வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, April 01, 2015

ஈஸா (அலை) இரண்டாம் வருகை



புனித வெள்ளியன்று  ஏசுசிலுவையில் அறையப் பட்டார். மூன்றுநாட் கழித்து ஈஸ்டர் 
சண்டே அன்று உயிர்தெழுந்தார். என்றுகிருத்துவர்கள் கூறுகிறர்கள்.

குட் பிரைடேவை இஸ்லாம் அப்பட்டமாக மறுக்கிறது

கிருத்துவர்கள் இவ்வாறு சொல்வதை உண்மைக்கு மாற்றமான அப்பட்டமான அவதூறு என்று குர் ஆன் சொல்கிறது..

இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காமல், தாம் கேள்விப்பட்டதை நம்பி கிருத்துவர்கள் வழி தவறி விட்டனர்.

இன்று நீங்கள் சந்தேகத்திற்கு ஆட்படுவீர்கள். எனது இறைவன் என்னை பாதுகாக்க வாக்களித்திருக்கிறான். கவலைப் படாதீர் . நான் திரும்ப வருவேன் என ஈஸா கூறியதை கிருத்துவர்கள் கவனத்தில் கொள்ளவே இல்லை,

         وَفِي الْأَنَاجِيلِ الْمُعْتَمَدَةِ عِنْدَ النَّصَارَى ، أَنَّ الْمَسِيحَ قَالَ لِتَلَامِيذِهِ : (كُلُّكُمْ تَشُكُّونَ ، فِيَّ ، فِي هَذِهِ اللَّيْلَةِ) أَيِ الَّتِي يُطْلَبُ فِيهَا لِلْقَتْلِ (مَتَّى 26 : 31 وَمُرْقُسُ 14 : 27)

சிலுவையில் அறையப்பட்டவன் ஏலி லாம சாபக்தானி என் இறைவனே ஏன் என்னை கை விட்டீர் என்று சொன்ன வார்த்தைகளில் இருந்தும் கூட அது இயேசுவாக இருக்க முடியாது என்று கிருத்துவர்கள் உணர்வு பெறவில்லை.

அவர்களும் யூதர்களின் சதி வலையில் சிக்கியே தமது உண்மை மார்க்கத்தை இழந்தனர். 

திருக்குர் ஆன் கிருத்துவர்களின் நம்பிக்கையை அம்பட்டமாக மறுக்கிறது.

بِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا(156)وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا(157)بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا(158)

கிருத்துவை பற்றி இவ்வாறு உறுதியாகச் சொல்ல திருக்குர் ஆனுக்கு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது.

காரணம் குர் ஆன் மட்டுமே இயேசுவின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக பேசுகிறது. இயேசுவின் வரலாற்றை நிரூபிக்க வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை. மட்டுமல்ல குர் ஆன் இயேசுவுக்கு பிறகு அருளப்பட்டது,

வரலாற்றில் குழப்பமாக  அறியப்படுகிறவர் இயேசு என்பதை கிருத்துவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்

ஈஸா பற்றி கிருத்துவரான மைக்கேல் ஹார்டின் கருத்து
  • ஏசுவின் வாழ்க்கை குறித்து நமக்கு கிடைக்கும்தகவல்களில் பெரும்பாலானவை ஐயத்திற்கிடமாகஉள்ளன.
·         அவருடைய இயற் பெயர் கூட என்னவென்றுதெரியவில்லை.
·         அவர் பிறந்த ஆண்டு கூட உறுதியாகத் தெரியவில்லை.
·         கீ.மு ஆறாம் நூற்றாண்டில் அவர் பிறந்திருக்கலாம்என்றுதான் கூறுகின்றனர்.
·         அவர் இறந்த ஆண்டு அவருடைய சீடர்களுக்கு நன்குதெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது கூட இன்றுநிச்சயமாகத் தெரியவில்லை.
The hundred – micheal H.Hart l   

இந்த நிலையில் இயேசு பற்றிய தகவல்களை விரிவாக கூறும் மூலாதாரம் குர் ஆன் ஒன்று மட்டுமே !

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அது பற்றி இந்த உரையின் நிறைவில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்,

இபோது இயேசு பற்றி என்னென்ன தகவல்களை எல்லாம் குர்ஆன் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

முதலில் இயேசுவை வணங்கும் கிருத்துவர்களுக்கு குர் ஆன் தரும் எச்சரிக்கை. இயேசுவை வணங்குவது அவருக்கு செய்யும் மரியாதை அல்ல. அவரை விலகி ஓட வைக்கும் பாவச்செயலாகும்.


{ وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117) إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (118) قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا دعَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (119)  المائدة

ஈஸா அலை குறித்த தெளிவான - ஏரளமான - குர் ஆனின் அறிவிப்புக்கள்

பெயர்  &  காரணப்பெயர்

َآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ

பட்டப் பெயர்  : كلمة الله – روح الله

·        إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ
·        إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ – 4:171

தகப்பனார் இன்றி பிறப்பு
أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ  19:20

தாயாரின் தகப்பனார் பெயர் என்ன?
إِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ  3:35

தாயாரின் தயார் : ஹன்னா என ஹதீஸீல்  வந்துள்ளது

மாமாவின் பெயர்
يَاأُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا(28) 19

பாட்டியின் நேர்ச்சை
إِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ(35) 3

பெண் குழந்தை பெற்றது
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى

மர்யம் என பெயர் சூட்டியது
وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ

பாதுகாப்பு கோரியது
وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

அதியங்களின் தொடராக வழக்கில் இல்லாத பழங்கள் கிடைத்தது.

وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا
பைத்துல் முகத்தஸ் பொறுப்பாளர்களிடையே வளர்ப்பில் சர்ச்சை
وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ(44)3

ஜகரிய்யா அலை பொறுப்பில் வளர்ந்தது,
وَكَفَّلَهَا زَكَرِيَّا
மிஹ்ராபில் தங்கி இருந்தது. மறைமுக உணவு உதவி.
كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا
ஜகரிய்யா அலை கேள்வியும் மர்யம் அலை பதிலும்.
قَالَ يَامَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ
மலக்குகள் மர்யம் அம்மையாரிடம் பேசினார்கள்
وَإِذْ قَالَتْ الْمَلَائِكَةُ يَامَرْيَم

அவர் இறைவனின் நெருக்கம் பெற்றார்.
إِنَّ اللَّهَ اصْطَفَاكِ

ஹைளிலிருந்து பரிசுத்தம் பெற்றார்.
ُ وَطَهَّرَكِ

அவர் உலகத்து பெண்களில் சிறந்தவர்

وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ(42)

عن عَلِي رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ   - البخاري 3432

அவரது நடவடிக்கைகளை குர் ஆன் பேசுகிறது.
மர்யம் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருந்தார்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا

அவரது அறஒ கிழக்கு திசையில் அறை,
مَكَانًا شَرْقِيًّا

பர்தா அணிந்திருந்தார்.
فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا

அவரிடம் மனித தோற்றத்தில் மலக்கு வந்தார்  
فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا(17)
இறைவனின் தரப்பிலிருந்து நற்செய்தி
إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا(19)

ஆச்சரிய வினா
قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُنْ بَغِيًّا(20)
பதில்
هُوَ عَلَيَّ هَيِّنٌ
ஆண் தொடர்பின்றி குழந்தை உருவானது.

பிரசவ வலி
فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ
மனம் பதைத்தது.

மரத்தடியிலிருந்து மலக்கு
சமூகத்தின் அவதுறு
மர்யம் (அலை) மௌன விரதம் ,
فَإِمَّا تَرَيْنَ مِنْ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَانِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا(26)

குழந்தை ஈஸாவின் பேச்சு

ஈஸாவின் அற்புதங்கள்,
பொம்மைகளுக்கு உயிர்,

أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنْ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ
பிறவிக் குருடு, குஷ்ட நோயுக்கு நிவாரணம்.
وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ
மரணித்தவருக்கு உயிர்
وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ
உண்ட உணவு பற்றி, வீட்டுச் சேமிப்பு பற்றி   செய்தி
وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنينَ(49)

அரசிற்கு எதிராக ஈஸா அலை கலகம் செய்வதாக சொல்லி பொய்க் குற்றத்தின் பேரில் அவருக்கு மரண தண்டனை அளிக்க யூதர்கள் சதி செய்தனர். ஆனால் அந்த முயற்சியை இறைவன் அற்புதமாக முறியடித்தான். ஈஸா நபியை காட்டிக் கொடுக்க வந்தவனையே தண்டணையில் இறைவன் சிக்க வைத்தான்,
ஈஸா நபியின் மொத்த வாழ்வும் அதிசயம். அவரை காப்பாற்றிய விதமும் அதிசயமாகவே இருந்தது.
وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
ஈஸா அலை அவர்களை வானத்திற்கு உயர்த்தினான்
وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ
ஈஸா அலை அவர்களின் அங்க அடையாளங்கள். அழகானவர்
وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنْ الْمُقَرَّبِينَ(45)

நடு நிலை உயரம்,  
சிவப்பு கலந்த வெண்மை
மேனியில் மஞ்சள் நிறத்தில் இரண்டு ஆடைகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ وَأَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ لِأَنَّهُ لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلًا مَرْبُوعًا إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ عَلَيْهِ ثَوْبَانِ مُمَصَّرَانِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيَدْعُو النَّاسَ إِلَى الْإِسْلَامِ فَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمَسِيحَ الدَّجَّالَ وَتَقَعُ الْأَمَنَةُ عَلَى الْأَرْضِ حَتَّى تَرْتَعَ الْأُسُودُ مَعَ الْإِبِلِ وَالنِّمَارُ مَعَ الْبَقَرِ وَالذِّئَابُ مَعَ الْغَنَمِ وَيَلْعَبَ الصِّبْيَانُ بِالْحَيَّاتِ لَا تَضُرُّهُمْ فَيَمْكُثُ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ

உஸ்வது பின் மஸ்வூதை போன்றவர்
عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُرِضَ عَلَيَّ الْأَنْبِيَاءُ فَإِذَا مُوسَى ضَرْبٌ مِنْ الرِّجَالِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ عِيسَى ابْنَ مَرْيَمَ عَلَيْهِ السَّلَام فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ    مسلم 244

அவர் மதீனாவில் இறப்பார். பெருமானாருக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்படுவார்.

عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَصِفَةُ عِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي الْبَيْتِ مَوْضِعُ قَبْرٍ -  ترمذي


இவ்வளவு விரிவாக ஈஸா அலை பற்றி பேசக் காரணம்.

அவரிடம் ஒரு முக்கியப் பொருப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது, முஹம்மது நபியின் உம்மத்தாக இருந்து அக்காரியங்களை அவர் நிறைவேற்றுவார்,

இந்த உலகில் ஏற்படும் குழப்பங்களில் மிகப் பெரியது தஜ்ஜாலின் குழப்பம்
அது குறித்து அனைத்து நபிமார்களும் எச்சரிட்துள்ளனர்.

ما من نبي إلا وقد أنذر  الدجال

சூனியம் உள்ளிட்ட சில சக்திகளை காட்டி மக்களை ஈர்ப்பான்
அந்தக் குழப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஈஸா அலை வருவார்கள். தஜ்ஜாலின் குழப்பத்திற்கு முடிவு கட்டுவார்கள்.

மனித சமூகத்தின் பெரும் குழுப்பம் தஜ்ஜாலுடையது என்பதாலும். அதை முடிவுக்கு கொண்டு வருபவர் ஈஸா அலை என்பதாலும் இவ்விரண்டு விசயங்கள் குறித்தும் பெருமானார் (ஸல்) அவர்கள் மிக துல்லியமாக கூறியுள்ளார்கள்.

பிறப்பு, வளர்ப்பு, உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மை கொண்ட எவருக்கும் ஒப்பில்லாத ஈஸா அலை அவர்களை இப்பணிக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்.

அதனால் அவர் வரும் போது மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்கு வசதியாக ஏராளமான அடையாளங்கள் இஸ்லாம் வெளிப்படுத்தியுள்ளது.

·         கியாமத்தின் நெருக்கத்தில் வானிலிருந்து இறங்குவார்
·         தலையில் பெரிய தொப்பி இருக்கும்
·         இரு கைகளையும் இரு மலக்குகளின் தோள்களின் மீது போட்டவாறு இற்ங்குவார்
·         அவர் கையில் கூர் ஆயுதம். அதன் மூலம் தஜ்ஜாலின் கொலை( இபுனு அஸாகிர்)
·         இறங்குமிடம்
·         டமாஸ்கஸ் நகரின் ஜாமி ஆ மஸ்ஜிதின்  கிழக்கு மூலையின் வெள்ளை மினாரா வின் வழியாக சுபுஹ் நேரத்தில் இறங்குவார்.
·         அப்போது இமாம் மஹ்தி பள்ளியில் கூட்டத்தோடு இருப்பார்கள் (தைலமி)
·         அது ஸப்புகளை சரி செய்யும் நேரமாக இருக்கும்.
·         மக்கள் ஈஸா அலை) அவர்களை இமாமத் செய்ய கோருவார்கள். அவர் மறுத்து மஹ்தி அலை அவர்களுக்குப் பின் நின்று தொழுவார்.
·         பூமில் நாற்பது நாட்கள் தங்குவார்
·         ஒவ்வொரு நாளும் அளவில் வித்தியாசமானதாக இருக்கும்.
·         சு ஐபு நபியின் சமூகத்த்தைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வார்.
·         குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் (பத்ஹுல் பாரி)
·         சிலுவை வணத்தை தடை செய்வார்
·         பன்றியை கொலை செய்வார்கள்
·         கிருத்துவர்களை அப்புறப் படுத்துவார்கள்
·         தஜ்ஜாலை பாலஸ்தீனில் சிரியாவுக்கும் இராக்கிற்கும் இடைப் பட்ட பாபுல் லுத் என்ற இடத்தில் நடக்கும் சண்டையில் கொல்வார்.
·         பணப் பெருக்கம் ஏற்படும்
·         தங்கம் வெள்ளி மிகக்கும்
·         பஜ்ஜு ரவ்ஹா என்ற இடத்தில் ஹஜ்ஜு உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) இஹ்ராம் கட்டுவார். (முஸ்லிம்)
·         நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வருவார். சலாம் சொல்லுவார்.
·         பெருமானாரின் பதிலை அங்கு இருப்போர் அனைவரும் செவியுறுவர். (துர்ருல் மன்சூர்)
·         ளாஹிர் பாத்தின் ஆன அனைத்து பரகத்துகளும் 7 வருடங்கள் தொடர்ச்சியாக இருக்கும் ( முஸ்லிம்)
·         அவர் வபாத்தானா பிறகு . பெருமானாருடன் அடக்கம் செய்யப்படுவார். (அஹ்மது)

ஈஸா (அலை) சில ஹதீஸ்கள்

عَنْ ابْنِ الْمُسَيَّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ-   البخاري -2070
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا فَيَقُولُ لَا إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الْأُمَّةَ- مسلم 225

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ – ابوداوود 3766


வரலாற்றின் மாபெரிய ஒரு ஈமானிய புரட்சிக்கு உலக முஸ்லிம்கள் ஈஸா நபியின் தலைமையில் அணி திரள்வார்கள் என்கிற காரணத்தினால் ஈஸா நபி குறித்து மிக பெருமையான விரிவான பல செய்திகள் முஸ்லிம் உம்மத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களிடமிருந்து வரலாறு ஈஸா நபியை பற்றி உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

நாம் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறோம். ஈஸா சிலுவையில் அறையப்பட வில்லை, அவர் உயிர்த்தெழவும் இல்லை.

இவ்வாறு சொல்வது அவர் ஒரு இறைதூதைச் சுமந்த சிறந்த மனிதர் என்பதற்கே இழுக்கு எனும் போது அவரை இறைவன் என்று நம்பிக் கொண்டு இவ்வாறு சொல்வது எத்தகைய இழுக்கு ?

கிருத்துவ சமுதாயம் யோசிக்க வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!

பின் வரும் தலைப்புக்களையும் பார்த்துக் கொள்ளலாம்


பொய் வெளிச்சத்தில் புனித வெள்ளி
ஈஸா (அலை)











1 comment: