வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 14, 2015

தீர்ப்புக்கள் திருத்தப்படலாம். ஆனால்...?

இந்த உலகில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.

நீதி என்ற அச்சாணியில் தான் உலகம் என்ற சக்கரம் பத்திரமாக சுழனறு கொண்டிருக்கிறது.

நீதி தவறினால் மனித வாழ்வு குடைசாய்ந்து விடும்.

இனம். மொழி. மதம். தேசியம். அரசியல் அதிகாரம் என்ற பெயரில் மக்களில் ஒரு சாரார் நீதி தவறிய போதெல்லாம் உலகில் மகா கொடுமைகள் அரங்கேறின.

இரண்டாம் உலக் யுத்ததில் ஜப்பானியர்களை வழிக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா அநீதியாக ஹிரோஷிமாவின் மீதும் நாகாசாகியின் மீதும் குண்டு வீசியது.

மனித வரலாறு சந்தித்திராத மிகக் கொடூரமான பேரழிவு அப்போது நிகழ்ந்தது.

நாம் இப்போது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறோம். 40 டிகிரி யை தாண்டுமானால் பாதசாரிகள் மயங்கி விழுந்து இறந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் இடம் பெறும்.

அமெரிக்கா வீசிய அணுகுண்டு கீழே வெடித்து அதன் நெருப்பும் புகையும் மேலே ஒரு குடைக் காளான் போல் எழும்பி திருமபி ஹிரோஷிமாவின் மீது படர்ந்த போது அதன் வெப்பம் 3000 ஆயிரம் டிகிரியாக இருந்தது. கற்பனை செய்து பாருங்கள் 40 டிகிரியையே தாங்கிக்கொள்ள முடியாது எனும் போது 3000 டிகிரி எப்படி இருக்கும்?

அப்போது மக்கள் மட்டுமல்ல மெழுகு போல் கட்டிடங்களும் கூட உருகிப் போயின.

அந்த அனுபவத்தை நேரில் உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

எங்களது கண் முன்னே பலர் உருகி விழுந்தனர், ஒருவர்  ஓடி வ்ந்து என்னவோ கேட்க முயன்றார் அதற்குள் அவரது கண் உருகி விழுந்தது என்கிறார் இந்த கோர அனுபவத்தை நேரில் கணடவர்.

சில மனி நேரத்தில் சுமார் ஓண்ணே கால் இலட்சம் பேர் உருத்தெரியாமல் அழிந்தனர். அந்த கதிர் வீச்சின் காரம் இன்னும் அங்கு இருக்கிறது என அறிவியளாளர்கள் கூறுகிறார்கள்.

மனுநீதிச் சோழன் நீதி தவறியதால் மதுரை எரிந்தது என்கிறது தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம்.

நீதி தவறும் போது  சமூக அமைதி குலையும என்பது மட்டும அல்ல இறைவனின் அருளும் குறையும்.

வள்ளுவன் கூறுவான்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

அரசன் நீதி தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

நீதி தவறுவோர் தங்களது சந்ததிகளை எண்ணிப்பார்த்துக் கொள்ளட்டும். என குர் ஆன் எச்சரிக்கிறது.

وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا(9

வீட்டிலும் ரோட்டிலும் நாட்டிலும் இது தான் விதி.  

எந்த ஒரு மனிதன் நீதியை குறை படுத்தினாலும் சமூகம் சிக்கலுக்குள்ளாகும்.

என்வேதான் திருக்குர் ஆன் நீதியை பராமரிக்க கடுமையான உத்தரவுகளைச் சொல்லியிருக்கிறது,


·        وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا(584;

உங்களுக்கோ, உங்களது குடும்பத்தினருக்கோ, பணக்காரர்களுக்கோ ஏழைகளுக்கோ எதிராக இருக்கும் என்றாலும் நீதியை நிலை நாட்டுங்கள் என உத்தரவிடுகிறது குர் ஆன்

·        يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا(1354;

உங்களுக்கு வேண்டாதவர்கள், நயவஞ்சகர்கள், உங்களுக்கு எதிராக சதி செய்பவர்கள் தீர்ப்பு கேட்டு வந்தாலும் நீதியாகவே தீர்ப்பளியுங்கள், விருப்பமில்லாவிட்டால் விலகிக் கொள்ளுங்கள் என்கிறது குர்ஆன்.


