உலகிற்கு இஸ்லாம் காட்டித் தந்த மிக அற்புதமான நடைமுறைகளில் ஒன்று வக்பு.
மக்கள் அவர்களது சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை பொதுக் காரியங்களுக்காக அல்லாஹ்வுக்கு என்று வக்பு செய்து கொடுத்தால் நல்லது என்றும் . ஒரு மனிதர் அவருக்கு சொந்தமான
அவரது கைவசத்தில் இருக்கும் சொத்தில் 3 ல் ஒரு பகுதிளவை இவ்வாறு தர்மம் செய்யலாம் என்றும்
இஸ்லாம் கூறியது.
திருக்குர்ஆன் மரணிப்பதற்கு முன் இதை செய்து விடுமாறு ஆலோசனை கூறியது. மரணித்த
பிறகு இவ்வாறு செய்யாமல் போனதற்காக வருத்தப்பட வேண்டியது வரலாம் என்ற எதார்த்த்தையும்
சுட்டிக் காட்டியது.
من أفضل أنواع الصدقة وأنفعها وأكثرها أجراً
இதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தொடக்கத்திலிருந்து வக்பு செய்யும் பழக்கம் அதிகமாக இருந்த்து.
قال
جابر -رضي الله عنه-: ما بقي احد من أصحاب محمد -صلى الله عليه وسلم- له مقدره على
الوقف إلا وقف،
அந்த எண்ணிக்கை என்பதை தொடும் என இமாம் ஷாபிஈ ரஹ் கூறுகிறார்
وقال الشافعي -رحمه الله-: بلغني أنَّ أكثر من ثمانين رجلاً من
أصحاب رسول الله -صلى الله عليه وسلم- من الأنصار، تصدَّقوا بصدقات موقوفات.
முஸ்லிம்களிடம் பொருளாதார வளம் பெருகிற போது வக்பு செய்யும் வழக்கமும் அதிகரித்தது.
நாட்டிலுள்ள
இந்து அறநிலையத்துறையோ தொழிலாளர் நல வாரியமோ எப்படி இந்திய அரசுக்கு
அப்பாற்பட்டதாக இருக்க முடியாதோ அதே போல வக்பு வாரியமும் இந்திய அரசுக்கு
அப்பாற்பட்டது அல்ல; ஆட்சியில் இருக்கிற கட்சிகள் தான் தனகு வேண்டியவர்களை வக்பு
வாரியத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கிறது.
நிலமை இப்படி இருக்க வக்பு வாரியங்களில் முறைகேடு நடப்பதாக
பொய்யாக குற்றம் சாட்டி மத்திய பாஜக அரசு கடந்த ஏப்ரல் 2 ம் தேதி வக்பு திருத்த
சட்டம் 2025 ஐ கொண்டு வந்துள்ளது. அத்தோடு பழைய வக்பு சட்டம் 1924 மற்றும் வக்பு
சட்டம் 1995 ஆகியவற்றை இரத்து செய்துள்ளது. வக்பு வாரியத்தில் வெளிப்படைத்
தன்மையையும் கொண்டு வருவதற்காகவும் வக்பு சொத்துக்களை முஸ்லிம் சமூகத்திலுள்ள எளித
தரப்பு மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த திருத்தம்
செய்யப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 16 மணி
நேரத்திற்கும் அதிகமாக காரசாரமாக விவாதிக்கப் பட்ட இந்த சட்டம் எதிர்க் கட்சிகளின்
எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகத்தின் எந்த வேண்டுகோளையும்
நிராகரித்து முழுக்க முழுக்க முஸ்லிம்களே இல்லாத ஒரு அரசால் வனமப் போக்குடன்
நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
உண்மையில் இந்த சட்டம் வக்பு திருத்த சட்டம் அல்ல்;
வக்பு திருட்டு சட்டம் ஆகும். முஸ்லிம்களின் சொத்துக்களை எளிதாக பிடுங்கிக் கொள்ள
மத்திய மாநில அரசுகளுக்கும் தனி நபர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு சட்டமாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்ச அவர்கள் கூறியது போல
முஸ்லிம்களை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு
வந்துள்ளது.
உண்மையில் இது சட்ட திருத்தமே அல்ல; சட்டப் பூர்வ
கொள்ளையாகும்.
ஒரு சட்டத்தில் திருத்தம் என்றால் ஒரு சில வார்த்தைகளை
திருத்துவார்கள் . ஒரு சில விதிகளை திருத்துவார்கள். ஆனால் இந்த திருத்தமோ வக்பு
சொத்துக்களின் தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறாது. வக்பை பலவீனப்படுத்தும்
நோக்கில் அமைந்திருக்கிறது.
