வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 29, 2012

மனித நேயமே பக்தியின் ஆதாரம்


காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையேய்யன பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழகத்தின் அடிப்படையான தண்ணீர் தாகத்தை தணிக்க கர்நாடகம் மறுக்கிறது.

பக்தியும் சம்ய நம்பிக்கையும் பகட்டாக விளம்பரப் படுத்தப் படுகிற இன்றைய கால கட்ட்த்தில் – வானுயர்ந்த ஆலயங்களும் – சீடர்கள் புடை சூழ வாழும் மதகுருக்களும் நிறைந்த நாட்டில் அடிப்படையான மனித நேயத்தை போதிக்கும் நல்லவர்கள் குறைந்து விட்டனர்.

பக்தி -  சமய நம்பிக்கை என்பது கடவுளிடம் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம் மட்டுமே என பலர் நினைக்கிறார்கள்.

இஸ்லாம் அப்படி கருதவில்லை.

பக்திக்கும் சமய உணர்வுக்கும் ச்க மனிதர்களிடம் நடந்து கொள்ளும் வித்த்திற்கும் சம்பந்தமிருக்கிறது என இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தைப் பொறுத்து ஒரு உண்மையான முமின்  அல்லாஹ்வுக்கு  மட்டும் நல்லவனாக நடந்து கொண்டால் போதாது. சக மனிதர்களிடமும் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும்,

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்வதானால் இஸ்லாமிய வழிபாடுகள் பலவும் மனிதர்களுக்கு நன்மை செய்வதின் வழியே இறைவனின் திருப்தியை பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கின்றன.
( ஜகாத் – குர்பானி – நோன்பிற்கான பித்யா – சதகா - )

தொழுகையாளிகள் மார்க்கத்தை பேணி நடக்க ஆசைப்படுகிற அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விசயம் இது.

முஃமின்கள் பல பேர் வழிபாடுகளில் حقوق الله வில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். தஹஜ்ஜுத் லுஹா பெரிய தாடி மிஸ்வாக் என அமர்களப்படுத்துகிறார்கள். حقوق العباد  ல் அசட்டையாக இருக்கிறார்கள். அல்லது இது விசயத்தில் குறை சொல்ல்ப்படுகிறார்கள்.

இவ்வாறு நடந்து கொள்வது தீனைப் புரிந்து கொள்ளாத தன்மையாகும்.

தீன் என்ன சொல்கிறது. கவனித்துப் பாருங்கள்.

عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ – ترمذي 2439

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ البحاري 7376

عَنْ زَرْبِيٍّ قَال سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ الْقَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا – ترمذي 1842

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاحِمُونَ يَرْحَمُهُمْ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ الرَّحِمُ شُجْنَةٌ مِنْ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ – ترمذي 1847

عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَتْ لَهُ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُمَا مَا صَحِبَتَاهُ دَخَلَ بِهِمَا الْجَنَّةَ  احمد 2000

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ أَنْ تُسْتَجَابَ دَعْوَتُهُ وَأَنْ تُكْشَفَ كُرْبَتُهُ فَلْيُفَرِّجْ عَنْ مُعْسِر احمد

அல்லாஹ்வை ஆச்சரியப்படுத்திய மனித நேயம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي مَجْهُودٌ فَأَرْسَلَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَقَالَتْ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاءٌ ثُمَّ أَرْسَلَ إِلَى أُخْرَى فَقَالَتْ مِثْلَ ذَلِكَ حَتَّى قُلْنَ كُلُّهُنَّ مِثْلَ ذَلِكَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاءٌ فَقَالَ مَنْ يُضِيفُ هَذَا اللَّيْلَةَ رَحِمَهُ اللَّهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ فَقَالَ لِامْرَأَتِهِ هَلْ عِنْدَكِ شَيْءٌ قَالَتْ لَا إِلَّا قُوتُ صِبْيَانِي قَالَ فَعَلِّلِيهِمْ بِشَيْءٍ فَإِذَا دَخَلَ ضَيْفُنَا فَأَطْفِئْ السِّرَاجَ وَأَرِيهِ أَنَّا نَأْكُلُ فَإِذَا أَهْوَى لِيَأْكُلَ فَقُومِي إِلَى السِّرَاجِ حَتَّى تُطْفِئِيهِ قَالَ فَقَعَدُوا وَأَكَلَ الضَّيْفُ فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ عَجِبَ اللَّهُ مِنْ صَنِيعِكُمَا بِضَيْفِكُمَا اللَّيْلَةَ  - 3829

(قوله صلى الله عليه وسلم : ( عجب الله من صنيعكما بضيفكما الليلة ) قال القاضي : المراد بالعجب من الله رضاه ذلك)

மனிதாபி மானத்தோடு நடந்து கொள்ளாதவர்களை மார்க்கம் தீன் அற்றவர்கள்பொயான சமய வாதிகள் என குர் ஆன் கண்டிக்கிறது.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ(1)فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ(2)وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ(3)فَوَيْلٌ لِلْمُصَلِّينَ(4)الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ(5)الَّذِينَ هُمْ يُرَاءُونَ(6)وَيَمْنَعُونَ الْمَاعُونَ(7) 

இந்த அத்தியாயம் மிக அற்புதமாக சமய நம்பிக்கையின் இலக்கணங்களை கூறுகிறது.

உண்மையான முஃமின் – முஸல்லி –
·         அக்கறையோடும் கவனத்தோடும் அமல் செய்ய வேண்டும்
·         அல்லாஹ்வுக்காகவே அமல் செய்பவராக இருக்க வேண்டும். பிறரிடம் மரியாதை பெறுவது நோக்கமாக இருக்க கூடாது.  
·         ஆதரவற்றவர்களை அரவணைக்க வேண்டும்
·         நனமை செய்ய மற்றவர்களை தூண்ட வேண்டும்
·         அளவு கடந்த கஞ்சத்தனம் கூடாது.

சமய நம்பிக்கை இவ்வாறு போதிக்கப் பட வேண்டும். ஆனால் இன்றைய மத வெறியர்கள் சமய நம்பிக்கையை மக்களை நெறிப்படுத்துவதற்காக அல்லாமல் வெறிப்படுத்துவதறேகே பயன்படுத்து கிறார்கள்.

சமயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத இந்தக்குறைபாடு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமல்ல அனைத்து சமயங்களிலும் உண்டு. 

முஸ்லிம்களில் கூட பலர் பெரும் பக்தியாளராக - தொழுகையாளியாக காட்டிக் கொள்கிறார்கள். மனிதாபிமானமற்ற நடந்து கொள்கிறார்கள். 

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் பெருமானாரின் பேரர் ஹழரத் ஹுசைன் ரலி அவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு கூட அனுமதிக்கப்படாமல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.

சமயம் வெட்கப்பட்ட சந்தர்ப்பம் அது.  எந்த ஒரு நல்ல முஃமினும் தன்னுடைய நடவடிக்கையால் சமயம் களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதனால் தான் மனிதாபிமானமற்றவர்களை சமயத்தை பொய்யாக்கியவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்,   

1 comment:

  1. alhamdu lillah yellorukkum thevayana ubadhesam

    ReplyDelete