வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 11, 2025

ஆணவம் தலைக்கேறியுள்ள இஸ்ரேலும் அச்சத்தில் அரபு நாடுகளும்.

கடந்த செவ்வாய்க்கிழமை கத்தார் நாட்டின் தலை நகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பல நாடுகளிலும் நடைபெறுகிற சண்டைகளை சமரசம் செய்து வைப்பதில் ஈடுபாடு காட்டி வரும் கத்தார் மீது இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அமெரிக்கா வின் ஏற்பாட்டின் போரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் திட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர்களுடன் பேச்சுவார்த்தையில் கத்தார் ஈடுபட்டிருக்கும் போது இந்த தாகுதல் நடை பெற்றிருக்கிறது.

இதை அக்கிரமத்த்ன் உச்சம் என்று பத்ரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

கத்தார் நாட்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்று இருக்கிறது. அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை அணி கத்தர் நாட்டிலேயே இருக்கிறது.

இந்த நிலையில் கத்தார் மீது விமானங்கள் மூலமாக கத்தாரின் தலை நகரில் உள்ள Katara Cultural Village  எனும் இட்த்தில் ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த இடத்தின் மீது குறிவைத்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பரசீக வளைகுடாவில் உள்ள ஒரு அரபு நாட்டின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள முதல் தாக்குதல் இது. ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரான இஸ்மாயில் ஹனீய்யாவின் அலுவலகம் இருந்த பகுதியில் ஒன்று கூடியிருந்த கலீல் ஹய்யா, காலித் மஸ்கல், தர்வேஷ், மர்சூக் ஆகிய ஹமாஸின் தலைவர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 இது இஸ்ரேலின் உளவு அமைப்பின் பலத்தையும் அரபு நாடுகளின் பலவீனத்தையும் அமெரிக்காவின் நயவஞ்சக்த்தனத்தையும் உலகிற்கு ஒரு சேர காட்டியுள்ளது.

 அமெரிக்கா அதிபருக்கு  கத்தார் சமீபத்தில் 400 கோடி டாலர் மதிப்புள்ள விமானத்தை பரிசாக வழங்கியது. தன்னை பாதுகாப்பதற்காக ஆண்டு தோறும் அமெரிக்காவுக்கு ஏராளமான கட்டணத்தை கத்தார் செலுத்தி வருகிறது.  

 ஆனால் தனது நெருங்கிய கூட்டாளி நாடான இஸ்ரேலின் தக்குதலில் இருந்து கத்தாரை காப்பாற்ற அமெரிக்காவால் முடியவில்லை.

 முடியவில்லை என்பதல்ல அமெரிக்க கத்தாரை காப்பாற்ற நினைக்க விலை என்பதே சரி.

 கத்தாருக்குள்  துல்லியமாக இஸ்ரேல் விமானங்கள் மூலம் தக்கியிருக்கிறது என்றால் அமெரிக்காவின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.

 ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுவதாக டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார்.

 இத்தாக்குதல் தனக்கு  தெரியவில்லை என்கிறார் டிரம்ப். உச்ச கட்ட நயவஞ்சத்தனத்தின் நாடகம் அது.

 அரபு நாடுகள் இந்த் அரசியல் நாடகத்தை எப்போது புரிந்து கொள்ளாப் போகிறார்களோ ? அல்லாஹ்வே அறிவான்.

 உலகம் முழுவதிலும் கத்தாருக்கு உள்ள மதிப்பின் காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவை இத்தாக்குதலை கண்டித்துள்ளன. மிக அதிசயமான ஒரு நிகழ்வாக இந்தியா கூட வெளிப்படையாக இத்தாக்குதலை கண்டித்துள்ளது.

 ஆனால் அதை கடந்து இஸ்ரேலுக்கு என்ன நெருக்கடி கொடுக்கப் பட்டுள்ளது என்பது கேள்விக்குரியாகும்.

 ஹமாஸ் தலைவர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளனர். அல்ஹ்ம்துலில்லாஹ். ஆனால் சுமார் ஆறு பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

 அவர்களுடைய ஜனாஸாவில் கத்தார் நாட்டின் அமீர் கலந்து கொண்டுள்ளார்.

 இது போதுமா என்ற கேள்வி தான் இப்போதைக்கு உலக முஸ்லிம்களிடம் இருக்கிற பெரிய கேள்வி ஆகும்.

 நிச்சயம் கத்தார் பதிலடி கொடுக்கும் என்று கத்தார் கூறியுள்ளது.

 ஆனால் அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் அல்லது அமெரிக்காவிற்கு தெரியாமல் கத்தாரினால் பதிலடி தர முடியுமா என்பது ராஜதந்திரிகளின் ஏளனச் சிரிப்புக்குள்ளான கேள்விகளாகும்.

 அரபு நாடுகள் ஒன்று சேர வேண்டும் அல்லது இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இப்போது அறைகூவல் விடப்படுகிறது.

 அந்த இணைப்பு ஏற்கெனவே இருக்கிறது.

அது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டி வைத்த இணைப்பு.

பணத்திமிரிலும் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளும் ஆணவத்திலும் அந்த இணைப்பை அரபு ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினார்கள்.

 அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களையும் அரசியல் ஆதரவையும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாகரீகத்தையும் அரசியல் மரியாதையை எதிர்பார்த்தார்கள்.

 இன்று அரபு நாடுகளின் நிலை ஐயோ என்று இருக்கிறது.

 கத்தாரை தாக்கிய இஸ்ரேலின் அதிபர் ஹமாஸ் அமைப்பினரை வெளியேற்றாவிட்டால் இன்னும் தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

 அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் பலிகடாக்களாக மாறியிருக்கிற அரபு நாடுகள் இப்போதாவது சரியான மாற்றம் குறித்து சிந்திக்குமா என்பது தான் இப்போதையை பெரிய கேள்வியாகும்.

 அரபுகளுக்கு வழிகாட்ட குர் ஆன் ஒன்று போதும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (51

இதை விட வெளிப்படையான வழிகாட்டுதல் வேறென்ன வேண்டும். ?

குர் ஆன் மற்ற சமூகத்தினரோடு உறவாடுவதை தடுக்க வில்லை. அதே நேரத்தில் நீ உனது சமூக அடையாளத்தை ஒதுக்கி விட்டு உங்களின் பாதுகாவலான யூதர்களையும் கிருத்துவர்களையும் ஆக்கிக் கொள்ளாதே என்று எச்சரிக்கிறது.

நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையானவராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமின் மீதான எதிர்ப்புணர்விலேயே இருக்கிறார்கள்.  

அதனால் தான்

ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ என்கிற அளவு அல்லாஹ் எச்சரிக்கிறான்.

 இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள் எனில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான அணியிலேயே நீங்கள் நிற்கிறீர்கள் என்ற வாசகம் எவ்வளவு உறுதி மிக்க விமர்சனத்தை முன் வைக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 பலரும் எடுத்து வைக்கிற ஒரு பலவீனமான வாதத்தை அல்லாஹ் உடைத்து பேசுகிறான்.

 அவர்களோடு தொடர்பு வைக்காவிட்டால் ஆபத்து என்பது தான் அமெரிக்கா இஸ்ரேல் ஐரோப்பாவோடு நட்பு வைக்கிறவர்கள் கூறுகிற சப்பை வாதம் அல்லாஹ் அதை இதயத்தில் உள்ள நோய் என்கிறான்.

  فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ ۚ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ 

 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் இருந்த அரபுகள் யூதர்களின் தொடர்பை தான் தங்களுக்கு பாதுகாப்பாக கருதினர்.

 பத்று யுத்த்தில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போது அது யூதர்களுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்தது. முஸ்லிம்களுக்கு தைரியத்தை கொடுத்தது.

 நீங்கள் சாதாரண வியாபாரிகளை வென்று விட்டதை பெரிதாக கருதிக் கொள்ள வேண்டாம். எங்களை போன்ற போர்த்திறன் படைத்தவர்க்கள் உறுதியாக நின்றால் உங்களால் எங்களை எதிர்க்க முடியாது என்று மாலிக் பின் சைப் என்ற யூதன சொன்னார்.

 فقال مالك بن صيف: غرَّكم أن أصبتم رهطًا من قريش لا علم لهم بالقتال!! أما لو أمْرَرْنَا العزيمة أن نستجمع عليكم،  لم يكن لكم يدٌ أن تقاتلونا‍

  யூதர்களின் இந்த கொக்கரிப்பு பரவலாக பரவிய போது முஸ்லிம்களில் சிலர்  நம்மோடு நட்புறவில்  இருந்து கொண்டு நமது வெற்றியில் மகிழ்ச்சியடையாமல் நம்மையே எச்சரிக்கிற யூதர்களின் தயவு இனி நமக்கு எதற்கு என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே எனக்கு யூதர்களில் பல நட்புக் கரங்கள் இருந்தன அவற்றை நாங்கள் உதறி விட்டோம் என்று கூறினர்.

ஆனால் அப்போது நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் எனக்கு அவர்களிடம் நிறைந்த தொடர்பு உண்டு என்னால் அப்படி விலக முடியாது. அதனால் எனக்கு ஆபத்துக்கள் வரலாம் என்று கூறினான். அதற்கு நபியவர்கள் “உன்னை விட சாமாணிய மக்கள் யூதர்கள் வேண்டாம் என்கிற போது வலிமையான தலைவனான உனக்கு அது அவசியமா என்று கேட்டார்கள். வேறு வழியில்லாமல் அவன் ஒப்புக் கொண்டான்.

  قال: جاء عبادة بن الصامت من بني الحارث بن الخزرج، إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن لي موالي من يهود كثيرٌ عدَدُهم، وإني أبرأ إلى الله ورسوله من وَلاية يهود، وأتولَّى الله ورسوله. فقال عبد الله بن أبي: إنّي رجل أخاف الدَّوائر، لا أبرأ من ولاية مواليّ. فقال رسول الله صلى الله عليه وسلم لعبد الله ابن أبيّ: يا أبا الحباب، ما بخلتَ به من ولاية يهود على عبادة بن الصامت فهو إليك دونه؟ قال: قد قبلتُ. فأنـزل الله" يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضُهم أولياء بعض " إلى قوله: فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ .

 யூத கிருத்துவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சி தொடர்பு வைக்கீற  உணர்வை வஞ்சக் இயல்பு என்று அல்லாஹ் வர்ணிப்பதை எப்போதுமே முஸ்லிம் உலகம் நினைவில் கொள்ள வேண்டும்.

 எவ்வளவுதான் ஆச்சரியப்பட்த் தகுந்த அம்சங்கள் இருந்தாலும் கூட அவர்களுடனான உறவு ரகசியங்களை அறிந்து கொள்ளும் அளவில் இருக்க கூடாது என்று இந்த வசனம் எச்சரிப்பதாக முபஸ்ஸிர்கள் கூறூவார்கள்.

 தப்ஸீர் இப்னு கஸீரில் ஒரு நிகழ்வு இடம் பெற்றுள்ளாது.

 உமர் ரலி அவர்கள் அபூமூஸா அல் அஷ் அரீ அவர்களை பஸராவின் ஆளுநராக நியமித்திருந்டார்கள். அவர் ஒரு முறை ஒரு கணக்கு புத்தகத்தை உமர் ரலி யிடம் காட்டினார். மிக சிறப்பாக இருக்கிறது என்று அவரை பாராட்டிய உமர் ரலி அவரக்ள் எனக்கு சிரியாவிலிருந்த் ஒரு கடிதம் வந்திருக்கிறது வாருங்கள் அதை பள்ளிவாசலுக்குள் வந்து அதை படித்துக் காட்டுங்கள் என்று கூறினார். இல்லை நான் அவரை பள்ளிக்குள் அழைத்து வர முடியாது என்றார் அபூ மூஸா . ஏன் அவர் ஜுனுபாளியா என்று கேட்டார் உமர் ரலி. இல்லை அவர் ஒரு கிருத்துவர் என்றார் அபூ மூஸா – இரகசியங்களை அறிந்து கொள்ளும் அந்த பொறுப்புக்கு அப்படி ஒருவரை நியமித்தற்காக அவரது தொடையில் அடித்து அவரை கடிந்து கொண்டார். உமர் ரலி அவர்கள்.

 أن عمر أمر أبا موسى الأشعري أن يرفع إليه ما أخذ وما أعطى ، وكان له كاتب نصراني ، فرفع إليه ذلك ، فعجب عمر [ رضي الله عنه ] وقال : إن هذا لحفيظ ، هل أنت قارئ لنا كتابا في المسجد جاء من الشام؟ فقال : إنه لا يستطيع [ أن يدخل المسجد ] فقال عمر : أجنب هو؟ قال : لا بل نصراني . قال : فانتهرني وضرب فخذي ، ثم قال : أخرجوه ، ثم قرأ( يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء [ بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين

 யூத கிருத்துவர்களுடனான அரசியல் தொடர்புக்கு குர் ஆன் இவ்வளவு எச்சரிக்கையான அளவு கோல்களை கொடுத்திருக்கீற போது அனைத்து எல்லைகளையும் கடந்து அவர்களை நெருக்கமாக்கி கொண்ட்தன் விளைவை இப்போது கத்தார் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இனியாவது அரபு நாடுகள் உஷாராக வேண்டும்.

 முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைய  வேண்டும்.

 அல் மாயிதா அத்தியாயத்தின் அடுத்த வசனம் மிக எதார்த்தமாக மற்றொரு செய்தியை கூறுகிறது.

 அவர்களுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள். நீங்கள் வீண் போவீர்கள் !

 இப்போது அமெரிக்க அதிபர் தான் கத்தாருடன் இருப்பதாக கூறுகிறார். இஸ்ரேலின் தாக்குதலைப் பற்றி தனக்கு தெரியாது என்கிறார்.

மிக சாதாரண பதில் இது . கத்தார் அமெரிக்க இராணுவத்திற்காக ஆண்டு தோறும் வழங்கும் கட்டணம் மிக அதிகம், இதற்கான முழு உத்தரவாதம் தருகிற பொறுப்பும் அவருக்கு உண்டு. அதற்கு மேல் ஹமாஸுடனான பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த்தே அமெரிக்கா தான் .

இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை கண்டு அவர் கொதித்து எழுந்திருக்க் வேண்டும். உலகத்திற்கு ஒரு பெரிய நாட்டின் தலைவராக உருப்படியாக இஸ்ரேலுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இனி கத்தரில் இது போல நடக்காது என்கிறார் என்றால்

இஸ்ரேலின் மூலம் அவர் கத்தாரையும் அது போல மற்ற அரபு மற்றும் மூஸ்லிம் நாடுகளையும் எச்சரிக்கிறார் என்றே பொருளாகும். இதை அரபுகள் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களுடை திட்டங்களும் தந்திரங்களும் வீணாணவையே

திருக்குர் ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தருகிற எச்சரிக்கை இது.  

   وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَٰؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ    (53

 பத்று யுத்தம் நடந்த போது சைத்தான் சுராக்கா பின் மாலிக்கின் தோற்றத்தில் வந்து மக்காவின் காபிர்களுக்கு நான் உங்களுடன் இருக்கிறேன் என்று ஊக்கமளித்தான்.  ஆனால் ஜிப்ரயீல் அலை அவர்களை கண்டவுடன் ஓடிப்போனான்.

 فعَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : جَاءَ إِبْلِيسُ يَوْمَ بَدْرٍ فِي جُنْدٍ مِنَ الشَّيَاطِينِ مَعَهُ رَأَيْتُهُ فِي صُورَةِ رَجُلٍ مِنْ بَنِي مُدْلِجٍ فِي صُورَةِ سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ ، فَقَالَ الشَّيْطَانُ لِلْمُشْرِكِينَ : لاَ غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ ، فَلَمَّا اصْطَفَّ النَّاسُ ، أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْضَةً مِنَ التُّرَابِ ، فَرَمَى بِهَا فِي وُجُوهِ الْمُشْرِكِينَ ، فَوَلَّوْا مُدْبِرِينَ . وَأَقْبَلَ جِبْرِيلُ إِلَى إِبْلِيسَ ، فَلَمَّا رَآهُ ، وَكَانَتْ يَدُهُ فِي يَدِ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ ، انْتَزَعَ إِبْلِيسُ يَدَهُ ، فَوَلَّى مُدْبِرًا هُوَ وَشِيعَتُهُ ، فَقَالَ الرَّجُلُ : يَا سُرَاقَةُ تَزْعُمُ أَنَّكَ لَنَا جَارٌ ؟ قَالَ : (إِنِّي أَرَى مَا لاَ تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ) وَذَلِكَ حِينَ رَأَى الْمَلاَئِكَةَ .

رواه الطبري 

இது பற்றி குர் ஆன் கூறுகிறது.

وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ) الأنفال/48 

 தப்பான நம்பிக்கைகள் ஆபத்தானவை. அழிவுக்கு கொண்டு செல்லக் கூடியவை என்ற அற்புதமான வழிகாட்டுதலை திருக்குர் தருகிற போது முஸ்லிம்கள்  இதை கவனிக்காமல் இருப்பது எத்தகைய அறியாமை ?

 உலக வல்லரசுகளை கதி கலங்க செய்த முஸ்லிம் படைகளின் வரலற்றை அரபுகள் மீண்டும் நினைவு படுத்திப் பார்க்க் வேண்டும் .

இஸ்லாம் வெற்றி பெற தொடங்கிய காலத்திலேயே  அதன் வெளிப்பாடு சக்தி மிக்கதாக இருந்தது.

அது அலாஹ்வின் பொதுவான  ஏற்பாடு.

திருக்குர் ஆன் ஒரு பழைய வரலாற்றை கூறுகிறது.

 قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ (115قَالَ أَلْقُوا ۖ فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ

 ஏன் மூஸா அலை முதலில் தனது தடியை போட வில்லை.

நீங்க முதலில் போடுங்க என்பது அச்சத்தின் அடையாளம் அல்லவா?

இல்லை. அல்லாஹ் முஃஜிஸா வெளிப்படும் போதே அது வெற்றி பெற வேண்டும். தாமதம் கூடாது என்று நினைத்தான். அதனாலேயே மூஸா கடைசியாக தனது தடியை போட்டார்.

இதுவே அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் நிகழும் உத்தி.

வெளிப்படும் போது சக்தி யோடு வெளிப்படுது.

இஸ்லாம் அப்படித்தான் வெளிப்பட்டது.

பெருமானார் (ஸல்) அவர்கள் பாரசீக மன்னருக்கு கடிதம் எழுதிய போது அது அவ்வளவு அரசியல் ரீதியாக செல்வாக்கானதாக இருக்க வாய்ப்பில்லை.

பாரசீக மன்ன்ன்.  ايكتب إلي عبدي

எனது அடிமை ஒருவர் எனக்கு கடிதம் எழுதுவதா என்று கொக்கரித்தான்.

பெருமானார் (ஸல்) கடிதம் அனுப்பியது ஹிஜ்ரீ 7ல்

ஹிஜ்ரீ 15 வருடம் ஷஃபான் மாதம் உமர் ரலி காலத்தில் காதிஸீய்யா யுத்தம் நடைபெற்றது. அதில் தளபதி ஸஃது பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் பாரசீகத்தை வென்றெடுத்தார்கள்.

7 வருடங்களில் இந்த மாற்றம் நடந்த்து.

ஒரு வல்லரசை புதிதாக அமைந்த ஒரு சிற்றரசு வெற்றி கொண்டது.

பாரசீக மன்னன் யஜ்தஜ்ரித் எப்படி கொல்லப்பட்டான் என்பதை வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் – அல்பிதாயா வன் னிஹாயாவில் இவ்வாறு தலைப்பிட்டு கூறுகிறார்

كيفية قتل كسرى ملك الفرس وهو يزدجرد"

 

முஸ்லிம்களிடம் தோற்றுப் போன கிஸ்ரா என்ற யஜ்தஜ்ரித் தனது தலையில் சூடிய மகுடத்தோடும், ஆபரணங்களோடும் ஆயுத்த்தோடும் நடந்து சென்று ஒரு குடிசையை அடைந்தான் . அங்கு திருகையில் மாவு தள்ளிக் கொண்டிருந்த ஒருவன் மன்னரை அருகே அமர வைத்து அவன் அசந்திருக்கும் போது அவனது உடமைகளுக்காக அவனை கொன்றான்.

