வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 08, 2026

மாற்றம் காண்பதே சிறப்பான வாழ்வு

 வாழ்க்கை ஒரே போங்கில் இருப்பதில்லை.

நம்மிடமிருந்து எத்தகைய குறைகள் நிகழ்ந்து விட்டிருந்தாலும் மாற்றத்திற்கு ஆசை பட்டு முயற்சி செய்வோம் என்றால் நிச்சயமக உயரலாம்.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் புழை பின் இயாழ் ரஹ் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஈரானுக்கும் துர்க்மினிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரதேசம் அவரது கொள்ளை ஆளுமை செலுத்துமிடமாக இருந்தது. மக்கள் அவரை பயந்து இரவு நேரத்தில் பயணம் செய்ய மாட்டார்கள். ஒரு நாள் அவர் ஆசைப்பட்ட ஒரு பெண் மணியை அடைய அவளது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்தார். அப்போது அந்த பெண்மணி ஓதிக் கொண்டிருந்த வசனம் அவரது காதில் விழுந்தது.

ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله» قال: يارب قد آن 

அவர் அங்கிருந்து திரும்பினார். வாழ்க்கை வேறு வழியில் திரும்பியது.

மக்களை அச்சுறுத்தும் மனிதராக இருந்த அவர் திருந்திய பிறகு மக்களின் நேசத்திற்குரிய அறிஞராக ஆனார்.

அவரிடமிருந்து ஏராளமானோர் கல்வியறிவு பெற்றனர். அந்த பட்டியலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

روى عنه الثوري وابن عيينة والشافعي وابن المبارك والحميدي ويحيى القطان وعبد الرحمن بن مهدي وقتيبة بن سعيد وبشر الحافي.

இமாம்களான  ஷாபி, சுப்யான் அத்தவ்ரீ. அப்துல்லாஹ் பின் முபாரக், இப்னு உயைனா , யஹ்ய அல் கத்தான். குதைபா பின் ஸஈது, பிஷ்ருல் ஹாபி (ரஹ்)  போன்ற பெருமக்கள் அவரிடம் பாடம் கேட்டனர்.

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹி கூறுவார் என் பார்வையில் இந்த பூமியின் மேற்பரப்பில் இப்போது புழைலை விட சிறந்தவர் யாருமில்லை.

قال ابن المبارك: «ما بقى على ظهر الأرض عندي أفضل من فضيل بن عياض

புழைல் ரஹ்  அறிஞரானது மட்டுமல்ல தலை சிற்ந்த இறைநேசராக ஆகி மக்கள் அல்லாஹ்வின் அஞ்சி வாழும் வழியை சிறப்பாக கற்றுக் கொடுத்தார் . அவரது உபதேசங்கள் ஆன்மீக உலகில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.

قدر ما يصغر الذنب عندك يعظم عند الله، وبقدر ما يعظم عندك يصغر عند الله.

நீ பாவங்களை சாதாரணமாக நினைத்தால் அல்லாஹ் அதை பெரிதாக கருதுவான். நீ பாவங்களை பெரிதாக நினைத்தால் அல்லாஹ் அதை சிறிதாக கருதுவான்.

العمل لأجل الناس هو الشرك

மக்களுக்கு காட்டுவதற்காக நற்காரியங்களை செய்வது ஷிர்க் ஆகும்.

إني لأعصى االله، فأعرف ذلك في خُلق حماري وخادمي.

நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அதன் விளைவுகளை என் கழுதையின் குணத்திலும் பணியாளரின் குணத்திலும் பார்க்கிறேன்.

 இது போன்ற அவருடைய கருத்துக்கள் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே தீயவர்கள் தீயவர்களாகவே இருப்பதில்லை. நல்லவர்களாக மாறி நாதாக்களாக உயர்வது உண்டு.

அந்த வகையில் மிக வித்தியான ஒரு வரலாற்றுக்கு சொந்த்தக் காரர் தான்  

عبد الله بن سعد بن أبي السرح

 

இப்னு அபீ ஸரஹ் என்று சுருக்கமாக அவர் அழைக்கப்படுவதுண்டு.

 இரண்டு முறை அவரது வரலாறு பெரும் சிக்கல்களை சந்தித்த்து. இரண்டு முறையும் அவர் மீண்டு வந்தார். பிந்தைய காலத்தில் அவரது செயல்பாடு மகத்தானதாக இருந்தது.

 இஸ்லாமிற்கு மிக பயனளித்தது. அவரது வாழ்வையும் உன்னதமாக்கியது.

 ஒரு இடை நிலையில் அவரது வராலாற்றை படிப்பவர்கள் அவரை ஒரு வில்லனாக பார்ப்பார்கள். அவரது முழு வரலாற்றையும் வாசிக்கிற போது அவரது வரலாற்றில் இருக்கிற வியப்பிற்குரிய அம்சங்களை காண்பார்கள்/

 இப்னு அபீ ஸரஹ், குறைஷி குலத்தை சார்ந்தவர். உஸ்மான் ரல் அவர்களின் பால் குடிச் சகோதரர். தனது 30 வது வயதில் ஹிஜ்ரீ 6 ம் ஆண்டு  இஸ்லாமை தழுவி மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார். சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது அவரது புதிய வாழ்க்கை. பெருமானார் (ஸ்ல) அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எழுதப் படிக்க தெரிந்த்தவராக இருந்த்தால் அவரை வஹி எழுதும் பணியில் பெருமானார் நியமித்தார்கள்.

