வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 16, 2023

பொய்ப் பிரச்சார புலிகள்

 நாற்பதாவது நாளாக இஸ்ரேல் பாலஸ்தீன் நாட்டின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது.

போர் உக்கிரதின் தற்போதைய நிலையாக காஸாவிலுள்ள மருத்துவ மனைகளை இஸ்ரேலிய ராணுவம் முற்றுகை யிட்டுள்ளது.

அல் ஜஸீரா கூறுகிறது

according to doctors inside, firing occasionally, using snipers. On Tuesday, the Gaza health ministry said at least 40 people had been killed at the hospital.

அல் ஷிபா மருத்துவ மனையை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி முனையில் நோயாளிகளை வைத்திருக்கிறது. மருத்துவ மனையில் 40 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது.

மருத்துவ மனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் இன்குபேட்டரில் இருந்த சுமார் 30 குழந்தைகள் உடல் துடித்து ஷஹீதாகி இருக்கிறார்கள்.

இந்த செய்திகள் உலகை உலுக்கி கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதிலும் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனக் கனைகள் வலுத்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி கூட காஸாவில் இஸ்ரேல் நட்த்தி வரும் போர் அமெரிக்காவின் மரியாதையை கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்

Biden told Israel’s war on Gaza undermines US ‘credibility’ around the world

உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவின் மீதுள்ள நம்பகத் தன்மையை இது குறைத்து மதிப்பிடச் செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

காஸாவின் மீதா போரை நிறுத்து என்று பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் கூறியுள்ளார்.

உலகில் தனக்கெதிரான கண்டனக் கருத்துக்கள் வலுத்து வருகிற அதே வேளையில் இந்த யுத்தில் தன்னுடைய பணையக் கைதிகளை மீட்டு இதுவரை வெற்றி பெற முடியாத இஸ்ரெல் மேலும் கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது.

மருத்துவ மனைகளை மீதான தாக்குதல் உலகை கோப்ப்படுத்தியிருக்கிறது. உலகின் இஸ்ரேலின் நட்பு நாடுகளின் நாடாளுமன்றங்களிலேயே கூட மிக கடுமையான குற்றச் சாட்டுகளுக்கு இஸ்ரேல் ஆளாகி வருகிறது, இஸ்ரேலை ஆதரிக்கும் உலக தலைவர்கள் பொது வெளியில் கடுமையான விமர்சனங்களை  முகத்திற்கு நேராக சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க இஸ்ரேல் விமான்ங்கள் மூலம் குண்டு வீசி தாக்குவதற்கு நிகராக இப்போது தனது பொய்ப்பிரச்சாரத்தில் மூலம் காஸாமீது தாக்குதல் தொடுத்து வருகிறது.

இஸ்ரேலை கண் மூடித்தனமாக ஆதரிக்கும் சி என் என் போன்ற  சர்வதேச ஊடகங்களும் நம்முடைய நாட்டிலுள்ள பெரும்பாலான ஹிந்து ஊடகங்களும் இஸ்ரேலின் ஊதுகுழலாக மாறி அந்த பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றனற்

  காஸாவிலிருந்த அல்குத்ஸ் மருத்து மனை, கத்தாரி ஹாஸ்பிடல், இந்தோனேஷிய மருத்துவ மனை , அல் ஷிபா மருத்துவ மனை என மக்கள் பெருமளவில் கூடியிருக்கும் மருத்து மனைகளை குறிவைத்தே இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஏனெனில் மக்கள் பலரும் அவர்களது குடியிருப்புக்களை காலி செய்து விட்டு மருத்துவ மனைகளுக்கு அடைக்கலமாகியிருக்கிறார்கள். அங்கு குண்டு வீசினால் தான் இனி மக்களை கொல்ல முடியும் என்ற அளவில் இஸ்ரேல் மருத்துவ மனைகளை தாக்கி வருகிறது.

இதற்கு இஸ்ரேல் கூறும் நியாயம் அந்த மருத்து மனைகளின் நிலவரைகளை ஹமாஸ் போராளிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள நிலவரையிலிருந்து தான் தாக்குகிறார்கள் என்பதாகும்.

