிருந்த வசனம் அவரது காதில் விழுந்தது.

ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله» قال: يارب قد آن 

அவர் அங்கிருந்து திரும்பினார். வாழ்க்கை வேறு வழியில் திரும்பியது.

மக்களை அச்சுறுத்தும் மனிதராக இருந்த அவர் திருந்திய பிறகு மக்களின் நேசத்திற்குரிய அறிஞராக ஆனார்.

அவரிடமிருந்து ஏராளமானோர் கல்வியறிவு பெற்றனர். அந்த பட்டியலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

روى عنه الثوري وابن عيينة والشافعي وابن المبارك والحميدي ويحيى القطان وعبد الرحمن بن مهدي وقتيبة بن سعيد وبشر الحافي.

இமாம்களான  ஷாபி, சுப்யான் அத்தவ்ரீ. அப்துல்லாஹ் பின் முபாரக், இப்னு உயைனா , யஹ்ய அல் கத்தான். குதைபா பின் ஸஈது, பிஷ்ருல் ஹாபி (ரஹ்)  போன்ற பெருமக்கள் அவரிடம் பாடம் கேட்டனர்.

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹி கூறுவார் என் பார்வையில் இந்த பூமியின் மேற்பரப்பில் இப்போது புழைலை விட சிறந்தவர் யாருமில்லை.

قال ابن المبارك: «ما بقى على ظهر الأرض عندي أفضل من فضيل بن عياض

புழைல் ரஹ்  அறிஞரானது மட்டுமல்ல தலை சிற்ந்த இறைநேசராக ஆகி மக்கள் அல்லாஹ்வின் அஞ்சி வாழும் வழியை சிறப்பாக கற்றுக் கொடுத்தார் . அவரது உபதேசங்கள் ஆன்மீக உலகில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.

قدر ما يصغر الذنب عندك يعظم عند الله، وبقدر ما يعظم عندك يصغر عند الله.

நீ பாவங்களை சாதாரணமாக நினைத்தால் அல்லாஹ் அதை பெரிதாக கருதுவான். நீ பாவங்களை பெரிதாக நினைத்தால் அல்லாஹ் அதை சிறிதாக கருதுவான்.

العمل لأجل الناس هو الشرك

மக்களுக்கு காட்டுவதற்காக நற்காரியங்களை செய்வது ஷிர்க் ஆகும்.

إني لأعصى االله، فأعرف ذلك في خُلق حماري وخادمي.

நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அதன் விளைவுகளை என் கழுதையின் குணத்திலும் பணியாளரின் குணத்திலும் பார்க்கிறேன்.

 இது போன்ற அவருடைய கருத்துக்கள் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே தீயவர்கள் தீயவர்களாகவே இருப்பதில்லை. நல்லவர்களாக மாறி நாதாக்களாக உயர்வது உண்டு.

அந்த வகையில் மிக வித்தியான ஒரு வரலாற்றுக்கு சொந்த்தக் காரர் தான்  

عبد الله بن سعد بن أبي السرح

 

இப்னு அபீ ஸரஹ் என்று சுருக்கமாக அவர் அழைக்கப்படுவதுண்டு.

 இரண்டு முறை அவரது வரலாறு பெரும் சிக்கல்களை சந்தித்த்து. இரண்டு முறையும் அவர் மீண்டு வந்தார். பிந்தைய காலத்தில் அவரது செயல்பாடு மகத்தானதாக இருந்தது.

 இஸ்லாமிற்கு மிக பயனளித்தது. அவரது வாழ்வையும் உன்னதமாக்கியது.

 ஒரு இடை நிலையில் அவரது வராலாற்றை படிப்பவர்கள் அவரை ஒரு வில்லனாக பார்ப்பார்கள். அவரது முழு வரலாற்றையும் வாசிக்கிற போது அவரது வரலாற்றில் இருக்கிற வியப்பிற்குரிய அம்சங்களை காண்பார்கள்/

 இப்னு அபீ ஸரஹ், குறைஷி குலத்தை சார்ந்தவர். உஸ்மான் ரல் அவர்களின் பால் குடிச் சகோதரர். தனது 30 வது வயதில் ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு  இஸ்லாமை தழுவி மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார். சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது அவரது புதிய வாழ்க்கை. பெருமானார் (ஸ்ல) அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எழுதப் படிக்க தெரிந்த்தவராக இருந்த்தால் அவரை வஹி எழுதும் பணியில் பெருமானார் நியமித்தார்கள்.

