வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 18, 2016

தொடங்கியது ஹஜ் பயணம்.

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ .. }(97- آل عمران)
இந்த ஆண்டிற்கான ஹஜ் தொடங்கி விட்டது.
இது நான்காயிரம் ஆண்டு வரலாற்றின் ஒரு தொடர்ச்சியாகும். மக்களே உங்களது இறைவன் தனக்காக ஒரு ஆலயத்தை இங்கே கட்டியிருக்கிறான், அதை நொக்கி பயணம் செய்து வாருங்கள் என அபீகுபைஸ் மலை மீது நின்று இபுறாகீம் நபி அழைக்க. அந்த அழைப்பிதழை பெற்று நாங்கள் வந்து விட்டோம் என (லப்பைக்) என அப்போது சம்மதம் கூறியவர்கள் இப்போது அந்த சமத்ததை நிறைவேற்ற பயனப்படுகிறார்கள்                                                         சாரையாக மக்கள் உலகின் பல பாகத்திலிருந்தும் புனித மக்கா நகரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு கடந்த 3 ம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில்  இந்தூரிலிருந்து 135 ஹாஜிகள் ஜித்தாவை அடைந்தனர். இது வரை ஹஜ் கமிட்டி மூலம் சுமார் 30 ஆயிரம் ஹாஜிகள் மதீனாவையும் 10 ஆயிரம் பேர் மக்காவையும் அடைந்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் மூலமாக சில ஆயிரம் பேர் மக்காவை அடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இன்னும் பல ஆயிரம் ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு தயாராகிவருகின்றனர். இன்னும் பல இலட்சம் பேர் உலகின் பல பாகங்களிலிருந்தும் ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வருகின்றனர்
அல்லாஹ் தமக்கு அளித்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உற்சாகத்தோடும் உணர்வுப் பெருக்கோடும் பயணம் செய்கிற அந்தப் புனிதப் பயணிகளை நாம் உளப்பூர்வமாக துஆ செய்து வழி அனுப்பி வைப்போம்.
அல்லாஹ் உங்களது ஹஜ் உம்ராவை ஏற்றுக் கொள்வானாக! உங்களது பயணத்தை இலேசானதாக ஆக்குவானாக! பாதுகாப்பானதாக ஆக்குவானாக! உடல் ஆரோக்கியத்தோடும் மன அமைதியோடும் சகல கடமைகளையும் நிறைவேற்ற அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! ஹாஜிகள் நிம்மதியாக திரும்பி வருகிற வரை அவர்களுடைய குடும்பத்தையும் தொழில் நிறுவனங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!
கருணை மிக்க ரஹ்மான் நமக்கும் ஹஜ் செய்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
ஹஜ் என்பது பணத்தாலோ திறமையாலோ கிடைக்கிற வாய்ப்பல்ல. அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு.
மூன்று காரியாங்களை அல்லாஹ் மனிதர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கிறான்.
1.   நபித்துவம்
2.   மாக்க கல்வி
3.   ஹஜ்
ஹஜ்ஜுக்குப் போகிற ஹாஜி இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு பல முறை ஹஜ்ஜுக்கு செல்கிறவர்களும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தேர்ந்தெடுக்காமல் யாரும் ஒரு முறை கூட செல்ல முடியாது.
தற்காலத்தில் ஹஜ்ஜுக்கான வாய்ப்பை பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு அதிக நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
முற்காலத்தில் வாழ்ந்த பேரரர்சளுக்கு கிடைக்காத வாய்ப்பு இப்போது நமக்கு சாதாரணமாக கிடைக்கிறது.
தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தன்னுடைய வாழ்வில் ஒரு முறை கூட தொழுகையை கழாவாக விட்டதில்லை. ஆனால் அவருக்கு ஹஜ்ஜு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  
