வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 27, 2025

மகத்தான மானுடத்தை நோக்கி நகர்வோம்

 ரமலான் விடை பெற இன்னும் சில நாட்களே இருக்கின்றன.

 ஆயிரம் மாதங்களை விட சிறந்த் ஒரு இரவை நேற்று இபாத்த்தில் கழித்து விட்டு இந்த ஜும் ஆவில் அமர்ந்திருக்கிறோம்.

 கடந்த இரவை நமது நம்பிக்கைகு ஏற்ப பல மடங்கு சிறப்பு வாய்ந்த்தாக அல்லாஹ் ஆக்குவானாக!

 கத்ரு இரவு ஏராளமாக மலக்குகள் இறங்குகிற இரவு

 َنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : الْمَلائِكَةُ لَيْلَةَ الْقَدْرِ فِي الأَرْضِ أَكْثَرُ مِنْ عَدَدِ الْحَصَى

 நேற்று இரவு திரண்ட கூட்டத்தை பார்த்து மலக்குகள் தங்களை திருத்திக் கொண்டிருப்பார்கள். அதற்காகவே அல்லாஹ் மலக்குகளை ஏராளமாக அனுப்புகிறான்.

மலக்குகள் வந்து சென்ற நேரம் பாக்கியமானது. அதுவும் வெள்ளிக்கிழமை எனும் போது அதன் பாக்கியம் பெருகுகிறது.

அந்த மலக்குகள் பெருமிதப்படுகிற அளவில் வாழும் நஸீபை வல்ல இறைவன் நமக்கு வழங்கியருள்வானாக!  

லைலத்துல் கத்ரு – ரமலானும் திருக்குர் ஆன் அருளப்பட்டதால் பாக்கியம் பெற்றவை

அந்த குர்ஆனின் வசன்ங்களை தராவீஹ்களில் ஓதக் கேட்டோம்.

குர்ஆனின் சாதனை அரும்பெரும் சிற்ப்பு மிக்க ஒரு தலைமுறையை உருவாக்கியதாகும்.

குர் ஆனுக்கு முன்னர் அரபு மக்கள் சாப்பிட விரும்பினால் உயிருள்ள மாட்டின் ஒரு சப்பையை அப்படியே அறுத்து சாப்பிடுவார்கள்.

மது அருந்த விரும்பினால் சொந்த சகோதரனை கூட சதி செய்து கொலை செய்து விடுவார்கள்.

தம்மை சார்ந்தவர்களுக்காக என்று வரும் போது எந்த நீதியையும் பொருட்படுத்தமாட்டார்கள்.

மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் உடல் மட்டுமே இருந்த்து.

அம்மனிதர்களை உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்கிய பெருமை குர் ஆனுக்கு இருக்கிறது.

குர் ஆன் உருவாக்கிய ஆளுமைகளின் பராக்கிரமங்கள் ஆச்சரியத்திற்குரியவை

ஹீரா யுத்த்தின் போது எதிரிப்படையின் தலைவன் காலித் பின் வலீத் ரலி அவர்களை வந்து சந்தித்தான் . அவனது கையில் ஒரு குப்பி இருந்தது. இது என்ன என்று கேட்டார்கள்.  இது விஷக்குப்பி நம்முடைய பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சியுடன் என சமூக மக்களிடம் செல்வேன். இல்லை எனில் இந்த விசத்தை குடித்து இறந்து விடுவேன் என்றான். இதை சாப்பிட்டால் இறந்து விட முடியுமா என்று சொன்ன படி சட்டென்று அதை பிடுங்கி காலித் ரலி அவரக்ள் குடித்தார்கள். அந்த விஷ்ம் அவரை ஒன்று செய்ய வில்லை. எதிரிப்படைத் தலைவன் இஸ்லாமை தழுவினான்.

அபு முஸ்லிம் அல் கவ்லானி என்ற புகழ் பெற்ற தாபியீ இபுறாகீ நபியை போல நெருப்புக் குழிக்குள் தள்ளப்பட்ட போதும் உயிருடன் திரும்பி வந்தார்.

மதீனாவுக்கு வந்த அவரை அபூபக்கர் உமர் ரலி ஆகியோர் கட்டிய்ணைத்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

أبو مسلم عبد الله بن ثوب الخولاني

أسلم في زمن النبي مُحمَّد غير أنه لم يلتق به، فهو من كبار التابعين

حدثنا شرحبيل بن مسلم قال أتى أبو مسلم الخولاني المدينة وقد قُبض (أي توفي) النبي  واستخلف أبو بكر، فحدثنا شرحبيل أن الأسود تنبأ (أي ادعى النبوةباليمن فبعث إلى أبي مسلم فأتاه بنار عظيمة، ثم إنه ألقى أبا مسلم فيها فلم تضره فقيل للأسود إن لم تنف هذا عنك افسد عليك من اتبعك، فأمره بالرحيل فقدم المدينة فأناخ راحلته ودخل المسجد يصلي فبصر به عمر بن الخطاب عنه فقام إليه فقال ممن الرجل، قال من اليمن، قال ما فعل الذي حرقه الكذاب بالنار، قال ذاك عبد الله بن ثوب، قال نشدتك بالله أنت هو، قال اللهم نعم، فاعتنقه عمر وبكى ثم ذهب به حتى أجلسه فيما بينه وبين الصديق فقال الحمد لله الذي لم يمتني حتى أراني في امة محمد  من صنع به كما صنع بإبراهيم الخليل.

 ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த ஹதீஸ் கலை அறிஞர் ஒருவருக்குர்  துன்னூன் அல் மிஸ்ரி என்று பெயர், உண்மையில் அவருடைய பெயர் தவ்பான் என்பதாகும். அவர் பெரிய அறிஞராக இருந்த போதும் மிக எளிமையான தோற்றத்தில் வாழ்ந்தார். ஒரு தடவை அவர் பயணம் செய்த கப்ப்லில் ஒரு வைரம் திருடு போய்விட்ட்து. பலரும் மிக ஏழ்மையாக தெரிந்த தவ்பான் ரஹ் அவர்களை சந்தேகப்பட்டன. அந்த இழிந்த பார்வையை சகித்துக் கொள்ள முடியாத தவ்பான் யா அல்லாஹ் இந்த இக்கட்டிலிருந்து என்னை வெளியேற்று என்று துஆ செய்தார். அவ்வளவுதான் கடலில் பல மீண்கள் துல்லி வந்தன. அவற்றின் வாயில் வைரங்கள் இருந்தன. அதில் ஒன்று காணமால் போன வைரம் . அதன் உடமையாளர் அதை எடுத்துக் கொண்டு தவ்பானுக்கு நன்றி சொன்னார். அன்றிலிருந்து அவரது பெயர் துன் னூன் மீன்களின் நாயகர் என்று ஆயிற்று.

நாம் அரசியலில் போர்க்களத்தில் செய்யப்படுகிற சாதனைகளை மட்டும் பார்க்க மகத்தான வாழ்வை பெற்ற இப்பெருமக்களின் வாழ்க்கையையும் திருக்குர் ஆனின் சாதனைப் பட்டியலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 இன்னும் ஒரு வரை இங்கு இதே வரிசையில் நினைவு படுத்துகிறேன் பல்க் நாட்டு அரசர் இப்ராஹீக் இப்னு அத்ஹம்,   மிகச் சிறந்த தாபியீக்களில் ஒரு வரான இவர் ஆப்கானிஸ்தானின் பல்க் பகுதியின் அரசராக இருந்தார். அரச பதவியை விட்டு மார்க்க பணியில் ஒரு ஏழையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஒரு குளத்தருகே அமர்ந்திருந்த அவ்வழியே வந்த ஒருவர் அரச பதவியை துறந்து விட்டு இப்படி வாழ்கிறீர்களே எப்படி இருக்கிறது என்று வினவினார். அப்போது கிழிந்த் துணியை தைத்துக் கொண்டிருந்த  இப்ராஹீம் கையிலிருந்த ஊசியை குளத்தில் எறிந்தார். பிறகு கையை தட்டினார். குளத்திலிர்ருந்து மீண்கள் பலவும் வாயில் பல்வேறு ஊசிகளை ஏந்தி வந்தன. அவற்றிலிருந்து தன்னுட்டயதை எடுத்துக் கொண்ட அவர் நான் ராஜபதவியை துறந்து விட்டு இந்த ஏழ்மையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்று கூறினார்.

 இது போல பன்னூற்றுக்கணக்கான ஆச்சரியகரமான ஆளுமைகளின் வரலாறுகள் குர்ஆனுக்கு சொந்தமானவையாகும்.

இவர்கள் அனைவரும் சாமணிய மனிதர்களாக இருந்தவர்கள் தான் திருக்குர் ஆன் இவர்களை புடம் போட்டு எடுத்த தங்கங்களாக வரலாற்றை வியக்க வைத்த ஆளுமைகளாக மாற்றியது.

 இந்த  அளவுகளுக்கு இல்லை என்றாலும் நாம் நம்பிக்க்க வைத்து நடந்தால் குர் ஆன் நம்மை ஆச்சரியகரமான ஆளுமையாக உயர்த்தும் சந்தேகமே இல்லை.

 இந்த ரமலானின் பரக்கத்தால் லைலத்துல் கத்ரின் பரக்கத்தால்  திருக்குர் ஆனோடு நம்முடையை நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 பெருநாள் பிறை

 சகோதரர்களே ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் ஷவ்வால் பிறையை தேடுவோம்.

பிறையை தேடுவது சுன்னத் ஆகும்.

ஆனால் குழப்பத்திற்கு ஆட்பட்டு விட வேண்டாம்

 கம்பீரமான தெளிவான வழிகாட்டுதல் பெருமானாருடையது,

 ரமலான் 29 முடிந்த இரவு பிறை தென்பட்டது என காழி அறிவித்தால் திங்கட் கிழமை  ஈதுல் பித்ரு பெருநாளைக் கொண்டாடுவோம். இல்லை எனில் செவ்வாய்க்கிழமை பெருநாளைக் கொண்டாடு வோம்.

 அருள் கூர்ந்து முஸ்லிம்களே இதில் தேவையற்ற அவசரம் காட்டாதீர்கள், சர்வதேச பிறை சவூதிப் பிறை என்ற குழப்பத்திற்கு ஆட்படாதீர்கள், இந்தக் குழப்பத்தை எல்லாம் பேசி முடிவு கண்டு பல வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் பிறை பார்ப்பதைக் கொண்டே பெருநாளை கடை பிடிக்க வேண்டும் என உலக இஸ்லாமிய அறீஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

 பழை குப்பையை கிளரி குளிர்காய நினைக்கும் குழப்ப வாதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.


திடல் தொழுகை 

 பெருநாள் தொழுகையை சுன்னத் ஜமாத் பள்ளி வாசலை தேடி பார்த்து  தொழுங்கள்!  திடல் தொழுகை என்ற பெயரில் செய்யப்படும் ஏமாற்று வித்தைகளுக்கு ஆட்பட்டு விடாதீர்கள்

திடல் தொழுகையை ஒரு முக்கியமான கடமையாக பரப்புவதில் தவ்ஹீத் பேசும் அமைப்புக்கள் வலிந்து பிரச்சாரம் செய்கின்றன, ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.  அத்தனையும் சமூகத்தை ஏமாற்றும் தந்திரமாகும்.

எதார்த்தத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்கள்,

நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும் என்று ஒரு முறை கூட பெருமானார் அறிவுறுத்தியதில்லை.


மதீனா பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகை கென்று ஒரு வெளியிடத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள் என்ற அடிப்படையில் வழி வழியாக முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள், ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். நமக்கு அருகில் நமக்கு சொந்தமாக ஒரு ஈத்காஹ் மைதானம் இருந்தால் அங்கு சென்ரு தொழுங்கள்.

ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலேயும் தொழுது கொண்டார்கள்,ஈத்காஹ் மைதானம் இல்லாத இடங்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொது இடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு எந்த முன்னுதாரனும் இல்லை, மார்க்கத்தில் சுய விளக்கம் என்பதை தவிர இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,

இப்போது மஸ்ஜிதுன்னபவியிலும் பெருநாள் தொழுகை நடை பெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

أما أهل مكة، فلا يصلونها إلا في المسجد من الزمن الأول).

மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே தொழுது வருகிறார்கள் என இமாம் நவவி ரஹ் கூறுகிறார்.

இமாம ஷாபி ரஹ் அவர்கள் உம்முவில் எழுதுகிற போது பள்ளிவாசலின் இடவசதி இல்லாமல் இருந்ததும் மதீனாவிலிருந்த சுற்று புங்கள் நெருக்கடியாக இருந்ததுமே பெருமானார் (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். எனவே ஒரு ஊரில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டிருக்கும் என்றால் அங்கிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்கள்,


أن سبب ذلك سعة المسجد، وضيق أطراف المدينة، فلو عمر بلد فكان مسجد أهلها يسعه في الأعياد لم أر أن يخرجوا منه! فإذا كان لا يسعهم كرهت الصلاة فيه، ولا إعادة

எனவே ஈத்காஹ் மைதான்ங்கள் இல்லாத இடங்களில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுங்கள். குழப்பவாதிகளுடன் இணைந்து கொள்ளாதீர்கள்.


பித்ரா தர்மம் 

 ஈத் பெருநாள் அன்று நிறைவேற்றுகிற வணக்கங்களில் பிரதானமானது பித்ரா தர்மம். 

 தொழுகைக்கு செல்வதற்கு முன் வழங்கிவிடவேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிமும் அவருக்காகவும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்காகவும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும்.

 பெருநாள் செலவுக்குப் போக அதிகப்படியாக காசு வைத்திருக்கிற அனைவரும் இந்த தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்

 அது நமது நோன்பை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகிறது.

   قال عبد الله بن عباس: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ»

பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பித்ராவை வழங்கி விட வேண்டும். இல்லை அது சாதாரண தர்மம் ஆகிவிடும்.

 ஹன்பி மத்ஹபின் படி 1 கிலோ 700 கிராம் கோதுமை அல்லது அதற்குரிய பணமாக ரூ 90   பித்ரு சதகாவாக கொடுக்க வேண்டும். 

 ஷாபி மத்ஹபின் படி 2.400 கிலே அரிசி பித்ராவாக கொடுக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் அதிகமாகவும் கொடுக்கலாம். பிரியாணி அரிசியாகவும் கொடுக்கலாம். 

 ஒருவர் அவருடை தாய்  தந்தை  மகன் மகள் தவிர மற்ற நெருங்கிய சொந்தக் காரர்களுக்கு   பித்ராவை கொடுக்கலாம். 

அமைப்புக்களிடம் பித்ராவை ஒப்படைப்பபது பொறுப்பற்ற செயலாகவே அமையும். இத்தகை ஒப்படைப்புகள் மூறை கேடுகள் செய்யவே காரணமாகின்றன. அமைப்புக்களின் தலைவர்கள் ஒருவ்ரை ஒருவர் தாக்கி வெளியிடும் வீடியோக்களை பார்த்தால் இந்த அமைப்புக்கள் பித்ரா தர்மத்தில் எவ்வளவு முறைகேடு செய்கிறார்கள் என்பது.

 நம்மை நெருங்கி பல ஏழைகள் இருக்கும் போது அவர்களுக்கு தேடிச் சென்று கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, அப்படி கொடுக்கிற போது அது நமது அக்கறையின் வெளிப்பாடாகவும் அமையும்.

 உங்களுக்கு ஏழைகளை அடையாளம் காண தெரியாவிட்டால் அருகிலுள்ள பள்ளிவாசலை தொடர்பு கொண்டால் அவர்கள் தேவையுடையோரை உங்களது இல்லங்களுக்கே அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் நிம்மதியாக பித்ராவை கொடுத்து மகிழ்லாம்.

 சதகத்துல் பித்ரின் நேரம்

பெருநாள் அன்று சுபுஹ்லிருந்து பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னதாக இந்த தரமத்தை நிறைவேற்ற வேண்டும். முதல் நாள் மஃரிபிலிருந்தும் கொடுக்க தொடங்கலாம். ஏழைகளை சென்றடைவது சிரமமாக இருக்கும் என்றால் ரமலானில் ஓரிரு நாட்களில் முன் கூட்டியே கொடுத்தாலும் செல்லும்   

ஏழைகளை கண்டறிவதில் சிரமம் அற்ற இடங்களில் மிக முன்னதாகவே கொடுப்பது சரியானது அல்ல என  சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்

பெருநாள் அன்று ஏழைகளை திருப்திப்படுத்துவதான் இதன் நோக்கம் என்பதால் இரண்டு நாட்களை விட முன் கூட்டியே கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  ولا يجوز تعجيلها لأكثر من ذلك لأن الغرض منها إغناء الفقير يوم العيد،

لما روى عبد الله بن عمر  أن رسول الله  قال: «اغنوهم عن الطواف في هذا اليوم

ஹதீஸ் கூறுகிறது. பெருநாளில் ஏழைகளில் மக்களுக்கிடையே வலம் வரும் தேவையை தவிருங்கள் .

ஏழைகளை கண்டறிவதில் இருக்கிற சிரம்ம் காரணமாக வே ரமலான் தொடங்கியதில் இருந்து சதகத்துல் பித்ரை கொடுக்கலாம் என்று சட்ட அறிஞர்கள் அனுமதி வழங்கினார்கள்.

 தேவையற்று முன் கூட்டியே கொடுத்து விடுவது சதகத்துல் பித்ரின் நோக்கத்தை மாற்றுவதாக அமையும்.

 இந்த தரமத்தை சதகத்துல் பித்ரு என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை அறிஞர்கள் கூறுவார்கள் .

 ரமலானுடைய நோன்பை பெருநாளோடு நிறுத்திக் கொள்வதால் அன்றைய தினம் வழங்கப்படும் தர்மத்தை நிறுத்திக் கொள்ளும் சகாத் என்ற அர்தத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.

 لأن الفطر من رمضان سبب وجوبها، فأضيفت إليه 

قال  ابن عمر: زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ» 

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பித்ரத் என்ற வார்த்தைக்கு இயற்கை என்றும் பொருள் இருக்கிறது.

 فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِی فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ என்றூ திருக்குர் ஆன் கூறுகிறது/

 மனித இயல்பு. தான் அனுபவிக்கும் இன்பத்தித்தை வசதியற்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்வது.

 அந்த வகையில் இந்த தர்மத்தை இயற்கை தர்ம்ம் என்றும் சொல்லாம்.

இந்த சிந்தனையில் பார்க்கிற போது, பித்ரு சதகா என்பது வெறும் தர்மமாக மட்டும் இல்லாமல் ஏழைகளை  நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது என்று நமது மன்சாட்சியை பக்குவப்படுத்துவதாகவும் அமைகிறது.

 பெருநாள் தொழுகை சுன்னத்தான இரண்டு ரகாத்துகளாகும். ஹன்பி மத்ஹபில் வாஜிபான இரண்டு ரகாத்துகளாகும்.

 அதிகப்படியான 12 தக்பீர்கள் அதில் சொல்லப்படும். ஹனபி மத்ஹபில் 6 தக்பீர்கள் சொல்லப்படும்.

 இந்த தக்பீர்களை பின்னின்று தொழுபவர்களும் சொல்ல வேண்டும்.

 ஈதுல் பித்ரு பெருநாளன்று தொழுகைக்கு வருவதற்கு முன் இனிப்புகளை அல்லது பேரீத்தம் பழத்தை ஒற்றைப்படையாக சாப்பிட்டுக் கொள்வது சுன்னத்து.

ரமலான் அன்று வாய்ப்பிருந்தால் புத்தாடை அணிவதும் இல்லை எனில் சுத்தமான ஆடைகளை அணிவதும் அத்தர் பூசிக்கொள்வதும் சுன்னத் ஆகும்.

 யார் மீதாவது கோபத்தை வைத்து கொண்டு பெருநாளை கொண்டாடாமல் இருப்பது. அல்லது யாருடைய துக்கத்திற்காகவாவது பெருநாளை தவிர்ப்பது தவறாகும். அல்லாஹ் மகிழ்ச்சியை அவமதிக்கும் செயலாகும். அதனால் தான் பெருநாள் அன்று நோன்பு வைப்பதை மார்க்கம் ஹரமாக ஆக்கியிருக்கிறது.

தொழுகைக்குப் பிறகு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் சுன்னத் ஆகும் ஈத் முபாரக் என்றும் சொல்ல்லாம்.

 قد جاء في المغني لابن قدامة قالوذكر ابن عقيل في تهنئة العيد أحاديث منها: أن محمد بن زياد، قال: كنت مع أبي أمامة الباهلي وغيره من أصحاب النبي صلى الله عليه وسلم فكانوا إذا رجعوا من العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك،

 وفي سنن البيهقيعَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: لَقِيتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَنَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، قَالَ وَاثِلَةُ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَ: نَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ 


தக்பீர்  

 பெருநாளன்று தக்பீரை உரத்துச் சொல்ல வேண்டும் அதுவே பெருநாளின் அழகாகும்.

முந்திய மஃரிபிலிருர்ந்து தொழவைக்க இமாம் எழுந்திருக்கும் வரை  ஈதுல் பித்ர் அன்று தக்பீர் சொல்ல வேண்டும் .

 قال ابن قدامةقال أبو الخطابيكبر من غروب الشمس ليلة الفطر إلى خروج الإمام إلى الصلاة في إحدى الروايتين، وهو قول الشافعي، وفي الأخرى إلى فراغ الإمام من الصلاة

 பாதைகளிலும் தக்பீர் உயரட்டும்

 ويكون التكبير في الفطر مطلقاً غير مقيد، فيكبر في السوق وفي الطريق وفي البيوت والمساجد ونحو ذلك،

  நாம் சொல்லும் தக்பீரில் ரமலானுக்கு பின்னும் தீன் கமழட்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

No comments:

Post a Comment