வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 19, 2026

வலிமை பெறுவோம்

 புனித ரமலான் வந்து விட்டது

நாம் நோன்பு நோற்றிருக்கிறோம்.

ரய்யான் எனும் சொர்க்கம் காத்திருக்கிறது. அது நோன்பாளிகளுக்கான பிரைவேட் வாசல்.

إنَّ في الجنَّة بابًا يقال له الرَّيانُ يدخلُ منه الصَّائمونَ يوم القيامة ٬ لا يدخلُ منه أحدٌ غيرهم .

 நோன்பு நம்மை மறக்காது. அது நமக்காக பரிந்து பேசும்

 عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ  احمد

 நமது நோன்பிற்கான கூலி அதை நாம் பாதுகாக்கும் அளவு மகத்தானது.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ-  مشلم -1945

 நமது நோன்பு நம்மை வலிமைப்படுத்தட்டும்.

 இஸ்லாமிய வரலாற்றில் ரமலான் முஸ்லிம்களின் மனோவலிமைக்கும் வெற்றிக்கும் அடையாளமாக அமைந்த மாதமாகும்.

 ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு ரமலான் 17 ல் நடைபெற்ற பத்று யுத்த்தில் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அரபுலகில் இஸ்லாமின்  அதிகாரத்தை தொடங்கி வைத்த மாதம். ரமலான் ஆகும்.

  ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு இதோ போன்றதொரு ரமலானின் 10 ம் நாளில் மக்காவை வெற்றி கொண்ட நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் வெற்றிப் பயணத்திற்கு ஒரு நிறைவை கொடுத்தார்கள்.

 ஹிஜ்ரி 584 ம் ஆண்டு இதே போன்ற ஒரு ரமலான் மாதத்தில் கிருத்துவர்களிடம் சிக்கியிருந்த பைத்துல் முகத்தஸை சலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் ஹித்தீன் யுத்தத்தில் வென்று மீட்டெடுத்தார்கள்.

 இடைக்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றிற்கு மிகப் பெரிய சோகத்தை கொடுத்த தாத்தாரியர்களை முஸ்லிம்கள் வென்றெடுத்த ஐய்ன் ஜாலூத் யுத்தம் நடைபெற்றது ஹிஜ்ரீ 688 ரமலானில் ஆகும். அதில் முஸ்லிம்கள் தோற்கடிக்க முடியாது என்று கருதப்பட்ட தாதாரியர்களை தோற்கடித்தார்கள்.

 தற்காலத்தில் முஸ்லிம்களை ஆட்டிப் படைத்து வருகிற  இஸ்ரேலிடமிருந்து எகிப்து அரசு தன்னுடைய நிலப்பகுதிகளை மீட்டுக் கொண்ட அக்டோபர் சண்டையில் ஆகும், அந்த  வெற்றி கிடைத்தது ஹிஜ்ரீ 1393 ரமலான் மாதத்திலாகும்.

 ரமலானின் வெற்றிகள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன .

 ரமலானில் முஸ்லிம்களுக்கு கிடைக்கிற மன வலிமையும்  மகிழ்ச்சியும் இஸ்லாமின் எதிரிகளுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை கொடுக்க கூடியதாகும்.

அதனால் எதிர்கள் தொடர்ந்து  சதி வேலைகளை  ரமலானில் அதிகமாக செய்வார்கள்

 இப்போது முஸ்லிம் சமூகம் அரசியல் பலம் குறைந்து காணப்படுகிறது. அதனால் இஸ்லாமின் எதிரிகள் முஸ்லிம்களை பந்தாடுகிறார்கள்.

