قُلْ
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ
الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ
بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 3:26
நமது நாட்டை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம்
படைத்த கட்சியை தேர்வு செய்வதற்காக. நாம் இன்று வாக்களித்திருக்கிறோம்.
இன்னும் சிலர் வாக்களிக்க உள்ளனர். அனைவரும் தவறாது வக்களித்து
விட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நாம் நமது வாக்குரிமையை செலுத்தி நம்மை ஆள்வோரை தேர்வு செய்வது
போல ஒரு தோற்றம் தெரிந்தாலும் உண்மையில் அல்லாஹ்வின் விருப்ப படியே ஆட்சியாளர் தேர்வாகிறார்.
இஸ்லாமிய சிந்தனையாளர்களின் ஒரு கருத்தை நினைவூட்டுகிறேன்.
தேர்தல் என்பது ஒரு அடையாளப் பூர்வ நடவடிக்கை தான். ஒருவரை
தேர்ந்தெடுப்பதற்கு ஒரு வழிமுறை கடைபிடித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் ஒரு
வெளிப்படையான காரணம் அவ்வளவே.
பிர்அவ்னிடமிருந்து தப்பிக்க மூஸா அலை அவர்கள் செங்கடலை தடியால் அடித்தது
போல.
தடியால் அடித்ததால் கடல் பிளந்து விட வில்லை. அல்லாஹ் மூஸாவுக்கு கட்டுப்படுமாறு கடலுக்கு உத்தரவிட்டிருந்தான். அதற்கு அடையாளமாக அவர் உன்னை அடிக்கும் போது அவருக்கு கட்டுப்படு என்று கூறியிருந்தான். அவர் அடித்த போது அவரது விருப்பத்திற்கு ஏற்ப கடல் 12 பாதைகளாக பிளந்தது.
ரூஹுல் ம ஆனியில் ஆலூஸி ரஹ் கூறுகிறார்.
وكان الله
تعالى قد أوحى إلى البحر أن أطع موسى ، وآية ذلك إذا ضربك بعصاه، فأوحى الله تعالى إلى موسى (أن اضرب بعصاك البحر).
وإنما أمر - عليه السلام - بالضرب فضرب، وترتب
الانفلاق عليه إعظاما لموسى - عليه السلام - بجعل هذه الآية العظيمة
مترتبة على فعله، ولو شاء - عز وجل - لفلقه بدون ضربه بالعصا
மூசா அலை அவர்களை கவுரவப்படுத்துவதற்காகவே கடலில் அவரை அடிக்குமாறு
அல்லாஹ் கூறினான். அல்லாஹ் ஏற்கெனவே கடலுக்கு மூஸா அலை அவர்களுக்கு வழி விடுமாறு உத்தரவு
பிறப்பித்திருந்தான். அவர் கடலை அடிப்பது கடல் பிளப்பதற்கு ஒரு அடையாள சமிஞை யாக்கினான்.
இதில் உண்மையில் முடிவுகளை தீர்மாணித்தவன் அல்லாஹ்வே ஆகும்.
அது போலவே தேர்தலில் நாம் வாக்களித்திருந்தாலும் ஆட்சியாளர் யார் என்பது அல்லாஹ்வின்
தீர்மாணத்திலேயே அமையும்
அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன் விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.
·
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ
يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ ۚ
نُصِيبُ بِرَحْمَتِنَامَن نَّشَاءُ ۖ
وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ (56)
فَهَزَمُوهُم
بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ
وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُۗ
·
“ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர்” என்று தந்தை கத்தாபால் ஏசப்பட்ட உமர் (ரலி) இருபத்திரண்டரை இலட்சம் சதுர மைல்களை கட்டியாண்டார்கள்.
·
வியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும் சாமாணிய கூலித்
தொழிலாளியான அலி ரலி அவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.அலி ரலி அவர்கள் தன் வாழ்நாளில் ஜகாத்
கொடுக்கும் அளவுக்கு பண வசதி படைத்தவராக இருந்ததில்லை என்று வரலாறு கூறுகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த ஆட்சித்தலைவர் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்).
அவர் ஒரு ஜும் ஆ தொழுகைக்காக புகழ்வாய்ந்த டமாஸ்கஸ் நகரத்தின் உமய்யா ஜாமிஆ பள்ளிவாசலில் உட்கார்ந்திருந்த போது அடுத்த ஆட்சியாளர் யார் என்பது பற்றி மன்னர் சுலைமான் பின் அப்தில் மலிக்கின் வசிய்யத் படிக்கப் பட்டது. ஆட்சிக்குரியராக சுலைமானுடைய மகன் வலீத் கருதப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக சுலைமானின் மச்சான் உமர் பின் அப்துல் அஜீசின் பெயர் அறிவிக்கப் பட்டது.
அதிர்ச்சியில் உமர் பின் அப்துல் அஜீஸ் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொன்னார்.
دابتي كفايتي وفسطاطي أوسع لي
“எனது கூடாரமே எனக்குப் போதுமானது. எனது வாகனமே எனக்கு அதிகம் “ என்றார்.
சுலைமான் பின் அப்துல் மலிக் நோயுற்று இருந்த காரணத்தினால் அவருடைய தீர்மாணத்தை அதிகம் மறுக்க முடியாத உமர் பின் அப்துல் அஜீஸ். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு மக்களிடம் “எனது விருப்பமில்லாமலும் ஆலோசனை கலக்காமலும் என்னை அமீர் என்று அறிவித்து விட்டார்கள் எனவே மக்களை நீங்கள் விரும்பினால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்” என்று அறிவித்தார்.
மக்கள் பெரும் சப்தமெழுப்பி நீங்களே அரசராக இருக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினர், இப்படித்தான் இஸ்லாமின் ஐந்தாம் கலீபா உமர் ஆட்சியதிகாரத்தைப் பெற்றார்.
بويع بالخلافة بعد وفاة سليمان بن عبد الملك وهو لها كاره فأمر
فنودي في الناس بالصلاة، فاجتمع الناس بالمسجد الأموي بدمشق، فلما اكتملت جموعهم، قام فيهم خطيبًا،
فحمد الله ثم أثنى عليه وصلى على
نبيه ثم قال: "أيها الناس إني قد ابتليت بهذا الأمر على
غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي،
فاختاروا لأنفسكم خليفة ترضونه". فصاح الناس صيحة واحدة: قد اخترناك يا أمير
المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.
· நெல்சன் மண்டேலா .27 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் தென்னாப்பிரிக்காவின் புகழ் பெற்ற அதிபரானார்.
·
அதே போல 1996 லிருந்து 2004 வரை சிறையிலிருந்த ஆசிப் அலி ஜர்தாரி ( பேநசீர் புட்டோவின் கணவர்) 2008 ல் பாகிஸ்தானின் அதிபரானார் ,
ஆகவே நபி மூசா அலை அவர்கள் கடலை தடியால் அடித்த பிறகு கேட்ட துஆ வை நாம்
வாக்கை செலுத்திய பிறகு அல்லாஹ்விடம் கேட்போம்.
நாடு நலம் பெறட்டும். ஆமீன்.
No comments:
Post a Comment