வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 07, 2022

பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படும் போது...

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَن تَعْتَدُوا ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2

 இந்தப் புனிதம் மிக்க ரமலானில் நமது நோன்பை இரவு வணக்கத்தை திலாவத்தை நோன்பு திறக்க கொடுக்கப்படும் தர்மங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

நமது வணக்கங்களுக்கான பயனை முழுமையாக உணர்ந்துகொள்ளவும் அதற்குரிய கூலியை பெற்றுக் கொள்ளவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا-  بخاري2628

خَرِيفًا : عاما

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ  احمد

 يقول صلى الله عليه وسلم: “من قام رمضان إيمانا واحتسابا غُفر له ما تقدم من ذنبه

مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا) رواه الترمذي

 ரமலானின் முதல் ஜும்ஆ முக்கியமானது. மக்கள் பெருமளவில் கூடக்கூடிய நாள். 

இன்றைய நமது இஸ்லாமிய வாழ்க்கைக்கு தேவையான இரண்டு வழிகாட்டுதல்களை இன்றைதினம் பரிமாறிக் கொள்ள இருக்கிறேன்.

இந்தியாவில் முஸ்லிகளின் அன்றாட வாழ்வை சிக்களுக்குள்ளாக்கும் தொடர் முயற்சிகளை இந்துத்துவ சக்திகள் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றன . நடு நிலையாளர்கள் அல்லது ஊடகங்கள் அவற்றை பரபரப்பான செய்தியாக பேசி விட்டு செல்கின்றனவே தவிர தார்மீகமாக தவறுகளை தட்டிக் கேட்பதில்லை.

ஹிஜாபுக்கு தடை போட்டார்கள். ஹலால் இறைச்சி கூடாது என்றார்கள் பள்ளிவாசலில் ஸ்பீக்கர் வைக்க கூடாது என்கிறார்கள். தேடிப்பிடித்து பள்ளீவாசல்களுக்கு முன் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புகிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்டு நம்மை குறிவைத்து செயல்படுகிறார்கள்.

அவர்களது நோக்கம் என்ன ?

இப்போது கிடைத்திருக்கிற அரசியல் வலுவை வைத்து முடிந்தவரை முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்கவும்

இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதிலிருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்க முயற்சிப்பதன் மூலம் இஸ்லாமின் செல்வாக்கை முடக்கவும் 

முஸ்லிம்களுக்கு சார்பாக இருக்கிற ஜனநாயக சக்திகளை ஒடுக்கவும் நினைக்கிறார்கள்.

இதில் காவல்துறை நீதிதுறை போன்ற நிர்வாக அமைப்புக்களை துணைக்கு அழைத்துக் கொள்வதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவருகிறார்கள்.

இவ்வாறு பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படும் போது எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தெளிவான அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. 1500 ஆண்டுகளில் நீண்டுகிடக்கிற முஸ்லிம்களின் வரலாறுகளும் வழிகாட்டுகின்றன.

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மிக நெருக்கடியான ஒரு நிகழ்வை இங்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

ஹிஜ்ரி 35 ம் ஆண்டு துல்ஹஜ் பிறை 12 அதாவது அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் ஒன்றில் இஸ்லாமின் மூன்றாவது கலீபா உஸ்மான் ரலி அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள், எதிரிகளால் அல்ல. முஸ்லிம்களில் ஒரு குழுவினரால்.

உஸ்மான் ரலி அவர்களின் மரியாதை எத்தகையது ?

·        فهو رابع من أسلم من الرجال.

·        وهو لم يسجد لأي صنم طوال حياته،

·         أنه لم يشرب الخمر لا في الجاهلية ولا في الإسلام

·        وكان يصوم الدهر

·         ثالث الخلفاء الراشدين

·         وأحد العشرة المبشرين بالجنة

·        . يكنى ذا النورين பெருமானாரின் இரு மகள்களை திருமணம் செய்தவர்

·        وكان من كبار الأثرياء وقد نال مكانة مرموقة في قومه، ومحبة كبيرة

·        وعاشر أقواماً غير العرب فعرف من أحوالهم وأطوارهم ما ليس يعرفه غيره من قومه

·         (உலக வழக்குகளை அறிந்தவர்)

·        أنه لم يكن يوقظ نائمًا من أهله إلا أن يجده يقظان فيدعوه فيناوله وضوءه،

·        ) (பிறருக்கு எந்த வகையிலும் தொல்லை தராதவர்

அவர் மீது பெருமானாருக்கு தனி மரியாதை இருந்த்து.

தபூக் போரின்போது வாரி வழங்கினார்.