 அமைதிக் குழு என்ற பெயரில் காஸா வில் அமைதியை கொண்டு வருவதற்காக என்று சொல்லி அமெரிக்க அதிபர் தன்னிஷ்ட்த்திற்கு ஒரு குழுவை அமைத்து அதன் செயல்பாட்டை நேற்று தொடங்கியிருக்கிறார் அவர் நிச்சயமாக பாலஸ்தீனத்தின் ஆதரவாளர் அல்ல; அவர் அப்பட்டமாக இஸ்ரேலி ஆதரவாளர். இஸ்ரேல் நாடு பாலஸ்தீன மக்களை பல்லாயிரக் கணக்கில் கொன்று வீசிய போது அவர் அதை கண்டு கொண்டதில்லை. பாலஸ்தீன மக்களுக்காக நீயாயம் பேசியவர் இல்லை. ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியான அவர் அழகிய கடற்கரை பிரதேச நகரான காஸாவை ஒரு சுற்றுலா மையமாக்கும் திட்டத்தோடு காஸாவில் கை வைக்கிறார். முடிவு என்ன ஆகப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது அவர் காஸாவிற்கு நன்மை செய்வதற்காக காஸா அமைதிக்குழுவை ஏற்படுத்தவில்லை. அவர் இஸ்ரேலை பாதுகாக்கும் திட்டத்தோடு காஸாவிற்குள் நுழைகிறார். இனி அங்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது. முஸ்லிம் நாடுகள் இத்தனை இருந்தும் – இவ்வளவடு வசதியாக வாழ்ந்தும், ஆதிக்க சகதிகள் முஸ்லிம்கலை பந்தாடுகிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது     

அதே போல  நேற்று ரமலான் மாதம் தொடங்குகிற நாளில் மகாரஷ்டிரா மாநில அரசு அங்கு முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் கிடைத்து வந்த 5 சதவீத இட ஒதுக்கீட்டையும்  மற்ற சில்  சலுகைகளையும் இரத்து செய்துள்ளது.

 இது பாஜாவின் மாநில அரசின் மனோவிகாரத்தின் வெளிப்பாடாகும்.  கீழ்த்தரமான இந்த அறிவிப்பு இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டிருக்கிற காழ்ப்புணர்வின் உச்சபட்ச அடையாளமாகும். இஸ்ரேலிய யூதர்களிடமிருந்து இந்திய அரசியல் வாதிகள் கற்றுக் கொண்டிருக்கிற நடைமுறையாகும்

 இவை முஸ்லிம்களை பலவீனப்படுத்தி விடும் சஞ்சலப்படுத்தி விடும் என எதிரிகள் கனவு காணாலாம்.

 நாம் சொல்லுவோம்,

 ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல் - எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். எங்களுக்கான சிறந்த பொறுப்பாளன் அல்லாஹ்வே ஆவான்.

 வல்லாஹு கைருர் ராஜிகீன்.

எங்களுக்கு தேவையானவற்றை தருவதில் அல்லாஹ்வே சிறந்தவன்.

 இந்த ரமலான் அல்லாஹ் தனது பரக்கத்துக்களை முஸ்லிம்களுக்கு வாரி வழங்கும் மாதமாகும்.

 قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم ‌يبشر ‌أصحابه: قدْ جاءَكمْ شهرُ رمضانَ، شهرٌ مباركٌ افترضَ اللهُ عليكُمْ صيامَهُ، يفتحُ فيهِ أبوابُ الجنةِ، ويغلقُ فيهِ أبوابُ الجحيمِ، وتغلُّ فيهِ الشياطينُ، فيهِ ليلةٌ خيرٌ مِنْ ألفِ شهرٍ، مَنْ حُرِمَ خيرَها فقدْ حرِمَ

 இந்த ஹதீஸ் சொல்லும் கருத்து,

 ரமலான் முழுக்க பரக்கத்தை தரும் மாதமாகும். பரக்கத்திற்கான அனைத்து வழிகளும் இலேசாகும். பரக்கத்தை தடுக்கிற அனைத்து வழிகளும் அடைக்கப்படும். ஒரு இரவில் ஆயிரம் மாதங்களுக்கான பரக்கத் தரப்படும்,

 இந்த மாத்ததின் பரக்கத் நமக்கு கிடைக்காமல் போய்விடக் கூடாது. இந்த மாதத்தில் பரக்கத் கிடைக்கவில்லை எனில் வேறெப்போதும் கிடைக்காது என்னும் அளவில் பரக்கத் பொழியும் மாதமாகு இந்த மாதம்.