(நேற்று என்னிடம் ஒரு காரியக்கார ஹாஜி ஹதீமீல் கழா தொழுகையை தொழலாமா என்று கேட்டார். ஒரு நாளின் கழா தொழுகையை ஹதீமில் தொழுதால் வாழ்க்கையில் எண்ண முடியாத கழாத் தொழுகைகளை ஓரளவுக்கு ஈடு செய்து விடலாம் என அவர் நினைத்துக் கேட்டார், தொழலாம் என்று சொன்ன நான் ஷாஜஹானுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.)
ஹஜ்ஜு செய்ய பணம் ஒரு துணைக் காரணம் தான் அல்லாஹ் தேர்ந்தெடுப்பதே முக்கியம்.
சாதாரணமான பலர் ஹஜ்ஜு கடைமை நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஹஜ்ஜு செய்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பதே சிரமம், அத்தகையோர் ஹஜ்ஜுக்கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றித் திரும்பியிருக்கிறார்கள்.
மளையாளத்தில் பி.டி யின் ஹஜ்ஜு என்ற பெயரில் ஒரு புத்தகம் இருக்கிறது, அந்தப் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறத்து.
அந்த நூல் சுவையானது. அந்த நூலுக்கான பின்னணி அதை விடச் சுவையானது.
பி.டி வீராண் குட்டி முஸ்லியார் ஒரு பள்ளிவாசலின் இமாம். மிகவும் ஏழ்மையானவர், ஹஜ்ஜை நினைத்துப் பார்ப்பதே அவரது அன்றைய வசதிக்கு சாத்தியமில்லாதது. அந்த ஊரின் பெரும் பணக்காரர் ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல தயாராகி இருக்கிறார், வீட்டை விட்டு கிளம்புப் போது துஆ செய்வதற்காக வீராண் குட்டி முஸ்லியாரை அழைத்திருக்கிறார். அவர் துஆ ஓதி முடித்த போது பணக்கரருக்கு முஸ்லியாரை திருவணந்த புரம் வரை அழைத்துச் செல்லாம் என்று தோன்றியது. முஸ்லியாரிடம் நீங்கள் திருவணந்த புரம் வரை என்னோடு வந்து எனக்கு இமாமாக இருங்கள் தேவையான துஆ க்களை செய்யுங்கள் என்று கேட்டார். இமாம் சற்று யோசித்து விட்டு வீட்டிற்கு போய் சொல்லிக் கொண்டு இரண்டு துணியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். திருவணந்த புரத்தில் அந்தப் பணக்காரர் உஸ்தாதே என்னோடு மும்பைக்கு வர வேண்டும் என்று கோரினார். அப்படியே உஸ்தாது மும்பை வரை சென்றார். மும்பையில் வைத்து அந்தப் பணக்காரருக்கு உஸ்தாதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் என்ன ? என்று தோன்றியது . உஸ்தாதிடம் கேட்டார். உஸ்தாதின் கண்களில் கண்ணீர் மல்கியது, கரும்பு திண்ணக் கூலியும் வேண்டுமா? அது பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரங்கள் தேவையில்லாத நேரம். கப்பலில் இடம் கிடைப்பது மட்டுமே முக்கியமாக இருந்தது. செல்வந்தர் கப்பல் கம்பெணியிடம் பேசி உஸ்தாதுக்கு சீட் வாங்கினார். திருவணந்தபுரத்திற்கு புறப்பட்ட உஸ்தாது இறுதியில் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு திருவணந்தபுரம் திரும்பினார். அது சம்பந்தமான விசயங்களை புத்தகமாக் எழுதினார். அதுவே பி, டி யின் ஹஜ்ஜு என்ற பெயரில் புத்தகமாகமாக வந்து சாகித்ய அகாதமி விருதும் பெற்றது.
ஹஜ்ஜுப்பயணம் இப்படித்தான் நினைத்துப் பார்த்த மாத்திரத்தில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. எத்தனை முறை செய்தும் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிருக்கிறது.
பண வசதி படைத்தவர்கள் அல்லாஹ்வின் அந்த வாய்ப்பை சீக்கிரமாக உறுதிப் படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ரேஷன் கார்டு வேண்டும் என்ற அவசியத்திற்கு எப்படி முக்கியத்த்துவம் தருகிறோமோ அதை விட அதிகமாக ஹஜ்ஜுக்கான விசாவை பெற்றுவிடுவதற்கு வசதிபடைத்தவர்கள் முய்றசி செய்ய வேண்டும்.
ஹஜ்ஜு கடமையான பிறகு ஹஜ்ஜு செய்யாமல் தவிர்ப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள்
من أدركته فريضة الحج ولم يحج ومعه زاده وراحلته، ليس عليه أن يموت إن شاء يهودياً أو نصرانياً". رواه الترمذي
ஹஜ்ஜுக்கு இந்த உலகில் கிடைக்கிற பலன் பாவ மன்னிப்பு

