வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 12, 2023

தேச ஒற்றுமைக்காக ஒன்று கூடுவோம்

 மனிதர்களான நம்மில் யாரும் தனியாக வாழ்ந்து விட முடியாது.

மனிதன் ஒரு சமூக விலங்கு.

விவசாயியின் துணை இல்லாமலும் நெசவாளியின் உதவி இல்லாமலும், உழைப்பாளர்களின் உறபத்திகள் இல்லாமலும் முதலாளிகளில் தயாரிப்புகள் இல்லாமலும் எந்த மனிதனாலும் வாழ முடியாது. 

 ஒரு சமூகமாக நிம்மதியாக வாழ வேண்டுமெனில் பரஸ்பரம் ஒன்றினைந்தும் ஒத்துழைத்தும் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

 ஒற்றுமை என்பது இருந்தால் நல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும் அம்சமல்ல. கட்டாயம் இருந்தாக வேண்டிய ஒரு அம்சமாகும்.

 அதனால் திருக்குர் ஆன் வலியுறுத்துகிறது.

وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعاً وَلاَ تَفَرَّقُواْ» (سورة آل عمران: 103). 

 قيل ( بحبل الله ) أي : بعهد الله

அல்லாஹ்வின் ஏற்பாட்டை  கொண்டு நீங்கள் ஒன்றுபடுங்கள் உங்களது அபிப்பிராயங்களால் பிளவு பட்டுவிடாதீர்கள் என்று ஒரு அர்த்தம் இதற்கு இருக்கிறது

மிக அருமையான கருத்து இது. மனித வாழ்க்கை அமைப்பை ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்த்தாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அந்த ஏற்பாட்டை கவனித்தாலே ஒன்றுபட்டு நிற்கும் அவசியம் புரிந்து விடும்.

இந்துக்கள் செய்யும் விவசாயம் வேண்டாம் என்றோ கிருத்துவர்கள் தருகிற கல்வி வேண்டாம் என்றோ முஸ்லிம்களிடமிருந்து கிடைக்கும் பண்புகள் தேவையில்லை என்றோ யாரும் விலகிச் சென்றுவிட முடியாது.

மற்றவர்களோடு எவ்வளவு தூரம் இணங்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் இணங்கிச் செல்லவது என்று முடிவெடுத்தால் மட்டுமே வாழ்கையில் முன்னேற முடியும் என்று இப்போதையை தலைமைத்துவ வழிகாட்டிகள் வலியுறுத்துகிறார்கள். தொழிலாளிகள் முதலாளிகள் ஆட்சியாளர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் இது பொருந்தும்.

ஒரு கம்பெனியின் போர்டு மீட்டிங்கில் நீங்களும் எதையாவது பேச வேண்டும் என்று நினைக்காமல் உங்களுக்கு முன்னால் பேசியவரின் கருத்தில் உடன்படுகிறீர்கள் என்றால் அவரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன் என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். உங்களது கருத்துக்கு வலு தானாக சேர்ந்து விடும் என்பது மட்டுமல்ல. உங்களுக்கு அவர் நண்பராகியும் விடுவார். நாளை நீங்கள் ஒரு கருத்தை சொன்னால் அதற்கவர் முரண்பட தயங்குவார்  என்று கற்றுக் கொடுக்கிறது தலைமைத்துவ வகுப்புகள்.

 

ஒன்று படுவதற்கான வழிகளை யோசிப்பதை விட வெற்றிக்கான சிறந்த வழி வேறு இல்லை என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்/

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழைந்த அன்று தான் இஸ்லாமிய அரசிற்கான அடிக்கல் நாட்டப்படட்து. அந்த அரசிற்கான முதல் பணி மதீனாவில் வாழ்ந்த  3 யூதக்குழுக்களோடு சமரச உடன்பாடு செய்து கொண்டதாகும்.

வரலாறு அந்த ஒப்பந்த்த்தை இப்படி வர்ணிக்கிறது.

the first written surviving constitution in the world.

சேர்ந்து வாழ்வதற்காக இந்த உலகில் எழுதப்பட்ட முதல் சாசணம்

 

அந்த ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்

யூதர்களும் முஸ்லிம்களைப் போலவே மதீனாவில் வாழும் சம தகுதி படைத் சமூகமாகும்.

