நமது மகிழ்ச்சிக்குரிய ஒரு பெருநாளில் அல்லாஹ் கட்டளையிட்ட தர்மத்தை நிறைவேற்றினோம்.
அல்லாஹ் கபூல் செய்வானாக! நமது நோன்பை சுத்தப்படுத்துவானாக்!
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஏழைகளையும் கவனித்துக்
கொள்ளுகிற ஒரு சிந்தனையை சதகத்துல் பித்ரு ஏற்படுத்துகிறது.
حديث عبد الله بن عباس قال:
«فَرَضَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً
لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا
قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ
فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ
பொதுவாக கடமைகளுக்கு கவனிக்கப்படுகிற சில வரையறைகளை சதகத்துல் பித்ரின் போது மார்க்கம் கவனிப்பதில்லை
சிறுவர்களுக்காகவும் கொடுக்க வேண்டும்.
ஏழைகளும் கொடுக்க வேண்டும்.
புத்தி சுவாதீனமற்றவர்களுக்காகவும் கொடுக்க வேண்டும்.
ஏன் சில மத்ஹபுகளின் படி வீட்டிற்கு வந்திருக்கிற விருந்தாளிக்காகவும்
கொடுக்க வேண்டும்.
تجب زكاة الفطر على المكلف عن نفسه، وعمن تلزمه نفقته من المسلمين، ولا يشترط لوجوبها العقل ولا البلوغ ولا الغنى. وتجب على
كل مسلم: رجل أو امرأة، صغيرٍ أو كبيرٍ
இந்த அடிப்படையில் மகத்தான் மனிதப் பண்பை சிறப்பாக வெளிப்படுத்தி விட்டு தொழுகைக்கு வந்தமர்ந்திருக்கிற மக்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அல்லாஹ் வாழ்த்துச் சொல்கிறான்.
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤ وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥﴾ [الأعلى:1
அல்லாஹ் வழங்குகிற இந்த
பரிசு நம் அனைவருக்கும் கிடைக்கும்.
இந்த மக்கள் இப்படி பள்ளிவாசலில்
கூடியிருக்கிறார்களே எதறகாக என்று அல்லாஹ் மலக்குகளிடம் கேட்கிறான்.
அல்லாஹ்விற்கு தெரியாது
என்பதல்ல.. மலக்குகளை சாட்சிகளாக வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு கேட்கிறான். மலக்குகள்
சொல்வார்கள். இறைவா ஒரு மாதம் முழுக்க உனக்காக
நோன்பிருந்த்தற்கான கூலியியை எதிர் பார்த்து வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
அல்லாஹ் கூறுவான்
قوموا مغفورٌ لَكم، قد بدِّلت سيِّئاتُكم حسناتٍ الراوي : أنس بن مالك
சின்ன தவறுகளை அல்லாஹ்
நன்மைகளாக மாற்றிவிடுகிறான். எனில் தவறுகளே இல்லாத மக்கள் எந்த அளவு அல்லாஹ்வின் அருளை
பெற்றுக் கொள்வார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை
இந்த ரமலானில் நாம் பாவ மன்னிப்பை பெற்றுக் கொண்டு நாம் வெற்றி அடைந்து
விட்டோம்.
இனி வரும் காலங்களில்
நமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு
நமக்கு இருக்கிறது
நமது வெற்றியை பாதுகாத்துக் கொள்வதற்கு அல்லாஹ் மிக எளிமையான
ஒரு வழி கூறுகிறான்.
قد أفلح من زكاها وقد خاب من دساها
இதயத்தை பரிசுத்தமாக வைத்துக்
கொண்டால் வெற்றி நிச்சயம். இதயத்தை அழுக்கப்படுத்திக் கொண்டால் தோல்வியே ஏற்படும் என்கிறது
இந்த வசனம்
அல்லாஹ் பாதுகாப்பானாக!
நமது இதயம்,
காமம்.- சுய நலம்- பகை- சந்தேகம் -பொறாமை குணங்களால் அழுக்கடைகிறது.
இந்த குணங்கள் தீவிரமடைகிற
போது நமது புத்தி மிருகமாக மாறிவிடுகிறது.
இந்த குணங்கள் தலைக்கேறியவர்களுக்கு
எந்த நியாயமும் நீதியும் தூய்மையும் நினைவில் நிற்காது. பித்துப் பிடித்துத்தான் அலைவார்கள்.