-         أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: " من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه ".متفق عليه
ஒரு மனிதர் முஸ்லிமாகிற போது , ஜிஹாதில் ஷஹீதாகிற போது அவர் செய்த முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக ஹஜ்ஜும் இடம் பெற்றுள்ளது.

ஹஜ்ஜுக்கு நாளை மறுமையில் கிடைக்கிற பலன்.

قال صلى الله عليه وسلم:" الحج المبرور ليس له جزاء إلا الجنة " متفق عليه. 
ஹஜ்ஜின் இந்தப் பலாபலன்கள் குறித்து செல்வந்தர்கள் அலட்சியம் காட்டக் கூடாது, ஹஜ்ஜை ஒரு ஆடம்பர வணக்கமாக அவர் கருதக் கூடாது, அத்தியாவசிய வணக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,
ஹஜ்ஜுக்கு போய்விட்டு நம்மால் சீராக நடக்க முடியுமா என்று சிலர் யோசிக்கின்றனர். அந்த யோசனை அநாவசியமானது. அல்லாஹ் நம்முடைய வாழ்வை சீராக்குவான் என்ற நம்பிக்கையில் ஹஜ்ஜு செய்தால் நிச்சயமாக அதன் பலன் நமக்கு கிடைக்கும்.
வயதான பிறகு ஹஜ்ஜுக்கு சென்றால் போதும் என்றும் சிலர் நினைக்கின்றனர். இந்த எண்னமும் தவறானது. ஹஜ்ஜு கடமையான உடன் நிறைவேற்றிவிட வேண்டும்.
தற்காலத்தில் மிகச் சிறப்பான போக்கு வரத்து வசதிகள் தங்கும் வசதிகள் கிடைத்த பிறகும் கூட ஹஜ்ஜு  ஒரு சிரமாமான வணக்கமாகவே இப்போதும் இருக்கிறது, எனவே இளமைப் பருவத்திலேயே ஹஜ் கடமையை நிறைவேற்றி விட வேண்டும்.
இன்னும் சொல்வதானால் ஹஜ்ஜு செய்வதற்கான சிறந்த பருவம் இளமைப் பருவமாகும். 
ஹஜ்ஜு செயவது இலேசாகும் என்பதோடு ஹஜ்ஜுக்கு பிந்தைய நீண்ட காலம் நன்மைகள் நிரம்பியதாக ஆக வாய்ப்பு இருக்கிறது.
இளைஞர்கள் வாய்ப்புக்கிடைக்கிற போது தம் மனைவியரோடு ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும்,
ஒரு கணவன் மனைவிக்கு தருகிற அன்பளிப்புகளில் இதைவிடச் சிறப்பானது எது வும் இல்லை.
அது மட்டுமல்ல மனைவியும் ஹஜ்ஜு செய்வது நபியுடன் யுத்தத்தில் பங்கேறபதைப் போன்றது என மார்க்கத்தின் முன்னோடிகள் கூறியிருக்கிறார்கள்.
தாய் தந்தையரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செய்வதைப் போன்ற உபகாரம் வேறெதுவும் இல்லை. இதைப் போல் பெற்றோரின் பெருத்ததை வாங்குவதற்கான வழி வேறெதுவும் இல்லை.
ஹஜ் விசயயத்தில் எந்த பயமும் பெருத்தமானது அல்ல.
ஹஜ்ஜில் பெரிய பயம் மரண பயம் தான், நபி (ஸ்ல்) அந்த பயணத்தை விரட்டினார்கள்.
وعن جابر قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " من مات في أحد الحرمين بعث آمنا يوم القيامة " .
மரணத்தை பற்றிய தயக்கம் கூட இருக்கலாகாது எனும் போது வேறு எந்த காரணமும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு தடையாக கூடாது.
ஹஜ்ஜுக்குப் பிந்தைய வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கும் .
ஹாஜி கேட்கும் துஆ வை ஹஜ்ஜில் மட்டுமல்ல ஹஜ்ஜிற்குப்பின் 100 நாட்கள் ஹாஜியின் துஆ வை அல்லாஹ் ஏற்பான் . உம்ராவிற்கு பிறகு 40 நாட்கள் உம்ரா செய்தவரின் துஆ வை அல்லாஹ் ஏற்பான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
துஆக்கள் ஏற்படுகிற ஒரு அற்புதமான வாய்ப்பை தாமதப்படுத்தலாமா ? தள்ளிப்போடலாமா ?
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தில் மரணத்தை தருவதற்கு அல்லாஹ் நினைத்தான்,
அதனால் அவர்கள் ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றி முடித்த 93 வது நாளில் அல்லாஹ் அண்ணாரை வபாத்தாக்கினான்.
எனவே ஹஜ்ஜு கடமையானவர்கள் உடனடியாக அந்தக் கடமையை நிறைவேற்றிட முயற்சி செய்ய வேண்டும். உறுதி ஏற்க வேண்டும்.
ஹாஜி அவருக்காக கேட்கிற துஆ மட்டும் ஏற்கப்படுவதில்லை, அவர் பிறருக்காக கேட்கிற துஆவும் ஏற்கப்படுகிறது.
. وجاء فيما أخرجه البزّار عنه صلى الله عليه وسلم: «إن الله يغفر للحاج ولمن استغفر له الحاج
ஹாஜி தன்னுடைய் பிழை பெறுக்கப்படுகிறது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்

குற்றங்களில் பெரியது எது தெரியுமா ? தன்னுடைய பிழை பெறுக்கப்படாது என ஒரு ஹாஜி நினைப்பது என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்

