வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 13, 2023

சர்வாதிகார போக்கை தடுத்தாக வேண்டும்.

  يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32

 நம்முடைய நாட்டில் பொது சிவில் சட்டத்தை  கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய அரசு, அதற்கு எதிராக கேள்விகள் முன் வைக்கப்படும் போது “ஒரு நாடு ஒரே சட்டம் என்று இருப்பது தானே சரி” என்று வாதிடுகிறது.

உண்மையில் இது ஒரு அபத்தமான வாதமாகும்.

கோசம் கவர்ச்சியாக இருப்பது சரியாக இருப்பதாகாது இது

ஒரு நாடு ஒரே தந்தை

ஒரு நாடு ஒரே மொழி

ஒரு நாடு ஒரே மதம்

ஒரு நாடு ஒரே ஆடை

ஒரு நாடு ஒரே உணவு

என்று சொல்வதை போன்று அபத்தமானதும் ஆபத்தானதுமாகும்.

நம்முடைய நாட்டில் கிரிமினல் வழக்கு ஒன்றுதான். ஆனால் கீழ் நீதிமன்றங்களும் மேல் நீதி மன்றங்களும் எந்த அளவு வேறுபடுகின்றன என்பது நமக்கு தெரியும். . சட்டம் ஒறாக இருந்தும் கூட தீர்ப்பு ஒன்றாக இருப்பதில்லை.

ஆகவே ஒரு நாடு ஒரே … என்ற வாதம் முட்டாள்தனமானதாகும்.

கிப்லா மாற்றப்பட்ட போது முனாபிக்குகள் இறைவன் ஒருவன் தானே ஏன் கிப்லாவை மாற்றினீர்கள் என்று கேட்டு சர்ச்சையை எழுப்பினார்கள் அவர்களைப் பற்றி கூறும் போது குர் ஆன் (سيقول السفهاء என்று கூறியது.

கட்டுப்படுவது இறைவனுக்கு என்ற ஒருமை தான் பிரதானமே தவிர மற்ற மாறுதல்களில் சர்ச்சைக்கு வழியே  இல்லை. மீறி சர்ச்சை செய்பவர்கள் முட்டாள்கள் தானே!

தற்போதையை ஒன்றிய அரசின் பேச்சும் இந்த வகையில் தான் இருக்கிறது.

உண்மையில் ஒன்றிய அரசின் இந்த கோசம் பொதுவான சிவில் சட்ட்த்தை கொண்டுவருவது அல்ல.

ஏனெனில் அதில் இந்து சமூகத்திற்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.

இந்து சட்ட்த்தில் இருக்கிற கூட்டுக் குடும்ப சொத்து என்ற பிரிவே தீர்க்கப்பட முடியாத பிரச்சனை என்று கூறுகிறார்கள்.

திருமண வழக்கங்கள், விவாகரத்து நடைமுறைகளில் மக்களுக்கிடையே பல நூறு கலாச்சார வேறுபாடுகள் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் ஒற்னு படுத்துவது என்பது சாத்தியமே ஆகாது என்பது தான் வல்லுனர்களின் கருத்து.

அதற்கேற்றார் போல இப்போது மத்திய ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இந்த பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை பிரயோகமே ஒரு ஏமாற்று வித்தை யாகும்.

உண்மையில் அரசுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவரும் சிந்தனை எல்லாம் கிடையாது.

இந்துக்கள் அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கும் தைரியமோ - அல்லது இந்து சொத்துரிமை சட்ட்த்தில் கை வைக்கும் திட்டமோ அரசிடம் கிடையாது என்பது மிக வெளிப்படையாக தெரிந்த ஒன்றாகும்.

எப்படியாவது முஸ்லிம் தனி நபர் சட்டத்தை இரத்து செய்து விட முயற்சிப்பதாதே அரசின் திட்டமாகும்.

அதில் கூட வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் எனில்.

