வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 13, 2012

இஸ்லாம் என்றால் அறிவு


 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ

 
ந்த வார்த்தைகள் விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டவை.

 ஒரு ஏற்பட்டால் முறை விபத்து. ஆதே விபத்து இரண்டாம் முறை ஏற்பட்டால் அது ஏமாளித்தனம். இந்த ஏமாளித்தனம் நமது வெற்றியை பறித்து விடக்கூடியது. எனவே ஏமாந்து விடக்கூடாது என்பதில் எப்பொதும் எச்சரிக்கையாக ருக்க வேண்டும். குறிப்பாக மார்க்க விசயத்தில் ஏமாந்துவிடக்கூடாது.

 
மற்ற விசயங்களில் ஏமாந்துவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட மார்க்க விசயத்தில் ஏற்படுகிற ஏமாளித்தனம் அதிக பாதிப்பை தரக்கூடியது. இமை மறுமை இரண்டிலும் பாதிப்பு.

 
தெளிவான மார்க்க அறிவை பெறுவதன்; மூலம் முஸ்லிம்கள் மார்க்கத்தில் ஏமாந்துவிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.         

 இஸ்லாம் அறிவின் தளத்தில் இயங்கக் கூடிய சமயம். இஸ்லாம் கட்டளையிடும் வணக்கவழிபாடுகள் கூட அறிவு பெறுவதின் அடிப்படையிலேயே

கடமையாகின்றன. அறிவு பெறுதல் என்பது இஸ்லாத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். 

 
ஒரு ஹிந்துவோ கிருத்துவரோ எந்த அறிவும் தெளிவும் பெறாமல் கோயிலக்கோ தேவாலயத்திற்கோ சென்று அவருடைய சமய வழிபாட்டை நிறைவேற்றிவிட முடியுமும். ஆனால் ஒரு முஸ்லிம் மார்க்கத்தின் எந்த ஒரு கடமையையும் அதைப் பற்றிய அறிவைப் பெறாமல் நிறைவேற்ற முடியாது.

 
தொழுகை பல வகைப்பட்ட பாடங்களை கொண்டது. நோன்பு ஜகாத்-  ஹஜ் போன்ற மற்ற கடமைகளும் அப்படியே! 

 ஓரு புத்தகம் நிறைய விசயங்களை அறிந்து வைத்திருந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற முடியும்.
 

தண்ணீரின் தரம், காலத்தை பற்றிய அறிதல்- தொழுகையின் ஒழுங்கு-  தொழுகைக்கு முந்தைய ஒழுங்குகளப்பற்றிய தொளிவும் இருந்தால் மட்டுமே  ஐவெளை தொழுகையை நிறைவேற்ற முடியும். ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு ஓரளவேனும் கணக்கு  தெரிந்திருக்க வேண்டும்.


ஒருவா; இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதற்கு சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. எவரையும் அணுகி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எந்த அடையாளத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிh;பந்தம் இல்லை.  லாயிலாக இலல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹி என்ற கலிமாவை மனதால் நம்பி அதை நாவால் கூறி உறுதி செய்தால் போதுமானது. இஸ்லாத்தின் முதல் கடமையான கலிமாவை மொழிவது என்ற இந்த விசயம் கூட கலிமாவை பற்றிய விபரங்களை  அறிந்து கொண்டபின்னரோ அர்த்தம் பெறும். எனவே தான் திருமறை அல்குர்ஆன் கலிமா சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. லாயிலாஹ இல்லல்ஹுவை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது.

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ

 

இஸ்லாத்தின் வாசலில் அடியெடுத்து வைக்கிற போதே அது அறிவு பெறுதலின் அடிப்படையில் அமைகிறது என்பதை இது புலப்படுத்துகிறது.   

 மார்க்க நூல்கள் பலவற்றிலும் ஈமான் பாடத்திற்கு அடுத்தபடியாக இல்ம் தலைப்பில் பாடம் அமைந்திருப்பதை காணலாம்.

ஸஹீஹுல் புகாரி - மற்ற பல மார்க்க நூல்களிலும் இந்த நடைமுறை கையாளப் பட்டிருக்கிறது.

ரியான அறிவு பெறுவதன் மூலமே ஒருவர் அவருக்கு கிடைத்த அரிய செல்வமான ஈமானை பாதுகாக்க முடியும். ஓரு முஸ்லிம்  போதுமான அறிவை பெற்றிராவிட்டால் சில சந்தாப்பங்களில் அவரை அறியாமலே அவருக்கு கிடைத்த ஈமானியச் செல்வத்தை இழக்க நேரிடும். 

 றிவு பெறத் தவறிவிட்டால் - செயல்கள் வெற்றுச் சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மதிப்பிழந்துவிடும்.

 பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்ற வைப்பதற்கு எதற்காக என்ற விபரத்தை பலர் அறிந்து கொள்ளாததனால் அது சடங்காகிவிட்டது. ஒரு சிலர் அதையே வணக்கமாக தவறாக ர்தப்படுத்திக் கொள்கிற விபரீதம் ஏற்பட்டது.

 கடையை திறந்து வைத்ததும் தர்காவின் படத்திற்கு ஊதுபத்தி ஆராத்தி எடுக்கிற பழக்கம் சில முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றால் அந்த மாபாதகத்திற்கான முதல் காரணம் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்றவைக்கப்படவதின் காரணத்தை அறியாததே ஆகும்.

 ஒரு நல்ல சபையில் வாசணையாக இருக்கட்டுமே என்ற ர்தத்திலே ஊதுபத்தி பற்றவைக்கப்படுகிறது. அதை தவிர அதற்கு மார்க்கத்தில் வேறு எந்த பொருளும் இல்லை என்பதை ஒரு முஸ்லிம் அறிந்து வைத்தால் கடையை திறந்ததும் ஊதுபத்தி பற்றவைப்பார். வாசணைக்காக. சாம்பிராணி புகை காட்டுவார் ; வாசணைக்காகவும் சுகாதாரத்திற்காகவும்.

இஸ்லாம் அறிவுவழி சார்ந்த சமயம் எனும் போது அதில் மூடநம்பிக்கைளுக்கு இடமில்லை.

 
எந்த ஒரு செயலும் அதற்குரி நியாயம் அறிந்து செய்யப்படவேண்டும். மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளை ஒரு முஸ்லிம் நம்பினாலோ; அல்லது மார்க்க அடிப்படையற்ற ஒரு செயலைச் செய்தாலோ அது முடநம்பிக்கையாகவும் மூடச்செயலாகவும் கருதப்படும்.

 அப்படிச் செயல்படுவது ஈமானிய நம்பிக்கைகளை சிதைப்பதாகவும் இஸ்லாமிய அடையாளத்தை சீரழிப்பதாகவும் ஆகிவிடும்.

 பெருமானார்(ஸல்)வர்கள் தகுந்த எச்சரிக்கை களை செய்துள்ளார்கள்.
 

 عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَسَفَتْ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ كَسَفَتْ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ فَصَلُّوا وَادْعُوا اللَّهَ-  البخاري 1043

 
எத்தகைய சிறந்த ஒரு தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார்? தனது புத்திர சோகத்தை மறந்து விட்டு நம்மை நலவழிப்படுத்தினார்


பெருமானாhpன் வழி வந்த நபித்தோழர்களும் இத்தகைய விழிப்பணர்வை தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளாh;கள்.   

 
உமர் (லி) அவர்களின் காலத்தில் ஹுதைபிய்யாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தை முஸ்லிம்கள் புனிதமாக கருதினார்கள். அங்கு செல்லவும் தொழுவும் ஆரம்பித்தார்கள்.  ஹுதைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் அந்த மரத்தினடியில் தான் பெருமானார் (ஸல்)அவர்கள் ஹாபாக்களிடம் பைஅத் பெற்றார்கள். அந்த மரம் இதுதான் என்று நினைத்து மக்கள் அங்கு சென்று கொண்டிருந்தார்கள். உண்மையில் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட சஹாபாக்களால் கூட அந்த மரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் மர் (ரலி) அந்த மரத்தை வெட்டி எறிந்தார்கள்.

