வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 16, 2017

அவசரம் அழிவுக்கு வழி வகுக்கும்


மக்கள் ஒரு அவசர யுகத்தில் இருக்கிறார்கள் . வணக்கத்திலும் அவசரம் , சாப்பாட்டிலும் அவசரம், நடை உடை பேச்சு என அனைத்திலும் அவசரம் தொற்றிக் கொண்டு விட்டது.

ஆங்கிலதில் you என்று எழுதுவதற்கு பதில் u என்று எழுதுகிறார்கள். ஓ மை காட் என்பது OMG ஆக சுருங்கி விட்டது. உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு கூட மீம்ஸ்கள் வந்து விட்டன. சிம்பள்கள் பயன்படுகின்றன.

ஒரு மவ்து செய்தியை பரிமாறினால் அழும் கண்ணீர் போடோக்கள் அடுத்த நொடியில் வந்து நிற்கின்றன,

அல்லாஹ் மனிதனை அவசரப் படுகிற இயல்புடைவனாக படைத்திருக்கிறான். அதே நேரத்தில் அவனுக்கு புத்தியை வழங்கி நிதானமாக நடந்து கொள்ள வலியுறுத்தவும் செய்கிறான்.

خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ}(37) سورة الأنبياء

وَيَدْعُ الإِنسَانُ بِالشَّرِّ دُعَاءهُ بِالْخَيْرِ وَكَانَ الإِنسَانُ عَجُولاً}(11)
(மனிதன் நன்மைக்காக பிரார்த்திப்பது போல சில நேரங்களில் தனக்கோ மற்றவர்களுக்கோ தீமை ஏற்பட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறான், அவனது நன்மைக்கான துஆ வை ஏற்பது போல அல்லாஹ் அவன் கேட்கிற தீய துஆக்களையும் ஏற்றுக் கொள்வான் எனில் நிலமை என்னவாகும். ? மனிதன் அவசரக்காரணக இருக்கிறான்.

நம்முடைய மாநிலத்தில் நடை பெறும் அரசியல் நிகழ்வுகள் நமக்கு அவசரப்படுதலின் ஆபத்து எத்தகையது என்பதை புரிவைக்கின்றன.

(செயல்பட வேண்டிய நேரத்தில் செயலாற்றாமல் போகிற போது எத்தகைய தீமை ஏற்படும் என்பதை பன்னீர் செல்வத்தை பார்த்து புரிந்து கொண்டோம். அவசரப் படுதலின் ஆபத்து எத்தகையது என்பதை சசிகலாவைப் பார்த்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். )

நம் கண் முன்னே நடக்கிற நிகழ்வுகளிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ள
வேண்டியது ஈமானிய குணம்.

