வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 22, 2022

தொடையை காட்டும் பர்முடாஸும் கிழிந்து தொங்கும் ஜீன்ஸும் முஸ்லிம் ஆண்களுக்கு அழகல்ல

 முஸ்லிம் சமூகத்து ஆண்களிடம் பர்முடாஸ் எனும் தொடை தெரிய ஆடைய அணியும் கலாச்சாரம் பெருகிவருகிறது. இது குறித்து மார்க்கத்தின் கருத்தை மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வூட்ட இந்த ஜும் ஆவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்த்து. அதற்காக திரட்டப்பட்ட தொகுப்பு இது. இந்த பிரச்சனை பொதுவானது எனவே இதையே வெள்ளிமேடையிலும் வழங்குகிறேன். )

ஆடை அணிவதில் தற்கால இளைஞர்களிடம் இஸ்லாம்ஏற்றுக்கொள்ளாத சில  அநாகரீகமானநடைமுறைகள்  பெருகிவருகின்றன . இது விசயத்தில் இஸ்லாம் கூறும் அறிவுரைகளை நினைவு படுத்தினால் மக்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஜும் ஆவில் இஸ்லாம் கூறும் ஆண்களின் ஆடை ஒழுங்குகள் என்ற தலைப்பில் சில செய்திகளை பரிமாறுகிறோம். 

 எல்லா நிலையிலும் மார்க்கத்தை கடைபிடித்து வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 இஸ்லாம் அழுத்தமாக நினைவூட்டுகிற ஒரு செய்தி உண்டு.

 சைத்தானுடைய விளையாட்டினால் மரியாதைக்குரிய மனிதனிடமிருந்து முதலில் பறிபோனது அவனது ஒளியால் ஆன ஆடையாகும்.

ஆதம் அலை அவர்களுக்கும் ஹவ்வா அம்மா அவர்களுக்கும் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒளியால் ஆன  ஆடை அணிவித்திருந்தான் . அவ்விருவரும் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்ட போது அவர்களது ஒளியால் ஆன ஆடை விலகி உடல் பாகங்கள் வெளிப்படத் தொடங்கின என்கிறது குர்ஆன்.

فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ

மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட முதல் பாதிப்பு ஆடை விலகியதே என்ற செய்தி ஒவ்வொரு தனி மனிதனும் சமூகமும் நினைவில் வைக்க வேண்டிய ஒன்றாகும்.

திருக்குர் ஆன் ஆடை என்பதை இறைவனின் தனிப்பட்ட ஒரு அருளாக உணருமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

  يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

 நபி ஆதம் அலை அவர்களை பூமிக்கு அனுப்பிய போது அல்லாஹ் கூறிய செய்திகளில் இதுவும் ஒன்று

 இந்த  வசனம் ஆடை என்பதை அல்லாஹ் அருளிய ஒரு உபகாரமாக உணருமாறு  நம்மை தூண்டுகிறது.

வசதியான அழகான ஆடை அணிகிற நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

நமது நாட்டில் 30 சதவீதம் பேருக்கு உடலை மறைக்க போதுமான ஆடைகள் இல்லை.

பல கோடி  மக்கள் அடுத்தவர்கள் உடுத்திக் கிழித்த பழைய ஆடைகளையே உடுத்துகிறார்கள்.

 இன்று நாம் போதுமான வசதியான ஆடை அணிந்து கொள்கிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மனிதர்களில் ஒருவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதான போது அவரை அடக்கம் செய்ய அவரிடம் போதுமான துணி இருக்க வில்லை. முகத்தை துணியால் மூடி கால் பாகத்தை இலை தழைகளால் மறைத்து அடக்கம் செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.

      لم يترك مصعب عند مقتله إلا نمرة، أرادوا تكفينه  بها، فكانوا إذا غطوا رأسه بدت رجلاه، وإذا غطوا رجليه بدا رأسه، فقال النبي محمد«غطوا رأسه، واجعلوا على رجليه من الإذخر»، 

இதை நினைத்து உஸ்மான் (ரலி) அவர்கள் நல்ல சாப்பாடு சாப்பிடும் போதெல்லாம் அழுவார்கள்

 இன்று நாம் அழகுற ஆடை உடுத்துகிறோம். நமது முன்னோர்கள் உடுத்தியது போல கிழிந்து போய் தைத்த ஆடைகளை அணிவதில்லை.

 இஸ்லாமின் இரண்டாவது ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் பாலஸ்தீனத்தின் வெற்றிக்கான சாவியை பெறுவதற்காக ஜெரூசலம் சென்ற போது அவர்களது ஆடையில் மூன்று இட்த்தில் கிழிந்து தைத்த அடையாளம் இருந்தது என்று வரலாறு கூறுகிறது.

 அல்லாஹ் ஆடைகள் விசயத்தில் நமக்கு செய்திருக்கிற இந்த நிஃமத்துக்களை நாம் எண்ணிப்பார்க்க மறந்து விடக்கூடாது.

 பெரும் பணக்காரராக இருந்து தீனுக்காக அனைத்தையும் துறந்து ஷஹீதான் முஸ்அப் ரலி அவர்களிடம் இல்லாத ஆடை வசதி நம்மிடம் இருக்கிறது.

 உலகின் பேரரரசராக இருந்த உமர் ரலி அவர்களிடம் இல்லாத ஆடை இன்று நம்மிடம் இருக்கிறது.

மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்.

 இந்த நிஃமத்தை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும்.

 அதனால் தான் புதிய ஆடைகளை அணியும் வாய்ப்புப் பெறும் போது இப்படி துஆ கேட்க பெருமானார் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மதில் இந்த ஹதீஸ் வருகிறது.

عمر بن الخطاب يقول : قال رسول الله صلى الله عليه وسلم" من استجد ثوبا فلبسه فقال حين يبلغ ترقوته : الحمد لله الذي كساني ما أواري به عورتي ، وأتجمل به في حياتي ثم عمد إلى الثوب الذي خلق أو ألقى فتصدق به ، كان في ذمة الله ، وفي جوار الله ، وفي كنف الله حيا وميتا ، حيا وميتا ، حيا وميتا

இந்த நிஃமத்தை உணர்ந்து நாம் ஆடை அணிய வேண்டும்

அந்த ஆடை எப்படி இருக்க வேண்டும்.

ஆடைக்கான இரண்டு நோக்கத்தை இந்த வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

முதலாவது மானத்தை மறைத்தல்

இரண்டாவது அலங்காரம்.

நாம் அணியும் ஆடை நமது மானத்தை மறைக்க வேண்டும்

நம்மை அழகாக காட்ட வேண்டும். .

ஆணகளுக்கு மானம் என்பது என்ன ?

ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்)  தொப்புளுக்கும் முட்டுக்காலுக்கும் மத்தியிலுள்ள பகுதி (ஆண்களுக்கு) கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய (அவ்ரத்) பகுதியாகும்என்று கூறினார்கள்.

 தொடை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்.

இன்றைய நவீன கலாச்சாரத்தில் பெர்முடாஸ் என்கிற சிற்றாடையின் மோகம் இளைஞர்களிடம் பரவியிருக்கிறது.

 ஒரு காலத்தில் உல்லாசமான களியாட்டங்கள் நடை பெறும் இடங்களி

இளைஞர்கள் மட்டுமல்ல நடு வயதுக்காரர்கள் ஏன் முதியவர்களிடம் கூட இவ்வகை ஆடையின் மீது ஒரு கிரேஸ் ஏற்பட்டுள்ளது.

சாதாரானமாக அணிகிறார்கள்.

ல் இவ்வாறு ஆடை அணிந்தார்கள்.

இப்போது வீடுகளில் சாதாரணமாக தொடை தெரிய பெர்முடாஸ் அணிகிறார்கள்.

அதை நாகரீகமாகவும் பணக்காரத்தனத்தின் அடையாளமாகவும் சில இடங்களில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று காட்டுவதற்காகவும் இவ்வாறு தொடை தெரியுமாறு அணிகிறார்கள்.

மருமகளுக்கு முன் மாமனார் இந்த ஆடைகளோடு திரிகிறார். சகோதரர்களுடைய மனைவிமார்களுக்கிடையே பல ஆண்களும் இந்த ஆடையோடு உலாவருகிறார்கள். 

இளைஞர்களே பெரியோர்களே பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள்.