يقول ابن شهاب الزهري: «قدم عثمان لجيش العسرة في غزوة تبوك تسعمائة وأربعين بعيراً، وستين فرساً أتم بها الألف، وجاء عثمان إلى رسول الله في جيش العسرة بعشرة آلاف دينار صبها بين يديه، فجعل الرسول يقلبها بيده ويقول: «ما ضر عثمان ما عمل بعد اليوم» مرتين

 உஸ்மான் இனி என்ன செய்தாலும் அவருக்கு தீங்கில்லை என்றார்கள் பெருமானார்.

முஸ்லிம் உம்மத்தின் தண்ணீர் பிரச்சனை தீர பிஃருரூமா கிணற்றை வாங்கிக் கொடுத்தார்.

وكانت لرجل من بني غفار عين يقال لها رومة، وكان يبيع منها القربة بِمُدّ، فقال النبي: «تبيعها بعين في الجنة؟» فقال: «يا رسول الله، ليس لي ولا لعيالي غيرها». فبلغ ذلك عثمان فاشتراها بخمسة وثلاثين ألف درهم، ثم أتى النبي فقال: «أتجعل لي فيها ما جعلت له؟» قال: «نعم» قال: «قد جعلتها للمسلمين

فقال رسول الله: «من يشتري بئر رومة فيجعل دلوه مع دلاء المسلمين بخير له في الجنة

மஸ்ஜிதுன்னபவி இடம் பற்றாக்குறை ஏற்பட்ட போது  விரிவாக்கத்திற்கு இடம் வாங்கிக் கொடுத்தார்

 فقال: «من يشتري بقعة آل فلان فيزيدها في المسجد بخير له منها في الجنة؟» فاشتراها عثمان بن عفان من ماله] بخمسة وعشرين ألف درهم

 அவர் ஹிஜ்ரீ 23 ம் ஆண்டு துல்ஹஜ் 29 ம் நாள் இஸ்லாமின் மூன்றாவது கலீபாக பை அத் செய்து கொடுக்கப்பட்டார்.

 அவரது காலத்தில் இஸ்லாம் கண்டங்களை கடந்து விரிவடைந்த்து.

இவரின் ஆட்சியில் ஈரான் முழுவதுமாகவும் சிரியா முழுவதுமாகவும்  ஆர்மீனியா குராஸான்.  வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன

 இஸ்லாம் வெகுவாக பரவியிருந்த்து.

 ஆட்சிப் பகுதிகள் விரிவடைந்த போது அன்னிய நிலப்பரப்புகளில் ஆளுநர்கள் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்காக சில பகுதிகளில் தனது உறவினர்களை நியமித்தார்.

 அந்த நியமன்ங்கள் ஒரு சில இடங்களீல் அவரது நம்பிக்கையை சிதைத்தன.

 அப்துல்லாஹ் பின் அபீ சரஹ் என்ற தனது உறவினரை எகிப்தின் ஆளுநர் ஆக்கினார்.

 அவர் சரியாக நடந்து கொள்ள வில்லை. மக்கள் அவரை பற்றி குறை கூறி மதீனாவிற்கு வந்தனர். கலீபா உஸ்மான் ரலியிடம் முறையிட்டனர்.

கலீபா, ஆளுநருக்கு அறிவுறை கூறி அவர்களிடமே ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.

அப்துல்லாஹ்வுக்கு அது பெரும் கோபத்தை கிளப்பியது, கடிதம் கொண்டு வந்தவர்களில் சிலரை அவர் துன்புறுத்தினார். சிலரை கொலை செய்தார்.

 இது எகிப்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுதிதியது , அங்கிருந்து சுமார் 700 பேர் திரண்டு மதீனாவிற்கு வந்து உஸ்மான் ரலியிடமும் மற்ற நபி தோழர்களிடமும் முறையிட்டனர்.

 ஆளுநரை நீக்குமாறு தோழர்கள் ஆலோசனை கூறினர். ஆரம்பத்தில் மறுத்த உஸ்மான் (ரலி) இறுதியில் முஹம்மது பின் அபீபக்கர்(ரலி) அவர்களை ஆளுநராக நியமிப்பதாக எழுதி அவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

எகிப்திலிருந்து வந்தவர்கள் மகிழ்ச்சியாக அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்டு முஹம்மது பின் அபீ பக்ர் ரோடு புறப்பட்டு சென்றனர்.

 செல்லும் வழியில் மதீனாவிலிருந்து வேகமாக செல்லும் ஒருவ்வரைக்  கண்டனர்.  அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்  தான் ஜனாதிபதியின் ஊழியர் என்றார். எகிப்தின் ஆளுனரிடம் செல்ல இருப்பதாகவும் கூறினார்.  அவரிடம் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் முஹம்மது பின் அபீ பக்கரை கொலை செய்து விடுமாறும் மற்றவர்களை கைது செய்யுமாறும் ஒரு உத்தரவு இருந்தது. அதில் உஸ்மான் ரலி அவர்களின் முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது.  உதுமான் (ரலி) தங்களை கொலை செய்ய மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக கருதி அந்த கூட்டம் ஆத்திரத்தோடு மதினாவுக்கு திரும்பியது.  உஸ்மான் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டது அவரை வெளியே வர அனுமதிக்கவில்லை வெளியில் இருந்து தண்ணீர் கூட உள்ளே செல்ல முடியவில்லை. பலநாள் அந்த முற்றுகை தொடர்ந்தது. இஸ்லாமிய பேர்ரசின் ஜனாதிபதி சில நூறுபேர்களால் தலைநகரில் முற்றுகை இடப்பட்டிருந்தார். மஸ்ஜிதுன் னபவியில் தொழ அவரை அனுமதிக்க வில்லை. அலி (ரலி) தல்ஹா(ரலி) சுபைர் ரலி போன்ற சஹாபாக்கள் அந்தக் கடிதத்தையும் அந்தக் கொண்டுசென்ற ஊழியரையும் ஒட்டத்தையும் உஸ்மான் ரலி முன்னே நிறுத்தியபோது இது எதுவும் தனக்கு தெரியாது என்று உஸ்மான் ரலி கூறினார்.  இந்த சதிவேலை ஸ்மான் அவர்களின் பணியாளர் மர்வான் உடையது என்பது அனைவரும் புரிந்து கொண்டனர்.  அவரை ஒப்படைக்குமாறு உஸ்மான் (ர்லி)யிடம் கோரிக்கை வைத்தனர். அவர் உடனே அனுப்ப மறுத்தார்.  

 கலகக்காரர்கள் ஆத்திரமடைந்தனர். உஸ்மான் ரலி யை கொலை செய்ய திட்டமிட்டனர். கலகக்காரர்களீடம் அப்துல்லாஹ் இப்னு சலாம் ரலி உபதேசித்தார் அல்லாஹ்வின் வாள் உரையில் இருக்கிறது. நீங்கள் உஸ்மானை கொலை செய்துவிட்டால் அல்லாஹ் அதை உருவி விடுவான் பிறகு ஒருபோதும் அது உறைக்குள் செல்லாது என்று அறிவுரை கூறினார்.

: كان عبد الله بن سلام يدخل على محاصري عثمان فيقول لا تقتلوه فوالله لا يقتله رجل منكم إلا لقي الله أجذم لا يد له وإن سيف الله لم يزل مغموداً وإنكم والله إن قتلتموه ليسلنه الله ثم لا يغمده عنكم أبداً

 அது பயனளிக்கவில்லை.  உஸ்மான் ரலி அவர்களின் வாசலில் காவலுக்காக ஹஸன் ஹுசைன் ரலி ஆகியோர் நிறுத்தப் பட்டிருந்தனர்.  முஹம்மது பின் அபீபக்கர் இரண்டு பேருடன்   சுவரேறி குதித்து உள்ளே சென்றார். உஸ்மான் ரலி யின் தாடியை பிடித்து உலுக்கினார். உஸ்மான் ரலி கூறினார். இந்தக் காட்சியை உனது தந்தை பார்த்தால் உன்னை நினைத்து வருத்தப்படுவார்

فقال له عثمان والله لو رآك أبوك لساءه مكانك مني فتراخت يده

இந்த வார்த்தையை கேட்ட முஹம்மது நடுங்கி அங்கிருந்து விலகிவிட்டார். ஆனால் அவருடன் வந்த இருவர் குதித்து திருக்குர்ஆன் மோதிக்கொண்டிருந்த உஸ்மான் ரலி அவர்களை வாளால் வெட்டிக் கொலை செய்தார்கள் அதில் பீறிட்ட ரத்தம் திருக்குர்ஆனின் பஸயக்பீகஹுமுல்லாஹ்  என்ற வசனத்தின் மீது விழுந்தது. ( அந்த குர்ஆன் இன்றும் எகிப்தின் மியூசியத்தில் இருக்கிறது)

 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைதி கொலு வீற்றிருந்த இஸ்லாமிய உலகில் தொடர்ந்து புயல் வீசத் தொடங்கியது சண்டைகளும் கொலைகளும் சாதாரணமாகிவிட்டன் இன்று வரை.

 இந்த நெருக்கடியான நிகழ்வு இரண்டு வலி மிகுந்த பாடங்களை தருகிறது.

 1 மதிக்கப்பட வேண்டியர்கள் உரிய அளவில் மதிக்கப்பட வேண்டும் எப்போது,

 உஸ்மான் ரலி அவர்களின் வீட்டிற்கு முன் கூடிய கூட்டம் உஸ்மான் ரலி அவர்களுக்கு உரிய மரியாதையை தரவில்லை. அது மிகப்பெரும் வடுவாக வரலாற்றை பாதித்து விட்டது.

முஹம்மது பின் அபீபக்கர் ரலி யின் கைகள் நடுங்கியது போல உஸ்மான் ரலி அவர்களின் முன் கலகக்கார்ர்கள் நடுங்கியிருந்தால் இந்த துரதிஷ்டமான நிகழ்வு நடந்திருக்காது.

2 கொதிப்பான மனோ நிலையில் தீர்வுகளை முடிவு செய்யக் கூடாது. கொதிப்பான சூழ்நிலையை படர விடவும் கூடாது.

 கொஞ்சம் பொறுமையாக ஒரு சரியான விசாரனைக்கு வாய்ப்பளிக்கப் பட்டிருக்குமானால் உண்மையான குற்றவாளி தண்டிக்கப் பட்டிருப்பார்.

ஆனால் இங்கே உஸ்மான் ரலி கொல்லப் பட்டார்கள். மர்வான் தப்பி ஓடிவிட்டார்.

 இந்த இரண்டும் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்பித்த வழி முறையாகும்.

 ஹிஜ்ரீ 8 ஆண்டு மக்காவின் மீது தீடீரென படையெடுப்பை நடத்த பெருமானார் (ஸல்) திட்டமிட்டார்கள். மக்காவில் ஒரு சண்டை நடக்க கூடாது. நமது எண்ணிக்கையை பார்த்தே எதிரிகள் பணிந்து விட வேண்டும் என்று பெருமானார் (ஸ்ல்) நினைத்தார்கள். மிக ரகசியமாக படை திரட்டும் பணி நடை பெற்று வந்தது. இந்த ரக்சியச் செய்தியை ஹாதிப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழர் மக்கா காபிர்களுக்கு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் பெருமானார் கையில் சிக்கியது. அவரிடம் பெருமானார் (ஸல்) விசாரித்துக் கொண்டிருந்தார்கள். தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய் இவ்வாறு செய்து விட்ட்தாகவும் தான் முனாபிக் அல்ல என்று ம் அவர் கூறினார். கோபமுற்ற் உமர் ரலி அவர்கள் நான் அவரை கொல்லட்டுமா என்று பெருமானாரிடம் கேட்டார்கள். அவரை நோக்கி திரும்பிய பெருமானார் (ஸல்) அவர்கள் இவர் பத்று யுத்த்த்தில் கலந்து கொண்டவர் அல்லவா இவை கொல்லட்டுமா என்று கேட்கிறீர்களே என்றார்கள்.

 மதிக்க வேண்டிய வற்றிற்கு எந்த அளவு மதிப்பளிக்க வேண்டும் என்பதை இந்நபி மொழி கற்றுத்தருகிறது.

 கொந்தளிப்பான நிலையில் முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது. நடவடிக்கைகளில் இறங்க கூடாது என்பதற்கும் பெருமானாரிடம் ஒரு முன்னுதாரனம் இருக்கிறது.

 இஸ்லாம் வெற்றிகளை சந்தித்து வந்த காலகட்டத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியர் செலவுத்தொகை அதிகமாக வேண்டும் என்று கேட்டனர். கஸ்ட காலத்தில் நாங்கள் பொறுத்துக் கொண்டோம் இப்போது கொஞ்சம் அதிகமாக தரலாமே என்று கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தன் மனைவியரிடம் பணத்தாசை வந்து விட்டதே என்ற கவலை, ஒரு மாதம் எந்த மனைவியிடமும் செல்லாமல் மஸ்ஜிதில் தங்கியிருந்தாரகள். இறுதியில் அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான்.  

 يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا (28وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا (29

    பெருமானாரின் துணைவியர் அல்லாஹ்வை அவனது தூதரையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

பிரச்சனை சுமூகமாக முடிந்த்து.

 கொதிப்பான மனோ நிலையிலிருந்து சற்று விலகி நின்று யோசித்து முடுவெடுக்கிற போது நன்மையான முடிவுகள் அமையும்

 நாம் வாழ்கிற இன்றைய சூழலும் இந்த இரண்டு தத்துவங்களும் மிக முக்கியமானவை.

 இவற்றை உண்ர்ந்து அதன் படி செயல்பட அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!  

 

1 comment:

  1. அந்த முடிவு எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லலாமே ஜீ

    ReplyDelete