இதனால் அவரது பெருமை அதிகரித்தது. பெருமானாருக்கு மாற்றமாக நடந்தார். இஸ்லாத்த்திலிருருந்து வெளியேறி மக்காவிற்கே திரும்பிச் சென்று விட்டார்.

 

அங்கு சென்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக அவர் செய்த பிரச்சாரம் கடுமையாக இருந்தது. இஸ்லாமின் அடிப்படைகளில் சந்தேகத்தை எழுப்புவதாகவும் பெருமானாரை விட தன்னை பெரிய மேதையாக காட்டிக் கொள்வதாகவும் இருந்தது. அவரால் ஏற்பட்ட குழப்பங்களின் கனம் கருதி மக்கா வெற்றியின் போது அவருக்கு மன்னிப்பு கிடையாது அவர் கஃபாவின் திரைச் சீலையை பிடித்துக் கொண்டு நின்றாலும் அவரை கொன்று விடுங்கள் என்றார்கள்.

 

கலிமா சொல்லி முஸ்லிமாகி வஹியின் எழுத்தராக இருந்தவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். மக்காவின் மக்கள் அனைவரையும் மன்னித்த பெருமானார்  அவரை மன்னிக்க தயாராக இருக்க வில்லை.

 ஆனால் அவர் உஸ்மான் ரலி அவரக்ளின் வீட்டில் மறைந்து கொண்டார். உஸ்மான்  ரலி அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே இவரிடம் பைஅத் பெறுங்கள் என்று மூன்று முறை கேட்டார். மூன்று முறையும் அவர்ர ஏறிட்டு பார்த்த பெருமானார் . அவரிடம் பை அத் பெறவில்லை. நான்காவது முற்ற உஸ்மான் ரலி அவரக்ள் கேட்டுக் கொண்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் இப்னு அபீ ஸரஹிடம் பைஅத்தை பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது. வரலாறு ஒரு மனிதருக்கு எப்படி எல்லாம் வாய்ப்புக்களை வழங்க கூடியது என்பதற்கு சாட்சியானது.

 இப்னு அபீ ஷரஹுக்கு பை அத் செய்து கொடுத்த பிறகு தனது தோழர்களை பார்த்து திரும்பிய நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் “ உங்களில் விழிப்புணர்வுள்ளவர் எவரும் இல்லையா? நான் மூன்று முறை மறுத்து தாமதித்த நேரத்தில் உங்களில் ஒருவர் அவரை வெட்டிப் போட்டிருக்க கூடாதா என்று கேட்டார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து வந்த அசாதாரணமான வார்த்தை இது. திகைத்து போன தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு கண்களால் ஒரு ஜாடை காட்டியிருக்க கூடாதா என்று கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ ஒரு நபி கண்களால சதி செய்பவராக இருக்க கூடாது என்றார்கள்.

இப்படி நூலிழைல் தப்பினார் இப்னு அபீ ஸரஹ் (ரலி).

 عَنْ سَعْد بن أبي وقَّاص قَالَ : لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَسَمَّاهُمْ وَابْنُ أَبِي سَرْحٍ ، قَالَ : وَأَمَّا ابْنُ أَبِي سَرْحٍ فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ ( أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ ) فَقَالُوا : مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ أَلَا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ قَالَ ( إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ -رواه النسائي  وأبو داود

 இதன் பிறகு குற்ற உணர்ச்சியினால் பெருமானார் (ஸல்) அவர்களை நேரிட்டு பார்ப்பதை அவர் தவிர்த்தார் . எங்காவது எதிர்பட நேர்ந்தால் சலாம் மட்டும் செல்லுவார். முகத்தை காட்ட மாட்டார்.

 தன் உறவுகளை பெரிதும் மதித்த உஸ்மான் ரலி அவர்கள் இதை பற்றியும் பெருமானாரிடம் எடுத்து கூறி தன்னுடைய பால்குடி சகோதரருக்கு உதவினார்கள், அதன் பிறகு அவர் சகஜமானார்.  