 ال ابن إسحاق: هرب يزدجرد من كرمان فى جماعة يسيرة إلى مرو، فسأل من بعض أهلها مالا فمنعوه وخافوه على أنفسهم، فبعثوا إلى الترك يستفزونهم عليه، فأتوه فقتلوا أصحابه وهرب هو حتى أتى منزل رجل ينقر الأرحية على شط، فأوى إليه ليلا، فلما نام قتله.

  وقال المدائني: لما هرب بعد قتل أصحابه انطلق ماشيا عليه تاجه ومنطقته وسيفه، فانتهى إلى منزل هذا الرجل الذى ينقر على الأرحية، فجلس عنده فاستغفله وقتله وأخذ ما كان عليه،

 420 ஆண்டு காலம் நிலைத்திருந்த பாரசீக வல்லரசின் தலைவன் முஸ்லிம்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளாத போது அவனுக்கு கிடைத்த தண்டனை இது.

 திருக்குர் ஆனிலும் மிக செழிப்பான கடந்த கால இஸ்லாமிய வரலாற்றிலும்  இன்றைய அரபுகளுக்கு அருமையான பாடங்கள் இருக்கிறது.

வரலாற்றில் அரபுகள் வலிமையாக இல்லாத காலத்தில் அரபுகள் அல்லாத ஆட்சியாளர்கள் இஸ்லாமின் எதிரிகளை சிதறடித்து இருக்கிறார்கள்

 முஹம்மது அல் பத்திஹ் நூருத்தீன் ஜன்கீ, சலாஹுத்தீன் அய்யூபி போன்ற அரபு பாரம்பரியத்தை சாராத தலைவர்கள் தாங்கி வளர்த்த வரலாறு தான் பிற்கால இஸ்லாமிய அரசியல் வரலாறு.அரபுகள் தாங்கள் அரபுகள் என்ற எண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கை விட்டு விட்டு, இன்றூ சர்வதேச அளவில் இஸ்ரேல் எனும் தீய சக்தியையும் அதற்கு முழு ஒத்துழைப்பாக இருக்கிற அமெரிக்காவையும் எதிர்ப்பதில் வலுவாக இருக்கிற துருக்கி மலேசியா போன்ற மற்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்து செயலாற்ற சிந்திக்க வேண்டும்.

 

அப்போது நிச்சயம் மாற்றாம் ஏற்படும் \

 

திருக்குர் ஆனின் மாயிதா அத்தியாயத்தின் அடுத்த வசனங்கள் பேசுகின்றன.

 

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ (55وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ (56)  

 

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிற இஸ்ரேலின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டுவானாக!

 

அதை நட்த்துவதற்கேற்ற ஒரு தலைமையை முஸ்லிம் உம்மத்திற்கு அடையாளம் காட்டுவானாக

 

பாலஸ்தீனம் எனும் பழைமிக்க நாடு புதுப் பொலிவோடு எழுச்சியுற அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

Thursday, September 04, 2025

மூன்று தலைமுறைகளுக்கு சான்றளித்த முத்து நபி (ஸல்

  لَّقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18

 இன்று நம்முடைய தலைவர் முஹம்மது நபி (ஸ்ல) அவர்களின் பிறந்த நாள்.

فمحمدُنا هوَ سيدُنا *** فالعِزُّ لَنا لإِجَابتِهِ

பெருமானாருக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.

அவற்றில்  ஒன்று

நபி (ஸல்) அவர்கள் தான் வாழ்ந்த சமூகத்தையும்  அதற்கடுத்த தலைமுறையையும் அதற்கும் அடுத்த தலைமுறை  என மூன்று தலைமுறைகளுக்கு சிறப்பு என்று சான்றளித்தவர் ஆவார்கள்

 

 عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ )

சஹாபாக்கள், தாபிஃகள் தபவுத் தாபிஃ என்ற வரிசை முஹம்மது நபி அவர்களுக்கு இருப்பது போல இந்த உலகில் வேறெவருக்கும் கிடையாது.

இவ்வாறு மூன்று தலைமுறை தனித்து பார்க்கப்படுகிறது என்பது மட்டுமல்ல; அந்த தலைமுறைகள் மனித வரலாற்றின் மிகச் சிறப்பான தலைமுறைகளாக அவை இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இது சாதாரணமானது அல்ல; அசாதாராணமானது.

--

பொதுவாக இன்றை மக்களிடம் இனி வரும் நாட்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை கூட பெரிதாக இருப்பதில்லை. இன்றுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்கிறது.

ஆனால் நாம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்க வேண்டும் நமது அடுத்த தலைமுறை பண்பாட்டு அளவில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்,

குர் ஆன் கற்பிக்கிறது.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ (128)

நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சிந்திப்பவர்களாக இருந்தார்கள் என்பதை தாயிப் நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.

و جبريل قائم عنده، يخبره بأن الله بعث ملك الجبال برسالة يقول فيها: إن شئت يا محمد أن أطبق عليهم الأخشبين، فأتى الجواب منه عليه السلام بالعفو عنهم قائلاً: ( أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئارواه البخاري .