உண்மையில் சட்ட திருத்தங்களில் எல்லாம் இந்த அரசுக்கு ஆர்வம் எதுவும் கிடையாது. அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் அதிகார வெறியோடு இருந்த ஆரம்ப காலத்தில் இதை செய்திருப்பார்கள். இப்போது இதை கையில் எடுத்திருப்பதற்கு காரணம் அடுத்த ஆண்டு வரக்கூடிய தேர்தலுக்கு முன் நாட்டில் மீண்டும் ஒரு இந்துத்துவ அலையை ஏற்படுத்தி விடுவதே ஆகும். அதே நேரத்தில் நாட்டில் கனிசமாக வாழ்கிற முஸ்லிம் சிறுபான்மையினரின் தனி அடையாளங்களை முடிந்த வரை அழித்துவிடுவதுமாகும்.

இதை தான் அரசியல் பாஷையில் சர்வாதிகாரம் என்கிறார்கள்.

ஒரு சர்வாதிகார அரசு என்பது

எதிர்க் கட்சிகளே இல்லாமல் செய்வது

எதிர்ப்பதை சட்ட விரோதமாக ஆக்குவது

கட்டுப்பாடற்ற அரச வன்முறை

நியாயமற்ற சிறைத்தண்டனைகள் ஆகியவை தான் என்று பெரும்பாலும் கருதப்படுகிறது.

வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் எனில்

மக்களின் தனிப்பட்ட வாழ்கையின் மீது கட்டுப்பாடுகளை திணிப்பதே உண்மையில் சர்வாதிகாரத்தின் மிக கொடூரமான அடையாளமாகும் என்கிறார்கள்.

விக்கீபீடியா கூறுகிறது.

இது மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது சர்வாதிகாரத்தின் மிகவும் தீவிரமான மற்றும் முழுமையான வடிவமாக கருதப்படுகிறது

 விக்கீபீடியோ மோசமான சர்வாதிகாரத்திற்கு ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறது.

"சமூகக் கட்டமைப்பின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி, சர்வாதிகார அரசாங்கம் தனது குடிமக்களின் எண்ணங்களையும் செயல்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முயல்கிறது" என்று ரிச்சர்ட் பைப்ஸ் கூறினார் .

 இந்த கருத்தின் படி

உகாண்டாவின் சர்வாதிகாரி என்று அழைக்கபடும் ஈதி அமீனோ அல்லது தற்போதையை வட கொரியாவின் அதிபர் கிம் மோ மோசமான சர்வாதிகள் அல்ல.

ஏனெனில் இவர்கள் தங்களை எதிர்த்தவர்களை தான் அழித்தார்கள்.

இடி அமீன் தன்னை எதிர்த்தவர்களின் தோலை உண்மையாகவே உரித்தார் என்கிறார்கள்.

கிம் தன்னை எதிர்த்தவர்களை பீரங்கி முனையில் வைத்துக் கட்டி பொசுக்கினார்  

இவர்கள் எல்லோரயும் விட இப்போது நம்முடைய நாட்டை ஆட்சி செயுயும் கட்சியும் அதன் தலைவர்களும் மிகவும் கொடுமையான சர்வாதிகளாக மறிவருகிறார்கள்.

அவர்களை எதிப்பவர்களை ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள். அதே நேரத்தில் சாமாணிய அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளை சட்டத்தின் பெயரைச் சொல்லி பறிக்கிறார்கள்..

அவர்களுக்கு ஆதரவான் தகவல்களை மட்டுமே செய்தியாக்குகிறார்கள்.

பாருங்கள் இப்போது நியூஸ்18 சேனல் கருத்து கணிப்பை வெளியிடுகிறது.

எப்படி தெரியுமா

முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் அனுமதி தொடர வேண்டுமா ?  என்று கேள்வி கேட்டு அதை பெரும்பாலோர் எதிர்த்தார்கள் என்று காட்டுகிறார்கள்.

கேள்வி எப்படி வரவில்லை கவனித்தீர்களா ?

கோவா மாநிலத்தில் திருமணமாகியும் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்றால் இன்னொரு திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி உண்டு என்ற சட்டம் சரியா ? என்று வரவில்லை.  

பொது சிவில் சட்டம் தேவை என்றால் இரண்டையும் அல்லவா கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும்.

செய்தி நிருவன்ங்கள் கூட மொத்தமாக அரசின் கைப்பாவையாக்கப்படுவது. சர்வாதிகாரத்தின் உச்ச நிலவரமாகும்.