·        سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ وَإِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ(42)

மனித வாழ்வின் ஆதாரச் சுறுதியான அந்த நீதியை நிலைநாட்டுவோ நீதிபதிகள்.
அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பொறுப்புணர்வோடும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறார்கள்

நீதிபதியின் தன்மைகளை அலி ரலி அறிவுறுத்துகிறார்கள்

قال علي رضي الله عنه: (لا ينبغي أن يكون القاضي قاضياً حتى تكون فيه خمس خصال:
·        عفيف،
·        حليم،
·        عالم بما كان قبله،
·        يستشير ذوي الألباب،
·         لا يخاف في الله لومة لائم)

கோபத்திலோ ஆத்திரத்திலோ தீர்ப்பு வழங்கக் கூடாது.

قوله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا يقضي حاكم بين اثنين وهو غضبان».
ويقاس على الغضب كل ما يشوش على الفكر من المشكلات والهموم، والجوع والعطش والتعب، والمرض وغيرها.



தீர்ப்புக்கள் மாற்றி எழுதப்படலாம் அதில் தவறில்லை.

இறைத்தூதர் தாவூத் அலை அவர்களுக்கும் அவரது மகன் சுலைமான் அலை அவர்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு,

இருவரும் நபியாகவும் பேரரசர்களாகவும் இருந்து ஆட்சி செய்தன, நீதியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தினர், அவர்களது நீதி நடவடிக்கைகள் மிகவும் புகழ்பெற்றவை. தாவூது அலை கீமு 1037 ல் பிறது கீமு 967 ல் இறந்தார் என்று கருதப்படுகிறது. அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு 1700 வருடங்களுக்கு முன்னாள் ஹெப்ரானையும் ஜெரூசலத்தையும் தலைமையிடமாக கொண்டு 40 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்.

அவரது மகன் சுலைமான் அலை அதிபுத்திசாலித்தனமாக வழக்குகளை தீர்த்து வைத்து நீதியை நிலைநாட்டியதற்காக இன்று வரை நினைவு கூறப்படுகிறார்ஆங்கில உலகம் சுலைமானை Solomon the Wise என்று புகழ்கிறது.  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் -அலை- அவர்களுடைய காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்களில் ஒருத்தி/ தன் தோழி யிடம்/ ,,உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது,, என்று கூற/ மற்றொருத்தி அவளிடம்/ ,,உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது,, என்று கூறினாள். ஆகவே/ இருவரும் (தஙகள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர் களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச்  சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.

(அவர் களுடைய தீர்ப்பில் கருத்து வேறுபாடு கொண்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள்/ ,,என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருஙகள். நான் உஙகளிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து  (பஙகிட்டு) விடுகிறேன்,, என்று கூறினார்கள். அப்போது இளையவள்/ ,,அவ்வாறு செய்யா தீர்கள். அல்லாஹ் உஙகளுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்,, என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே/ சுலைமான் (அலை) அவர்கள் ,அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது, என்று தீர்ப்பளித் தார்கள

أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَجَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ تَقَعُ فِي النَّارِ وَقَالَ كَانَتْ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا فَقَالَتْ صَاحِبَتُهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ وَقَالَتْ الْأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا فَقَالَتْ الصُّغْرَى لَا تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا فَقَضَى بِهِ لِلصُّغْرَى  البخاري)

இதே போல இன்னொரு வழக்கிலும் நபி தாவூது அலை அவர்கள் வழங்கிய ஒரு தீர்ப்பை மாற்றி வேறு ஒரு தீர்ப்பை சுலைமான அலை வழங்கினார்கள்.