 قال عثمان بن عفان للنبي محمد: بأبي أنتَ وأمي، لو ترى أبن أبي السرح يفرُ منك كلما رآك فتبسَّم النبي محمد ثم قال: «أو لم أبايعه وأؤمنه؟» فقال: بلى، أَيْ رسول الله، ولكنه يتذكر عظيم جُرمه في الإسلام، فقال النبي: «الإسلام يَجُبُّ ما كان قبله». فرجع عُثمان إلى عبد الله بن سعد فأخبره، فكان يأتي فَيسلم على النبي صَلَّى الله عليه وسلم، مع الناس

 அவருடைய திறமைக்கு மற்றுமொரு வாய்ப்பு உமர் ரலி அவர்கள் காலத்தில் கிடைத்தது

 எகிப்தின் மேற்கு பகுதிக்கு உமர் ரலி அவர்கள் அவரை ஆளுநராக நியமித்தார்கள்.

 வாழ்க்கை எப்படி பயணிக்கிறது பாருங்கள்! தலைக்கு விலை பேசப் பட்டவர் தலைவராக மாறினார்.

 உஸ்மான் ரலி அவர்கள் அவரை முழு எகிப்தின் ஆளுநராக நியமித்தார்கள். அமரு பின் ஆஸ் ர்லி அவரக்ளிடமிருந்து அதிகாரம் இவரிடம் கைமாறியது

 இதில் இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்கள் எந்த அளவு அரசியலில் உயர்கிறார் என்பதை அளவிட்டுக் கொள்ளலாம்.

 அவரது அந்த ஆட்சிக் காலத்தில் ஆப்ரிக்காவின் பல முக்கிய பிரதேசங்களை அவர் வென்று கொடுத்தார்.

 அன்றைய வல்லரசான ரோமப் போர்ரசுக்கு இப்னு அபீ ஸரஹ் சிம்ம சொப்பனமாக இருந்தார். ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து , ஆப்ரிக்காவின் ஆதி பழங்குடிகள் வாழ்ந்த நுபியா சூடான் ஆகியவற்றை விடுவித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

 ஹிஜ்ரீ 31 ம் ஆண்டில் ரோம பைசாந்திய பேர்ரசுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே தாத் சவாரி என்ற ஒரு யுத்தம் நடைபெற்றது.

 அப்போது மத்திய தரைக்கடல் ரோமப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்தது. தங்களுக்கு நீண்ட ஆதிக்கம் உள்ள உள்ள கடலில் முஸ்லிம் படைகளை மூழ்கடித்து விடுவது என்ற கனவில் ரோமர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஆயிரம் படகுகள் இருந்த்தன். முஸ்லிம்களிடம் 200 படகுகள் இருந்தன. முஸ்லிம்களுக்கு கடலில் போராடி அனுபவம் இருக்க வில்லை.

 முஸ்லிம் படைத்தளபதியான இப்னு அபீ சர்ஹ் ரோம தள்பதிக்கு சண்டையை கரையில் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு கடிதம் எழுதினார். ரோம தளபதி சம்மதிக்க வில்லை. கடலிலேயே முஸ்லிம்களை சமாதியாக்கி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 கடலில்லேயே சண்டை நடந்த்து. தங்களது படகுகளை ரோமர்களின் படுகுகளோடு சேர்த்து கட்டி விடுமாறு இப்னு அபீ ஸரஹ் சொன்னார். முன்னணியில் வீர்ர்கள் கடுமையாக சண்டையிட்டன. கடல் சிவப்பக மாறியது. இதற்கிடையே மாலுமிகளாக இயக்கப் படாத கப்பல்கள் கரையில் தரை ஒதுங்கின.

 வீர்ர்கள் தரையில் இற்ங்கி போரிட்டார்கள். முஸ்லிம்கள் இந்ட யுத்த்தில் வெற்றி பெற்றார்கள் . வரலாற்றில் மதிப்பு மிக்க யுத்தங்களில் ஒன்றாக இது பார்க்க படுகிறது. முஸ்லிம்கள் மத்தியத் தரைக்கடலில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டி ரோமர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டினார்கள்.

 இப்னு அபீ சரஹின் படை 900 ரோம படகுகளை மூழ்கடித்தது.

 அவரை ஆப்ரிக்காவின் வெற்றியாளர் என்று வரலாறு அழைக்கிறது. (ஃபாதிஹ் அப்ரீகா)

லைஸ் பின் ஸஃது ரலி அவர்கள், அப்துல்லாஹ் பின் அபீ ஸரஹ் மக்கா வெற்றிக்கு பிறக் எந்த தவறன நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. அவர் அரபுகளின் அறிவாளியாகவும் கொடையாளியாகவும் இருந்தார் என்று கூறுகிறார்.

