வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 24, 2025

காஷ்மீர் தாக்குதல் கண்டிக்கத் தக்கது.

 கடந்த 22 ம் தேதி  செவ்வாய்க்கிழமை மதியம் 2;45 மணியளவில் காஷ்மீர் மாநிலம்  அனந்த நாக் மாவட்டத்தில் உள்ள  பெஹல்காம் நகரில் உள்ள பைசரன் புல் வெளியில் ( Baisaran meadow )  பயங்க்ரவாதிகள் நடத்திய தாகுதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் அப்போது குழுமியிருந்த 2000 பயணிகள் உட்பட காஷ்மீர் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகி தங்களது வீடுகளுக்கு திரும்ப அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு காஷ்மீருக்கு செல்லும் பிரதான சாலையை மூடி வைத்திருக்கிறது. விமான கட்டணங்கள் பெருமளவில் உயர்ந்திருக்கிறது . 6000 ரூபாயுக்கு விற்ற டிக்கட்டுகள் இப்போது 65 ஆயிரத்தை கடந்து செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சிக்காக சுற்றுலா சென்ற அப்பாவி பொது மக்கள் மீது திடீரென்று இயந்திர துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது அதுவும் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே ஆண்களை கொலை செய்வது என்பது பிர் அவ்னிய கொடூரமாகும்.

இந்த செயல் ஒரு கோழைத்தனமான குற்றமாகும்.

நிராயுதபாணியான அப்பாவி பொதுமக்களின் முன் ஆயுதம் ஏந்தி செல்வதே குற்றம் என பெருமானார் (ஸல்) அவரக்ள் கூறிய்ள்ளார்கள்.

وقال رسول الله صلى الله عليه وسلم: ((لا يمشين أو لا يشير أحدكم إلى أخيه بالسلاح؛ فإنه لا يدري أحدكم لعل الشيطان ينزع في يده، فيقع في حفرة من نار))؛ [البخاري (7072)، ومسلم (2617)].

நீங்கள் உங்கள் சகோதர்ர் இருக்குமிட்த்திற்கு ஆயுத்த்தோடு செல்ல வேண்டாம். அதை எடுத்துக் காட்டி பேச வேண்டாம். யாருக்கு தெரியும் சைத்தான் சட்டென கோபத்தை கிளறி விட்டு உங்களை நரகில் வீழ்த்தி விடக் கூடும்

 

மலக்குகளின் சாபம்

 

وقال رسول الله صلى الله عليه وسلم: ((من أشار على أخيه بحديدة، لعنته الملائكة، وإن كان أخاه لأبيه وأمه))؛ [مسلم (2616)].

தனது சகோதர்ர்களிடம் ஆயுதத்தை எடுத்துக்காட்டுபவனை மலக்குகள் சபிக்கிறார்கள். அந்த சகோதரர்கள் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்களாக இருந்தாலும் சரி.

அதாவது சொந்த சகோதரர்களை எச்சரிக்கவும் மிரட்டவும் ஓரளவு உரிமை இருக்கிறது. அப்படி இருக்கிற இடத்தில் கூட ஆயுத்த்தை எடுத்துக் காட்டக் கூடாது. எனும் போது அப்பாவிகளான மற்ற பொதுமக்கள் முன்னிலையில் ஆயுதத்தை துக்கி காட்டுவதே பெரும் குற்றம் என்பது இதன் பொருளாகும்.

கேடு கொட்டவர்கள்

அநியாய கொலை சாதாரண குற்றம் அல்ல; அது  ஒரு மனிதரிடம் இருக்கிற மொத்த நன்மையையும் பாழாக்கி விடக் கூடியது.     

சமூக செயல்பாட்டாளர்களுக்கு (ஆக்டிவிடி பர்சனாலிட்டீஸ்)  பெருமானார் (ஸல்) அவர்களின் ஒரு மிகப் பிரதான வழிகாட்டுதல்.

ஒரு முஃமின் நல்ல செயல்பாட்டாளராகவே  இருப்பார். அவர் அநியாய கொலை செய்யாத வரை. அப்படி செய்து விட்டால் அவர் நன்மையிலிருந்து அறுந்து விடுவார் என்றார்கள் பெருமானார் (ஸல்)

قال رسول الله صلى الله عليه وسلم : " - لا يَزالُ المؤمِنُ مُعْنِقًا صالحًا ما لم يُصِبْ دمًا حرامًا، فإذا أصابَ دمًا حرامًا بَلَّحَ.

