அமெரிக்காவின் சிகாகோ நகரத்தின் ஒரு ஹோட்டலில் ஒரு இளைஞன் ரிஷப்ஷணிடாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அது இரவு நேரம். வெளியே கடும் மழை கொட்டிக் கொண்டிருந்தது அப்போது வயது முதிர்ந்த ஒரு தம்பதியினர் அந்த இளைஞனிடத்தில் எங்களுக்கு ஒரு அறை வேண்டும் என்றனர்.
அப்போது அந்த இளைஞன்
சொன்னான் ஐயா
என்னை மன்னிக்க
வேண்டும். அனைத்து அறைகளும் ஏற்கனவே புக்
செய்யப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு தருவதற்கு இங்கே
எந்த அறையும்
இல்லை என்று
கூறினான். அந்த முதிர்ந்த ஆணும்
பெண்ணும் தயங்கி
நிற்கிறார்கள் அந்த
இளைஞன் அவர்களைப் பார்த்து. ஐயா! உங்களை
பார்த்தால் பெரிய
செல்வந்தர்கள் போல்
தெரிகிறது நீங்கள்
தவறாக நினைக்காவிட்டால் நான் உங்களுக்கு ஒரு
வழி சொல்கிறேன் எனக்கு
இந்த ஹோட்டலில் ஒரு
அறை தந்திருக்கிறார்கள் வெளியே
மழை பெய்கிறது உங்களுக்கு ஆட்சேபனை
இல்லாவிட்டால் அந்த
அறையில் நீங்கள்
தங்கி கொள்ளலாம் என்று கூறினான். அந்த முதியவருக்கும் அவருடைய
மனைவிக்கும் இந்த
வார்த்தை அலாதியான சந்தோஷத்தை கொடுத்தது. இருவரும் அந்த இளைஞனின் அறையில் தங்கினார்கள். இது நடந்தது சரியாக
இரண்டு வருடம்
கழித்து அதே
ஹோட்டலுக்கு அந்த முதியவரும் அவருடைய மனைவியும் வந்தனர்.
“மனித உடலில்
ஒரு சதைத்துண்டு உண்டு. அது சரியானால் மனிதன் முழுவதுமாக சரியாக
இருப்பான் அது சீர்கெட்டுப் போய்
விடுமானால் மனிதன்
கெட்டுப்போய் விடுவான். அது தான் இதயம் என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹ் மனிதர்களின் இதயத்தில் இருக்கிறான் என பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சத்தியம்
செய்வதற்கு இதயங்களை புரட்டுகிற இறைவனின் மீது சத்தியமாக என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்று
ஹதீஸ்களில் வருகிறது. இதயங்களைப் திருப்புகிறவனே என் இதயத்தை தீனில் நிலைப்படுத்து என அதிகமாக பிரார்த்திப்பார்கள். அல்லாஹ்வின்
தூதரே நீங்கள்
ஏன் இவ்வாறு அதிகம் பிரார்த்திக்க வேண்டும் ? என தோழர் ஒருவர் கேட்ட போது , மனித இதயம் அல்லாஹ்வுடைய இரண்டு
விரல்களுக்கு இடையில்
இருக்கிற ஒரு
சருகு போல
இருக்கிறது
அந்தச் சருகை எந்த நிமிஷத்திலும் இப்படியும் அப்படியும் திருப்புகிற ஆற்றல்
அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
எகிப்திலே ஒரு
பெரிய அறிஞர்
இருந்தார். ஒரு நாள் பள்ளிவாசலில் இருந்து
இறங்கி வருகிற போது வழியில் ஒரு
பெண் அவரை கடந்து சென்றாள் . அந்தப் பெண்ணின் அழகு அந்த கணமே அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரை தூண்டியது. அந்த பெண்ணுக்கு பின்னேயே சென்றார் . அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தார். அவளது பெற்றோர்களிடத்தில் உங்களுடைய மகளை
நான் திருமணம்
செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டார். “நாங்கள் எகிப்தில் வாழுகிற
கிறிஸ்துவர்கள் என அவர்கள் கூறினார்கள். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி பேரதிர்ச்சியாக மாறியது. அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக அவர்
கிறிஸ்தவராக மாறினார். எகிப்து தேசமே அதிர்ச்சியில் உறைந்து
போனது.