நம்முடைய நாடு அத்தகைய ஒரு சர்வாதிகார சூழ்நிலையை நோக்கித்தன் போய்க் கொண்டிருக்கிறது.

இதிலிருக்கிற மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் இவர்கள் பசுந்தோல் போர்த்திய புலிகள். ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சர்வாதிகாரம் செய்பவர்கள்.

இவர்கள் முகலாய அரசர்களை குறை பேசுகிறார்கள். நமது நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் எனிகிறார்கள்

பிபிசி செய்தி நிறுவன சமீபத்தில் வெளியிட்ட இது தொடர்பான ஒரு அறிக்கையில் முகலாய ஆட்சி காலத்தில் மற்ற மத்த்தினர் அவர்களது மத வழக்கப்படு நடந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மற்ற மதத்தினரின் மத விவகாரங்களில் அரசு தலையிட வில்லை என்ற வரலாற்றை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அவ்வாறு பேசி வருகிற போது அது அற்புதமான ஒரு செய்தியை சொல்கிறது. முஸ்லிம் அரசர்கள் முஸ்லிம்கள் என்றாலும் அவர்கள் தமது சொந்த மதக்கருத்துக்களில் கூட தமது அதிகாரத்தை செலுத்தவில்லை.

ஒரு அருமையான உதாரனத்தை தருகிறது.

அவுரங்கசீப் பேர்ரசராக இருந்தார். அறிஞராக இருந்தார். இருப்பினும் நாடு முழுவதிலிருந்தும் 40 அறிஞர்களை வைத்தே பிரபல சட்ட தொகுப்பான பதாவயே ஆலம் கீரியை தொகுத்தார் என்கிறது.

அரசர் தனது கருத்தின் படி தொகுத்த்தல்ல அந்நூல் என்பதை சுட்டிக்காட்டி முகலாய அரசு மத விவகாரங்களில் எத்தகை பண்போடு நடந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

முகலாய அரசர்களை  குறை சொல்லும் யோக்கிய சிகாமணிகள் திட்டமிட்டு முஸ்லிம்களுடையவும் அடித்தட்டு மக்களுடையைவு தனி உரிமைகளை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.

இது மிக்க் கொடூரமான சர்வாத்தின் அடையாளம்.  

இந்த சர்வாதிகாரத்தினால் முஸ்லிம்களை சிறிது காலம் சிரமத்த்திற்கு உள்ளாக்கலாம். இஸ்லாமை ஒன்றும் செய்து விடமுடியாது.

நவீன உலகின் மிகப்பெரிய சர்வாதிகளான சோவியத் ஒன்றியத்தின்  ஜோசப் ஸ்டாலின், இத்தாலியின் பெனிடோ முசோலினியை போன்றவர்கள் அவர்கள் சார்ந்த கம்யூனிசமும் நாஸிஸமும் முஸ்லிம்களை சிறிது காலம் சிரமப்படுத்த முடிந்த்தே தவிர இஸ்லாமை ஒன்றும் செய்ய முடியவில்லை.

காரணம் இஸ்லாம் பரிபூர்ணப்படுத்தப்பட்ட மார்க்கம்.

 الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இதில் குறைகள் ஏதும் இல்லை.

குறைகள் இருந்தால் அல்லவா மாற்றங்களையும் சீர்த்திருத்தங்களையும் தேடுவதற்கு .

எந்த நவீனப்பிரச்சினையிலும் இஸ்லாத்திற்கு கருத்து உண்டு.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தகாது. அது வாரிசுரிமை பெற்ற குழந்தை ஆக முடியாது என்ற திடமான இஸ்லாமின் கருத்து உலகின் முன் உள்ள உயிரோட்டமான ஒரு கருத்தாகும்.

இது போல சட்டம் தொடர்பான ஒவ்வொரு புதிய சர்ச்சையிலும் இஸ்லாமிற்கு கருத்து உண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் ஒரு பெரிய சமுதாயமும் உண்டு.

பிபா உலக கோப்பை கால்பந்தாட்ட்த்தின் போது பகிரங்கமாக மதுபானம் பயன்படுத்தப்படவும் முறையற்ற உறவுக்காரர்கள் பொது வெளியில் இனைந்து நடமாடவும் தடை செய்யப்பட்டது.