 மறுமை நாளின் முதல் விசாரனை அநீதியான கொலைகளைப் பற்றியே என்றார்கள் பெருமானார் (ஸல்)

عن ابن مسعود رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((أول ما يُقْضَى بين الناس يوم القيامة في الدماء))؛ [البخاري

 காஷ்மீர் கொலை காரர்கள் மதத்தை கேட்டு கொலை செய்தார்கள் என்று மத்திய அரசு அறிக்கை விடுகிறது. அதையே மீடியாக்கள் செய்தியாக்குகின்றன. அது போல சுன்னத் செய்யப் பட்டிருக்கிறார்களா என்று ஆடையை அவிழ்த்துப் பார்த்து கொலை செய்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

 ஆனால் நிகழ்வை நேரில் கண்டவர்கள் அவர்கள் ஆண்களை மட்டுமே குறிவைத்தார்கள் என்றும் கொஞ்ச நேரத்தில் சுட்டுத்தள்ளி விட்டு ஓடி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்துக்களா என்று கேட்டு கொலை செய்தார்கள் என்ற கருத்தை வேறு சிலர் இதில் கட்டாயப்படுத்தி சொல்ல வைத்துள்ளார்கள் என்றும் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

 ஒரு அப்பாவி இந்துவை குறி வைத்து இந்த படுகொலைகள் நடை பெற்றிருந்தாலும் அது மொத்த மனிதர்களையும் கொலை செய்வதற்கு சமமானதே   என்பதுதான் குர் ஆனின் வாதமாகும்.

 مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا

 மதம் இங்கே இழுத்து விடப் பட்டிருக்கிற காரணத்தால் உலக முஸ்லிம் சமூகம் மிக தெளிவாகவும் உறுதியாகவும் இந்த தாக்குதலுக்கான கண்டனத்தை பதிவு செய்கிறது.

 இத்தகை படுகொலைகளை இஸ்லாமும் உலக முஸ்லிம் சமூகமும் வன்மையாக கண்டிக்கிறார்கள்.  

 கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 இந்த படுகொலை எந்த வகையிலும் சகித்துக் கொள்ளக் கூடியது அல்ல; அதனால் இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

 குறைந்த பட்சம் இதில் படுகொலை செய்யப் பட்டவர்களின் உறவினர்களின் முன்னிலையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 திருக்குர் ஆன் கூறுகிறது.

 وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ (2

 .காப்பாற்றியோர் பாராட்டிற்குரியவர்கள்

 இந்த கொடூர தாக்குதலின் போது சுமார் இரண்டாயிரம் பேர் அந்தப் பகுதியில் இருந்திருக்கிறார்கள்.  பைசரன் புல் வெளிப் பகுதிக்கு வண்டிகளில் செல்ல முடியாது, பிரதான நிலப்பகுதியிலிருந்து சுமார் இரண்டரை மணி நேரம் குதிரைகளிலோ அல்லது நடந்தோ பயணித்தால் தான் இந்த் இட்த்தை அடைய முடியும். அதுவும் கீழே இறங்கும் போது அது திகிலான ஒரு அனுபவம் போலத்தான் இருக்கும் என்கிறார்கள். கீழே விழுந்தால் ஒன்று பனிப் புதைக்குள் விழ வேண்டும். அல்லது பள்ளத்தாக்கில் விழ வேண்டும். இந்தற்கு என்று அனுபவப்பட்ட நபர்களால் தான் இங்கு பத்திரமாக அழைத்து சென்று வர முடியும் என்றும் அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

 இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்த பிறகு அங்கிருந்த ஒவ்வொரு குதிரை ஓட்டியும் தனது கட்டுப்பாட்டில் இருந்தவரை மிக பத்திரமாக ஆறுதல் அளித்து நம்பிக்கை யூட்டி திருப்பி அழைத்து வந்திருக்கிறார்கள் .

26 உயிர்களை காஷ்மீரி கொலை காரர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள் எனில் குறைந்த்து  சுமார் இரண்டாயிரம் பேரை குதிரை ஓட்டிகள் பத்திரமாக காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார்கள்.

 செய்யத் ஆதில் ஹுசைன் ஷா என்ற ஒரு குதிரை ஓட்டி தன்னுடன் அழைத்து வந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்பட்டிருக்கிறார்.

 இவர்கள் மட்டுமல்ல காஷ்மீரி ன் மற்ற இடங்களில் இருக்கிற சுற்றுலா பயணிகளுக்கும் இதுவரை காஷ்மீரிகளே பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

தற்போது தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிற சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும் காஷ்மீரிகளின் விருந்தோமபலையும் அனுசரனையையும் கிளாகித்து பேசி வருவதை தொடர்ந்து உலகம் கண்டு வருகிறது.

