வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 05, 2024

நேச நபி (ஸல்)

 ரபீஉல் அவ்வல் மாதம் தொடங்கி விட்டது.

உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் அன்றாடம் பெருமானார் (ஸல்) அவர்களை பாராட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் விசேஷ்மாக பெருமானாரின் புகழ்பாடும் மெளலூது நிகழ்ச்சிகளையும் அவர்களது அருமைகளைப் பேசுகிற மீலாது நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்கள்

இது நமது பொறுப்பும் கடமையும்.

இந்நிகழ்வுகளின் வழியாக  நபி (ஸல்) அவர்களின் மீதா மதிப்பை வளர்த்துக் கொள்ளவும் மற்ற சகோதரர்களுக்கு அண்ணலெம் பெருமானாரை அறிமுகம் செய்யவும் ஒரு சிறப்பான வாய்ப்புக் கிடைக்கிறது.

பெருமானாரை நேசித்து வாழவும் அந்த நேசத்தையே நம் சுவாசமாக்கிக் கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவன் தவ்பீக் செய்தருள்வானாக!

நேச நபி

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நம்மை மிகவும் நேசித்தார்கள்

இந்த உலகில் சமூகங்களை கட்டமைத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கண்டிப்பும் கடுமையுமாகவே தங்களது சமூகத்தை கட்டமைத்தார்கள்.

சிங்கப்பூர் சமூகத்தை லீகுவான்யூ என்ற கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த அரசியல் அறிஞர் உருவாக்கினார்.. ஆனால் அதற்காக அவர் திட்டமிட்ட மிக கடுமையான விதிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். கம்யூனிச ரஷ்யாவை உருவாக்கிய லெனினும் அப்படித்தான், மிக கடுமையான கண்டிப்பையும் கடுமையையும் அடிப்படையாக கொண்டே அவர் சார்ந்த சமூகங்களை கட்டமைத்தார்கள்.  

காமராஜர் நம்முடைய தமிழ் சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றியிருக்கிறார். இன்றைய தமிழகத்தின் அறிவியல் வளர்ச்சி என்பது காமராஜரின் கொடைதான் என்றால் மிகையில்லை. நாட்டிலுள்ள அணைக்கட்டுகளில் பெரும்பாலானவை காமராஜர் கட்டியதுதான். இத்தனைக்கும் மேல் மிக நல்ல மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார். 

காமராஜருடைய வீட்டுக்கு ஒரு நாள் ஆர் வெங்கட்ராமன் வந்தார். காமராஜருடைய அம்மா சிவகாசி பனை ஓலை விசிறி வீசிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட வெங்கட்ராமன் அவருடைய தாயாருக்கு ஒரு ஃபேன் வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்த காமராஜர் அந்த ஃபேனை பார்த்தார். அதை கழற்றி கட்சி அலுவலகத்தில் மாட்டச் சொல்லிவிட்டார்.

நல்லவராகவே இருந்தாலும் இந்தக் கடுமை தேவையற்றது. ஒரு முதலமைச்சரை பெற்றெடுத்ததற்காக அந்த தாய் இப்படி சிரமப்பட வேண்டுமா என்ன ?

பல தலைவர்களுடைய வாழ்விலும் தேவையற்ற சில கடுமைகளை பார்க்க முடிகிறது.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) வாழ்வில் அத்தகைய தேவையற்ற கடுமை எங்கும் இருந்ததில்லை

பெருமானார் (ஸல்) அவர்கள்அன்பையும் கருணையையும் அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தை கட்டமைத்தார்கள்.

திருக்குர் ஆன் பெருமானாரைப் அன்பானவர் கருணைமிக்கவர் என்று பாராட்டுகிறது.

بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ} [التوبة: 128]

அல்லாஹ் தனது பண்புகளை பெருமானாருக்கு சூட்டி மகிழ்கிறான்.

 

إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ

  பொதுவாக சமயங்கள் மக்களுக்கு கடுமையான வழி முறைகளை போதிப்பவையே ஆனால் பெருமானார் (ஸல்) எளிமையான வழிமுறைகளையே போதித்தார்கள்.