 إن في ذلك لعبرة لمن يخشى

உலகின் பெரும் சக்ரவர்த்தியாக வாழ்ந்த - தன்னைய பெரும் கடவுள் என்று பிரக்டணப்படுத்திக் கொண்ட பிர் அவ்னுக்கு நேர்ந்த கதியை விளக்கிச் சொல்லி விட்டு அல்லாஹ் இந்த வார்த்தைகளை கூறுகிறான். (சூரத்துன்னாஸிஆத்.)
எந்த மாபெரிய அதிகார பீடத்தில் இருப்பவர்களையும் அல்லாஹ் நினைத்தால் குப்பைத் தொட்டிக்குள் வீசி விட முடியும்.
பிரஞ்சு மன்னன் பதினான்காம் லூயி ஒரு முறை அதிகார போதையில்நானே அரசன் நானே அரசு” I am the state   என்று கூறினான். ஒன்றல்ல .. பத்தல்ல .. 72 ஆண்டுகள் பிரஞ்சின் ஆட்சியில் இருந்தவனுக்கு இறக்கும் தருவாவாயிலும் புத்தி வரவில்லை.  உலகின் அதிக நாள் ஆட்சியிலிருந்த மன்னன் என்ற பெயர் பெற்ற 14 ம் லூயிக்கும் மரணம் வந்தபோது லூயி சொன்னான். நான் தான் போறேன். ஆனால் அரசு நிலைத்திருக்கும்I am going away, but the State will always remain ஆனால் . ஆனால் அவன் உருவாக்கிய சாம்ராஜ்யம் கூட இரண்டு தலைமுறைக்குள்ளாக காணாமல் போனது என்பது வரலாறு.
அதிகார வர்க்கத்திற்கு நேர்கிற தண்டனைகளைகளிலிருந்து அல்லாஹ்வை பயப்படுகிற முஃமின்கள் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். .
பாடம் படிப்பத்ற்கான களமாக அதிகார வர்க்கம் தேர்ந்தெடுப்பபடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு,
1.   அதிகார வர்க்கம் தான் பெரும் பாலும் தன்னை மறந்து, கடவுளை மறந்து செயல்படக் கூடிய வர்க்கம்.
2.   அதிகார வர்க்கத்தை தான் மக்கள் தமது ரோல்மாடலாக முன்னோடிகளாக நினைக்கிறார்கள்.
எனவே அதிகார வர்க்கத்திற்கு நேர்கிற அவலங்களிலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நம்முடைய தமிழ் நாட்டில் அவசரப் பட்ட காரணத்திற்காக பெரும் அதிகாரப் பொறுப்பை ஒரு பெண்மணி இழந்து விட்டார் என்பது மட்டுமல்ல. எதிர்பாராமல் சிறைக்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தில் என்னவெல்லாம் நடந்தது ? யார் ஆட்சிக்கு வந்திருக்கீறார்கள் ? அவர்களது ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்ற விவாதங்கள் அரசியல் சார்புடைவை., ஆனால் ஒரு பெண்மணி அவசரப் பட்டதன் காரணமாக அதிகாரம் செய்யும் வாய்ப்பை இழந்து விட்டார் என்பது வாழ்வியல் தத்துவம்.
திருமதி சசிகலா ஆளும் கட்சியின் பொதுச் செயலாலரானது சரியா என்ற விவாதத்தை ஒதுக்கி விட்டு அவர் அந்தப் பொறுப்புக்கு வந்த பிறகு வெளிப்படுத்திய துணிச்சல் காரணமாக அரசியல் விமர்ச்சகர்களால் அவருக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்டது. கட்சியினரிடையேயும் மக்களிடையேயும் அவர் ஊடுறுவி விடுவார் என்று கருதப்பட்டது. அவசரப் பட்டு அவர் முதலைமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது ஒரு வகையில் பேராசை . இன்னொரு வகையில் அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் அவரை இழுத்து விட்ட படுகுழி. எதார்த்த சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாமல் அவர் பேராசைக்கு அடிமைப் பட்டு அவசரப் பட்டது அவரது நிலையை மேலும் சிக்கலாக்கி விட்டது.
சமூக ஊடகங்களில் பலரும் நீதிபதிகளை பாராட்டு கிறார்கள். உண்மையில் அது கேலிக்குரிய ஒரு செய்தி.
இத்தனை நாள் நீதி வழங்க தாமதித்தவர்கள் திடீரென் அவரசம் காட்டியது யாருடைய தூண்டுதல் ?. அப்படி தூண்டியவர்கள் நினைத்த்திருந்தால் இன்னும் கூட சில வருடங்களுக்கு இந்த வழக்கை கிடப்பில் போட்டிருக்க முடியும்.
ஒரு எதார்த்தம்இன்றைய அரசியலின் மிக அழுக்குப் படிந்த ஒரு இரகசியம் என்ன வென்றால் ஊழல் குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டு கடும் தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜெயலலிதா உள்ளிட்டவர்களை நீதிபதி குமாரசாமி என்பவரை வைத்து விடுதலை செய்த மத்திய அரசு தான் இப்போது திருமதி சசிகலாவை சிறைக்குள் அனுப்பியிருக்கிறது.
இல்லை என்றால் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு  நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் தவறிருப்பதாக கூறிய நீதிபதிகள் ஒரு முக்கிய வழக்கைஇலாபம் தரக்கூடிய சந்தேகத்தை எழுப்புகிற வழக்கைதப்பும் தவறுமாக தீர்ப்புச் செய்த நீதிபதி குறித்து கருத்து தேரிவித்திருக்க வேண்டாமா?
நடந்து கொண்டிருப்பதெல்லாம் மத்திய அரசின் நாடகங்கள். என்பது ஒரு தரப்பான நிஜமாக இருந்தாலும் இல்லை இல்லை அல்லாஹ்வின் நாட்டம் என்பதே எதார்த்தமான சத்தியமாகும். அல்லாஹ் நாடியிருந்தால் மத்திய அரசின் திட்டங்களை கூட திசை திருப்பியிருக்க முடியும். ஏன் இப்போது நடந்திருப்பதே கூட மத்திய அரசின் எதிர்ப்பார்ப்பிற்கு மாற்றமானதாக இருக்க கூடும். சசிகலாவின் கைத்துக்குப் பிறகு கூடு கலைந்து விடும் என்று காத்திருந்த மத்திய அரசுக்கு புதிய அரசுக்கு வாழ்த்துச் சொல்லும் நிலை ஏற்பட்டிருப்பது கூட ஒரு ஏமாற்றமாக இருக்க கூடும்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிற நிகழ்வுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு மிக முக்கிய மான ஒரு வாழ்வியல் தத்துவத்தை வழங்கினார்கள்.
அவசரப்படக் கூடாது.”
அவசரப் படாதீர்கள் நான் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன் என்கிறான் அல்லாஹ்
فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ إِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا(84)