ஒருவருடைய ஆடுகள் இன்னொருவருடைய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விட்டன. அந்த வழக்கு தாவூது அலை அவர்களிடம் வந்தது. ஆடுகள் நாசப்படுத்தியதற்கு ஈடான தொகை தோட்டக்காரனுக்கு தரப்பட வேண்டுமென் தாவூது (அலை) தீர்ப்பளித்தார். அது சட்டப் படியான தீர்ப்பு.

ஆனால் சேதத்தின் அளவை கவனித்துப் பார்த்த போது அது ஆட்டு உரிமையாளனிடமிருந்த மொத்த ஆட்டின் அளவுக்கு இருந்தது. இந்தத் தீர்ப்பினால்  ஆடுகளின் உரிமையாளன் தன் ஆடுகள் மொத்தத்தையும் தோட்டக்காரனுக்கு கொடுத்து விட்டு வெறுங்கையோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தீர்ப்பு பற்றி கேள்விப்பட்ட சுலைமான் அலை , இந்த வழக்கிற்கு இதை விடச் சிற்ந்த தீர்ப்பை தன்னால் சொல்ல முடியும் என்றார். அதை விவரிக்கவும் செய்தார்.


தோட்டக்காரனிடம் ஆடுகளை ஒப்படைக்க வேண்டும். அவன் ஆடுகளை பராமரிப்பான். ஆட்டுக்காரனிடம் தோட்டம் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அவன் அவன் ஆடுகளால் உண்ணப்பட்ட அளவு திராட்சை கொடிகளை வளர்க்க வேண்டும். அதுவரை தோட்டத்தின் சொந்தக் காரன் அந்த ஆடுகளால் பயனடைந்து கொள்ளலாம். தோட்டத்தில் திராட்சை கொடிகள் வளர்ந்த பிறகு ஆடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும்  தனது யோசனையை சுலைமான் (அலை) விவரித்தார்.

இந்த தீர்ப்பை கேள்விப்பட்ட தாவூது அலை தனது தீர்ப்பை மாற்றி சுலைமான் அலை சொன்ன மாதிரி தீர்ப்பை மாற்றி வழங்கினார்.

திருக்குர் ஆன் இந்த வரலாற்றை தனக்கே உரிய பாணியில் சுருக்கமாக கூறுகிறது.

ِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ(78)فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا

தாவூது அலை) வழங்கிய தீர்ப்பு சட்டப்படி சரியானது தான் என்றாலும் வழக்காளிகள் இருவருக்கும் நன்மையாக அமைகிற ஒரு சமரச திட்டம் நீதியானதாக இருக்கும் என்கிற காரணத்தினால் நீதியை சிறப்பாக பராமரிக்கும் எண்ணத்தில் தீர்ப்பு மாற்றப்பட்டது.

தீர்ப்புக்கள் மாற்றப்படுவது நீதியின் அடிப்படையில் இருக்குமானார்ல அது ஏறகப்படக்கூடியதே!

நீதியை நிலை நாட்டும் சிந்தனையில் நீதிபதிகள் இருப்பார்கள் எனில் அதற்கேற்ற சிந்தனை தெளிவை இறைவன் தருவான். சாட்சிகளை தாண்டியும் உண்மையை கண்டுபிடிக்கும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தீர்ப்புக்களை மாற்றுகிற போது மக்களிடம் மேலும் அபிமானத்தையும் மரியாதையையும் பெருவார்கள். நீதி அமைப்பு வலுவாகும்.

தாவூது அலை அவர்களது ஆட்சியை இறைவன் வலுப்படுத்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது, அந்த ஆயத்தின் விளக்கத்தில் இதற்கு சான்றான ஒரு கருத்து கிடைக்கிறது.

மாடு திருடப் பட்ட வழக்கில் வெளிப்பட்ட கொலை

இரண்டு பேர் தாவூத் அலை) அவர்களிடம் பசு மாட்டைப் பற்றிய ஒரு வழக்கோடு வந்தார்கள், தன் மாட்டை பலவ்ந்தமாக எடுத்துக் கொண்டதாக ஒருவன் மற்றவன் மீது குற்றம் சாட்டினான். குற்றம் சாட்டப்பட்டவனோ அதை மறுத்தான்.