 பெரும்பாலும் சுற்றுலா தளங்களில் மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் உள்ளூர் வாசிகளே அதிகம் இருப்பார்கள். முரட்டுத்தனமாக நடக்கிறார்கள். பணம் பிடுங்குகிறார்கள். ஏமாற்றுகிறார்கள். வழிப்பறி செய்கிறார்கள். கோவா போன்ற சில இடங்களில் கற்பழிபுபு கொலை கூட செய்யப் படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டுகள் சகஜமானவை

 ஒரு ஆச்சரியம் இந்த கடுமையான சூழலில் காஷ்மீரிலிருந்து திரும்பிய சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும் காஷ்மீர் மக்களை பாராட்டி பேசுகிறார்கள்.

தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை தாக்குதலில் இழந்த ஒரு பெண்மணி அங்கு தனக்கு உதவிய இரு காஷ்மீரிகளை குறிப்பிட்டு தனக்கு இப்போது இரண்டு சகோதாரக்ள் கிடைத்துள்ளர்கள் என்று கூறுகிறார்.

 எந்த நெருக்கடியான சூழலிலும் தங்களை நாடி வந்த மக்களை பாதுகாத்து அரவணைத்தை பல்லாயிரம் காஷ்மீரிகளை இந்த நேரத்தில் நாம் பாராட்டி ஆக வேண்டும்.

 திருக்குர் ஆன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறது.

 وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

 அரசு திசை திருப்ப முயற்சிக்க கூடாது

 இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அரசு உரிய தண்டனையை ஊர் மக்களுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்  நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையாகும். அதற்கு அரசுக்கு ஒத்துழைப்பதாக அனைத்து கட்சிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

 மற்ற இந்திய மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த கஷ்மீரிகளும் கூட இதை தங்களது இரங்கல் ஊர்வலங்களில் நிரூபித்திருக்கிறார்கள்.

 இந்த சந்தர்ப்பத்தில் மத்திய அரசு பதில் நடவடிக்கை  என்ற பெயரில் அவசர கதியில் அனைத்து கஷ்மீரிகளையும் அல்லது அனைத்து இந்திய முஸ்லிம்களையும் சங்கடப் படுத்துகிற வேலையில் இறங்கி விடக் கூடாது என்பதே ஒட்டு மொத்த இந்திய ஜனநாயக சக்திகளின் கவலையாகும்.

 இதை இந்த நேரத்தில் நாம் பேசாமல் இருக்க முடியாது.

ஏனெனில் தொடர்ந்து மத்திய அரசு முஸ்லிம் வெறுப்புணர்வுடன் செயல் பட்டு வருகிறது. வெறுப்புணர்வை பரப்பும் வேலையை ஆளும் கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் பரப்பி வருகிறார்கள்.காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு அனுதாபங்கள் என்று அமைச்சர்கள் உடபட பலர்  செய்தி வெளியிடுகிறார்கள்.

 ஏற்கெனவே நாடு முழுவதிலும் மக்களிடையே பிளவு மனப்பான்மையும் வெறுப்பி பிரச்சாரமும் எக்கச் சக்கமாக பரப்பி விடப் பட்டிருக்கிறது.

 தேர்தல்களை கவனத்தில் கொண்டு அரசே  இந்த வேலையை செய்யுமானால் அது நாட்டிற்கு அமைதியை கொண்டு வருவதற்கு பதில் மேலும் அதிக சிக்கலை கொண்டு வந்து சேர்த்து விடும்.

 இது முழுக்க முழுக்க மத்திய் அரசின் தோல்வி

 இப்போதே கூட காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை ரத்து செய்த பிறகு காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதாக சொன்னதனாலேயே மக்களில் ஏராளமானோர் காஷ்மீர் சென்றிருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியிலும் பயமுறுத்தும் ஆயுதங்களோடு நம்முடைய ராணுவம் நின்று கொண்டிருக்க ஒரு இடத்தில் மிக சகஜமாக ஏகே 47 போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து குருவையை சுடுவது போல  சுட்டு விட்டு பாதுகாப்பாக தப்பிச் செல்ல முடிகிறது என்றால் மத்திய அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்தை எப்படி நம்புவது ?   

 இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

விடுதலை கட்சித்தலைவர் தோழர் திருமாளவன் சொல்வது போல நியாயமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

 தார்மீக உணர்வுள்ள எந்த ஒரு மனிதரும் செய்ய வேண்டிய கடமை இது. இது தான் கெளரவமும் ஆகும்.

 மத்திய அரசு தான் காஷ்மீரின் பாதுகாப்பை கவனிக்கிறது என்கிற காரணத்தால் – மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு பொம்மை அரசுகளாக மாற்றி வைத்திருக்கிறது என்ற காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தான் இதற்கு குறைந்த பட்ச  பொறுப்பேற்க வேண்டும்.  

