வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 03, 2025

இறை பாதுகாப்பை பெற இறைவனை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

 நாளை சனிக்கிழமையும் அடுத்துள்ள ஞாயிற்றுக் கிழமை முஹர்ரம் 9 10 நாட்களாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த இரண்டு நாட்களும் சிறப்பிற்குரியவை ஆகும்.

இந்த நாட்களுக்கு தாஸூ ஆ ஆஷூரா என்று பெயர் .

9ம் நாள் 10 நாள் என்பது அதன் பெருள்.  

ஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள்.

·         قال  القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة والتعظيم، وهو في الأصل صفة لليلة العاشرة،

 9 – 10 இரு நாட்கள் நோன்பு சுன்னத்து.

 முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!

·       عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم 1915

 ·       عن  أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ))  صحيح مسلم (1982).

·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ  

·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ  - البخاري 2006

சஹாபாக்கள் இந்த நோன்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளையும் கூட ஆர்வப்படுத்துவார்கள்.

 ·       فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصارمن أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.

இந்த நாளை மகிமைப் படுத்தும் வழக்கம் மக்காவிலும் இருந்திருக்கிறது.

 ·       ·       عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ – مسلم

அது குற்றம் செய்த மனிதர்கள் பரிகாரம் தேடிக் கொள்ளும் உபயமாக இருந்த்து.

 · وكان أهل الكتاب يصومونه، وكذلك قريش في الجاهلية كانت تصومه. قال دلهم بن صالح: قلت لعكرمة: عاشوراء ما أمره؟ قال: أذنبت قريش في الجاهلية ذنباً فتعاظم في صدورهم فسألوا ما توبتهم؟ قيل: صوم عاشوراء يوم العاشر من محرم.

9 ம் நாள் நோன்பு வைப்பது இஸ்லாமின் தனித்துவத்திற்கு அடையாளமாகும்.

 عن عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :  قال  حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒரு நாள் மட்டுமே நோன்பு வைக்க முடியும் என்று நினைப்பவர்கள் 10  ம் நாள் மட்டும் கூட நோன்பு வைக்கலாம். இரண்டு நாளையும் சேர்த்தே வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல 9,10 என்றில்லாமல் 10,11 என்றும் கூட நோன்பு நோற்றுக் கொள்ளலாம்.

 ஒரு செயலில் இரு பலன்கள்

 எகிப்து நாட்டின் கொடுங்கோல் அரசன் பிர்அவன், இறைத்தூதர் மூஸா அலை அவர்களையும்  அவர்களுடன் இருந்த பல்லாயிரக் கணக்கான யூதர்களையும்  செங்கடலை பிளக்க வைத்து அதி ஆச்சரியமான முறையில் பாதுகாத்தான் அதே கடலில் அதே பிளவில் பிர் அவ்னையும் அவனுடையா பல்லாயிரக்கணக்கான படை வீர்ரகளை  தண்ணீரில் மூழ்கடித்து அல்லாஹ் அழித்தான்.

 திருக்குர் ஆன் கூறுகிறது . 

وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون(50)  البقرة

 இந்த இரண்டு அம்சங்களிலும் மனித சமூகத்திற்கு பாடம் இருக்கிறது.

 அழிவை தருவதும் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றல் சார்நத்தாகும்.

 இவை இரண்டிற்காகவும். அதாவது தற்காப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் மக்கள் ஏராளமான ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். செய்ய வேண்டியது தான். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ்வே இதை முழுமையாக தர முடியும் என்ற ஆழ்ந்த பக்தியை ஆஷீரா தருகின்றது.

 மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு மிக ஆச்சரியமாக பாதுகப்பட்ட மனிதர்கள், அதே போல மிக ஆச்சரியமாக மரணத்தை சந்தித்தவர்கள் என்ற பட்டியலில் ஒவ்வொரு காலத்திலும் உண்டு.

 சமீபத்தில் குஜராத்தின் அஹ்மதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டிருந்தனர். 14 குழந்தைகள் கூட பலியான அந்த விபத்தில் 38 வயது விசுவாஸ்குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர் தப்பியிருக்கிறார்.

 அதே போல விமானத்தில் தற்காப்பு ஏற்பாடுகளுக்காக பல கடும் நிபந்தனைகள் கடைபிடிக்கப் படுகின்றன. விமானத்தின் கதவுகள் மூடப் பட்டு விட்டால் அதன்பிற்கு விமான அனுமதித்தால் தவிர அதன் கதவு திறக்கப்படாது.

 இரண்டு மாதங்களுக்கு முன் அமீர் என்ற ஒரு லிபிய நாட்டு பயணி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி வந்த நிலையில் அதிகாரிகளின் விசாரனையில் ஏற்பட்ட தாமதத்தால் விமானத்தில் ஏறுவது தாமதமானது. விமானி கதவை மூடிவிட்டார். தாமதமாக வ்ந்த அவருக்காக விமானத்தின் கதவுகளை திறக்க முடியாதுஎ என்று கூறிவிட்டார். அந்த பயணி அழுது கொண்டே அல்லாஹ் என்னை அழைத்துக் கொள்வான் என்று புலம்பிய படி விமான நிலையத்திலேயே உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட அந்த விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஏதோ கோளாறு என்று திரும்பி வந்தது. அப்போது இந்த பயணியை ஏற்றிக் கொள்ள விமானி மறுத்து விட்டார். இரண்டாம் முறையும் விமானம் கோளாறுக்கு ஆளானது. அப்பொதும் திரும்பி வந்த விமானம் அமீரை ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது.  மூன்றாம் முறையும் விமான கோளாறுக்கு உள்ளான போது விமான நிலையத்திற்கு திரும்பிய விமானி இந்த முறை அமீரை ஏற்றாமல் செல்லப் போவதில்லை என்று கூறி அவரை ஏற்றிக் சென்றார். இந்த ஆண்டின் ஹஜ் அனுபவங்களில் மிகவும் பிரப்லமாக பேசப்பட்ட நிக்ழ்வு இது.

 இதுவும் சொல்லிச் செல்கிற செய்தி என்ன வென்றால் தற்காப்பு பாதுகாப்பு என்ற விவகாரங்களில் அல்லாஹ்வே மகத்தான தாக்கம் செலுத்துபவன் .

 மக்கள் பாதுகாப்புக்காக மிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.

 நம்மிடம் இருக்கிற எத்தகைய பாதுகாப்பு ஏற்படுகளிலும் நாம் ஆசுவாசமாக இருந்து விட முடியாது.

 புல்லட் ப்ரூப் ஆடைகள்

அயூள் காப்பீட்டு ஏற்பாடுகள்

 லீக் புரூப், பயர் புரூப், டஸ்ட் புரூப் என்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் வென்று விடுகிற சக்தி அல்லாஹ்வுக்கு இருக்கிறது.

 நிச்சயமாக மனிதர்களுக்கு அல்லாஹ் மகத்தான ஆற்றல்களை கொடுத்திருக்கிறான்.

 மனிதனுக்கு இருக்கிற பார்வையும் மற்ற விலங்குகளுக்கு இருக்கிற பார்வை ஒன்றல்ல, யானை தன் முன் இருக்கிற ஒரு பொருளாக மட்டுமே மனிதனை பார்க்க முடியும். அதற்கு மரத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாது.

கைகள் குரங்கிற்கும் உண்டு. ஆனால் மனிதன் கைகளில் ஸ்பூனை பிடிப்பது போல குரங்களுகளால் பிடிக்க முடியாது

மனிதன் தன்னுடைய பேச்சில் வெளிப்படுவத்துவது போல மற்ற மிருகங்களால் தம்முடைய உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது.

மனிதன் புரிந்து கொள்வது போல மிக நுனுக்கமான செய்திகளை மற்ற உயிரின்ங்களால புரிந்து கொள்ல முடியாது.

 எவ்வளவு தான் நம்முடைய ஆற்றல்கள் சிறப்பானவையாக இருந்தாலும். அந்த சிறப்பை அனுபவிக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் மகத்துவத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

 திருக்குர் ஆனின் கஃஹ்பு அத்தியாயம் துல்கர்ணைன் கட்டிய வலிமையான இரும்பு அணையை பற்றி கூறுகிறது.

அறிவு, தொழில் நுட்பம், வலிமை என அனைத்து அம்சங்களிலும் தன்னுடைய சாதனைகளை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிற சந்தர்ப்பம் அது. ஆனால் அவர் ஒரு உணமையான இறை நம்பிக்கையாளராக அங்கு நடந்து கொண்டார். தன்னுடைய இந்த மாபெரும் சாதனை அல்லாஹ்வின் முன்னிலை கற்றில் பற்ந்து விடக் கூடிய தூசியை போன்றது என்று அவர் தெரிவித்தார்.

 என்னுடைய இந்த அணை பாதுகாப்பானதுதான். ஆனால் அது இறைவனின் தீர்மாணத்திற்கு கீழ் தான் என்று அவர் கூறினார்.

 فَمَا ٱسۡطَٰعُوٓاْ أَن يَظۡهَرُوهُ وَمَا ٱسۡتَطَٰعُواْ لَهُۥ نَقۡبٗا (97) قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ 

 மக்கள் தங்களுடைய ஏற்பாடுகளில் எவ்வளவு கவனமாக இருந்தாலு. தம்மை படைத்த அல்லாஹ்வின் மிக வலிமையான மகத்துவமான ஏற்பாடுகள் குறித்து சிந்தித்தவர்களாகவே இருக்க வேண்டும்.   

 நாம் அல்லாஹ் தருகிற பாதுகாப்பை ஆசைப்பட வேண்டும். அவனையே நமது சிறந்த பாதுகாவலனாக கருத வேண்டு.

 عن عبد الله بن عباس رضي الله عنهما قال : كنت خلف النبي صلى الله عليه وسلم فقال لي : يا غلام إني أعلمك كلمات : احفظ الله يحفظك ، احفظ الله تجده تجاهك ، إذا سألت فاسأل الله ، وإذا استعنت فاستعن بالله ، واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء ، لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ، وإن اجتمعوا على أن يضروك بشيء ، لم يضروك إلا بشيء قد كتبه الله عليك ، رفعت الأقلام وجفت الصحف .

 திரிமிதியில் வருகிற இன்னொரு அறிவிப்பில் நபி மொழி இப்படி இருக்கிறது.

 احفظ الله تجده أمامك ، تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة ، واعلم أن ما أخطأك لم يكن ليصيبك ، وما أصابك لم يكن ليخطئك ، واعلم أن النصر مع الصبر ، وأن الفرج مع الكرب ، وأن مع العسر يسرا .

 அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற

இந்த நபி மொழி சாதாரண அறிவுரை அல்ல அசாதாரணமானது என்று அறிஞர்கள் கூறுவார்கள்

 ஒரு வாகன ஓட்டி எப்படி தன்னுடைய பிரேக்கில் கவனமாக இருப்பாரோ அது போல அல்லாஹ்வில் நாம் கவனமாக இருக்க வேண்டும். பிரேக் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் வண்டிக்கும் நமக்குமான பாதுகாப்பு ஆகும்.

 ஆஷூரா அன்று  நாம் நோன்பு நோற்பது நம்முடைய அனைத்து திட்டங்களையும் கடந்த  அல்லாஹ்விடம் சரண்டையும் ஒரு ஏற்பாடாகும்.

 அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற  

 அல்லாஹ்வின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்து கொள்ள முதலில் தேவைப்படுவது அல்லாஹ்வின் மகத்துவத்தை பற்றிய் சிந்தனை நம்மிடம் இருப்பதாகும்.  

 மாபெரும் ஒரு சாதனையின் போது சுலைமான அலை இதை மறக்க வில்லை.  

 قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ (40

 இரண்டாவது காலையிலும் மாலையிலும் திக்ரு

  عثمان بن عفان -رضى الله عنه- قال: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: "من قَالَ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ"(صحيح أبي داود)

 இப்னுல் கய்யிமுல் ஜவ்ஸீ ரஹ் ஒரு அருமையான கருத்தை சொல்வார்

காலையிலும் மாலையிலும் செய்கிற திக்ருகள் ஒரு கேடயத்தை போல நம்மை பாதுகாக்கின்றன. அது அதிகரிக்க அதிகரிக்க கேடயத்தின் கனம் அதிகரித்து திக்ரு செய்பவனுக்கு சுமையாகி விடுவதில்லை. திக்ரு அதிகரிக்க அதிகரிக்க கேடயத்தில் வலு அதிகரித்து அதை நோக்கி வருகிற அம்பு எய்தவனையே திரும்பிச் சென்று தாக்கி விடுகிறது என்றார்கள்.  

 قال ابن القيم -رحمه الله-: "أذكار الصباح والمساء بمثابة الدرع، كلما زادت سماكته لم يتأثر صاحبه، بل تصل قوة الدرع أن يعود السهم فيصيب من أطلقه"، 

               அல்லாஹ்வை நாம் பாதுகாக்கிற போது அல்லாஹ் நம்மை பாதுகாப்பான என்றான் ஆபத்துக்கள் ஏற்படுகிற போது பாதுகாப்பான் என்று மட்டும் பொருளல்ல;

 அல்லாஹ்வின் பாதுகாப்பு எப்படி எல்லாம் கிடைக்கும்.?

 அல்லாஹ் நம்முடைய மார்க்கத்தில் நமக்கு சந்தேகமோ சஞ்சலமோ வராமல் பாதுகாப்பான். 

كان من دعاء النبي -صلى الله عليه وسلم- الذي يدعو به صلاة الليل: "اهدني لما اختلف فيه من الحق بإذنك، إنك تهدي من تشاء إلى صراط مستقيم"(رواه مسلم).

 ஆபாசமான காரியங்களிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்

 வாழ்க்கையில் இது பிரதான ஒரு காரியமாகு, இதிலிருந்து தப்புவது கடினமானது.

  حديث عمر عن النَّبِيّ -صلى الله عليه وسلم- أنه علمه أن يَقُولُ: "اللَّهُمَّ احفظني بالإسلام قائماً واحفظني بالإسلام قاعداً واحفظني بالإسلام راقداً ولا تطع فِي عدواً ولا حاسداً"(رواه الحاكم

 நம்முடைய அறிவை ஆரோக்கியத்தை பலத்தை  அல்லாஹ் பாதுகாப்பான்

 அறிஞர்கள் கூறுவதுண்டு , குர் ஆனை மனனம்  செய்த அது அதை தொடர்ந்து ஓதி வருபருடைய அறிவு விசாலமாக்கப்படும்.

 وقال بعضهم: "من جمع القرآن متَّع بعقله"

நூறு வயதை கடந்த அபூதபீப் அத்தப்ரீ ஒரு தடவை கப்பலில் தரையில் குதித்து இறங்கினார். மக்கள் இந்த வயதில் இப்படி குதிக்கிறாரே என்று குறை கூறினார்கள். அதற்கவர் சொன்னார். இது பாவம் செய்யாத உடல்

 وكان أبو الطيب الطبري قد جاوز المائة سنة وهو ممتَّع بعقله وقوته، فوثب يوماً من سفينة كان فيها إلى الأرض وثبة شديدة، فعوتب على ذلك فقال: "هذه جوارح حفظناها عن المعاصي في الصغر، فحفظها الله علينا في الكبر".

 அல்லாஹ் நமது சொத்துக்களை பாதுகாப்பான்

 مَّ أَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا)[الكهف:82]، قَالَ ابْنُ عَبَّاسٍ: "حُفِظَا بِصَلَاحِ أَبَوَيْهِمَا"

 ஜின் சைத்தான் போன்ற மறைமுக ஆபத்துக்க்ளிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்.

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ)[الرعد:11]

 மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்;

 وقَالَ كَعْبُ الْأَحْبَارِ: "لَوْلَا أَنَّ اللَّهَ -عَزَّ وَجَلَّ- وَكَّلَ بِكُمْ مَلَائِكَةً يَذُبُّونَ عَنْكُمْ فِي مَطْعَمِكُمْ وَمَشْرَبِكُمْ وَعَوْرَاتِكُمْ؛ لَتَخَطَّفَكُمُ الْجِنُّ".

 நாம் அல்லாஹ் வின் நினைவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவனே மகத்தான வல்லமை படைத்தவன். என்ற தத்துவத்தை ஒவ்வொரு ஆஷூராவும் நம்மிடம் புதுப்பித்துச் செல்கிறது.

 அப்படி வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! 

Thursday, June 26, 2025

ஹிஜ்ரத் நெருக்கடிகளை வெற்றி கொண்ட வழி

இன்று முதல் ஹிஜ்ரீ 1447 ம் ஆண்டு தொடங்குகிறது (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு பெயரிடப் பட்டிருக்கிறது,

 பெருமனார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹிஜ்ரி 17 ம் வருடம்(கி.பி.639) ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ,  ஆண்டுக்கு அடையாளமாக ஒரு பெயர் வேண்டும் . எந்தப் பெயரைச் சூட்டலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில் ஹஜ்ரத் அலி ரலி அவர்கள் தெரிவித்த ஆலோசனையை ஏற்று  இஸலாமிய ஆண்டுக்கு ஹிஜ்ரீ ஆண்டு என ஹழரத் உமர் (ரலி) அவர்கள் பெயர்  சூட்டினார்கள்

 ஆண்டுக்கான அடையாளப் பெயர் முடிவாகிய பிறகு மாதங்களைப்பற்றிய விவாதம் நடந்தது. அரபி மாதங்களுக்கான பெயர்கள் ஏற்கெனவே வழக்கில் இருந்தன. ஆவற்றை மாற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை ஆகவே அவை அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டன.

 ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதமாக எதை வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. சிலர் ரஜப் மாதத்திலிருந்து தொடங்கலாம் என்றனர். சிலர் ரமலானிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றனர். உஸ்மான்(ரலி) அவர்கள் முஹர்ரமிலிருந்து ஆரம்பிக்கலாம் ஏனெனில் அரபிகளின் பண்டைய வழக்கில் முஹர்ரம் முதல் மாதமாக இருந்தது.அது புனித மாதமும் கூட .ஹஜ்ஜை முடித்து விட்டுத் ஹாஜிகள் திரும்பும் மாதம் எனவே முஹர்ரமை முதல்       மாதமாக கருதலாம் என்றார்கள். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருமானார் (ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்த கிபி 622 ம் ஆண்டு ஹிஜ்ரீ முதலாம் ஆண்டாக கருதப்பட்டது. பெருமானார் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் என்றாலும் அந்த ஆண்டின் முஹர்ரம் மாதத்திலிருந்தே ஹிஜ்ரீ ஆண்டு தொடங்குவதாக கணிக்கப்பட்டது. அந்த வகையில் கி.பி 622 ஜுலை 16 ம் தேதி ஹிஜ்ரீ முதலாம் ஆண்டின் முதல் நாளாக கருதப்படுகிறது. ஆன்று தொடங்கிய ஹிஜ்ரீ ஆண்டின் வரலாறு இன்று வெள்ளிக்கிழமை  1447  ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது.

 ஹிஜ்ரத்தில் நான்கு கலீபாக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பங்கு இருக்கிறது.

 ஹிஜ்ரத்தின் போது பெருமானாருடன் பயணித்தவர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்

ஹிஜ்ரீ என்று பெயர் சூட்டியவர் உமர் ரலி அவர்கள். அதே போல தான் ஹிஜ்ரத் செய்வதை பகிரங்கமாக அறிவித்து விட்டு ஹிஜ்ரத் செய்த முதல் சஹாபி உமர் ஆவார்.

ஹிஜ்ரீ என்ற ஆலோசனையை வழங்கியவர் அலீ ரலி அவர்கள். அதே போல பெருமானார்  ஹிஜ்ரத் செய்த போது அவருக்கு பதிலாக அவருடைய படுக்கையில் படுத்திருந்தது அலி ரலி ஆவார்.

ஹிஜீரீ ஆண்டை முஹர்ரமிலிருந்து தொடங்கலாம் என ஆலோசனை வழங்கியவர் உஸ்மான் ரலி அவர்கள் அதே போல முதன் முதலாக நடந்த அபீஸீனிய ஹிஜ்ரத்திற்கு தலைமை ஏற்றுச் சென்றவர் உஸ்மான் ரலி ஆவார்.

 அல்லாஹ் இந்நால்வருடைய அந்தஸ்தையும் உயர்த்தி வைப்பானாக! இவர்கள் அனைவரை உன்னதமாக மதித்தும் பின்பற்றியும் வாழ அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக!

 அல்லாஹ் இந்த புதிய ஆண்டை நமக்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் நன்மைகள் நிரம்பியதாக ஆக்கிவைப்பானாக! அமைதி செழிப்பு நிறைய அல்லாஹ் கிருபை செய்வானாக! தீனுல் இஸ்லாத்தின் கண்ணியத்திற்கும் வெற்றிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவானாக!

 இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரீ என்று அடையாள மிடப்பட்டதற்கு காரணம் செல்கிற போது இஸ்லாமிய அறிஞர்கள் அது இஸ்லாத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக என்று சொல்வார்கள்.

 உண்மை தான்.

 13 ஆண்டுகள் மக்காவிற்குள் சுருண்டு கிடந்த இஸ்லாம் ஹிஜ்ரத் நடந்த 12 நாட்களில் மதீனாவை அமைதியாக ஆட்கொண்டது,

 ஐந்து வருடத்தில் மதீனாவின் கீழ் திசையில் மக்காவிற்கு பக்கத்திலிருக்கிற வாதி முரைஸிஃ வரையும் 7  ஆண்டில் மதீனாவிலிருந்து 100 மைல் மேல் திசையில் சிரியாவின் பாதையில் இருக்கிற கைபரையும் வெற்றி கொண்டதுஹிஜிர் 8 ஆண்டில் மக்காவையும் அதை சுற்றியிருக்க அரபு பிராந்தியத்தையும் வெற்றி கொண்டதுஅடுதத வருடத்தில் பஹ்ரைனையும் யமனையும் வெற்றீ கொண்டதுஹிஜ்ரி 9ல் தபூக் யுத்ததில் வெற்றி கொண்ட போது மேலே சிரியாவின் பாதையில் 700 கிலோ மீட்டர் வரை இஸ்லாம் அதிகாரம் செலுத்தியதுபத்து வருடங்களில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாகவும்,  ஐம்பது வருடத்திற்குள்ளாக உலகின் பெரும் பகுதிக்கு இஸ்லாம் சென்றதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஹிஜ்ரத்தாகும்

 மகத்தான் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த ஹிஜ்ரீ ஆண்டின் 1447 ம் வருடம் பிறக்கிற இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் உலகம் மிகப் பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது.

யூதர்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்

பாலஸ்தீனில் காஸாவை சல்லடையாக்கி விட்டார்கள். காஸாவில் இருக்கிற முஸ்லிம்களை காலி செய்து விட்டு அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்ற திட்டமிடுகிறார்கள்

பாலஸ்தீனில் இருக்கிற முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து அவர்களிடம் இது எங்களின் வீடு காலி செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அந்த வீடுகளில் தங்கிக் கொள்கிறார்கள்.

இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீன முஸ்லிம் வீடுகளுக்கு நுழைந்து தனது ஆயுதங்களை குவித்து வைத்துக் கொள்கிறது. அங்கிருக்கிற முஸ்லிம்களை இரண்டு நாட்களாக  கூட இயற்கை தேவைகளுக்கு கூட வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொள்கிறது. நிர்பந்தமாக அந்த பாலஸ்தீனி தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.  

இவை  மட்டுல்ல இராக்கிலிருந்து சிரியா ஜோர்டான் வரை யுண்டான நிலப்பரப்பிலிருந்து அரபுகள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இது தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என்றும் பகிரங்காமாக அறை கூவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

காஸாவில் 12 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்களே என்று மீடியாக்கள் கேட்கிற போது அவை உயிர் வாழ்ந்தால் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுவார்கள். எனவே அவர்கள் கொல்லப் பட்டது தவறில்லை என்று எதார்த்தமாக பதில் அளிக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ரஷ்ய தலை நகர் மாஸ்கோ விமான நிலையத்தில் ஒரு ஈரானிய குழந்தைக்கு பக்கத்தில் சென்ற யூதன் அந்த குழந்தை அப்படியே தூக்கி தரையில் அடிக்கிற வீடியோ இப்போது உலகம் முழுக்க கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஒருவன் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிற இஸ்ரேலியர்கள் பெரும்பாலும் இதே மனோ நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லிம் உலகம் யூதர்களை எதிர் கொள்வதில் தடுமாறிக் கொண்டிருக்கிற சூழலில் ஏன் எதிர் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற சூழலில் ஹிஜ்ரீ புத்தாண்டு பிறக்கிறது.

பாலஸ்தீனில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலக் அளவில் இஸ்லாமும் முஸ்லிம்களும் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலில் இந்த புதிய ஆண்டு பிறந்திருக்கிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடவும் முன்னேற்றம் காணவும் சமூக அளவில் தனது மதிப்பை நிலைப்படுத்திக் கொள்ளவும் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த அக்கறையோடு யோசிக்க வேண்டிய நேரம் இது.

ஹிஜ்ரத் நெருக்கடிகளுக்கு  சிறப்பான தீர்வை தந்த ஒரு நிகழ்வாகும்.

திருக்குர்ஆன் ஹிஜ்ரத் விளைவாக செழிப்பை கூறுகிற்து.

وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً

மக்காவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஊரே திரண்டு பெருமானாரை கொல்லும் முடிவில் இருந்தது.

இதற்கு முன்னர். தான் விரும்பிய கொள்கையை பேச முடியாத சூழல், ஆதிக்க சக்திகளின் அடாவடித்தனங்கள், மூன்றாண்டு பொருளாதார ஒடுக்கு முறைகள் என பல வகையான நெருக்கடிகளை கடந்து வந்து விட்ட நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அல்லாஹ் கை விட வில்லை.

 

நல்ல ஒதுங்குமிட்த்தையும் مُرَاغَمًا كَثِيرًا அதற்கும் மேம்பட்ட அரசியல் செல்வாக்கையும் وَسَعَةً கொடுத்தான். அதற்குப் பின் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்ந்தது.

  கவனிக்கனும் நிம்மதி செல்வாக்கு இரண்டும் கிடைத்தது.

 ஆனால் இந்த நிம்மதியையும் செல்வாக்கையும் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும்  சில முயற்சிகளை  மேற்கொண்டார்கள் அது இன்றைய சூழலில் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

 உற்ற துணை

 நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் தைரியசாலி என்றாலும் இந்த பயணத்திற்கு தனக்கு ஒரு துணை தேவை என்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

 அபூபக்கர் ரலி அவர்கள் வந்து தான் மதீனாவிற்கு  செல்ல அனுமதி கோரிய போது தனக்கு துணையாக வருமாறு கூறினார்கள். இதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

 فقال أبو بكر: الصحبة يا رسول الله، قال: الصحبة، فبكى أبو بكر رضي الله عنه فرحاً

 ஒரு பணியாளர் தேவை என்று கருதியிருந்தால் அலி ரலி அவர்களையோ ஜைது ரலி அவர்களையோ பெருமானார் தேர்வு செய்திருக்கலாம். வீர்ர் தேவை என்றிருந்தால் உமர் ரலி அவர்களையோ ஹம்ஸா ரலி அவரகளையோ தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால் மிகப் பெருத்தமாக பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை தேர்வு செய்தார்கள்.

 மாஷா அல்லாஹ். இந்த உலகில் உற்ற துணை என்பதற்கு எடுத்துக் காட்ட அபூபக்கர் சித்தீக்ர் ரலி அளவுக்கு ஒரு முன்னுதாரணம் வேறில்லை.

 அபூபக்க்ர் சித்தீக் ரலி அவர்கள்  எத்தகைய ஆபத்தையும் சந்திக்க நேரலாம் என்ற இந்த நெருக்கடியிலும் தான் பெருமானாருடன் உடன் இருக்க மனதார உடன்பட்டார்கள்.

 அவரது மொத்த குடும்பத்தையும் இதில் ஈடுபடுத்தினார்கள்.

 மகன் அப்துல்லாஹ்வை அழைத்து நீ பகல் முழுக்க மக்கா வாசிகளுடன் இருந்து அவரக்ள் என்ன திட்டமிடுகிறார்கள் என்ற செய்தியை எங்களுக்கு இரவு வந்து சொல் என்று ஏற்பாடு செய்தார்கள். 

அடிமை ஆமிர் பின் புகைராவை அழைத்து நீ அந்த மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிரு இரவானதும் எங்களுக்கு பால் கொண்டு வந்து கொடு என்றார்கள்.

 மனைவியிடம் உணவு தயாரிக்க சொன்ன அவர் தனது மகள் அஸ்மாவிடம் நீ சிறுமி. நீ உணவை எடுத்துவா உன்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள்.

 وأمر أبو بكر ابنه عبد الله أن يستمع لهما بمكة ثم يأتيهما ليلاً وأمر عامر بن فهيرة مولاه أن يرعى غنمه نهاره ثم يأتيهما بها ليلاً ليأخذا حاجتهما من لبنها وكانت أسماء بنت أبي بكر تأتيهما بطعامهما

 அவரது மொத்த பணத்தையும் செலவழிக்க தயார் ஆனார்கள்.

 பெருமானாரின் உயிரை காப்பாற்றகிற ஒரு திகில் பயணம். இதில் எவ்வளவு பணத்தேவை ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே   அதுவரை தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டார்கள். ( வியாபாரியான அவர் 6000 திர்ஹம்களை கையில் வைத்திருந்தார். அன்று அது பெரிய பணம்)

 அபூபக்கர் ரலி அவர்களின் தந்தை அபூகுஹாபா மகன் வெளியேறி விட்டதை அறிந்து, என் மகன் எல்லா பணத்தையும் சுருட்டிச் சென்று உங்களை சிரமத்தில் தள்ளி விட்டாரா என்று விசாரித்தார். அப்போது அஸ்மா ரலி அவர்கள் பார்வை குறைவான அவருக்கு ஒரு பாத்திரத்தை மூடி வைத்து அதை தொட்டுக் காட்டி இதில் தேவையானதை வைத்து விட்டு போயிருக்கிறார் என்று சொன்னார்.

 حمل أبو بكر معه جميع ماله -خمسة آلاف، أو ستة آلاف- فأتى أبو قحافة وقد عمي، فقال: إن هذا قد فجعكم بماله ونفسه. فقالت أسماء بنت أبي بكر: كلا، قد ترك لنا خيرا كثيرا. فعمدت إلى أحجار، فجعلتهن في كوة البيت، وغطت عليها بثوب، ثم أخذت بيده، ووضعتها على الثوب، فقالت: هذا تركه لنا. فقال: أما إذ ترك لكم هذا، فنعم.

 கொடுத்தலில் சிறப்பு

 இவ்வளவு பணத்தை பெருமானாருக்காக அபூபக்கர் சித்தீக் ரலி எடுத்து வந்திருந்தாலும் கூட அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்.

இறைவா !  நான் கொடுத்து அதை பெருமானார் (ஸல்) பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உயர்வு எனக்கு வேண்டாம். எனது செல்வத்தை பெருமனார் தனது செல்வமாக எண்ணிக் கொள்ள வைப்பாயாக என பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

அவரது பிரார்த்தனைய அல்லாஹ் ஏற்றான். பெருமானர் (ஸல்) அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்தை தனது பணம் போலவே செலவழிப்பார்கள்.

மஸ்ஜிதுன்னபவிக்கான இடத்தை 10 தீனார்களின் அபூபக்கர் ரலி அவர்களின் பணத்திலிருந்து கொடுத்து விலைக்கு வாங்கினார்கள்.

 அவரது உயிரையுக் கொடுக்க துணிந்தார்.

 எந்த ஆபத்தும் முதலில் தனக்கு வரட்டும் என நினைத்தார்.

 தவ்று குகையில் தங்கு வதற்கு  அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தான் தீர்மாணித்தார்கள் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

 தவ்ரை நோக்கி நடக்கையில் ஒரு சமயம் பெருமானாருக்கு பின்னே நடப்பார். ஒரு சமயம் பெருமானாருக்கு முன்னே நடப்பார். ஏன் இப்படி நடக்கிறீர் என்று பெருமானார் (ஸல்) கேட்ட போது, உங்களை ஆட்கள் தேடி வருகிறார்கள் என்பதை நினைத்து உங்களுக்கு பின்னால் நடக்கிறேன். உங்களுக்கு வழி காட்ட வேண்டுமே என்ற எண்ணம் வருகிற போது உங்களுக்கு முன்னே நடக்கிறேன் என்றார்.  

 தவறு குகைக்குள் பெருமானார் (ஸல்) அவர்கள் நுழைவதற்கு முன்னதாக பெருமானாரை வெளியே நிறுத்தி விட்டு அவர் முதலில் உள்ளே சென்றார். குகை எப்படி இருக்கிறது என்று பரிசோதித்தார். ஆங்காங்கே இருந்த ஓட்டைகளை சிறு கற்களை கொண்டு அடைத்தார். ஒரு ஓட்டயை அடைப்பதற்கு கல் கிடைக்க வில்லை. அங்கே உட்கார்ந்து அந்த ஓட்டையை தனது கால் விரலால் அடைத்தவாறு உள்ளே வருமாறு பெருமானார் (ஸ்ல) அவர்களை அழைத்தார். உள்ளே வந்த பெருமானாருக்கு தனது மடியை காட்டி நீண்ட நேரம் உறமில்லாமல் இருக்கிறீர்கள் உறங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

 என்ன பாக்கியம் ? பெருமானார் (ஸல்) அவர்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களது மடியில் படுத்து உறங்கினார்கள். பெருமானாரின் அழகு முகத்தையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

 உருதுக்கவிஞர் ஒருவர் சொல்வார்

அபூபக்கர் ரலி அவர்களது அன்பும் பெருமானாரின் அழகும் உறவாடிய நேரம் அது

 وقال البيهقي آخر عن عمر

  لقد خرج رسول الله صلى الله عليه وسلم ليلة انطلق إلى الغار ، ومعه أبو بكر فجعل يمشي ساعة بين يديه ، وساعة خلفه ، حتى فطن رسول الله صلى الله عليه وسلم ، فقال : " يا أبا بكر ، ما لك تمشي ساعة بين يدي ، وساعة خلفي " . فقال : يا رسول الله ، أذكر الطلب فأمشي خلفك ، ثم أذكر الرصد فأمشي بين يديك . فقال : " يا أبا بكر ، لو كان شيء لأحببت أن يكون بك دوني ؟ " قال : نعم والذي بعثك بالحق . فلما انتهينا إلى الغار ، قال أبو بكر : مكانك يا رسول الله حتى أستبرئ لك الغار . فدخل فاستبرأه حتى إذا كان في أعلاه ، ذكر أنه لم يستبرئ الجحرة ، فقال : مكانك يا رسول الله حتى أستبرئ . فدخل فاستبرأ ، ثم قال : انزل يا رسول الله . فنزل

 وقد رواه البيهقي من وجه آخر عن عمر ، ، وأنه لما دخل الغار سدد تلك الجحرة كلها ، وبقي منها جحر واحد ، فألقمه كعبه ، فجعلت الأفاعي تنهشه ودموعه تسيل ، فقال له رسول الله صلى الله عليه وسلم : " لا تحزن إن الله معنا

 பெருமானாருக்கு அனைத்து அர்ப்பணிப்புகளுக்கும் தயாரானாவருக்கு வாழ்க்கையின் மிகப் பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன.

 பெருமானார் (ஸல்) அவர்களோடு அவரும் அல்லாஹ்வுமாக மூன்று நாட்கள் வேறு யாரும் இல்லாத தனிமையில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

 عَنْ ‏‏أَبِي بَكْرٍ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏‏قَالَ :‏ قُلْتُ لِلنَّبِيِّ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏وَأَنَا فِي الْغَارِ : لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لأَبْصَرَنَا . فَقَالَ ‏‏: مَا ظَنُّكَ يَا ‏‏ أَبَا بَكْرٍ ‏‏بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا . رواه البخاري (3653)

 பல அடுக்கு  பாதுகாப்பு 

அல்லாஹ்வின் மகத்தான பல அடுக்கு  பாதுகாப்பும் கிடைத்தது. சிலந்தி புறா என்று மட்டுமல்ல. ஒன்று தோற்றுவிடும் எனில் மற்றது என்ற வகையில் அல்லாஹ் மலக்குகளின் பாதுகாப்பையும் வைத்திருந்தான். அங்கு யாராலும் பெருமானாரை நெருங்கியிருக்க முடியாது.

 மலக்குகளின் காவல் ;

 ஒரு நபர் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக அபூபக்கர் ரலி அவரக்ள் கூறிய போது பெருமானார் சொன்னார்கள். இல்லை அவர் ஒரு மலக்கு நம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார்.

  فقال أبو بكر لرجل يراه مواجه الغار : يا رسول الله إنه ليرانا ، فقال : كلا إن ملائكة تسترنا بأجنحتها رواه الطبراني .

 ‏‏மகத்தான இந்த அனுபவத்திற்கு அந்த இருவர் மட்டுமே சொந்தக் காரர்கள்

 فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ

இவ்வாறு பெருமானருடன் தனிமையில் இருந்தது சாமாணியமானதல்ல உமர் ரலி அவரக்ள் சொல்வார்கள்.

قال عمر : والذي نفسي بيده لتلك الليلة خير من آل عمر 

இத்தகைய அற்புதமான துணை ஒவ்வொரு வெற்றிக்கும் தேவை . நெருக்கடிகளை கடந்து செல்லும் போது மிக அத்தியாவசியாக தேவை

 இன்றையை சூழலில் தனித்தனி தீவுகளாய் மனிதர்கள் வாழ்வதை தேர்ந்தெடுத்து விட்ட நிலையில் தங்களுடைய பேங்க் பேலன்ஸு போதும் என்று நினைத்து வாழ்வது மக்களின் இயல்பாக இருக்கிறது.

 அது சரியானது அல்ல; உற்ற துணை அவசியம்

இது தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அவசியம்.

 பெருமானார் (ஸல்) அவரகளது வாழ்வு நெடுகிலும் இதற்கான சான்றுகளை பார்க்கலாம்.

 சமீபத்தில் இரான் இஸ்ரேல் போரின் போது அமெரிக்க இஸ்ரேலுக்கு உற்ற துணையாக இருந்தது.

 ஆனால் இரானுக்கு உற்ற துணை என்று சொல்லிக் கொள்ள எவரும் இருக்கவில்லை.

 மிக நாசூக்கும் நயவஞ்சகத்தனமும் நிறைந்த இன்றைய சூழலில் உற்ற துணைகளை தேடிக் கொள்வதில் முஸ்லிம் சமூகங்களும் நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்.  இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.

 எதிரிகள் எந்த் அக்கிரமத்திலும் ஒன்று சேர்ந்து துணை நிற்கிற போது முஸ்லிம்கள் நியாயத்திற்காக கூட துணை நிறக மனமின்றி இருக்கிறார்கள்

 அமெரிக்க இரானை தாக்கிய போது கத்தார் நாடும் ஐக்கிய அரபு அமீரகமும் அது பற்றி கவலையை வெளியிட்டார்களே தவிர உறுதியான கண்டனத்தை வெளிப்படுத்த வில்லை.

 துணையை தேர்ந்தெடுத்தல் அதற்கேற்ப நடத்தல்; துணையாக இருக்க சம்மதித்தல் அதற்கேற்ப நடத்தல் என்பதில் இரு தரப்பினருக்கும் சம பொறுப்பு இருக்கிறது.   பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும் இருந்தது போல.

 சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற உத்திகள்

 ஹிஜ்ரத் வெற்றி பெற்றதில் மற்றொரு முக்கிய பங்கு உத்திகளுக்கு இருக்கிறது.

 பாதுகாப்புக்கு தேவையான உத்திகளும் எச்சரிக்கைகளும் காலத்திற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும்.

 அன்றைய அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கையாண்ட உத்திகள் அன்று அவர்களது போராட்ட பயணத்தை வெற்றி பெற வைத்தது.