எந்த ஒன்றுக்கும் அல்லாஹ்விடம் ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கை நமது கணக்கு முந்தி விடக்கூடாது.

வாகணங்களில் செல்லுகிற போது எதிரே வருகிற வாகனத்தின் விரைவுக்கு ஒரு கணக்கு இருக்கும் நமது வாகணத்தின் விரைவுக்கும் ஒரு கணக்கு இருக்கும். எதிரே வரும் வாகணத்தைப் பற்றிய நமது கணக்கு முந்தி விடும் என்றால் விபத்து நிகழ்ந்து விடுகிறதே அது போல வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் அல்லாஹ்விற்கு ஒரு கணக்கு இருக்கிறது . அதை புரிந்து கொண்டு பொறுமையாக செயல்பட்டால் நல்லது . அவர்சப்பட்டு விட்டால் ஆபத்து தான்.

எனவே நல்ல காரியங்களில் கூட அவரசரப்படக்கூடாது என அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

ஜிப்ரயீல் அலை ஓதி முடிப்பதற்கு முன் பெருமானார் (ஸல்) எங்கே அது தவறிப்போய்விடுமோ என்ற பயத்தில் அவசரப்பட்டு ஓதுவார்கள். அல்லாஹ் கூறினான். அவரசரப் படாதீர்கள்.

وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا(114)
அவசரப் படுவது காரியங்களை கெடுத்துவிடும்.
உஹது யுத்தத்தில் அவசரப் பட்ட தோழர்களால் கிடைத்த  வெற்றி பறிபோனது.
1.      أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَهُمْ فِي مَوْضِعٍ ثُمَّ قَالَ احْمُوا ظُهُورَنَا فَإِنْ رَأَيْتُمُونَا نُقْتَلُ فَلَا تَنْصُرُونَا وَإِنْ رَأَيْتُمُونَا قَدْ غَنِمْنَا فَلَا تَشْرَكُونَا فَلَمَّا غَنِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَاحُوا عَسْكَرَ الْمُشْرِكِينَ أَكَبَّ الرُّمَاةُ جَمِيعًا

ஹுனைன் யுத்தத்தின் போது கிடைத்த பெரும் பெருட்செல்வத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா வாசிகளிடையே பங்கு வைத்த போது அவசரப் பட்ட சில அன்சாரி இளைஞர்கள் பெருமானார் தங்களை கவனிக்கவில்லை. ஊர்க்காராராகிவிட்டார் என்று பேசிவிட்டனர்.
فأعطى أبا سفيان بن حرب أربعين أوقية ومائة من الإبل فقال: ابني يزيد؟ فقال: (أعطوه أربعين أوقية ومائة من الإبل)، فقال: ابني معاوية؟ قال: (أعطوه أربعين أوقية ومائة من الإبل)، وأعطى حكيم بن حزام مائة من الإبل، ثم سأله مائة أخرى فأعطاه، وأعطى النضر بن الحارث بن كلدة مائة من الإبل، وأعطى العلاء بن حارثة الثقفي خمسين، وأعطى العباس بن مرداس أربعين، فقال في ذلك شعراً، فكمل له المائة، ثم أمر زيد بن ثابت بإحصاء الغنائم والناس، ثم فضها على الناس فكانت سهامهم لكل رجل أربعاً من الإبل وأربعين شاة، فإن كان فارساً أخذ اثني عشر بعيراً وعشرين ومائة شاة ) زاد المعاد:  الرحيق المختوم: (

فعَنْ أَنَسٍ -رضي الله عنه- أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ -صلى الله عليه وسلم- غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَأَعْطَاهُ إِيَّاهُ، فَأَتَى قَوْمَهُ فَقَالَ: أَيْ قَوْمِ: أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطَاءً مَا يَخَافُ الْفَقْرَ، فَقَالَ أَنَسٌ: إِنْ كَانَ الرَّجُلُ لَيُسْلِمُ مَا يُرِيدُ إِلَّا الدُّنْيَا، فَمَا يُسْلِمُ حَتَّى يَكُونَ الْإِسْلَامُ أَحَبَّ إِلَيْهِ مِنْ الدُّنْيَا وَمَا عَلَيْهَا

قد تأثر حدثاء الأنصار من هذا العطاء بحكم طبيعتهم البشرية وترددت بينهم مقالة، حتى قال قائلهم لقي والله رسول الله صلى الله عليه وسلم- قومه،

அவர்களது அந்த அவசரத்தால் பெருமானார் (ஸல்) அவர்கள் கோபமடையவில்லை. அது தான் அன்சாரிகளின் அதிர்ஷ்டம்பெருமானார் (ஸல்) அவர்கள் அவசரப் பட்டு விடவில்லை மனிதர்களின் இயல்பான சுபாவம் அது என்று எடுத்துக் கொண்டு நிதானமாக அவர்களுக்கு தனது திட்டத்தை கூறினார்கள்..

أتاهم رسول الله -صلى الله عليه وسلم-، فحمد الله وأثنى عليه بما هو أهله، ثم قال:

لَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ أَنْ يَذْهَبَ النّاسُ بِالشّاءِ وَالْبَعِيرِ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللّهِ إلَى رِحَالِكُمْ؟ فَوَاَلّذِي نَفْسُ مُحَمّدٍ بِيَدِهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمّا يَنْقَلِبُونَ بِهِ، وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَءًا مِنْ الْأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النّاسُ شِعْبًا وَوَادِيًا، وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا وَوَادِيًا لَسَلَكْتُ شِعْبَ الْأَنْصَارِ وَوَادِيَهَا، الْأَنْصَارُ شِعَارٌ وَالنّاسُ دِثَارٌ5، اللّهُمّ ارْحَمْ الْأَنْصَارَ وَأَبْنَاءَ الْأَنْصَارِ، وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِ) فبكى القوم حتى أخضلوا لحاهم وقالوا: رضينا برسول الله -صلى الله عليه وسلم- قسماً وحظاً،

அவசரப் படுதல் எந்த இடத்தை கூட பாதித்து விடும் என்பதற்கும் நிதானம் எத்தகைய சூழலையும் அடியோடு மாற்றியமைக்கும் என்பதற்கும் இது அற்புதமான ஒரு உதாரணமாகும். ;
நல்ல விசயங்களில் கூட அவசரப்படுதல் தப்பான முடிவுகளுக்கு காரணமாகிவிடும் என்பதனாலே அவசரப் படுதல் குறித் கடும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. .
மக்களை பின்னால் விட்டு விட்டு தன்னைச் சந்திக்க முந்தி வந்த மூஸா அலை அவர்களை ஏன் அவ்வாறு செய்தீர்கள் என அல்லாஹ் கேள்வி கேட்டான்.

அவர் அவசரப் பட்டதில் மக்களை தான் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.
இந்த அவசரத்தினால் மூஸா அலை அவர்கள் கோபமடைய நேர்ந்தது என்பது மட்டுமல்ல. சமூதாயத்தில் சிலர் வழி தவறிப்போகிற சந்தர்ப்பமும் ஏற்பட்டதை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் அவசரப்படுவதை மனிதனை இழிவு படுத்துவதையே இலக்காக கொண்ட சைத்தானிய குணம் என்றார்கள்/
·        وقال عليه الصلاة والسلام: (التأني من الله، والعجلة من الشيطان

العجلة من الشيطان  என்பதற்கு இப்னுல் கய்யும் அல்ஜவ்ஸீ கூறும் விளக்கம்.

قال ابن القيم- خفة وطيش وحدة في العبد، تمنعه من التثبت والوقار والحلم، وتوجب وضع الشيء في غير محله، وتجلب الشرور، وتمنع الخيور. وهي متولدة بين خلقين مذمومين: التفريط والاستعجال قبل الوقت
மனிதனிடமிருக்கிற அலட்சியம் பதற்றம் கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடு தான் அவசரம். இந்த இயல்பு மனிதனிடம் இருக்க வேண்டிய உறுதி கம்பீரம் பொறுமையை தடுத்துவிடுகிறது. நியாயமில்லாத வழிகளில் செயல்பட தூண்டு கிறது. தீமைகளை கொண்டு வருகிறது. நன்மைகளை தடுத்துவிடுகிறது. அவசரம் என்பது எல்லை மீறுதல் காலம் கனிவதற்குள்ளாக முந்திக் கொள்ள முயற்சித்தல் எனும் இரு தீமைகளிலிருந்து பிறக்கிறது.