மத்திய
அரசு 44 திருந்தங்களை செய்துள்ளதாக கூறுகிறது. ஆனால் இதில் 33 அம்சங்களை
புதிதாக சேர்த்துள்ளது. 45 பழைய விதிகளை மாற்றியுள்ளது. 37 விதிகளை அகற்றியுள்ளது.
ஆக மொத்தம் 115 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்திய அரசியல் சாசணம் முஸ்லிம்களுக்கு
வழங்கியுள்ள அடிப்படை உரிமையில் அப்பட்டமாக அபகரிக்கிறது. மத சுதந்திரத்தை பறிக்கிறது.
3. ஒருவர் வாய்ச் சொல்லாக வக்பு செய்தால் வக்பு செல்லும் என்று ஷரீஅத் சட்டம் அனுமதிக்கிறது . இல்லை எழுத்து வடிவில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று இந்த திருத்தம் கூறுகிறது.
இந்த வக்பு சட்ட்த்தில் தான் இப்போது மத்திய அரசு கை
வைத்துள்ளது.
இப்போதைய வக்பு சொத்துக்களின்
விவகாரத்தை கோர்ட்டி முறையிட முடியும் என்று மாற்றுகிறது.
அதாவது கோர்ட் ஒரு
சராசரி சொத்து விவகாரத்தை போலவே வக்பு சொத்தையும் விசாரிக்கும்
இதுவும்
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு திட்டமாகும்.
அதனால் தான் இதை
வக்பு திருட்டு சட்டம் என்று நாம் கூறுகிறோம்.
இப்போதைய சட்ட
திருத்தம் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எந்த வகையில் முரண்படுகின்றன என்பதற்கான
சாட்சிகள் இவை.
அரசியல் சாசனத்தை சிதைக்கும்
பாஜக அரசு
இனி இப்போதை வக்பு
திருட்டு சட்டம் இந்திய அரசியல் சாசணத்திற்கும் இந்திய மக்களின் சமூக
நல்லிணக்கத்திற்கு எந்த வகையில் கேடு செய்ய நினைக்கிறது ? இந்துதுத்துவ வகுப்பு வாத சக்திகள்
முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க எப்படி
துனை செய்கிறது? என்பதை
பார்க்கலாம்.
5. ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்தா என்பதை தீர்மாணிக்கும் அதிகாரம் மாவட்ட கலக்டருக்கு உண்டு என்று இந்த் சட்டம் கூறுகிறது.
இதன் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவரோ ஏன் ஒரு சப்
கலக்ட்ரோ கூட ஒரு வக்பு சொத்தை வேறு யாருக்கு கொடுத்து விட முடியும்.
அதனால் தான் இது
வக்பு திருட்டு சட்டம் என்கிறோம்.
இந்த சட்ட திருத்ததின் ஒரு பெரும் கொடுமை.
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர் வக்பு வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்
படுவார்கள் என்று கூறுகிறது.
திருப்பதி தேவஸ்தான்
பணியாளர்களில் இந்துக்கள் அல்லாதவர்களை நியமிக்க கூடாது என்பதை ஏற்றுக்
கொண்டிருக்கிற மத்திய பாஜக அரசு, உத்தரப் பிரதேசத்திலும் வட நாட்டின் பல
பகுதிகளிலும் இந்துக்களின் விழாக்கள் நடை பெறும் இடங்களில் முஸ்லிம்கள் கடை வைக்க
கூடாது என்று இந்துத்துவ சக்திகள் அச்சுறுத்துவதை கண்டு கொள்ளாத மத்திய பாஜக அரசு
முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை
உறுப்பினர்களாக்க முயற்சிக்கிறது.
நீலகிரி தொகுதி
திமுக எம் பி ஆ ராசா நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தன்னுடைய ஆவேசமான்
எதிர்த்து போசிய போது மிக நியாயமாக ஒரு கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் இந்து
அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரிகளில் முஸ்லிம் ஆசிரியர்களை நியமிக்க கூடாது
என்று கேட்கும் பாஜாகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் வக்பு வாரியத்தில் முஸ்லிம்
அல்லாதவர்களை சேர்க்கும் திருத்த்தை கொண்டு வந்துள்ளனர் என்று தோலுரித்துக்
காட்டினார்.
அதனால் தான் இதை
வக்பு திருட்டு சட்டம் என்று கூறுகிறோம்.
6. வக்பு சொத்துக்களை முஸ்லிம்கள் நிர்வகித்தாலும் அவை அரசின்
கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.
ஒண்ணரை இலட்சம் கோடி
சொத்து இருக்கிறது. அதில் பல ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என்றால் அது முஸ்லிம்
சமூகத்தின் எந்த ஒரு ஜமாத்திற்கும் வருவதில்லை. அரசாங்கத்திடம் தான் சென்று
சேர்கிறது. அரசு தான் அதை செலவிடவும் செய்கிறது.
அரசு
சொத்துக்களுக்கு எப்படி வருமான வரி இல்லையோ அது போல வக்பு சொத்துக்களுக்கும்
இதுவரை வருமான வரி இருந்ததில்லை.
இப்போதை பாஜக அரசின்
சட்ட திருத்தமோ
வக்பு சொத்தின்
வருமானங்களுக்கும் வரி விதிக்கப் போகிறது.
இது அப்பட்டமாக.
முஸ்லிம்களுக்குரியது என்ற ஒற்றை காரணத்திற்கா அரசின் சொத்தை அரசே அபகரிக்கும்
முயற்சியாகும்.
அதனால் தான் இது
வக்பு திருட்டு சட்டம் என்று சொல்கிறோம்.
வக்பு வாரியத்திற்கு
எதிரான பொய்யான் அவதூறுகளை பிரதமர் அமைச்சர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொருவரும்
நாடாளுமன்றத்தில்
7. வக்பு சொத்த்துக்களை ஆக்ரமித்திருப்பவர்களுக்கு ஜாமீன்
இல்லாத தண்டனைகள் வழங்கப்படும் என்பது முந்தைய சட்டம் கூறுகிறது. அதை இப்போதைய சட்டம் ஜாமீன் வழங்கப்படும் தண்டனையாக
மாற்றியிருக்கிறது. அதே வக்பு ஆகமிப்பாளர்களுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்ற
பழைய சட்டத்தை சாதாரண தண்டனை வழங்கப்படும் என்று இப்போதைய சட்டம் மாற்றியிருக்கிறது.
முழுக்க பதிவு செய்யப்பட்டு விட்டிருக்கிற வக்பு சொத்துக்களை
இனியும் பதிவு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வக்பு சொத்தையும் கேள்விக்குள்ளாக்குகிற
அநீதியாகும்
இது ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவையும் நிம்மதி இழக்க செய்யக்
கூடியதாகும்.
உண்மையில், இந்த சட்டம் எந்த ஒரு பள்ளிவாசலையும் தர்காவையும் கப்ருஸ்தானையும் கேள்விக்குள்ளாக்கும். ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் நியாயமாக அனுபவித்து வரும் சொத்துரிமையை சச்சரவுக்குள்ளாக்கும் என்பதே எதார்த்தமாகும்.
நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு
இந்தியா. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்தாலும்,
அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு மக்கள்
வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இதே உணர்வை கொண்டதாகத்தான்
செயல்பட வேண்டும்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு,
தனது அனைத்து செயல்பாடுகளையும் ஒருவித
உள்நோக்கத்துடனே செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையிலேயே திட்டங்களை
தீட்டுகின்றனர்.
தமிழக் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க
ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய இத்தீர்மாணம் இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற
வேட்கை மிகுந்ததாகும்
தீர்மானத்தை முன் மொழிந்த முதலமைச்சர் அவர்களுக்கும் அதை
ஆதரித்த காங்கிரஸ், அதிமுக, விடுதலை
சிறுத்தைகள், தமிழ வாழ்வுரிமை கட்சி
உள்ளிட்ட அஅனைத்து கட்சியினருக்கும். சட்ட மன்றத்திற்கு வெளியே இந்த
சட்ட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கும் முஸ்லிம் சம்தாயம் தனது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு நம் நாட்டின் ஜனநாயகத்தை
பாதுகாக்க வேண்டிய ஒரு பெரும் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிற முஸ்லிம்
சமூகத்திற்கு கட்சி பேதமின்றை ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசின் இந்த
சட்ட திருத்தம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய
எச்சரிக்கையை நாம் மறந்து விடக் கூடாது என்பதை நாட்டுமக்களுக்கு முஸ்லிம் சமூகம்
நினைவூட்டுகிறது.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சமூகத்திற்கு
செய்யப்படுகிற அநீதி தேசத்திற்கு செய்யப்படுகிற அநீதியாகும். இது தியாகிகளை
அவமதிப்பது போன்ற கொடூரமாகும்.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி பெரும்பான்மை
சமூகத்திற்கு ஒரு வேண்டு கோள் வைத்துள்ளார்.
2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முஸ்லிம்களுக்கு
எதிராக ஏதே ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. கொலைகள் மசூதிகள் இடிப்பு, புல்டோசர்
நடவடிக்கைகள் நடக்கின்றன. இப்போது அவர்கள் வக்பு சொத்துக்கள் மீது கை
வைத்துள்ளார்கள். இத்தகைய அனுகு முறைக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் இந்து
சகோதரர்கள் கை கோர்க்க வேண்டும். நாட்டின் இந்து மக்கள் மீது எங்களுக்கு நிறைய
நம்பிக்கை உள்ளது.
இது ஒரு ஜன்நாயக அரசியல் வாதியின் கோரிக்கை அல்ல ஒட்டு
மொத்த இந்திய முஸ்லிம்கள் சார்பாக நாட்டிலுள்ள இந்து சகோதரர்களின் முன்
வைக்கப்படுகிற கோரிக்கையாகும்.
முந்தைய வக்பு சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசும்
அமைச்சர்களும் இந்துதுதுவ மீடியாக்களும் இந்துதுவ சக்திகளும் பரப்புகிற பல குற்றச் சாட்டுகளும் பொய்யான அவதூறுகளாகும்.
இந்தியாவில் நிலவுகிற சமூக நல்லிணக்கத்தை சிதைத்து மக்களில் ஒரு சாராரை மற்றொரு
சாராருக்கு எதிராக வன்மமாக திருப்பி விடுகிற முயற்சியாகும்.
கொஞ்சம் யோசித்தால் கூட அவற்றின் போலித்தன்மை வெளிப்பட்டு
விடும்.
இந்த நாடாளுமன்றத்தை கூட வக்பு என்று சொல்லி விடுவார்கள்
என்ற அமைச்சர் கிரன் ரிஜ்ஜுவின் பேச்சு, ஒரு நோட்டீஸில் ஏழை மக்களின் வாழ்வை
கேள்விக்குள்ளாக்கி விடுவார்கள் என்ற பிரதமரின் பேச்சு தரமற்ற மிக மோசமான சொற்றொடர்களாகும்.
1955 ல் வக்பு சொத்துக்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.
அவை அனைத்தையும் கனினிமயப்படுத்தி விட்டோம் என்று பாஜக வை சார்ந்த ஒரு அமைச்சரே
நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிற போது இந்த அரசினால் நியமிக்கப் பட்ட
உறுப்பினர்களை கொண்ட வக்பு வாரியம் தனக்கு சொந்தமில்லாத சொத்துக்களுக்கு உரிமை கோர
முடியும் என்று கூறுவதை விட மோசடித் தனம் வேறு என்ன இருக்க முடியும் ?
அதே போல தமிழகத்தில் ஒரு சிலர் 31 ஆயிரம் கோடியாக இருந்த
வக்பு சொத்துக்கள் இப்போது ஒரு இலட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. வக்பு வாரியம்
ஆக்ரமிப்புக்களை செய்யாமல் இது எப்படி உயர்ந்த்து ? என்று கேள்வி கேட்கின்றனர்.
இந்து அறநிலையத்துறை ஆக்ரமிப்புச் செய்ய முடியும் என்றால் தான் வக்பு வாரியமும்
ஆக்ரமிப்புச் செய்ய முடியும்? வக்பு
வாரியம் ஆக்ரமிப்பு செய்கிறது என்றால் அரசு ஆக்ரமிப்பு செய்கிறது என்றே பொருளாகும்
ஏனெனில் வக்பு வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிற்கு வக்பு சொத்துக்களின்
மதிப்பு அதிகறித்திருக்கிறது. உண்மை தான்.
அதற்கு இரண்டு காராண்ங்கள்
ஒன்று சொத்துக்களின் மதிப்பு காலத்திற்கேற்ப
அதிகரித்திருப்பதாகும்
இரண்டாவது தொடர்ந்து முஸ்லிம்கள் இஸ்லாமிய வழிகாட்டுதலின்
படி வக்பு செய்து வருவதாகும். அது போல
தனியாருக்கு சொந்தமான பல பள்ளிவாசல்களும் தர்காக்க்களும் வக்பு வாரியத்தின் வசம்
ஒப்படைக்கப்படுவதுமாகும்.
தமக்கு சொந்த மில்லாத்தை மட்டுமல்ல, தன் சுவாதீனத்தில்
இல்லாத எதையும் வக்பு செய்ய முடியாது என்ற அளவில் வக்பு அல்லாஹ்வுக்காக
செய்யப்படக் கூடியவை என்ற வகையிலும் வக்பு சொத்துக்கள் புனிதமாக இருக்கின்றன
என்பதையும் நாட்டு மக்களுக்கு மிக உறுதிபட நாம் தெரிவித்துக் கொள்கிறோம். .
இந்த உண்மைகளை தெரிந்தும் வேணுமென்றே
அபாண்டமான குற்றச் சாட்டுக்களை கூறி திரைப்படங்களில் மிக மோசமான ரவுடிகள் கையாள்கிற
அரசியல் சதி வேலைகளைப் போலவே தற்போதைய மத்திய அரசு மக்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க
முயல்கிறது
பாஜக வின் தனிப்பட்ட விருப்பத்திற்காக
கொண்டு வரப்பட்டுள்ள இச் சட்ட்த்தை நாட்டு மக்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டுள்ளது.
·
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கிடைப்பது
போதும் என்று சமாதானமாக இருந்து விட்டது.
·
பாபர் மஸ்ஜித் இடிப்பை தாங்கிக் கொண்டது.
·
முத்தலாக் தடை சட்டம் என்ற் பெயரிலான
அடக்கு முறையை சகித்துக் கொண்ட்து.
·
கல்வி உதவி பெறுதலில் இருந்து வேலை
வாய்ப்புகளில் வஞ்சிக்கப்படுவது வரை ஆன் அனைத்து புறக்கணிப்புக்களையும் எதிர் கொண்டது.
·
அரசியல் அதிகாரத்தில் ஓரங்கட்டப்படுகிற
அக்கிரமத்தை ஏற்றுக் கொண்ட்து.
அநீதியை கண்டால் முடிந்தவரை தடுக்க பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்
عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ( من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان ) رواه مسلم .
وعنْ أَبي هُريرة، t، قالَ: جاء رجُلٌ إِلَى رَسُول اللَّه ﷺ فَقَال: يَا رسولَ اللَّه أَرأَيت إنْ جاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: فَلا تُعْطِهِ مالكَ قَالَ: أَرأَيْتَ إنْ قَاتلني؟ قَالَ: قَاتِلْهُ. قَالَ: أَرأَيت إنْ قَتلَني؟ قَالَ: فَأنْت شَهيدٌ قَالَ: أَرأَيْتَ إنْ قَتَلْتُهُ؟ قَالَ: هُوَ فِي النَّارِ رواهُ مسلمٌ
وعنْ أَبي الأعْوَر سعيدِ بنِ زَيْدِ بنِ عَمْرو بنِ نُفَيْلٍ، قَالَ: سمِعت رسُول اللَّهِ ﷺ يقولُ: منْ قُتِل دُونَ مالِهِ فهُو شَهيدٌ، ومنْ قُتلَ دُونَ دمِهِ فهُو شهيدٌ، وَمَنْ قُتِل دُونَ دِينِهِ فَهو شهيدٌ، ومنْ قُتِل دُونَ أهْلِهِ فهُو شهيدٌ.رواه أَبو داود،
இந்த நபி மொழி எந்த அளவு போராட தயாராக வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
மத்திய அரசே! மத்திய அரசே! வக்பு சொத்துக்களை திருடும் சட்டத்தை முற்றிலுமாக
ரத்து செய்!
மத்திய அரசே மத்திய அரசே! நாட்டு மக்களை மேலும் மேலும் துன்புறுத்தாதே!
மத்திய அரசே மத்திய அரசே மக்களின் கவனத்தை திசை திருப்பி விலை வாசியை உயர்த்தாதே
! மக்களின் வயிற்றில் அடிக்காதே!
மத்திய அரசே மத்திய அரசே மத நல்லிணக்கத்தை குலைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்காதே!
மத்திய அரசே மத்திய அரசே அரசியல் சாசனத்தை அவமதிக்காதே !
மத்திய அரசே மத்திய அரசே வக்பு சொத்துக்களை திருடாதே!
மத்திய அரசே மத்திய அரசே வக்பு திருடர்களுக்கு துணை போகாதே!
الحمد لله இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் பேசலாம்
ReplyDeleteبارك الله
شكراً جزاك الله خير الجزاء في الدارين