எனவேதான் நமது இதயத்தின் துடிப்பை மட்டுமல்ல இதயத்தின் ஆத்மார்த்த சலனம் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் நாம் அடிக்கடி பரீசிலித்துக் கொள்ளவும் பக்குவப்படுத்திக் கொள்ளவும் கடமைப் பட்டிருக்கிறோம்.
இந்த இதயம்
காசு பணத்தை மட்டுமே எண்ணுகிற
இயந்திரம் அல்ல
இதயம் வீடு வாசல்களை
பெருக்கிக் கொள்கிற கணக்கல்ல
இந்த இதயம்
பிள்ளை குட்டிகள் விஷயத்தில் மட்டுமே ஆவல்
கொண்டு கிடக்கின்ற ஒன்றல்ல
இது அல்லாஹ் குடியிருக்கிற வீடு
என்று என்பதை மனம் நினைக்கவேண்டும்
நபி இபுறாஹீம் அலை அவருகளுடைய இதயத்தில் அல்லாஹ்
மட்டுமே இருந்தான் அவனைத்
தவிர யாரும்
அவர்களுடைய இதயத்தில் இடம்பெறவில்லை . மகன் மீதான் பாசம் கூட அல்லாஹ்விற்கு அப்புறம் தான் என்பதை குர்பானியின் மூலம் நிரூபித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு தப்பிச் சென்ற ஹிஜ்ரத்தின் போது சவ்ர் குகையில்
மூன்று தங்கியிருந்தார்கள். பெருமானாரின் தலைக்கு நூறு ஒட்டகை
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிரிகள் அந்த குகையின் வாசலுக்கும் வந்து சேர்ந்தார்கள். பெருமானாருடன் இருந்த அபூபக்கர் சித்தீக் ரலி
அவர்கள் பார்வையாலேயே “நம்மை அவர்கள் பார்த்து
விட்டால் என்ன
செய்வது ? என்று கேட்டார்கள். யாராக இருந்தாலும் எதிரிகளுடைய கண்ணில்
பட்டால் என்ன
ஆகும் என்று பயப்படுகிற இடம் அது. அந்த இடத்தில் முஹம்மது
ஸல் அவர்கள்
சொன்னார்கள் “அபூபக்கரே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? நாம்
ரெண்டு பேர்
மட்டுமா இருக்கிறோம்? அல்லாஹ்
நம்மோடு இருக்கிறான் அல்லவா என்றார்கள்.
இரண்டு தடவை
கேட்டார்கள் இரண்டு
தடவையும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பதில்
சொல்லவில்லை மூன்றாவது தடவையாக ஹாஜரா அம்மையார் அவர்கள் இது அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையா என்று கேட்க இபுறாகீம் அலை அவர்கள் தலையை மட்டும் ஆசைத்து ஆம் என்பதாக சைகை செய்தார்கள்.
وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
திருக்குர்ஆன் பல இடங்களில் நமக்கு
எச்சரிக்கை செய்கிறது
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ
الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ
مُّبِينٌ
காமம்
சைத்தான் மனித இதயத்திற்குள் நுழைகிற மில இலேசான வழி இது.
நாம் நம்முடைய ஆசைகளை யை மார்க்கம் சொன்ன
ஹலாலான வழியில்
மட்டுமே இருக்க
வேண்டும் என்பதில்
உறுதியாக இருக்க
வேண்டும்
காமல் குடி கொண்ட இதயம் சைத்தானுடைய கோட்டையாகிவிடும். அங்கே அல்லாஹ்விற்கு இடமிருக்காது. அங்கே ஞானத்திற்கு வழியே இருக்காது.
