வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 09, 2012

மின் தட்டுப்பாடு


 துணைத்தலைப்பு  - மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

தமிழகத்தில் இப்போது மின்சாரத் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட் ஆக உள்ளது.

ஆனால், இப்போது 8,000 மெகாவாட் முதல் 10,237 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக வெறும் 206 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால்  கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنْ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنْ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرْ الصَّابِرِينَ(155)الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ(156)أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُوْلَئِكَ هُمْ الْمُهْتَدُونَ(157)) البقرة

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்காலத் தேவை குறித்து சிந்திக்காத தமிழக அரசுகளின் மெத்தனப் போக்கே இத்தட்டுப் பாட்டுக்கு காரணம்.

மின் துறையில் மட்டுமல்ல. மக்களின் அனைத்து அடிப்படையான விசயங்களிலும் முன்னேற்றத்துக்கு தேவையான – எந்த ஒரு திட்ட்த்தையும் அரசுகள் செய்யவில்லை.

அற்பமான அரசியல் சண்டை – கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பிரம்மாண்டமான அளவில் மக்கள் பணத்தை சுரண்டுவதை கை வந்த கலையாக கொண்ட அரசிய்ல சக்திகள் தமிழகத்தை கறகாலத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

கல்வி, ஆய்வுகள், சாலை வசதி, போக்கு வரத்து வசதிகள், சீரான நிர்வாகம், அவசரகால பாதுகாப்பு, உள்ளுர் தொழில் வளர்ச்சி ,என அனைத்து துறைகளும் மாநில அரசின் போதிய கவனமின்றி சன்னஞ்சன்னமாக சிதைந்து வருகிற்து. இப்போது மின் தட்டுப்பாடு பிரதானமாக பிரம்மாண்டமாகவும் எழுந்துள்ளது.


நாம்  என்ன செய்வது ?
இன்றைய நவீன உலகில் மின் தட்டுப் பாடு, உணவுத் தட்டுப் பாட்டை போல ஒரு பெரும் சோதனையே!

இறைவனிடம் கையேந்துவோம்.  இன்னாலில்லாஹ் சொல்லுவோம்.
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ(156

قال القرطبي :
جعل الله تعالى هذه الكلمات ملجأ لذوي المصائب, وعصمة للممتحنين: لما جمعت من المعاني المباركة; فإن قوله: "إنا لله" توحيد وإقرار بالعبودية والملك. وقوله: "وإنا إليه راجعون" إقرار بالهلك, على أنفسنا والبعث من قبورنا; واليقين أن رجوع الأمر كله إليه كما هوله.

قال سعيد بن جبير رحمه الله تعالى: لم تعط هذه الكلمات نبيا قبل نبينا, ولو عرفها يعقوب لما قال: يا أسفي على يوسف.

قال أبو سنان: دفنت ابني سنانا, وأبو طلحة الخولاني على شفير القبر, فلما أردت الخروج أخذ بيدي فأنشطني وقال: ألا أبشرك يا أبا سنان, حدثني الضحاك عن أبي موسى أن النبي صلى الله عليه وسلم قال: (إذا مات ولد العبد قال الله لملائكته أقبضتم ولد عبدي فيقولون نعم فيقول أقبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول فماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله تعالى ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد).

وروى مسلم عن أم سلمة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: (ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله عز وجل إنا لله وإنا إليه راجمون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله ل خيرا منها).


மின்மயமாகி விட்ட நம்முடையை வாழ்வில் இந்த பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகம். தொழில் துறை முடங்கும், வேலை வாய்ப்பு குறையும். விலை வாசி உயரும். பள்ளி கல்லூரிகள் மற்ற அத்தியாவசியப் பணிகளில் பாதிப்பு ஏற்படும்,

இந்தப் பற்றாக்குறையிலிருந்து ஆபியத்தை நிவாரணத்தை அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

ந்ல்லடியார்கள் எக்காரியத்திற்கும் அல்லாஹ்விடமே திரும்புவர்.

அல்லாஹ் வாய்ப்பை ஏற்படுத்துவான். தகுந்த ஏற்பாடுகளை செய்ய அதிகாரத்திலிருப்பவர்களுக்கு அல்லாஹ்வே வழி காட்ட முடியும்.

ஒரு பள்ளி வாசலுக்கு நிதி வசூல் நடந்து கொண்டிருந்த போது ஷைக் ஒருவரிடம் ஒரு நபர் பணம் கொடுத்து தனக்கு ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அதில் வெற்றி கிடைக்க துஆ செய்யுமாறும் கூறினார். ஷைக் துஆ செய்தார். இறைவா வக்கீலுக்கு நல்ல சிந்தனை ஆற்றலை கொடு!

ஆட்சியாளர்களை நம்மீது அக்கறையுள்ளவர்களாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

أَنَّ ابْنَ عُمَرَ قَالَ قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنْ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلَا تَجْعَلْ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا ترمذي – 3424


துஆ வுக்கு அடுத்தபடியாக நாம் செய்ய வேண்டியது
மின்சார விரயத்தை தவிர்க்கனும். முடிந்தவரை தேவையற்ற மின்சாதனங்களை  ஆப் செய்து வைக்கனும்.

தேவையில்லாத போது கம்ப்யூட்டர் மானிட்டரை ஆப் செய்து வைத்தாலே கனிசமான மின்சாரம் மிச்சமாகும். இது போல லைட், பேன், பிரிட்ஜ், ஏசி மோட்டார்கள் மற்ற அதிக பட்ச மின்சார உபயோகத்தை குறைக்க முயற்சி செய்யனும்

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ(31)
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا(27)

قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنْ الْوُضُوءِ فَأَرَاهُ الْوُضُوءَ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ قَالَ هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ   - النسائي 140

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ مَا هَذَا السَّرَفُ فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ – إبن ماجة 419
ஒரு தட்டுப் பாட்டை சமாளிப்பதில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது.

இந்த உலகிலிருந்து கிடைப்பவை அனைத்துமே அல்லாஹ்வின் அருளே!
நாம் காசு கொடுத்து விடுகிறோம் என்பதனால அது நமக்குரியதாகிவிடாது.
தட்டுப்பாடுகள் ஏற்படும் போது காசுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.
அல்லாஹ்வுடைய அருளை வீண் விரயம் செய்ய நமக்கு உரிமையில்லை.

சுமார் 6 ஆயுரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதில் ஆட்சோபனை இல்லை.
ஆனால் பெரும் முதலாளிகளுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அரசு அதை கட்டுப் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தட்டுப் பாடு தீரும் காலம் வரைக்காவது அந்தக் கட்டுப் பாடு வரவேண்டும்.

பல இடங்களிலும் விவசாய பம்பு செட்டுகளுக்கு வழங்கப் படுகிற மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதை கண்டறிவதற்கான மாற்று உத்திகளை அரசு வகுக்க வேண்டும்.

அல்லாஹ் இந்தச் சிரமத்திலிருந்து விரைவாக நிவாரணம் தந்தருள்வானாக!  

No comments:

Post a Comment