 (இப்னுகதீர் - அல்பிதாயா வன்னிஹாயா - )

உமர் (ரலி) யும் நைல் நதியும்

 

قال ابن الجوزي :
لما فتحت مصر أتى أهلها إلى عمرو بن العاص حين دخل بؤونة من أشهر العجم فقالوا له‏:‏ أيها الأمير إن لنيلنا هذا سُنَّة لا يجري إلا بها‏.‏

فقال لهم‏:‏ وما ذاك قالوا‏:‏ إذا دخلت ثنتا عشرة ليلة من هذا الشهر عمدنا إلى جارية بكر بين أبويها فأرضينا أباها وحملنا عليها من الحلي والثياب أفضل ما يكون ثم ألقيناها في النيل‏.‏

قال لهم‏:‏ إن هذا لا يكون في الإسلام إن الإسلام يهدم ما كان قبله‏.‏

فأقاموا بؤونة وأبيب ومسرى لا يجري قليلًا ولا كثيرًا حتى هموا بالجلاء عنها فلما رأى ذلك عمرو بن العاص كتب إلى عمر رضي اللّه عنه بذلك فكتب إليه عمر‏:‏ ‏"‏ إنك قد أصبت لأن الإسلام يهدم ما كان قبله ‏"‏ وكتب بطاقة داخل كتابه وكتب إلى عمرو‏:‏ ‏"‏ إني قد بعثت إليك ببطاقة داخل كتابي فألقها في النيل فلما قدم كتاب عمر إلى عمرو بن العاص أخذ البطاقة فإذا فيها‏:‏ ‏"‏ من عبد اللّه أمير المؤمنين إلى نيل مصر أما بعد‏:‏ فإن كنت تجري من قِبَلك فلا تجر وإن كان اللّه الواحد القهار هو الذي يجريك فنسأل اللّه الواحد القهار أن يجريك ‏"‏ فألقى البطاقة في النيل قبل يوم الصليب بيوم وقد تهيأ أهل مصر للجلاء والخروج لأنه لا تقوم مصلحتهم فيها إلا بالنيل‏.‏

فلما ألقى البطاقة أصبحوا يوم الصليب وقد أجراه اللّه ستة عشر ذراعًا في ليلة واحدة فقطع الله تلك السُّنَّة السوء عن أهل مصر إلى اليوم‏

 

இது பெருமானார் ;(ஸல்)வர்கள் கட்டமைத்துத தந்த பாதையில் முஸ்லிம் சமுதாயம் தெளிவான சிந்தனையோடும் வலுவான செயல்திட்டத்தோடும் செயல்பட்டதற்குமான ஒரு அடையாளமாகும்.

 தெளிவான இறைவிசுவாசத்தால் ஒரு வரலாற்றுத் தவறு தடுத்து நிறுத்தப்பட்டது.

 ஏந்த ஒரு செயலையும் மார்ககத்தின் கருத்தறிந்து செயல்படும் போது கிடைக்கிற நன்மையையும் நேர்வழியையும் இந்த வரலாறு மிகத்தெளிவாக எடுத்துரைககிறது.

 மார்க்கத்தின் அடிப்படைகளைப்பற்றி தெளிவில்லாத போது இழப்புகளும் நட்டங்களும் அதிகமாகிறது.

 
ஓரு நண்பர் புதிய விடு கட்டினார். திறப்பு விழாவிற்கு எங்கிருந்தோ பச்சையும் பச்சையும் அணிந்திருக்ந ஒருவரை அழைத்துவந்தாh;. வர் விடு முழுவதும் சாம்பிராணி புகையை படரவிட்டு ஏதேதோ பாட்டுக்களை பாடியபடி தன் இரண்டு கைகளையும் சந்தணக்கிண்ணத்தில் தோய்த்து சுவற்றில் ஆங்காகாங்கே தனது கை அடையாளத்தை பதித்தார்

அந்த நபரை அழைத்துவருவதற்கு செலவழித்த காசும் வீண். சுவற்றுக்கு அடித்த டிஸ்டெம்ரும் வீண்.

 இவை எல்லாவற்றையும் விட பெரி நஷ்டம் எது தெரியுமா? இப்படி செய்தால் அல்லாஹ் நனமையை தருவான் நினைத்தால் அது தான் மிகப் பெரி நஷ்டம்.


قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنْ الغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدْ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(256)

3 comments:

  1. assalamu alaikkum.very fantastic articls thanks

    ReplyDelete
  2. //அறிவு பெறத் தவறிவிட்டால் - செயல்கள் வெற்றுச் சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மதிப்பிழந்துவிடும்//
    சத்தியமான வாசகம்.
    மொத்தத்தில் கட்டுரை முழுக்க
    நல்ல பல தகவல்கள்.

    ReplyDelete
  3. assalamu alaikkum.i request my friends to read this articles.this wonderful articles motivate us to know our islam clearly by zubair publishers visit us www.zubairpublishers.blogspot.com

    ReplyDelete