வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Sunday, March 30, 2025

பரிசுத்தம் காப்போம்

நமது மகிழ்ச்சிக்குரிய ஒரு பெருநாளில் அல்லாஹ் கட்டளையிட்ட தர்மத்தை நிறைவேற்றினோம்.

அல்லாஹ் கபூல் செய்வானாக!     நமது நோன்பை சுத்தப்படுத்துவானாக்!

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஏழைகளையும் கவனித்துக் கொள்ளுகிற ஒரு சிந்தனையை சதகத்துல் பித்ரு  ஏற்படுத்துகிறது.

حديث عبد الله بن عباس  قال: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ

 قال بعض أهل العلم: زكاة الفطر كسجدة السهو للصلاة، تجبر نقصان الصوم، كما يجبر سجود السهو نقصان الصلاة.

 பொதுவாக கடமைகளுக்கு கவனிக்கப்படுகிற சில வரையறைகளை சதகத்துல் பித்ரின் போது மார்க்கம் கவனிப்பதில்லை

சிறுவர்களுக்காகவும் கொடுக்க வேண்டும்.

ஏழைகளும் கொடுக்க வேண்டும்.

புத்தி சுவாதீனமற்றவர்களுக்காகவும் கொடுக்க வேண்டும்.

ஏன் சில மத்ஹபுகளின் படி வீட்டிற்கு வந்திருக்கிற விருந்தாளிக்காகவும் கொடுக்க வேண்டும்.

تجب زكاة الفطر على المكلف عن نفسه، وعمن تلزمه نفقته من المسلمين، ولا يشترط لوجوبها العقل ولا البلوغ ولا الغنى. وتجب على كل مسلم: رجل أو امرأة، صغيرٍ أو كبيرٍ

 ஈந்துவக்கும் மனித இயல்பை சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக வழக்கமான நிபந்தனைகளை தளர்த்தி சதகத்துல் பித்ரு வலியுறுத்தப்பட்டுள்ளது.  

 இந்த அடிப்படையில் மகத்தான் மனிதப் பண்பை சிறப்பாக வெளிப்படுத்தி விட்டு தொழுகைக்கு வந்தமர்ந்திருக்கிற மக்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அல்லாஹ் வாழ்த்துச் சொல்கிறான்.

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤ وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥ [الأعلى:1

அல்லாஹ் வழங்குகிற இந்த பரிசு நம் அனைவருக்கும் கிடைக்கும்.

இந்த மக்கள் இப்படி பள்ளிவாசலில் கூடியிருக்கிறார்களே எதறகாக என்று அல்லாஹ் மலக்குகளிடம் கேட்கிறான்.

அல்லாஹ்விற்கு தெரியாது என்பதல்ல.. மலக்குகளை சாட்சிகளாக வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு கேட்கிறான். மலக்குகள் சொல்வார்கள்.  இறைவா ஒரு மாதம் முழுக்க உனக்காக நோன்பிருந்த்தற்கான கூலியியை எதிர் பார்த்து வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

அல்லாஹ் கூறுவான்

قوموا مغفورٌ لَكم، قد بدِّلت سيِّئاتُكم حسناتٍ  الراويأنس بن مالك

சின்ன தவறுகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுகிறான். எனில் தவறுகளே இல்லாத மக்கள் எந்த அளவு அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வார்கள் என்பதை சொல்லத்  தேவையில்லை

இந்த ரமலானில் நாம்  பாவ மன்னிப்பை பெற்றுக் கொண்டு நாம் வெற்றி அடைந்து விட்டோம்.

இனி வரும் காலங்களில் நமது வெற்றியை  பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு நமக்கு இருக்கிறது

நமது வெற்றியை பாதுகாத்துக் கொள்வதற்கு அல்லாஹ் மிக எளிமையான ஒரு வழி கூறுகிறான்.

قد أفلح من زكاها وقد خاب من دساها 

இதயத்தை பரிசுத்தமாக வைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். இதயத்தை அழுக்கப்படுத்திக் கொண்டால் தோல்வியே ஏற்படும் என்கிறது இந்த வசனம்

அல்லாஹ் பாதுகாப்பானாக!

நமது இதயம், காமம்.- சுய நலம்- பகை- சந்தேகம் -பொறாமை குணங்களால் அழுக்கடைகிறது.

இந்த குணங்கள் தீவிரமடைகிற போது நமது புத்தி மிருகமாக மாறிவிடுகிறது.

இந்த குணங்கள் தலைக்கேறியவர்களுக்கு எந்த நியாயமும் நீதியும் தூய்மையும் நினைவில் நிற்காது. பித்துப் பிடித்துத்தான் அலைவார்கள். அவர்களது மனம் சிதைவுக்குள்ளாகியிருக்கும்.

இந்த ஒவ்வொரு குணமும் நம்மை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதற்கு விளக்கத்தை தேடி நாம் வேறெங்கும் செல்ல வேண்டிய தேவையில்லை. அன்றாடம் தின்சரி பதிரிகைகளை வாசித்தால் போதுமானது.   

இதயத்தை பரிசுத்தப் படுத்திக் கொள்வதற்கு அல்லாஹ் அருமையான ஒரு வழி சொல்கிறான்.  அறுவருக்கத் தக்க காரியங்களிலிருந்து விலகி நில்லுங்கள்

  • لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ ۚ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴿١٤٨ النساء﴾

அறுவறுப்பானவற்றை பகிரங்கமாக பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை

இன்றைய நமது வாழ்க்கை முறையில் நம்மை ஈர்ப்பதற்காக அதிகம் அறுவருப்பான செய்திகளை தூண்டில் முள்களாக பயன்படுத்துகிறார்கள்.

பதிரிகைகளை திறந்தால் கள்ளத் தொடர்பு காதலர் ஓட்டம் கணவன் மனைவி சண்டை இழிவான காரணங்களுக்கான சண்டைகள் கொலைகள் போன்ற செய்திகளே நிறைந்து காணப்படுகின்றன.

சமீபத்தில் இந்தியாவின் ஒரு பெரிய ஆலிம் தான் தினசரி பத்ரிகைகளை படிப்பதை நிறுத்தி விட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். அவசியமான செய்திகள் எப்படியும் எனக்கு வந்து சேர்ந்து விடும். பத்ரிகைகளை திறந்தாலே நமக்கு தேவையற்ற அறுவறூப்பான செய்திகள் தான் இருக்கின்றன.  

 لَّا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ

என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி நான் பதிரிகை படிப்பதை நிறுத்தி விட்டே ன் என்று கூறினார்.

இது மிக ஆழமான செய்தி தான்.

 நாம் எப்படிப்பட்ட செய்தியை படிக்கிறோம் என்பது நமது மரியாதையை தீர்மாணிக்கிறது.

இன்றைய மீடியாக்களும் செய்தி ஊடகங்களும் என்ன செய்கின்றன என்றால்?  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற கீழான உணர்ச்சியை தூண்டி விட்டு அதற்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன.

அந்த செய்திகள் தான் வாசகர்களை ஈர்க்கின்றன. அறிவு சார்ந்த ஆராய்ச்சிப் பூர்வமான நல்ல தகவல்கள் அடங்கிய கருத்துக்கள்ள மக்கள திரும்பியும் பார்ப்பதில்ல என அவர்கள் வாதிடுகிறார்கள்.

 நல்ல செய்திகளை கூட ஒரு கவர்ச்சியான தலைப்பில் அல்லது கவர்ச்சியான பட்த்துடன் வெளியிட்டால் தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று கூறுகீறார்கள்

 இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பண்பாட்டுக்கும் இடையில் உள்ள சவாலாகும்.

 நாம் அறுவருப்பாக பேசுவதை

அறுவருப்பான செய்திகளை பேசுவதை

அறுவருப்பான செய்திகளை படிப்பதை

அறுவருப்பான காட்சிகளை பார்ப்பதை

அறுவருப்பானவற்றை பார்வோர்டு செய்வதை

தவிர்த்துக் கொள்ள திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் இவற்றை விரும்புவதில்லை என்ற வரி அதற்கு போதுமானது.

அறுவருப்பான செய்திகள் பலவற்றின் பின்னணியில் பலவற்றில் பொய்யும் பகையும் ஒளிந்திருக்கிறது.

தமிழ் மீடியாக்களில் டிரண்டான ஒரு ரீலை நீங்கள் பார்த்திருக்கலாம்.   

ஒரு பிரப்ல பாடகி மனம் குமுறி மீடியாக்களிடம் பேசுகிறார்.

நான் ஒரு வேலையாக ஐத்ராபாத் சென்றிருந்தேன். என கணவர் சென்னையில் இருந்தார். அங்கு சாப்பிட்ட்து எனக்கு ஒத்து வரவில்லை. என் கணவருக்கு அதை போனில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து விட்டேன்.  என கணவர் உடனடியாக இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு என்னை மருத்துவமனையில் சேர்த்தார். அதற்குள் மீடியாகாரர்களான நீங்கள், பிரபல பாடகிக்கு கணவருடன் தகறாது. ஐதராபாத்தில் தற்கொலைக்கு முயற்சி அறையில் அரைகுறை ஆடையுடன் மயங்கிக் கிடந்தார் என்று செய்தி போடுகிறீர்கள்.

உங்களுக்கெல்லாம் அக்கிரம்த்திற்கு ஒரு அளவே இல்லையா. எனக்கோ என்கணவருக்கோ எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னிடம் படிக்கிற பல நூறு மாணவிகள் என்ன நினைப்பார்கள். அவர்களது மனதில் என்னைப் பற்றி என்ன மாதிரியான எண்ணம் ஏற்படும் என்பதை எண்ணி நான் மிகவும் கவலை அடைகிறேன்.

என்று கூறியிருந்தார்.

அறுவறுப்பான பல செய்திகளுக்குப் பின்னாலும் இப்படித்தான் உண்மை துளியும் இருப்பதில்லை. அது பலருடைய மானத்தை பங்கப்படுத்தி விடுகிறது.

இந்த மாதிரியான செய்திகளை நாம் விரும்பி வாசிக்கிறோம் என்பது தான் இத்தகைய செய்திகளை பரப்புவோருக்கு பெரிய பலமாக இருக்கிறது.

இத்தக்கய அறுவருப்பான செய்திகள் பலரது மானத்தை பறித்து விடுகிற என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் மான்ங்கெட்ட மனிதர்களே அறுவருப்பான செய்திகளையும் காட்சிகளை விளம்பரத்திற்காகவும் அற்ப காசுக்காகவும் பரப்புகிறார்கள்.

சில பெண்கள் மிக ஆபாசமாக தம்முடைய உடலை படம் பிடித்து ரீல் வெளியிடுகிறார்கள் . கேட்டால் உடல் தனக்கு இறைவன் கொடுத்த கொடை என்று தத்துவம் பேசுகிறார்கள்.

லைக் கிடைக்கும் என்பதற்காக அழகான மகளையும் மனைவியையும் பிறருக்கு விருந்தாக்குகிற மனோபாவம் எதார்த்தமாக மாறியிருக்கிறது.

திறைமைக்கு கிடைக்கிற பாராட்டு என்று அத்தகையோர் வாதிடுகிறார்கள். ஆனால் அவர்களுடயை பெண்களை கவர்ச்சியாக காட்டினால் தான் சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்

இது அப்பட்டமான அநாகரீகம் எதை நம்பி பெருகி வருகிறது என்றால் இதற்கான சப்ஸ்கிரைபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதே காரணம்.

நாம் அத்தக்கய சப்ஸ்கிரைபரில் ஒருவராக இருக்க விரும்புகிறோமா என்று யோசித்து பார்க்க வேண்டும்.

தீய மனிதர்களைஅறுவருப்பாக  கண்டண்ட் தருகிறவர்களை பாலோ செய்வது தான் இப்போதைய டிரண்டாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த சப்ஸ்கிரிஸன் – மிக ஆபத்தானது நமது சிந்தனையை அழுக்குப் படியச் செய்யக் கூடியது நமது செய்ல்பாடுகளை முடக் கிப் போடக் கூடியது.  நமது மரியாதையை பாழ்படுத்தி விடக் கூடியது.

கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டு எம் எல் ஏ க்கள் சட்ட மன்ற அரங்கிற்குள்ளேயே ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது சில வருடங்களுக்கு முன் பெரிய சர்ச்சையை கிளப்பியது நமக்கு நினைவிருக்காலாம்.

ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இது எவ்வளவு பெரிய அவமானம் ?

இந்த பாலோ அப்புகள் நமது மரியாதையை குலைத்து விடக் கூடியவை என்பது மட்டுமல்ல. இது அதிகரிக்கிற போது அல்லாஹ்வின் வேதனையையும் கொண்டு வந்து விடுகிற ஆபத்து இருக்கிறது.  

இப்னுல் ஜவ்ஸி ஒர் நிகழை அறிவிக்கிறார்.

ஒரு ஊரில் மக்கள் எல்லோரும் இறந்து கிடந்தனர். அந்த ஊர் வாசி ஒரு வரை எழுப்பி ஈஸா அலை அவர்கள் அதற்கு காரணம் கேட்டார். எங்க ஊர் காரர்கள் தப்பான ஆட்களை பாலோ செய்தனர் . அதனால் எல்லோரும் அழிக்கப் பட்டோம் என்று அவர் பதில் சொன்னார்.  

مرّ عيسى عليه السلام على قرية، فوجد كل من فيها أمواتا، وهم مطروحون على وجوههم في الأزقّة، فتعجّب عيسى عليه السلام من ذلك،

وقال: يا معشر الحواريين، إن هؤلاء القوم قد ماتوا على سخط وغضب، ولو ماتوا على رضا من الله، لدفن بعضهم بعضا.

فقالوا: يا روح الله، وددنا أن نعرف قضيّتهم وخبرهم

. قال: فسأل الله عز وجل في ذلك، فأوحى الله إليه: إذا كان الليل نادهم، فإنهم يجيبونك.

فلما كان من الليل، صعد عيسى على شرف ونادى:

يا أهل القرية، فأجابه مجيب من بينهم: لبيّك يا روح الله، فقال: ما قضيتكم, وما خبلاكم؟

فقال: يا روح الله، بتنا في عافية، وأصبحنا في هاوية.

قال: ولم ذلك؟

قال: لحبنا في الدنيا، وطاعة لأهل المعاصي، ولم نأمر بالمعروف، ولم ننه عن المنكر

. فقال له عيسى عليه السلام: كيف كان حبكم للدنيا؟

قال: كحبّ الصبي لأمه؛ إذا أقبلت فرحنا، وإذا أدبرت جزنّا وبكينا

. فقال له عيسى عليه السلام: يا هذا: ما بال أصحابك لم يجيبوني؟

قال: إنهم ملجمون بلجام من النار بأيدي ملائكة غلاظ شداد. قال: وكيف أجبتني أنت من بينهم؟

قال: إني كنت فيهم، ولم أكن منهم، فلما نزل بهم العذاب

لحقني معهم، فأنا الآن معلّق على شفير جهنّم، لا أدري: أنجو منها، أم أكبّ فيها

[القصة اوردها ابن الجوزى فى كتاب بحر الدموع]

 

அறுவருப்பன வற்றை பின் தொடர்வது அழிவை தரும் என்பது இந்நிகழ்வு கற்பிக்கும் பாடமாகும்.

வெளிநாடுகளில் சுய முன்னேற்ற பயிற்சியளிக்கும் பயிற்றுனர்கள் பலரும் இப்போது முன்னேற்றத்திற்கான வழிகளை இப்படித்தான் தொடங்குகிறார்கள்.

ஸ்டாப் வாட்சிங்க் போர்னோ சைட்ஸ்

செக்ஸ் காட்சிகளை பார்ப்பதை நிறுத்துங்கள் .

அறுவருப்பான செய்ல்களுக்குள் மூழ்கியிருப்பவர்களால் நல்லவிதமாக எதையும் யோசிக்கவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது.

பரிசுத்தமான ரமலான் ஒரு மாதம் முழுவதும் நம்மை சுத்தமாக வைத்திருந்த்து. பெருநாளின் மூலம் நம்மை இன்னும் பரிசுத்தமாக ஆக்கி விடை பெற்றுச் செல்கிறது.

இனி அடுத்து வரும் நாட்களில் அல்லாஹ் விரும்பாத

அறுவெருப்பான பேச்சுக்களை அறுவெருப்பான நாம் தவிர்த்துக் கொள்வோம்.

அறுவெருப்பான காட்சிகளை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வோம்

அறுவெருப்பான செய்திகளை ஒற்றை விரல் இழுப்பில் ஒதுக்கி விடுவோம்.  

எதை நாம் பார்க்கிறோமோ கேட்கிறோமோ பேசுகிறோமோ அது நமது மரியாதையை தீர்மாணிக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

அல்லாஹ் நிச்சயம் நம்மை நேசிப்பான்.

ரமலானை முடித்த ஒரு பெருநாளில் உறுதி ஏற்றுக் கொள்வதற்கான ஒரு நல்ல விசயம் இது

அது மட்டுமல்ல நமது முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான காரியமும் கூட

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

அனைவருக்கும் ஈதுல் பித்ரு பெருநாள் நலவாழ்த்துக்கள். 

ஈதுல் பித்ர் முந்தைய பதிவுகள் 2025

 இது வெற்றியாளர்களுக்கான நாள் 2023

 நமது வாழ்வு மணக்கட்டும். பெருநாள் உரை 2019

இறைவா! உனக்கு நன்றிகள் கோடி 2018

பெருநாள் சிந்தனை மறக்க கூடாத நினைவுகள் 2018

 தீனில் நிலைத்திருப்போம்.2017

Thursday, March 27, 2025

மகத்தான மானுடத்தை நோக்கி நகர்வோம்

 ரமலான் விடை பெற இன்னும் சில நாட்களே இருக்கின்றன.

 ஆயிரம் மாதங்களை விட சிறந்த் ஒரு இரவை நேற்று இபாத்த்தில் கழித்து விட்டு இந்த ஜும் ஆவில் அமர்ந்திருக்கிறோம்.

 கடந்த இரவை நமது நம்பிக்கைகு ஏற்ப பல மடங்கு சிறப்பு வாய்ந்த்தாக அல்லாஹ் ஆக்குவானாக!

 கத்ரு இரவு ஏராளமாக மலக்குகள் இறங்குகிற இரவு

 َنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : الْمَلائِكَةُ لَيْلَةَ الْقَدْرِ فِي الأَرْضِ أَكْثَرُ مِنْ عَدَدِ الْحَصَى

 நேற்று இரவு திரண்ட கூட்டத்தை பார்த்து மலக்குகள் தங்களை திருத்திக் கொண்டிருப்பார்கள். அதற்காகவே அல்லாஹ் மலக்குகளை ஏராளமாக அனுப்புகிறான்.

மலக்குகள் வந்து சென்ற நேரம் பாக்கியமானது. அதுவும் வெள்ளிக்கிழமை எனும் போது அதன் பாக்கியம் பெருகுகிறது.

அந்த மலக்குகள் பெருமிதப்படுகிற அளவில் வாழும் நஸீபை வல்ல இறைவன் நமக்கு வழங்கியருள்வானாக!  

லைலத்துல் கத்ரு – ரமலானும் திருக்குர் ஆன் அருளப்பட்டதால் பாக்கியம் பெற்றவை

அந்த குர்ஆனின் வசன்ங்களை தராவீஹ்களில் ஓதக் கேட்டோம்.

குர்ஆனின் சாதனை அரும்பெரும் சிற்ப்பு மிக்க ஒரு தலைமுறையை உருவாக்கியதாகும்.

குர் ஆனுக்கு முன்னர் அரபு மக்கள் சாப்பிட விரும்பினால் உயிருள்ள மாட்டின் ஒரு சப்பையை அப்படியே அறுத்து சாப்பிடுவார்கள்.

மது அருந்த விரும்பினால் சொந்த சகோதரனை கூட சதி செய்து கொலை செய்து விடுவார்கள்.

தம்மை சார்ந்தவர்களுக்காக என்று வரும் போது எந்த நீதியையும் பொருட்படுத்தமாட்டார்கள்.

மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் உடல் மட்டுமே இருந்த்து.

அம்மனிதர்களை உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்கிய பெருமை குர் ஆனுக்கு இருக்கிறது.

குர் ஆன் உருவாக்கிய ஆளுமைகளின் பராக்கிரமங்கள் ஆச்சரியத்திற்குரியவை

ஹீரா யுத்த்தின் போது எதிரிப்படையின் தலைவன் காலித் பின் வலீத் ரலி அவர்களை வந்து சந்தித்தான் . அவனது கையில் ஒரு குப்பி இருந்தது. இது என்ன என்று கேட்டார்கள்.  இது விஷக்குப்பி நம்முடைய பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சியுடன் என சமூக மக்களிடம் செல்வேன். இல்லை எனில் இந்த விசத்தை குடித்து இறந்து விடுவேன் என்றான். இதை சாப்பிட்டால் இறந்து விட முடியுமா என்று சொன்ன படி சட்டென்று அதை பிடுங்கி காலித் ரலி அவரக்ள் குடித்தார்கள். அந்த விஷ்ம் அவரை ஒன்று செய்ய வில்லை. எதிரிப்படைத் தலைவன் இஸ்லாமை தழுவினான்.

அபு முஸ்லிம் அல் கவ்லானி என்ற புகழ் பெற்ற தாபியீ இபுறாகீ நபியை போல நெருப்புக் குழிக்குள் தள்ளப்பட்ட போதும் உயிருடன் திரும்பி வந்தார்.

மதீனாவுக்கு வந்த அவரை அபூபக்கர் உமர் ரலி ஆகியோர் கட்டிய்ணைத்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

أبو مسلم عبد الله بن ثوب الخولاني

أسلم في زمن النبي مُحمَّد غير أنه لم يلتق به، فهو من كبار التابعين

حدثنا شرحبيل بن مسلم قال أتى أبو مسلم الخولاني المدينة وقد قُبض (أي توفي) النبي  واستخلف أبو بكر، فحدثنا شرحبيل أن الأسود تنبأ (أي ادعى النبوةباليمن فبعث إلى أبي مسلم فأتاه بنار عظيمة، ثم إنه ألقى أبا مسلم فيها فلم تضره فقيل للأسود إن لم تنف هذا عنك افسد عليك من اتبعك، فأمره بالرحيل فقدم المدينة فأناخ راحلته ودخل المسجد يصلي فبصر به عمر بن الخطاب عنه فقام إليه فقال ممن الرجل، قال من اليمن، قال ما فعل الذي حرقه الكذاب بالنار، قال ذاك عبد الله بن ثوب، قال نشدتك بالله أنت هو، قال اللهم نعم، فاعتنقه عمر وبكى ثم ذهب به حتى أجلسه فيما بينه وبين الصديق فقال الحمد لله الذي لم يمتني حتى أراني في امة محمد  من صنع به كما صنع بإبراهيم الخليل.

 ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த ஹதீஸ் கலை அறிஞர் ஒருவருக்குர்  துன்னூன் அல் மிஸ்ரி என்று பெயர், உண்மையில் அவருடைய பெயர் தவ்பான் என்பதாகும். அவர் பெரிய அறிஞராக இருந்த போதும் மிக எளிமையான தோற்றத்தில் வாழ்ந்தார். ஒரு தடவை அவர் பயணம் செய்த கப்ப்லில் ஒரு வைரம் திருடு போய்விட்ட்து. பலரும் மிக ஏழ்மையாக தெரிந்த தவ்பான் ரஹ் அவர்களை சந்தேகப்பட்டன. அந்த இழிந்த பார்வையை சகித்துக் கொள்ள முடியாத தவ்பான் யா அல்லாஹ் இந்த இக்கட்டிலிருந்து என்னை வெளியேற்று என்று துஆ செய்தார். அவ்வளவுதான் கடலில் பல மீண்கள் துல்லி வந்தன. அவற்றின் வாயில் வைரங்கள் இருந்தன. அதில் ஒன்று காணமால் போன வைரம் . அதன் உடமையாளர் அதை எடுத்துக் கொண்டு தவ்பானுக்கு நன்றி சொன்னார். அன்றிலிருந்து அவரது பெயர் துன் னூன் மீன்களின் நாயகர் என்று ஆயிற்று.

நாம் அரசியலில் போர்க்களத்தில் செய்யப்படுகிற சாதனைகளை மட்டும் பார்க்க மகத்தான வாழ்வை பெற்ற இப்பெருமக்களின் வாழ்க்கையையும் திருக்குர் ஆனின் சாதனைப் பட்டியலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 இன்னும் ஒரு வரை இங்கு இதே வரிசையில் நினைவு படுத்துகிறேன் பல்க் நாட்டு அரசர் இப்ராஹீக் இப்னு அத்ஹம்,   மிகச் சிறந்த தாபியீக்களில் ஒரு வரான இவர் ஆப்கானிஸ்தானின் பல்க் பகுதியின் அரசராக இருந்தார். அரச பதவியை விட்டு மார்க்க பணியில் ஒரு ஏழையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஒரு குளத்தருகே அமர்ந்திருந்த அவ்வழியே வந்த ஒருவர் அரச பதவியை துறந்து விட்டு இப்படி வாழ்கிறீர்களே எப்படி இருக்கிறது என்று வினவினார். அப்போது கிழிந்த் துணியை தைத்துக் கொண்டிருந்த  இப்ராஹீம் கையிலிருந்த ஊசியை குளத்தில் எறிந்தார். பிறகு கையை தட்டினார். குளத்திலிர்ருந்து மீண்கள் பலவும் வாயில் பல்வேறு ஊசிகளை ஏந்தி வந்தன. அவற்றிலிருந்து தன்னுட்டயதை எடுத்துக் கொண்ட அவர் நான் ராஜபதவியை துறந்து விட்டு இந்த ஏழ்மையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்று கூறினார்.

 இது போல பன்னூற்றுக்கணக்கான ஆச்சரியகரமான ஆளுமைகளின் வரலாறுகள் குர்ஆனுக்கு சொந்தமானவையாகும்.

இவர்கள் அனைவரும் சாமணிய மனிதர்களாக இருந்தவர்கள் தான் திருக்குர் ஆன் இவர்களை புடம் போட்டு எடுத்த தங்கங்களாக வரலாற்றை வியக்க வைத்த ஆளுமைகளாக மாற்றியது.

 இந்த  அளவுகளுக்கு இல்லை என்றாலும் நாம் நம்பிக்க்க வைத்து நடந்தால் குர் ஆன் நம்மை ஆச்சரியகரமான ஆளுமையாக உயர்த்தும் சந்தேகமே இல்லை.

 இந்த ரமலானின் பரக்கத்தால் லைலத்துல் கத்ரின் பரக்கத்தால்  திருக்குர் ஆனோடு நம்முடையை நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 பெருநாள் பிறை

 சகோதரர்களே ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் ஷவ்வால் பிறையை தேடுவோம்.

பிறையை தேடுவது சுன்னத் ஆகும்.

ஆனால் குழப்பத்திற்கு ஆட்பட்டு விட வேண்டாம்

 கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல் பெருமானாருடையது,

 ரமலான் 29 முடிந்த இரவு பிறை தென்பட்டது என காழி அறிவித்தால் திங்கட் கிழமை  ஈதுல் பித்ரு பெருநாளைக் கொண்டாடுவோம். இல்லை எனில் செவ்வாய்க்கிழமை பெருநாளைக் கொண்டாடு வோம்.

 அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம் காட்டாதீர்கள், சர்வதேச பிறை சவூதிப் பிறை என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக் குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக் கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

 பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.


திடல் தொழுகை 

 பெருநாள் தொழுகையை சுன்னத் ஜமாத் பள்ளி வாசலை தேடி பார்த்து  தொழுங்கள்!  திடல் தொழுகை என்ற பெயரில் செய்யப்படும் ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்

திடல் தொழுகையை ஒரு முக்கியமான கடமையாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.  அத்தனையும் சமூகத்தை ஏமாற்றும் தந்திரமாகும்.

எதார்த்தத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,

நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்று ஒரு முறை கூட பெருமானார் அறிவுறுத்தியதில்லை.


மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகை கென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். நமக்கு அருகில் நமக்கு சொந்தமாக ஒரு ஈத்காஹ் மைதானம் இருந்தால் அங்கு சென்ரு தொழுங்கள்.

ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,

இப்போது மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).

மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.

இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதி இல்லாமல் இருந்ததும் மதீனாவிலிருந்த சுற்று புங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். எனவே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,


أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة

எனவே ஈத்காஹ் மைதான்ங்கள் இல்லாத இடங்களில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுங்கள். குழப்பவாதிகளுடன் இணைந்து கொள்ளாதீர்கள்.


பித்ரா தர்மம் 

 ஈத் பெருநாள் அன்று நிறைவேற்றுகிற வணக்கங்களில் பிரதானமானது பித்ரா தர்மம். 

 தொழுகைக்கு செல்வதற்கு முன் வழங்கிவிடவேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காகவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்காகவும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும்.

 பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்

 அது நமது நோன்பை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகிறது.

   قال عبد الله بن عباس: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ»

பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பித்ராவை வழங்கி விட வேண்டும். இல்லை அது சாதாரண தர்மம் ஆகிவிடும்.

 ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 90   பித்ரு சதகாவாக கொடுக்க வேண்டும். 

 ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம். 

 ஒருவர் அவருடை தாய்  தந்தை  மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக் காரர்களுக்கு   பித்ராவை கொடுக்கலாம். 

அமைப்புக்களிடம் பித்ராவை ஒப்படைப்பபது பொறுப்பற்ற செயலாகவே அமையும். இத்தகை ஒப்படைப்புகள் மூறை கேடுகள் செய்யவே காரணமாகின்றன. அமைப்புக்களின் தலைவர்கள் ஒருவ்ரை ஒருவர் தாக்கி வெளியிடும் வீடியோக்களை பார்த்தால் இந்த அமைப்புக்கள் பித்ரா தர்மத்தில் எவ்வளவு முறைகேடு செய்கிறார்கள் என்பது.

 நம்மை நெருங்கி பல ஏழைகள் இருக்கும் போது அவர்களுக்கு தேடிச் சென்று கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, அப்படி கொடுக்கிற போது அது நமது அக்கறையின் வெளிப்பாடாகவும் அமையும்.

 உங்களுக்கு ஏழைகளை அடையாளம் காண தெரியாவிட்டால் அருகிலுள்ள பள்ளிவாசலை தொடர்பு கொண்டால் அவர்கள் தேவையுடையோரை உங்களது இல்லங்களுக்கே அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் நிம்மதியாக பித்ராவை கொடுத்து மகிழ்லாம்.

 சதகத்துல் பித்ரின் நேரம்

பெருநாள் அன்று சுபுஹ்லிருந்து பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னதாக இந்த தரமத்தை நிறைவேற்ற வேண்டும். முதல் நாள் மஃரிபிலிருந்தும் கொடுக்க தொடங்கலாம். ஏழைகளை சென்றடைவது சிரமமாக இருக்கும் என்றால் ரமலானில் ஓரிரு நாட்களில் முன் கூட்டியே கொடுத்தாலும் செல்லும்   

ஏழைகளை கண்டறிவதில் சிரமம் அற்ற இடங்களில் மிக முன்னதாகவே கொடுப்பது சரியானது அல்ல என  சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்

பெருநாள் அன்று ஏழைகளை திருப்திப்படுத்துவதான் இதன் நோக்கம் என்பதால் இரண்டு நாட்களை விட முன் கூட்டியே கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  ولا يجوز تعجيلها لأكثر من ذلك لأن الغرض منها إغناء الفقير يوم العيد،

لما روى عبد الله بن عمر  أن رسول الله  قال: «اغنوهم عن الطواف في هذا اليوم

ஹதீஸ் கூறுகிறது. பெருநாளில் ஏழைகளில் மக்களுக்கிடையே வலம் வரும் தேவையை தவிருங்கள் .

ஏழைகளை கண்டறிவதில் இருக்கிற சிரம்ம் காரணமாக வே ரமலான் தொடங்கியதில் இருந்து சதகத்துல் பித்ரை கொடுக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கினார்கள்.

 தேவையற்று முன் கூட்டியே கொடுத்து விடுவது சதகத்துல் பித்ரின் நோக்கத்தை மாற்றுவதாக அமையும்.

 இந்த தரமத்தை சதகத்துல் பித்ரு என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை அறிஞர்கள் கூறுவார்கள் .

 ரமலானுடைய நோன்பை பெருநாளோடு நிறுத்திக் கொள்வதால் அன்றைய தினம் வழங்கப்படும் தர்மத்தை நிறுத்திக் கொள்ளும் சகாத் என்ற அர்தத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.

 لأن الفطر من رمضان سبب وجوبها، فأضيفت إليه 

قال  ابن عمر: زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ» 

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பித்ரத் என்ற வார்த்தைக்கு இயற்கை என்றும் பொருள் இருக்கிறது.

 فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِی فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ என்றூ திருக்குர் ஆன் கூறுகிறது/

 மனித இயல்பு. தான் அனுபவிக்கும் இன்பத்தித்தை வசதியற்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்வது.

 அந்த வகையில் இந்த தர்மத்தை இயற்கை தர்ம்ம் என்றும் சொல்லாம்.

இந்த சிந்தனையில் பார்க்கிற போது, பித்ரு சதகா என்பது வெறும் தர்மமாக மட்டும் இல்லாமல் ஏழைகளை  நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது என்று நமது மன்சாட்சியை பக்குவப்படுத்துவதாகவும் அமைகிறது.

 பெருநாள் தொழுகை சுன்னத்தான இரண்டு ரகாத்துகளாகும். ஹன்பி மத்ஹபில் வாஜிபான இரண்டு ரகாத்துகளாகும்.

 அதிகப்படியான 12 தக்பீர்கள் அதில் சொல்லப்படும். ஹனபி மத்ஹபில் 6 தக்பீர்கள் சொல்லப்படும்.

 இந்த தக்பீர்களை பின்னின்று தொழுபவர்களும் சொல்ல வேண்டும்.

 ஈதுல் பித்ரு பெருநாளன்று தொழுகைக்கு வருவதற்கு முன் இனிப்புகளை அல்லது பேரீத்தம் பழத்தை ஒற்றைப்படையாக சாப்பிட்டுக் கொள்வது சுன்னத்து.

ரமலான் அன்று வாய்ப்பிருந்தால் புத்தாடை அணிவதும் இல்லை எனில் சுத்தமான ஆடைகளை அணிவதும் அத்தர் பூசிக்கொள்வதும் சுன்னத் ஆகும்.

 யார் மீதாவது கோபத்தை வைத்து கொண்டு பெருநாளை கொண்டாடாமல் இருப்பது. அல்லது யாருடைய துக்கத்திற்காகவாவது பெருநாளை தவிர்ப்பது தவறாகும். அல்லாஹ் மகிழ்ச்சியை அவமதிக்கும் செயலாகும். அதனால் தான் பெருநாள் அன்று நோன்பு வைப்பதை மார்க்கம் ஹரமாக ஆக்கியிருக்கிறது.

தொழுகைக்குப் பிறகு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் சுன்னத் ஆகும் ஈத் முபாரக் என்றும் சொல்ல்லாம்.

 قد جاء في المغني لابن قدامة قالوذكر ابن عقيل في تهنئة العيد أحاديث منها: أن محمد بن زياد، قال: كنت مع أبي أمامة الباهلي وغيره من أصحاب النبي صلى الله عليه وسلم فكانوا إذا رجعوا من العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك،

 وفي سنن البيهقيعَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: لَقِيتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَنَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، قَالَ وَاثِلَةُ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَ: نَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ 


தக்பீர்  

 பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்ல வேண்டும் அதுவே பெருநாளின் அழகாகும்.

முந்திய மஃரிபிலிருர்ந்து தொழவைக்க இமாம் எழுந்திருக்கும் வரை  ஈதுல் பித்ர் அன்று தக்பீர் சொல்ல வேண்டும் .

 قال ابن قدامةقال أبو الخطابيكبر من غروب الشمس ليلة الفطر إلى خروج الإمام إلى الصلاة في إحدى الروايتين، وهو قول الشافعي، وفي الأخرى إلى فراغ الإمام من الصلاة

 பாதைகளிலும் தக்பீர் உயரட்டும்

 ويكون التكبير في الفطر مطلقاً غير مقيد، فيكبر في السوق وفي الطريق وفي البيوت والمساجد ونحو ذلك،

  நாம் சொல்லும் தக்பீரில் ரமலானுக்கு பின்னும் தீன் கமழட்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!