களோ அவர்கள் அந்நிய
பெண்ணோடு தனியாக
இருக்க வேண்டாம்
لا يخلون رجل بامرأة إلا كان الشيطان ثالثهما قال النبي صلي
அதனால் பெண்கள் இது
விஷயத்தில் மிக
எச்சரிக்கையாக இருக்க
வேண்டும் அன்னிய
ஆண்களின் பார்வையில் படுவதை பெண்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்
அன்னிய பெண்கள்
தங்களின் பார்வையில் நிலைத்திருப்பதை ஆண்கள்
தவிர்த்துக் கொள்ள
வேண்டும்
எந்த இடத்தில்
எந்த பேச்சு
எந்த பார்வை
மோசமாக இருந்தாலும் அந்த
இடத்தில் நம்முடைய
இதயத்தில் ஒரு
கரும்புள்ளி விழுந்துவிடுகிறது
இதயத்திற்குள் சைத்தான்
ஊடுறுவம் இரண்டாவது வழி இது
ஒரு நபித் தோழர் பெருமானாரிடம் வந்து இறைத்தூதரே !எனக்கு ஒரு அறிவுரை
சொல்லுங்கள் நபி
ஸல் சொன்னார்கள் கோபப்படாதீர்கள் மீண்டும்
கேட்டார் கோபப்படாதீர்கள்என மீண்டும் மீண்டு கூறினார்கள்.
عن أبي هريرة رضي الله عنه: أن رجلًا قال للنبي صلى الله عليه وسلم:
أوصني، قال: ((لا تغضب))، فردد مرارًا، قال: ((لا تغضب))؛ رواه البخاري
கோபத்தினால் மனிதன் எந்த நியாயத்தையும் ஏற்க மறுத்து விடுவான் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டான் நபி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்வை பார்ப்பதற்கு சினாய் மலைக்கு சென்றார்கள் போகும்போது இடையில் சைத்தான் அவர்களை சந்தித்தான், அவன் நபி மூசா இடத்தில் “அல்லாஹ் உங்களை பெரிய அந்தஸ்திற்கு உயர்த்துகிறான். நான் ஒரு பாவம் செய்து விட்டேன் அந்தப் பாவத்திற்கு பரிகாரம் வேண்டும் என நான் நினைக்கிறேன் என்னை அல்லாஹ் சபிக்கப்பட்டவன் ஆக ஆக்கிவிட்டான் நீங்க போற இடத்தில் என்னையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்
மூஸா (அலை) அல்லாஹ்விடம் பேசிவிட்டு திரும்பினார்கள். சைத்தான் சொன்னதை மறந்து
விட்டார்கள் அதை சைத்தான் மூசாவுக்கு ஞாபகப்படுத்தினான். மூசா (அலை) அல்லாஹ்விடத்தில் திரும்பி வந்து “ உன்னுடைய அடியான் இப்லீஸ்
அவனை மன்னிக்க
வேண்டும் என்று
கேட்கிறான் அவனை
மன்னிப்பாயாக! என்றார்கள். அல்லாஹ் சொன்னான்
என்னுடைய மன்னிப்பு ரொம்ப
கஷ்டமான விஷயம்
அல்ல மனிதர்கள்தான் மன்னிப்பதற்கு யோசிப்பார்கள் நான்
யோசிக்க மாட்டேன்
மன்னிப்புக் கேட்டால் மட்டும்
போதும் என்ற கூறிய இறைவன் இபுலீஸ் மன்னிப்பை பெறுவதற்கான வழியை அல்லாஹ் சொன்னான்
ஆதம் நபி
உயிரோடு இருக்கிற
போது அவருக்கு ஸஜ்தா செய்ய சொன்னேன் அவன் கேட்கவில்லை இப்போது ஆதமுடைய கப்ருக்கு ஸஜ்தா செய்யச்
சொல்லுங்கள் நான்
அவனை மன்னித்து விடுகிறேன்
இப்லீசிடம் திரும்பிய மூஸா அலை “உனக்கு மன்னிப்புக் கிடைத்துவிட்டது என்றார்கள் . அது எப்படி என அவன் ஆச்சரியப் பட்டான், அது இலேசானது தான்! ஆதமுடைய கப்ருக்கு ஸஜ்தா
செய்து விடு! என்றார். இதைக் கேட்டதும் சைத்தான் கோபப்பட்டான். ஆதம்
உயிரோடு இருக்கிற
போதே நான் ஸஜ்தாச்
செய்யவில்லை அவருடைய
கப்ருக்கு ஸஜ்தாச்
செய்வேனா ? என்றான் ஒரு பெரும் பாக்கியத்தை இழந்தான்.