பர்தாவுக்கு எதிராக பேசும் இடங்களில் பர்தா அணிந்த பெண்களே அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறர்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாம் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

திருக்குர் ஆன் மிக அற்புதமாக கூறுகிறது.

يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32

வாயால் ஊதி அணைதுது விட முடியாத நெருப்பு இஸ்லாம்.

சோவியத் யூனியனில் பள்ளிவாசல்கள் மதரஸாக்களை மூடினார்கள். கூட்டு தொழுகையை - குர் ஆனை தடை செய்தார்கள்.  

என்ன நடந்தது?

தடை செய்யப்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் இன்னும் வீரியமானார்கள்.

வீடுகளுக்குள் சுரங்க அறை கட்டி அதில் குர் ஆன் மதரஸாக்களை நடத்தினார்கள்.

அங்கு சர்வாதிகாரம் வீழ்ந்த்து இஸ்லாம் விழவில்லை. வீறு கொண்டு எழுந்து நிற்கிறது.

இவை நமக்கான பாடங்களாகும் அரசு இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக தீவிரம் காட்ட காட்ட நாம் அதை விட அதிகமாக இஸ்லாமின் சட்டங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். அது வே நமது தலைமுறையின் எழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக அமையும். \

சூழ்ச்சியாளர்களுக்கு சிறந்த பதிலடியாகவும் அமையும்.

ஒரு துரதிஷடமான சூழ்நிலை என்னவென்றால் இப்போது நமது ஊர்களில் சில மஹல்லாக்களில் இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்க அஞ்சுகிறார்கள். எவனாவது போய் கம்ப்ளயிண்ட கொடுத்தா என்ன பன்றது என்று பயப்படுகிறார்கள்.

இந்த அச்சம் ஜமாஅத்துகளுக்கு வராத அளவிற்கு சமூகம் அவர்களுக்கு தைரியம் தர வேண்டும்.  மக்கள் பின் நிற்பார்கள் எனில் ஜ்மாஅத்துகள் நிச்சய்ம் உயிர்த்துடிப்போடுதான் இருக்கும்.

இது பரிபூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் இதில் குறையேதும் கிடையாது இதை தடுப்பவர்களே குறை மதிக்கார்ர்கள்

அந்த காபிர்களுக்கு வெறுப்பு தலைக்கேறினாலும் இதன் பரிபூரணத்துவத்தை ஒன்றும் செய்து விட முடியாது.

இன்னொன்று இது அல்லாஹ் திருப்திப்பட்டுக் கொண்ட வழி இது அல்லாதவை அனைத்தும் அல்லாஹ்வின் அதிருப்திக்குரியவை.

அவை நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது,

ஆகவே ஒன்றிய அரசு முயற்சிக்கும் தீய திட்டம் நீண்ட வெற்றியை ஒரு போதும் பெற முடியாது,

நமது கடமை என்ன வென்றால் அந்த தீய சக்திகள்  குறுகிய வெற்றியை அடையவும் விடக் கூடாது.

கூடுமானவரை இஸ்லாமிற்கு எதிரான அவர்களது முயற்சிகளை முறையடிக்க நாம் பாடுபட வேண்டும்.

அதற்கு இந்திய சட்ட வாரியத்தின் கருத்து கேட்பு திட்ட்த்தில் நாம் முழுமையாக பங்கேற்ற அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும்.

இது வரை கருத்து தெரிவிக்காதவர்கள் இன்றோடு கடைசி நாள் என்பதை உணர வேண்டும்.

கருத்து பதிவு செய்வதற்கு எளிதான பல வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஸ்கேன் செய்து கருத்து பதிவு செய்து அனுப்பும் வ்சதியை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழங்கியுள்ளது.

இப்போது முழுமையாக நிரப்பட்ட மின்ன்ஞ்சலை தயாரித்து ஒரு சிங்கிள் கிளிக்கில் அனுப்பி விடும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

உங்களது செல்போனில் மின்னஞ்சல் வசதி இருக்குமானால் ஒரு சில கிளிக்குகளில் உங்களது கருத்தை பதிவு செய்து விடலாம்.