இதனால் அவரது பெருமை அதிகரித்தது. பெருமானாருக்கு மாற்றமாக நடந்தார். இஸ்லாத்த்திலிருருந்து வெளியேறி மக்காவிற்கே திரும்பிச் சென்று விட்டார்.

 

அங்கு சென்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக அவர் செய்த பிரச்சாரம் கடுமையாக இருந்தது. இஸ்லாமின் அடிப்படைகளில் சந்தேகத்தை எழுப்புவதாகவும் பெருமானாரை விட தன்னை பெரிய மேதையாக காட்டிக் கொள்வதாகவும் இருந்தது. அவரால் ஏற்பட்ட குழப்பங்களின் கனம் கருதி மக்கா வெற்றியின் போது அவருக்கு மன்னிப்பு கிடையாது அவர் கஃபாவின் திரைச் சீலையை பிடித்துக் கொண்டு நின்றாலும் அவரை கொன்று விடுங்கள் என்றார்கள்.

 

கலிமா சொல்லி முஸ்லிமாகி வஹியின் எழுத்தராக இருந்தவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள். மக்காவின் மக்கள் அனைவரையும் மன்னித்த பெருமானார்  அவரை மன்னிக்க தயாராக இருக்க வில்லை.

 ஆனால் அவர் உஸ்மான் ரலி அவரக்ளின் வீட்டில் மறைந்து கொண்டார். உஸ்மான்  ரலி அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே இவரிடம் பைஅத் பெறுங்கள் என்று மூன்று முறை கேட்டார். மூன்று முறையும் அவர்ர ஏறிட்டு பார்த்த பெருமானார் . அவரிடம் பை அத் பெறவில்லை. நான்காவது முற்ற உஸ்மான் ரலி அவரக்ள் கேட்டுக் கொண்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் இப்னு அபீ ஸரஹிடம் பைஅத்தை பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பிறகு பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்ன வார்த்தை மிக முக்கியமானது. வரலாறு ஒரு மனிதருக்கு எப்படி எல்லாம் வாய்ப்புக்களை வழங்க கூடியது என்பதற்கு சாட்சியானது.

 இப்னு அபீ ஷரஹுக்கு பை அத் செய்து கொடுத்த பிறகு தனது தோழர்களை பார்த்து திரும்பிய நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் “ உங்களில் விழிப்புணர்வுள்ளவர் எவரும் இல்லையா? நான் மூன்று முறை மறுத்து தாமதித்த நேரத்தில் உங்களில் ஒருவர் அவரை வெட்டிப் போட்டிருக்க கூடாதா என்று கேட்டார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் நாவிலிருந்து வந்த அசாதாரணமான வார்த்தை இது. திகைத்து போன தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு கண்களால் ஒரு ஜாடை காட்டியிருக்க கூடாதா என்று கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ ஒரு நபி கண்களால சதி செய்பவராக இருக்க கூடாது என்றார்கள்.

இப்படி நூலிழைல் தப்பினார் இப்னு அபீ ஸரஹ் (ரலி).

 عَنْ سَعْد بن أبي وقَّاص قَالَ : لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَّا أَرْبَعَةَ نَفَرٍ وَامْرَأَتَيْنِ وَسَمَّاهُمْ وَابْنُ أَبِي سَرْحٍ ، قَالَ : وَأَمَّا ابْنُ أَبِي سَرْحٍ فَإِنَّهُ اخْتَبَأَ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَلَمَّا دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ إِلَى الْبَيْعَةِ جَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلَاثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلَاثٍ ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ ( أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلُهُ ) فَقَالُوا : مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ أَلَا أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ قَالَ ( إِنَّهُ لَا يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الْأَعْيُنِ -رواه النسائي  وأبو داود

 இதன் பிறகு குற்ற உணர்ச்சியினால் பெருமானார் (ஸல்) அவர்களை நேரிட்டு பார்ப்பதை அவர் தவிர்த்தார் . எங்காவது எதிர்பட நேர்ந்தால் சலாம் மட்டும் செல்லுவார். முகத்தை காட்ட மாட்டார்.

 தன் உறவுகளை பெரிதும் மதித்த உஸ்மான் ரலி அவர்கள் இதை பற்றியும் பெருமானாரிடம் எடுத்து கூறி தன்னுடைய பால்குடி சகோதரருக்கு உதவினார்கள், அதன் பிறகு அவர் சகஜமானார்.  

 قال عثمان بن عفان للنبي محمد: بأبي أنتَ وأمي، لو ترى أبن أبي السرح يفرُ منك كلما رآك فتبسَّم النبي محمد ثم قال: «أو لم أبايعه وأؤمنه؟» فقال: بلى، أَيْ رسول الله، ولكنه يتذكر عظيم جُرمه في الإسلام، فقال النبي: «الإسلام يَجُبُّ ما كان قبله». فرجع عُثمان إلى عبد الله بن سعد فأخبره، فكان يأتي فَيسلم على النبي صَلَّى الله عليه وسلم، مع الناس

 அவருடைய திறமைக்கு மற்றுமொரு வாய்ப்பு உமர் ரலி அவர்கள் காலத்தில் கிடைத்தது

 எகிப்தின் மேற்கு பகுதிக்கு உமர் ரலி அவர்கள் அவரை ஆளுநராக நியமித்தார்கள்.

 வாழ்க்கை எப்படி பயணிக்கிறது பாருங்கள்! தலைக்கு விலை பேசப் பட்டவர் தலைவராக மாறினார்.

 உஸ்மான் ரலி அவர்கள் அவரை முழு எகிப்தின் ஆளுநராக நியமித்தார்கள். அமரு பின் ஆஸ் ர்லி அவரக்ளிடமிருந்து அதிகாரம் இவரிடம் கைமாறியது

 இதில் இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்கள் எந்த அளவு அரசியலில் உயர்கிறார் என்பதை அளவிட்டுக் கொள்ளலாம்.

 அவரது அந்த ஆட்சிக் காலத்தில் ஆப்ரிக்காவின் பல முக்கிய பிரதேசங்களை அவர் வென்று கொடுத்தார்.

 அன்றைய வல்லரசான ரோமப் போர்ரசுக்கு இப்னு அபீ ஸரஹ் சிம்ம சொப்பனமாக இருந்தார். ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து , ஆப்ரிக்காவின் ஆதி பழங்குடிகள் வாழ்ந்த நுபியா சூடான் ஆகியவற்றை விடுவித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

 ஹிஜ்ரீ 31 ம் ஆண்டில் ரோம பைசாந்திய பேர்ரசுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே தாத் சவாரி என்ற ஒரு யுத்தம் நடைபெற்றது.

 அப்போது மத்திய தரைக்கடல் ரோமப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்தது. தங்களுக்கு நீண்ட ஆதிக்கம் உள்ள உள்ள கடலில் முஸ்லிம் படைகளை மூழ்கடித்து விடுவது என்ற கனவில் ரோமர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஆயிரம் படகுகள் இருந்த்தன். முஸ்லிம்களிடம் 200 படகுகள் இருந்தன. முஸ்லிம்களுக்கு கடலில் போராடி அனுபவம் இருக்க வில்லை.

 முஸ்லிம் படைத்தளபதியான இப்னு அபீ சர்ஹ் ரோம தள்பதிக்கு சண்டையை கரையில் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு கடிதம் எழுதினார். ரோம தளபதி சம்மதிக்க வில்லை. கடலிலேயே முஸ்லிம்களை சமாதியாக்கி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 கடலில்லேயே சண்டை நடந்த்து. தங்களது படகுகளை ரோமர்களின் படுகுகளோடு சேர்த்து கட்டி விடுமாறு இப்னு அபீ ஸரஹ் சொன்னார். முன்னணியில் வீர்ர்கள் கடுமையாக சண்டையிட்டன. கடல் சிவப்பக மாறியது. இதற்கிடையே மாலுமிகளாக இயக்கப் படாத கப்பல்கள் கரையில் தரை ஒதுங்கின.

 வீர்ர்கள் தரையில் இற்ங்கி போரிட்டார்கள். முஸ்லிம்கள் இந்ட யுத்த்தில் வெற்றி பெற்றார்கள் . வரலாற்றில் மதிப்பு மிக்க யுத்தங்களில் ஒன்றாக இது பார்க்க படுகிறது. முஸ்லிம்கள் மத்தியத் தரைக்கடலில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டி ரோமர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டினார்கள்.

 இப்னு அபீ சரஹின் படை 900 ரோம படகுகளை மூழ்கடித்தது.

 அவரை ஆப்ரிக்காவின் வெற்றியாளர் என்று வரலாறு அழைக்கிறது. (ஃபாதிஹ் அப்ரீகா)

லைஸ் பின் ஸஃது ரலி அவர்கள், அப்துல்லாஹ் பின் அபீ ஸரஹ் மக்கா வெற்றிக்கு பிறக் எந்த தவறன நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை. அவர் அரபுகளின் அறிவாளியாகவும் கொடையாளியாகவும் இருந்தார் என்று கூறுகிறார்.

எகிபது மக்களிடம் இப்னு அபீ ஸரஹ் கடுமையாக நடந்து கொண்டார்.  அவர் மீது கலீபாவிடம் புகார் அளித்தவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறு உஸ்மான் ரலி அவருக்கு அறிவுறுதினார். ஆனால் இப்னு அபீ ஸரஹ் அவர்களிடம்  கடுமையாக நடந்து கொண்டார். இது ஒருவை கொல்லும் அளவுக்கு கொண்டு சென்று சென்றது.

எகிபதின் மக்கள் ஆளுநருக்கு எதிராக கலீபா உஸ்மான் ரலி அவர்களிடம் கிளர்ந்து சென்றார்கள்.

அந்த கிளர்ச்சியின் இறுதியில் உஸ்மான் ரலி கொல்லப்பட்டார்கள்

இப்னு அபீ ஸரஹ் ரலி அவர்களின் நடவடிக்கை வரலாற்றில் மற்றுமொரு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தனது அதிகார வெளிப்பாட்டால் நேர்ந்து விட்ட கலீபாவின் படு கொலைக்காக இப்னு அபீ ஸரஹ் பெரிதும் வருந்தினார்.