உண்மையில் இது அப்பட்டமான அவதூறு என்று அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகீறார்கள்/

ஏனெனில் காஸாவிலுள்ள ஒவ்வொரு இன்ச் நிலத்தைப் பற்றியும் இஸ்ரேலுக்கு தெரியும்.

ஒரு வேளை ஹமாஸ் குழுவினர் அங்கு தான் இருக்கிறார்கள் என்று இருக்குமானால் அதை சுற்றி வளைத்து இஸ்ரேலால் அவர்களை அழித்து விட முடியும். ஆனால் அப்படி செய்யாமல் மருத்துமனைகளை குண்டு வீசி தாக்குகிறது. மருத்துவ மனைகளுக்கான அத்தியாவசிய பயன்பாடுகளை நிறுத்தி வருகிறது.

உலகை நம்ப வைப்பதற்காக கடந்த நவம்பர் 5 ம் தேதி இஸ்ரேலிய ராணுவம் தனது டிவிட்டர் பக்கத்தில் அல் ஷிபா மருத்துவ மனைக்கு முன்புறம் இருக்கிற ஒரு இரண்டுக்கு நாளு என்ற அளவிலான குழியை காட்டியது. இது ஹமாஸ் போராளிகளின் நிலவரை என்று கூறியது.

உடனடியாக களத்தில் இறங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி அந்த செய்தியை அக்குவேறு ஆணி வேறாக அலசி அந்த மருத்துமனையின் புளூ பிரிண்டையும் மருத்து மனையை கட்டிய ஜோர்டானிய பொறியிலாளரின் கருத்துக்களையும் இணைத்து அது நிலவரை அல்ல, மருத்துவ மனைக்கு தண்ணீர் கொண்டு செல்கிற பைப்புகளுக்கான இணைப்பு குழி என்று தெளிவு படுத்தி  இஸ்ரேலின் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் என்று புலப்படுத்தியது.

அதே போல இஸ்ரேலின் ராணுவத்தின் ஹமாஸ் போராளிகள் நான்கு பேரை கொன்று மேலும் முன்னேறி வருவதாக ஒரு காட்சியை இஸ்ரேல்  ராணுவம் வெளியிட்டது. அதை ஆய்வு செய்த அல் ஜஸீரா குழுவினர். இஸ்ரேல் வெளியிட்ட கருத்து போலியானது என்பதை புலப்படுதினர். இஸ்ரேலிய படைகளை பார்த்ததும் சரணடைய வரும் நான்கு பாலஸ்தீன் சாமாணிய பொதுமக்கலை முழங்கால் இட்டு அமர உத்தரவிட்ட பிறகு அருகே வந்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிற இஸ்ரேலிய ராணுவம் பிறகு அவர்களை தரையில் இழுத்துக் கிடத்தி அதன அருகே நின்று சண்டை போடுவது போல புகைப்படம் எத்திருப்பதை அல் ஜஸீரா அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆனாலும் உண்மையை ஆய்வு செய்ய கடமைப்பட்ட பிரபல ஊடகங்கள் பலவும் உண்மையை ஆராயமல் இஸ்ரேல் பரப்பும் பொய்ப்பிரச்சாரத்தையே தாங்களும் பரப்பி வருகின்றன.

ஒரு பெரிய கொடுமை என்ன வெனில் அவ்வாறு இஸ்ரேலின் ஊது குழலாக இருக்கிற மீடியாக்கள் காஸா நிலப்பில் நிலவும் மானுட நெருக்கடிகள கண்டு கொள்வதே இல்லை. இஸ்ரேல் இந்த யுத்தத்தில் மக்கள் நெருக்கமாக வாழும் ஒரு நிலப்பரப்பை உலகின் மிக கொடுமையான நரகமாக மாற்ற் விடுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை.

இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள் என்று என்ன தோன்றுகிறது.

யூதர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு ஒத்துழைப்பது என்பது உலகின் மிக நீண்ட ஒரு கொடுங்கோன்மைக்கு ஒத்துழைப்பதாகும்.

ஒரு விசயத்தை யூதர்கள் சொல்கிறார்கள் என்றாலே அதை சந்தேதித்து ஆக வேண்டும் என்று வரலாறு கற்றுத்தருகிற பாடத்தை இன்றைய ஊடகத்துறையினர் அறிய தவறிவிட்டார்கள். அல்லது அறிந்தும் அந்த கொடுமைக்கு துணை போகிறார்கள்.  

இந்த உலகம் எச்சரிக்கை அடைய வேண்டிய அம்சங்களில் யுதர்களின் பொய்ப்பிரச்சாரமும் ஒன்றாகும்.

துணிந்து எதற்கும் அஞ்சாமால் பொய்ப்பிரச்சாரம் செய்வார்கள்.

திருக்குர் ஆன் அவர்களுடைய இந்த இயல்பை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறது.

அவர்களுக்கு பிடிக்க வில்லை எனில் நபிமார்களுக்கு எதிராக கூட பொய்ப் பிரச்சாரம் செய்ய தயங்கமாட்டார்கள்.

நபி சுலைமான் அலை அவர்கள் மிகுந்த வலிமையோடு மக்களை ஆட்சி செய்தார்கள். கடுமையான கட்டளைகளை அமுல்படுத்தினார்கள். அவரை நேரடியாக எதிர்க்க முடியாத யூதர்கள். அவருக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸாக்களை  - ஜின் மற்றும் விலங்குகள் மீத் கட்டுப்பாடு, காற்றை வசப்படுத்திக் கொடுத்த்து ஆகியவற்றை மந்திர வித்தை என்று அபாண்டமாக பழி சுமத்தினார்கள். அவரை மந்திரவாதி என்று பிரச்சாரம் செய்தார்கள். அதனால் அவர் ஈமான் கெட்டவர் என்று கூறினார்கள் (நவூது பில்லாஹ்

பல தலைமுறைகள்ளுக்குப் பிறகு அல்லாஹ் அதை மறுக்க வேண்டிய அளவு அவர்களது பிரச்சாரம் கடுமையாக இருந்த்து.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا 

 சுலைமான அலை அவர்களது அதிகாரம் பற்றி சைத்தான்கள் சொல்லிக் கொடுத்த்தை யூதர்கள் பின்பற்றினார்கள்.

சுலைமான் அலை அவர்கள் மீது பொய்ப்பிரச்சாரம் செய்த யூத பாதிரிகளில் ஒரு பிரிவினரையே  சைத்தான்கள் என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான் என தப்ஸீர் தப்ரீ கூறுகிறது.  

 يعني بقوله{ واتبعوا ما تتلوا الشياطين } الفريق من أحبار اليهود وعلمائها

இதனால் பிறகால யூதர்கள் உலகப் புகழ் பெற்ற நீதியாளராக இருந்த சுலைமான் அலை அவர்களை நபியாகவே கருதவில்லை.

முஹம்மது  நபி (ஸல்( அவர்களை சுலைமான அலை அவர்களை நபிமார்க்களின் பட்டியலில் குறிப்பிட்ட போது அதை அவர்கள் மறுத்து அவர் நபியல்ல மந்திரவாதி என்றார்கள்.

قال محمد بن إسحاق : لما ذكر رسول الله صلى الله عليه وسلم سليمان في المرسلين قال بعض أحبارهم : يزعم محمد أن ابن داود كان نبيا ! والله ما كان إلا ساحرا ، فأنزل الله عز وجل : وما كفر سليمان ولكن الشياطين كفروا أي ألقت إلى بني آدم أن ما فعله سليمان من ركوب البحر واستسخار الطير والشياطين كان سحرا 

 யூதர்களின் பொய்ப்பிரச்சாரம் எந்த அளவு கடுமையானது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

நபி மூஸா அலை அவர்கள் விவகாரத்தில் பொய்ப்பிரச்சாரம

நபி மூஸா அலை அவர்கள் தான் யூத சமுதாயத்தை பெருமளவில் கட்டிப்போட்ட ஒரே நபி. ஆனால் அவரை கூட யூதர்கள் விட்டு வைக்க வில்லை.

பொது வெளியில் நிர்வாணமாக குளிக்கிற இயல்பு யூதர்களிடம் இருந்தது. இத்தகைய அறுவெறுப்பான வேலையை நபிமார்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அதனால் மூஸா அலை அவர்கள் தனியாக குளித்தார்கள். அந்த நாகரீகத்தை யூதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது உடலில் குறை இருக்கிறது. அவரது விதை வீங்கியிருக்கிறது அதனால் தான் நம்மோடு குளிக்க வர மறுக்கிறார் என பிரச்சாரம் செய்தார்கள்.

இது பற்றிய் உண்மையை உணர்த்துவதற்காக அல்லாஹ் ஒரு ஏற்பாட்டை செய்தான். ஒரு முறை அவர் ஆடையை கழற்றி வைத்திருந்த போது ஒரு கல் அவரது ஆடையை  தூக்கிக் கொண்டு ஓடியது, அதன் பின்னே அவர் பதறியபடி ஓடினார். அவரது உடலில் எந்த குறையும் இல்லை என்பதும் இது பொய்ப்பிரச்சாரம் என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இது புகாரியில் இடம் பெறுகிற ஹதீஸ் ஆகும்

عَنْ أبي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ:‏ كَانَتْ بَنُو اِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إلى بَعْضٍ، وَكَانَ مُوسَى يَغْتَسِلُ وَحْدَهُ، فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أن يَغْتَسِلَ مَعَنَا إلا اَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ، فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسَى فِي اِثْرِهِ يَقُولُ ثَوْبِي يَا حَجَرُ‏.‏ حَتَّى نَظَرَتْ بَنُو اِسْرَائِيلَ إلى مُوسَى، فَقَالُوا وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَاْسٍ‏.‏ وَأخَذَ ثَوْبَهُ، فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا ‏‏‏.‏ فَقَالَ أبو هُرَيْرَةَ وَاللَّهِ اِنَّهُ لَنَدَبٌ بِالْحَجَرِ سِتَّةٌ أو سَبْعَةٌ ضَرْبًا بِالْحَجَرِ‏.‏

மூஸா அலை அவர்கள் அந்த கல்லை ஆறு அல்லது ஏழு அடி அடித்தார்கள் என்று அபூஹுரைரா ரலி கூறுகிறார்.

 அவ்வாறு மூஸா நபி கல்லை அடித்த காரணம் ஒரு நபியாக அந்த அடி கல்லுக்கு காயத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்த்துதான் அடித்தார்கள் என இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹி கூறுகிறார்கள்

 قيل يحتمل أن يكون موسى أراد بضربه إظهار المعجزة بتأثير ضربه فيه،

 யூதர்களின் பொய்ப்பிரச்சாரம் எந்த அளவு மட்டமானதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதரணம் .

 அதனால் தான் திருக்குர் ஆன் உலக மக்களை எச்சரிக்கிறது நீங்கள் யூதர்களைப் போல ஆகி விடாதீர்கள்/  

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا. {الأحزاب: 69}

 ஆனால் இன்றைய உலக சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள  துரதிஷ்டம் யூதர்கள் என்ன பிரச்சாரம் செய்கிறார்களோ அதுவே உண்மையானது என்று முழு உலகமும் பிரச்சாரம் செய்கிறது.

 ஈஸா (அலை) மீது பொய்ப்பிரச்சாரம்

 இப்போது அமெரிக்க ஐரோப்பிய கிருத்துவ உலகம் யூதர்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

இது ஒரு மகா மட்டமான அரசியல் நடவடிக்கையாகும். ஏனெனில் இந்த யூதர்கள் தான் கிருத்துவர்களின் நபியாக இருந்த ஈஸா அவர்கள் விசயத்திலும் அவர்களின் தாயார் மர்யம் அம்மையார் விசயத்திலும் மிக மோசமான பிரச்சாரத்தை செய்தவர்களாகும்.

 ஈஸா அலை அவர்களை விபச்சாரத்திற்கு பிறந்தவர் என்று பிரச்சாரம் செய்தார்கள். அவரது தாயாரை நட்த்தை கெட்டவர் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

 இத்தனைக்கும் நபி ஈஸா அலை அவர்கள் தொட்டிலில் குழந்தையாக படுத்திருக்கிற போதே மிக தெளிவாக ஒரு நல்ல இளைஞனைப் போல பேசி தன்னுடையவும் தன்னுடைய தாயுடையவும் அந்தஸ்த்தை புலப்படுத்தியிருந்தார்கள்.

 يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا/30وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (//31وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا (33

 அப்படி இருந்தும் ஈஸா அலை அவர்கள் மீதும் அவரது தாயார் மீதும் யூதர்கள் இந்த பொய்ப்பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வந்தார்கள் என்பதை பைபளின் பல வாசகங்கள் உணர்த்து கின்றன் என ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

 யூதர்களின் இந்த கொடுமையை பற்றி பைபிள் அறிஞர்கள் வெளிப்படுத்தும் வருத்தம் தோய்ந்த கருத்துக்களை விவரித்தால் அதுவே ஒரு தனி உரையாகி விடும். அந்த அளவு ஈஸா அலை அவர்களுக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தை யூதர்கள் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்,

 இஸ்லாமின் தொடக்க காலத்தில் முஸ்லிம்களின் ஒரு குழுவினர் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து நஜ்ஜாஸீ மன்னருடைய சபையில் அடைக்கலம் பெற்றிருந்தனர். அப்போது முஸ்லிம் குழுவின் தலைவராக ஜாபர் பின் அபீதாலிப் ரலி அவர்கள் நஜ்ஜாஷியின் முன்னிலையில் மர்யம் அம்மையாரின் புனிதத்தை பிரகடணம் படுத்தும் திருக்குர் ஆனின் மர்யம் அத்தியாயத்தை ஓதிக் காட்டிய போது நஜ்ஜாஸி மன்னர் பலர் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார் என்று ஹதீஸ்களில் வருகிறது.

 அந்த அழுகை யூதர்களின் பொய்ப்பிரச்சாரத்தால் கிருத்துவ உலகம் எந்த அளவில் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை உணர்த்துகிறது.

 அன்றிலிந்து இன்று வரை பொய்ப்பிரச்சாரத்தை துணிந்து செய்வதும் அதை நம்ப வைப்பதுமே இஸ்ரேலியர்களின் ஒரு முக்கிய நடவடிக்கையாக இருந்து வருகிறது.

 இடைக்காலத்தில் ஹிடலிரின் மீது இப்படித்தான் பொய்ப்பிரச்சாரத்தை கிளப்பி அவனை மகா கெட்ட ஒரு மனிதனாக உலகிற்கு உருவகப் படுத்தி விட்டார்கள். இன்று உலகில் மிக கெட்ட ஆட்சியாளன் என்றால் ஹிட்லர் என்று சொல்லப்படுகிற நிலை உருவாகி விட்டது.

 இன்றைக்குள்ள இஸ்ரேலிய அரசாங்கத்தை விட மோசமான ஒரு தலைவனாக ஹிட்லர் இருக்க வில்லை.

 இதே வரிசையில் தான் இப்போது பாலஸ்தீன் மக்களின் விடுதலை போராட்டத்தை திசை திருப்ப அந்த மக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வேலையை இஸ்ரேல் செய்து வருகிறது.

 இஸ்ரேலின் இப்போதைய பிரதம் நெதன்யாகுவை புளூகு மூட்டை இஸ்ரேலிலே உள்ள பல அரசியல் தலைவர்களு இதற்கு முன் விமர்சித்திருப்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் தற்போதைய பொய்ப்பிரச்சாரத்திற்கு உலகம் செவி சாய்க்க கூடாது.

 திருக்குர் ஆன் செய்தியாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ، فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ [الحجرات:6]

 தீயவர்களின் செய்திகளை ஆராயமல் வெளியிடுவது ஒரு சமூகத்திற்கு நம்மை அறியாமலே நாம் அநீதியிழைத்து விடுவதாகும். அதற்காக பின்னாளில் வருந்த வேண்டியதாகிவிடும்

 கொஞ்சமாவது எஞ்சியிருக்கிற காஸா மக்களின் வாழ்விற்கு உலக தலைவர்கள் இன்னும் விரைந்து வழி காண வேண்டும்.

 பாலஸ்தீன் மக்களுக்கு ஒரு சுதந்திர அரசை அமைத்துக் கொடுப்பது தான் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பதால் ஒரு சுதந்தரிப் பாலஸ்தீனத்திற்கான நடவடிக்கையை  உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

 அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்

 

 

No comments:

Post a Comment