அல்லாஹ்வுக்கு எதிரான
காரியங்கள் பேசப்பட்டால் நபி
(ஸல்) அவர்கள்
கோபப்படுவார்கள் அதன் அடையாளம் அவர்களுடைய முகத்தில் தெயும்.
நம்முடைய வீட்டில்
மனைவி குழந்தைகள் தீனுக்கு எதிரான
காரியம் செய்கிற
போது நாம
கோபப்படலாம். கோபப் பட வேண்டும்
கௌரவத்திற்காக படுகிற
சைத்தானுடைய ஒரு பெரிய வாசல் என்பதை
நாம் மறந்துவிடக் கூடாது
பொறாமை
சைத்தான் இதயங்களுக்குள் ஊடுறுவும் அடுத்த வழி பொறாமை.
பொறாமை நாம் செய்கிற நன்மைகளை அழித்துவிடும்
நபி ஸல் அவர்கள்
சொன்னார்கள் நெருப்பு
எப்படி விறகை சாப்பிட்டு விடுகிறதோ அதுபோல
பொறாமை நம்முடைய
அமல்களை சாப்பிட்டு விடும்
நூஹ் நபி
அவர்கள் தன்னுடைய கப்பலில் மூஃமின்களை மட்டும்
ஏற்றிக் கொண்டார்கள்
வர வேண்டிய
நபர்கள் எல்லாம்
வந்துவிட்டார்களா என்று அவர்கள் சோதித்துக் கொண்டிருந்த போது ஒரு
வயது முதிர்ந்த கிழவனை
கண்டார்கள். அவர் புதியதாக தெரியவே நீ யார் என்று
கேட்டார்கள் அவன்
சொன்னான் நீங்கள்
யாரை எல்லாம்
இந்த கப்பலில்
ஏற்றி இருக்கிறாயோ அவர்களெல்லாம் உனக்கு
உடலில் மட்டுமே
கட்டுப்படுவார்கள் ஆனால்
அவர்களுடைய இதயத்தை
என் பக்கம்
திருப்பி விடுவேன்
என்று சொன்னான். நூஹ் நபி அவர்களுக்கு ஆள் யார் என்று புரிந்து விட்டது. இது மாதிரியான எந்த சந்தர்ப்பத்திலும் ஏதாவது தத்துவங்களை தப்பித்துக் கொள்வது சைத்தானுடைய வழக்கம் அன்று நூஹ் நபிக்கு சைத்தான் சொன்னான்.
எந்த மனிதருடைய உள்ளத்திலும் நான்
ஊடுருவுவதற்கான வழி பொறாமை என்றான்
பேராசை
இது சைத்தானின் அடுத்த வாசல் .
வாழ்க்கையில ஆசை
இருக்கலாம். வீடு கட்டனும். நல்ல
வாகனம் வேண்டும்
நல்ல பெண்ணை. திருமணம் முடிக்க
வேண்டும் நல்ல
வியாபாரம் செய்ய
வேண்டும் சமுதாயத்தில் ஒரு
மதிப்பு வர
வேண்டும் என்று
நிறைய ஆசைப்படலாம் அந்த ஆசை நல்ல முறையில் இருக்க வேண்டும். என்னை நம்பி
நாளு குடும்பங்கள் இருக்கிறது நாஙன்கு
பேர் வேலை
செய்கிறார்கள் அந்த
குடும்பத்திற்கு தேவையானதாய் நான் செய்ய
வேண்டும் என்று
இருக்கணும் இந்த
ஆசை நமக்கு இருந்தால் அல்லாஹ்
தெளிவான ஒரு
வாழ்க்கையை நமக்குத் தருவான்
ஆசை
எப்போது பேராசையாகிறது தெரியுமா
? எனக்கு
அவனை விட
அதிகமாக கிடைக்க
வேண்டும் என்று
நினைக்கும் போது பேராசை தொடங்குகிறது.