 பரக்கத் என்பது வெளிப்படையான அடையாளங்கள் அல்லது காரணிகள் நிறைந்திருப்பது அல்ல; நிறைய காசு அல்லது பெரிய செல்வாக்கு என்பது அதன் அடையாளம் அல்ல. ஒன்று பத்தாவது அல்ல;

 பரக்கத் கிடைக்கிற போது வெற்றி தானாக அமையும். அல்லாஹ் அதை வடிவமைப்பான்

 ஒரு சாமாணிய மனிதர் தனது ஆசிரியரை சந்தித்து தனக்கு ஹஜ்ஜுக்கு போக அதிக ஆசை என்று கூறினார். உஸ்தாத் தன்னுடைய ஜோப்பில் கை விட்டு சில சில்லரை நாணயங்களை அவரது கையில் கொடுத்தார். ஹஜ்ரத்தின் பரக்கத் என்று கருதி அவர் பத்திரமாக அதை வைத்துக் கொண்டார். ஹஜ் பயணத்திற்கு இந்த சில்லரை எந்த் அளவு உதவும் என்று அவர் சிந்திக்கவில்லை.

 அவர் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு பயணக் கூட்டம் அவரை சந்திதது. எங்கே போகிறீர்கள் என்று கேட்டது. ஹஜ்ஜுக்கு போகிறேன் என்று அவர் சொன்னார். நாங்களும் ஹஜ்ஜுக்கு த்தான் போகிறோம். ஒரு இடம் காலியிருக்கிறது எங்களுடன் வருகிறீர்களா என்று கேட்டது. அவர் சம்மதித்தார். ஹஜ்ஜுக்கு போய் திரும்பிவருகிற வரை அவருடைய அனைத்து தேவைகளையும் அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். உஸ்தாத் கொடுத்த சில்லரை அவருடைய சட்டைப்பையிலேயே பத்திரமாக இருந்தது.

 எனவே பரக்கத் என்பது புறக்காரணிகளுக்கு அப்பால் பொழிகிற அல்லாஹ்வின் அக்கிருபையாகும்.

 நேரத்தில் பரக்கத்

 பரக்கத் பொழிகிற போது குறுகிய நேரத்தில் பெரும் காரியங்களை செய்து விட முடியும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 10 ஆண்டு கால மதீனத்து வாழ்வு எவ்வளவு பரக்கத்தானது என்பதை அறியலாம். இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் அனைத்தும் அமுல் படுத்தப் பட்டன. ஒரு அரசு உருவாக்கப் பட்டது. திட்டவட்டமான கலாச்சார அடையாளங்கள் உருவாக்கித் தரப்பட்டன.   ஆனால் அதற்கான மூலாதாரங்கள் எதுவும் காசு பணமாகவோ அதிகார வர்க்கத்தின் துனையாகவோ எதுவும் பெருமானாரின்  கை வசம் இருக்கவில்லை.

 ரிஜ்கில் பரக்கத்

 أحد الصحابة كان قد اقترض من النبي عليه الصلاة والسلام شيئاً من الطعام ليقدّمه إلى ضيفه ، فظلّ يأكل منه زماناً هو وضيفه وهو على حاله لم ينقص منه شيء ، فلما وزنه بدأ بالتناقص ، فأتى النبي صلى الله عليه وسلم وأخبره بما حدث فقال له( لو لم تكله لأكلتم منه ، ولقام لكمأي : لاستمرّ عطاؤه دون انقطاع ، رواه مسلم .

செல்வாக்கில் பரக்கத்

 பிலால் ரலி அவர்கள் இஸ்லாமை தழுவிய போது அவரை மக்காவில் சுடு மணலில் கிடத்தி கொடுமை செய்தவன் உமய்யா.

 இவ்வாறு கொடுமை செய்யப்பட்ட அம்மார் , சுமையா, சுஹைப்,மிக்தாத் (ரல்) ஆகியோருக்கு தண்ணீர் கொடுத்து கைதாங்களாக அழைத்துச் செல்ல அவர்களுடைய உறவினர்கள் இருந்தார்கள். ஆனால் பிலால் ரலி அவர்களுக்கு அப்படிக் கூட ஒருவரும் இருக்கவில்லை.

 பத்று யுத்த்த்தின் போது பிலால் ரலி அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும் போராட்ட்த்தில் அவன் கொல்லப் பட்டான்.

 ஒவ்வொரு பள்ளிவாசலிலும் பாங்கு சொல்லப் படுபவர் பிலால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  

 கறுப்பு இனத்தவரில் பிலால் ரலி முன்னோடி என பெருமானர் (ஸல்) அவர்கள் கூறினார்கல்.

 وروى أنس بن مالك عن النبي محمد قوله: «السُّبَّاق أربعة: أنا سابق العرب، وسلمان سابق الفرس، وبلال سابق الحبشة، وصهيب سابق الروم»

 பரக்கத் எந்து என்ன ?

தமிழில் அப்விவிருத்தி என்ற ஒற்றை சொல்லில் பரக்க்த்திற்கு பொருள் சொல்லி விடுகிறோம். அபிவிருத்தி என்றால் ஒன்று பத்தவது என்று பொருள்.

 ஆனால் பரக்கத்தின் பொருள்: அலாதியானது

 இஸ்லாமிய அறிஞர்கள் பரக்க்த்திற்கு 4 அடையாளங்களை சொல்வார்கள்

பரக்கத் இருந்தால்

தேவைகள் நிறைவேறும்- கோடிகள் இருந்தும் தேவை நிறைவேறாவிட்டால் என்ன பயன்?

பிரச்சனைகள் தீரும். – ஆட்சி அதிகாரம் இருந்தும் பிரச்சனை தீர வில்லை எனில் என்ன பயன்?

கண்ணியம் பெருகும் – அல்லாஹ்வின் படைப்புக்களிலே மரியாதைக்கு  ஆசைப்படுகிற ஒரே படைப்பு மனிதன் தான். மரியாதை அற்ற காசில் அல்லது அதிகாரத்தில் என்ன பயன்?

அச்சப்பட தேவையிருக்காது. எல்லாம் இருந்தும் எதிரிகளை அஞ்சி அஞ்சி வாழ வேண்டியிருந்தால் அந்த வாழ்க்கைகு என்ன பயன்?

 இவ்வளவு பொருள் கொண்ட பரக்கத்தை இறைவன் அள்ளிச் சொரியும் நேரம் இந்த ரமலான் மாதம் .

 இந்த பரக்கத்தை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் ?

 திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது.

 وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُواْ وَاتَّقَواْ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاء وَالأَرْضِ وَلَـكِن كَذَّبُواْ فَأَخَذْنَاهُم بِمَا كَانُواْ يَكْسِبُونَ {96} سورة الأعراف،

 ஈமான் – தக்வா – இரண்டும் இருந்தால் வானத்தை பிளந்து கொண்டு பரக்கத் வந்து சேரும்.

 ஈமான் என்றால் தளர்வில்லாத அழுத்தமான அழுத்தமான நம்பிகை –ஆகும்,

 நோன்பு, இரவுத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், தானதர்மம் செய்தல் இஃதிகாப் இருத்தல் ஆகிய ரம்லானிய அமல்களை அதற்குரிய நன்மைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நிறைவேற்றுவோம்.

 ஒரு சம்பிரதாயமாக ரமலான் நம்மை கடந்து போய்விட வேண்டாம்.

 பத்று யுத்தம் நடைபெறுவதற்கு முந்தைய இரவில்   குறைந்த எண்ணிக்கையில் இருக்கிற முஸ்லிம்கள் எந்த நம்பிக்கையில் நம்மை எதிர்க்க துணிகிறார்கள். அவர்களுக்கு பின்புலமாக வேறு ஏதாவது துனைப்படைகள் மறைந்திருக்கிறதா என்று வேவு பார்த்து வருமாறு மக்காவின் காபிர்கள் உமைர் பின் வஹப் அல் ஜுமஹீ என்பவரை அனுப்பி வைத்தார்கள்

 அவர் முஸ்லிம்களின் அணியை சுற்றிப்பார்த்தார். முஸ்லிம்கள் 300 பேர்களே இருப்பதை கண்டு கொண்டார். அவர்களும் அந்த இரவில் தொழுகையிலும் குர் ஆன் ஓதிக் கொண்டும் அச்சமற்று இருப்பதை கண்டார்.

 அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்படுவது என்பதை தவிர வேறு சிந்தனையில்லாத அந்த ஈமானிய உறுதி அவரை உலுக்கி எடுக்கிறது.

மக்கா மக்களிடம் திரும்பி அவர் சொன்ன வார்த்தைகள் வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற வார்த்தைகள்

 قد رأيت ، يا معشر قريش ، البلايا تحمل المنايا ، نواضح يثرب تحمل الموت الناقع

மரணத்தை சுமந்து கொண்டு சோதனைகள் உங்களை நோக்கி வருவதை நான் கண்டேன். மதீனாவின் ஒட்டகைகள் சந்தேகத்திற்கு இடமற்ற மரணத்தை உங்களுக்காக சுமந்து வருகின்றன என்று சொன்னார்.

 முஸ்லிம் உம்மத் மறந்து விடக் கூடாத செய்தி

 அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் நாம் கொண்டிருக்கிற ஈமான் எந்த சூழ்நிலையிலும் மிக உறுதியானதாக வைத்துக் கொண்டால் மட்டுமே நமக்கு பரக்கத் கிடைக்கும்.  நமது நமது குடும்பமும் வலிம்ம பெறும்.  நமது சமூகமும் வலிமை பெறும்.  

 ஈமானில் பலவகையான தளர்ச்சியை நாம் தற்காலத்தில் பார்க்கிறோம்

 அல்லாஹ் ரஸூலை விட அரசியல் அதிகாரமும்  பொருளாதார வளமும் நம்மை ஆட்கொண்டு விட்டதாகவே தெரிகிறது.

 இவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தருகிறவரகளாக மாறிவிட்டோம்.

 பள்ளிவாசல்களை அமைச்சர்கள் திறந்து வைக்கிறார்கள். மீலாது மேடைகள் அமைச்சர்களுகாக அலங்கரிக்கப்படுகின்றன, பணக்கார்களின் வருகை பிரதானமாகிவிடுகிறது.

 ஒரு உதாரனத்திற்காக இதை கூறுகிறோம். இது யாரையும் குறை கூறுவதற்காக சொல்லப் பட்டதல்ல

 இது போல நம்முடைய குடும்பம் சமூகம் சம்பந்தப் பட்ட ஒவ்வொரு காரியத்திலும் நமது ஈமானிய அம்சங்களை விட வெளிப்படையான அதிகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்களாக நாம் மாறிவருகிறோமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

 தமிழ்கத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பொறுப்புக்கு நியமிக்கப் பட்ட ஒருவர் எங்களுடைய ஹஜ்ரத்தை வந்து சந்தித்தார். உன் ஈமானை பாதுகாத்துக் கொள் என்று ஹழ்ரத் கூறினார்கள்.

 அதே போல் ஊரிலுள்ள ஒரு பெரிய குடும்பம் துஆவை நாடி ஹஜ்ரத்திடம் வந்த போது ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

 நமது ஈமான பாதுகாப்பாக இருக்கிறதா என்பது நம்மில் ஒவ்வொருவரும் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டிய அம்சமாகும்.  

 அமெரிக்காவை சார்ந்த ஜெப்ரீ எப்ஸ்டீன் என்பவர் தனி தீவை வைத்து சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் தொழில் செய்து அரசிய்ல் தலைவர்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் என்ற செய்தி இன்று உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது அமெரிக்க அதிபர் இந்திய பிரதமர் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்களுடைய பெயர்கள் இதில் சிக்கியிருக்கின்றன. நவீன் அரசியல்வாதிகளின் அந்தரங்க வாழ்க்கை பார்த்து உலகம் காரித்துப்பிக்க் கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான அரபு ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமானது. அதை விட பேரதிர்ச்சி அந்த மோசடி பேர்வழியிடம் கஃபாவின் திரையின் ஒரு பகுதி இருந்திருக்கிறது.

 அது எப்படி அவனிடம் சென்றது ? யார் கொண்டு சேர்த்தது ?

 உலக முஸ்லிம்களின் மன சாட்சியை – ஈமானை சுண்டி இழுக்கிற கேள்வியாகும் இது!

 இதுவும் ஒரு சின்ன உதாரணம் தான். நமது நம்பிக்கைகளில் நாம் எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கிறோம் என்பது தான் பிரதானமானது.

 நாம் நமது குடும்பம் – நமது சமூக தொடர்புகள் ஒவ்வொன்றிலும் நமது ஈமான் எப்படி இருக்கிறது என்பதை நிச்சயமாக அளவிட்டு பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை இது.

 அதனால இந்த ரமலானை ஒரு வழக்கமான பண்டிகை காலமாக இல்லாமல்,. நமது ஈமானை உறுதிப் படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பக எல்லா நிலையிலும் பயன்படுத்திக் கொள்வோமாக!

 அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்!

 பரக்கத்தை பெற இரண்டாவது வழி தக்வா

 தக்வா என்பது அடிக்கடி சொல்லப்படுகிற வார்த்தை தான் என்றாலும் அதன் மிக எளிமையான பொருள்

 மார்க்கத்தை சரியாக கடைபிடிப்பதாகும்.

 ஒரு பெண்மணி ஒரு பாகிஸ்தானின் பிரபல ஆலிம் துல்பிகார் சாஹிப் அவர்கலிடம் வந்து முறையிட்டார். ஹஜ்ரத் எனது கணவர் எனக்கு ஒரு நாளைக்கு 2500 ரூபாய் தருகிறார். ஆனால் அது எனக்கு போதுமானதாக இருப்பதில்லை என்று கூறினார்.

நீ சரியாக தொழுகிறாயா என்று ஹழ்ரத் திருப்பிக் கேட்டார். அவ்வப் போது தொழுகிறேன் என்று அந்த பெண் பதில் சொன்னார். 3 மாதங்கள் சரியாக தொழுது விட்டு வந்து என்னை பாருங்கள் என்று அந்த ஹழரத் கூறினார். மூன்று மாதம் தொழுகையில் பேணுதலாக இந்த அந்தப் பெண்மணி திரும்ப ஹழ்ரத் அவரக்ளிடம் வந்து “ ஹழரத் எனக்கு இப்போது 500 ரூபாய் போதுமானதாக இருக்கிறது என்று கூறினார்.

 அறிஞர்கள் ஒற்றை வார்த்தையில் சொல்வார்கள்இபாதத்தில் கவனம் செலுத்தினால் பரக்கத் கிடைக்கும்.

 இது சும்மா போகிற போக்கில் சொல்லப் பட்ட கருத்து அல்ல; பெருமானார் (ஸல்) அவர்களுடைய  பல்வேறு ஹதீஸ்களும் முஸ்லிம் உம்மத்தின் வரலாற்று சான்றுகளும் கொடுத்த அனுபவத்தின் வெளிப்பாடாகும்.

 ஒரு பேரீத்தம் பழ கொட்டை அளவுக்கு மஹர் கொடுத்து மணம் முடித்த அப்துர் ரஹ்மான் பின் அவப் ரலி அவர்களைப் பார்த்து பெருமானார் (ஸலோ அவர்கள் சொன்னார்கல். பாரக்கல்லாஹு லக.

 قال لعبد الرحمن بن عوف رضي الله عنه – لمَّا علم بزواجه -: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ »؛ متفق عليه.

கலயாணம் நம் தேவைக்கு செய்யப்படுவது. அதில் பெருமானார் கற்றுக் கொடுத்த வழிமுறையை பேணவேண்டும் என்று நாம் நினைத்தால் அது இபாத்த் ஆகி விடும். அந்த இபாத்த்தில் பரக்கத் கிடைக்கும்.

 பரக்கத்திற்கு நாம் முன்னர் சொன்ன பொருளை கவனத்தில் கொண்டு பாரக்கல்லாஹு லக் என்ற வார்த்தையின் கனத்தை எண்னிப்பாருங்கள்.

 இதன் மதிப்பு புரியும்.

 எனவே நாமும் முஸ்லிம் உம்மத்தும் பரக்கத்தை பெறவும் வலிமை அடையவும் அதனுடைய ஈமானை உறுதி மிக்கதாக ஆக்கி கொள்ள வேண்டும்.

 இஸ்லாமிய வாழ்க்கை இஸ்லாமிய பன்பாடு ஆகியவற்றை முடிந்த அளவில்  கடைபிடிக்க முயல வேண்டும். அதற்கு எதிராக செயலாற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 இந்த ஒரு உறு மொழியோடு நாம் ரமலானை எதிர் கொள்வோமானால் ரமலானின் பரக்கத்துக்கல் நமக்கு வானிலிருந்து கொட்டும் பூமியிலிருந்து ஊற்றெடுக்கும்

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!