முஸ்லிம்கள் அவர்கள் மதப்படியும் யூதர்கள் அவர்கள் மதப்படியும் தங்களது உடமைகளோடும் உரிமைகளோடும் வாழ்வார்கள்

ஒரு சாராருக்கு பிரச்சனை ஏற்படும் போது மற்ற சாரார் உதவ வேண்டும்.

பரஸ்பரம் அறிவுரைகளையும் நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். பாவமானவற்றை தவிர.

இருவரிலும் பாதிப்புக்குள்ளானாவருக்கு உதவ வேண்டும்.

1أن يهود بني عوف أمة مع المؤمنين، لليهود دينهم وللمسلمين دينهم، مواليهم وأنفسهم.

2- وأن على اليهود نفقتهم، وعلى المسلمين نفقتهم‏.

3- وأن بينهم النصر على من حارب أهل هذه الصحيفة‏.

4- وأن بينهم النصح والنصيحة، والبر دون الإثم‏.

5- وأنه لا يأثم امرؤُ بحليفه‏.

6- وأن النصر للمظلوم‏.

 

ஒன்றுபட்டு செல்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  செய்த் இந்த ஏற்பாடுகள் யூதர்களோடு மட்டும் நிற்கவில்லை. அண்டை அயல்புரத்தில் இருந்த அத்தனை சமூகங்களோடும் இப்படி உடன்படிக்கை செய்து கொண்டு ஒன்று பட்ட சமூகங்களின் நாடாக மதீனாவை ஆக்கினார்கள்.

மதீனாவை தலைமையிடமாக கொண்டு அமைந்த முழு இஸ்லாமிய நிலப்பரப்பும் அதில்  வாழும் அனைத்து தரப்பினரும் நிம்மதியாக வாழும் நிலமாக இருந்த்து.

 

ஜவஹர்லால் நேரு டிஸ்கவரி ஆப் இண்டியாவில் கூறுகிறார்..

உலகில் எப்போதாவது யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்றால், அது முஸ்லிம்களின் நிழலுக்கு கீழ் தான்

 

உமர் ரலி அவர்கள் பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய போது அங்கிருந்த கிருத்துவர்கள் உமர் ரலி கூறினார்கள். நங்கள் உங்களுக்கு ஒரு அனுபவ அறிவை தருகிறோம். ஜெரூசலத்திற்குள் யூதர்களை அனுமதிக்காதீர்கள். உமர் ரலி கூறினார். எங்களோடு இணங்கி வருகிற எவரையும் ஆதரிக்கவே எங்கள் நபி எங்களுக்கு கூறியிருக்கிறார் என்றார்.

 

இவ்வாறு அனைத்து மக்களோடு ஓன்றுபட்டு வாழும் சிந்தனைதான் ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களை ஒரு குடையின் கீழ் ஆளும் வாய்ப்பை முஸ்லிம்களுக்கு கொடுத்த்து.

 

எந்த நாடாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவினால் தான் அது வளம் பெறும். முன்னேற்றம் காணும்.

 

ஆப்ரிக்காவின் நைஜீரிய நாடு பொருளாதார வளம் மிக்க நாடு. பெட்ரோலும் தங்கமும் அங்கு அதிகமாக கிடைக்கின்றன. ஆனால் நைஜீரியா உலகின் அதிக வன்முறைகள் நிறைந்த பிரதேசமாக இருக்கிறது. காரணம் மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லை.

 

நம்முடைய இந்திய திருநாட்டில்  ஏராளமான  மத இன மொழி கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.

இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் உள்ளன.

1950 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இந்தியாவில் 1,108 பட்டியல் சாதிகளையும் 744 பட்டியல் பழங்குடியினங்களையும் அடையாளம் கண்டுள்ளது இதல்லாத சாதிகளின் எண்ணிக்கைகு துல்லியமான அளவு கிடையாது. இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் 6,40,000 கிராமங்கள் இருக்கின்றன.

 

இத்தனை பலவீனங்களை கடந்தும் இந்தியா உலகின் மரியாதைக்குரிய நாடாக இருக்கிறது.

 

காரணம் இங்குள்ள மக்களின் ஒற்றுமை உணர்வு

 

இந்தியா என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உருவாக்கிய நாடு என்றால் அது மிகையாகாது. .

 

1857 ல் நடைபெற்ற இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்பது இந்தியாவின் அனைத்து தரப்பிலும் தொடர்ந்து நடந்தது. ஜான்ஸீ ராணி லட்சுமி பாய், பீஹார் சிங்கம் குவார்சிங், ஹரியானா ராஜஸ்தான் மஹாராஷ்டிரா மன்னர்கள் என பலரும் இப்போராட்ட்த்தில் முஸ்லிம் வீர்ர்களோடு குறுநில மன்னர்களோடும் ஒன்று சேர்ந்து கலந்து கொண்டனர்.  இதை சாவர்கரே ஒப்புக் கொள்கிறார். எரிமலை - பக் 99)

 

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய அந்தப் போராட்ட்த்திற்கு ஒரே இலக்குதான் இருந்தது. பகதூர் ஷா ஜாபரை தில்லியின் அரியணையில் அமர்த்துவது என்பதே அது.

 

பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் முயற்சியை இந்திய மக்கள் ஒன்று பட்டு முறியடித்தனர்.

 

இந்த ஒற்றுமை குலைந்து விடாமல் பாதுகாப்பதற்காக மன்னர் பகதூர்ஷா ஜாபர் பக்ரீத்தின் போது முஸ்லிம்கள் பசுக்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

 

இந்துஸ்தானின் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்தி பெற்ற அந்த நாட்களை (1857 மே) நாம் ஒரு போதும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகள் அல்ல என்பதும் சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகறிய பிரகடணம் செய்யப்பட்டது.  என்றும் கூறுகிறார் சாவர்கர்.

 

இந்திய மக்களாகிய நாம் ஒன்று பட்டுத்தான் இந்தியாவை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டோம். அதன் பிறகு நாடு பிளவடைந்த நிலையிலும் மக்கள் ஒன்று பட்ட நிலையிலேயே இந்தியா வலிமையான நிலையை அடைந்தது.

 

அல்லாமா இக்பால் உருவாக்கிக் கொடுத்த சாரே ஜஹான்ஸெ அச்சா என்ற பாடலே இந்தியாவின் ஆரம்ப தேசிய கீதமாக இருந்த்து. இப்போதும் ராணுவத்தின் தேசிய கீதமாக இருக்கிறது.

 

மெளலானா அபுல்கலாம் ஆசாத் இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக இருந்தார்.

 

இந்த அழகை வர்ணித்துதான் தமிழ்ப்பெருங்கவிஞன் பாரதி


முப்பது கோடி முகமுடையாள் -உயிர் மொய்புறம் ஒன்றுடையாள்,

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்று பாடினார்

 

இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் நம்மை சுற்றி பல நாடுகளும் சுதந்திரம் பெற்றன். அந்நாடுகள் பலவற்றில் சர்வாதிகாரமும் இராணுவ ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம். அங்குள்ள மக்களிடம் ஒற்றும இல்லாமல் போனதுதான்.

 

ஆனால் நமது இந்தியாவில் அத்தகைய ஆபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை. காரணம் இந்திய மக்கள் எத்தனை வகையில் பிரிந்திருந்திருந்தாலும் நாட்டின் நலன் என்ற வகையில் ஒன்று பட்டு செயலாற்றினார்கள்.

 

இந்த ஒற்றுமை நாட்டின் ஒட்டுமொத்த வளர்சிக்கும் மிக மிக அவசியம் என்பதாலேயே1961 ஆம் ஆண்டில் அப்போதைய பாரத பிரதமர், ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசீய ஒருமைப்பாடு மன்றம் துவக்கப்பட்ட்து. இம்மன்றம், 148 உறுப்பினர்களைக் கொண்டு, கிறிஸ்தவ தலித்துக்களின், குடி உரிமை ,  போன்றவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்த்து.

இந்த மன்றத்தின் மற்றொரு நோக்கம் என்ன தெரியுமா ?

பஜ்ரங் தலம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சமூக விரோத
அமைப்புக்கள் தீவிர வாதத்தை கண்காணிக்கவும், அதனை அடியோடு அழிக்கவும் தேவையான முயர்சிகள் மேற்கொள்வ்வதுமாகும்.

ஆனால் வரலாற்றில் ஏற்பட்ட சோகம் , நமது நாட்டின் தேசீய அக்கறையுள்ள சக்திகள் பலவீனமடைநது எந்த தீய சக்திகளிடமிருந்து காப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு மன்றம் துவங்கப்பட்ட்தோ அவர்களிடமே மத்திய அரசு அதிகாரம் சென்றுவிட்டது.

இதற்கான காரணம் என்ன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விசயமாகும்.

எனினும் அதைவிட முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இந்த சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு நடைபெற்றுவருகிற விபரீதங்கள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நாம் கவனமாக கணிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் கிருத்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களையும் தலித்துக்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களையும் பெரும் துயர்களுக்கு ஆளாக்கி வருகிறார்கள்

இதனால் இப்போது நாடும் மிகப்பெரும் சித்தாந்த சிக்கலில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது.

மாட்டுக்கறியின் பெயரால் தொடந்து அடித்தட்டு மக்கள் அச்சத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

2017 ம் ஆண்டு ஜூன் மாதம் ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு “2010 லிருந்து அப்போதுவரை மாட்டுக்கறி வன்முறையில் 28 இந்தியர்கள் கொல்லப் பட்டார்கள். அதில் 24 பேர் முஸ்லிம்கள். 124 பேர் காயமடைந்துள்ளனர் என்கிறது. அதே அறிக்கை 2014 மோடி அரசு பதவியேற்ற பிறகே இத்தகைய வன்முறையில் அரங்கேறத் தொடங்கின என்கிறது. (விக்கீபீடியா)

(A number of incidents of violence have occurred. According to a June 2017 Reuters report, citing a data journalism website, a total of "28 Indians – 24 of them Muslims – have been killed and 124 injured since 2010 in cow-related violence". The frequency and severity of cow-related violence have been described as "unprecedented".[7] The report stated that "Almost all of the 63 attacks since 2010 involving cow-related violence were recorded after Modi and his Hindu nationalist government came to power in 2014".)

2014  ஜனவரி 14 ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் ஹர்தா மாவட்ட கிக்ரியா ரயில் நிலையத்தில் பசு பாதுகாப்பு படையினர் கவ் ரக்ஷா சமிதியினர் ஒரு முஸ்லிம் தம்பதியை பையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி தாக்கினர்.

2016 மார்ச் 18 ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடை வியாபாரிகளான 32 வயது அன்சாரியையும் 15 வயது இம்தியாஸ் கானையும் பசுக்கலை கொல்ல கடத்தியதாக கூறி கொலை செய்தனர்.

2016 ஜூலை 11 ம் தேதி குஜ்ராத்தி மாநிலத்தில் இறந்து போன ஒரு மாட்டை உரித்துக் கொண்டிருந்த 4 தலித்களை ஆறுபேர் கொண்ட ஒரு கும்பல் சங்கிலியால் கட்டி வைத்து இரும்புக் கமபிகளால் கடுமையாக தாக்கியது.

2017 ஜூலை 17 ம் தேதி கர்நாடக மாநிலம் சிகமங்களூரில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி பஜ்ரங்தள் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஊனமுற்ற ஒருவர் உட்பட நான்கு தலித்தகளை  கடுமையாக தாக்கினர்.

2016 ஜூலை 30 ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் முஜப்பர் நகரில் ஒரு முதியவர் தனது வீட்டு பிரிட்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அவரது குடும்பத்தை கடுமையாக தாக்கினர்.

ரமலான் தராவீஹ் தொழுது விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஒரு ஹாழிபை வந்தே மாதாரம் பாடச் சொல்லி நிரிபந்தித்து ரயிலிருந்து தள்ளிவிட்டனர்.

இந்திய குடியுரிமை பெறும் விவகாரத்தில் முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி வைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.

முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் முஸ்லி குடும்பங்களை நிர்கத்திக்கு உள்ளாக்கவும் முஸ்லிம் ஆண்களை தம்மிஷ்ட்த்திற்கு தண்டிக்கவும் வழ வகை செய்து விட்டனர்.

காஷ்மீர் மக்களை  மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் சட்ட விதி 370 இரத்து செய்த்ததோடு அம்மாநிலத்தை 3 பிரிவுகளாக்கி சிதைத்து காஷ்மீர் மக்களின் அதிகாரத்தை முடக்கி வைத்துள்ளனர்.

தற்போதை அரசாங்கத்தின் திட்டத்தை 2011 ம் ஆண்டு ஜூன் 16 ம் தேதி DNA ஆங்கில நாளிதழில் சுப்ரமண்ய சுவாமி ஒரு கட்டுரையாக எழுதினார். அந்தக் கட்டுரையில் மிக வனம்மாக பல செய்திகளை கூறியிருந்தார். 

இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்துபாரம்பரியம் கொண்டவர்கள் என்று ஒத்துக் கொண்டால் தான் அவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும்.

 

காசியில் பள்ளிவாசலை அகற்ற வேண்டும். அது போல 300 இடங்களில் உள்ள பள்ளிவாசலை அகற்ற வேண்டும்.

 

பொது சிவில் சட்ட்த்தை அமுல் படுத்த வேண்டும், சமஸ்கிருதம் படிப்பதையும் வந்தே மாதரம் பாடுவதையும் கட்டாயப்படுத்த வேண்டு,

 

மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்து மத்த்திற்கு வருவதை தடுக்க கூடாது.

 

சுப்ரமண்ய சுவாமியின் கருத்துக்கள் அப்பட்டமாக முஸ்லிம்கள் மீது வன்ம்ம் பாராட்டுவதாகவும் இழிவு படுத்துவதாகவும் இருந்தது. அவர் மீது அரசோ நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்தியாவின் பன்முக தன்மையை அழித்து ஒரே நாடு ஒரே மதம் என்ற கோட்பாட்டின் கீழ் நாட்டை இந்து ராஷ்டிரமாக்கும் திட்ட்த்திற்கு எல்லா வகையிலும் தயாராகி வருகின்றனர்.

முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கும்பல் வன்முறை என்பது மத்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடு கடுமையாக அரங்கேறிவருகிறது.

முஸ்லிம் கல்வி நிறுவன்ங்களின் அனுமதிகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன

புகழ் பெற்ற முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் அடையாளத்தை மாற்றுகிறார்கள்.

முஸ்லிம்களின் சிறிய அளவிலான போராட்டக்கங்களும் போராட்டக்காரகளும் கடுமையான தணடைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் தொடர்ந்து ரெய்டுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளாக்கப்படுகின்றன.

முஸ்லிம்களின் வீடுகளையும் வியாபார நிறுவன்ங்களையும் அற்பமான காரணங்களை கூறி புல்டோசர்களை கொண்டு தரை மட்டமாக்குகிறார்கள்.

மதரஸாக்கள் குறி வைத்து பன் முக நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகின்றண.

ஞான வாபி போன்ற பள்ளிவாசல்களை அற்ப மான காரணங்களை சொல்லி ஆக்ரமிக்க முயல்கிறார்கள்.

நீதிமன்றங்களை அப்பட்டமாக அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக மாற்றிவிட்டனர்.

ஊடகங்கள் அரசிற்கு ஒத்தூதுகின்றன. ஒன்றிரண்டு ஊடகங்கள் மிக சிரமட்டு சில உண்மைகளை பேசி வந்தார்கள். அவைகளையும் காசு கொடுத்து வாங்கி விட்டார்கள்.

நாடுமிக மோசமான ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

வெளிப்படையாகவே சனாதானம் தான் ஆள வேண்டும் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

சனாதனம் என்பது மக்களை கூறு படுத்தி உயர் ஜாதியினர் தாழ்ந்த ஜாதியினரை அடக்கி ஒடுக்குவதாகும்.

 

இவற்றிற்கெல்லம் மேலாக முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வெறுப்புணர்வை விதைப்பதிலும் பரப்புவதிலும் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிற்றனர்.

இப்போது முஸ்லிம்கள் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் எங்காவது அடிக்கப்படுகிறார்கள் என்றால் அதை ஒரு சாதாரண நிகழ்வாக கடந்து போகிற \

மனப்போக்கையும் சில சந்தர்பங்களில் அதை ரசிக்கிற குரூரத்தையும் அதை நியாயப்படுத்துகிற சிந்தனையையை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் பலவீனம் என்பதை தாண்டி வெறுப்புணர்வை வளர்ப்பதன் மூலமே தொடர்ந்து அவர்கள் அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள்.

அதனால் தேர்தல் நெருங்குகிற நேரத்தில் ஏதேனும் வெறுப்புணர்வை விதைக்கும் ஏதோ ஒரு விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள். வெற்றியடைகிறார்கள். பிறகு அதை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.

 

இன்று இந்தியாவின் ஆட்சியதிகாரம் மக்களை பிளவு படுத்துகிற மிக மோசமான சக்திகளிடம் சிக்கியிருக்கிறது.

இதனால் நமது நாடு மிக மோசமான பொருளாத விளைவுகளை சந்தித்து ருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை பாமாயிலின் விளை 60 – 70 ரூபாயுக்குள் இருந்த்து . அப்போது நாம் மலேஷியாவிலிருந்து இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். இந்தியாவில் முஸ்லிம்கள் நியாயமற்ற தக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று அப்போதைய மலேஷிய பிரதம மஹாதிர் முஹம்மது கூறினார். அவரது பேச்சுக்கு பேச்சு ரீதியில் பதில் கொடுக்க வேண்டிய அரசு முஸ்லிம் வெறுப்பு மிகைத்திருந்த்தால் பாமாயிலை வேறு நாட்டிடமிருந்து வாங்க ஆரம்பித்த்து.. அந்த நாட்டிற்கு இந்தோனேஷியா சப்ளை செய்கிறது . இந்தோனேஷியாவிற்கு மலேசியா சப்ளை செய்கிறது. ஆனால் உப்புச் சப்பில்லாத காரணத்திற்காக இப்போது இந்திய மக்கள் ஒரு லிட்டர் பாமாயிலை 200 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்கள்.

 

இப்படி ஒவ்வொரு விவாரத்திலும் தங்களது பொருத்தமற்ற இயல்பினாலும் முஸ்லிம்கலின் மீதான வன்மத்தினாலும் அரசு இந்தியா நாட்டை பலவீனப்படுத்தி வருகிறது.

 

ஒன்றை நிறைவாக நினைவூட்டுகிறோம். இந்திய நாட்டின் பன்முக தன்மையை அழித்து அதன் பாரம்பரியத்தை சிதைத்து சனாதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைப்பவர்கள் நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு எதிராக பதிவான ஓட்டுக்கள் தான் அதிகம். ஆனால் எதிர்ப்பவர்களிடம் ஒற்றுமை இல்லாத்ததால் தீய சக்திகள் பேயாட்டம் போடுகின்றன.

 

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை மிகச் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது. தீய திட்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் .திட்டம் தீட்டுவோர் வெற்றி பெறாமல் இருக்கவும் பொருத்தமான எதிர் காய்களை நகர்ந்த்த வேண்டிய கடமை முஸ்லிம் சமுதாயத்த்திற்கு இருக்கிறது.  நாட்டின் நலனில் அக்கறை கொண்ட சக்திகளை ஒன்றினைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கூட நமக்கிறுக்கிறது.

 

அந்தக் கடமைகளை ஆராயவும் அவற்றை செயல்படுத்த தயாராகவும் செய்வதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வருகிற 15 16 ஆகிய தேதிதிகளில் ஈரோட்டில் தேச ஒற்றுமை மாநாட்ட நடத்த இருக்கிறது. முதல் நாளில் இளைஞர்களுக்கான நிகழ்வுகளும் அடுத்த நாளில் அனைவருக்குமான நிகழ்வுகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில்  பாரம்பரியம் மிக்க நமது நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க்வும் என்ன செய்ய வேண்டும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதற்காக ஏராளமான அறிஞர்கள் கருத்துரைகளை வழங்க இருக்கிறார்கள்.

 

இது ஒரு காலத்தின் தேவை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அந்த கடமையை நிறைவேற்ற உங்களை அழைக்கிறது.

 

திரண்டு வாருங்கள் ஈரோடு மாநகருக்கு தீரத்தோடு போராடுவோம்

 

வீழ்வது என்ற பேச்சே இல்லை. வாழ்வதும் வாழ வைப்பதும் தான் நமது மூச்சு.

வாருங்கள் வெற்றி பெறுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின்  துணையோடு.

  

 .

  

 

 

 

 

1 comment: