வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 16, 2026

சட்டமன்ற தேர்தல் 2026

 நம்முடைய தமிழ் மாநிலத்தில் 17 வது சட்டமன்ற தேர்தல் வரக்கூடிய 23 ம் தேதி வியாழக்கிழமை நடக்க இருக்கிறது.

நம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்க போகிற இந்த் தேர்தலில் நம்மில் வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரும் தவறாமல்  ஓட்டளிக்க வேண்டும்.

இதில் நாம் பின்தங்கி விடக்கூடாது.

கடந்த தேர்தலில் நமது மாநிலத்தில் இந்துத்துவ அமைப்புக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிட்ட பகுதிகளில் 70 / 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் சிறுபான்மை இன மக்கள் நிறைந்த பகுதிகளை 50 சதவீத்த்திற்கு குறைவாகவே வாக்குகள் பதிவானதாக அரசியல் கட்சிகள் புள்ளிவிபரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இப்போது நாடு இருக்கும் சூழலில் இப்படி வாக்களிக்கும் விகிதம் குறையும் என்றால் தவறான ஆட்களே ஆட்சியை பிடிப்பார்கள்/

ஒரு நாள் நாம் காட்டுகிற சோம்பேறித்தனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கும் ஆபத்தை கொண்டு வந்து சேர்ப்பதாக அமைந்து விடும்.

அது மட்டுமல்ல ஓட்டுப் போடாமல் இருப்பது குற்றமாகும்.

ஓட்டுப்போடுவது ஒரு சாட்சியமளிக்கிற செயலாகும். 

வாக்கு சீட்டில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரது பெயருக்கு நேரே முத்திரை பட்டனை அழுத்து கிற போது இவரை  எங்களது பிரதிநிதியாக இருக்க நான் சாட்சியமளிக்கிறேன் என்று செயலால் சாட்சியமளிப்பது ஆகும்.

தேர்தல் கமிஷன் வா வா என்று நம்மை அழைக்கிறது. நாம் வாய்ப்பிருந்தும் ஓட்டு போடாமல் இருக்க கூடாது..

திருக்குர் ஆன் கூறுகிறது.

 ولا يأب الشهداء إذا ما دعوا

   وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

எனவே தேர்தலுக்காக லீவு விடப்படுகிற போது வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம் என்று நினைப்பது இஸ்லாமிய பார்வையில் ஒரு குற்றமாகும்.

தங்களது அடிப்படை கடமையை நிறைவேற்ற தவறுகிறவர்களிடமிருந்து அல்லாஹ் தன் பொறுப்பை விலக்கிக் கொள்கிறான்.

பெரும்பாலும் பண வசதி படைத்தவர்கள் அதிக கல்வியறிவு பெற்றவர்கள். பெரும் அந்தஸ்தில் இருப்பவர்களே அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவிவகாரத்தை  

திருக்குர் ஆன் தெளிவாக எச்சரிக்கிறது.

لِلَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمُ الْحُسْنَى وَالَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا لَهُ لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الأرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لافْتَدَوْا بِهِ أُولَئِكَ لَهُمْ سُوءُ الْحِسَابِ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ) (الرّعد/ 18).

பல நாடுகளில் குடிமக்கள் தங்களை ஆள்வோரை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருக்கிற போது ஜனநாயகம் என்ற நிஃமத்தின் அருமையை நாம் உணர்ந்து புரிந்து அதன் படி செயல்பட வேண்டும். இந்த கடமையை செய்யத் தவறினால் இதற்காக நாம் பின்னர் விசாரிக்கப்படுவோம் என்று முஹம்ம்து நபி ஸ்ல் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

يقول النبي (ص): "كلُّ نعيمٍ مسؤولٌ عنه يوم القيامة،

தேர்தல் நேரத்தில் சரியானவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்க செல்லாமல் இருப்பது தவறான ஆட்கள் அதிகாரத்திற்கு வர வழி வகுத்து விடும். இது அநீதிக்கு உதவி செய்வதாக அமைந்து விடும்.

பெருமானார் (ஸல்) எச்சரித்தாரக்ள்

قال رسول الله ﷺ: (من أعان ظالماً بباطل، ليدحض بباطله حقاً، فقد برئ من ذمة الله عز وجل، وذمة رسوله

எனவே நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் முதியவர்கள் இளைஞர்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.