அவர்களது மனம் சிதைவுக்குள்ளாகியிருக்கும்.
இந்த ஒவ்வொரு குணமும்
நம்மை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதற்கு விளக்கத்தை தேடி நாம் வேறெங்கும் செல்ல
வேண்டிய தேவையில்லை. அன்றாடம் தின்சரி பதிரிகைகளை வாசித்தால் போதுமானது.
இதயத்தை பரிசுத்தப் படுத்திக்
கொள்வதற்கு அல்லாஹ் அருமையான ஒரு வழி சொல்கிறான். அறுவருக்கத் தக்க காரியங்களிலிருந்து விலகி நில்லுங்கள்
- لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴿١٤٨ النساء﴾
அறுவறுப்பானவற்றை பகிரங்கமாக
பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை
இன்றைய நமது வாழ்க்கை
முறையில் நம்மை ஈர்ப்பதற்காக அதிகம் அறுவருப்பான செய்திகளை தூண்டில் முள்களாக பயன்படுத்துகிறார்கள்.
பதிரிகைகளை திறந்தால்
கள்ளத் தொடர்பு காதலர் ஓட்டம் கணவன் மனைவி சண்டை இழிவான காரணங்களுக்கான சண்டைகள் கொலைகள்
போன்ற செய்திகளே நிறைந்து காணப்படுகின்றன.
சமீபத்தில் இந்தியாவின்
ஒரு பெரிய ஆலிம் தான் தினசரி பத்ரிகைகளை படிப்பதை நிறுத்தி விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார்.
அவசியமான செய்திகள் எப்படியும் எனக்கு வந்து சேர்ந்து விடும். பத்ரிகைகளை திறந்தாலே
நமக்கு தேவையற்ற அறுவறூப்பான செய்திகள் தான் இருக்கின்றன.
لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ
என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி நான் பதிரிகை படிப்பதை நிறுத்தி விட்டே ன் என்று கூறினார்.
இது மிக ஆழமான செய்தி தான்.
இன்றைய
மீடியாக்களும் செய்தி ஊடகங்களும் என்ன செய்கின்றன என்றால்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற கீழான உணர்ச்சியை
தூண்டி விட்டு அதற்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன.
அந்த
செய்திகள் தான் வாசகர்களை ஈர்க்கின்றன. அறிவு சார்ந்த ஆராய்ச்சிப் பூர்வமான நல்ல தகவல்கள்
அடங்கிய கருத்துக்கள்ள மக்கள திரும்பியும் பார்ப்பதில்ல என அவர்கள் வாதிடுகிறார்கள்.
அறுவருப்பான செய்திகளை பேசுவதை
அறுவருப்பான செய்திகளை படிப்பதை
அறுவருப்பான காட்சிகளை பார்ப்பதை
அறுவருப்பானவற்றை பார்வோர்டு செய்வதை
தவிர்த்துக் கொள்ள திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும். அல்லாஹ்
இவற்றை விரும்புவதில்லை என்ற வரி அதற்கு போதுமானது.
அறுவருப்பான செய்திகள் பலவற்றின் பின்னணியில் பலவற்றில்
பொய்யும் பகையும் ஒளிந்திருக்கிறது.
தமிழ் மீடியாக்களில் டிரண்டான ஒரு ரீலை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஒரு பிரப்ல பாடகி மனம் குமுறி மீடியாக்களிடம் பேசுகிறார்.
நான் ஒரு வேலையாக ஐத்ராபாத் சென்றிருந்தேன். என கணவர் சென்னையில் இருந்தார்.
அங்கு சாப்பிட்ட்து எனக்கு ஒத்து வரவில்லை. என் கணவருக்கு அதை போனில் சொல்லிக் கொண்டிருக்கும்
போதே மயங்கி விழுந்து விட்டேன். என கணவர் உடனடியாக
இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு என்னை மருத்துவமனையில் சேர்த்தார். அதற்குள் மீடியாகாரர்களான
நீங்கள், பிரபல பாடகிக்கு கணவருடன் தகறாது. ஐதராபாத்தில் தற்கொலைக்கு முயற்சி அறையில்
அரைகுறை ஆடையுடன் மயங்கிக் கிடந்தார் என்று செய்தி போடுகிறீர்கள்.
உங்களுக்கெல்லாம் அக்கிரம்த்திற்கு ஒரு அளவே இல்லையா. எனக்கோ என்கணவருக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னிடம் படிக்கிற பல நூறு
மாணவிகள் என்ன நினைப்பார்கள். அவர்களது மனதில் என்னைப் பற்றி என்ன மாதிரியான எண்ணம்
ஏற்படும் என்பதை எண்ணி நான் மிகவும் கவலை அடைகிறேன்.
என்று கூறியிருந்தார்.
அறுவறுப்பான பல செய்திகளுக்குப் பின்னாலும் இப்படித்தான்
உண்மை துளியும் இருப்பதில்லை. அது பலருடைய மானத்தை பங்கப்படுத்தி விடுகிறது.
இந்த மாதிரியான செய்திகளை நாம் விரும்பி வாசிக்கிறோம்
என்பது தான் இத்தகைய செய்திகளை பரப்புவோருக்கு பெரிய பலமாக இருக்கிறது.
இத்தக்கய அறுவருப்பான செய்திகள் பலரது மானத்தை பறித்து விடுகிற என்பது ஒரு புறம்
இருக்க இன்னொரு புறம் மான்ங்கெட்ட மனிதர்களே அறுவருப்பான செய்திகளையும் காட்சிகளை விளம்பரத்திற்காகவும்
அற்ப காசுக்காகவும் பரப்புகிறார்கள்.
சில பெண்கள் மிக ஆபாசமாக தம்முடைய உடலை படம் பிடித்து ரீல் வெளியிடுகிறார்கள்
. கேட்டால் உடல் தனக்கு இறைவன் கொடுத்த கொடை என்று தத்துவம் பேசுகிறார்கள்.
லைக்
கிடைக்கும் என்பதற்காக அழகான மகளையும் மனைவியையும் பிறருக்கு விருந்தாக்குகிற மனோபாவம்
எதார்த்தமாக மாறியிருக்கிறது.
திறைமைக்கு
கிடைக்கிற பாராட்டு என்று அத்தகையோர் வாதிடுகிறார்கள். ஆனால் அவர்களுடயை பெண்களை கவர்ச்சியாக
காட்டினால் தான் சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்
இது
அப்பட்டமான அநாகரீகம் எதை நம்பி பெருகி வருகிறது என்றால் இதற்கான சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக
இருக்கிறார்கள் என்பதே காரணம்.
நாம்
அத்தக்கய சப்ஸ்கிரைபரில் ஒருவராக இருக்க விரும்புகிறோமா என்று யோசித்து பார்க்க வேண்டும்.
தீய மனிதர்களை – அறுவருப்பாக கண்டண்ட் தருகிறவர்களை பாலோ செய்வது தான் இப்போதைய டிரண்டாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த சப்ஸ்கிரிஸன் – மிக ஆபத்தானது நமது சிந்தனையை அழுக்குப்
படியச் செய்யக் கூடியது நமது செய்ல்பாடுகளை முடக் கிப் போடக் கூடியது. நமது மரியாதையை பாழ்படுத்தி விடக் கூடியது.
கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டு எம் எல் ஏ க்கள் சட்ட மன்ற
அரங்கிற்குள்ளேயே ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது சில வருடங்களுக்கு முன்
பெரிய சர்ச்சையை கிளப்பியது நமக்கு நினைவிருக்காலாம்.
ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இது எவ்வளவு பெரிய அவமானம்
?
இந்த பாலோ அப்புகள் நமது மரியாதையை குலைத்து விடக் கூடியவை என்பது மட்டுமல்ல.
இது அதிகரிக்கிற போது அல்லாஹ்வின் வேதனையையும் கொண்டு வந்து விடுகிற ஆபத்து இருக்கிறது.
இப்னுல் ஜவ்ஸி ஒர் நிகழை அறிவிக்கிறார்.
ஒரு ஊரில் மக்கள் எல்லோரும் இறந்து கிடந்தனர். அந்த ஊர் வாசி ஒரு வரை எழுப்பி
ஈஸா அலை அவர்கள் அதற்கு காரணம் கேட்டார். எங்க ஊர் காரர்கள் தப்பான ஆட்களை பாலோ செய்தனர்
. அதனால் எல்லோரும் அழிக்கப் பட்டோம் என்று அவர் பதில் சொன்னார்.