பேராசை எவ்வளவு கெட்டது என்றால் ஆதமிடம் நான் பேராசையை தூண்டித்தான் விலக்க பட்ட கனியை உண்ண வைத்தேன்.
சைத்தானுக்கு இடமளிக்கும் அடுத்த வாசல் கட்டுப்பாடற்ற உணவுகளாகும்.
அவர்கள் உம்மத்திற்கு கற்றுத்தந்த ஞானத்தில் இதுவும்
ஒன்று.
ஹலாலான சாப்பாடும் ஹலாலான சம்பாத்தியமும் தான் நல் அமல் செய்வதற்கு தூண்டும் . அதே போல ஹலாலான உணவருந்திவிட்டு துஆச்
செய்தால் அங்கீகரிக்கப்படும் ஹராமை சாப்பிட்டுவிட்டு துஆ செய்தால்
ஏற்றுக் கொள்ளப்படாது
கவனத்தில் வையுங்கள் !ஞானமிக்க வாழ்க்கையில் ஹலாலான
அளவான உணவும் அடக்கம்
அவசர குணம்
இதயத்திற்குள் சைத்தான் நுழையும் அடுத்த வழி அவசரப்படுவது.
எதையும் செய்ய
வேண்டிய நேரத்தில் செய்வது
நிதானம் அதுக்கு
முன்னாடியே செய்ய
நினைப்பது.
பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருகிறபோது இமாம்
ருகூவிற்கு செல்லுகிறார் என்பதற்காக நீங்கள்
ஓட வேண்டாம்
என்றார்கள் நிதானமாக
கம்பீரமாக செல்லுங்கள் என்றார்கள்.
நாம் சேவையாற்றுவதற்காக ஒரு அமைப்அல்லது இயக்கத்தில் சேரலாம் . ஆனால் நான் மட்டுமே செய்கிறேன் என்ற நினைப்பு வரக்கூடாது இதுதான் இயக்கம் வெறி என்பது.
அலி ரவி
அவர்கள் இரண்டாவதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்
அந்த அலி ரலி
அவர்களைப் பார்த்து
ஒரு குழு
சொன்னது. நீங்கள்
காபீர் !!
வாதம் செய்வது
இதயத்தில் சைத்தான் ஊடுருவுகிற அடுத்த வழி விதண்டாவாதம் செய்வது
பொதுமக்கள் எது விசயத்தில் தங்களுக்கு போதிய விவரம் இல்லையோ விஷயத்தில் அவர்கள்
தலையிடச் செய்வதன் மூலமாகவும் சைத்தான் இதயத்திற்குள் ஊடுறுவு கிறான்.
கேட்டதையெல்லாம் பேசுபவன் பொய்யன் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
குறிப்பாக மார்க்க
விஷயங்களில் நமக்கு
தெரியாத செய்திகளை பேசக்கூடாது
பெண்கள் தோன்றியது போல
சட்டத்தை முடிவு
செய்து கொடுக்கிறார்கள் இத்தா இருப்பது, உடை உடுத்துவது போன்ற விவகாரங்களில் தாமாக ஒரு ஒரு முடிவை எடுத்துக் கொள்கிறார்கள். அனால் மார்க்கம் சொல்லியிருக்கிற சட்டம் வேறு விதமாக இருக்கிறது.
கெட்ட எண்ணம்
மனிதர்களுடைய இதயத்திற்குள் சைத்தான் நுழைகிற வழிகளில் இது முக்கியமானது. தீய எண்ணம் கொள்வதும் தவறான எண்ணத்தை பரப்புவதும் இந்த வகையில் அடங்கும்.
மூஃ மின்களை
ப்பற்றி ஒருவன்
தவறாக வந்து
சொன்னாள் அவனைப்
பார்த்து இது
அவதூறு இது
இட்டுக்கட்டப்பட்டது என்று
நாம் சொல்ல
வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது
ஒரு தடவை நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் இந்த வழியாக ஒருவர் வருவார் அவர் சொர்க்கவாசி என்றார் அப்பொழுது ச்ஃதிப்னு அபி வக்காஸ் ரலி அந்த வழியாக வந்தார். வருகிறபோது துணியை கொஞ்சம் தூக்கி பிடித்திருந்தார் இடது கையில் செருப்பை பிடித்திருந்தார் அவர் சலாம் சொல்லி விட்டு போய்விட்டார் மறுநாள் நபிஸல் அவர்கள் அதேபோல இப்பொழுது இந்த வழியாக ஒருவர் வருவார் அவர் சொர்க்கவாசி என்றார்கள். சஃது பின் அபி வக்காஸ் அவர் தான் வந்தார். மூன்றாவது நாளும் இது போலவே நடந்தது அனஸ் ரலி அவர்கள் சொன்னார்கள். எங்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ரலி “ இவர் எப்படி சொர்க்கவாசியாக ஆனார் ? என்ன அமல் செய்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும் நினைத்தார்
சஃதுடன் போய்
நான் உங்களுடன் இன்று
இரவு தங்கி
கொள்ளுகிறேன் என்று கேட்டார். அதற்கவர் அனுமதி கொடுத்தார். காலையில் நேரமாக
எழுந்து சஃது
ரலி பஜரே
தொழுகைக்கு போய்விட்டார்கள் வித்தியாசமாக எந்த
அமலும் செய்யவில்லை ஒரு
நாள் இரண்டு
நாள் ஆனது
எந்த அமலையும் சஃது அதிகமாக செய்யவில்லை மூன்றாவது நாள்
அவர் எந்த
அமலும் செய்யாமல் எழுந்து
போகிறபோது அப்துல்லாஹ் ரலி
அவர்கள் “ மூன்று
நாள் உங்களுடன் நான்
தங்கினேன் ஒரு
காரணமாகத்தான் நான்
தங்கினேன் மூன்று
நாளாக நபி (ஸல்) உங்களை
சொர்க்கவாசி என்று
சொன்னார்கள். ஆனால் நீங்கள் சொர்க்கவாசிக்கு உண்டான
எந்த அமலும்
செய்யவில்லையே என்றார். இதைக் கேட்டு மகிழ்சியடைந்த சஃது சொன்னார் காரணம்
எனக்கு தெரியல்லை .அவர் ஏமாற்றத்தோடு திரும்பத் தொடங்கிய போது அவரை அழைத்து சஃதுரலி சொன்னார்கள் நான்
விஷேஷமாக எதையும்
செய்யவில்லை ஆனால்
எந்த மனிதரை
பற்றியும் தவறாக
எண்ணியது இல்லை
...
மாஷாஅல்லாஹ்,அருமையான தகவல்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ். அற்புதமான ஆக்கம்.
ReplyDeleteஇதயம் இடது பக்கத்தில் தானே இருக்கிறது????
மாஷா அல்லாஹ். மிக சிறந்த ஆக்கம்.
ReplyDeleteஇதயம் என்பது சதை மட்டும் அல்ல,,
ReplyDeleteஅறிவு, சிந்தனை,மனது, இவற்றின் பிறப்பிடம் என்ற கஸ்ஸாலி இமாமின் கருத்து,மிக அருமை!.
அருமையான பதிவு பயனுள்ள தகவல் தொடரட்டும் தாங்கள் சிறப்பான பணி வாழ்த்துக்கள்
ReplyDelete