வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 06, 2022

அகிலம் வியந்த அதிசயப் பிறப்பு

இந்த உலகின் மா பெரும் புரட்சியாளர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்)

அவர்களைப் போல மனித வரலாற்றில் தாக்கம் செலுத்தியவர் வேறவெரும் இல்லை.

ஜி.ஜி. கெல்லட் கூறுகிறார்;

-இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.

எந்த ஒரு பெரு மனிதரின் பிற்ப்பின் போது உலகிற்கு அதன் அடையாளமாக சில் காரியங்களை அல்லாஹ் அமைக்கிறான் .

பெருமானார் (ஸ்ல்) அவர்களின் பிறப்பிலும் அப்படி பல அதிசயங்கள் நிக்ழ்ந்தன. 

சைத்தான் ஓலமிட்டான்.

ما رواه أحمد : أن أبليس -لعنه الله- رن أربع رنات، رنة حين لعن، ورنة حين أهبط، ورنة حين ولد رسول الله صلى الله عليه وسلم.

ஒளிமயமான வீடு , நட்சத்த்திரங்கள் மேலோ விழுந்து விடுமோ எனும் அளவுக்கு நெருங்கி வந்தன

பிரசவம் பார்த்த பாத்திமா ரலி கூறுவதை அவரது மகன உஸ்மானி பின் அபில் ஆஸ் கூறுகிறார்

الصحابي عثمان بن أبي العاص قولها

لما ضَرَب آمنة بنت وهب المُخاض وكان ذلك ليلًا، نظرتُ إلى النجوم تَدَلَّى حتى إني لأقول: لَيَقَعْنَ عَلَيَّ، فلما ولدت خرج لها نورٌ أضاء له البيتُ الذي نحن فيه والجدار، فما شيءٌ أنظر إليه إلا نَوَّر

 

இன்னும் ஒரு ஹதீஸ் உண்டு

عن لقمان بن عامر قال سَمِعْتُ أَبَا أُمَامَة يقول: (قُلْتُ يَا نَبِيَّ الله ما كان أَوَّلُ بَدْءِ أَمْرِك؟ قال: نعم، أنا دعوة أبي إبراهيم، وبشرى عيسى، ورأتْ أمي حين حملت بي أنه خرج منها نور أضاء لها قصور الشام) رواه أحمد والحاكم وصححه الألباني

 அகிலத்திற்கு அருளாக வந்த பெருமானார் உலகிற்கு வரும் போது தனது அன்னைக்கு வேதனையை தருவார்களா : இதோ ஆமினா அம்மா கூறுகிறார்கள்.

.. وأخرج أبو نعيم في الدلائل وتذكر أمه آمنة أنها لم تجد حين حملت به صلى الله عليه وسلم ما تجد النساء من شدة الحمل والطلق

ஆமினா அம்மா மேலும் கூறுகிறார்கள்

அவருக்கு கதனா செய்யப்பட்டிருந்த்து. ஆட்காட்டி விரலை உயர்த்தியவாறு பிறந்தார்கள்

\ وقد ولدته مختونا مسروراً، ولما وضعته وقع على الأرض مقبوضة أصابع يديه مشيراً بالسبابة كالمسبح بها.

மதீனாவில் (மக்காவில் அல்ல) பெருமானாரின் பிறப்பை அறிவித்த யூதன்.

ஹஸ்ஸான் பின் சாபித் ரலி கூறுகிறார் நான் 7 வயதில்  பேச்சுக்களை விளங்கிக் கொள்ளும் அளவில் இருந்த போது ஒரு யூதன் கோட்டை மீது ஏறி நின்று இவ்வாறு சப்தமிடுவதை நான் கேட்டேன். \

روى ابن إسحاق عن حسان بن ثابت رضي الله عنه قال: "والله، إني لغلام يفعةٌ (شبَّ ولم يبلغ)، ابن سبع سنين أو ثمان، أعقل كلَّ ما سمعت، إذ سمعت يهوديًّا يصرخ بأعلى صوته على أطمةً (حصن) بيثرب: يا معشر يهود! حتى إذا اجتمعوا إليه قالوا له: ويلك ما لك؟، قال: طلع الليلة نجم أحمد الذي وُلِدَ به" رواه البيهقي وصححه الألباني

சிரியாவில் ஒரு அறிவிப்பு

وروى أبو نعيم وحسنه الألباني عن أسامة بن زيد رضي الله عنه قال: قال زيد بن عمرو بن نفيل، قال لي حَبْرٌ من أحبار الشام: "قد خرج في بلدك نبي، أو هو خارج، قد خرج نجمه، فارجع فصدقه واتبعه".

தப்ரீயும் பைஹகீயும் அறிவிக்கிறார்கள்

وخمود النيران التي كان يعبدها المجوس

பாரசீகத்தில் நெருப்பு வணங்கிகளான மஜூஸிகள் 2000 ஆண்டுகளாக அணையாமல் காத்த நெருப்பு அணைந்து போனது.