விசாரணையில் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இரவு வரை தாவூது (அலை) வழக்கை ஒத்திவைத்தார்.


அன்றைய இரவில் தாவூது அலை அவர்களுக்கு ஒரு கனவு வந்தது, அதில் குற்றம் சாட்டியவனை கொலை செய்து விடுமாறு சொல்லப்பட்டது, நபிமார்களின் கனவு வஹி ஒரு வகை அல்லவா?

அந்தக்கனவு தாவூத் அலை அவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது,  
 புகார் தந்தவனையே கொலை செய்வதா? மாட்டை இழந்தவனுக்கு மற்றுமொரு தண்டைனையா? என்று யோசித்த தாவூத் (அலை) இது பற்றி குற்றம் சாட்டியவ்னிடமே கேட்டுவிட முடிவு செய்து, அவனை அழைத்து  தனக்கு கிடைத்த இறையுத்தரவை சொல்லிக்காட்டி  உண்மையைச் சொல்லுமாறு கேட்டார்.

அதற்கு அவன் அல்லாஹ்வின் மீது ஆனையாக நான் சொன்னது போல் மாடு திருடப்பட்டது உண்மை, ஆனால் இதற்கு முன் நான் இவனது தந்தையை கொன்றேன், அது யாருக்கும் தெரியாது என்றான். தாவூது அலை அவர்கள் அவனை கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.


அன்றிலிருந்து எந்த உண்மையை தாவூத் அலை அவர்களிடம் மறைத்தாலும் அது இறைவன் அருளைக் கொண்டு அவருக்கு தெரிய வந்து விடும் என்பதை உணர்ந்த மக்கள் மிகவும் அஞ்சி நடந்தார்கள். அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தினோம் என்பதற்கு இதுவே அர்த்தம் என இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்,


நீதியாக நடந்து கொள்ள நினைக்கும் நீதிபதிகள் எப்போதாவது சருகிவிடுகிற சந்தர்ப்பங்கள் உருவானாலும் கூட இறைவன் அவர்களது நெற்றியைப் பிடித்து நல்வழிப்படுத்துவான்,

திருக்குர்ஆன் தாவூது அலை அவர்கள் குறித்தே சொல்லுகிற ஒரு செய்தி இதற்கு சான்றாகும்,

சுவரேறி வந்த வழக்கு

தாவூது (அலை) அவர்களின் வீட்டுச் சுவறேறிக் குதித்து ஒரு வழக்கு வந்தது. திருக்குரானிய வசனங்கள் அந்த வழக்கையும் அது வந்த விதத்தையும் அற்புதமாக எடுத்துக் கூறுகின்றன.

(இது சஜ்தா ஆய்த்து. ஓதுவதை தவிர்க்கவும்,)


وَهَلْ أَتَاكَ نَبَأُ الْخَصْمِ إِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ(21)إِذْ دَخَلُوا عَلَى دَاوُودَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوا لَا تَخَفْ خَصْمَانِ بَغَى بَعْضُنَا عَلَى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَا إِلَى سَوَاءِ الصِّرَاطِ(22)إِنَّ هَذَا أَخِي لَهُ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً وَلِيَ نَعْجَةٌ وَاحِدَةٌ فَقَالَ أَكْفِلْنِيهَا

وَعَزَّنِي فِي الْخِطَابِ(23)قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَى نِعَاجِهِ وَإِنَّ كَثِيرًا مِنْ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ(24)فَغَفَرْنَا لَهُ ذَلِكَ وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَى وَحُسْنَ مَآبٍ(25)يَادَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعْ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ


தாவுதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள் கூறினார்கள் ''பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக  ! 38:22

அவர்களில் ஒருவர் கூறினார்) ''நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லி வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.

அதற்கு தாவுது) ''உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது நிச்யசமாக அநீதிதான். நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே என்று கூறினார்.