அதன் பிறகு அரசியலில் தொடர அவர் விரும்ப வில்லை

அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் எதிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை. உஸ்மான் ரலி அவர்களின் கொலைக்கு பழி கேட்டு நடந்த போர்கள் எதிலும் அவர் பங்கேற்க வில்லை.

அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆளுநர் வாழ்க்கையை துறந்து பாலஸ்தீனில் ஜெரூசலத்திற்கு மேற்கே 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்கலான் நகரில் ஒரு சாமானிய குடிமகனாக வாழ்ந்தார்.  இறைவா ! எனக்கு ஒரு பஜ்ரு தொழுகையில் மரணத்தை கொடு என்று பிரார்த்தித்தவாறு இருந்தார்.

அவர் மரணமடைந்த அந்த இரவில் அடிக்கடி சுபுஹ் நேரம் ஆகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அருகிலிருந்தவர்கள் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய பணியாளரை அழைத்து அதிகாலையின் குளுமை தெரிகிறது. சுபுஹ் நேரமாகிவிட்டதா என்று பார்த்துவா எனக் கூறினார். அப்போது இறைவா! எனது இறுதி நற்செயலாக பஜரு தொழுகையை ஆக்கு என்று பிரார்த்திக் கொண்டிருந்தார்.

ஒளு செய்து முதல் ரகத்தில் பாத்திஹா சூராவையும் வல் ஆதியாத் சூராவையும் ஓதினார். அடுத்த ரகாத்தில் பாத்திஹா சூராவையும் மற்றொரு சூராவையும் ஓதினார்.

தொழுகையை முடித்து வலது புறம் சலாம் கொடுத்தவர் இட்து புறம் சலாம் கொடுப்பதற்கு முன்னதாக இறப்பெய்தினார்.

என்னே  ஒரு மரணம் !

இது தருகிற பாடம்

வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளியேறி  மீண்டு விட்டால் மிக உயர்ந்த நிலையை அடையாளாம் என்பதாகும். .

இன்றைய நம்முடைய வாழ்க்கை இளைஞர்கள் பெரியவர்கள் என ஒவ்வொரு தரப்பினரும் தவறுகளை சிரமமின்றி – கூச்சமின்றி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் காலமகும்.

அதை பேஷன் அல்லது சுதந்திரம் என்று கருதி தொடர்ந்து அதில் பயணிப்பது பெரும் பாவமாகிவிடும்.

தீமைகளில் இருந்து விலகி விடுகிற போது அல்லாஹ் இயல்பாகவே அதீத்தமான நன்மைகளை செய்கிற வாய்ப்பை வழங்குகிறான்.

ரோமர்களின் கப்பல் படையை தனியாக தகர்க்கும் வாய்ப்பை இப்னு அபீஸரஹ் ரலி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியது போல. 

தீமைகளில் தொடர்கிற போது அவை சிறியதாக இருந்தாலும் அவற்றை நாம் ஒரு பொருட்டாக கருத வில்லையானால் அல்லாஹ் அதை பெரும் தீமையாக கருதுகிறான் என் புழைல் ர்லி சொன்னது போல சிறிய தீமைகளும் பெரிதாக தோற்றம் கொண்டு நல் வழி பெறுவதை தடுத்து விடக் கூடும்.

ல்லாஹ் பாதுகாப்பானாக!    

Thursday, January 01, 2026

வாழ்க்கையில் தெளிவு வேண்டும்.

 فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ * يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ [الدخان: 10، 11].

 புதிய ஆண்டு தொடங்கியிருக்கிறது.

நமது வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் தெளிவானதாக ஆக்கி கொள்ள நாம் முய்றசிக்க வேண்டும்.

கொள்கைகுடும்பம்வியாபாரம்சமூக பணிகள் என அனைத்திலும் தெளிவான நடைமுறைகளை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்.

·         எல்லாவற்றையும் அனுசரித்து போகிறோம் என்ற பெயரில் குழப்பமான கொள்கைகளில் வாழ்வது,

·         சீக்கிரம் சம்பாதிக்கும் ஆசையில் குழப்பமான வியாபரங்களில் ஈடுபடுவது.

·         தீர்மாணங்கள் ஏதும் இல்லாமல் ஏனோ தானோ வென்று  குடும்பம் நடத்துவது.

·         அரசியல் சமூக பணிகளில் தூர நோக்கின்றி குறுகிய உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுவது ஆகிய போக்குகள் பெருகி வருகின்றன.

இது சரி செய்யப் படாவிட்டால் வாழ்க்கை சிக்கலாகும். அதன் மதிப்பை இழக்கும். இறுதியில் ஈமானுக்கு கூட பாதிப்பாகலாம். 

காலம் செல்லச் செல்ல  தெளிவின்மை அதிகரிக்கும்.

முஹம்மது நபி (ஸல்) அவரக்ள் கியாமத் நாளின் நெருக்கத்தில் துகான் புகை மூட்டம் ஒன்று ஏற்படும் என்று எச்சரித்தார்கள்

بادِرُوا بالأعْمالِ سِتًّا: طُلُوعَ الشَّمْسِ مِن مَغْرِبِها، أوِ الدُّخانَ، أوِ الدَّجَّالَ، أوِ الدَّابَّةَ، أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ العامَّةِ.

الراويأبو هريرة | المحدثمسلم 

ْ خاصَّةَ أحَدِكُمِْ.- தனிப்பட்ட விவகாரங்கள்

، أوْ أمْرَ العامَّة அல்லது பொதுவான சமூக பிரச்சனகள்

 கியாம நாள் நெருங்கி விட்ட்து என்பதை பல அடையாளங்கள் வழியாக அல்லாஹ் மக்களுக்கு தெரிவிப்பான். அந்த அடையாளங்கள் தென்படுவதற்கு முன் மக்கள் தங்களது வாழ்வை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் அறிவுறுத்துகிறது.  

இந்த அடையாளங்கள் வெளிப்பட்ட பிறகு இரண்டு சூழ்நிலைகள் உருவாகும்.

ஒன்று மக்களுடைய ஈமான் – (சீர்திருத்தம்) ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லது இவற்றில் சிலதுக்கு பிறகு ஈமான் கொள்ளசீர் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காது.

சூரியன் மேற்கிலிருந்து வெளிப்பட்ட பிறகு புதிதாக யாருடைய ஈமானும் ஏற்றுக் கொள்ளப் படாது.

فإنَّها إذا طَلعَت مِنَ المَغربِ لا يُقْبَلُ إيمانُ كافِرٍ، ولا تَوبةُ عاصٍ، ولا عمَلٌ صالحٌ  

பூமி வெடித்து கிளம்பி வரும் மிருகம் வெளியே வந்து மக்களிடம் பேசிய பிறகு அது முஃமின் காபிர்கள் என்று மனித சமூகத்தை பிரித்து அடையாளப் படுத்தி விடும்.

புகை, தஜ்ஜால், வெளிப்படும் காலங்களில் ஈமானை காப்பாற்றிக் கொள்வது பெரும் சிரமத்திற்குரிய காரியமாகிவிடும்.

பிரச்சனைகள் பெருக்கம்.

أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ العامَّةِ.

தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுடைய பிரச்சனைகள் உணவு உறைவிடம் உள்ளிட்ட பிரச்சனைகள் சிக்கலுக்குள்ளானதாகி ஈமானிய அம்சங்களில் கவனம் செலுத்த முடியாமல் திசை திருப்பி விடும்.

அது போலவே மக்களின் பொதுவிவகாரங்களும் அரசியம் சமூக சூழல் சிக்கலானதாக மாறி ஈமானில் கவனம் செலுத்தாமல் திசை திருப்பி விடும்,. (أوْ خاصَّةَ أحَدِكُمْ، أوْ أمْرَ العامَّةِ.)

 கியாம நாளின் சில அடையாளங்கள் இப்போதே நடப்பில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளங்களில் ஒன்றான் துகான் எனும் புகை பற்றித்தான் நாம் இன்று சிந்திக்கிறோம்.

துகான் என்ற தலைப்பில் திருக்குர் ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு.

அந்த அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு தோறும் ஓதி வர பெருமானார் (ஸ்ல) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

عن أبي رافع  قال: «من قرأ الدّخان في ليلة الجمعة، أصبح مغفورا له، وزوّج من الحور العين- رواه الدّارميّ

இது இந்த செய்தியின் முக்கியத்வத்தை பறை சாற்றுகிறது.

துகான் என்றால் என்ன ?

திருக்குர் ஆனின் விரிவுரையாளர்கள் கியாம நாளின் நெருக்கத்தில் வானத்திலிருந்து ஒரு அடர்ந்த புகை பூமியில் பரவும் அந்த புகைய முஃமின்களுக்கு ஒரு சாதராண சளியை போல இடையூறாகும்.  காபிர்களுக்கு கடும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என இமாம் நவ்வி ரஹ் கூறினார்கள்

إن الدخان يأخذ بأنفاس الكفار، ويأخذ المؤمن منه كهيئة الزكام.

இன்னும் சில அறிஞர்கள் சமூகத்தை பெருமளவில் வாட்டுகிர பஞ்சம் ஏற்படும் என்பது இதன் பொருள் என்று கூறுகிறார்கள்.

திருக்குர் ஆனிய விரிவுரையளர்களில் இன்னும் சிலர் கூறுகிறார்கள்.

புகை மூட்டம் ஏற்படுகிற போது எப்படி எதுவும் தெளிவாக தெரியாமல் போய்விடுமோ. அது போல கியாம நாளின் நெருக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்ற காரணங்கள் புரியாமல்ஏன் ஒரு காரியத்தை ஏன் செய்கிறோம் என்பதை உணராமல் செய்து விடுவோம் அதுவே புகை மூட்டம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

இன்று நமது வாழ்வு பெரும்பாலும் அப்படி மாறிவருகிறது.  

கடந்த வாரத்தில் ஒரு செய்தியை கவனித்திருப்பீர்கள்

திடீரென் யமன் விவகாரத்தில் சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் ஒரு சண்டை வந்தது.

யமன் நாட்டுக்கு அமீரகம் அனுப்பிய கப்பலிலிருந்த சரக்குகளை சவூதி குண்டு வீசி அழித்த்து.

முஸ்லிம் உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிற சிக்கல்களுக்கு நடுவே இதென்னடா புது குழப்பம் என்று பலரும் திகைத்து நின்றனர்.

பொதுவான உலக முஸ்லிம்களின் விவகாரத்தில்முஸ்லிம் நாடுகள் ஒரு பக்கம் நிற்கிற போது சவூதியும் அமீரகமும் தனித்து நின்பதை வாடிக்கையக கொண்டிருந்தன.

திடீரென் இவ்விரு நாடுகளும் இணைந்து கத்தார் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தன.

இப்போது காஸா விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் ஓரணியில் நின்றன. துருக்கி ஜோர்டான் எகிபது ஆகியவை காஸா அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போது. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல சவூதியும் அமீரகமும் தனித்து நின்றன.

இப்போது அவை இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

தங்களது சொந்த நாடு பாதுகாப்பாக வளமாக இருக்கிற போது அந்நிய நாட்டின் அமைதிக்குலைவை ஏற்படுத்துவதில் இவர்கள் ஏன் மோதிக் கொள்கிறார்கள் என்பது சாமாணிய முஸ்லிம் ஒவ்வொருவரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கும்.

அதே போல இன்னொரு நடவடிக்கையையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சூடானில் ஒரு பகுதியில் சூடானிலாந்த் என்ற ஒரு நாட்டை திடீரென இஸ்ரேல் அங்கீகரித்து அறிக்கை வெளியிடுகிறது.

இது என்ன புது குழப்பமாக இருக்கிறதே என உலக சமுதாயம் திகைத்து நிற்கிறது.

சூடானில் பசிதான் பெரும் பிரச்சனை  என்று உலகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகில் பசியால் வாழும் மக்களுக்கு உதாரணமாக சூடான் காட்டப்படுகிறது. 

சூடான் என்றாலே சதைகளே இல்லாமல் ஒட்டிய வயிறுகளோடு இருக்கிற குழந்தைகளின் புகைப்படம் தான் பெரும்பாலான மக்களுக்கு நினைவுக்கு வரும்.

அங்கு ஏராளமான உள் நாட்டு குழப்பங்கள் நிலவுகின்றன. அதில் பல இலட்சம் மக்கள் தினந்தோறும் கொல்லப் படுகிறார்கள். . ஒவ்வொரு குழப்பமும் இஸ்லாமிய குழக்களால முன் வைக்கப்படுகின்றன. 

இந்நிலையில் சூடானிய அரசு தீடீரென ஐக்கிய அமீரகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளது. சூடானில் உள்ள ஆயுதக் குழக்களுக்கு அமீரகம் உதவுவதாக அது குற்றம் சாட்டுகிறது.

மே 2025 ல் சூடான் உடனான தன்னுடைய உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாக சூடானில் தற்போது ராணுவ ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிற அரசு அறிவித்த போது சாமாணிய மக்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்த்து.

சூடான் ஒரு ஏழை முஸ்லிம் நாடு, அமீரம் ஒரு பணக்கார முஸ்லிம் நாடு.  அமீரகம் எந்த ஒரு பெரிய அரசியல் நகர்விலும் தங்களை அதிகம் ஈடுபாடு காட்டிக் கொள்ளாத நாடு. அப்படி இருக்க திடீரென சூடான் அரசு அமீரகத்துடனான உறவை முறித்த்து மட்டுமல்லாமல் 2025 மார்ச் மாதத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அமீரகம் சூடானில் இனப் படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியது. சூடானில் உள்ள ஆர் எஸ் எப் என்ற அமைப்புக்கு அமீரகம் உதவுவதாக அது கூறிவருகிறது.

இதே போல பல இஸ்லாமிய நாடுகளிலும் அரசியல் சமூக நிலவரங்கள் மிக குழப்பமாக இருக்கின்றன.

குறிப்பாக பாகிஸ்தான் எகிப்து பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அரசியல் சமூக சூழல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. இஸ்லாமின் பெயரை சொல்லிக் கொண்டு மக்களை சர்வாதிகாரம் செய்கிற போக்கு அதிகரித்து வருகிறது.

முஸ்லிம்களின் எதிரிகளோடு இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அழுத்தமான தொடர்பில் இருக்கிறார்கள்.  

காஸா வில் மக்களை கொன்று குவிக்கிற இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்கிற கம்பனியுடன் பல அரபு நடுகள் தொடர்பில் இருக்கின்றன.

இந்த புகை மூட்டமான சூழலில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை தீர்மாணிப்பது – அல்லது என்ன தான் நடக்கிறது என்று யூகிப்பது கடினமான காரியமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் மட்டுமல்ல நமது சமூக அளவிலும் குடும்ப அளவிலும்  கூட என்னதான் நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத அளவில் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்த இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றான் துகான் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது.

இந்த சூழலில் உலகை சூழ்ந்து கொள்ளும் புகை மூட்ட்த்திலிருந்து நமது வாழ்வை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நமது வாழ்வை நாம் கூடுமானவரை குழப்பத்திலிருந்து – தெளிவின்மையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக கடைபிடிக்க வேண்டிய வழிகளை அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

துகான் அத்தியாயம்

வாழ்க்கை குழப்பமாக இருப்பது போல தோன்றுகிறதா துகான் அத்தியாயத்தை அதிகமாக ஓதி வருவோம். குறிப்பாக வெள்ளிக் கிழமை இரவுகளில்

அது அல்லாஹ்வின் தரப்பிலான உதவியை நமக்கு பெற்றுத் தரும்

من قرأ حم الدخان في ليلة أصبح يستغفر له سبعون ألف ملك. الترمذي 

 

 சுய பரிசோதனை

நம்முடைய விருப்பங்கள் என்ன ? அவை நன்மையானவையா ? அது அவை தேவையானதா ?

 

என்பதை பரிசோதிப்பதும் அவற்றில் தேவையானதை மட்டுமே முடிவு செய்வதும் நன்மையானதை மட்டுமே தேர்ந்தெடுப்பதும் நமது வாழ்வை தானே தெளிவானதாக ஆக்கும்.

 ஒரு பெரிய கட்டிட்டம் அப்படியே நீண்ட நாட்கள் விடப் பட்டிருந்தது. அது பாழடைந்து கிடந்தது. அதன் உள்ளே சென்று பார்க்கிற எவரும் இதை அவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியாது என்றார்கள்.

 ஆனால் ஒரு  இளம் இன்ஞினியர் இதை நான் மூன்று மாதத்தில் சரி செய்து விடுவேன் என்றார்.

 அவர் முதலில் அங்கிருக்கிற குப்பைகளை முழுவதுமாக அகற்றினார்.  அதன் பின்னர் அந்த கட்டிடத்தை பார்த்த போது இதை எளிதாக சரி செய்து விடலாமே என்று பலருக்கும் தோன்றியது.

 இன்றுள்ளா கால்ச சூழலில் நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் இத்தகை சுய பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.

 நமது ஆரோக்கியம் நமது செலவின்ங்கள் நமது மற்ற தொடர்புகள் நமது வியாபாரத்தின் போக்கு நடைமுறைகள் நமது சமூக அமைப்புக்களின் போக்கு நடைமுறைகள் ஆகியவற்றில் ஒவ்வொன்றையும் அலசி ஆராயந்து நமது விருப்பத்தையும் இலக்கையும் நாம் சரி செய்து கொள்ள் வேண்டும்.

 அதில் இரண்டு அம்சங்களை கவனிக்க வேண்டும்.

உண்மை என்ன ? 

ன்மை என்ன ?        

 இதே போல நமது நமது கொள்கை கோட்பாடுகளை நாம் சீர் தூக்கி பார்த்து உண்மை என்ன நன்மை எது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து குழப்பமாக வாழ்ந்து கொண்டிருக்க கூடாது.   

 நமது சிந்தனையில் தெளிவு பிறக்குமானால் அடுத்து எந்த பெரிய காரியத்தை செய்வதும் நமக்கு எளிதாகிவிடும்.

மூஸா நபியின் பிரார்த்தனை இந்த தொடர்பை நமக்கு புரிய வைக்கிறது.  

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25وَيَسِّرْ لِي أَمْرِي (26.

   செயல்களில் மாற்றம்

சில நேரங்களில் நாம் வழக்கமாக செய்கிற செயல்களே நமது பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.

அது மாத்திரை மருந்தாக இருந்தாலும் சரி வியாபார தொடர்புகளாக இருந்தாலும் சரி அரசியல் கூட்டணிகளாக இருந்தாலும் சரி.

இதில் மாற்றங்களை செய்வது குழப்ப நிலையிலிருந்து தெளிவுக்கு நம்மை கொண்டு செல்லும்.

புகை பிடிப்பது போன்ற  தேவையற்ற செயல்களை நிறுத்துவது –

உடற் பயிற்சி செய்வது புத்தகம் எழுவது  போன்ற புதிய வேலைகளை செய்வது

புதிய நண்பர்கள் தொடர்பு  வட்டங்களில்  இணைவது போன்றவை நமக்கு தேவையான தெளிவை தரலாம்

இமாம் பூஸுரி கஸீத்த்துல் புர்தாவில் பெருமானாரை புகழ்வதோடு பல வாழ்வியல் பாடங்களையும் சொல்லித் தருவார். அவற்றில் ஒன்று இது

உன் இதயத்தை வழக்கமான போக்கிலிருந்து திருப்பி விடு, அதன் ஆசைகளுக்கு கட்டுப்படுவதில் விழிப்பாக இரு! நீ அதன் வழியிலேயே சென்று கொண்டிருந்தால் – அதற்கு அதிக அதிகாரம் கொடுத்து விட்டால் அது குருடாக்கும் அல்லது செவிடாக்கும். ஆனால் நீ மாற்றம் செய்வது என்று தீர்மாணித்தால் அது உண் வழிக்கு வந்து விடும். பால் குடித்துக் கொண்டிருக்கிற குழந்தையை பால் குடி மறக்க செய்ய முடிவது போல என்பார் இமாம் பூஸுரி ரஹி

فَاصْرفْ هَوَاهَا وَحاذر انْ توَلِّيَهُ      انَّ الْهَوٰى مَا توَلَّى يُصْمِ اوْ يَصِمِ

     وَالنَّفْسُ كَالطِّفْلِ انْ تهْمِلْهُ شَب عَلَى         حب الرضَاعِ وَانْ تفْطِمْهُ يَنْفَطِمِ

 கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது

 சாப்பிடுவது, தொழுவது, வேலைகளை கவனிப்பது, திருமணம் செய்வது செய்து வைப்பது என தொழிலாளர்களை கவனிப்பது என அனைத்தையும் உரிய நேரத்தில் நிறைவேற்ற முயற்சிப்பது குழப்பத்தை தவிர்க்கும்.

  கடமைகளை தள்ளிப்போடுகிற போதுதான் அடுக்கடுக்கான குழப்பங்கள் இதயத்திற்கு வந்து சேரும்.

 கடனை திருப்பிக் கொடுக்க தாமதமாவதும் இப்படித்தான் பெரிய சோதனைகளில் கொண்டு போய் விட்டு விடும்.

 ஐந்து நேர்த் தொழுகைகளும் அல்லாஹ்விற்கான கடமைகளும் இதில் முக்கியமானதை

 முல்லா அத்திப்பழம் விற்றுக் கொண்டிருந்தார். யாரும் வாங்க வில்லை. அந்த நேரம் பார்த்து அந்த வழியே ஒரு பெண்மணி வந்தார். நீயாவது வாங்கிக் கொள் நல்ல பழம் என்றார் முல்லா. என்னிடம் பணம் இல்லை என்றாள் அந்த பெண். நீ அடுத்த மாதம் கொடு என்றார் முல்லா.

அப்போதும் அந்த பெண் தயங்கினார். நீ பழத்தை சாப்பிட்டு பார். என்று பழத்தை எடுத்து நீட்டினார் முல்லா.

அப்போது அந்த பெண் இல்லை நான் கடமையான நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறினார்.

உடனே முல்லாவின் முகம் மாறியது.  போ உனக்கு பழம் கிடையாது என்று கூறினார்.

அந்த பெண் ஆச்சரியமாம ஏன் திடீரென விரட்டுகிறீர்கல் என்று கேட்டார்

முல்லா சொன்னார்.  ரமலான் முடிந்து ஆறு மாதம் ஆகிவிட்ட்து. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற நீ ஆறு மாதம் தாமதிக்கிறாய் என்றால் எனக்கு தர வேண்டிய கடனை நீ எவ்வளவு தாமதம் செய்வாய் ? போ உனக்கு கடன் தர முடியாத் என்றார்.

 கடமைகளை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவது வாழ்க்கையை குழப்பமற்றாதாக் ஆக்கும்.

  குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும்

 பெரும்பாலும் குழப்பங்கள் ஏற்ப காரணம் குறுக்கு வழிகளில் சிந்திப்பதாகும்.

 ஒரு சில இடங்களில் சுருக்கு வழியாக சென்றால் சீக்கிரம் நாம் போக வேண்டிய இட்த்திற்கு சென்று விடலாம் என்பது வாஸ்தவம் தான்.

 வாழ்க்கையில் பல விவகாரங்களிலும் இப்படி வெற்றி எளிதா கிடைத்த்து விட வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான்.

 ஆனால் அந்த குறுக்கு வழிகளில் தான் ஆபத்துக்களும் அதிகமாக இருக்கும்.

 வெற்றி பெறுவது முன்னேறுவது என்பதற்கு குறுக்கு வழிகளையே பயன்படுத்தி பழகியோர் ஒரு கட்டத்தில் பிரச்சனைகளில் அதிகமாகவே சிக்கிக் கொள்வார்கள்.

 ஒரு அருமையான ஹதீஸ் உண்டு

குறுக்கு வழிகளில் சைத்தான் அமர்ந்திருக்கிறான்.

 خطَّ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ خطًّا بيدِه ثم قال : هذا سبيلُ اللهِ مستقيمًا، وخطَّ خطوطًا عن يمينِه وشمالِه، ثم قال : هذه السبلُ ليس منها سبيلٌ إلا عليه شيطانٌ يدعو إليه، ثم قرأ : وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكم عَنْ سَبِيلِهِ

 அரசியலில் பொருளாதாரத்தி வெற்றி பெற்றோர் பலரும் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ச்சியடைந்த்து எதனால் என்று தேடி பார்த்தீர்கள் என்றால் அவர்கள் ஏதோ சில காரியங்களுக்கு குறுக்கி வழியில் இறங்கியதே காரணமாக இருக்கும். அத்தகையோ நிலைக்க முடியாது , வாழ்க்கை சிக்கலானதாக மாறிவிடும்.  

விஜய் மல்லையா ஒரு காலத்தில் சொந்தமாக விமான கம்பெனி வைத்திருந்தவர். இப்போது தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். 

 உலகமெங்கும் குழப்பங்கள் அதிகரித்து வருகிற நிலையில் நம்முடைய வாழ்க்கையை கூடுமானவரை குமப்பமற்றதாக் வைத்துக் கொள்வது நம்முடைய ஈமானையும் பாதுகாக்கும் நிம்மதியையும் பாதுகாக்கும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!