 இரண்டு ஒட்டகைகளை தயார் செய்து அப்துல்லாபின் அரீகத் என்ற முஸ்லிம் அல்லாத பாலைவனப் பாதைகளில் அனுபவமுள்ள ஒருவரிடம் ஒப்படைத்து மூன்று நாட்கள் கழித்து தவறு மலையடிவாரத்திற்க் வரச் சொல்லியிருந்தார்கள்.   

உதவிக்கு ஆமிர் பின் புஹைராவையும் வைத்துக் கொண்டார்கள்.

 குகையில் தங்கியிருந்த்து இருவர் தான் என்றாலும் ஹிஜ்ரத்தின் பயணத்தின் நான்கு பேர் இருந்தார்கள்.

  மதீனாவிற்கு வழக்கமாக செல்கிற பாதை இல்லாமல் வேறு பாதையை தேர்ந்தெடுத்தது,

 வழிகாட்டியை வைத்துக் கொண்டது

ஒட்டகைகளை பாதுகாத்துக் கொண்டது.

உதவிக்கு ஒரு ஆளை வைத்துக் கொண்ட்து

எடுத்தவுடன் மதீனாவிற்குள் நுழையாமல் மிக குபாவில் மிக நம்பிக்கையான இடத்தில் தங்கிக் கொண்டது.

மதீனாவில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த அவ்ஸ் கஜ்ரஜ்களின் சகோதர சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது.

அகதிகள் அனைவரும் மக்காவிலிருந்து வந்து சேர்ந்த பிறகு ஒரு கூட்டமாக மதீனாவிற்குள் சென்றது.  

ஆகியவை  அனைத்தும் பெருமானாரின் மகத்தான நீண்ட ஆய்வுக்குரிய  உத்திகளாகும்

ஆய்வு செய்யப்பட வேண்டிவை ஆகும்.

 இன்றய சூழலில் நாம் வெற்றி பெறுவதற்கு இப்போதைக்கு தேவையான உத்திகளை முஸ்லிம்கள் ஆராயனும்.

 ஈமானிய உறுதியின் நவீன வெளிப்பாடுகள்

فَمَنِ اعْتَدَىٰ عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ (194

அமெரிக்காவை ஈரான் தாக்கியது. ஈரான் அமெரிக்காவை திருப்பி தாக்கினால் அது பெரிய யுத்த்திற்கு கொண்டு போய் விடும் என்று பலரும் பயந்தார்கள். எங்கள் மீது வீசப்பட்ட்து போல 18 ஏவுகணைகளை உங்கள் மீது வீசுவோம் என்று சொல்லி விட்டு கத்தாரிலுள்ள அமெரிக்க் தளத்தின் மீது இரான் வீசியது. இது இந்த வக்கயிலான ஒரு நடவடிக்க்கயாக பார்க்கலாம். கோழைத்தனமாக இருந்து விடாமல். அக்கிரமத்திற்கு பதில் நடவடிக்கை எடுத்தது.  

 எதிரிகளை விட வலிமையான ஆயுதங்களும் வழி முறைகளு.

 எதிரிகள் குண்டு வீசுகிறார்கள் , நாமும் குண்டு வீசுகிறோம். அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் . நாம் அதிக பாதிப்பை சந்திக்கிறோம்.

இந்த சூழலில் எதிரிகளை எதிர் கொள்ள வேறு என்ன சாத்தியமான வழிகள் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும்.

உளவு அமைப்புக்கள் கூர் தீட்டப்பட வேண்டும்,

இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் தொடங்கிய உடனேயே பல அனு ஆராய்ச்சியாளர்களை இரானின் மிக மூத்த ராணுவ தலைவர்களை சட சட வென்று கொன்று விட்டது.

இது இஸ்ரேலின் உளவுத்திறமையாகும்.

இஸ்ரேல் இரானுக்குள் ஒரு டிரோன் தொழிற்சாலையையே நட்த்திக் கொண்டிருருந்திருக்கிறத் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஈரானின் தலைவரை எங்களால் கொன்று விட முடியும் என்று இஸ்ரேல் கொக்கரித்தது.

ஈரான் ஏன் இதே முறையில் இஸ்ரேலுக்குள் ஊடுறுவ முடியவில்லை என்று சிந்திக்கவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியாகும்.

இஸ்ரேலில் யூதர்களை வன்முறை பாதைக்கு தூண்டுகிற சிலரின் கதை முடிந்திருக்குமானால் இஸ்ரேலியர்கள் மொத்தமுகாக வன்முறையாளர்களாக மாறியிருக்க மாட்டார்கள்.     

நம்முடைய தற்போது இந்த நடைமுறைய கையாண்டு தீவிரவாத்த்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதை நாம் காணலாம்

 எதிரிகளை நிலை குலையச் செய்யும் ராஜ தந்திர உரையாடல்கள்

 கத்தர் நாட்டை இரான் தாக்கியதும் கத்தார் நாடு தனக்கு இரானை தாக்கும் உரிமை இருப்பதாக கூறியது. உடனே இரான் கத்தரிடம் வருத்தம் தெரிவித்து. சகோதரத்துவ உறவை நாங்கள் கவனித்துக் கொள்வோம் என்று கூறியது. கத்தரும் இதை ஏற்றுக் கொண்டது.

இது ஒரு எதார்த்த புரிதலாகும்.

கத்தார் அமெரிக்கா வுடன் இருப்பது தவறு என்று வாதிட்டாலோ அல்லது கத்தாரிடம் மன்னிப்பு கோராமல் இருந்தாலோ பிரச்சனை பெரிதாகி இருக்கும்.

எனவே இது போன்ற இன்னும் சிறப்பான ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் உலகம் பக்குவப்பட வேண்டும்.

 ஹிஜ்ரத் அனைத்துக்கும் வழிகாட்டுகிறது.

 அல்லாஹ் இந்த புதிய ஆண்டை நமக்கும் நம சமுதாயத்திற்கும் உலக மக்களுக்கும் நிம்மதியை சந்தோஷத்தை தருகிற ஆண்டாக ஆக்கியருள்வானாக!