மனிதனை தாழ்வு படுத்துகிற எல்லா அம்சங்களும் அவசரத்தில் இருக்கிறது என்பதால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் அவசரம் சைத்தானி குணம் என்றார்கள்.

وقال عمرو بن العاص: لا يزال المرء يجتني من ثمرة العجلة الندامة.

அவசரப்படுதலின் முடிவை கவலையாகவே மனிதர்கள் பெற்றுக் கொள்வார்கள் என அம்ரு பின் ஆஸ் ரலி கூறினார்கள்

அவசரத்திற்கான தீமையை பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படியும் உணர்த்தினார்கள்
அவசரப் படாதவரை மக்களின் துஆ ஏற்கப்படும்.

يستجاب للعبد ما لم يستعجل

இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தகவல் அவசரம் என்பதன் பொருள் நேரம் வருதற்கு முன் அல்லது ஒரு காரியம் நிறைவடைவதற்கு முன் அதற்கு முந்துவதாகும்

ஒரு காரியத்திற்கு அதற்குரிய நேரம் வந்த பிறகு அவசரம் காட்டுவது போட்டியிடுவதாகும்இது வரவேற்கத்தக்கது.

எனவே ஹதீஸ்களிலும் மற்ற அறிவுரைகளிலும் அவசரம் காட்டுமாறு செய்யப்படுகிற அறிவுரைகளை இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் கணிந்த பிறகு முந்தியிருத்தம் என்பது போட்டியிடுதலாகும் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் தொழுவது போல

தொழுகையின் நெரம் வருதற்கு முன்னரே தொழுவது அவசரப்படுதலாகும்

இமாம் தக்பீர் சொன்ன பிறகு உடனே  தலை உயர்த்துவது அல்லது குனிவது  கட்டாயமாகும். இமாமின் செயலுக்கு முந்திச் செல்வது அவசரப்படுதலாகும்

பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்

 : أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار. . الترمذي

·         ஜமாத் தொழுகைக்கு வரும் போது அவசரம் கூடாது,
·         ஜும் வில் இமாம் மின்பரிலிருந்து இறங்குவதற்கு முன் அவசரம் காட்டக் கூடாது.
·         இகாமத் சொல்லும் போது எப்போது மக்கள் எழுந்திருக்க வேண்டும் என்பதில் இமாமகளிடம் கருத்து வேறு பாடு உண்டு எனினும் இகாமத்திற்கு முன்பே எழுவது சரியல்ல.

اختلف أهل العلم رحمهم الله تعالى في الوقت الذي يقوم فيه المأموم للصلاة على أقوال ذكرها النووي رحمه الله في المجموع (3/233) وهي كما يلي :
القول الأول : يقوم إذا شرع المؤذن في الإقامة ، وبه قال عطاء والزهري
القول الثاني : يقوم إذا قال : حي على الصلاة , وبه قال أبو حنيفة .
القول الثالث : يقوم إذا فرغ المؤذن من الإقامة ، وبه قال الشافعي .

ولم يقل أحدٌ من أهل العلم فيما نعلم بمشروعية القيام قبل أن يشرع المؤذن في الإقامة، وأما القول بتحريمه فلا يظهر، والظاهرُ أنه خلاف الأولى والأفضل

சாப்பாட்டிலும் கூட  அவசரம் கூடாது

و كان رسول الله (صلى الله عليه وسلم) يحمد الله بين كل لقمتين ( يكثر من حمد الله عز و جل) 


என்வே மார்க்கத்தின் இந்த உறுதியான வழிகாட்டுதல்களின்  படி எந்தக்காரியத்திலும் அவசரப் படுதல் கூடாது . மாற்றமாக நிதானத்தையே கடை பிடிக்க வேண்டும்.

 பொறுத்தார் பூமியாள்வார் என்ற முதுமொழி உண்மையே

·         وقال رسول الله -صلى الله عليه وسلم- لأشج عبد القيس: (إن فيك خصلتين يحبهما الله، الحلم والأناة

·         وعن عبد الله بن سرجس المزني أن النبي -صلى الله عليه وسلم- قال: (السمت الحسن، والتؤدة  –)أي التأني وترك العجلة- (والاقتصاد جزء من أربعة وعشرين جزءاً من النبوة



அவசரப்படுதலுக்கு மாற்றமாக நிதானத்தை கடை பிடிக்க வேண்டும் என்று உபதேசிக்கிற இஸ்லாம் கூடவே இன்னொரு அறிவுரைரையையும் தருகிறது.

