வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 13, 2025

ஒளு முகத்தையும் அகத்தையும் அழகு படுத்தும் கலை

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ)

தற்காலத்தில் உடலை அழகு படுத்திக் கொள்வதற்கு மக்கள்  ஏராளாமாக செலவு செய்கிறார்கள்.

கை கால் முகம் கழுவுவது என்பது மிக சாதாரணமான ஒரு வேலை ஆனால் அதுவே இன்று பல நூறு ரூபாய்கள் செலவு செய்து ஏன் சில ஆயிரம் ரூபாயகள் செலவு செய்யும் ஒரு ஏற்பாடாக மாறியிருக்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு - தண்ணீர் வசதி குறைவான நிலத்தில் தோன்றிய இஸ்லாம் கை கால் முகத்தையும் இன்னும் சில உடலின் பிரதான உறுப்புக்களையும் சுத்தகமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்கிற ஒரு அருமையான ஏற்பாட்டை செய்திருக்கிறது.

அது தான் ஒளு 

அது இஸ்லாமின் தனித்துவநக்களில் ஒன்றாகும்  

இஸ்லம் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சாதனை அல்லது சிறப்பு எது என்றால் ஏராளமாக சொல்ல்லாம். அதில்  பிரதானமான ஒன்று

தினமும் பல தடவை கை கால் முகம் கழுவிக் கொள்ளும் ஒரு பழக்கத்தை 1400 வருடங்களாக முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

குளிர் வாட்டி வதைக்கும் குளிர்பிரதேசங்களிலும் இதற்கு வரவேற்பு உண்டு.

ஒளு – ஒரு முஹம்மதிய சாதனை

கை கால முகம் கழுவிக் கொள்ளுதல் என்பது பல சமூகங்களிலும் இருக்கிறது.

அரபியில் கூட கழுவுதல் என்பதற்கு அஸல் என்ற சொல் இருக்கிறது

திருக்குர் ஆன் கூட இந்த சொல்லை தான் பயன்படுத்தியிருக்கிறது.  

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ)

ஆனால் இதற்கு பெருமானார் சூட்டிய பெயர்  ஒளு என்பதாகும்.

ஒளு என்பதை பெருமானாரின் பெருமைக்குரிய சொல் என்றால் அது மிக்கயல்ல/.. 

கை கால் முகம் கழுவிக் கொள்ளுதலுக்கு இந்த வார்த்தை இஸ்லாமிய மரபில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  

ஒளு என்ற சொல்லின் பொருள் –பளிச்சிடுதல் என்பதாகும்,.

الوضوء في اللغة مشتق من الوضاءة أي الحسن والبهاء

 கை கால கழுவுவதை ஏன் ஒளு பளிச்சிட செய்தல் என்று சொல்லப்பட்ட்து எனில்

 இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஒளு பாவக் கறைகளை

சுத்தப்படுத்தி மனிதனை வெளிச்சப்படுத்துகிறது என்பதனால் ஆகும்.

 وعن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنهُ أن رَسُول اللَّهِ ﷺ قال: (إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقياً من الذنوب) رَوَاهُ مُسلِمٌ.

 سمي الوضوء الشرعي بذلك؛ لأنه نور من ظلمة الذنوب 

 ஒளுவின் பளபளப்பு மறுமையில் தெரியும்

 عن أبي هُرَيرةَ رَضِيَ اللهُ عنه قال: سمعتُ رسولَ الله صلَّى اللهُ عليه وسلَّم يقول((إنَّ أمَّتي يُدعَون يوم القيامة غُرًّا محجَّلين من آثارِ الوُضوءِ

 நமது ஒளுவின் பளபளப்பை வைத்து பெருமானார் (ஸல்) அவர்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள்

 ஸஹீஹ் முஸ்லிமில் அபூஹுரைரா ரலி அவர்களின் ஒரு அறிவிப்பில் வருகிறது. எங்களுக்கு பின் வருகிற உங்களுடைய உம்மத்தை எப்படி அடையாளம் கண்டு கொள்வீர்கள் என்று சஹாபாக்கள் கேட்டார்கள். சுத்த கருப்பு நிறம் கொண்ட பிராணிகளுக்கிடையே முகம் வெளுத்த பிராணிகளை உங்களில் ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள மாட்டாரா என்று பெருமானார் (ஸல்) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். 

 عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أُمَّتِي أَحَدٌ إِلَّا وَأَنَا أَعْرِفُهُ يَوْمَ الْقِيَامَةِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ رَأَيْتَ وَمَنْ لَمْ تَرَ قَالَ مَنْ رَأَيْتُ وَمَنْ لَمْ أَرَ غُرًّا مُحَجَّلِينَ مِنْ أَثَرِ الطُّهُورِ– احمد

 ஒளுவின் மற்ற சிறப்புகள்

 சரியாக ஒளு செய்து தொழுதால்சொர்க்கம் கிடைக்கும்

 عن عُقبةَ بن عامر رَضِيَ اللهُ عنه قال سمعتُ رسولَ الله صلَّى اللهُ عليه وسلَّم يقول ما من مسلمٍ يتوضَّأ فيُحسِنُ وضوءَه، ثم يقومُ فيصلِّي ركعتين، مقبلٌ عليهما بقَلبِه ووجهِه، إلَّا وجبتْ له الجنَّ

ஒளு செய்த இடங்களை நகைகள் அலங்கரிக்கும்.

 عن أبي هُرَيرةَ قال: سمعتُ خليلي صلَّى اللهُ عليه وسلَّم يقول((تَبلُغ الحِليةُ من المؤمِن حيث يبلُغ الوضوءُ

சிரமத்தோடு ஒளு செய்தால் அந்த அளவு அந்தஸ்த்து அதிகரிக்கும்

 وعنه رَضِيَ اللَّهُ عَنهُ أن رَسُول اللَّهِ ﷺ قال: (ألا أدلكم على ما يمحو اللَّه به الخطايا، ويرفع به الدرجات ) قالوا: بلى يا رَسُول اللَّهِ. قال: (إسباغ الوضوء على المكاره، وكثرة الخطا إلى المساجد، وانتظار الصلاة بعد الصلاة؛ فذلكم الرباط، فذلكم الرباط) رَوَاهُ مُسلِمٌ.

 ஒளு சைத்தானை விரட்டுகிறது.

 إنَّ الغضَبَ مِنَ الشيطانِ، وإنَّ الشيطانَ خُلِقَ منَ النارِ، وإنَّما تُطفأُ النارُ بالماءِ، فإذا غضِبَ أحَدُكم فلْيَتوضَّأْ. أبو داود 

قال عمر رضي الله عنه: إن الوضوء الصالح يطرد عنك الشيطان

ஒளு சாத்தானிய முடிச்சுகளை அவிழ்க்கும்

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ

ஒளுவினால் துஆ ஏற்கப்படும். 

فقد روى الإمام أحمد في "مسنده" أن النبي صلى الله عليه وآله وسلم قال: «مَا مِنْ رَجُلٍ يَبِيتُ عَلَى طُهْرٍ ثُمَّ يَتَعَارُّ مِنَ اللَّيْلِ فَيَذْكُرُ وَيَسْأَلُ اللهَ عَزَّ وَجَلَّ خَيْرًا مِنْ خَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ إِلَّا آتَاهُ اللهُ عَزَّ وَجَلَّ إِيَّاهُ».
ஒளுவினால் பெருமானாரின் ஷபாஅத் கிடைக்கும்
روى ابن مسعود رضي الله عنه حيث قال: قِيلَ يَا رَسُولَ اللهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «هُمْ غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الْوُضُوءِ» رواه ابن ماجه

எனவே ஒளு என்பது உறுப்புக்களை சுத்தப்ப்டுத்துதல் என்பதற்காக மட்டுமல்ல பாவங்களிலிருந்து பரிசுத்த மடைதல் என்ற கண்ணோட்டத்தையும் கொண்டிருப்பதால் ஒளு, மனித முகத்தையும் அகத்தையும் சேர்த்தே பொலிவாக்கும் செயலாகும்.

 ஒளுவின் மருத்துவ நன்மைகள்

 ஒளு செய்வதற்காக சொல்லப்பட்ட மிறைகளில் மருத்து அறிவியல் அதிசயக்கும் பல அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.

 மிக முதன்மையானது ஒளுவினால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் குறைகிறது.

 கை களில் ஒட்டிக் கொண்டிருக்கிற கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வயிற்றுக்குள் செல்லுமானால் Eczema மற்றும் Fungus (பூஞ்சை) ஆகிய நோய்கள் ஏற்படும். பன்றிக் காய்ச்சலை விட்டும் பாதுகாப்புப் பெற கைகளை டிக்கடி கழுகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனோ காலத்திற்குப் பிறகு அதிகமாக கை கழுவுவதன் அவசியத்தை அனைவரும் அறிந்திருக்கிறோம்.

 வாய் கொப்பளிப்பதால் உதட்டின் ஓரங்கள  வெளுத்து  மாவு போன்ற வெண்ணிற புண் போன்ற  நோய்கள  குணமடைகின்றன.

 நாசிப்பகுதிக்குள் படிந்து விடுகிற நுண்கிருமிகளை மூக்கிற்கு தண்ணீர் செலுத்துவதால் அழித்து விட முடிகிறது.  சுவாசிப்பதை அது எளிம்மயாக்குகிறது.

 தலை காது மற்றும் கழுத்தை தண்ணீர் தொட்டு தடவுவது என்பது உலகில் நாகரீகம் பற்றி பேசுகிற எந்த சமூகமும் சிந்திக்காத செயல்களாகும்.

 கழுத்து நரம்பு உடலில் பிரதானமானது அதை தடவிக் கொடுப்பது உடலுக்கு பல வகைகளில் உதவி கரமானது என்கிறார்கள் மருத்துவர்கள்

 பிரான்ஸ் நாட்டில் ஒரு மனிதர் ளூஃ செய்வதை ஒரு மருத்துவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். அவர் நான் பாகிஸ்தானி என்று பதிலளித்தார்.

உங்கள் நாட்டில் மன நிலை பாதிக்கப் பட்டோர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று மருத்துவர் கேட்டார். அதிகம் இல்லை 2 3 மருத்துவ மனைகள் இருக்கின்றன என்றார் பாகிஸ்தானி.

அந்த மருத்துவர் கூறினார். நீங்கள் இப்பொழுது செய்ததைப் (ளூஃ) போன்று தினமும் செய்வீர்களா?” என்று கேட்டார்.  குறைந்தது ஒரு நாளைக்கு 5 முறையாவது செய்வோம்என்றார் பாகிஸ்தானி.

ஆச்சரியமடைந்த அந்த நிபுணர் தன்னை அவரிடம் அறிமுகப் படுத்தியப்பின் இவ்வாறு கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் எங்கு நோக்கிலும் மன நிலை பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை அதிகம் உள்ளது. அதைப் பற்றி நாங்கள் ஒரு குழு ஆராய்ந்தோம். இயற்கையாகவே மனிதனின் மூளைப்பகுதியிலிருந்துதான் உடல் முழுக்க உத்தரவுகள் இடப்படுகின்றன. மூளையிலிருந்து மெல்லிய நரம்புகள் கழுத்தின் பின்பகுதி வழியாக  முழு உடலுக்கும் செல்கிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவையாவது தண்ணீரால் கழுத்துப் பகுதியை தண்ணீரால் தடவினால் மன நோயை தவிர்க்கலாம் என்று நாங்கள் கண்டு பிடித்தோம் அது மட்டுமல்ல இவாறு தொடர்ந்து செய்தால் கழுத்து பக்கவாதமும் ஏற்படாதுஎன்று கூறினார்.

சாதாரணமாக வெளிநாடுகளில் அதிக வேலை செய்து களைத்துப் போனவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களிடம் கழுத்துக்கு மஸாஜ் செய்ய சொல்லும் காட்சி அதிகமாக பார்க்கலாம்.

 நபி (ஸல்) அவர்கள தனது சுன்னத்துகளால் நமது வழிபாடுகளை மட்டுமல்ல நமது வாழ்வையும் எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிந்திப்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.

 எப்போதும் ஒளுவுடன் இருப்பதன் நன்மைகள்

 நாம்  எப்போதும் ஒளுவுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

 நம்முடைய முன்னோர்களில் சிலர் 

பல வருடங்கள் இரவின் ஒளுவில் பஜ்ரு தொழுதிருக்கிறார்கள்.

ஒளு இல்லாவிட்டால் முஹம்மது என்ற சொல்லை உச்சரிக்க மாட்டார்கள்

ஒளு இல்லாமல் கஃபாவை பார்க்க மாட்டார்கள்

 உறுதிமிக்க ஈமானுக்கு அடையாளம் அது

، قال صلى الله عليه وسلم-: (وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ) [أحمد من حديث ثوبان

 மலக்கு துஆ செய்கிறார்

 من باتَ طاهرًا باتَ في شعارهِ ملكٌ لا يستيقظُ ساعةً من الليلِ إلا قال الملك : اللهُمَّ اغفِرْ لعبدِكَ فلان فإنه باتَ طاهرًا

 ஷஹாதத்தை பெறும் மிக எளிய வழி

  أن النبي صلى الله عليه وآله وسلم قال لأنس رضي الله عنه: «يَا بُنَيَّ، إِنِ اسْتَطَعْتَ أَلَّا تَبِيتَ إِلَّا عَلَى وَضُوءٍ فَافْعَلْ، فَإِنَّهُ مَنْ أَتَاهُ الْمَوْتُ وَهُوَ عَلَى وَضُوءٍ؛ أُعْطِيَ الشَّهَادَةَ»,

 அதிகார வர்க்கத்தின் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழி  

 தாமதமாக வந்த பாதிரி

 أرسل عمر بن الحطاب رضي الله عنه رسولاً إلى الشام فمر على دير راهب فطرق بابه ففتح له بعد ساعة فسأله عن ذلك فقال أوحى الله إلى موسى عليه السلام إذا خفت سلطانا فتوضأ وأمر أهلك به فإن من توضأ كان في أمان مما يخاف فلم أفتح لك حتى توضأنا جميعا

 பெரும்பாலும் ஒளுவுடன் இருப்பது முடியாத காரியமல்ல  

 நாம் கை கால் முகம் கழுவுகிற போதெல்லாம் ஒளு செய்து கொள்வது என்று நினைவில் வைத்துக் கொண்டால். அது போல ஒளு முறிவதை பற்றிய சிந்தனையையை கவனத்தில் வைத்துக் கொண்டால் ஒளுவை தக்க வைத்துக் கொள்வது எளிதாகும்.

ஒளு செய்தால், எப்போதும் ஒளுவுடன் இருந்தால் இப்படி ஏராளமான நன்மைகள் கிடைக்கிற போது அந்த ஒளுவை சரியாக செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவசர கதியில் அக்கறையில்லாமல் முழுமை இல்லாமல் செய்யப்படும் ஒளு உரிய பயனை தராது.

 சரியாக செய்தல்

ஒளுவின் பிரம்மாண்ட நன்மைகளை சொல்லுகிற சமயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் முழுமையாக செய்தால் என்ற ஒரு சொல்லை தவறாமல் பயன்படுத்துவார்கள்.

 يا أنسٌ، أسبِغِ الوُضوءَ يَزِدْ في عُمُرِكَ

 ஒளு சரியாக செய்யும் போது தான் நாம் நிறைவேற்றும் அமல்கள் செல்லுபடியாகும். இல்லை ஒளு சரியாக இல்லை எனில் அதனால் நிறைவேற்றப்படும் அமல்கள் செல்லாது.

  •  தொழுகை
  • ஜனாஸா தொழுகை
  • குர் ஆனை  தொடுதல்
  • தவாபு செய்தல்

 ஆகியவற்றிற்கு ஒளு அவசியமாகும். சரியாக ஒளு செய்யாமல் இந்த அமல்களை செய்வது குற்றமாகும்.

 பெருமானாரின் கடும் கண்டிப்பு

عبدالله بن عمرو 

 رأى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ قومًا يتوضَّؤونَ ، فرأى أعقابَهم تلوحُ ، فقالَ ويل للأعقابِ من النَّارِ أسبغوا الوُضُوءَ- البخاري

 இது ஒவ்வொரு உறுப்பை கழுவுவதில் செய்கிற குறைபாட்டுக்கும் பொருந்தும்.

 சரியாக ஒழு செய்வது எப்படி

 ஒளுவின் பர்ளுகள் 6 (ஹனபி 4)

  1.  ஒளுவின் பர்ளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்வது
  2.  முகம் கழுவுவது. நெற்றியின் மேல் புறத்தில் தலையில் முடி முளைக்கிற இட்த்திலிருந்து தாடையின் கீழ் பகுதி  வரையும் இரண்டு காது சேனைவரையும் உள்ள முழு முகத்தையும் கழுவ வேண்டும் . இடையில் எந்த பகுதியும் விடுபடக் கூடாது. முகத்தில் தண்ணீரை அடிப்பது போதாது.  இதிலுள்ள முடிகள் அனைத்தையும் கழுவ வேண்டும்.                                                        தாடி அடர்த்தியாக இருந்தால் தாடியின் மேல் பகுதியை கழுவ வேண்டும். தாடி சிறியதாக இருந்தால் தாடை வரை தண்ணீர் சேர வேண்டும்.
  3.    முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவ வேண்டும். இருக்கமான சட்டை அணிந்து வந்து முழங்கையை முழுமையாக கழுவாவிட்டால் சரியாகாது.கைகளில் நகங்கள் நீளமாக இருந்து தண்ணீர் நகத்தை அடுத்த உடல் பகுதிக்கு தண்ணீர் செல்வது தடையாகும் எனில் ஒளு சரியாகாது. இறுக்கமான மோதிரத்தை அசைத்து விட்டுக் கொள்ள வேண்டும்காயங்களுக்கு கட்டுப் போடபட்டிருக்குமானால் கட்டிடப் பட்ட பகுதியை தடவிக் கொள்ள வேண்டும்.நாமே தண்ணீர் எடுத்து கழுவும் போது விரலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிறர் தண்ணீரை ஊற்றினால் முழங்கையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்..
  4.  தலைக்கு மஸஹ் செய்ய வேண்டும்..   தலையில் நான்கில்  ஒரு பகுதியை தடவினால் போதுமானது. தலை முழுவதையும் தடவுவது சுன்னத்து. கையை முன்புறமிருந்து பின்னுக்கு ஓட்டி அப்படியே முன்புறமாக கொண்டு வந்து விடுவது சிறப்பு.
  5.  இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும். குதிகால்கள் கழுவப்படாமல் போக கூடாது
  6. வரிசை தப்பாமால் செய்ய வேணடும் .  

 இவ்வாறு கழுவும் போது கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விசயங்கள்

 1.       கழுவப்பட வேண்டிய இடங்களை முழுமையாக கழுவ வேண்டும்.

2.       மெழுகு மாவு போன்ற தண்ணீர் ஊடுறுவுவதை தடுக்கும் பொருட்கள்

இருக்க கூடாது.

3.       ஒழு செய்து கொண்டிருக்கும் போது ஒளு முறிந்து விடக் கூடாது.

 

ஒளுவின் சுன்னத்துக்கள்

 ·         பிஸ்மி சொல்லி தொடங்குவது

·         ஆரம்பிக்கும் போது மணிக்கட்டுவரை மூன்று முறை கழுவுவது.

·         வாய் கொப்பளிப்பது.

·         மூக்குக்கு தண்ணீர் செலுத்துவது.

·         தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு தண்ணீர் தொட்டு தடவுவது

·         இரு காதுகளையும் தண்ணீர் தொட்டு தடவுவது

·         பிடரியை தண்ணீர் தொட்டு தடவுவது

·         தேய்த்தும் கோதியும் கழுவுவது.

·         வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.

·         கிப்லாவை முன்னோக்குவது.

·         மூன்று மூறை கழுவுவது

·         மிஸ்வாக் செய்வது.

 மிஸ்வாக் பயன்படுத்துவது அல்லது கையால் பல் தேய்த்துக் கொள்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்து சொன்னார்கள்.

இஹ்யாவு உலூமித்தீனில் ஒரு செய்தி வருகிறது.

வாய் குர் ஆனின் வாசல் அதை மணமாக வையுங்கள்

عن النبي صلى الله عليه وسلم قال إن أفواهكم طرق القرآن فطيبوها بالسواك

அதனால் மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள்

பல் இல்லாவிட்டாலும் கூட அந்த இடத்தை தேய்த்துக் கொள்ளுங்கள்.  இஹ்ராமில் இருந்து வெளியேறுவதற்கு சொட்டையாக இருப்பவர் காலி மண்டையில் கத்தியை ஓட்டுவது போல.

 ومن لا أسنان له يمر بالسواك على موضعهما برفق قياسا على استحباب إمرار الموس على رأس محرم لا شعر به

 ஒழு செய்யும் போது தவிர்க்க  வேண்டியவை

 ·         தண்ணீரை விரயம் செய்வது.

·         தண்ணீரை கஞ்சத்தனமாக பயன்படுத்துவது

·         தண்ணீரை முகத்தில் அடிப்பது

·         அநாவசிய பேச்சுக்களை பேசுவது

·         ஒளு செய்ய தேவையின்றி பிறரின் உதவியை கேட்பது.

·         சுன்னத்துகளுக்கு மாற்றமாக நடப்பது.

 ஒளுவை முறிக்கும் காரியங்கள்

இஸ்லாமிய தூய்மை சட்ட்த்தின் மிக உன்னதமான அம்சங்கள் இவை.

உலகில் உடல் சுத்தம் பற்றி பேசுகிற எவரும் \ஏதேனும் அசுத்தம் பட்டால் அசுத்தமாகி விடும் என்று பொதுவாக  சொல்லியிருக்கிறர்களே தவிர இஸ்லாம் கூறியது போல நுட்பமான விபரங்களை தெரிவித்த்தில்லை

1.   முன் பின் துவாரங்களிலிருந்து வெளியேறும் சிறுநீர் மலம் காற்று

2.   உடல் புரள ஆழ்ந்த உறக்கம்

3.   மயக்கமாவது,பைத்தியம் பிடிப்பது.

 இன உறுப்பை தொடுவது, மஹ்ரமில்லாத பெண்ணை அல்லது ஆணை ஆடையின் தொடுவதும் ஷாபி மதஹபில் ஒளுவை முறிக்கும்.  ஹனபி மதஹபில் இவை ஒளுவை முறிக்காது.

 வாந்தி எடுப்பதும், தொழுகையில் வெடிச் சிரிப்பு சிரிப்பதும் ஹனபி மத்ஹபில் ஒளுவை முறிக்கும். ஷாபி மதஹபில் இவை ஒளுவை முறிக்காது.

 ஒளுவை முறிக்கும் காரியங்களை பற்றிய தெளிவு நம்மிடம் இருக்குமானால் ஏராளமான சந்தேகங்கள் தானாக தீர்ந்து விடும்.

 லுஹருக்கு செய்த ஒளுவால் அஸர் தொழலாமா?

கண்ணுக்கு மை போட்டால்,பவுடர் அடித்தால், வீடு கூட்டினால் தலையிலிருந்து முக்காடு விலகினால் பள்ளிவாசலிலிருந்து வெளியேறி விட்டால் ஆடை மாற்றினால் ஒளு முறிந்து விடுமா ? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் தானாகவே தெளிவாகிவிடும்.

 இஸ்லாம் வழங்கிய ஒளு எனும் அம்சத்தின் மற்றொரு பெருஞ் சிறப்பு

 தோல் காலுறையின் மீது மஸ்ஹ் செய்வதாகும்.

 ஒரு தடவை தண்ணீரால் ஒளு செய்து விட்டு காலுக்கு தோளால் செய்யப்படுகிற இறுக்கமான தண்ணீர் ஊடுறுவாத காலுறை (மோஜா) அணிந்து கொண்டால் உள்ளூரில் வசிக்கிற போது ஒரு நாள் முழுவதும் அதை கழற்ற வேண்டியதில்லை. அதற்கு மேலே தண்ணீரை தொட்டு தடவிக் கொண்டால் போதுமானது.

 குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கால் நனைவது தான் பெரிய பிரச்சனை . இதற்கான அருமையான தீர்வு இது.  

 ஒளு இஸ்லாம் வழங்கிய – அற்புதமான ஒரு வணக்கமாகும். சும்மா ஒளு செய்தாலெ அதற்கும் நன்மையுண்டு.

  ஒளுவிற்கு பிறகு இந்த துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எந்த வாசல் வழியாகவும் நுழையலாம்.

 عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قالمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ، رواه مسلم.

زاد الترمذي (55): اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنْ الْمُتَطَهِّرِينَ

 ஒளு என்பது உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கு பேரழகு சேர்க்கும் ஒரு அழகுக் கலை செயலாகும்.

ஒளுவில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான 3 தத்துவங்க  உண்டு


 1 ஒளு ஒரு விழிப்பு நிலையில் நம்மை வைக்கிறது.

ஒளுவுடன் இருக்கும் போது இஹ்ராமில் இருப்பது போன்ற ஒரு கட்டுப்பாடு இயல்பாக நம்மிடம் இருக்கும்.

ஒளுவை முறித்துவிடும் காரியங்களில் கவனமாக இருப்போம்.

அந்த கவனம் ஆண்களை பீடி சிகரட் பிடிக்க விடாமல் ஆண்களை தடுக்கிறது. டீ குடித்தால் கூட வாய் கொப்பளிக்க தூண்டுகிறது.

அந்த கவனம் பெண்களை தலையிலிருந்து முக்காட்டை எடுக்காமல் தடுக்கிறது.

இது போன்ற எச்சரிக்கை நமது இதயத்தை பரிசுத்தமாக வைத்திருக்க உதவும்,

எப்போது\ம்சுத்தம் பற்றிய அக்கரையை நாம் மனதுக்குள்  ஏற்படுத்துகிறது.

இதில் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.

 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222

3 இந்த வரிசை முறையில் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டுப்பாட்டை வளர்க்கிறது.

 நான கால கழுவி விட்டு அப்புறம் கை  கழுவிக் கொள்கிறேன் என்று சொல்கிற தான்தோன்றித்தனத்தை அது தடுத்து விடுகிறது 

ஆகவே தான் ஒளு உடலை மட்டுமல்ல மனதையும் அழகு படுத்தும் ஒரு கலை என்று சொல்கிறோம். 

 அந்த ஒளுவை சரியாகவும் சிறப்பாகவும் ஒளு செய்து வாழும் சமுதாயமக நாம் இருப்போம்.

வாழ்வில் அதிக நேரம் ஒளுவுடன் இருக்க முயற்சி செய்வோம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!