எகிபது மக்களிடம் இப்னு அபீ ஸரஹ் கடுமையாக நடந்து கொண்டார்.  அவர் மீது கலீபாவிடம் புகார் அளித்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு உஸ்மான் ரலி அவருக்கு அறிவுறுதினார். ஆனால் இப்னு அபீ ஸரஹ் அவர்களிடம்  கடுமையாக நடந்து கொண்டார். இது ஒருவை கொல்லும் அளவுக்கு கொண்டு சென்று சென்றது.

எகிபதின் மக்கள் ஆளுநருக்கு எதிராக கலீபா உஸ்மான் ரலி அவர்களிடம் கிளர்ந்து சென்றார்கள்.

அந்த கிளர்ச்சியின் இறுதியில் உஸ்மான் ரலி கொல்லப்பட்டார்கள்

இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்களின் நடவடிக்கை வரலாற்றில் மற்றுமொரு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தனது அதிகார வெளிப்பாட்டால் நேர்ந்து விட்ட கலீபாவின் படு கொலைக்காக இப்னு அபீ ஸரஹ் பெரிதும் வருந்தினார்.

அதன் பிறகு அரசியலில் தொடர அவர் விரும்ப வில்லை

அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் எதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை. உஸ்மான் ரலி அவர்களின் கொலைக்கு பழி கேட்டு நடந்த போர்கள் எதிலும் அவர் பங்கேற்க வில்லை.

அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆளுநர் வாழ்க்கையை துறந்து பாலஸ்தீனில் ஜெரூசலத்திற்கு மேற்கே 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்கலான் நகரில் ஒரு சாமானிய குடிமகனாக வாழ்ந்தார்.  இறைவா ! எனக்கு ஒரு பஜ்ரு தொழுகையில் மரணத்தை கொடு என்று பிரார்த்தித்தவாறு இருந்தார்.

அவர் மரணமடைந்த அந்த இரவில் அடிக்கடி சுபுஹ் நேரம் ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பணியாளரை அழைத்து அதிகாலையின் குளுமை தெரிகிறது. சுபுஹ் நேரமாகிவிட்டதா என்று பார்த்துவா எனக் கூறினார். அப்போது இறைவா! எனது இறுதி நற்செயலாக பஜரு தொழுகையை ஆக்கு என்று பிரார்த்திக் கொண்டிருந்தார்.

ஒளு செய்து முதல் ரகத்தில் பாத்திஹா சூராவையும் வல் ஆதியாத் சூராவையும் ஓதினார். அடுத்த ரகாத்தில் பாத்திஹா சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதினார்.

தொழுகையை முடித்து வலது புறம் சலாம் கொடுத்தவர் இட்து புறம் சலாம் கொடுப்பதற்கு முன்னதாக இறப்பெய்தினார்.

என்னே  ஒரு மரணம் !

இது தருகிற பாடம்

வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளியேறி  மீண்டு விட்டால் மிக உயர்ந்த நிலையை அடையாளாம் என்பதாகும். .

இன்றைய நம்முடைய வாழ்க்கை இளைஞர்கள் பெரியவர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தவறுகளை சிரமமின்றி – கூச்சமின்றி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் காலமகும்.

அதை பேஷன் அல்லது சுதந்திரம் என்று கருதி தொடர்ந்து அதில் பயணிப்பது பெரும் பாவமாகிவிடும்.

தீமைகளில் இருந்து விலகி விடுகிற போது அல்லாஹ் இயல்பாகவே அதீத்தமான நன்மைகளை செய்கிற வாய்ப்பை வழங்குகிறான்.

ரோமர்களின் கப்பல் படையை தனியாக தகர்க்கும் வாய்ப்பை இப்னு அபீஸரஹ் ரலி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது போல. 

தீமைகளில் தொடர்கிற போது அவை சிறியதாக இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருட்டாக கருத வில்லையானால் அல்லாஹ் அதை பெரும் தீமையாக கருதுகிறான் என் புழைல் ர்லி சொன்னது போல சிறிய தீமைகளும் பெரிதாக தோற்றம் கொண்டு நல் வழி பெறுவதை தடுத்து விடக் கூடும்.

ல்லாஹ் பாதுகாப்பானாக!    

2 comments:

  1. Anonymous3:35 PM

    الحمدلله

    ReplyDelete
  2. Anonymous5:42 PM

    மாஷா அல்லாஹ்
    அருமையான ஆக்கம்
    ஜஸாகல்லாஹு கைரா ஹளரத்.

    ReplyDelete