வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 27, 2011

சாலை விழிப்புணர்வு


جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّى
ஒரு நாடு வளர்ந்த நாடு என்பதற்கு அடையாளம் சாலை வசதிகள் பெருக்கம்
ஒரு சமூகம் நாகரீகமானது என்பதற்கு அடையாளம் சாலை உணர்வு (Road Scenes)

சிங்கப்பூர் சமூகம் புகழப்படுவதற்கான காரணங்களில் ஒன்று   Road Scenes
மர்ஹூம் சமது சாஹிபின் சிங்கப்பூர் அனுபவம் : அவர் பயணித்த காரை ஓட்டியவர் இந்தியா ஞாபகத்தில் இரண்டு முறை ஹாரன் அடித்து விட்டார். முன்னாள் சென்று கொண்டிருந்த வண்டிக்கார்ர் வண்டியை நிறுத்தி நான் என்ன தவறு செய்தேன்?
என்று கேட்டாராம்.

சாலை நாகரீகம் சாலை விழிப்புணர்வு என்பதும் இஸ்லாம் கற்றுக் கொடுக்கிற ஒரு உயர் பண்பாடாகும்.

நம்முடைய மாநிலத்தில்  சாலை பாதுகாப்பு வாரம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்ட்து.

 இந்தியா உலகின் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக இருக்கிறது.

இந்தியாவில் 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலி
சீனாவில் 89 ஆயிரத்து 455, அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642. இங்கிலாந்தில் 3 298.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலி. அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகிகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

·         தற்போது ஒவ்வொரு ஆண்டும் உலகில்  சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால்  2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் உலகின்  பெரும் பிரச்சனையாக மாறிவிடும்.
·         புயல் பூகம்பம் சுனாமி  போல உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்வதில் சாலை விபத்துக்கு  ஐந்தாவது இடம். 

சாலை விபத்துக்களில் பெரும்பாலானவை மனித்த் தவறுகளாலும் பொருப்பின்மையினாலும் அஜாக்கிரதையினாலும் ஏற்படுகின்றன.

சிலரது பொறுப்பின்மை அப்பாவிகளான பலரது உயிரை பல்கொள்கின்றன.

சாலை விசயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள் இஸ்லாம் அறிவுறுத்தியுள்ளது.

சாலைகள்  பற்றி  இஸ்லாம்
சாலைகள் அடிப்படையில் அல்லாஹ்வால் அமைத்துத் தரப்பட்டவை  காட்டப்பட்டவை .
الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِنْ نَبَاتٍ شَتَّى
விஷேசமாக மலைப்பாதைகள் ;
ஊட்டிக்கு போகிறவர்கள் இபடி எல்லாம் ரோடு போட பிரிடிஷ்கார்ர்களால் தான் முடியும் என்று பேசுவதுண்டு.
அந்த எண்ணம் தவ்று. பாதைகளுக்கான ஆதார அடையாளங்களை அல்லாஹ்வே அமைத்திருக்கிறான், அதை விரிவு படுத்துவதும் பெரிது படுத்துவதுமே மனிதனின் பணி.
وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ

மனிதனுடைய காலடித்தடங்கள் ஒற்றையடிப்பாதைகளாகின்றன. பின்னர் அது சாலையாகிறது.
·         சாலை வசதி ஒரு நிஃமத் என்பதை முதலில் புரிந்து கொள்ள  வேண்டும்.
·         அதற்குரிய மரியாதையை தர வேண்டும்.

ரோடு சென்ஸ் பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ

عَنْ الْبَرَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِنَاسٍ جُلُوسٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِنْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَاهْدُوا السَّبِيلَ وَأَفْشُوا السَّلَامَ وَأَعِينُوا الْمَظْلُومَ

يَا عَلِيُّ لَا تُتْبِعْ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ  
·         பார்வையை கட்டுப்படுத்துதல்பல விபத்துக்களுக்கும் பார்வை தவறுகளே காரணம்.
·         பிறருக்கு தொல்லை தரக்கூடாது. சாலையில் மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறித்தல். வாகணங்களை தாறுமாறாக இயக்குதல், நிறுத்துதல்,
·         பாதிக்கப் பட்டோருக்கு உதவுதல்இறைவன் நன்றி சொல்கிறான்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ

போதையில் ,செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டக் கூடாது.
துப்புதல் சேறு இறைத்தல்இதனால் பலருடை முக்கிய வேலைகள் பாதிப்படையும்.

·         வேகம்   தவிர்த்தல்  சாலை விபத்தின் தலையாய காரணம் வேகம்

عن سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ – ترمذي

·         ஒரு காரியத்திற்காக செல்லும் பேது முன்னமே புறப்படுவது பரகத் நிறைந்த்து.

·         دعا رسول  الله  صلى الله عليه وسلم بالبركة لمن يبكرون في أعمالهم، فقال: (اللهم بارك لأمتي في بكورها) [أبو داود
·         وكان صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشًا بعثهم في أول النهار. [أبو داود].


·         வாகனங்களின் கண்டிஷனைப்  பராமரிப்பது சுன்னத்து
·         நபி (ஸல்) அவர்கள் தனது வகன்ங்களை சரியாக பராமரிப்பார்கள்.
·         عَنْ الشَّعْبِيِّ يَرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ تَرَكَ دَابَّةً بِمَهْلَكٍ فَأَحْيَاهَا رَجُلٌ فَهِيَ لِمَنْ أَحْيَاهَا ابوداوود
·         உணர்ச்சியற்ற படிகளாக உங்கள் வாகன்ங்களை கருதாதீர்கள்
·         عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ أَنْ تَتَّخِذُوا ظُهُورَ دَوَابِّكُمْ مَنَابِرَ فَإِنَّ اللَّهَ إِنَّمَا سَخَّرَهَا لَكُمْ لِتُبَلِّغَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ وَجَعَلَ لَكُمْ الْأَرْضَ فَعَلَيْهَا فَاقْضُوا حَاجَتَكُمْ- – ابوداوود
·         عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الْإِبِلَ حَظَّهَا مِنْ الْأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ بِاللَّيْلِ – مسلم
·         சவாரி செய்யத் தொடங்கும் போது துஆ சுன்னத்து
·         عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَافَرَ فَرَكِبَ رَاحِلَتَهُ كَبَّرَ ثَلَاثًا وَيَقُولُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا مِنْ الْبِرِّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا الْمَسِيرَ وَاطْوِ عَنَّا بُعْدَ الْأَرْضِ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ اصْحَبْنَا فِي سَفَرِنَا وَاخْلُفْنَا فِي أَهْلِنَا وَكَانَ يَقُولُ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
அற்புதமான துஆ: இந்த வாகனத்தை எனக்கு கட்டுப்படுத்திக் கொடுத்தவன் தூய்மையானவன். இது எங்களால முடியக்கூடியதாக இருக்கவில்லை. என்று தமிழில் சொல்லிப் பாருங்கள்வாகனத்தின் மீது உட்கார்ந்த பிறகு ஒரு பொறுப்புணர்வு தானாக பிறக்கும்.

·         தேவையற்று புதிது புதிதாக  வாகன்ங்களை வட்டிக்கு வாங்காதீர்கள்.

No comments:

Post a Comment