مرّ عيسى عليه السلام على قرية، فوجد كل من
فيها أمواتا، وهم مطروحون على وجوههم في الأزقّة، فتعجّب عيسى عليه السلام من ذلك،
وقال: يا معشر الحواريين، إن هؤلاء القوم قد
ماتوا على سخط وغضب، ولو ماتوا على رضا من الله، لدفن بعضهم بعضا.
فقالوا: يا روح الله، وددنا أن نعرف قضيّتهم
وخبرهم
. قال: فسأل الله عز وجل في ذلك، فأوحى الله
إليه: إذا كان الليل نادهم، فإنهم يجيبونك.
فلما كان من الليل، صعد عيسى على شرف ونادى:
يا أهل القرية، فأجابه مجيب من بينهم: لبيّك
يا روح الله، فقال: ما قضيتكم, وما خبلاكم؟
فقال: يا روح الله، بتنا في عافية، وأصبحنا
في هاوية.
قال: ولم ذلك؟
قال: لحبنا في الدنيا، وطاعة لأهل المعاصي،
ولم نأمر بالمعروف، ولم ننه عن المنكر
. فقال له عيسى عليه السلام: كيف كان حبكم
للدنيا؟
قال: كحبّ الصبي لأمه؛ إذا أقبلت فرحنا، وإذا
أدبرت جزنّا وبكينا
. فقال له عيسى عليه السلام: يا هذا: ما بال
أصحابك لم يجيبوني؟
قال: إنهم ملجمون بلجام من النار بأيدي
ملائكة غلاظ شداد. قال: وكيف أجبتني أنت من بينهم؟
قال: إني كنت فيهم، ولم أكن منهم، فلما نزل
بهم العذاب
لحقني معهم، فأنا الآن معلّق على شفير جهنّم،
لا أدري: أنجو منها، أم أكبّ فيها
[القصة اوردها ابن الجوزى فى كتاب بحر الدموع]
அறுவருப்பன வற்றை பின் தொடர்வது அழிவை தரும் என்பது இந்நிகழ்வு கற்பிக்கும்
பாடமாகும்.
வெளிநாடுகளில் சுய முன்னேற்ற பயிற்சியளிக்கும் பயிற்றுனர்கள் பலரும் இப்போது
முன்னேற்றத்திற்கான வழிகளை இப்படித்தான் தொடங்குகிறார்கள்.
ஸ்டாப் வாட்சிங்க் போர்னோ சைட்ஸ்
செக்ஸ் காட்சிகளை பார்ப்பதை நிறுத்துங்கள் .
அறுவருப்பான செய்ல்களுக்குள் மூழ்கியிருப்பவர்களால் நல்லவிதமாக எதையும் யோசிக்கவும்
முடியாது, செயல்படுத்தவும் முடியாது.
பரிசுத்தமான ரமலான் ஒரு மாதம் முழுவதும் நம்மை சுத்தமாக வைத்திருந்த்து. பெருநாளின்
மூலம் நம்மை இன்னும் பரிசுத்தமாக ஆக்கி விடை பெற்றுச் செல்கிறது.
இனி அடுத்து வரும் நாட்களில் அல்லாஹ் விரும்பாத
அறுவெருப்பான பேச்சுக்களை அறுவெருப்பான நாம் தவிர்த்துக் கொள்வோம்.
அறுவெருப்பான காட்சிகளை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வோம்
அறுவெருப்பான செய்திகளை ஒற்றை விரல் இழுப்பில் ஒதுக்கி விடுவோம்.
எதை நாம் பார்க்கிறோமோ கேட்கிறோமோ பேசுகிறோமோ அது நமது மரியாதையை தீர்மாணிக்கிறது
என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
அல்லாஹ் நிச்சயம் நம்மை நேசிப்பான்.
ரமலானை முடித்த ஒரு பெருநாளில் உறுதி ஏற்றுக் கொள்வதற்கான ஒரு நல்ல விசயம் இது
அது மட்டுமல்ல நமது முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான காரியமும் கூட
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அனைவருக்கும் ஈதுல் பித்ரு பெருநாள் நலவாழ்த்துக்கள்.