வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 23, 2017

எல்லை மீறாதே!

திருக்குர் ஆன் மக்களுக்குச் செய்யும் எச்சரிக்கைகளில் ஒன்று
எல்லை மீறக் கூடாது! .எது விசயத்திலும்!
அதிகப்படியான மமதை அல்லது அசட்டுத்துணிச்சல் ஆகிய இரண்டு குணங்கள் மனிதர்களை எல்லை மீற வைக்கின்றன.
என்னை உங்களால என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவம் கொண்ட மனிதர்கள் பிறரது விவகாரங்களிலும் பொது விவகாரங்களிலும் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள்.
அமெரிக்க அரசின் இரண்டு நடவடிக்கைகளை உதாரணமாக கூறலாம்.  
சிரியா ஈரான் இராக் சோமாலியா சூடான் லிபியா ஏமன் ஆகிய 7 நாடுகளின் முஸ்லிம் பயணிகளுக்கு தடை என்று சொன்னவர்கள் இப்போது எகிப்து சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம் கத்தார் ஜோர்டான் மொரோக்கோ துருக்கி ஆகிய
8 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் லாப்டாப் டேப்லட் போன்றவற்றை அமெரிக்க விமானங்களில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என தடை விதித்திறார்கள்

தொடர்ந்து அமெரிக்கா முஸ்லிம் நாடுகளின் பயணிகளிகளின் உரிமையை பறித்து எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறது. இது அகம்பாவத்தின் உச்சமாகும்.
அசட்டுத் துணிச்சலிலும் எல்லை மீறுதல் நடக்கலாம்.
வாகனங்களில் செல்லும் போது சாலை நடை முறைகளை மீறுகிற பலரும் தவறாக எதுவும் நடந்து விடாது என்ற அசட்டு துணிச்சலில் எல்லை மீறுகிறார்கள்.
இதனால் எல்லாம் என்ன வந்து விடப்போகிறது ?  என்ற மனோ நிலையோடு நீதி தவறுவதில் நேர்மைக்கு மாறாக நடப்பதில் மக்கள் பல இடங்களிலும் எல்லை மீறுகிறார்கள். இதற்கான ஏராளமான உதாரணங்களை நமக்கு நாமே தேடிக் கொள்ளலாம்.
இதில் எதுவும் அல்லாஹ்வுக்கு பிடித்தமானது அல்ல,
எல்லை மீறீச் செல்கிற எவருக்குமான  எச்சரிக்கையாக.
ஒரு கட்டத்தில் மிக கடுமையாக அதே நேரத்தில் எளிதாக  அல்லாஹ் நம்மை சோதித்து விடுவான்.
பிர் அவ்ன் பல கட்டத்திலும் எல்லை மீறி நடந்து கொண்டான். மூஸா அலை அவர்கள் வெளிப்படுத்திய 10 விதமான அத்தாட்சிகளை பார்த்த பிறகும் அவன் திருந்த வில்லை. அவனுடைய உச்ச பட்ச எல்லை மீறல் எது தெரியுமா ? செங்கடல் பிளந்து யூதர்களுக்கு வழி விட்ட போது அவன் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும்.  பேராச்சரியமான ஒரு நிகழ்வில் யூதர்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள், சரி அவர்கள் தப்பித்து  போகட்டும் என பிர்அவ்ன் பின்வாங்கியிருந்தால்  அவனும் அவனது படை வீரர்களும் அவனது அரசும் தப்பி இருக்கும் . யூதர்களுக்கு அவன் செய்த இத்தனை அக்கிரமங்களுக்கும் மேலாக இனியும் அவர்களை அழித்து விட வேண்டும் என அவன் கடலில் இறங்கியது அவனது பெரும் எல்லை மீறலாகி விட்டது. மிக எளிதாக அந்தப்பேரர்சை அல்லாஹ் அழித்தான். தண்ணீர் வழி விடுவது தான் சிரமமானது. அது திரும்ப மூடிக் கொள்வது எளிதானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடக்கூடியது,
குர் ஆன் கூறுகிறது.
 وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا 

பிர் அவ்ன் கடலில் இறங்கியதை بَغْيًا وَعَدْوًا  எல்லை மீறுதல் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இது எல்லோருக்காமான எச்சரிக்கை தான். ஒரு தடவை இரண்டு தடவை ஏன் பல தடவைகளில் எல்லை மீறும் போது எதுவும் நடக்க வில்லை என்று நினைத்தால் அது ஏமாளித்தனமாகும்.
கடைசி ஒரு தடவையில் ஏதாவாது நடந்து விடும் எனில் அதை உணரும் சக்தி கூட மனிதனுக்கு இருக்காது.