பெருமானாரின் உன்னதமான தலை பண்புக்கு எடுத்துக் காட்டு இது.

இந்த சிந்தனையில் அவர்கள் உழைத்த காரணத்தால் தன் வாழ்வின் நிறைவில் தான் வாழ்ந்த சமுதாயத்தை பாராட்டி இப்படி கூறினார்கள்

قالَ لَنَا رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يَومَ الحُدَيْبِيَةِ: أنتُمْ خَيْرُ أهْلِ الأرْضِ

الراويجابر بن عبدالله | المحدثالبخاري

இன்றைய தலைவர்கள் யாருக்காவது தன் தொண்டர்களை பற்றி இப்படி உத்தரவாதம் கொடுக்கிற தைரியம் இருக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம் தம்ழ் நாட்டில் ஒரு தலைவர் மதுவுக்கு எதிராக மாநாடு நடத்தினார். பாராட்டிற்குரியது.

ஆனால் அங்கும் அவரது தொண்டர்கள் பாட்டில்களுடன் வந்தார்கள் என்று செய்திகள் தெரிவித்தன.

இதுதான் மற்ற தலைவர்களில் காணக்கிடைக்கிற நிலை.

நம்முடைய தலைவர் தான் வாழ்ந்த தலைமுறைக்கு மட்டுமல்ல

தனக்கடுத்த மூன்று தலைமுறைக்கு உத்தரவாதம் வழஙழகினார்கள்,

அந்த தலைமுறயின் உன்னதம்

ஒரு பெண் குளிப்பதை பார்த்து விட்ட்தை ஒரு பெரும் குற்றமாக கருதி ஒரு சஹாபி பெருமானாரின் முன்னிலையில் உயிரை விட்டார்.

அவரது ஜனாஸாவில் கால் வைக்க முடியாத அளவு மலக்குகள் கலந்து கொண்டனர்.  

عن جابر بن عبد الله رضي الله عنهما قال :

إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .

رواه أبو نعيم في "حلية الأولياء

சமய ஈடுபாடு - அரசியல் – கலாச்சாரம் என ஒவ்வொரு துறையிலும் மின்னும் நட்சத்திரங்கள் இந்த தலைமுறைகளில் வாழ்ந்தவர்கள் தாம்.

அவர்களுக்கு நிகரான நட்சத்திரங்களை இந்த உலக வரலாற்றில் பார்ப்பது அரிது.  

எப்படி உருவாக்கினார்கள்

ரெஸ்பான்ஸிபல் பர்சன்ஸ்

பொறுப்புணர்வுள்ளவர்களாக அவர்களில் ஒவ்வொருவரையும் ஆக்கினார்கள்.

عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ) متفق عليه.

நான் இல்லை எனில் அபூபக்கரிடம் செல் ! என்றபெருமானார்.

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَتَتْ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ قَالَتْ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تَقُولُ الْمَوْتَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ3659(புகாரி

அபூபக்கர் ரலி அவர்களிடம் அந்த பொறுப்புணர்வு மிக துல்லியமாக  இருந்த்து.

பெருமானாரின் வாபாத்தை தொடர்ந்து உஸாமா ரலி அவர்களின் படையை உடனடியாக அனுப்புவதில் தீர்மானமாக இருந்தார்கள்.

பெரிய் சஹாபாக்களை கொண்ட அந்த படையை இந்த நேரத்தில் மதீனாவை விட்டு வெளியே அனுப்புவது பொருத்தமாக இருக்காது என்று தோழர்கள் ஆலோசனை கூறினார்கள்.

ஆனால் அபூபக்கர் ரலி அதை மறுத்துவிட்டார். படைத்தளபதியிடம்  உமர் ரலி அவர்களை மட்டும் தன்னோடு இருக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

காட்டு விலங்குகள் என்னை கடித்து எடுத்து சென்று விடும் என்று இருந்தாலும் நான் உசாமாவின் படையை அனுப்பியே தீருவேன் என்றார்கள்.

சமரசங்கள் அற்ற பொறுப்புணர்வுக்கு அது சாட்சி.

واقترح بعض الصحابة على أبي بكر بأن يبقي الجيش فقالوا: «إن هؤلاء جلُّ المسلمين، والعربُ على ما ترى قد انتقضت بك، فليس ينبغي لك أن تفرق عنك جماعة المسلمين،

 فقال أبو بكر: «والذي نفس أبي بكر بيده، لو ظننت أن السباع تخطفني لأنفذت بعث أسامة كما أمر به رسول الله ، ولو لم يبق في القرى غيري لأنفذته

இது நமக்கு தருகிற பாடம். நாம் பிள்ளைகளின் பண்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று தொழுகைக்கு வா என்று மகனை அழைக்க கூட சங்கடப்படுகிறோம். அவன் வழிக்கு விட்டு விடுகிறோம்.

ஒரு தந்தை ரமலான் மாதத்தில் பெரியவனாகிவிட்ட தன்னுடை பையனிடம் ஜகாத் தொகை அடங்கிய பையை கொடுத்து ஆட்களை குறிப்பிட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு வருமாறு கூறினார்.அவர்களும் பழக வேண்டும் அல்லவா என்று அவர் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகளை நாம் தொடர வேண்டும்.

சுயமரியாதை

பெருமானார் சுய மரியாதை மிக்கவர்கள் தனது தலைமுறையை உருவாக்கினார்கள்

 யாரிடமும் கேட்காதே! என்ற பெருமானாரின் வார்த்தைக்குசவ்பான் (ரலி) கட்டுப்பட்ட விதம்

حديثُ ثوبان رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسم قال : ( مَنْ يَتَقَبَّلُ  لِي بِوَاحِدَةٍ وَأَتَقَبَّلُ لَهُ بِالْجَنَّةِ ؟ " قَالَ : قُلْتُ : أَنَا. قَالَ : ( لَا تَسْأَلِ النَّاسَ شَيْئًا ) فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ ، فَلَا يَقُولُ لِأَحَدٍ نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَتَنَاوَلَهُ . رواه أبو داود (1450)

ஒழுக்கம்

பெருமானார் காலத்து சமூகம் ஒழுக்கம் குறித்து அதிகம் கவலைப்படாத சமுதாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை திருத்தி உன்னதமாக உயர்த்தினார்கள்.   

ஒழுக்கம் என்பதில் மிக சுருக்கமான ஒரு விளக்கம்.

மதிக்க வேண்டுயதை மதித்தல்

பெரியவர்களை மதித்தல் –

وَقَضَىٰ رَ‌بُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ‌ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْ‌هُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِ‌يمًا . وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّ‌حْمَةِ وَقُل رَّ‌بِّ ارْ‌حَمْهُمَا كَمَا رَ‌بَّيَانِي صَغِيرً‌ا} [الإسراء:23-

பெற்றோருக்கு பணிவிடை செய்தல் ஹஜ் உம்ராவின் நன்மை கிடைக்கும்

فقد أتى رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال إني اشتهي الجِهاد وإني لا أقدر عليه، فقال: «هل بقي أحد من والديك؟»، قال: أمي، قال: «فاتقِ الله فيها فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد فإذا دعتك أمك فاتق الله وبرها».

 தந்தையின் துஆ மறுக்கப்படாது.

 قال النبي صلى الله عليه وسلم : ( ثَلاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لا شَكَّ فِيهِنَّ : دَعْوَةُ الْمَظْلُومِ ، وَدَعْوَةُ الْمُسَافِرِ ، وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ) رواه ابن ماجه 

 

உஸ்மான் ரலி அவர்கள் மதிப்புமிகு ஒரு பேரீத்தம் பழ தோட்டத்தை உருவாக்குவதற்காக சிறப்பான சில பேரீத்தம் பழங்களை  விதைக்காக ஆயிரம் திர்ஹம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்திருந்தார்கள்.

 அவர்களுடைய தாயார் இதை விதைக்காக வாங்கப்பட்டுள்ளது என்று தெரியாமல் சாப்பிட்டு விட்டார்,

 தோழர்கள் கவலைப்பட்டார்கள்.இப்படி விலை மதிப்புள்ளாதை தாயார்  சாப்பிட்டு விட்டார்களே என்றார்க்ள் .

உஸ்மான் ரலி சொன்னார்., இந்த விதையை விதைத்து தோட்டம் உருவாகி யிருந்தால் என்ன மகிழ்ச்சி அடைவேனே அதை விட பன் மடங்கு மகிழ்ச்சி என் அம்மா சாப்பிட்ட்தால் கிடைத்தது என்றார்கள்.

இன்றைய தலைமுறையிடம் இத்தகை பண்புகள் எவ்வளவு தூரம் சீரழிந்து கிடக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு பெண் மருத்தவர் சமீபத்தில் இஸ்லாமை தழுவினார். அவருடைய மருத்துவ மனைக்கு முதியவர்கள் ஹோம் களிலிருந்து அழைத்து வரப்படுவார்கள். உடன் யாரும் இருக்க மாட்டார்க:.

ஒரு முதிய பெண் அழைத்து வரப்பட்டாள். அவரை இரண்டு இளைஞர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்க.

டாக்டர் ஆச்சரியப்பட்டு அவரக்ளிடம் விசாரித்தார்.

அவர்கள் சொன்னார்கள். நாங்கள் முஸ்லிம்கள். எங்களது நபி எங்களுக்கு இப்படி உத்தரவிட்டுள்ளார் என்றார்கள்

40 வயதை கடந்த அந்த மருத்துவர் தனது வாழ்க்கைய எண்ணிப் பார்த்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று கூறுகிறது. அல் ஜஸீரா.

சொந்த பெற்றோரை மதிக்காத தலைமுறை வேறு யாரையும் மதிக்கிறது என்பது ஏமாற்றும் செயலாகும்.

பெற்றோரையும் மற்றோரையும் மதிக்க வேண்டும்.

நன்மையை நாடுதல்

பெருமானார் தேர்ந்தெடுத்த மூன்றாவது இயல்பு இது,

فأرسل جرير رضي الله عنه غلامه ليشتري له فرساً، فوجد الغلام الفرس بثلاثمائة درهم، وجاء الغلام بصاحب الفرس ومعه الفرس إلى جرير ليقبضه الثمن، فلما رأى جرير الفرس وجده يستحق أكثر من ثلاثمائة، فقال: يا فلان! فرسك يستحق أربعمائة. قال: قبلت. قال: خمسمائة. قال: قبلت. قال: ستمائة. قال: قبلت.. حتى وصل به إلى ثمانمائة فقال الرجل: قبلت. فأعطاه الثمانمائة فتعجب الغلام،

وقال لـجرير : ما هذا الذي فعلت؟

قال له: إني بايعت رسول الله صلى الله عليه وسلم على النصح لكل مسلم. أي: لا أستطيع الغش، وهذه هي كمال المتابعة

யமன் நாட்டில் இஸ்லாம் எப்படி அறிமுகமாகி பரவியது என்பதை வரலாறு இப்படி கூறுகிறது.

முஸ்லிம் அரபு வியாபாரிகள் சந்தை அமைத்திருப்பார்கள். ஒருவருக்கு ஒரு வியாபாரம் நடந்து விட்டால் அடுத்த வியாபாரத்திற்கு கஸ்டமர்கள் வந்தால் அவரை மற்ற வியாபாரியிடம் அனுப்பி அவரிடம் இது கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார்கள்

இந்த பண்பு எமன் மக்களை ஈர்த்தது என்கிறது வரலாறூ.

இன வாதம் சிந்தனை தவிர்ப்பு

பொதுவாக வரலாற்றில் எந்த கால கட்டத்திலும் மக்கள் தங்களது நிறம் அல்லது இனம் அல்லது தேசியம் அல்லது குழு மனப்பான்மையின் அடிப்படையில் தங்களை உயர்த்திக் கொள்ள முய்றசி செய்வார்கள்.

மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய செய்தி இது.

முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் தமது சமூகத்தை பண்பு செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாத்திரமே மனிதர்கள் சிறப்படைய முடியும் என்று தகவமைத்தார்கள்.

مَن أبطَأ به عمَلُه لَمْ يُسرِعْ به نسَبُه

الراويأبو هريرة | المحدثابن حبان 

யாரை அவருடை செயல் பின்னுக்கு கொண்டு சென்று விடுகிறதோ அவரை அவரது குடும்பம் முன்னே கொண்டு வந்து விட முடியாது.

 

பெருமானாரின் மிக உன்னதமான அறிவுரை இது

 இன்றும் சமூகத்தில் ஒரு மொழி பேசுவதால், அல்லது ஒரு இயக்கத்தில் அல்லது கட்சியில் இருப்பதால தன்னை உயர்ந்தவர்களாக கருத்திக் கொள்கிற எவரும் நபியின் வழிகாட்டுதலிருந்து விலகி விட்டவர் ஆவார்.

இறையச்சம்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு அதிகாரத்தை விட பண பலத்தை விட மற்ற செல்வாக்குகளை விட ஏன் பிரபலம் அடைவதை இறை நம்பிக்கையை தான் பிரதானமாக கற்பித்தார்கள். அந்த தலைமுறையும் அப்படி உருவானது.

عن أبي هريرة رضي الله عنه عن النبي - صلى الله عليه وسلم - فيما يرويه عن ربه جل وعلا أنه قال : ( وعزتي لا أجمع على عبدي خوفين ولا أجمع له أمنين ، إذا أمنني في الدنيا أخفته يوم القيامة ، وإذا خافني في الدنيا أمنته يوالقيامة )

عمر بن الخطاب قرأ سورة الطور إلى أن بلغ : إن عذاب ربك لواقع )سورة الطور : 77 ] فبكى واشتد بكاؤه حتى مرض وعادوه

இன்று எப்படியாவது பிரபலமடைந்து விட்டால் போதும் என்ற சிந்தனை மக்களிடம் இருக்கிறது.

இறையச்சம் இல்லாத எதுவும் நிலைக்காது என்பதை பெருமானார் சமூகத்திற்கு புரிய வைத்தார்கள்

இத்தகை அருமையான அடிப்படை பண்புகளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை மிக சிறப்பாக கட்டமைத்து விட்டு தான் நபியவர்கள்

இந்த பூமியின் மேல் வாழும் சிறந்த மனிதர்கள் நீங்கள் என்று பாராட்டினார்கள்.

அந்த தலைமுறையை மட்டுமல்ல அதற்கடுத்த இரண்டு தலைமுறையையும் சேர்த்தே பாராட்டினார்கள்.

வரலாறும் அது உண்மை என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

நாம் நமது தலைமூறைகள் குறித்து சிந்திப்போம்.

அல்லாஹ் திருப்தியடைந்த தலைமுறை என்ற சொல் எவ்வளவு உன்னதமானது என்று சிந்திப்போம்.

மக்கள் வியக்கிற அல்லது மக்கள் பாராட்டுகிற என்பதை தாண்டி இந்த சிந்தனை எவ்வளவு சிறப்பானது ?

சிந்தித்தாலே கூட அல்லாஹ் உதவுவான். செயல்படத் தொடங்கினால் நிச்சயம் மாற்றத்தை தருவான்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!