யாருக்கு நாம் வாக்களிப்பது என்பதில்  நாம் குழப்பம் அடையவும் கூடாது,

தற்போதைய சூழலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்கள் தடுமாறி நிற்க எதுவும் இல்லை.

தேர்தல் களம் தெளிவாகவே இருக்கிறது

நமது நாட்டின் ஜனநாயக முறை பெரும் ஆபத்தில் இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிற கட்சி நாட்டை சர்வாதிகாரப் போக்கிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

தற்போதைய தேர்தல் கமிஷனின் தலைவராக இருப்பவரை நீக்க வேண்டும் என்று சுமார் 130 எம் பிக் கள் கோரிக்கை வைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விவாதிக்கப் பட்டிருந்தால் இந்த தேர்தல் கமிஷனரின் முறைகேடுக என்ன என்பது பேசப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அருதிப் பெரும்பான்மை இருக்கிறது. அதை வைத்து அந்த தீர்மாணத்தை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியால் தோற்கடித்து விட முடியும் என்றாலும் எதிர் கட்சி எம் பி க்க்களின் இத்தனை பேரின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் கட்சி குப்பை தொட்டியில் வீசிவிட்டது.

எந்த விதமான அவசர அவசியமும் இல்லாமல் எஸ் ஐ ஆர் என்கிற தீவிர வாக்களார் சீர்திருத்த்த்தை மேற்கொண்டு பல மாநிலங்களிலும் தகுதியுள்ள இலட்சக்கணக்கா வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தமிழகத்தில் கோடிக் கணக்கானோர் அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதே போல இப்போது டிலிமிடேசன் என்ற ஒரு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அமுல் படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற்று வருகிற சூழலில் மக்களின் கவனம் வேறு பக்கம் இருக்கிற சந்தர்ப்பம் பார்த்து மத்திய அரசு இந்த சட்ட திருத்த்தை கொண்டு வருகிறது. இந்த சட்ட திருத்த்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தொகை எண்ணிக்கைகு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும். அப்படி பார்க்கிற போது குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமுல் படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களூக்கு இப்போது இருக்கிற எம்பிக்களின் எண்ணிக்கையை விட புதிதாக கிடைக்கிற எண்ணிக்கை குறையும். ஒரு வேளை மத்திய அரசு சொல்வது போல இப்போது இருக்கிற எண்ணிக்கையை சரி பாதி அதிகமாகும் என்று சொல்லப் பட்டாலும் கூட தமிழகத்திற்கு அதிகப் பட்சமாக 60 எம் பிக்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே நேரம் உத்திரப் பிரதேசத்திற்கு 120 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் என்ன நடக்கும் என்றால் ? வடமாநிலங்களில் கிடைக்கிற செல்வாக்கை மட்டுமே வைத்துக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்து விட முடியும். தென் மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படும். எனவே இந்த கொடுமையான சட்ட்திருத்தை எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எதிர்க் கின்றன. தென் மாநிலங்கள் அனைத்தும் எதிர்க் கின்றன.

இதில் கவனிக்க வேண்டியது. தென்மாநிலங்களில் தேர்தல் பணிகளில் மக்கள் கவனமாக இருக்கிற போது மத்திய அரசு இந்த சட்ட திருத்த்தை கொண்டு வருகிறது. ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

சரவதேச அளவில் நாட்டின் மரியாதையை சீர்குலைக்கிற வகையில் அமெரிக்காவில் சிறு குழந்தைகள் பாலியல் குற்றவாளியான எப்ஸீடீனின் பைல்களில் நம்முடைய பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த பைல்களில் இடம் பெற்ற இங்கிலாந்தின் இளவரசர் பணி நீக்கம் செய்யப் பட்டார். ஆனால் இந்தியாவில் அது ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்தாத அளவிற்கு மக்கள் மூளைச் சலைவை செய்யப்படுகின்றனர்

மத்தியகிழக்கில் யுத்த மேகம் சூழ்ந்திருக்கிற காலச் சூழலில் நம்முடைய பிரதமர் இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேலை பாதர் நேசன் என்று கூறியது மிகவும் கேலியாக பார்க்கப் படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீரழிந்து வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டதட்ட 97 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நம்முடைய நாட்டின் விவகாரங்களை அமெரிக்க அதிபர் தலையிட்டு அவருடைய மாநிலம் பற்றி பேசுவது போல பேசுகிறார். இந்தியா 30 நாளைக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார். இந்தியா பாகிஸ்தான் சண்டையை நான் தான் நிறுத்தினேன் என்று பல தடவை சொல்லி விட்டார்.

எனவே இந்த தேர்தலில் நாட்டில் பாஜக இல்லாத அரசாங்கம் என்ற இலக்கை நோக்கி செயல் பட வேண்டியது இன்றைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் எப்படி நாடு முழுக்க வெள்ளைக்காரகளுக்கு எதிரான மனோ நிலையில் இருந்த்தோ அதே போல இப்போது மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனோ நிலை தேவைப்படுகிறது.  

மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே சார்பு கட்சி ஆட்சியில் இருந்தால் மாநிலம் சிறப்பாக முன்னேறும் என்று ஒரு பசப்பு வார்த்தையை சில கட்சிகள் பேசிவருகின்றன.

அது பொய்யான மக்களை திசை திருப்பும் வார்த்தையாகும்

தமிழக அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் ராஜன் மிக அருமையாக இந்த வாத்த்த்தை தவிடு பொடியாக்கி எதார்த்த சூழ்நிலையை விளக்கி உள்ளார்.

குஜ்ராத்த்தி மத்தியை ஆளும் கட்சி தான் கடந்த பல வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசாங்கத்தின் நிதியை இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அளவு அதிகப்படியான  நிதியை பெற்றுவருகிறது.

ஆனால் அங்கு மக்களின் நிலை என்ன ?

குஜராத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டின் சதவீத்த்தை விட பாதியளவினரே ஆகும்.

டாக்டர்கள் தமிழகத்தில் இருப்பதை விட பாதியளவே உள்ளனர்.

றுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமிழ்நாட்டை விட ஆறு சதவீதம் அதிகம்

இந்த புள்ளிவிவரங்கள் அச்சம் தரும் வகையில் மத்தியை ஆளும் கட்சி ஆட்சி செய்கிற மாநிலங்களில் இருக்கின்றன.

பீகார் மாநிலத்தை பற்றி யூடியூபில் இருக்கிற வீடியோக்க்களை பாருங்கள். மாநிலத்தில் பொதுப் போக்கு வரத்து என்பது எப்போதாவது கிடைக்கும் ஒரு வசதியாக இருக்கிறது. பீகாரின் தலை நகர் பாட்னாவில் இன்னும் சைக்கிள் ரிக்ஷாக்களின் ஆதிக்கம் தான் என்பதை அவை புலப்படுத்தும்.

வட நாடு முழுக்க இதே நிலை தான் இருக்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று வட மாநிலத்தவர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

இதற்கிடையே அசாம் முதலமைச்சர் “சைக்கிள் ரிக்ஷாகாரர் முஸ்லிமாக இருந்தால் அவர் 4 ரூபாய் கேட்டால் நீங்கள் இரண்டு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று பகிரங்கமாக வெறுப்பை தூண்டி விடுகிறார், நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தை தொடர்ந்து அந்த கட்சியை சார்தவர்கள் சீரழித்து வருகிறார்கள்.

எனவே மதவாத வெறித்தனத்தோடு நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் கட்சியை அதன் கூட்டாளிகளையும் மக்கள் சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முஸ்லிம் சகோதரகள் தனது குடும்பத்தில் வாக்குரிமை அனைவரையும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், நாட்டின் ஜனநாயகத்தையும் வளர்ச்சியையை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

சினிமா கவர்ச்சியை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சிலர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணர்வு என்பது மிகவும் கேலிக்குரிய அளவில் இருக்கிறது.

வாக்காளர்கள் கவர்சியை தாண்டி எதார்த்த அரசியல் நிலவரத்தை சிந்தித்து வாக்களிப்பதே புத்திசாலித்தனமாகும்.

அதே போல சில சிலர் இன வாத கருத்துக்களை புரட்சிகரமாக பேசுவது போல நடிக்கின்றனர். ஒரு எதார்தத்தில் அவரக்ளது அரசியல் ஈடுபாடு என்பது குழுப்பமானதாகவும் இளைஞர்களை பேச்சுக் கவர்ச்சிக்கு ஆட்படுத்துவதாகவுமே இருக்கிறது இவர்கள் முன்னோடிகளாக யாரை காட்டுகிறார்களோ அவர்கள் சமூகத்தை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டவர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புதிய முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டியவைதான் ஆனால் அவை தகுதியானதாக தரமுள்ளதாக இருக்க வேண்டும்.

இளைய சமுதாயமும் வாக்காளர்களும் இதுவிவகாரத்தை சரியாக சிந்தித்து இந்திய நாட்டையும் தமிழ் மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய தற்போதைய சூழலை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். எந்த சூழலிலும் வாக்குகள் சிதறி தவறானவர்கள் வெற்றி பெற வாய்ப்பளித்து விடக் கூடாது. .

நிறைவாக நாம் வாக்களித்து ஒரு கட்சி வெற்று பெறுகிறது என்றாலும் அது நல்லாட்சி தருவது எல்லாம் வல்ல இறைவனின் கையிலேயே இருக்கிறது என்பது நமது அழுத்தமான நம்பிக்கை எனவே

நாம் அல்லாஹ்விடம் முறையிடுவோம்.

قلَّما كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ يقومُ من مَجلسٍ حتَّى يدعوَ بِهَؤلاءِ الكلِماتِ لأصحابِهِ : اللَّهمَّ اقسِم لَنا من خشيتِكَ ما يَحولُ بينَنا وبينَ معاصيكَ ، ومن طاعتِكَ ما تبلِّغُنا بِهِ جنَّتَكَ ، ومنَ اليقينِ ما تُهَوِّنُ بِهِ علَينا مُصيباتِ الدُّنيا ، ومتِّعنا بأسماعِنا وأبصارِنا وقوَّتنا ما أحييتَنا ، واجعَلهُ الوارثَ منَّا ، واجعَل ثأرَنا على من ظلمَنا ، وانصُرنا علَى من عادانا ، ولا تجعَل مُصيبتَنا في دينِنا ، ولا تجعلِ الدُّنيا أَكْبرَ همِّنا ولا مبلغَ عِلمِنا ، ولا تسلِّط علَينا مَن لا يرحَمُنا

الراويعبدالله بن | المصدرصحيح الترمذي

 

இது பெருமானாரின் அன்றாட பிரார்த்தனை என்பதை அறிய முடிகிறது. தவறான ஆட்சியாளர்கள் வந்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பிரார்த்தனையில் சேர்த்திருந்தார்கள்.

நாமும் தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்போம்.

 

Thursday, April 09, 2026

வஞ்சகமே பொருளாகிப் போன ராஜதந்திரம்

 وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128)

இன்று பாகிஸ்தானின் தலை நகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுக்கும்  அமெரிக்காவுக்கும் இடையே  பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் சார்பில் துணை அதிபரும் ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

உலகமே இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் போர் நிறுத்தம் பற்றி ஒரு அறிவிப்பு வெளிவந்து மக்களுக்கு நிம்மதி அளித்த்து என்ற போதும் கடந்த ஒரு நூற்றாண்டாக உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிற இஸ்ரேல் அதன்பின்னரும் லெபனானை கடுமையாக தாக்கி அப்பாவி பொதுமக்கள் 200 பேரை கொன்றிருக்கிறது. இதன் பிறகு ஹுர்முஸ் நீரிணையில் ஒரு கப்பலை இரான் தாக்கி அழித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகில் அமைதி தொடரப் போகிறதா அல்லது யுத்தம் தொடரப் போகிறதா என்பதை இந்த பேச்சு வார்த்தை தீர்மாணிக்கும் என்பதால் உலகம் முழுவதும் இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அல்லாஹ் நல்ல முடிவை தரட்டும்.

ஈரான் தன்னுடைய பேச்சுக்களிலும் நடவடிக்கைகளிலும் போர் சூழலிம் கூட நேர்மையை கடைபிடித்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவோ பல நாடுகளுடையவும் பல  கோடி மக்களுடைய வாழ்வாதார பிரச்சனையில் தொடர்ந்து மிக அபாயகரமாக அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.. ஈரானுடைய பாலங்களை தகர்ப்பதை பிரிட்ஜ் டே என்றும் அதனுடைய மின் உற்பத்தி நிலையங்களை தகர்ப்பதை எலக்ட்ரிசிட்டி டே என்று கொண்டாடுகிற அளவில் அமெரிக்கவின் மனோ நிலை கொடூரமாகி இருக்கிறது.   

ஆனால் ஹுர்முஸ் நீரிணையை தடுப்பது என்ற ஈரானுடைய  நிலைப்பாடு உலகிற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி இருப்பதாலும் இஸ்ரேலை ஈரான் முடிந்த வரை துவம்சம் செய்து வருவதாலும் அரபு நாடுகளின் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதாலும்  சிக்கலை மேலும் அதிகப்படுத்துவது அமெரிக்காவின் மரியாதைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அமெரிக்காவே ஈரானை நோக்கி இறங்கி வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது.

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை நாங்கள் ஒரு போதும் நம்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்த ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் இஸ்லாமாபாத்திற்கு வருவது அந்த நாடு எத்தகைய அரசியல் வீழ்ச்சியை கண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமே ஆகும்.

இஸ்லாமாபாத் எந்த அளவு பலவீனமானது என்றால் மக்கள் போராட்டங்கள் எதையும் நட்த்தி விடக் கூடாது என்பதற்காக இந்த பேச்சு வார்த்தையை நட்த்துவதற்காக அது தன்னுடைய நாட்டிற்கே சில நாட்கள் விடுமுறை அளித்து விட்டது.  

ஏற்கெனவே இதுவிவகாரத்தில் ஓமன் வழியாக பேச்சு வார்த்தை நட்த்திக் கொண்டுதான் இருந்தது. அந்த  பேச்சு வார்த்தைக்கு இடையில் தான் அமெரிக்கா ஈரானை தாக்கியது. இப்போது அதுவே பேச்சு வார்த்தைக்கு இறங்கி வர வேண்டிய சூழலை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.  

உலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய துரதிஷ்டம், எந்த அவமானத்தையும் துடைத்து கொண்டு  மீண்டும் மீண்டும் கோட்சூட் போட்டுக் கொண்டு பேச வருகிற ஒரு நாட்டின் தலைமையை நம்பி அது  இருக்க வேண்டியுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செயத அவமானகரமான செயலை கூட அப்படி துடைத்தெறிந்து விட்டவரகளுக்கு இதுவெல்லாம் மிக சகஜம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் உலகிறகு இத்தகையோரால் ஏற்படுகிற துயரம் தான் மிக வருத்த்த்திற்குரியது.  

உலக அரசியல் அரசியல் மஃபியாக்களால் நிறைந்து விட்ட்து என்பது தான் இப்போதைய உலகின் பெருந்துயரம் ஆகும்.

எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையின் முடிவு நல்லதாக மனித ராஜதந்திரத்தின் வெற்றியாக அமைய வேண்டும்.

இத்தகைய பேச்சு வார்த்தை டிப்ளமஸி ராஜதந்திர முயற்சி என்று அழைக்கப்படுகிறது.  

டிப்ளமஸி என்ற வார்த்தை உலக அரசியலில் ஒரு மதிப்பு மிக்க சொல்லாகும்.

நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே டிப்ளமஸீ ஆகும்.

இரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைக்கிடையே சமாதானப்படுத்துகிற வார்த்தைகளை பேசி – இரு தரப்புக்கும் சரி தவறு என்பதை பற்றி அதிகம் ஆராயாமல் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் அல்லது மதித்தலின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பது ராஜ தந்திர நடவடிக்கை ஆகும்.  

பிரிட்டனுக்கும் அயர்லாந்திற்கும் இடையே பல தலைமுறைகளாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

அயர்லாந்து சுயாட்சிக்காக போராடிக் கொண்டிருந்த்து. 1998 ல் நடை பெற்ற ஒரு ஒப்பந்தம் அயர்லாந்திற்கு சுய அதிகாரம் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தை கொடுத்த்து அதே நேரத்தில் பிரிட்டனின் ஆதரவோடு அது செயல்படும் என்பதும் ஏற்கப்பட்டது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதை சமீப காலத்தில் நடந்த சிறந்த ராஜதந்திர நிகழ்வாக உலகம் கருதுகிறது.

பேச்சு வார்த்தை என்பது ஒரு அற்புதமான ராஜ தந்திர நடவடிக்கையாகும். ஆனால் அது அடிப்படையான மனித இயல்புகளை நெகிழ்ச்சிப்படுத்துகிற சில அம்சங்களை கொண்டிருக்க வேண்டும். அகம்பாவமும் ஆக்ரமித்தல் சிந்தனையும் அதில் இருக்க கூடாது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு அருமையான ராஜதந்திர நடவடிக்கைளுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் ஆவார்கள். அதன் மூலம் பெரும் வெற்றியை கண்டவரும் ஆவார்கள்.

கஃபாவை கட்டி முடிப்பதில் ஒன்று சேர்ந்து உழைத்த மக்காவின் குறைஷிகள் ஹஜருல் அஸ்வத் கல்லை எடுத்து வைப்பதில் தகறாறு செய்து கொண்ட போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  தன்னுடைய 35 வது வயதில் அந்த பிரச்சனைக்கு மிக அற்புதமாக தீர்வு கண்டார்கள். ஹஜருல் அஸ்வதை ஒரு போர்வையில் வைத்து அந்த போர்வையை அனைத்து தரப்பினரையும் பிடித்து உயர்த்தச்  சொல்லி பிறகு அந்த கல்லை தான் எடுத்து வைத்தார்கள்.

சமூகங்களுக்கிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டும் நடவடிக்கைகளில் மிக தாராள மனதுடன் பெருமானார் நடந்து கொண்டார்கள்.

மரியாதை எனும் ராஜதந்திரம்

இபோதைய சவூதி நகரான நஜ்ரானில் ஒரு காலத்தில் கிருத்துவர்கள் வாழ்ந்தனர். ஹிஜ்ரீ 9 ம் வருடம் அவர்களின் ஒரு குழு பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தனர். அது பெருமானாரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த நேரம். அவர்கள் வந்தது பெருமானாரின் முன்னிலையில் தாங்களே உயர்ந்தவர்கள் என்பதை நிருபிப்பதற்காகவே கொஞ்சம் திமிருடன் தான் வந்தாரகள். சுமார் 60 நபர்களை கொண்ட அந்த குழுவை மஸ்ஜிதுன்னபவியிலேயே பெருமானார் (ஸல்) தங்க அனுமதித்தார்கள். அவர்கள் ஒரு சீராக பட்டாடைகளையும் தங்க ஆபரணங்களையும் அணிந்து அவர்கள் வந்தார்கள். இது பெருமானாருக்கு பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியும். வேண்டுமென்றே அவர்கள் அப்படி நடந்த கொண்ட போது முதல் நாளில் பெருமானார் (ஸ்ல) அவர்கள் அவர்களோடு பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை. இரண்டாம் நாளில் அவர்கள் சாதாரண பாதிரிகளின் ஆடையோடு வந்த போது பெருமானார் (ஸ்ல) அவர்கள் அவர்களோடு பேசினார்கள்.

وصل هذا الوفد بهيئة منظمة جداً، وفي صورة منمقة وصلت حد المبالغة، فقد لبسوا الثياب الحريرية وتحلوا بالذهب، والرسول عليه الصلاة والسلام يحرم هذه الأمور على الرجال، فكره صلى الله عليه وسلم أن يتكلم معهم وهم بهذه الصورة، وأجلهم يوماً، فجاءوا في اليوم الثاني وهم يلبسون لبس الرهبان، فبدأ الرسول عليه الصلاة والسلام في الحوار معهم، وهذا الوفد لم يكن من نيته ولا من همه أن يسلم أو يفكر في الإسلام، وإنما أتى ليناظر الرسول عليه الصلاة والسلام ويجادله من ناحية، وأتى ليبهره ويبهر المسلمين من ناحية أخرى

அவர்களுடைய பேச்சுவார்த்தையில் மரியாதை இருக்கவில்லை . அகம்பாவத்தோடு தான் பேசினார்கள்.

இடையில் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கான நேரம் வந்த போது பெருமானாரிடம் அனுமதி கேட்காமலே கிப்லாவிற்கு எதிர் திசையில் ஒன்று சேர்ந்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். சஹாபாக்க்ள் அதை தடுக்க முயன்ற போது அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

அந்த கிருத்துவர்கள் அப்போது இஸ்லாமை ஒப்புக் கொள்ள வில்லை எனினும் பெருமானாரிடன் உடன்படிக்கை செய்து கொண்டு வெளியேறினார்கள்.

பெருமானார் வெளிப்படுத்திய மரியாதை استقباله للوفود

. وكان النبي صلّى الله عليه وسلم يكرم الوفود ويبسط رداءه لبعضهم، ويشركهم في الجلوس إمعانا في إزالة الدهشة، وإدخال المسرة،= ذكر ابن ماجه 

சிறப்பான ஆடை அணிவார்கள்

فيذكر البخاري  أن رجلا أهدى للنبي حلة، فقال له: «لتتجمل بها يا رسول الله للوفو

மன்னிப்பு எனும் ராஜதந்திரம்.

 

திஃசூர் என்பவர் பெருமானாரை கொல்லை மறைந்திருந்து திட்டம் தீட்டி பெருமானார் தூங்கும் போது பெருமானுருடைய வாளையே உருவி அவரை  மிரட்டினார்.

அவரை மன்னித்த பெருமானார் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத போதும் இனி இஸ்லாமிற்கு எதிராக செயல்படுவதில்லை என்ற உறுதி மொழியை அவரிடம் பெற்றுக் கொண்டு அவரை மன்னித்தார்கள்.

அவர் பிற்காலத்தில் அவருடைய மொத்த குடுப்த்தினருடனும் வந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்;

وفي رواية الإمام أحمد أن الرجلقام على رأس رسول الله ـ صلى الله عليه وسلم ـ بالسيف فقال: من يمنعك مني؟ فقال ـ صلى الله عليه وسلم ـ: اللهُ عز وجل .. فسقط السيف من يده فأخذه رسول الله ـ صلى الله عليه وسلم ـ فقال: من يمنعك مني؟، فقال الأعرابي: كن كخير آخذ، فقال ـ صلى الله عليه وسلم ـ: أتشهد أن لا إله إلا الله؟، قال: لا، ولكني أعاهدُك أن لا أقاتِلَكَ، ولا أكونَ مع قوم يقاتلونك، فخلى سبيله، فذهب إلى أصحابه، فقال: قد جئتُكم من عندِ خير الناس ) . وذكر الواقدي أنه أسلم ورجع إلى قومه فاهتدى به خلق كثير

 

அன்பளிப்பு எனும் ராஜதந்திரம்.

பொதுவாக மனிதர்களிடம் இருக்கிற தேவையற்ற கோபமும் குரோதமும் தான் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். அன்பளிப்புகள் அதை குறைத்து நிதானமாக யோசிக்க வைக்கும்.

அதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதுக்குழுவினருக்கு அன்பளிப்புக்களை வழங்குவார்கள்.

இப்னு கல்தூன் கூறுகிறார்.

ابن خالدون 

 : ان النبي صلّى الله عليه وسلم يحسن وفادة الوفود ويحسن جوائزهم، وهذا كان شأنه مع الوفود ينزلهم إذا قدموا ويجهزهم إذا رحلوا

فيذكر البيهقي  قول النعمان بن المقرن، قدمنا على رسول الله صلّى الله عليه وسلم أربعمائة رجل، فلما أردنا أن ننصرف قال: «يا عمر زود القوم

 

உணவளித்தல் எனும் ராஜதந்திரம்

ஹிஜ்ரீ 9 ல் தாயிப் நகர் வாசிகள் பெருமானாரிடம் வந்த போது அவர்களுக்கு பெருமானார் உணவளித்தார்கள். ஆனால் அவர்களோ இடை தரகரகாயிருந்தவர் சாப்பிட்ட பிறகே அதை சாப்பிட்டார்கள்.

 

وعند ما جاء وفد ثقيف إلى رسول الله صلّى الله عليه وسلم كان خالد بن سعيد (ت ١٤ هـ) يمشي بينهم وبين رسول الله صلّى الله عليه وسلم وكانوا لا يأكلون طعاما يأتيهم حتى يأكل منه خالد 

தூதர்களுக்கான் பாதுகாப்பு

பெருமானாரிடமே அகந்தை பேசிய தூதர்களுக்கும் பெருமானார் பாதுகாப்பளித்தார்கள்.

 بعثهم مسيلمة إلى رسول الله صلّى الله عليه وسلم، فقالوا: نشهد أن مسيلمة رسول الله، فقال الرسول صلّى الله عليه وسلم: «لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما

தூதர்கள் திரும்பச் செல்லும் உரிமை

أن قريشا بعثت أبا رافع رسولا إلى رسول الله صلّى الله عليه وسلم فوقع في نفسه الإسلام فأراد أن يبقى في المدينة ولا يعود إلى مكة، فقال له النبي صلّى الله عليه وسلم: «إني لا أخيس بالعهد، ولا أحبس البرد، ارجع إليهم، فإن كان الذي في قلبك الذي فيه الان فارجع»

பணிவின் அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்துகிற போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது கம்பீரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

  النبي صلّى الله عليه وسلم كان يخاطب الملوك بالمفرد وليس بصيغة الجمع فيقول:

.. إني أحمد الله إليك  أو « ... إني أدعوك بدعاية الإسلام ... » «

 உடன்படிக்கைகளை பேணுதல்

பெருமானார் (ஸல்) அவர்கள் 70 காரிகளை ஒரு குழுவிடம் பெருமானார் அனுப்பி வைத்தார்கள். அவர்களை அவரக்ள் கொன்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிய ஒருவர் மதீனாவிற்கு வந்த போது அதே குடும்பத்தை சார்ந்த இருவர் மதீனாவிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். இவர்களும் தீங்கிழைக்க வந்திருப்பார்களோ என்று நினைத்து அவர் அவ்விருவரை கொன்றார்.

ஆனால் அவ்விருவரும் மதீனாவின் பனூ நுழைர் யூத குழ்வின் விருந்தினர்களாக வந்திருந்தனர். தவறு நடந்து விட்ட்து என்பதை அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இது விசயமாக பனுன் னுழைர்களிடம் பேச்சு வார்தை நட்த்த தன்னுடைய ஆட்களை அனுப்ப வில்லை தானே நேரில் தனது வளர்ப்பு மகனை மட்டும் துணைக்கு அழைத்து கொண்டு சென்றார்கள்.

இதுவே பெருமானார் (ஸ்ல) அவர்கள் வெற்றி கண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகும்.

 இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சுமார் 200 உடன்படிக்கைகளை பெருமானார் எட்டினார்கள் என்கிறது வரலாறு.

 இன்றைய உலகில் ராஜதந்திரம் என்பது ஒரு கெட்ட வார்த்தையாக மாறி வருகிறது.

மிக வஞ்சகமாக யார் நடந்து கொள்கிறாரோ அவர் சிற்ந்த ராஜதந்திரியாகி விடுகிறார். 

 அடுத்த நாட்டு அரசர்களை சதி செய்து கொன்று அதை ஆக்ரமிப்பதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 அன்னியர்களுக்கு சொந்தமான எண்ணை கப்பல்களை மிரட்டி திருடிக் கொண்டு அதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 அப்பாவி மக்களை வேண்டு மென்றே கொடூரமாக கொன்றொழித்து விட்டு பேச்சு வார்த்தைக்கு வருவதை ராஜதந்திரம் என்கிறார்கள்.

 ஈரானுடைய் ஒப்பந்த வாசகம் தெளிவாக அனைத்து தரப்போடும் இனி சண்டையிடக் கூடாது என்று சொல்கிற போது அதை ஏற்றுக் கொள்வது போல நடித்து விட்டு பிறகு இஸ்ரேலின் மூலம் லெபனானில் உள்ள அப்பாவி மக்கள் 200 பேரை கொலை செய்து ஆயிரக்கணக்கானோரை முடமாக்கி விட்டு இப்போது அமெரிக்கா ஈரானுடன் சமரசம் பேச வருகிறது.

 அவலட்சணமான ராஜதந்திரத்தின் மொத்த உருவாக இருக்கிற அமெரிக்கா இன்று நீதிக்காக  போராடிக் கொண்டிருக்கிற ஈரானிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது.

 இது நன்மையாக அமையட்டும் என்று நாம் ஒட்டு மொத்தமாக பிரார்த்திப்போம்.

திருக்குர் ஆன் அருமையாக கூறுகிறது.

 وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128)

 உடன்பாடு காண்பது தான் சிறந்த்து. ஆனால் அதற்கு சுயநலம் பெரும் தடையாக இருக்கிறது. அல்லாஹ்வை அஞ்சி மக்கள் விவகாரத்தில் தலைவர்கள் நடந்து கொள்ல வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்