தாஹா அத்தியாயத்தின் 84 வது வசனத்தில் குர் ஆன் ஓதும் போது அவசரப்படாதீர் என்று மட்டும் சொல்லாமல் பெருமானாரின் கவலைக்கு வேறு ஒரு மருந்தையும் அல்லாஹ் சொன்னான்.
அவசரப்படாதீர்கள் ரப்பிடம் அறிவின் விசாலத்தை கேளுங்கள்/
என்ன அருமையான வழிகாட்டுதல்?
அவசரப் படாமல் இருக்க என்ன வழி ?
அதற்கு அல்லாஹ்வின் உதவியும் அறிவின் பயன்பாடும் மிக முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.
பெருமானர் (ஸ்ல்) அவர்கள் கோபப்பட வேண்டிய பல கட்டத்திலும் அவசரப் பட்டு கோபம் காட்டி விடாமல் நிதானம் காட்டியது குறித்து அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து பேசுகிறான்.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அப்போது அல்லாஹ்வின் கிருபயால் தான் இது சாத்தியமாயிற்று  என்று கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
எனவே வாழ்க்கையில் அவசரப்பட்டு தப்பு செய்து விடாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணம் இருக்க வேண்டும். அதற்கேற்ற போதுமான அறிவை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.
பிரச்சனைகளை எதிர்கொள்ள போதுமான அறிவை திரட்டிக் கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.
ஒரு பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியாத கட்டத்தில் தான் அறிவாளிகள் கூட அவசரப் பட்டு விடுகிறார்கள்.
ஒரு மிஷின் கெட்டுப் போய்விட்டது. அதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றாலும் அவசரப்பட்டு யாரிடமாவது ரிப்பேருக்கு கொடுத்து விட்டால் மிஷினே பயன்படாமல் போய்விடும்.
ஒரு பெரிய தொழிற்சாலையில் ஒரு மிஷின் கெட்டுப் போய்விட்டது, வல்லுனரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்தார்கள். மிஷினை ஒரு முறை சுற்றிப் பார்த்து ஆராய்ந்த அவர் ஒரு சுத்தியலை கொண்டு வரச்சொல்லி மிஷினின் முதுகில் இலேசாக தட்டினார். மிஷின் இயங்கியது , இதற்காக அவர் 10 ஆயிரம் டாலர் சமபளம் கேட்டார். ஒரு சின்ன தட்டுக்கு 1 0 ஆயிரமா என்று ஊழியர்கள் கேட்டார்கள். சிறு தட்டுக்கு அல்ல. எங்கு தட்ட வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்ததற்காக 10 ஆயிரம் என்று அவர் சொன்னார்/
எந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணவும் அதற்கு தேவையான அறிவு அவசியம்.
·         காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்டங்களை பற்றிய அறிவு அவசியம்.
·         இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பிரச்சனைக்கு சுற்றுச் சூழல் அறிவு அவசியம்.
·         குடும்ப ரீதியான பிரச்சனைகளுக்கு மக்களின் மனோ உணர்வை பற்றி அறிந்திருப்பது அவசியம்.
·         சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு கலை பண்பாடு குறித்த அறிவு அவசியம்.
·         மார்க்க ரீதியான பிரச்சனைகளுக்கு மார்க் அறிவு அவசியம்.

ஒவ்வொன்றுக்கும்ன் துறை சார்ந்த அறிவின் தெளிவு இருக்கும் எனில் நாம் அவசரப் பட மாட்டோம்.

எனவே எந்த ஒரு விவகாரத்திலும் அவசரப் படக் கூடாது, அவசரப் பட்டால் காரியம் கெட்டுப் போகும்.
சில சந்தர்ப்பத்தில் பிறகு சரி செய்ய முடியாத அளவு கெட்டுப் போகும்;

நிதானத்தையும் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
அதற்காக அல்லாஹ்வின் உதவியையை கையேந்தி நிற்க வேண்டும்.











3 comments:

  1. வாழ்த்துக்கள்.தெளிந்த, பண்பட்ட சிந்தனையால் வெளிவந்த வார்த்தைகள்.இப்படி சொல்வதில் எந்த அவசரமும் நான் காட்ட வில்லை.

    ReplyDelete