      وَعَنْ مُحَمَّدِ بْنِ جَحْشٍ قَالَمَرَّ رَسُولُ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- عَلَى مَعْمَرٍ، وَفَخِذَاهُ مَكْشُوفَتَانِ فَقَالَ: يَا مَعْمَرُ غَطِّ فَخِذَيْك، فَإِنَّ الْفَخِذَيْنِ عَوْرَةٌ. رَوَاهُ أَحْمَدُ

 நபி ஸல் அவர்கள் மஃமர் ரலி அவர்களை கடந்து சென்றார்கள். அவரது தொடைகள் இரண்டும் தெரிந்தன. பெருமானார் *ஸல்) அவர்கள் கூறினார்கள். மஃமரே! உமது தொடைகளை மறைத்துக் கொள்வீராக! அவை மறைக்கப்பட வேண்டியவையாகும்.என்றார்கள்.

நம்மில் யார் அவ்வாறு தொடை தெரிய  நடக்கிறோமோ அவர்களில் ஒவ்வொருவரைப் பார்த்தும் பெருமானார் *ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதாகவே பொருளாகும்.

பெருமானாரின் இன்னொரு ஹதீஸ் இப்னு மாஜாவில் வருகிறது.

عن علي أن النبي -صلى الله عليه وسلم- قال لهلا تبرز فخذك، ولا تنظر إلى فخذ حي ولا ميت.

உனது தொடையை வெளியே காட்டாதே! உயிரோடு இருந்தாலும் செத்துப்போயிருந்தாலும் மற்றவரின் தொடைய பார்க்கதே என்றார்கள்.

 அன்றைய காலத்தில் ஆடை சவுரிகரியம் குறைவாக இருந்த்து. பலரும் ஒற்றை ஆடையையே கழுத்துக்கும் காலுக்குமாக அணிந்திருப்பார்கள். அந்த சமயத்தில் கூட பெருமானார் (ஸல்) அவர்கள் தொடையை மறைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். இன்னொரு ஹதீஸ் உண்டு.

 وَعَنْ جَرْهَدٍ الْأَسْلَمِيِّ قَالَمَرَّ رَسُولُ اللَّهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَعَلَيَّ بُرْدَةٌ، وَقَدْ انْكَشَفَتْ فَخِذِي، فَقَالَ: غَطِّ فَخِذَك، فَإِنَّ الْفَخِذَ عَوْرَةٌ. رَوَاهُ مَالِكٌ فِي الْمُوَطَّأِ وَأَحْمَدُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ

 ஜர்ஹத் அல் அஸ்லமீ ரலி கூறுகிறார்கள்

பெருமானார் ஸல் அவர்கள் என்னை கடந்து சென்றார்கள் என்மீது ஒரு போர்வை மட்டுமே இருந்தது. அதில் எனது தொடை வெளியே தெரிந்தது. பெருமானார் (ஸல்) கூறினார்கள். உனது தொடையை மூடு. அது அவ்ரத் என்றார்கள்.

 நமது முன்னோர் அவ்ரத் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக இரவு தூங்கும் போது கூட கீழாடைக்குள் ஜட்டி போன்ற கச்சை அணிந்து தூங்குவார்கள் என்கிறது வரலாறு

عن أبي موسى t: "أنه كان إذا نام لبس تُبّاناً؛ مخافة أن تنكشف عورته"[1]، والتُّبَّان سراويل قصيرة تستر العورة المغلظة

இருட்டு அறையில்தான் குளிப்பேன் என்கிறார் அவர்

     وأيضاً كان يقول: "إني لأغتسل في البيت المظلم فأحني ظهري حياء من ربي"

 மக்களுக்கு சுடு தண்ணீருக்கான பொதுக்குளியல் அறை இருந்த காலத்தில் பலர் அங்கு இருக்க குளியளறைக்கூள் இப்னு அப்பாஸ் ரலி நுழையமாட்டார்கள். அப்போதும் கூட கட்டியான ஆடை அணிந்தே செல்வார்கள். நான் அல்லாஹ்வை கண்டு வெட்கப்படுகிறேன் என்பார்கள்.

       عن ابن عباس y أنه لم يكن يدخل الحمام إلا وحده، وعليه ثوب صفيق، أي غليظ ويقول: "إني لأستحي من الله أن يراني في الحمام متجرد

 நான் எனது எஜமானருக்கு குளிக்க தண்ணீர் எடுத்து வைப்பேன் ஒரு தடவை கூட அவரின் கரண்டை காலை பார்த்த்தில்லை என்கிறார். முஹம்மது பின் யஹ்யா (ரஹ்) அவர்களிடம் முப்பது வருடங்கள் பணியாற்றிய பணிப்பெண்

ويقول أبو العباس الأزهري: سمعت خادمة محمد بن يحيى وهو على السرير يغسل -يعني مات- تقول: "خدمته ثلاثين سنة، وكنت أضع له الماء -يعني ليغتسل، فما رأيت ساقه قط، وأنا ملك له

நமது முன்னோர்கள் மானத்தை மறைப்பதில் காட்டிய அக்கறைக்கு காரணம் அல்லாஹ்விடம் வெட்கம் கொண்ட்தே!

நமக்கு அந்த வெட்கம் வேண்ட்டமா ?

முழங்கால் மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்

ஹனபி மத்ஹபின் படி முழங்காலும் மறைக்கப்பட வேண்டிய பகுதியே ஆகும். ஷாபி மதஹதின் அறிஞர்களும் கூட தொடைப்பகுதி வெளியே தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள  முழங்காலின் ஒரு பகுதியேனும் மறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

 الفقه على المذاهب الأربعة

وإنما العورة ما بينهما، ولكن لا بدّ من ستر جزء منهما ليتحقق من ستر الجزء المجاور لهما من العورة،

கிழித்து விடப்பட்ட ஆடைகள்

 இளைஞர்கள் பலரும் ஆங்காங்கே கிழித்து விடப்பட்ட ஜீன்ஸ்களை அணிகிறார்கள்

அதன் வகைகளையும் விதங்களையும் என்ன சொல்ல?

அதை அணிய விரும்பும் இளைஞர்கள் பெரியவர்களின் மோகத்தை என்ன சொல்ல ?

 டன்னடு ஜீன்ஸ் என்ற அந்த வகை ஜீன்ஸுகளுக்கு விலை அதிகம் கூட !

இதை கூத்து என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

ஆறறிவு படைத்த மனிதன் எங்கே திசைமாறுகிறான் என்றே தெரியவில்லை.

 ஆடை வாங்கும் போது கிழியாத ஆடையா என்று பார்த்துத்தான் வாங்குவார்கள்

 இப்போது கிழிந்த ஆடையை தேடி வாங்குகிறார்கள்

அதுவும் அதிக விலை கொடுத்து.

 இந்தக் கொடுமையை என்ன சொல்வது.

அருமை இஸ்லாமிய சகோதரா ! தொழுகைகைக்கு அனுமதியில்லாத ஆடையை நல் ஆடை என்று எப்படி ஏற்றுக் கொள்கிறாய் ?

ஆடையை கிழித்து விட்டு நடப்பவனை பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் சொல்லும்.

இதைத்தான் பெருமைக்காக ஆடைவது என்று மார்க்கம் சொல்கிறது.

عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من لبس ثوب شهرة في الدنيا، ألبسه الله ثوب مذلة يوم القيامة" رواه أحمد وأبو داود وابن ماجه،

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : யார் இந்த உலகத்தில் பிரபல்யமான (பகட்டான) ஆடை அணிகிறாரோ மறுமையில் இறைவன் அவருக்கு இழிவின் ஆடையை அணிவிப்பான்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மது)

 பகட்டான ஆடை என்பதற்கு என்ன ஷவ்கானி (ரஹி) விளக்கம் கூறுகிறார்.

 மக்களை பார்க்க வைப்பதற்காக நிறம் அல்லது வேறு வகையில் தற்பெருமைக்காக அணியப்படும் ஆடை. – இதில் உஜுப் என்ற வார்த்தைக்கு யாரையும் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது என்று பொருளாகும்..

قال الشوكاني في نيل الأوطار: "والمراد أن ثوبه يشتهر به بين الناس لمخالفة لونه لألوان ثيابهم، فيرفع الناس إليه أبصارهم، ويختال عليهم بالعجب والتكبر.

இன்றைய இந்த கிழிந்து தொங்கும் ஆடை கலாச்சாரத்தின் முதல் குணம். சமூகத்தில் யார் என்ன சொல்வார்கள் என்பதில் எனக்கு யாரும் பொருட்டல்ல என்ற இயல்பாகும். இதுவே உஜுப் ஆகும்.

இழிவின் ஆடையை அல்லாஹ் மறுமையில் போர்த்துவான் என்பதை லாயிலாக இல்லல்லா சொன்ன நாம் சிந்திக்க வேண்டாமா ?

அதே போல கடும் நிறங்களில் ஆடை அணிவது, எழுத்துக்கள் உருவப்படங்களை பொதிந்த ஆடைகள் அணிவதிலும் இஸ்லாமின் வழிகாட்டுதலை கவனத்தில் கொள்ள வேண்டும். என்னை யார் கேட்க முடியும் என்பதே அதை தான மற்றவர்கள் அதிச்யமாக பார்ப்பார்கள் என்பதோ நமது எண்ணமாக இருந்து விடக் கூடாது.

ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : என் மீது குங்குமச் சிவப்பு நிற ஆடையைப் பார்த்த நபி ஸல்லல்லாலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன இது? என்று வினவினார்கள். (அந்த கேள்வியின் தோரணையிலேயே) இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனே திரும்பிச் சென்று அதை எரித்துவிட்டேன். பிறகு அந்த ஆடையை என்ன செய்தீர்”? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ. அதை எரித்து விட்டதைக் கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன்? உமது வீட்டில் (பெண்களுக்கு) அதை அணியக் கொடுத்திருக்கலாமேஎன்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)

فعن عبد الله بن عمرو قال: رأى رسول الله عليَّ ثوبين معصفرين فقال:" إن هذه من ثياب الكفار فلا تلبسها"

உருவமுள்ள ஆடைகள்

 ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு மெத்தை வாங்கியிருந் தார்கள். அதில் உருவம் இருந்தது. (அதைப் பார்த்த) நபி (ஸல்) அவர்கள் வாசலிலேயே நின்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் நான் ஏதேனும் பாவம் செய்திருப்பின் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள். இது என்ன மெத்தை ? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நீங்கள் உட்காருவதற்கும், சாய்வதற்கும் நான் தான் வாங்கியுள்ளேன்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இந்த உருவம் வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் வரைந்திருக்கும் உருவங்கள் உயிர் கொடுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும். நிச்சயமாக மலக்குமார்கள் உருவம் உள்ள வீட்டில் நுழையமாட்டார்கள்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி)

 எனவே நாகரீகம் சுதந்திரம் என்ற பெயரில் தொடை தெரிய- முழங்கால் தெரிய ஆடை அணிவதை தவிர்ப்போம். நமது பிள்ளைகளுக்கு இது இஸ்லாமின் கல்சுரல் கலாச்சாரம்  அல்ல என்று கற்றுக் கொடுப்போம்.

அதே போல அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்கிற இடத்தில் பெருமைகாக கிழிந்து தொங்கும் ஆடைகளை அணிவதை தவிர்ப்போம்

மறுமையின் இழிவிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!

மார்க்கம் தடை செய்த விசயங்களை தவிர்த்துக் கொள்வோம் , அதுவே மரியாத ஆடையாகும். அதையே நமது விருப்பத் தேர்வாக ஆக்கிக் கொள்வோம்.

நல்லவிசயங்களை கடைபிடிக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

நிறைவாக ஒரு ஹதீஸை நினைவூட்டுகிறேன் . நமது ஆடைகளை தேர்ந்தெடுக்க நாம் நினைவில் வைத்துக் கொள்ள் சிறந்த் அளவு கோல் இது.

 ஹள்ரத் முஆத் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும் என்று (பெருமையான பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு அணிவிப்பான்என்று நபி (ஸல்) லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)

        عن معاذ بن انس -رضي الله عنه- مرفوعاً: «مَنْ ترك اللباسَ تَوَاضُعًا لله، وهو يقدر عليه، دعاه اللهُ يومَ القيامةِ على رُؤُوسِ الخَلَائِقِ حتى يُخَيِّرُهُ    مِنْ أَيِّ حُلَلِ الإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا

 

2 comments:

  1. காலத்திற்கேற்ப மிகவும் அருமையான பதிவு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் வழங்குவானாக !

    ReplyDelete
  2. காலத்திற்கேற்ப மிகவும் அருமையான பதிவு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் வழங்குவானாக!!!

    ReplyDelete