இப்பபடிச் சொல்லிக் கொண்டிருக்கிற போதே ''நிச்சயமாக நாம்  அவரைச் சோதித்து விட்டோம் என்று தாவுது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கேட்க குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.

ஆகவே நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும் நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும் அழகிய இருப்பிடமும் உண்டு.

(நாம் அவாடம் கூறினோம்) ''தாவுதே! நிச்சயமாக நாம் உம்மை புமியில் பின்தோன்றலாக ஆக்கினோம் ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும் அன்றியும் அனோ இச்சையைப் பின் பற்றாதீர் (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

பிரதிவாதியின் கருத்தை கேட்பதற்கு முன்னதாக வழக்காளியின் பேச்சிற்கு இடைபுகுந்து தாவூத் (அலை) இவ்வாறு சட்டென்று தீர்ப்புக் கூறிவிட்டார். சட்டென்று சுதாகரித்துக் கொண்ட தாவூது இது இறைவன் தனக்குச் சொல்லிக் கொடுக்கிற பாடம் என்பதை புரிந்து கொண்டார்.  

நல்ல நீதிபதிகளுக்கு இறைவன் செய்கிற இந்த உதவிகள் கண்னுக்குத் தெரியாத உண்மையை வெளியே கொண்டுவரவும் நீதியை நிலை நாட்டவும் துணை செய்யும்.

 நீதிபதிகள் இப்படி இருப்பார்கள் எனில் அவர்கள் தீர்ப்புக்களை மாற்றி எழுதுவார்கள் எனில் அதில் நீதி நிலைக்கும், நீதியின் மீதான் மக்களின் நம்பிக்கையும் நிலைக்கும்.

நீதிபதிகள் இத்தகைய நீதி உணர்வின் அடிப்படையில் செய்லபடாமல் நிர்பந்தங்களுக்கு பய்ந்தோ சுய இலாபத்தின் அடிப்ப்டையிலோ செயல்படுவார்கள் எனில் அவர்களது நடத்தையால் நீதி மதிப்பிழக்கும்.

நீதியின் மீதான் மக்களின் நம்பிக்கை வலுவற்றதாகிவிடும்.

நம்முடைய நாட்டில் சமீப்காலமாக நீதிமன்ற தீர்ப்புகள் மக்களை மிகவும் குழப்பம்டையச் செய்கின்றன.

இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பல் கடும் குற்றவாளிகள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள்குஜராத்தில் ஆயிரக்கணகான முஸ்லிம்களின் படுகொலை செய்தது  தொடர்பாக் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் பிணை வழங்க்ப்படாமல் இருந்த முன்னாள் குஜராத் மாநில பெண் அமைச்சர் , அதே போல போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காவல் துறை அதிகாரிகள் திடீர் திடீரென் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அதபோல் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலிலிரிந்த ஒரு முதலைமைச்சருக்கு நான்கு வருடம் சிறைத்தண்டனை வழங்கி ஒரு நீதிபதி அவரது பதவி இழப்புக்கு காரணமாகிறார். அந்த தீர்ப்பின் சூடு ஆறுவதற்குள்ளாக இன்னொரு நீதிபதி அவரை மீண்டும் விடுதலை செய்து அவர் மீண்டும் பதவியிலமர காரணமாகிறார்.   

என்ன நடக்கிறது நாட்டிலே! அரசியல் சார்புக்கும் பார்வைகளுக்கும் அப்பாற்பட்டு நோக்குககையில் நமது சட்ட அமைப்பு சரியாகத்தான் செயல் படுகிறதா என்ற பலத்த சந்தேகம் ஏற்படுகிறது

முந்தைய தீர்ப்பும் பிந்தைய தீர்ப்பும் நீதியின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்குமானால் அது ஏற்கப் படக்கூடியதே

இல்லை உன்மையில் இது நாம் ஆழ்ந்து கவலைப்பட வேண்டிய ஒரு விசயமாகும்.  

அல்லாஹ் இந்த உலகிலும் நமது நாட்டிலும் நீதி நிலைக்க துணை செய்வானாக!


   

No comments:

Post a Comment