இன்று நாம் கவனிக்கிற மற்றொரு பெரும் அதிசயம் பாரசீக மன்ன்ன் யஜ்தஜ்ரித் உடைய கோட்டையில் இருந்த 14 கோபுர கலசங்கள் வீழ்ந்தன,

منها ارتجاس إيوان كسرى، وسقوط أربع عشرة شرفة من شرفاته،  روى ذلك الطبري والبيهقي وغيرهما

பெருமானார் (ஸல்0 அவர்கள் பிறந்த காலத்த்தில் உலகின் ஒரு பெரும் வல்லரசாக இருந்த்து. பாரசீகப் பேர்ரசு இன்றைய ஈரான் நாட்டை மையமாக கொண்டிருந்த அப்போர்ரசுக்கு கீழ் இன்றைய பல நாடுகள் இருந்தன. பழைய சிரியாவின் நிலப்பரப்பான பால்ஸ்தீன் ஜோர்டான் மற்றுமுள்ள மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வரையும் இன்னொரு பகுதியில் துருக்கி அஜர்பைஜாம உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் கூட  அவர்களது சாம்ராஜ்யம் விரிந்திருந்த்து. இன்றைய சவூதி கூட அவர்களுக்கு கீழ் இருந்த நிலமாகத்தான் கருதப்பட்ட்து.   இன்றைய சுமார் 24 நாடுகள் பாரசீக சாம்ராஜ்யத்தின் கிழ் இருந்த என விக்கிபீடியா கூறுகிறது.  இப்பாரசீக அரசை ஸாஸானியப் பேர்ரசு என்றும் அழைத்தனர்.  ஸாஸான் என்ப்து பாரசீக் முதல் மன்னரின் பாட்டனாருடைய பெயரகும்.

அன்றைய நிலப்பரப்பின் ஒரு பகுதியை பாரசீக்கர்கள் தம் கையில் வைத்திருந்தனர் என்று சொன்னால் அது மிகையல்ல;  இன்றைய சவூதி கூட அவர்களுக்கு கீழ் இருந்த நிலமாகத்தான் கருதப்பட்ட்து.   

ஸாஸானியப் பேர்ரசு கீபி 224 முதல் 651 வரை அதிகாரத்தில் இருந்த்து. அதாவது சுமார் 430 வருடங்களாக மாபெரும் அதிகாரத்தில் அவர்கள் இருந்தன.

பாரசீக நிலத்தின் முக்கிய மதமாக  Zoroastrianism மஜூஸி மதம் இருந்த்து. அவர்கள் நெருப்பை வணங்கினர், சாஸானிய நிலப்பரப்பில் 3 பெரிய நெருப்பு கோயில்கள் இருந்த்தாக வரலாறு கூறுகிறது. அவற்றில் ஒன்று ஆதி சாசானிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட்து 2 ஆயிரம் ஆண்டுகளாக இடைவிடாது எரிர்ந்து கொண்டிருர்ந்தது,. அது தான் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த அன்று அணைந்து போனது.

மற்றொன்று ஸாஸானாய மன்னர்கள் கிஸ்ரா என்று அழைக்கப் பட்டனர். அந்த கிஸ்ராவின் மாளிகையில் இருந்த 14 கோபுர கலசங்கள் இடிந்து விழுந்தன. அது அந்த மன்னர்களை பெரிது கலக்கத்தில் ஆழ்த்தியது. அவர்கள் ஜோஸியர்களிடம் விசாரித்தனர்.  ஸாஸானிய மன்னர் பரம்பரையின் 14 வது அரசரோடு ஸாஸானிய அரசு முடிந்து போய்விடும் என்று சொன்னார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த போது நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வு வரலாற்றின் போக்கு எப்படி அமையப் போகிறது என்பதற்கான இரு டீஸராக மூன்னொட்டமாக இருந்த்து.

அந்ட முன்னறிவிப்பின்படி யே நடந்து .

ஸாஸானிய மன்னர் வமிசத்தின் 14 அரனான மூன்றாம் யஜ்தஜ்ரித் ஆட்சியில் இருக்கும் போது உமர் ரலி காலத்தில் முஸ்லிம்கள் பாரசீக நிலப்பரப்பின் பெரும் பகுதியை கைப்பற்றினார்கள். மிச்சமிருந்த சில பகுதிகளை உஸ்மான ரலி காலத்தில் கைப்பற்றினார்கள்  . 400 ஆண்டுகால பாரசீகப் போரார்சு வரலாற்றிற்குள் மறைந்து போனது.

இப்பேர்ர்சின் வீழ்ச்சி என்பது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தீய கடவுள் கோட்பாடு ஆகிய இரண்டின் முடிவுக்கான எடுத்துக்காட்டாகும் .

முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் ஹிஜ்ரீ 7 ஆண்டில் அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களுக்கெல்லாம் கடிதம் எழூதிய வரிசையில் கிஸ்ரா மன்னருக்கும் கடிதம் எழிதினார்கள்

لقد اختار النبي - صلى الله عليه وسلم - لحمل هذه الرسالة إلى كسرى ملك الفرس عبد الله بن حذافة السهمي رضي الله عنه وكان نص الرسالة يقول: "بسم الله الرحمن الرحيم من محمد رسول الله إلى كسرى عظيم فارس، سلام على من اتبع الهدى، وآمن بالله ورسوله، وشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، وأدعوك بدعاية الله، فإني أنا رسول الله إلى الناس كافة، لينذر من كان حيا ويحق القول على الكافرين، فأسلم تسلم، فإن أبيت فإن إثم المجوس عليك"

கிஸ்ரா மன்னால் அப்படி ஒரு கடிதம் தனக்கு அனுப்ப்ப் பட்ட்தையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு அடிமை எனக்கு கடிதம் எழுதுவதா எனக் கொதித்தான். அதிலும் என் பெயருக்கு முன்னால் அவரது பெயரை எழுத என்ன துணிச்சல் எனக் கோபித்தான். அதனால் கடிதத்தை கிழித்துப் போட்டான்.

அந்த செய்தி பெருமானார் (ஸல் வர்களுக்கு வந்த சேர்ந்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவனது ஆட்சியை அல்லாஹ் கிழித்துப் போடுவான்.

ஒரு பேரரசு சத்தமில்லமல் சரிந்த்து.

وصلت الرسالة إلى الملك وقام الترجمان بترجمتها له فلما قرئت عليه أخذها ومزقها ورمى بها وقال عبد حقير من رعيتي يكتب اسمه قبلي إشارة إلى ما كتبه النبي - صلى الله عليه وسلم - في قوله "من محمد رسول الله إلى كسرى عظيم فارس" فلما بلغ خبر تمزيق الرسالة إلى النبي - صلى الله عليه وسلم - قال "مزق الله ملكه"

 உமர் ரலி காலத்தில நடைபெற்ற காதிஸிய்யா யுத்த்த்தில் சிரியாவில் பாரசீகர்களின் பெரும் படை தோற்றது. பெருமானார் கூறிய  7 ஆண்டுகளில் அவர்கள் அரசை இழந்தன.ர்

மூன்றாம் ய்ஜ்தஜ்ரித் சீனாவுக்கு ஓடிப்போனான். அங்கு பதுங்கியிருந்த அவனால் ஆடல் பாடல்; இல்லாமல் மாட மாளிகை இல்லாமல் சாப்பிட முடியவில்லை. அப்படியே இறந்து போனான்.

இதில் கவனிக்க வேண்டிய என்ன வெனில் இம்மன்ன்ன் அழிந்தால் இனி பாரசீகர்களுக்கு இடமில்லை என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதன் பிறகு இதுவரை பாரசீக பேர்ரசுக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை. இனியும் இருக்காது. இன்ஷா அல்லாஹ்

صدق النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إذ يقول: "إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ" رواه البخاري ومسلم.

இத்த்னை காரியங்களிலும் பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் ஒரு கட்ட்த்திலும் எந்த ஒரு அரசையும் அழிக்க சிந்தித்த்தும் இல்லை. திட்டமிட்ட்தும் இல்லை. அவர்களை அழித்து விடுங்கள் என்று தூண்டியதும் இல்லை,

அது தன் பெருமானார் (ஸல்) அவர்களின் பெரும் புகழுக்குரிய் அம்சமாகும்.

அரசியல் அதிகாரம் என்பது ஒரு போதும் அண்ணலாரின் நோக்கமாக இருக்கவில்லை. மக்கள் நல் வழி பெற வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்தாது; அந்தக் கவலைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا (6)

இந்தக் கவலையில் உங்களை அழித்துக் கொள்வீர் போல தெரிகிறதே என்று அல்லாஹ் கூறினான்.

சத்தியவாதிகளின் கவலையும் கனவும் வீணாவில்லை.

இந்த உலகை இதிலுள்ள மக்களை  சீர்திருத்த நினைத்தால் அதற்காக முயற்சிகளை மேற்கொண்டு பாடுபட்டால் அதிகாரம் தானே காலடியில் வந்து விழும் என்பது தான் பாரசீகப் பேர்ர்சின் வீழ்ச்சியின் த்த்துவங்களாகும்.

பெருமானாரின் பிறப்பை இந்த உண்மைக்கு முன்னோட்டம் கூறும் நிகழ்வாக அல்லாஹ் அமைத்து வைத்தான்.

வரலாற்றில் யாரும் எப்போதும்  மறந்து விடக்கூடாத இத்தகைய நிகழ்வுகளை எண்ணிப்பார்ப்பது ம் எடுத்துச் சொல்வதும் தான் மீலாது விழாக்கள். அதை நாம் பெருமிதமாக கண்ணியப் படுத்துவோம்

ஸல்ல்ல்லாஹு அலா முஹம்மத் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம்.






 

 

 

1 comment:

  1. Anonymous11:01 PM

    நபிகள் நாயகம் பிறந்ததினால் ,அந்த கிஸ்ராவின் கோட்டையில் விழுந்த கீரல்,இன்றும் அப்படியே உள்ளது என்பார்கள்!
    நல்ல தகவல்கள்... பாரக்கல்லாஹ்

    ReplyDelete