வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 22, 2026

மறுமைச் சிந்தனை ஒரு மகத்தான புரட்சி

 இஸ்லாம் இந்த உலகில் நிலை நிறுத்திய கோட்பாடுகளில் பிரதானமான ஒன்று மறுமைச் சிந்தனையாகும்.

அதாவது இந்த உலகம் நிரந்தரமல்ல, நாளை மறுமை தான் நிலையானது. அதில் கேள்விக கணக்கு உண்டு. நன்மைகளுக்கு பரிசும் தீமைகளுக்கு தண்டனையும் உண்டு என்பது.

இது ஆரம்ப கால அரபு மக்களால் மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்த்து.

வாழ்க்கை இவ்வளவு தான். இதன் பிறகு வேறொன்றும் கிடையாது என்கிற சிந்தனை தான் அப்போது மேலோங்கியிருந்தது.

பெருமானாரிடம் அவர்கள் அதிகம் ஆட்சேபித்த்து இதைத்தான்.

வாகிஆ அத்தியாயம் அவர்களது கேள்வியை அதற்கான முஸ்லிம்களின் நம்பிக்க்கயையும் உறுதி படக் கூறுகிறது/


 وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ (47) أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ (48قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ (49لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ (50)

இது ஒன்றும் அல்லாஹ்விற்கு முடியாத்து அல்ல என்பதையும் திருக்குர் ஆன் நிலைநாட்டியது.

 ஹஜ் அத்தியாயத்தின் வசனங்கள் உங்களை ஆரம்பத்தில் படைத்தது போல திருப்பியும் படைக்க அல்லாஹ்வால் முடியும் என்று எடுத்துக் கூறியது.

 يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ () ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّهُ يُحْيِي الْمَوْتَىٰ وَأَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (6وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ (7

அல் கியாமா அத்தியாயம் உங்களது கை விரல்  நுனிகளை  கூட அல்லாஹ் சரி செய்து விடுவான் என்று கூறியது,

 بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ (4

கை விரல்களில் இருக்கிற கை ரேகை தான் இப்போது மக்களை துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது. உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தாலும் ஒரு மனிதருடைய கை ரேகையை போல மற்றொன்று இருப்பது இல்லை.

  எனவே மக்கி மண்ணாகிப் போனானாலும் அவனை திருப்பி எழுப்பிக் கொண்டு வர  அல்லாஹ்வால் முடியும் அவன் கொண்டு வருவான் என உறுதிபட இஸ்லாம் எடுத்துரைத்த்து.

 இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் மிக உறுதியாக இருக்கும் என்றும் திருக்குர்  எடுத்துக் கூறியது.

 وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4)

இந்த ஆயத் இரண்டு செய்திகளை சொல்கிறது.

 முஸ்லிம்கள் மறுமை நாள் நம்பிக்கையில் மிக உறுதியானவர்களாக இருப்பார்கள்.

 தங்களிடமுள்ள கல்வி, தங்களிடமுள்ள காசு, தங்களிமுள்ள செல்வாக்கு ஆகியவற்றின் மீது எந்த அளவு நம்பிக்கை இருக்குமோ அதே அளவு உறுதி நாளை மறுமை என்று ஒன்று இருக்கிறது என்பதிலும் அவர்களிடம் இருக்கும்.

 இந்த உலகம் சிறியது. அழிந்து போக கூடியது.  ஆனால் மறுமை பெறியது அழிவில்லாதது.

 எனவே வாழ்க்கையில் மறுமை வாழ்க்கை தான் உண்மையானதும் நிலையானதுமாகும் என்று  இஸ்லாம் மக்களுக்கு கற்பித்திருக்கிறது.

 இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு உதாரணம் சொல்வார்கள்.

 இந்த பூமியிலிருந்து வானம் வரை உள்ல பகுதியை ஒரு குடோனாக கறபனை செய்து கொள்ளுங்கள். இதற்கிடையே கடுகு மணியளவுள்ள தானியங்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அந்த தானியங்களை ஒரு பறவை ஆயிரம் ஆண்டுக்கு ஒரு தானியம் என்ற வீதம் உண்னுமானால் அந்த தானியங்கள் காலியாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கற்பனை செய்கிறீர்களோ அதை விட அதிக காலத்தை கொண்ட்து மறுமை நாள் ஆகும்.

 இது ஒரு உதாரணத்திற்கு சொல்லப் பட்டது, மறுமை நாளுக்கு முடிவே கிடையாது.

 அடுத்த்து உண்மையான சுகமும் துக்கமும் மறுமையில் தான் இருக்கிறது.

 எந்த சுகம் முடிந்து போக கூடியதோ அது சுகமே அல்ல; அது போல எந்த துக்கம் தீர்ந்து போக கூடியதோ அது துக்கமே அல்ல;

 மறுமை அப்படி அல்ல.

 உலகில் பெரிய துயரம் தீக்காயம் படுவது. ஆனால் இங்கு அது சீக்கிரம் சரி செய்யப்படும்.

 மறுமையின் காயம் எப்படி இருக்கும் என்று குர் ஆன் கூறுகிறது

 كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ

 மறுமையை பற்றிய இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் உறுதியாக இருக்கும் என்று சொல்கிற وَهُم بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) இந்த வசனம் இன்னொரு செய்தியையும் சொல்கிறது.

 இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் மட்டும் தான் இருக்குக்.

ஒரு எதார்த்த்தில் உலகில் இப்படி ஒரு நம்பிக்கை கொள்கிற சூழ்நில வேதக் கார சமுதாயமான யூதர்கள் கிருத்துவர்களிடம் கூட இப்போது அழுத்தமாக வெளிப்படுவதில்லை.

இந்த சிந்தனை மக்களிடையா இரண்டு பெரிய விளைவுகள்ள ஏற்படுத்தியிருக்கிறது.

 மறுமை நம்பிக்கையின் விளைவுகள்

 நன்மைகளை அதிகம் செய்ய ஆர்வமூட்டுகிறது

 உலக சுகங்களை பெரிதாக கருதாமல் மகத்தான காரியங்களை செய்யத் தூண்டுகிறது.

 பத்று யுத்த்தின் போது சொர்க்கத்தை சொல்லி சஹாபாக்களை தூண்டிக் கொண்டிருந்தார்கள்.  பேரீத்தம் பழங்களை சாப்பிட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்த ஒரு நபித்தோழர் இதில் நான் ஷஹீதானால் சொர்க்கம் கிடைக்குமா என்று கேட்டார். சொர்க்கம் கிடைக்கும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பேரீத்தம் பழ பையை சட்டென்று  அப்புறமாக வீசிய அந்த நபித்தோழர் தீவிரமாக போரில் ஈடுபட்டு ஷஹீதானார்.

 فقَال رسُول اللَّه ﷺقُومُوا إلى جَنَّةٍ عَرْضُهَا السَّمواتُ وَالأَرْضُ قَالَ: يَقولُ عُمَيْرُ بنُ الحُمَامِ الأنْصَارِيُّ t: يَا رسولَ اللَّه جَنَّةٌ عَرْضُهَا السَّمواتُ والأرضُ؟ قالَ :نَعم قالَ: بَخٍ بَخٍ، فقالَ رَسُولُ اللَّه ﷺمَا يَحْمِلُكَ عَلَى قَولِكَ بَخٍ بخٍ؟ قالَ: لاَ وَاللَّهِ يَا رسُول اللَّه إلاَّ رَجاءَ أَنْ أكُونَ مِنْ أهْلِها، قَالَفَإنَّكَ مِنْ أهْلِهَا فَأخْرج تَمَرَاتٍ مِنْ قَرَنِهِ، فَجَعَل يَأْكُلُ منْهُنَّ، ثُمَّ قَال لَئِنْ أنَا حَييتُ حَتَّى آكُل تَمَراتي هذِهِ إنَّهَا لحَيَاةٌ طَويلَةٌ، فَرَمَى بمَا كَانَ مَعَهُ مَنَ التَّمْرِ. ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ. رواهُ مسلمٌ

 தாயிப் யுத்த்த்தில் அபூசுப்யான் ரலி அவர்களின் கண் பறி போனது அந்த கண்ணை கையில் வைத்துக் கொண்டு பெருமானாரிம் வந்தார். நி பொறுத்துக் கொண்டால் இதற்கு பதில் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று பெருமானார் ஸல் கூறினார்கள் . அவர் அது போதும் என்று சொல்லி கையில் வைத்திருந்த கண்னை தூகி வீசினார்.

 أصيبت عين أبي سفيان (رضي الله عنه) بسهم في هذه الغزوة، فأتى النبي ﷺ وعينه في يده، وقال: يا رسول الله، هذه عيني أصيبت في سبيل الله، فقال: «إن شئت دعوت فرُدَّت عليك، وإن شئت فعين في الجنة»، قال: في الجنة، ورمى بها من يده،

 மறுமை நம்பிக்கையின் மற்றொரு முக்கிய விளவு ரெஸ்பான்ஸ்பிலிட்டி

 பொறுப்புணர்வை தருகிறது.

 எனது ஒவ்வொரு செயலுக்கும் நான் பெறூப்பேற்க  வேண்டும், தப்பி ஓட முடியாது. .

 மறுமையில் சிறிய நன்மைக்கும் பெரிய கூலி கிடைக்கும்.

 ·         லைலத்துல் கத்ரு இரவின் இரண்டு ரகாஅத் தொழுகைக்கு ஆயிரம் மாத்த்திலும் அதிக நன்மை செய்த கூலி கிடைக்கும்.

 ·         பள்ளி வாசல் கட்ட உதவி செய்தால் ஒரு மாளிகை கிடைக்கும்.

 ·         ஒரு கபன் துணி வாங்கிக் கொடுத்தால் பச்சை பட்டாடை கிடைக்கும்.

 அதே போல மறுமையில் எந்த சிறிய தீமைக்கும் விசாரணை உண்டு.

 இந்த சிந்தனையை முஸ்லிம்களிடம் இஸ்லாம் அழுத்த்தமாக விததைத்த்தன் பலனை உலகம் மிக சிற்ப்பான முறையில் கண்டிருக்கிறது.

 அதன் ஒரு உதாரணம் உமர் ரலி அவர்கள். இருபத்தி இரண்டரை இலட்சம் கிலோ மீட்டரை ஆட்சி செய்தவர் பயந்து பயந்து அதிகாரத்தில் இருந்தார்.

 என நிர்வாகத்தில் இராக்கிலுள்ள யூப்ரடீஸ் நதிக் கரையில் ஒரு ஒட்டக்க பசியால் இறந்து கிடக்குமானால் அதற்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டவன் என்று உணர்ந்து நடத்தார்.

أنه قال: "لو مات جمل ضياعاً على شط الفرات لخشيت أن يسألني الله عنه"

பாலஸ்தீனத்தை வெற்றி கொண்ட பிறகு அங்கு சென்ற உமர் ரலி அவரகள் ஒரு சிறிய இடைவெளிக்கு பிற்கு மதீனாவிற்கு திரும்பினார்கள். மக்களின் நிலையை அற்ந்து கொள்ள நினைத்தார்கள். அப்துர் ரஹ்மான பின் அவ்ப் ரலி அவர்களோடு ஊரை சுற்றி பார்க்க கிளம்பினார்,

 ஒரு கூடாரத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்த்து. குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டது. அந்த இட்த்திற்கு சென்ற போது ஒரு பெண்மணி அடுப்பில் வெறும் தண்ணீரை வைத்து விட்டு அதை கிண்டுவது போல நடித்துக் கொண்டிருந்தார். அவரை சுற்றி குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். அனுமதி பெற்று உள்ளே சென்ற அவ்விருவரும். என்ன செய்கிறாய் என்று கேட்டார்கள். அந்த பெண் மணி கூறினார்.

என் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. வெறும் தண்ணீரை ஊற்றி உணவு தயார் ஆவது போல நடித்துக் கொண்டிருக்கிறேன். அழுது அழுது அசதியில் குழந்தைகள் தூங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

கலங்கிக் போன உமர் ரலி அவர்கள் உடனடியாக அரச களஞ்சியத்தின் காவலரை அந்த நள்ளிரவில் எழுப்பில் என் முதுகின் மீது மாவு மூட்டைகளை ஏற்று என்று கூறினார்.

அலுவலர் தயங்கினார். நான் சுமந்து வருகிறேன் என்றார். என் மக்களுக்கு நான் செய்த பாவச் சுமைகளை நீ ஏற்பாயா என்று கேட்டார்கள் .

உமர் ரல் கூறிய வரலாற்று சிறப்பு மிக்க வாசகம் இது

احمل عليّ..أتحمل عني أوزاري يوم القيامة؟.

 உமர் ரலி அவர்கள் தன் முதுகில் மூட்டைகளை சுமந்து கொண்டு அந்த கூடாரத்தில்  இறக்கினார். தானே அடுப்பின் அருகே சென்று ஊதி ஊதி அடுப்பை மூட்டி சமைக்க தொடங்கினார்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி கூறுகிறார். உமர் ரலி அவர்களின் தாடியின் வழியாக புகை வருவதை நான் பார்த்தேன்.

 இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண் மணி யார் வந்திருக்கிறார் என்பதை அறியாமல் கலீபா  உமரை விடநீர்  சிறந்தவர் என்று கூறினார்.

நடுக்கமுற்ற உமர் ரலி அவர்கள் அம்மா உங்களது நிலை அவருக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதிலளித்தார்.

அப்படியானால் அவர் என்ன கலீபா ?

அதிர்ச்சிய்டைந்த உமர் ரலி அவர்கள் மறு நாள் கலீபாவை பார்க்க் வருமாறு கூறினார்.

மறு நாள் அந்தப் பெண்மணி மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து பார்த்தார்.

 உமர் ரலி அவர்கள் அலி ரலி அவர்களுக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்கள்.

உனக்கு நான் செய்தி அநீயை நீ என்ன செய்தால் திருப்தி கொள்வாய் என்று அந்த பெண்ணுக்கு ஆறு நூறு திர்ஹம்களை வழங்கினார்கள். பின்னர் இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்களிடம் ஒரு ஏட்டில் எழுதுமாறு கூறினார்கள். அப்படியே எழுதப் பட்டது.

அந்த ஏட்டை தனது மகன் இப்னு உமர் ரலி அவர்களிடம் ஒப்படைத்த உமர் ரலி அவர்கள் நான் மரணிக்கும் போது எனது கப்ரில் இந்த ஏட்டையும் வைத்து அடக்கம் செய்யுங்கள். நான் இந்த ஏட்டுடன் அல்லாஹ்வை சந்திக்க் வேண்டும் என்று கூறினார்கள்.

 قام عمر من فوره وذهب إلى خازن المال وأيقظه من نومه ثم قال احمل علي من أكياس الدقيق والزيت، فنظر الرجل من الدهشة وقال أحمل عليك أم عنك يا أمير المؤمنين فصاح به عمر وقال: بل احمل عليّ فكررها ثلاثا والغلام لم يتمالك نفسه ولسانه من الدهشة وصار يردد أحمل عنك أم عليك يا أمير المؤمنين، فقال عمر الفاروق: احمل عليّ أتحمل عني أوزاري يوم القيامة؟ ثم حملها عمر الفاروق على كتفيه وذهب مسرعا إلى خيمة العجوز …

أوقد النار ونفخ فيها حتى تستعر .

يقول عبدا لرحمن بن عوف: والله إني أرى الدخان يخرج من خلال لحيته، ووضع القدر على النار ثم وضع الدقيق والزيت وصنع الطعام والمرأة تنظر بعين الدهشة، فلم تتمالك نفسها إلا أن قالت: والله إنك أحق بالخلافة من عمر، ثم تولى إلى طرف الخيمة وقد ازداد البرد فقال له عبد الرحمن بن عوف، لنذهب يا أمير المؤمنين، فقال ولله لا أذهب عنهم حتى أراهم يضحكون كما جئتهم يبكون، وبعد أن شبع العيال وذهب عنهم الجوع وسمع ضحكاتهم تتعالى قال للمرأة تعالي إلى عمر غدا حتى ينظر في حالك. ثم ذهب إلى المسجد؛ فقد حان وقت الفجر، ويقول عبد الرحمن بن عوف: والله لم نستطع أن نسمع صوته في الصلاة من شدة بكائه .

ثم جاءت المرأة من الغد ورأت عمر الفاروق جالسا وعن يمينه علي بن أبي طالب وعن يساره عبدالله بن مسعود وكلاهما يقول له: يا أمير المؤمنين، فتملك الصمت المرأة ولم تقدر على الكلام، فقال لها عمر: تعالي يا أمة الله، بكم تشتري مظلمتك التي ظلمتك بها، فلم تقدر على الكلام، ثم نظر إلى عبد الله بن مسعود وقال له أكتب: هذا كتاب من عبد الله عمر بن الخطاب بأنه قد اشترى مظلمة المرأة بستمائة درهم، وشهد بذلك علي بن أبي طالب وعبد الله بن مسعود، ثم قال لابنه: عبدالله إذا مت فضعوا الكتاب في قبري حتى ألقى به الله تعالى .

 நான் பதிலளிக்க கடமை பட்டவன் என்கிற சிந்தனை  மனிதர்களை மகத்தான மனிதர்களாக்க கூடியதாகும்.

 என்னிடம் கேள்வி கேட்க  யார் இருக்கிறார் என்பது தான் இன்றைய அரசியல் தலைவர்கலை அக்கிரம்ம் செய்ய தூண்டு கிறது.

 அமெரிக்க அதிபர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஐரோப்பிய தலைவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு பின்னே  ஒரு காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் அவரது தலைக்கு பின்னே தெரிகிற வரை படத்தில் கண்டா நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியாக சேர்த்து காட்டப் பட்டுள்ளது.

அதே போல அமெரிக்க அதிபர் டென்மார்க்கிற்கு சொந்தமான கிரீன் லாண்டை தனக்கு வேண்டும் என்று சிறுபிள்ளை போல கேட்கிறார்.

உலகின் பெரும் போர்க் குற்றவாளியான இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகுவை அவர் புதிதாக அமித்துள்ள  Board of Peace போர்ட் ஆப் பீஸ் அமைதிக் குழுவில் ஒரு உறுப்பினராக சேர்க்கிறார்.

இப்படி எல்லாம் செய்ய என்ன காரணம்.

என்னை யார் கேள்வி கேட்க முடியும் என்ற நினைப்பு தான் காரணம் ‘

 இதை யோசித்துப் பார்க்கிற போது இஸ்லாம் கட்டமைத்த மறுமை சிந்தனை என்பது எவ்வளவு மத்தானது என்பதை நாம் புரிந்து கொள்ல முடியும்.

 நமது பொறுப்பை நாம் உணர்ந்து கொள்வது மறுமை சிந்தனையின் அடிப்படை வெளிப்பாடாகும்.

 ஒரு குடும்பத் தலைவனாக நான் செய்ய வேண்டும் ?  

ஒரு இளைஞ்னாக நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? 

ஒரு தொழிலாளியாக எனது பொறுப்பு என்ன என்று யோசித்து செயல்படுகிற எவரும் சிறப்பன வாழ்க்கையும் இங்கும் பெறுவார்கள். நாளையும் பெறுவார்கள்.

இன்னொரு ரகசியமும் இருக்கிறது.

மறுமை சிந்தன்னயோடு வாழும் போது அது பரக்கத்திற்கு காரணமாக மையும்.

 நபி ஸல் அவர்கள் தினசரி மஃரிபு தொழுகைக்குப் பின் சூரா வாகிஆ வை ஓதி வந்தால் வருமை தீண்டாது என்றார்கள்.

 வாகி ஆ சூரா முழ்வதுமே மறுமையை பற்றி பேசுகிற செய்திகளை கொண்ட்தாகும்.

 மறுமை சிந்தனைக்கும் பரக்கத்திற்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பை இது புரிய வைக்கிறது.

 இன்றைய முஸ்லிம்களின் தலைமுறையில் மறுமை சிந்தனை குறைந்து வருகிறது.

அது நம்மிடம் மறுமை சிந்தனை குறைந்து இருந்த்தின் அடையாளமாகும்.

 நாளை மறுமை இருக்கிறது, அதில நாம் பதில் சொல்ல கடமைப் பாட்டிருக்கிறோம். நல்லது செய்தால் நிம்மதில் தீமை அதிகரித்தால் அதோ கதிதான் என்ற சிந்தனை சிறுவயதிலிருந்த்து நமது பிள்ளைகளுக்கு மிக எதார்த்தமாக போதிக்க பட வேண்டும்.

 இறைவா எங்களையும் எங்களது பிள்ளைகளையும் மறுமை சிந்தனை கொண்டவர்களாக ஆக்கு என்று பிரார்த்திபோம் .

 பொறுப்புக்களை உணர்ந்து நடப்போம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

(நாகப்பட்டினம் டூ கோவை பேருந்து பயணத்தில்)


Thursday, January 15, 2026

தொடரும் ஆணவ அரசியல்.

.سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)

 இன்ஷா அல்லாஹ் இன்று இரவு மிஃராஜ் இரவாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த மகா அற்புதம் மிஃராஜ் நிகழ்வு.

பெருமானார் (ஸல) அவர்களது 50 வது வயதில் ஒரு ரஜ்ப் மாததின் 27 ம் நாள் இரவின் கொஞச நேரத்தில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுன்னபவியில் இருந்து ஜெரூசலத்தில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு சென்றார்கள். அங்கு இப்போது குப்பத்துஸ் ஸஃரா என்கிற பாறை பள்ளிவாசல் இருக்கிற இடத்திற்கு கீழே நபிமார்கள் அனைவரும் காத்திருக்க அவர்களுக்கு தொழ வைத்தார்கள். பின்னர் அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை அவர்களுடன் ஏழு வானங்களை கடந்து சித்ரத்துல் முன்தஹா எனும் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தார்கள். அதன் பிறகு அங்கிருந்து தனியாக சென்று அல்லாஹ்வை சந்தித்தார்கள். அல்லாஹ் பெருமானாரோடு பேச வேண்டிய செய்திகள் அனைத்தையும் பேசினான். பிறகு ஐ வேளை தொழுகையை கடைமையாக்கினான். அதன் பிறகு அங்கு சொர்க்கம் நரகத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு பெருமானார் மக்காவிற்கு வந்து சேர்ந்தாரகள்.

திருக்குர் ஆனில் இதை பற்றி கூறும் அல் இஸ்ரா என்ற ஒரு அத்தியாயம் இருக்கிறது. சூரத்துன் நஜ்மு அத்தியாயத்திலும் இந் நிகழவு பேசப்படுகிறது.

அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களிலும் இஸ்ரா மிஃராஜ் பற்றி விரிவான ஹதீஸ்கள் கிடைக்கின்றன.

வரலாற்று அறிஞர்களில் பெரும்பாலோர் இந்நிகழ்வு ரஜ்ப் 27 ம் நாள் இரவு நடைபெற்றதாக கூறுகிறார்கள் .

முஸ்லிம் உலகு அதை ஏற்று ஆண்டு தோறும் ரஜப் 27 ம் நாள் இரவில் மிஃராஜ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகிறது. பல முஸ்லிம் நாடுகளிலும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வரலாறை மிகவும் மேன்மை படுத்துகிற நிகழ்வு இது.

அதனால் இதை சுப்ஹானல்லாஹ் என்று ஆச்சரியக்குறியை சொல்லி இறைவன் பேச ஆரம்பிக்கிறான்.

நபித்துவம் கிடைத்து 10 வருடங்களுக்கு பிறகு ஏன் இப்படி ஒரு சந்திப்பு நடந்தது என்பது ஒரு சிந்தனைக்குரிய கேள்வியாகும்.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் 10 வருட காலம் மக்காவில் பிரச்சாரம் செய்தார்கள். அதில் ஓரளவு வெற்றியே கிடைத்தது.

பெருமானாரின் 50 வயதில் அவர்களுடைய அருமை துனைவி அன்னை கதீஜா ரலி அவரக்ளும் சிறிய தந்தை அபூதாலிபும் மரணமடைந்தார்கள். அதன் பிறகு பெருமானாருக்கு மக்காவில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டது . எனவே தாயிப் நகரில் வசிக்கிற தம்முடைய  உறவினர்க்களின் ஆதரவை தேடி பெருமானார் அங்கு சென்றார்கள்.

தாயிப் என்பது மக்காவிற்கு தென்கிழக்கில்  67 மைல் தொலைவில் இருக்கிற ஒரு செழிப்பான ஊராகும். திராட்சை, மாதுளை, பிளம்ஸ், பீச்  உள்ளிட்ட பழங்கள் விளைகிற நிலமாகும்..

பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு சென்றதில் அவர்கள் உறவுக்கார்கள் என்பதை தாண்டி ஒரு அரசியல் கண்ணோட்டமும் கலந்திருந்தாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிபில் உள்ள கஜ்வான் மலைப்பகுதியில் மக்காவின் செல்வந்தரக்ள் பலருக்கும் கோடைகால பண்ணை வீடுகள் இருந்தன, தாயிப் நகர மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டால் மக்காவின் கவனத்தை ஈர்க்க அது ஒரு வாய்ப்பாக அமையலாம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கருதினார்கள்.

தாயிப் நகர மக்கள் சகீப் குடும்பத்தினர் என்று அறியப்பட்டனர்.

பொதுவாக அரபுகள் விருந்தினர்களை உபசரிப்பதில் பெயர் பெற்றவர்கள். ஆனால் தாயிப் நகர மக்கள் பெருமானாரை உபசரிக்க வில்லை.மதிக்க கூட தயாராக இருக்க வில்லை.

தனது வளர்ப்பு மகன் ஜைது பின் ஹாரிதா ரலி அவர்களுடன் மட்டுமே அங்கு சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தாயிபின் தலைவர்கள் பெருமானார் அவர்களின் கோரிக்கைகளை கேட்க கூட தயாராக இருக்கவில்லை. அவர்களிடம் மிக மோசமான அனுபவம் பெருமானாருக்கு நேர்ந்தது.

அதிகார செல்வாக்கில் ஆணவத்தின் உச்சத்தில் அவர்கள் பெருமானாரிடம் பேசினார்கள்.

فعمد إلى جماعة من أشراف ثقيف ودعاهم إلى الله فقال واحد منهم: أما وجد الله أحداً يرسله غيرك؟ وقال الآخر: والله لا أكلمك أبداً لأنك إن كنت رسولاً من الله كما تقول لأنت أعظم خطراً من أن أرد عليك الكلام ولئن كنت تكذب على الله ما ينبغي لي أن أكلمك،    

அவர்களிடம் தனக்குள்ள உறவு முறையை சொல்லி பெருமானார் ஆதரவு தேடிப் பார்த்தார்கள். ஆதரவளிப்பதற்கு பதிலாக மக்காவின் காபிர்கள் கூட செய்யாத அக்கிரமத்தை அவர்கள் செய்தார்கள்.

பெருமானாரை தங்களது ஊரிலிருந்து விரைந்து வெளியேற்ற திட்டமிட்டு பெருமானரின் மீது கற்களை வீசுமாறு தங்களுடைய சிறுவர்களை தூண்டி விட்டார்கள்.

மரியாதைக்குரிய ஒரு முதியவரை இப்படி நடத்துவதற்கு வெட்கப்படாத அவர்கள் இரத்தம் வழிந்தோட பெருமானார் (ஸல்) அவரக்ள் நடக்க சிரமப்படுவதை பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள்\

உலகில் தங்களது அரசியல் செல்வாக்கை பற்றிய அகந்தையில் வாழ்கிறவர்கள் காலந் தோறும் அப்படித்தான் இருக்கிறார்கள்

அன்றைய பிர் அவ்ன்களிலிருந்து இன்றைய டிரம்ப் வரைக்கும்.

தங்களுக்கு தோன்றியதை அவர்கள் நியாயம் என்று கற்பிக்கிறார்கள். பெருமானாரின் மீது கல்லெறிந்த்தை போன்ற எத்தகைய கொடூர அநீதிக்கும் அவர்கள் கூச்சமின்றி தயாராகிறார்கள். அதை தடுக்க முடியாமல் உலகம் வேடிக்கை பார்க்கிறது.

அமெரிக்க ஒரு பெரிய நாடு, எப்போதும் ஒரு ஆசிரியரை போல உலகத்திற்கு பாடம் நடத்துகிற வல்லரசு.

ஆனால் அது ஜனவரி 3 ம் தேதி அதிகாலை 4 மணியளவில் வெனிசுலா என்ற நாட்டின் அதிபரின் வீட்டிற்குள்  ஒரு கொள்ளை கூட்டம் போல நுழைந்து அதிபர் நிகலோஸ் மதரா வையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கடத்தியது. வெனின்சுலா நாடு தென் அமெரிக்கா கண்டத்தில் கரீபியன் கடல் ஓரத்தில் இருக்கிற எண்ணெய வளம் நிறைந்த நாடாகும்.

உலகில் எண்ணை வளம் நிறைந்த முதல் மூன்று நாடுகளில் வெனின்சுலா முதல் இடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இட்த்தில் சவூதி அரேபியாவும்

மூன்றாவது இடத்தில் ஈரானும் இருக்கின்றன.

அதிபரை கைப்பற்றியை அடுத்த நாள் வெனின்சுலாவின் எண்ணை வளங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். வெனின்சுலாவில் எண்ணை எடுப்பதற்கு அமெரிக்க கம்பனிகளை அவர் நியமிக்கிறார்.

என்ன நடக்கிறது என்று உலக நாடுகள் கனிப்பதற்குள்ளாக காரியங்கள் கச்சிதமாக அரங்கேறி விடுகின்றன.

அமெரிக்க அதிபர்ரை எந்த வகையில் சேர்ப்ப்து என்பது குழப்பமாக இருக்கிறது

அடுத்த நாள்  விக்கீபிடியா போல ஒரு அடையாள் அட்டையை தானே வெளியிட்ட அவர் அதில் தன்னை வெனின்சுலாவின் தற்போதைய அதிபர் என்று எழுதி வைத்துள்ளார்.  .

இது வரை வெனின்சுலாவின் எண்ணை வளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த ரஷ்யாவாலும்  சீனாவாலும் கூட   ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதில் ரஷ்யா சீனாவின் இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டது.

சீனாவின் தொழி நுட்பத்திற்கு இன்று உலகமே அடிமையாக இருக்கிறது என்று போற்றப்படுகிறது. ஆனால் அதன்  தொழில் நுட்பம் என்ன செய்கிறது என்று இப்போது கேள்வி எடுப்ப படுகிறது.

ஏனெனில் வெனின்சுலா அதிபரை கடத்திச் செல்ல அமெரிக்காவின்  20 ராணுவ வீர்ர்கள் மட்டுமே சென்றுள்ளனர். அதில்  ஒருவருக்கு கூட  காயம் எதுவும் இல்லை.

அமெரிக்க அதன் சகதியை மிக துல்லியமாக உலகிற்கு காட்டி விட்டது.

உலகின் எந்த தலைவரையும் ஒரு பூக்கூடையை தூக்குவது போல தன்னிட்த்திற்கு தூக்கி செல்ல முடியும் என்று தனது நடவடிக்கையால அது காட்டி விட்டது.

அது தனது திட்ட்த்தை முழுவதுமாக உலகிற்கு தெரிவித்து விட்டது. உலகின் பெட்ரோல் முழுவதும் அதன் கை வசத்தில் வேண்டும் என்பதே அது.

காரணம் இன்றைய மொத்த உலகும் பெட்ரோலை சார்ந்திருக்கிறது. நேரடியாக சிறியதும் பெரியதுமான வாகனங்களுக்கு உபயோகிக்கிற பெட்ரோல் மட்டுமல்லாது. உணவு பொருட்கள் தூய்மைப் பொருட்கள் பசை போன்ற பொருட்கள் கலர் பொருட்கள் என ஏராளமான அத்தியாவசியப் பொருட்கள் இப்போது மறைமுகமாக பெட்ரோலிய பொருட்களாக இருக்கின்றன.

என்வே பெட்ரோல் என்பது தான் இப்போதைக்கு உலகின் மிகப் பெரிய மூல தனம்

அதை தான் அமெரிக்க முற்றிலுமாக ஆக்ரமிக்க நினைக்கிறது.

டென்மார்க்கின் சொந்த நிலமான கிரீண்லாண்டை நான் எடுத்துக் கொள்வேன் என்று கொக்கரிக்கிறார் அமெரிக்க அதிபர்.

அதுவும் எண்ணை வளம் மிகுந்த பிரதேசமாகும்.

தங்களது நாட்டின் 51 வது மாநிலமாக கனடாவை ஆக்கி கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அது உலகின் எண்ண வளம் மிக்க நான்காவது நாடாகும்

வெறும் பேச்சாக இல்லாமல் அமெரிக்க அதிபர் தனது திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஈரான் மீது போர் தொடுப்பேன் என மும்முரமாக இருக்கிறார்.

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்தால் ஈரான் அமெரிக்காவை தாக்க முடியாது ,ஏனெனில் அது வெகு தூரத்தில் இருக்கிறது.

அதனால் பக்கதில் இருக்கிற அமெரிக்க படை தளங்களை தான் ஈரானால் தாக்க முடியும் . அந்த படைத்தளங்கள் அனைத்தும் கத்தார், சவூதி, அமீரமகம் குவைத் உள்ளிட்ட  அரபு நாடுகளில் இருக்கின்றன.

அப்படியானால் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுப்பது அரபு நாடுகள் அனைத்தையும் ஆபத்தில் இழுத்து விடுகிறது என்று பொருளாகும்.

அது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிர பல கோடி மக்களை துயரத்தில் ஆழ்த்துவாதாகும்.

(அல்லாஹ் பாதுகாப்பானாக)

இந்தியாவும் மற்ற சில நாடுகளும் தங்களுடைய மக்கள் ஈரானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இதுவும் பல நோக்கங்களுக்காக வெளிநாடு சென்றுள்ள மக்களுக்கு பெரும் துயர் அளிக்கிற நடவடிக்கை ஆகும்.

உலகின் ஒரு பாதி நிலப்பரப்பை சிக்கலுக்குள்ளாக்குகிற தீய திட்டத்தை அமெரிக்க எதற்காக செயல்படுத்துகிறது.>

வேறென்ன பெட்ரோலுக்காக த்தான்,

ஈரான் உலகின் மூன்றாவது பெட்ரோலிய வளமுள்ள நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஈரானில் ஜனநாயக் இல்லை என்று அமெரிக்கா கூறுகிறது. இத்தனை ஆண்டுகளாக அங்கிருக்கிற அரசாங்கத்திற்கு எதிராக அங்குள்ள மக்களை ஒரு ரவுடியை போல தூண்டிவிடுகிறார் அமெரிக்க் அதிபர். நிறுவன்ங்களை கைப்பற்றுமாறு ஆலோசனைகளை அனுப்புகிறார்.

ஈரான் இப்போது வெளியிலிருந்து மூழ்கிற போர் சூழல் ஒரு புரமாகவும் உள்ளிருந்து மூட்டப்பட்டிருக்கிற கலவரச் சூழல் மறு பக்கமுமாக இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஈரான் 1979 முதல் அமெரிக்காவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிற நாடாகும். இப்போதைய நிலை போல அங்கு இதற்கு முன் போராட்டம் எதுவும் எழுந்த்தில்லை.

இப்போதைய போர்ட்டாங்களில் 12 யிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு போலித்தனமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன்.

ஈரானில் ஜன்நாயகம் இல்லை என்று நம்முடைய நாட்டில் கூட சில செய்தி சேனல்க முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

நியாயமாக யோசித்தால் ஈரானுக்கு அருகில் இருக்கிற சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் இருப்பதை விட ஈரானில் ஜனநாயகம்அதிகமாக இருக்கிறது .

பெண் சுதந்திரம் சவூதி அமீரகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கிறது.

பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் சட்டம் சவூதி அரேபியாவில் 2015 ல் நடைமுறைக்கு வந்தது.  1979 லேயே  ஈரானில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப் பட்டு விட்டது.

கருத்துச் சுதர்ந்திரமும் அண்டை நாடுகளை விட  ஈரானில்  அதிகமாகவே இருக்கிறது.

ஈரானிய சினிமாக்கள் உலக சினிமாக்களில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. சர்வதேச  சினிமா அரங்குகளில் ஈரானிய சினிமாக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

அந்த சினிமாக்களில் இன்றைய ஈரானிய சமூக நிலை , அரசி மீதான் விமர்சனம் சமூகத்தின் மீதான விமர்சனம் அனைத்தும் முன் வைக்கப்படுகின்றன.

ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதாக தொட்ர்ந்து மேற்கத்திய ஊடகங்கள் பழி சொல்வதுண்டு. ஆனால் சமீபத்திய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பிறகு சுய செய்தியாளர்கள் பலரும் நேரில் ஈரானுக்கு சென்று அங்குள்ள பெண்களின் சுத்ந்திரமான நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஈரானில் புரட்சி நடைபெற்ற போது அமெரிக்க் தூதரகத்தை முற்றுகை யிட்டு ஒரு அங்கிருந்தவர்களை சிறை பிடித்தது. அந்த புரட்சிக் குழ்வுக்கு தலைமை தாங்கியது மஃசூம் இப்திகார் என்ற  ஒரு பெண்மணி  ஆவார்.

அவர் பிற்காலத்தில் ஈரானிய அமைச்சர்களில் ஒருவ்ர் ஆனார்.

அதே போல ஈரானிய பாராளுமன்றத்தில் ஏராளமான பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய போது ஒரு அரசு செய்தி நிறுவனம் தாக்கப் பட்ட்து. அப்போது ஒரு பெண் செய்தியாளர் அச்சப்படாமல் செய்தி வாசித்த்து உலகம் முழுக்க பிரபலமானது. .

ஈரான் ஒரு ஷியா நாடு என்றாலும் அதன் பாராளுமன்றத்தில் சன்னி பிரிவு எம்பிக்கள் இருக்கிறார்கள். கிருத்துவர்களுக்கும்  யூதர்களுக்கும் கூட நாடாளுமன்ற பிரதிநிதிகள் உண்டு.

இவ்வளவு இருந்தும் ஈரானில் ஜனநாயகம் இல்லை என்று கதை கட்டி விடுவதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது/

ஈரானில் சில துறைகள் வளர்ச்சியடைவில்லை என்பது எதார்த்தம் ஆமால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் நீண்ட கால தடையே அதற்கு காரணம் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனவே எந்த நியாயமும் இல்லாமல் பொய்யான காரணங்களை சொல்லி அமெரிக்கா இப்போது ஈரானை ஆக்ரமிக்க நினைக்கிறது.

இது அமெரிக்காவிற்கு வாடிக்கையான ஒன்று தான். அமெரிக்க கடந்த கால வரலாற்றில் 400 தடவை அடுத்த நாடுகளை ஆக்ரமிக்க முயற்சித்திருக்கிறது.

1961 ல் காங்கோ ஜனநாயகக் குடியரசின் முதல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி- பாட்ரிஸ் லுமும்பா (1925-1961) வை அமரிக்காவின் சி ஐ ஏ அமைப்பு கடத்தி கொலை செய்தது. அவரது உடலை ஆசிட்டில் மூழ்கடித்து சிதைத்தார்கள்.  அப்போது பெல்ஜியம் நாடு இதற்கு துணை போனது.

அவரது படுகொலையின் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பெல்ஜியம் லுமும்பாவின் பற்களில் ஒன்றைத் திருப்பிக் கொடுத்தது

ஆப்ரிக்க மக்களின் எழுச்சியை தடுத்தாக வேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா செயல் பட்டது

ஆனால் அவரது படுகொலை ஆப்ரிக்க மக்களின் எழுச்சிக்கு வழிகோலியது என்று வரலாறு கூறுகிறது.

லுமும்பா கொல்லப்பட்ட போது இப்போது நடந்த்து போலத்தான் கேட்பார் யாரும் இருக்கவில்லை. .

அமெரிக்காவை தொடர்ந்து எதிர்ந்து வந்த கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய 1959ல் இருந்து 2006 வரை அமெரிக்க 634 தடவை முயற்சித்தது என்கிறார் கியூபா உளவுத் துறை ஆய்வாளர். பாபியன் எஸ்கலண்டே, கணக்க் கூட்டிப் பார்த்தால் ஒர் மாதத்திற்கு ஒரு  தடவைக்கும் மேல் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது போலத்தான் பயங்கர வாத ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற பொய்யான குற்றச் சாட்டை சொல்லி சதாம் ஹுசைனை அமெரிக்கா கொன்றது. அதே போல தனது நாட்டுக்கு பெரும் வளம் சேர்த்து அமெரிக்க டாலரை ஒப்புக் கொள்ல முடியாது என்று சொன்ன முஅம்மர் அல் கடாபியையை அமெரிக்கா கொன்றது.

அமெரிக்கவின் இந்த தொடர் ஆணவ வெறிச் செயல் அவதூறுகளின் துனை யோடு வேடிக்கை பார்க்கும் உலக் நாடுகளின் ஆசியோடு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க நினைத்தால் இப்போது ரஷ்ய அதிபர் புடீனை கூட கடத்த முடியும்!

அவரையும் மக்கள் நடுவே நிறுத்தை  கொலை செய்யவும் முடியும்

இப்போது ஈரான் எரிமலையில் விளிம்பில் நிற்கிறது.

இனி வரும் காலங்களில் அமெரிக்கா ஈரானில் மிக மோசமான தக்குதல்கள்ள நடத்தலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஈரான் இதை எதிர் கொள்ள முடியாமல் போகலாம். இதற்கு முன் தப்பி ஓடியது போல ஷியா மதத் தலைவர் ரஷ்யாவுக்கோ பிரான்ஸுக்கோ தப்பிச் செல்ல்லாம்.

ஒரு வேலை ஈரான் தற்காலிமாகாக தப்பித்தாலும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது ஒரு பெரும் கேள்விக்குரியாக இருக்கிறது.

அமெரிக்காவின் வீருப்பத்திற்கு எதிராக உலகத்தால் ஒன்றும் செய்யமுடியாது என்ற சூழல் தெளிவாக தெரிகிறது.

ஒரு வேலை அமெரிக்கா வெளிப்படையாக தோற்றாலும் கூட அந்ந்நடுகளுக்குள் வஞ்சகமாக தனது கருத்துக்களை திணித்து விடுகிறது.

கொரிய யுத்த்தில் அமெரிக்கா தலையிட்டு வெற்றி பெற்றது கொரியாவை இரண்டாக்கியது.

1975 ஆண்டு நடைபெற்ற  வியட்நாம் யுத்த்தில்  அமெரிக்க தோற்றது.

ஆனால் இப்போது வியட்ந்நாம் அமெரிக்க வீருப்பங்களை செயல் படுத்தும் நாடாக மாறியிருக்கிறது.

இது ஒரு காலகட்டத்தின் போக்கு

உண்மைக்கு மாற்றமாக , நியாயத்திற்கு எதிராக, நன்மைக்கு முரணாக அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின் வழியாக உலக நாடுகள் மீது தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அமெரிக்கா ஒன்றை விரும்பினால் உலக் மக்கள் அதை விரும்புகிறார்கள்.

அமெரிக்க ஒன்றை வெறுத்தால் உலக மக்கள் அதை எதிர்க்கிறார்கள்.

மேற்கத்திய கலாச்சாரத்தை அதற்கு நேர் எதிரான அரபு நாடுகள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

ஒரு நூற்றாண்டாக இது தொடர்கிறது.  

இது எந்த அளவில் வளர்ச்சியடைது நிற்கிறது என்றால்

இனி அமெரிக்கா தோற்கும் என்பது ஒரு அர்த்தமற்ற பேச்சு என்று சிலர் கூறும் அளவு நிலை உருவாகியிருக்கிறது.

ரஷ்யா சீனா மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை ஒரு கேலிப்பொருளாகவே இருக்கப் போகிறது என்கிறார்கள் அவர்கள்.

அமெரிக்காவின் இந்த ஆணவ அரசியலை தடுத்து நிறுத்த எல்லாம் வல்ல இறைவன் நீதியை நிலைநாட்டும் ஒரு தலைவரை உலகுக்கு தர வேண்டும்.

அதுவரை பொருந்திருந்து தான் ஆகவேண்டும்.

அதுவரை அரசியல் ரீதியாக நாம் பலவீனமடைந்தாலும் ஆன்மீக ரீதியில் நாம் பலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

لتتَّبعنَّ سَننَ من كانَ قبلَكم حذو القُذَّةِ بالقُذَّةِ حتَّى لو دخلوا جحرَ ضبٍّ لدخلتُموه. قالوا: اليَهودُ والنَّصارى؟ قالَ: فمَن.

இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் அறிஞர்கள் நமது பலவீனத்தை புரிந்து கொண்டு நமது ஈமானையும் இஸ்லாமையும் பாதுகாத்துக் கொள்ல ஒரு வழி சொல்கிறார்கள்.

பழையதை நிலை நிறுத்துவோம் ; புதீயதாய் எதையும் செய்யாமல் இருப்போம்.

என்கிறார்கள்.

மார்க்கம், தனிப் பட்ட வாழ்வியல் முறைகள்,.சமூக அரங்குகள் அரசியல் நடைமுறைகள் அனைத்திலும் பாரம்பரியத்தை பற்றி நிற்பதே இந்த ஆணவ அரசியல் வெள்ளத்தை எதிர் கொண்டு தப்பிப்பதற்கான வழி என்று அவரக்ள் அடையாளப்படுத்துகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு மிஃராஜின் வரலாறும் ஒரு நம்பிக்கை தருகிறது.

தாயிப் நகரத்து  ஆணவப் பேர்வழிகளின் கொடுமையு சிரிப்பும்   அதிக நாள் நீடிக்க வில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பரிதாப நிலை அதிக காலம் நிலைக்கவில்லை.

அல்லாஹ் மூன்றாண்டுகளுக்குள் பெருமானாருக்கு மதீனாவில் மதிப்பு மிகு மாற்று ஏற்பாடுகளை கொடுத்தான் அந்த வசதிகள் தானாக அவரை தேடி வந்தனர். அதன் அச்சாரமாகத்தான் மிஃராஜ் நிகழ்வு அமைந்த்து.

ஒரு அரசியல் ஆதரவை தேடி பெருமானார் (ஸல்) அவர்கள் தாயிப் நகருக்கு சென்ற பயணம் வெற்றி பெறாமல் போன போது அல்லாஹ் தன் தரப்பிலிருந்து பெருமானாருக்கு ஏற்பாடு செய்த மிஃராஜ் பயணம் அவரது வெற்றிப் பயணத்தை குறிக்கும் ஒரு அடையாளமாக அமைந்த்து.

இந்த மிஃராஜுடைய நாள் அது போல ஒரு அருமருந்தாக அமையட்டும்.