லிங்க் இதோ !

https://cbejutn.blogspot.com/2023/07/blog-post_12.html

ஆலிம்கள் இந்த லிங்கை ஒரு சிலருக்கு அனுப்பி தரலாம். அக்கறை எடுத்து கொஞ்சம் சிரத்தை எடுத்து கருத்தை பதிவு செய்யாதவர்களும்.  பதிவு செய்யத்தெரியாதவர்களுக்கும் இது வசதியாக இருக்கும்.

இதற்கான ஒரு QR code ம் இருக்கிறது. அது கீழே தரப்பட்டுள்ளது. அதை பிரிண்ட் எடுத்து அல்லது ஒரு போனிலிருந்து மற்றொரு போனில் ஸ்கேன் செய்து உள்ளே சென்றாலும்  பொது சிவில் சட்ட்த்திற்கு எதிராக  நிரப்ப்பட்ட ஈ மெயில் வந்து விடும். அதை சென்ட்  செய்தால் (அனுப்பினால்) போதுமானது. நமது கருத்து பதிவாகிவிடும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

عن أبي بكرٍ الصِّدِّيقِ رضوانُ اللهِ عليه أنَّه قال : أيُّها النَّاسُ إنَّكم تقرؤُون هذه الآيةَ { يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ } وإنِّي سمِعتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ : إنَّ النَّاسَ إذا رأَوْا ظالمًا فلم يأخُذوا على يدَيْه أوشك أن يعُمَّهم اللهُ بعقابٍ

அக்கிரமக்கார்ர்களை அவர்களது கையை பிடித்து தடுக்கும் ஒரு முயற்சி இது.

நமது தலைமுறை சிக்கலுக்குள்ளாகாமல் பாதுகாக்கும் ஏற்பாடு இது.

இதில் நாம் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

கருத்துக்களை பதிவு செய்யாதவர்கள் தங்கள் சார்பாக தங்களது குடும்பத்தினர் சார்பாக உடனடியாக கருத்துக்களை பதிவிட வேண்டும்.

குடும்பத்தில் இருக்கிற இளம் பிள்ளைகளை கேட்டால் ஸ்மார்ட் போனில் இதை எப்படி பதிவு செய்வது என்று சொல்லிக் கொடுத்துவிடுவார்கள்.

இன்னொரு முக்கியமான செய்தி

நண்பர்களே நாம் இந்த நாட்டில் அதிக பட்சமாக 23 சதவீதம் பேர் இருக்கிறோம்.

இந்துக்கள் 65 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் ஆர் எஸ் எஸ் கார்ர்கள் இல்லை என்றாலும். ஆர் எஸ் எஸ் வஞ்சகமாக அவர்களில் பலரிட்த்திலும் நல்ல பிள்ளை போல மனதில் இடம் பிடித்திருக்கிறது. அவர்கள் ஆர் எஸ் எஸ் என்ன சொன்னாலும் உடனே செய்து விடுவார்கள்.

நாம் ஆர் எஸ் எஸ் ஸின் வலைக்குள் சிக்காத இந்து நண்பர்களையும் மாற்று மத சகோதரர்களையும் கூட இதில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். நாம் இதில் எதிர் கருத்து பதிவு செய்ய தூண்ட வேண்டும் ,.

அவர்களும் இதில் கைகோர்க்கும் போது தான் தீய சக்திகளின் திட்டத்தை நம்மால் முறியடிக்க முடியும்.

தேவைப்பட்டால் அவர்களது செல்போனை வாங்கி நாமே கூட செயல் முறையை செய்து காட்டி பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு வாய்ப்பிருக்கும் சகோதரகள் இன்றைய பொழுதை அதற்காக செலவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

  அல்லாஹ் நமது முயற்சிகளுக்கு அவனுடைய தரப்பிலிருந்து வெற்றியை தந்தருள்வானாக!

சதிகாரர்களின் திட்டங்களை முறியடிப்பானாக!

தீய சக்திகளுக்கு எதிரான போராட்ட்த்தையும் போராளிகளையும் அல்லஹ் உறுதிப்படுத்துவானாக!

இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானவர்களை அதன் வளையத்திற்குள்ளேயே கொண்டு வருவானாக! அதற்காக உழைக்கும் திறனையும் வாய்ப்பையும் நமக்கு வழங்குவானாக! 

 

 

 

 

 

 

.

 

 

No comments:

Post a Comment