அதனால் தான் திருக்குர் ஆன் பல இடத்திலும் எல்லை மீறுதலை கண்டிக்கிறது,
யுத்த களத்திலும் கூட எல்லை மீறக் கூடாது என எச்சரிக்கிறது,
யுத்த களத்தில் பொதுவாக நியதிகள் கவனிக்கப்படாது.  எந்த இராணுவமும் கட்டுப்பாடக நடந்து கொள்ளாது. ஆனால் இஸ்லாம் இராணுவத்திற்கும் யுத்த களத்திலும் பெரும் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது, களத்திலும் கூட எல்லை மீறக்கூடாது என அறிவுறுத்தியது,
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (190)


எல்லை மீறுதலில் மூன்று வகை
1.   அல்லாஹ் விவகாரத்தில்
2.   தனது சொந்த விவாகாரங்களில்
3.   பிறர் விவகாரங்களில்
மூன்றிலும் எல்லை மீறுதல் கூடாது.

அல்லாஹ் விவகாரங்களில் எல்லை மீறுதல் என்றால் என்ன ?

அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறி அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்ய பலவீனமான மனிதர்களுக்கு சக்தி கிடையாது.

எத்தகைய வன்மத்தோடு அல்லாஹ்வின் விவகாரத்தில் நடந்து கொண்டாலும் அதனால் அல்லாஹ்வுக்கு சிறு பாதிப்பும் ஏற்படாது.

عن أبي ذر الغفاري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم، فيما روى عن الله تبارك وتعالى في الحديث القدسي أنَّ الله جل جلاله قال: ((يا عبادي، إنكم لن تبلغوا ضـري فتضـروني، ولن تبلغوا نفعي فتنفعوني، يا عبادي، لو أن أولكم وآخركم، وإنسكم وجنكم، كانوا على أتقى قلب رجل واحد منكم، ما زاد ذلك في ملكي شيئًا، يا عبادي، لو أن أولكم وآخركم، وإنسكم وجنكم، كانوا على أفجر قلب رجل واحد، ما نقص ذلك من ملكي شيئًا...


எல்லை மீறுதல் மூலம் அல்லாஹ்விற்கு தீங்கு செய்ய முடியாது என்றாலும் அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கும் அந்தஸ்திற்கும் மாற்றமாக நடந்து கொள்வது எல்லை மீறுதலாகும் . அது மனிதன் தனக்குத்தானே இழைத்துக் கொள்ளும் தீங்காகும்.

அல்லாஹ்வை பற்றிய சரியான நம்பிக்கை இன்மையால் அல்லது அறியாமையால் மக்கள் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுகிறார்கள்.

எதற்கும் தன்னிடம் கேட்குமாறு அதுவும் பணிந்து அச்சடக்கத்தோடு கேட்குமாறு அல்லாஹ் கூறுகிறான்.

 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ 

இறைவனிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைப்பதும், கேட்டால் என்ன அவன் உடனே கொடுத்து விடுகிறானா என நினைப்பதும் எல்லை மீறும் சிந்தனையாகும்.

وعن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إنه مَنْ لم يَسألِ الله يغضب عليه- الترمذي

وعن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما، قال رسول الله صلى الله عليه وسلم: ((القلوب أوعية، وبعضها أوعى من بعض، فإذا سألتم الله عز وجل - أيها الناس - فاسألوه وأنتم موقنون بالإجابة؛ فإن الله لا يستجيب لعبد دعاه عن ظهر قلب غافل)) مسند أحمد

வணக்க வழிபாடுகளில் மார்க்கம் குறிப்பிட்ட அளவை மீறிச் செல்வது எல்லை மீறுதலாகும்.

அப்துல்லாஹ் பின் அம்ருப் பின் ஆஸ் ரலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரை நல்ல விசயங்களில் கூட எல்லை மீறுதலை தடுக்கும் ஒரு முக்கிய மான வழிகாட்டுதலாகும்., இஸ்லாத்தின் சத்திய தன்மைகான சான்றுகளில் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் அந்தஸ்திற்கும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்களுக்கும் மாற்றமான சிந்தனை கொள்வதும் கருத்துப் பேசுவதும் எழுதுவதும் அல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல் ஆகும்.
·         இஸ்லாமிய தண்டனைகள்
·         இஸ்லாமிய பெண்ணிய கோட்பாடுகள்
·         திருமணம் போன்ற சமுக உறவுகள் குறித்த இஸ்லாமிய வரையறைகள்
·         சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு பேதைப் பெண் இஸ்லாமிய தலாக் சட்டத்தை அது அந்தக் காலத்து நலலவர்களுக்கு உரியது இந்தக் காலத்து தீயவர்களுக்கு பொருந்தாது. மாற்றுங்கள் என்று கோரியது  என்பது போன்ற பேச்சுக்கள்.
·         இஸ்லாமின் உறுதியான் சட்டங்களை தமது சுய கருத்தின் அடிப்படையில் இது குர் ஆனுக்கு எதிரானது என்று பேசுவது போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ் விசயத்தில் எல்லை மீறுதல்கள் ஆகும்,
இந்த எல்லை மீறுதல்கள் அகம்பாவத்தின் அடிப்படையில் நடை பெற்றாலும் சரி அசட்டுத்துணிச்சலில் நடை பெற்றாலும் சரி. அது தவறானதே!

புத்தி ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்வோர் அல்லாஹ்விற்கு எதிரான இந்த எல்லை மீறுதல்களை அடிப்படை உரிமை என்று நினைப்பார்கள் எனில் இஸ்லாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை,

ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه و هو في الآخرة من الخاسرين ) .[2]

தேச விரோதக் கருத்துக்கள் எப்படி சுதந்திரத்தின் பெயரால் அல்லது அடிப்படை உரிமை என்று அனுமதிக்க முடியாதோ அதே போல இஸ்லாம் தான் உருவாக்கிய சமூக அமைப்புக்குள் தனக்கெதிரான கருத்துக்களை அனுமதிப்பதில்லை மறுக்க முடியாத ஒரு நியாயமாகும்.

அல்லாஹ்விற்கு எதிரான எல்லை மீறுதல்களால அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடாது என்றாலும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிற சமூக கட்டமைப்பில் அது சிக்கலையும் சலனத்தையும் ஏற்படுத்தவே செய்யும். சமூக கட்டமைப்பை அது உடைத்துவிடும். எனவே இத்தகைய செயல்களை குற்றச் செயல்களாகவே இஸ்லாம் பார்க்கிறது.

இஸ்லாமிய அரசு நடை முறையில் இருக்குமானால் இத்க்தகைய குற்றங்களுகான தண்டனைகள் வழங்கப்படும்.

சில இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய மத நிந்தனை சட்டங்கள் அமுலில் இருக்கிறது என்பது மட்டும் அல்ல, இங்கிலாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய மத நிந்தனை சட்டம் அமுலில் இருக்கிறது,

காரணம் சமூக அமைதியை பாதுகாகக் வேண்டும் என்பதற்காகவே!

எல்லை மீறுதலில் இரண்டாவது  வகை தனது சொந்த விவகாரங்களில் எல்லை மீறுவதாகும். அதுவும் கூடாது தான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ [المائدة: 87

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருக்கலாம். ஆணால் அதை சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.  அதை எல்லை மீறிய செயல் செயல் திருக்குர் ஆன் குறீப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال: «من تردَّى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردَّى فيها خالداً مخلَّداً أبداً، ومن تحسَّى سُمّاً فقتل نفسه فسُمُّه في يده يتحسَّاه في نار جهنم خالداً مخلَّداً فيها أبداً، ومن قتل نفسه بحديدة فحديدته في يده يتوجَّأ بها (يضرب بها نفسه) في نار جهنم خالداً مخلَّداً فيها أبداً»
எல்லை மீறுதலில் மூன்றாவது வகை பிறர் விசயத்தில் எல்லை மீறுவதாகும்.

இந்த மூன்று வகை எல்லை மீறுதலில் இந்த மூன்றாவது வகையை மிக கடுமையானதாக இஸ்லாம் கருதுகிறது,

அந்த வகையில் தான் யுத்த களத்தில் கூட எல்லை மீறக் கூடாது என இஸ்ளாம் அறிவுறுத்தியுள்ளது,

وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ [البقرة: 190







பெண்கள் போன்ற பலவீனமான பிரிவினருக்கு எதிரான எல்லை மீறல்களை திருக்குர் ஆன் கடுமையாக கண்டித்துள்ளது, சில சந்தர்ப்பங்களில் தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது .

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ 

நன் கையில் இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும் பெரும் எல்லை மீறலாகும்.

கோவையில் நாத்திக கருத்துக் கொண்டிருந்தார் என்பதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டிருக்க்றார் என்ற செய்தி கடந்த ஒருவாரமாக பரபரப்பாக இருக்கிறது.

உண்மையில் அப்படி நடந்திருக்குமானால் அது மிகப்பெரிய எல்லை மீறுதலாகும்.

கொலை என்பது அசாதாரணக் குற்றம்

قد خطب رسول الله صلى الله عليه وسلم  في حجَّة الوداع فقالأيُّها الناس! إن دماءكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا، ألا هل بلَّغت؟ اللهمَّ فاشهد» (متفق عليه)

 فقد روى البخاري عن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من قتل مُعاهَداً لم يَرِحْ رائحة الجنَّة وإن ريحها توجد من مسيرة أربعين عاماً».

ஒரு கொலை பல்வேறூ பட்ட சமூக குழப்பங்களுக்கு காரணமாகி விடும்.

إن القتل يُشيع الفساد والخراب في البلاد، قال تعالى: {ولا تُفسدوا في الأرض بعد إصلاحها..} (7 الأعراف آية 56). ولو أنه أُبيح؛ لفتكَ القويُّ بالضعيف واختلَّ الأمن،وأصبحت الحياة حِكْراً على الأقوى والأغنى.

தனி மனித பகை காரணமாக கொலை நடந்தாலே அது தொடர்ச்சியான ஒரு சமூக அமைதியின்மைக்கு காரணமாகிவிடும் பல்வேறூ சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

எங்காவது ஒரு இடத்தில் ஆக்ஸிடெண்டில் ஒரு மனிதர் இறந்து போவார் எனில் அந்த இடத்தையே காவல் துறை Fatal Aria என்று குறிப்பிட்டு அபாயப் பகுதியாக அறிவிப்பதை பார்த்திருப்பீற்ர்கள்.
மனிதர்களின் கோப தாபங்களால் ஒரு கொலை நடை பெறும் என்றால் அது பூமியில் குழப்பமான பகுதி என்பதற்கான அடையாளம் என திருக்குர் ஆனிய சிந்தனையாளர்கள் குறிப்பிடுவார்கள்  அந்தக் கொலைக்கு பின்னர் என்ன வெல்லாம் நடக்க கூடும் என்பது நம்முடைய கறபனைக்கு அப்பாற்பட்டது,
ஆஸ்திரிய இளவரசர் செர்பியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு நிகழ்வு தான் முதல் உலக யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது.
 (அல்லாஹ் நமது நாட்டையும் மஹல்லாக்களையும் பாதுகாப்பானா! 

சண்டை பகை போன்ற காரணங்களால் ஏற்படும் கொலைகளோ சமூகத்தில் பெரும் சிக்கல் களை கொண்டு வந்து சேர்த்து விடும் என்கிற போது

தனிமனிதர்கள் அதிகாத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுத்தும் கொலைகள் மகா அக்கிரமங்களை அரங்கேற்றி விடும்.

தனி மனிதர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் போது அவர்கள் செய்கைக்கு ஒரு நியாயத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

ஆனால் எச்சரிக்கை இது போன்ற போக்கு தான் யூதர்கள் நபிமார்களையே கொலை செய்யும் அளவுக்கு அழைத்துச் சென்றது.

கோவையில் நடை பெற்ற படு கொலை சமய் நோக்கில் நடந்திருக்குமானாம் உண்மையில் பெரும் குற்றவாளிகள் இக்கொலை செயலில் ஈடுபட்ட வர்களே ஏனெனில் இவர்கள் சமயத்தையும் இழிவு படுத்தியுள்ளார்கள்> சமூகத்தையும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளார்கள்.

பாரூக் எனும் இளைஞன் சொந்த தகறாறில் கொளை செய்யப்பட்டிருந்தால் அது கவலைக் குரியது

சமயக் காரணம் கூறி கொலை செய்யப் பட்டிருந்தால் அது மிக மிக கவலைக்குரியது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை போன்ற மிருகங்கள் மிக ஆபத்தானவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள தமக்கு தாமே ஒரு நியாயத்தை கற்பித்து கொள்பவர்கள் நபிமார்களை கொல்வதற்கும் தயங்காத பாவிகள் ஆவார்கள்.

சமுதாயம் இந்தகைய செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் இக்கொலை சமய நோக்கத்தில் தான் செய்யப்பட்டதா என்பதை தெளிவு படுத்து மாறு காவல் துறையை முஸ்லிம்கள் வலியுறுத்தவும் வேண்டும். அப்படியானால் யார் இவர்கள் என்கிற தகவல்களை காவல்துறையிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே இக்கொலை சமயக்காரணத்திற்காகத்தான நடந்ததுள்ளதா என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து  தெரிவிக்க வேண்டும்

நாட்டுமக்களுக்குள் பல் வேறு பட்ட கருத்துக்கள் உருவாகி சமூக சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என்கிற போது ஒரு கொலை தொடர்பான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டியது காவல் துறையின் சமூக கடமையாகும்.

ஆணால் இந்த சமூக கடமையை சமீப காலமாக காவல்துறை சுத்தமாக மறந்து விட்டது ,

கோவையில் சசிகுமார் எனும் இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் சரி. இப்போது பாரூக் என்ற இளைஞன் கொல்லப்பட்ட விவகாரத்திலும் சரி காவல் துறை கொலைக்கான மோட்டிவ் குறீத்த தகவல்களை வெளியிட வே இல்லை,

இது சமூகத்தில் தேவையற்ற சலனங்களை தொடர்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இப்போது பாரூக் கொலை வழக்கில் பலர் சரணடைந்திருக்கிற நிலையில் பாரூக்கின் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து மெனனம் காப்பது முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள்ளாக்குவதை ஒரு அஜண்டாவாக தமிழக காவல் துறை கொண்டிருக்கிறது என்றே கருத வைக்கும்.

முஸ்லிம் இளைஞர்கள் மார்க்கத்திற்கு முரணான போக்கிற்கு செல்வதிலிருந்து பாதுகாக்க ஜமாத்துக்கள் அக்கறை செலுத்த வேண்டும்,

குறைந்த பட்சம் அத்தகையோர் தமது கருத்துக்களை வெளிப்படையாக சர்ச்சை செய்வதிலிருந்து விலகி நிற்குமாறு உத்தரவிட வேண்டும்

மார்க்கத்திற்கு எதிரான சர்ச்சையை வெளிப்படையாக செய்வோர் நமது சமூக அமைப்பிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அத்தகையோருக்கு நமது பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகைக்கு உரிமை கோர முடியாது நமது கபரஸ்தானுக்கும் உரிமை கோர முடியாது என்ற எச்சரிகைகள் செய்வது சிலர் தமது கருத்தால் சமூகத்திற்குள் குழப்பம்
ஏற்படுத்துவதை தடுக்க முடியும். தேச விரோககருத்துக்கள் பேசப்படுவதை நாம் அனுமதிக்காதது போல சமய விரோதக் கருத்துக்கள் பேசப்படுவதை ஜமாத் அனுமதிக்காது என்பதை முன்னரே தெளிவபடுத்தி விடுவது அனைவருக்கும் ஒரு தேவையான எச்சரிக்கையாக அமையும்.

எந்த விசயத்திலும் எல்லை மீறுதல் ஆகாது. அது அல்லாஹ்விற்கு பிடிக்காது,

அந்த எல்லை மீறுதல்களை ஏதாவத் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ் பிடித்து விடுவான், பிர் அவ்னை அழித்தது போல. அப்போது அகம்பாவத்தால் எல்லை மீறீயவர்களும் அசட்டு தைரியத்தால் எல்லை மீறியவர்கள் விக்கித்து நிற்க நேரிடும்.



















1 comment: