வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 20, 2012

ஹஜ் பயணிகள் கவனிக்கவும் 2



இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது.
முதல்  விமானம் பாகிஸ்தனிலிருந்து 329 பயணிகளுடன் மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான் நிலைய்த்தில் புதன்கிழமை தரையிரங்கியது.
இந்த ஆண்டு 65 ஆஆயிரம் இந்திய ஹாஜிகளுக்கு அஜீஜிய்யாவில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஹஜ் கமிட்டி முலம் பயணம் செய்யவுள்ள 125000 ஹாஜிகளுக்காக 479 கட்டிடங்க தயார் படுட்தப்பட்டுள்ளதாகவும்       மற்ற அனைத்து ஏற்பாடுகௌம் திருப்தி அளிக்கும் வித்த்தில் உள்ளதாகவ்ம் இந்திய ஹஜ் கமிடியின் தலைவி முஹ்ஸீனா கித்வாய் அறிவித்துள்ளார்
சாமாண்ய ஹாஜிகள் தங்குவதற்கான புதிய பகுதியா உருவாக்கப் பட்டிருக்கிற அஜீஜியா விலிருந்து  ஹாஜிகளை அழைத்துச் செல்வதற்காக அதிகப்படியான பஸ்கள் இயக்கப்க்கப்பட  வுள்ளத்தகவும் 70 நிற்த்தங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக்வும் அதிகாரிகள் தெரிவித்தனர்ர்.
.இந்த ஆண்டு ஹாஜிகளுக்கு பெட்சீட்டுகள் தலையணை உரைகள் பக்கெட்டுகள் மக்குகள் பாத்ரூம் கழுவும் பிரஸ்க்ள் வழங்க புதிய ஏஜென்ஸியை நியமித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
அதே போல இந்த ஆண்டு பயணம் புறப்படுவதற்கு முன்னதாக ஹாஜிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப் பட வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறையடியார்கள் சுமர் 40 லட்சம் பேர் ஓரிட்த்தில் ஒரே மாதிரி ஆடையில் ஒரே கோஷத்தோடு ஒரே உணர்வோடு ஒன்று கூடும் பக்திப் பெருவிழா ஹஜ்.

உலகின் மிகப்பெரிய மக்கள் திரட்சி என்று ஊடகங்கள் குறிப்பிடுகிற மக்கள் கூட்ட்த்தில் இணைந்து கொள்ள முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் எங்கும் இருந்து கூட்டம் கூட்டமாக ஹாஜிகள் கிளம்பி வருகின்றனர். 

அல்லாஹ்வின் கிருபையால இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்ட்து.

ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.

عن أَبي هُرَيْرَةَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ -  النسائي

அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.

ஹாஜீகளை வழியனுப்புவோம். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்

استودع الله دينك وامانتك وآخر عملك وزودك الله التقوي ويسرلك الخير حيث كنت

அவர்களிடம் நமக்காக துஆ செய்யுமாறு கேட்போம்.
பெருமானார் (ஸல்) உம்ரா செய்ய அனுமதி கேட்ட உமர் ரலியிடம் துஆ செய்ய கோரினார்கள்.


ஹஜ்ஜுக்கு புற்ப்படுகிறவர் கவனிக்க் வேண்டிய அம்சம்.
நிய்யத் முக்கியம்
எதற்காக ஹஜ்ஜுக்கு செல்கிறோம் எனற எண்ணத்தி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்
.
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم: ‏يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة وأوسطهم للتجارة وقراؤهم للرياء والسمعة وفقراؤهم للمسألة

பெரும் பணம் செலவழித்து உடல் சிரமங்களை தாங்கி நிறைவேற்றும் ஒரு வணக்கம் அற்ப நோக்கங்களல் பயனற்றதாகி விடக் கூடாது.


நான் அல்லாஹ்விற்காக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.

ஹஜ்ஜுக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இரவு நேரத்தில் தனிமையில் அல்லது தஹஜ்ஜது தொழுது விட்டு உட்கார்ந்து கொண்டு நான் ஏன் ஹஜ்ஜுக்குப் போகிறேன்எனற் கேள்வியை தமக்குள் கேட்டுக் கொள்ள் வேண்டும்


ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.

1.       மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்
2.       நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல்
3.   நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.

ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.

ஹாஜி கவனம் செலுத்த வேண்டிய இரண்டாவது விசயம்  தவ்பா
ஹாஜி அன்று பிறந்த பாலகனாகவே நீடிக்க வேண்டுமெனில் எனில் முன்னதாக ஒரு முடிவுக்கு வர இது வரை செய்து வந்த தவறுகளை இனிமேல் செய்ய மாட்டேன். என்று உறுதியேறக வேண்டும்.

அதனால் ஹஜ் பயணத்திற்கு முந்தைய தவ்பா என்பது முக்கியமானது.
தவ்பா இப்படி அமைவ்வது பொருத்தமானது. .

اللهم إني اتوب إليك لا ارجع إليها أبدا اللهم مغفرتك اوسع من ذنبي ورحمتك ارجي عندي من عملي

·         பெற்றோர்களிடம் தெரிவிப்பதும் அவர்களை கவனிக்க தக்க ஆட்க்ளை ஏற்படுத்துவதும் முக்கியம்.
கடன் உள்ளிட்ட மற்ற பொறுப்புக்களை மற்றவர்களிடம் தெரிவித்து ஒப்படைத்து வேண்டும்.


கடந்த வருடத்தலைப்பு 
 ஹஜ் பயணிகள் கவனிக்கவும்






No comments:

Post a Comment