எளிமையானதை தேர்வு செய்தார்கள்

 

عن أم المؤمنين عائشة رضي الله عنها أنها قالت: «ما خُيِّر رسول الله صلى الله عليه وسلم بين أمرين قط إلا أخذ أيسرهما، ما لم يكن إثمًا، فإن كان إثمًا كان أبعد الناس منه

 

ஒரு குளிர் காலத்தில் நீங்கள் ஒளு செய்ய செல்கிறீர்கள்
நீங்க சுடு தண்ணியிலும் ஒளு செய்யலாம். குளிர்ந்த  தண்ணீரிலும் ஒளூ செய்யலாம் இதில் எதை தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று ஒரு கேள்வி வருமானால் அல்லாஹ்வுக்கு அதிகம் சிரமம் எடுத்துக் கொள்வது தான் சிறப்பானது என்று யாரும் நினைக்கலாம். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் இலேசானதை எடுத்துக் கொள்ள் வேண்டும் என்பதுதான்.

.

இதுவும் இது போன்று பெருமானாரின் வாழ்வில் வெளிப்படுகிற ஒவ்வொரு அம்சத்திலும்  பெருமானார் மக்கள் மீது கொண்டிருந்த அலாதியான அன்பிற்கான  அடையாளத்தைப் பார்க்க முடியும்.

 

ஒவ்வொரு ஒளுவிலும் பல் துலக்குவதை கட்டாயமாக்கவில்லை. அது மக்களுக்கு சிரமாகிவிடும் என்று நினைத்தார்கள்.

 

فقال صلى الله عليه وسلم: «لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل وضــوء» [12

மூன்று நாட்களுக்கு மேல் தராவீஹ் தொழுகையை ஜமாத்தாக நடத்த வரவில்லை, அது மக்கள் மீது கடமையாகிவிடலாம் என அஞ்சினார்கள்.

 

أن النبي صلى الله عليه وسلم ( قام بأصحابه ثلاث ليال وفي الثالثة أوفي الرابعة لم يُصلّ ، وقال : إني خشيت أن تُفرض عليكم ) رواه البخاري (872)

 

கட்டளைகளை சொன்னதில் மாத்திரமல்ல சமூகத்த்தினரை சீர் படுத்துகிற மற்ற அம்சங்களிலும் சமுதாயத்தின் மீதான  பெருமானாரின் நேசமே மேலோங்கியிருந்த்து.

 

நபியின் பரிசுத்தமான இதயத்தையும் அதில் வெளிப்பட்ட பரந்த நேசத்தையும் ஆங்கில் அறிஞரான தாமஸ் கார்லைல் ஒரிட்த்தில் இப்படி பாராட்டுகிறார்.

 

நபி, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பாவையற்ற தோழர் விசயத்தில் கண்டிக்கப்பட்டார்.  இதில் அபஸ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. ஆனால் ஒரு போதும் அவரால் தனக்கு இப்படி நேர்ந்தது என நபி நினைக்கவில்லை. நபி மதீனாவிற்கு வெளியே சென்ற இரண்டு சந்தர்ப்பங்களில் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்களை தனது பிரதிநிதியாக நியமித்தார். இதில் அவருடைய மாசுமறுவற்ற அன்பு வெளிப்படுகிறது என கார்லைல் கூறுகிறார்.

 

நபித்தோழர் ஜாபிர் ரலி அவர்கள் சொல்கிற ஒரு செய்தியை கேளுங்கள்

 

நான் ஒரு யுத்த்த்திலிருந்து திரும்பும் போது படையணியை விட்டு முன்னதாக வீட்டிற்கு விரைந்து வந்தேன். என்னை யாரோ தொடர்ந்து வந்தார்கள். பக்கத்தில் வந்த போதுதான் அது பெருமானார் என்று தெரிந்தது. ஏன் அவசரப்பட்டு வந்தாய் என்று கேட்டார்கள். நான் புதிதாக திருமணம் முடித்திருக்கிறேன் மனவையை காணும் ஆசையில் வேகமாக வந்து விட்டேன் என்று கூறினார்.

 

சகோதர்ர்களே சிந்தித்துப் பார்ப்போம் பெருமானாருடை இடத்தில் நீங்களும் நானுமாக இருந்தால் என்ன கூறியிருப்போம். ஒரு கண்டிப்பான படைத்தளபதி என்ன கூறியிருப்பார். கொஞ்ச பொறுமையாக கட்டுப்பாட்டை கடைபிடித்திருக்க வேண்டாமா என்று கேட்டிருப்பார்கள்.

ஆனால் தனது இளம் தோழரின் வேகத்தை கண்ட பெருமானார் அவரிடம் கூறினார்.

 

நடக்கட்டும். நடக்கட்டும். நன்றாக நடக்கட்டும் என்றார்கள்.  

عَنْ جَابِرٍ، قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي غَزْوَةٍ، فَلَمَّا قَفَلْنَا، تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي، فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ ﷺ، قَالَمَا يُعْجِلُكَ قُلْتُ: إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ،

இந்த தொடரில் அது கன்னிப்பெண்ணா என பெருமானார் விசாரித்த  விபரம் வருகிறது. அந்த உரையாடலின் நிறவில் இப்படி வருகிறது.

أَنَّهُ قَالَ فِي هَذَا الحَدِيثِالكَيْسَ الكَيْسَ يَا جَابِرُ 

இதன் பொருள், குழந்தை தறிக்கட்டும் என்பதாகும் என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

தனது சமூகத்தை நாடி நரம்பெங்கும் நேசிக்கும் ஒரு தலைவரால் தான் இப்படி கூற முடியும்.

இன்னொரு நிகழ்வை பாருங்கள்

சமயத்தின் பேரால் மக்கள் எப்படி எல்லாம் சிரமப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் கவனிக்கிறோம்

பெருமானார் கூறுகிறார்கள். பயணத்தில் நோன்பு நன்மையல்ல

 

عن جابر بن عبدالله قال: رأى رسول الله صلى الله عليه وسلم رجلًا قد اجتمع الناس عليه، وقد ظلل عليه، فقالوا: هذا رجل صائم، فقال رسول الله صلى الله عليه وسلم: ((ليس البِرُّ أن تصوموا في السفر)

 

தன்னை நாடு வருகிறவர்களுக்கு எந்த பிரச்சனையுலும் உடனடி தீர்வு. அதுவும் புரட்சிகரமான தீர்வை தந்தார்கள்.

அவஸ்  பின் சாபித் ரலி உஹதில் ஷஹீதான போது அவரது சொத்துக்களை அறியாமைக்கால வழக்கப்படி அவரது சகோதரர்கள் எடுத்துக் கொண்டர்கள். அவரது மனைவி உம்மு கஜ்ஜா பெருமானாரிடம் முறையிட்டார். கொஞ்சம் பொறு! என்று சொன்ன பெருமானார் பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்ற இறைவசனம் அருளப்பெற உடனடியாக பெருமானார் அந்த தீர்வை சொன்னார்கள்.

 

 

عن ابن عباس أن أوس بن ثابت الأنصاري تُوَفِّي وترك: ثلاث بنات، وامرأةً يقال لها: أم كجَّة، فقام رجلان من بني عمه يقال لهما: سويد، وعرفجة، فأخذا ماله ولم يعطيا امرأته ولا بناته شيئًا، فجاءت أم كجَّة إلى رسول الله صَلَّى الله عليه وآله وسلم،

 

 عن جابر؛ قال: جاءت أم كجة إلى النبيّ صَلَّى الله عليه وآله وسلم فقالت: يا رسول الله، إن لي ابنتين قد مات أبوهما وليس لهما شيء، فأنزل الله عز وجل{لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ}

 

. இது ஒரு சாதாரண தீர்வல்ல்ல; காலம் காலமாய் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணின்னத்திற்கு மாபெரும் விடியலை தந்த பெரும் தீர்வு. ஆனால் மிக சாதாரணமாக அந்த தீர்வை பெருமானார் சாதித்துக் காட்டினார்கள். இதற்கு சமூகத்தின் மீதிருந்த அவர்களுடைய அன்பும் கருணையுமே காரணமாகும்.

 

--

ஒரு பெண்மணி பெருமானாரிடம் தனது கணவர் அதிக விருந்தினர்களை அழைத்து வந்து தன்னை சிரமப்படுத்துவதாக கூறினார். அரபுகள் விருந்தினர்களை உபசரிப்பதை பெரும் பேறாக கருதுகிறவர்கள். அவர்களிடம் அதிக விருந்தினர்களை அழைக்காதே என்று சொல்வது சரியாகாது. அதனால் அந்த சஹாபியை பெருமானார் கடிந்து கொள்ள வில்லை. அதே நேரததில் “நீ என்ன நமது மரபை மறந்து பேசுகிறாய் என  அந்த பெண்மணியையும் பெருமானார் (ஸல்) அவர்கள் கடிந்து கொள்ள வில்லை. அந்தப் பெண்ணை அழைத்து மிக அருமையாக சொன்னார்கள். விருந்தினர்கள் வழியாக ரிஜ்கு வருகிறது. பாவங்கள் வெளியேறுகின்றன.

قال رسول الله صلى الله عليه وسلم: ( إذا أراد الله بقوم خيراً أهدى لهم هدية) ، قالوا: وما تلك الهدية؟ قال: (الضيف ينزل برزقه ، ويرتحل بذنوب أهل البيت

என்னே அருமையான அறிவுரை – சமூகத்தின் மீது அலாதியான நேசம் கொண்ட ஒருவரால் அல்லவா இப்படி அறிவுரை சொல்ல முடியும்

-----

பெருமானாரின் நேசத்திற்கு மற்று மொரு சாட்சி

இந்த உலகில் கடுமையான சட்டங்களை அமுல் படுத்திய தலைவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஒருவர். அதே நேரத்தில் எல்லோருக்கும் தண்டனை வழங்குவதற்காகவே காத்திருந்தவர் அல்ல.

சமூகத்தில் குற்றங்கள் ஆங்காங்கே இலைமறை காய்மறையாக நடந்து கொண்டுதான் இருக்கும், தண்டிப்பதற்காக குற்றங்களை தேடிப் பிடிக்க கூடாது. குற்றங்கள் பகிரங்கமாகிற போது தண்டனை தந்தார்க வேண்டும். இதுதான் இஸ்ளாமின் கோட்பாடுஆகும்

மிக கடுமையான சட்டங்களை அமுல் படுத்திய பெருமானார் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத குற்றங்கள் விவகாரத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்.

ஒருவர் பெருமானாரிடம் வந்து மாயிஜ் என்ற தோழர் விபச்சாரம் செய்து விட்டார் என்று தெரிவிக்கிறார். (இது மாயிஜ் ரலி அவர்களே வந்து ஒப்புக் கொள்வதற்கு முன் நடந்தது). அவருக்கு பெருமானார் கூறினார்கள். இந்த செய்தியை நீங்கள் மறைத்திருந்தால் நல்லது.

قال النبي صلى الله عليه وسلم لهذا الرجل الذي جاء ليخبره بأن فلانًا قد زنى: «لو كنت سترته بثوبك كان خيرًا لك
أخرجـه أحمد

எந்நேரமும் சமூகத்தை சிந்தித்து நேசித்த பெருமானார்

ஆயிஷா அம்மாவின் கோரிக்கையை ஏற்று அவருக்காக அருமையாக பெருமானார் (ஸல்) துஆ செய்தார்கள். அது கேட்டு விழுந்து விழுந்து ஆயிஷா ரலி சிரித்தார்கள். எனது துஆ உனக்கு மகிழ்ச்சியளிக்கிறதா என்று கேட்டு விட்டு பெருமானார் சொன்னார்கள். இது போன்ற துஆ வை ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் எனது சம்தாயத்திற்காக நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்கள்.

عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت: ((لما رأيت من النبي صلى الله عليه وسلم طِيبَ نفس، قلت: يا رسول الله، ادعُ الله لي، فقال: «اللهم اغفر لعائشة ما تقدم من ذنبها وما تأخر، ما أسرت وما أعلنت»، فضحكت عائشة رضي الله عنها حتى سقط رأسها في حجرها من الضحك، قال لها رسول الله صلى الله عليه وسلم: «أيسُرُّكِ دعائي» ؟ فقالت: وما لي لا يسرني دعاؤك؟ فقال صلى الله عليه وسلم: «والله إنها لدعائي لأمتي في كل صلاة»

சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ்.

நம்மை நேசித்து மாபெரும் சீர்திருத்தமான வாழ்வை இன்று வரை வழங்கிக் கொண்டிருர்க்கிற பெருமானாரை காலமெல்லாம் நேசித்து வாழ்கிற தவ்பீக்கை எல்லாம் வல்ல இறைவன் நமக்கும் நம் சந்த்திகளுக்கும் வழங்கியருள்வானாக!

2 comments:

  1. Anonymous10:57 PM

    மாஷாஅல்லாஹ் மிக அருமை

    ReplyDelete
  2. அருமையான பதிவு நன்றி ஹஜ்ரத்

    அன்புடன் அக்பர் சார்ஜா

    ReplyDelete