أعظم الناس ذنبا من وقف بعرفة فظن إن الله لم يغفر له
அரபா மைதானத்தில் தங்கியிருந்தவர் அல்லாஹ்வுக்கு செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.
முஸ்தலிபாவில் இரவு தங்கியவர் சக அடியார்களுக்கு செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தர அல்லாஹ் பொறுப்பேற்ற்கு கொள்கிறான்,

இத்தகைய பெருமைமிக்க கடமை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் தாமதிக்க கூடாது.
அதே நேரத்தில் வசதியற்றவர்களும் அல்லாஹ் நமக்கும் இந்த வாய்ப்பை தர வேண்டும் என்று நினைக்க வேண்டும், அதற்காக துஆ செய்ய வேண்டும்.
பனாரஸ் நகரில் பட்டு நெசவு செய்யும் இளம் பெண்கள் தமது தறி களுக்கு முன்னே உண்டியல்களை வைத்து ஹஜ்ஜுக்கு செல்வதற்கு காசு சேர்க்கிறார்கள் என்றார் பணாரஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்ற ஒரு மருத்துவர்.
இந்தோனேஷியாவில் மாப்பிள்ளை மணம்களின் தகுதியாக ஹஜ்ஜை பார்க்கிறார்கள்.
என்வே இத்தகைய பாக்கியமுள்ள் ஹஜ் வாய்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
பி டி முஸ்லியாருக்கு ஒரு செல்வந்தரைக் கொடுத்த இறைவன் நம்க்கு துணை வருவதற்கு நம்முடைய் இஹ்லாசையும் ஆர்வத்தையும் தவிர வேறு என்ன வேண்டும்,
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு கடமையை உரிய நேரத்தில் நிறைவேற்ற தவ்பீக் செய்வானாக!
ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல நாம் மதீனாவிற்கு செல்லவும் ஆசைப்பட வேண்டும். ‘
மதீனாவில் முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கிறார்கள். அவர்களை ஜியாரத் செய்ய வே மதீனாவிற்கு செல்கிறோம்.
 من زار قبري وجبت له شفاعتي
رواهأبو داود : { ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام 
في الموطأ أن ابن عمر كان إذا دخل المسجد يقول : السلام عليك يا رسول الله السلام عليك يا أبا بكر السلام عليك يا أبت . 
ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழாக்கள் என்ற பெயரில் சில குழ்ப்பவாத அமைப்புக்கள் ஹஜ் கிளாஸ்கள் நடத்து கிறார்கள்.
ஒரு விருந்து கிடைக்கிறது என்ற நினைப்பில் சில ஹாஜிகள் அங்கு சென்று விடுகிறார்கள்.
ஹஜ்ஜை ப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல ஹாஜிகள் செல்கிறர்கள்.
அந்த ஹஜ் கிளாஸ்களில் மதீனாவிற்கு செல்லத் தேவையில்லை. நபி (ஸ்ல்_ அவர்களை ஜியாரத் செய்யத் தேவையில்லை என்று விவரமற்ற முஃமின்களின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறார்கள்.
மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில் தொழுவதற்காகவே மதீனாவிற்கு செல்கிறோம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள், ஹாஜியும் தலையசைத்து விட்டு வருகிறார்.
தொழுவதற்குத்தான் என்றால் மக்காவிலேயே தொழலாமே. ஒரு இலட்சம் நன்மையை விட்டு ஒரு அயிரம் நன்மையை தேடி ஏன் செல்ல வேண்டும் ?

எனவே தற்போது புதிதாக முளைத்திருக்கிற் இந்த ஹஜ் கிளாஸ் பேர்வழிகள் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மினாவில் சைத்தானை கல்லெறிவதற்கு முன்னதாக இங்கேயே இந்த சைத்தான்களை விட்டு விலகி விட வேண்டும் .

அல்லாஹ் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்கிற அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்ற்று கொள்வானாக!  அவர்களது பயணத்தை இலேச்சாகி வைப்பானாக!  இந்த ஆண்டு ஹஜ்ஜை பாதுகாப்பானதாக ஆக்கிவைப்பானாக!  இந்த ஆண்டு வாய்ப்புக்கிடைக்காதவர்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் வாய்ப்பளிப்பானாக!                                             முந்தைய பதிவு இது                                                    ஹஜ் பயணிகளை வழியனுப்புவோம் 








2 comments:

  1. ஆம்ன்.நபி ஸல் அவர்களின் வயது 93 என்று மேலே உள்ள கட்டுரையில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வயது 63 எனறு திருத்திக் கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றி முடித்த 93 வது நாளில் அல்லாஹ் அண்ணாரை வபாத்தாக்கினான். என்றே எழுதப்பட்டுள்ளது

      Delete