 வீர வசனம் பேசுவதும் கண்மூடித்தனமான பதில் நடவடிக்கைகளும் மக்களின் ஆவேசத்திற்கு போடப்படும் இறையாக இருக்குமே தவிர சரியான இலக்கை நோக்கி பயணிப்பதாக இருக்க முடியாது.

 வெட்கக் கேடு

இவ்வளவு பிரச்சினைகள் நடந்து முடிந்த பிற்கு  - மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி ஆளும் கட்சியியை சார்ந்தவர்களே குறை கூறுகிற சூழலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கூட்டிய அனைத்து கட்சி ஆலோசனைகளுக்குப் பிறகு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை. பைசரன் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு திறக்க போலீசார் அனுமதி அளிக்க வில்லை என்று கூறுகிறது

officials from the Home Ministry and the Intelligence Bureau informed that there was no police permission to open the Baisaran meadow where the incident occurred.

என்ன ஒரு அறிக்கை இது  ?  அப்படியானால் இத்தனை ஆயிரம் பேர் எப்படி அங்கு தொடர்ந்து சென்று வந்தார்கள். ? கடந்த பல மாதங்களாக சென்று வருகிறார்கள் ?  இந்த அறுவெறுப்பான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.

 உண்மையில் மத்திய அரசு நிறுவன்ங்களின் இந்த அறிக்கை பலம் பொருந்திய ராணுவத்தை கொண்ட நாட்டிற்கு பெரும் வெடக்க் கேடாகும்.

 பஹல்காம் அமர்நாத் ஆலயம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நகரமாகும், இதில் இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் அடங்கிய பல அடுக்கு பாதுகாப்பு உள்ளது. தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளி பஹல்காம் நகரத்திலிருந்து ஐந்தே  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். இந்தியாவின் சுவிட்ஸர்லாந்து என்று அந்த இடம் பாராட்டப்படுகிறது என்றெல்லாம் கூறப்படுகிற ஒரு இடத்திற்கு மத்திய அரசு போதிய பாதுகாப்பு தராமல் இருந்தது  உண்மையில் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாகவும் நாட்டுமக்களுக்கு செய்த ஒரு அநீதியே ஆகும்.

காஷமீர் மக்களின் உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்கிற பல காரியங்களை அரசு செய்து வருவதாக தொடர்ந்து குற்றச் சாட்டுகள் இருக்கின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்குள்ள பெரும்பான்மையான பணிகளில் முஸ்லிம் அல்லாத அதிகாரிகளை நியமிக்கிற மத்திய அரசு அந்த அதிகாரிகள் அங்கேயே நிலம் வாங்கவும் வீடுகளை அமைத்துக் கொள்ளவும் ஆதரவு தெரிவிப்பதாக ஒரு குற்றச் சாட்டு தொடர்து வைக்கப்பட்டு வந்திருக்கிறது . இந்த குடியேறிகளுக்கு எதிராக அங்கு போராடுகிற குழு தான் த ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட் என்று அல் ஜஸீரா உள்ளிட்ட செய்தி சேனல்கள் கூறுகின்றன.

இத்தகைய ஒரு சூழலில் பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள் வருகிற சந்தர்ப்பத்தில் அனைத்து இடங்களிலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு இத்தக்கய ஒரு விபரீதம் நடந்த பிறகு அந்த இடத்தை திறக்க போலீஸ் அனுமதிக்க வில்லை என்று சொல்லவதை மிக வெட்கரமானது என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல.

எனவே இது முழுக்க மத்திய அரசின் பாதுகாப்பு தோல்வியாகும். அரசு இனியாவது மதவெறுப்பு வேலைகளை கை விட்டு நாட்டின் உண்மையான நலன்களிலும் மக்களின் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாடு முழுவதிலும் மத வெறுப்புணர்வு பரப்ப படுவதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

தன் உயிரை கொடுத்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய சேக் ஹுசைன் ஆதிலுக்கு நாட்டின் உயர்ந்த விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்,

எல்லாம் வல்ல இறைவன் பல் நூறு கோடி மக்கள் வாழும் நமது நாட்டை நன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாடகாவே வைத்திருப்பானாக!

அநீதியும் அக்கிரமும் எந்த வடிவத்திலும் வந்து விடாமல் பாதுகாத்து அருள்வானாக!

2 comments:

  1. அ.அப்துல்மஜீத் மிஸ்பாஹி8:58 PM

    மாஷா அல்லாஹ் அருமை பாரகல்லாஹ்

    ReplyDelete
  2. Anonymous11:06 PM

    அல்ஹம்துலில்லாஹ். உலகம் முழுவதும் இன்றைய ஜுமுஆவில் பேசப்பட வேண்டிய வார்த்தைகள்

    ReplyDelete